Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பகுத்தறிவாளர்களின் மதம்! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2013 | , ,

உலகில் அதிகம் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டுத்தப்பட்ட கொள்கை ஒன்று உண்டெனில் அது அனேகமாக இஸ்லாம் மார்க்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சமூக சிந்தனையாளர்களில் பலர் இறுதியில் உணர்ந்து கொண்ட தீர்வாக அவர்கள் கண்டு கொண்டது இஸ்லாம். மற்ற கொள்கைகளைப்போல் இஸ்லாம் மேலோட்டமானத் தீர்வுகளைச் சொல்லவில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை மட்டுமின்றி இவ்விரு நிலைகளுக்கும் முந்தைய பிந்தைய தேடல்களுக்கும் இஸ்லாத்தில் தெளிவான விளக்கமுண்டு.

ஆனந்த விகடனில் கார்டூனிஸ்டாக இருந்த மதன் எழுதிய, மானுடவியல் குறித்த ஒலிநூலைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.(யூடூபில் தேடினால் கிடைக்கும்). அதில் நாமறிந்த / கேள்விப்பட்ட / வாசித்த பல்வேறு தகவல்களைச் சொல்லியுள்ளார். ஏற்கனவே "வந்தார்கள் - வென்றார்கள்" என்ற மொகலாயர் வரலாற்றை விகடனில் எழுதிய அனுபவம் இருப்பதாலோ என்னவோ வரலாற்றுச் செய்தியை அறிவியல் ரீதியான தகவல்களுடன் கலந்து தொகுத்திருந்தார். இரண்டு மணிநேரம் கேட்கக்கூடிய சுவாரஸ்யமான தொகுப்பாக இருந்தது. 

(நண்பர் "தோழர்கள்" நூருத்தீன் எழுதிய உத்தம சஹாபாக்களின் உன்னத சரித்திரத் தொகுப்பையும் இதுபோன்று ஒலிநூலாக வெளியிடும்படி முகநூல் பக்கத்தில் விருப்பம் தெரிவித்திருந்ததன் பின்னணி சமீபத்தி வாசித்த ஒலிநூட்களால் ஏற்பட்ட ஈர்ப்பும் ஒருவகையில் காரணம். இணையம்,வலைப்பூ, முகநூல் என்று கவனம் திரும்பியபிறகு நூல் வடிவில் வாசிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவரும் நிலையில் பிறர் வாசிக்கக் கேட்பது கூடுதல் வசதியாக இருக்கிறது. தற்போது கேட்டுக் கொண்டிருப்பது கல்கியின் "பொன்னியின் செல்வன்" ஒலிநூல்.)

மதனின் ஒலிநூலை விளம்பரப்படுத்துவதல்ல என் நோக்கம். அதில் சொல்லப்பட்டிருந்த பலவிடயங்களுக்கு எங்கிருந்து ஆதாரம் கிடைக்கப்பெற்றார் என்று தெரியவில்லை. (அதாவது ஆதரமற்ற தகவல்கள்!) ஓரிரு அறிவியல், வரலாற்றுத் தொகுப்புகளை கற்பனை கலந்து தொகுத்திருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன். பேசப்பட்டுள்ள பலவிடயங்களுக்கு அவரால் சான்றுகளைத் தரவே முடியாது. மனித இனம் தோன்றுவதற்கு முந்தய பிரபஞ்சம், உலகம் குறித்த தகவல்களை எங்கிருந்து பெற்றார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்!

தொல்லியல் ஆய்வு முறையில் கார்பன் டேட்டிங் என்ற முறை அறிவியல் ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. அதற்கு ஏதேனும் படிமங்கள் அடிப்படையாக இருந்தால்தான் அதையும் ஓரளவு கணிக்க முடியும். தகவல்களை வைத்துக்கொண்டு அறிவியல் ரீதியிலான ஆக்கங்களைத் தொகுப்பது நம்பகத்தன்மயைக் கேள்விக்குறியாக்கும் என்பதால் தகுந்த ஆதாரமுள்ள அதேசமயம் அறிவுக்கு ஒவ்வும் விடயங்களையே கையாள்வோம்.

இந்தப் பதிவில் மதனை ஏன் இழுத்தேன் என்றால், உண்மையில் மானுடவியல் குறித்த தகவல்களுக்கான அரிய தொகுப்பாக குர்ஆனில் ஏராளமான தகவல்கள் அடங்கியுள்ளதை திறந்த மனதுடன் அணுகினால் கிடைக்கும். இஸ்லாம் மக்களிடம் இன்று வரை எடுபட்டத்தற்கும் 1400 ஆண்டுகளாக முன்னெடுத்துச் சொல்லப்படுவதற்கும் இதுவே காரணம்.

முகநூல் பகிர்வொன்றில் நடிகர் கமலஹாசனை மேற்கோள் காட்டி, "அவசர சிகிச்சையின்போது யாரும் இந்து ரத்தம், கிறிஸ்தவ ரத்தம், முஸ்லிம் ரத்தம் என்று கேட்பதில்லை. மனித இனம் நலம் பெறுவதற்கும் சிலநேரம் மதத்தை ஒதுக்கி வைக்க முடியுமெனில் ஏன் வாழ்நாளெல்லாம் அதை ஒதுக்கி வைத்து நலமடைய முடியாது? என்று வியாக்கியானம் பேசியிருந்தார். அப்பகிர்வில் பதில் கருத்திட முடியவில்லை என்பதால், ஐயா கமலஹாசன், இஸ்லாம் என்பது வாழ்க்கை நெறி/மனித வாழ்வை வழிநடத்தும் தத்துவம்.இதை ரத்ததோடு ஒப்பிடுவது சரியல்ல. வாதத்திற்காக ஒப்பீட்டளவில் இது சரியென்றாலும் ரத்தத்திலும் ஏன் இத்தனை பிரிவுகள் உள? எல்லா ரத்தமும் எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்வீர்களா? என்று கருத்திட்டிருந்தேன்.

அறிவுஜீவிகள், பகுத்தறிவாளர்கள் என்று சொல்லப்படுபவர்களில் பலருக்கு தங்கள் கருத்திலுள்ள அபத்தம் சில நேரங்களில் பிடிபடாது. நம்பிக்கையை மறுப்பதுதான் பகுத்தறிவு என்பதும் ஒருவகையான மூட நம்பிக்கையே. ஏனெனில் ஒரு விசயத்தை மறுப்பது அறிவார்ந்ததாக இருக்குமெனில், அதை இருப்பிலுள்ள இன்னொரு சிறந்த ஒன்றால் தான் மறுக்க வேண்டும். கடவுள் இருக்கிறார் என்பது பலரின் நம்பிக்கை. இல்லை என்பது அத்தகைய நம்பிக்கைக்கு எதிரான நிலையன்றி அறிவுப்பூர்வமான நிலைப்பாடல்ல. 

நான் அணிந்துள்ள சட்டை சரியல்ல என்று சொல்பவர் அதைவிடச் சிறந்த சட்டையை அணிந்திருக்க வேண்டும். சட்டையே அணியாத அல்லது கிழிந்த சட்டையுடன் இருப்பவர் என் சட்டையைக் குறைசொன்னால் எவ்வாறு நகைப்புக்குரியதோ அதுபோன்றே அரைகுறை கடவுள் மறுப்பும். பெரியார் ஈ.வெ.ரா எதிர்த்த கடவுள் /மதநம்பிக்கை ஆகியவை இஸ்லாம் குறித்ததல்ல. அவர் பிறந்த சமூகத்தினர் கடவுளாக நம்பியவற்றையே அவர் கேள்விக்கு உட்படுத்தினார்.இஸ்லாம் குறித்து நல்ல அபிப்ராயமே பெரியார் கொண்டிருந்ததை நாத்திகர்களே ஒப்புக் கொள்வர். 

உண்மையில் பகுத்தறிவாளர்களாக தங்களை நம்புபவர்கள் போற்ற வேண்டிய கொள்கை இஸ்லாமே. ஏனெனில், இஸ்லாமும் கடவுள் இல்லை என்றே சொல்கிறது!! அதாவது மனிதன் கடவுளை படைக்க முடியாது; மனிதர்களால் படைக்கப்பட்டவை கடவுளாக முடியாது என்பதே இஸ்லாத்தின் கொள்கை. கூடுதலாக அல்லாஹ் மட்டுமே கடவுள் என்று சொல்கிறது. அது சரியா / தவறா என்பதை இஸ்லாத்தை திறந்த மனதுடன் அணுகினால் சாத்தியப்படும்.

ஆக, கடவுள் மறுப்பு என்பது பகுத்தறிவல்ல; உண்மையை அறிவுப்பூர்வமாகப் பகுத்தறிய முன்வராத நிலையே தற்போதுள்ள நாத்திகம்! உண்மையான பகுத்தறிவாளராக வேண்டுமெனில் முஸ்லிமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்! 

அதிரைக்காரன்
N.ஜமாலுதீன்

23 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நான் அணிந்துள்ள சட்டை சரியல்ல என்று சொல்பவர் அதைவிடச் சிறந்த சட்டையை அணிந்திருக்க வேண்டும். சட்டையே அணியாத அல்லது கிழிந்த சட்டையுடன் இருப்பவர் என் சட்டையைக் குறைசொன்னால் எவ்வாறு நகைப்புக்குரியதோ அதுபோன்றே அரைகுறை கடவுள் மறுப்பும். பெரியார் ஈ.வெ.ரா எதிர்த்த கடவுள் /மதநம்பிக்கை ஆகியவை இஸ்லாம் குறித்ததல்ல. அவர் பிறந்த சமூகத்தினர் கடவுளாக நம்பியவற்றையே அவர் கேள்விக்கு உட்படுத்தினார்.இஸ்லாம் குறித்து நல்ல அபிப்ராயமே பெரியார் கொண்டிருந்ததை நாத்திகர்களே ஒப்புக் கொள்வர். //

அருமையான காட்டு !

மிகச் சரியான அலசலுடன் இங்கு எடுத்து தீர்வு !

//ஆக, கடவுள் மறுப்பு என்பது பகுத்தறிவல்ல; உண்மையை அரிவுப்பூர்வமாகப் பகுத்தறிய முன்வராத நிலையே தற்போதுள்ள நாத்திகம்! உண்மையான பகுத்தறிவாளராக வேண்டுமெனில் முஸ்லிமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்!//

மிகச் சிறந்த பகுத்தறிவாளனாக இறைவனின் அத்தாட்சிகளையும் அவனது அருளையும் நம்பிக்கை கொள்ளும் முஸ்லிமால் மட்டுமே சாத்தியம் !

உலகமாந்தர்கட்கு அருளப்பட்ட திருமறை விடும் சவாலை ஆராயும் மனிதன் பகுத்தறிவாளனாக மிளிர்கிறான் !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

very nice & matured article written by bro. Jamaludeen. If they read & analyse the holy Qur'an with open heart, then the anti virus of Islam will be destroyed their virus of unreasonable faiths which are dominating & ruling their conscience in wrong way. So, most of them don't want update their mind system with islamic antivirus.

Yasir said...

நெத்தியடி ஆக்கம்...இஸ்லாத்தில் எல்லாவற்றிற்க்கும் தீர்வு உண்டு... மத வெறுப்பு என்ற கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு பார்ப்பவர்களுக்கும் இது புரியும் இதுதான் உண்மை மார்க்கம் என்பதும் விளங்கும்....உங்களைப் போன்ற எழுதாற்றல்மிக்கவர்களின் சேவை நம் சமுதாயத்திற்க்கு தேவை சகோ.ஜமாலுதீன்

نتائج الاعداية بسوريا said...

பகுத்தறிவு என்பது இறை நம்பிக்கையின் பாற்பட்டதே என்பதை பறை சாற்றும் ஒரு அருமையான ஆக்கம்.

வாழ்த்துக்கள் ஜமாலுதீன் அவர்களே !

அபு ஆசிப்.

ZAKIR HUSSAIN said...

//உண்மையான பகுத்தறிவாளராக வேண்டுமெனில் முஸ்லிமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்! //

உண்மையான வார்த்தைகள். இஸ்லாம் ஒரு மதம் அல்ல....
வாழும்நெறி என்ற உண்மைதெரிந்தால் மற்றவர்களும் பயன்பெறுவார்கள்,


ZAKIR HUSSAIN said...

//உலகில் அதிகம் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டுத்தப்பட்ட கொள்கை ஒன்று உண்டெனில் அது அனேகமாக இஸ்லாம் மார்க்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். //


நன்றாக விவாதிக்கட்டும். எப்போதும் குறையாத விசயமும் உண்மையும் உள்ள மார்க்கம்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Without deep analysis Islam don't say anything to accept blindly.

Unknown said...

Assalamu Alaikkum

Yes, Absolutely Islam is religion of rational people.

Rational endeavour leads to discovering the facts.
Rational way of thinking finds logical conclusion
Rational approach is unbiased one
Rational personal is standing neutral
Rational mind always looks for consistency

Any rational person who starts to explore the principles of Islam and Holy Quran will successfully land in Islam and becomes muslim.

Holy Quran is a open book to the whole humanity through which God Almighty invites everyone to think 100% rationally with all the senses sharply opened.

May God Almighty guide us to the right path.

Jazakkallah brother.

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆக நாத்திகம் இன்னும் ஒரு படி ஏறவேண்டி இருக்கிறது. முழு பகுத்தறிவாளன் என்று சொல்லிக் கொள்ள இஸ்லாமியனுக்கே தகுதி இருக்கிறது என்பதற்கு விளக்கம் ரொம்ப தெளிவு.

இன்னும் பகுத்தறிந்த ஆய்வுகளை ஜமாலுதீன் அடிக்கடி இங்கே பதிய வேண்டும்!

sabeer.abushahruk said...

விறுவிறு
சுறுசுறு

نتائج الاعداية بسوريا said...

இறை மறுப்புக்கொள்கையை தம் வாழ்நாள் முழுதும் பின்பற்றியவர்கள்கூட
இஸ்லாத்தினை நேரிடையாக எதிர்க்க கொஞ்சம் யோசிக்கத்தான் செய்திருக்கின்றனர். மற்ற மதங்களை கொள்கை ரீதியாக எதிர்த்தவர்கள்கூட
இஸ்லாத்தை விமர்சிக்க பின்வாங்கியே சென்றனர்.

ஏனனில் இது மதமல்ல. ஒவ்வரு மனிதனும் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்க்கை ஓட்டத்தை சொல்லும் ஒரு மார்க்கப்பாதை.

ஆதலால் இதை விமர்சிக்க எவனும் இல்லை.
அப்படி விமர்சிக்க புறப்பட்டவன் அவன் நோக்கத்தில் வெற்றி அடைந்ததுமில்லை

பகுத்தறிவின் பாசறை இஸ்லாம்.

அபு ஆசிப்.

Shameed said...

//உலகில் அதிகம் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டுத்தப்பட்ட கொள்கை ஒன்று உண்டெனில் அது அனேகமாக இஸ்லாம் மார்க்கமாகத்தான் இருக்கும்//

காய்த்த மரம் கல்லடி படும் என்ற பல மொழி இங்கே உண்மையாக்கப்படுவதை நான் உணர்கின்றேன்

crown said...


ZAKIR HUSSAIN சொன்னது…

//உண்மையான பகுத்தறிவாளராக வேண்டுமெனில் முஸ்லிமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்! //

உண்மையான வார்த்தைகள். இஸ்லாம் ஒரு மதம் அல்ல....
வாழும்நெறி என்ற உண்மைதெரிந்தால் மற்றவர்களும் பயன்பெறுவார்கள்,
-----------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சரியான நேரத்தில் நினைவுறுத்திய வாசகம். பிறருடையது மதம் இஸ்லாம் மார்க்கம் என்பது பிரமாதம்.

crown said...

அறிவுஜீவிகள், பகுத்தறிவாளர்கள் என்று சொல்லப்படுபவர்களில் பலருக்கு தங்கள் கருத்திலுள்ள அபத்தம் சில நேரங்களில் பிடிபடாது. நம்பிக்கையை மறுப்பதுதான் பகுத்தறிவு என்பதும் ஒருவகையான மூட நம்பிக்கையே. ஏனெனில் ஒரு விசயத்தை மறுப்பது அறிவார்ந்ததாக இருக்குமெனில், அதை இருப்பிலுள்ள இன்னொரு சிறந்த ஒன்றால் தான் மறுக்க வேண்டும். கடவுள் இருக்கிறார் என்பது பலரின் நம்பிக்கை. இல்லை என்பது அத்தகைய நம்பிக்கைக்கு எதிரான நிலையன்றி அறிவுப்பூர்வமான நிலைப்பாடல்ல.
-----------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். டேய் நண்பா! நல்லசொன்னேடா!,
"இதுதான் பகுத்து அறிவது"

crown said...

Shameed சொன்னது…

//உலகில் அதிகம் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டுத்தப்பட்ட கொள்கை ஒன்று உண்டெனில் அது அனேகமாக இஸ்லாம் மார்க்கமாகத்தான் இருக்கும்//

காய்த்த மரம் கல்லடி படும் என்ற பல மொழி இங்கே உண்மையாக்கப்படுவதை நான் உணர்கின்றேன்
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இதுதாங்க பழுத்த ஞானம் என்பது".

Aboobakkar, Can. said...

தந்தை பெரியாரால் தோல் உரித்து காட்டப்பட்ட பகுத்தறிவு கொள்கை .......திராவிட மக்களை சற்றே சிந்தக்க வைத்தது ..... இராமாயணயத்திலும் தென் இந்திய திராவிட ராவணன் பெண்கற்பை சூறையாடும் வில்லனே........மாறாக வட இந்திய உயர் குடியில் பிறந்த ராஜவம்ச கதாநாயகனே ராமர்.

sabeer.abushahruk said...

இப்படி யதார்த்தத்தை மிகத் தெளிவாகவும் குறுக்கு விசாரணை தோரணையிலும் தந்திருப்பது பாராட்டுதற்குரியது.

இயல்பாகவே எழும் கேள்விகளுக்கு பதில் தேட முனையும் எவரும் நேரடியான பகுத்தரிவுக்கு ஒவ்வக்கூடிய பதில்களை இஸ்லாத்திலேயே காண்பர்.

அதனால்தான் உண்மையான ஆன்மீகத் தேடலில் இறங்கும் எல்லோரும் கரை சேர்வது இஸ்லாத்தில்தான்.

எனசேதான் பகுத்தறிவாளரின் மார்க்கம் இஸ்லாம் என்று ஆனித்தரமாகச் சொல்கிறார் தம்பி ஜமாலுதீன்.

தொடர்ந்து எழுதப்பட வேண்டிய தலைப்பு இது.

அதிரைக்காரன் said...

360 சிலைகளை தெய்வங்களாக நம்பி வழிபட்டுக்கொண்டிருந்த மக்காவாசிகளிடம், அவையெல்ல தெய்வம் என்று சொன்னபோது நபி ஸல்.. அவர்களிடம் குர் ஆன் இருந்தது. அதில் சொல்லப்பட்டவற்றை பகுத்து அறிந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர். தற்போதைய இறைமறுப்பாளர்களிடம் அதுபோல் எதுவும் இல்லை. அவர்களின் வாதங்களுக்கு அறிவியலையே ஆதாரமாக வைப்பர். பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. பகுக்க முடிந்தவை இறுதியில் ஏதேனும் ஒன்றில்தான் முடியும் என்பதும் அறிவியல். ஆக, இல்லை என்று நம்புவதில்லை பகுத்தறிவு.

அதிரைக்காரன் said...

பழுத்த மரம்தான் கல்லடி படும் என்பது சரியே. எனினும், அடிபடுவதெல்லாம் பழுத்த மரங்களல்ல. பெரியார் இந்து மதத்தைச் சாடியபோது, அதைப்பூசித்து வந்தவர்களால் அறிவார்ந்த எதிர்வினைகள் கொடுக்கப்படவில்லை. ஆனால், இஸ்லாம் குறித்த விமர்சனக்களுக்கு அறிவார்ந்த விளக்கங்கள் உண்டு. இதை பகுத்து அறிந்து ஏற்றவர்கள்தான் முஸ்ளிம்கள்.

அதிரைக்காரன் said...

கருத்திட்ட பகுத்தறிவாளர்கள் அனைவருக்கும் நன்றி. வஸ்ஸலாம்.

Unknown said...

இயல்பாகவே எழும் கேள்விகளுக்கு பதில் தேட முனையும் எவரும் நேரடியான பகுத்தரிவுக்கு ஒவ்வக்கூடிய பதில்களை இஸ்லாத்திலேயே காண்பர்.

அதனால்தான் உண்மையான ஆன்மீகத் தேடலில் இறங்கும் எல்லோரும் கரை சேர்வது இஸ்லாத்தில்தான்.

نتائج الاعداية بسوريا said...

பகுத்தறிவு = இஸ்லாம்
இஸ்லாம் = பகுத்தறிவு

பகுத்து அறிதல் என்பதிலிருந்தே அதில் ஒன்று மீதம் வரும் என்று தெரிகின்றது. ஒவ்வொன்றையும் பகுக்கும்போது ஒவ்வொன்றாய் கழிந்து வரும்போது இறுதியில் ஒன்று மீதமிருந்தே ஆகவேணும்.

இதுவே பகுத்தறிவு என்று சொல்லி இறை மறுப்பவர்களுக்கு அதிலேயே ஒரு சக்தி உண்டு என்று தெரிகின்றது. அந்த சக்திதான் இவ்வுலகை ஆளுகின்றது என்பதை புரிந்துகொண்டால் அங்கே இறை மறுப்புக்கு வேலையே இல்லை.

பகுத்தறிவு என்னும் வார்த்தையிலேயே ஓர் சக்திக்கு சான்று உள்ளதை
தெரிந்தும் மறுக்கின்றனரா ? அல்லது தெரியாமல் மடமையில் மறுத்து வருகின்றனரா ? நாத்திகம் பேசுபவர்களே விளக்கவேனும்.

அபு ஆசிப்.

نتائج الاعداية بسوريا said...

எங்கள் சமுதாயத்துக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே படிப்பில்லா நபி (ஸல்)அழகிய முறையில் பகுத்தறிவை போதித்து சென்றிருக்கின்றார்கள்.

உலகம் உருண்டை என்று பகுத்தறிந்து சொன்னான். கலிலியோ என்ற இத்தாலிய விஞ்ஞானி. அவன் தங்கள் மார்கத்திற்கு எதிரான தீர்ப்பை தன ஆராய்ச்சியில் சொல்லிவிட்டான் என்பதற்காக அவனை விஞ்ஞானி என்றும் பாராமல் கல்லால் அடித்தே கொன்றார்கள்.

ஆனால் எங்கள் அருமை நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கிய அருள் வேதமோ அன்றே சொல்லிற்று உலகம் உருண்டை என்று. இத்துணைக்கும் எங்கள் நபி(ஸல்) ஆராய்ச்சி ஒன்றும் செய்ய வில்லை . இறை வசனமே இப்படி சொல்ல சொல்லிற்று.

ஒவ்வரு பகுத்தறியும் விஷயத்தை பட்டியலிட்டால், பகுத்தறிவு பேசி இறை மறுப்போர் வாய் மூடியே இருக்கவேண்டிய அவல நிலை தான் ஏற்ப்படும்
ஆதலால், பகுத்தறிவு பேசுவோர் இறைவனை நம்பட்டும் .
நம்பாதோர் பகுத்தறிவு என்னும் வார்த்தைக்கு வெகு தூரமாகட்டும்.

அபு ஆசிப்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு