Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

‘தவ்பா’ - மனம் வருந்திப் பிரார்த்திதல் 2

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2014 | ,

::: தொடர் - 3 ::::

நாம் செய்த பாவங்களை நினைத்து வருந்தி மன்னிப்புக் கோருமாறு நமக்கு அல்லாஹ் கட்டளை இடுகின்றான். நேர்வழி பெறுவதற்கான முதல் நிபந்தனையே ‘தவ்பா’தான். காரணம், பாவத்திலிருந்து மீளப் போவதன் அடையாளமே அது. ஒருவன் தான் திருந்தி வாழவேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்தால்தான், அதன் பக்கம் அடியெடுத்து வைப்பான். ‘தவ்பா’ செய்யத் தொடங்கும் போதுதான், உண்மையில் நாம் நமது தன்மைகளையும் வழிகளையும் மாற்றிக் கொள்ளப் போகிறோம் என்பதை உண்மைப் படுத்துகின்றோம்.

முதல் மனிதர்களான ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் இறைவன் கற்றுக் கொடுத்த முதல் பாடமே ‘தவ்பா’தான். சாத்தானின் தூண்டுதலால் அவ்விருவரும் இறைக் கட்டளைக்கு மாறு புரிந்தார்கள். அவர்கள் மனோநிலையில் மாற்றம் தெரிந்தது. உடனே அவ்விருவரும்,

“எங்கள் இரட்சகனே! நாங்களே எங்கள் ஆன்மாக்களுக்கு அநீதி இழைத்து விட்டோம்.நீ எங்கள் மீது இரக்கம் கொண்டு மன்னிப்பளிக்காவிட்டால், நாங்கள் இழப்பில் ஆழ்ந்து விடுவோம்” (அல்குர்ஆன் 7:23) என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

எனவே, அவர்களை அல்லாஹ் மன்னித்து, நேர்வழியில் செலுத்தி, பிறருக்கு வழி காட்டும் மனிதர்களாக ஆக்கினான். ஆனால், இப்லீஸ் எனும் சாத்தானோ, வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதற்குப் பகரமாகத் தவணை கேட்டான் (அல்குர்ஆன் : 7:14).

இன்று சாத்தானுக்கும் நமக்கும் எவ்வளவு ஒற்றுமை பாருங்கள்! நாம் நம் தீய செயல்களிலிருந்து விடுபட வேண்டும் என்று யாராவது நம்மிடம் கூறினால், (காலம் வரட்டும் என்று) தவணை கேட்கின்றோம்; தள்ளிப் போடுகின்றோம்! இது யாருடைய மனப்போக்கு என்பதை நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள். பாவத்தில் பதிந்திருப்பதானது, கெட்ட முடிவுக்கு காரணமாகிவிடும்!

அரபியில் ஒரு வழக்கு சொல்லுண்டு: “வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்காமல், பெரும்பாவத்திலிருந்து விடுபடுவது சாத்தியமில்லை, தவணை நிபந்தனையின்றி உடனே முயன்று நிறுத்தாமல், சிறு பாவத்திலிருந்து விடுபடுவதும் சாத்தியமில்லை.”

தவறுகளிலிருந்து உடன் விடுபடாவிட்டால், ‘ஹிதாயத்’ எனும் நேர்வழியின் கதவுகள் அடைபட்டு, அல்லாஹ்வின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும். எச்சரிக்கை செய்தும் திருந்தாமல் பாவத்தில் நிலைத்திருப்பவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

“அவர்களுக்கு நினைவூட்டப்பட்டதை அவர்கள் மறந்துவிட்டபோது, எல்லாப் பொருள்களின் வாயில்களையும் அவர்களுக்குத் திறந்து விட்டோம். பின்னர் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்த நேரத்தில், (நம் வேதனையைக் கொண்டு) அவர்களைத் திடீரென்று பிடித்துக் கொண்டோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.” (அல்குர்ஆன் 6:44)

அல்லாஹ் தன்மானம் மிக்கவன்; கண்ணியத்தின் காவலன், நாம் திருந்தி நடப்பதற்கான வாய்ப்புகளை அவன் தந்த பின்னரும் நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாமல் மனம் போன போக்கில் நடந்தால், நாம் திருந்துவதற்கான வாயிலை அடைத்து விடுவான்! இறுதியில், இப்பாவி விரும்பியவாறெல்லாம் பாவங்களில் அவனைத் தட்டழிய விட்டு, அவன் பாவமீட்சி பெற முடியாத அளவுக்கு ஆக்கிடுவான்! அத்தகைய அவப்பேறு வந்தடையாமல் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக ! ஆமீன்.

தனக்கு எந்த விதத்திலும் கீழ்ப்படியாமல் இருப்பதையும், பாவங்கள் புரிவதையும் நமக்குத் தடை விதித்துள்ளான் நம் இறைவன். பாவம் என்பது, பாவம்தான். அதிலென்ன சிறியதும் பெரியதும்? பாவமென்பது, இறைவனுக்குக் கட்டுப்படாமையின் அறிகுறிதான்.

பாவங்களுள் மிக மோசமானது, படைத்த இறைவனுக்கே இணை வைப்பதுதான். ஒருவன் இறக்கும் வரை அதிலேயே வீழ்ந்து கிடப்பானாயின், அது ஒன்று மட்டுமே இறைவனால் மன்னிக்கப்படாததாகும். நம்மில் பலர் இருக்கின்றார்கள்; அவர்கள் தொழுகையையும் நிறைவேற்றுகின்றார்கள்; அத்தொழுகையில், ‘இறைவா! உன்னையே வணங்குகின்றோம்; உன்னிடத்திலே உதவியும் தேடுகின்றோம்’ என்று ஓதுகின்றார்கள். ஆனால், இணைவைப்பின் எல்லா விதமான செயல்களையும் செய்கின்றார்கள்! அப்படியாயின், அவர்களின் தொழுகையால் என்ன பயன்?

எனவே, அல்லாஹ்வின்பால் மீண்டு, அவனிடம் பாவ மன்னிப்பை வேண்டி நிற்பது நம் மீதுள்ள நீங்கா கடமையாகும். கடந்த காலத்தில் செய்த பாவங்களை எண்ணி வருந்தி, அவற்றை மீண்டும் செய்யாதிருப்பதே பாவ மீட்சியின் வரைவிலக்கணமாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய அதுதான் அழகிய, அரிய முன்மாதிரியாகும்.
தொடரும்...
அதிரை அஹ்மது [தமிழாக்கம்]
மூலாசிரியர் : மிர்ஸா யாவர் பெய்க்
அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் புத்தகத்திலிருந்து....

2 Responses So Far:

Yasir said...

அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பதிவு
//வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்காமல், பெரும்பாவத்திலிருந்து விடுபடுவது சாத்தியமில்லை, தவணை நிபந்தனையின்றி உடனே முயன்று நிறுத்தாமல், சிறு பாவத்திலிருந்து விடுபடுவதும் சாத்தியமில்லை.”// உண்மை உண்மை யா அல்லாஹ் எங்கள் அனைவரையும் காப்பாயாக

sabeer.abushahruk said...

//அல்லாஹ்வின்பால் மீண்டு, அவனிடம் பாவ மன்னிப்பை வேண்டி நிற்பது நம் மீதுள்ள நீங்கா கடமையாகும். கடந்த காலத்தில் செய்த பாவங்களை எண்ணி வருந்தி, அவற்றை மீண்டும் செய்யாதிருப்பதே பாவ மீட்சியின் வரைவிலக்கணமாகும்.//

மிகச்சரியே!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு