Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விடுமுறைக் காலம் 5

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2014 | , ,

ன்னும் இரண்டு நாள்களில் ஆங்கில ஆண்டில் அடுத்தது என்கிறது நாள்காட்டி. பொழுது விடிதலும் சாய்தலும் எப்பொழுதும்போல் நடக்கும் அந்த நாளில்

மட்டும் ஏன் ஆரவாரம், கூச்சல், உற்சாகம், நுரை கொப்புளிக்க பீர் என்பது புரிய மறுக்கிறது. அனைவரையும் அனைத்து நாளிலும் வாழ்த்தினால் என்ன போச்சு? என்னுடையது மர மண்டை.

“குலுக்கி, கட்டியணைத்து, சந்தடி சாக்கில் அந்நிய ஆண்/பெண்ணை உதட்டில் ‘இச்’சி வாழ்த்திக் கொள்கிறார்கள். நான் கேட்கிறேன், இவர்கள் வாழ்த்தி என்ன வாழ்ந்து விடுகிறது? ஊர் உலகம் முழுக்க சண்டை, போர், பிரளயம். தினசரி வெட்டு, குத்து, கொலை. இனக் கொலைக் கரங்களில் செங்கோல், அஹிம்சையின் படிமத்தைச் சுட்ட கொலைகாரனுக்குச் சிலை.

“ஒரு பக்கம் வத வதவென்று பிறப்பு, மறுபக்கம் உற்றார், உறவு, பிரபல்யம், அனாமதேயம் என்று பாரபட்சமற்ற சாவுகள். போதாததற்கு மாயமாய் மறையும் விமானங்கள்...”

“நிறுத்து. படுகையனே! ஆண்டின் ஒரு நாளிலாவது உற்சாகம் வேண்டாம்? உன் வீட்டுச் சுவற்றுக்கெல்லாம் எதுக்கு நாள்காட்டி?”

“சரி! சரி! அப்படி என்னை ஒரே மோசமாக நினைக்க வேண்டாம். இந்த ஆண்டுப் பொறப்பு நெருங்குவதில் நல்ல விஷயமும் இருக்கு, மோசமும் இருக்கு. தெரியுமா?”

“முதலில் நல்லதைச் சொல்லு.”

“ஆண்டுப் பிறப்புக்கு முந்தைய ரெண்டு வாரத்தில் அதிகப்படியாக லீவு. அந்த நேரம் அலுவலகத்தில் பாதிப் பேருக்கு மேல விடுப்பில் போய், மீட்டிங்குகள் இன்றி வேலையில் இயலமைதி. வெள்ளைக்காரனுடைய பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறையாகி ஹைவேயில் துணி காயப்போடலாம் போல் டிராஃபிக் குறைவு. நினைத்த நேரத்துக்கு அரைமணி முன்னாடியே ‘டான்’னு ஆபீஸ் வந்து விடலாம். இதுக்காகவே ஆபிஸுக்கு வர ஆசையா இருக்கு தெரியுமா. ஐ லைக் திஸ் ஹாலிடே பீரியட்.”

“அந்தளவுக்காச்சும் உன் மண்டைல நல்லது நினைக்கத் தோணுதே. அப்ப அந்த மோசமான விஷயம் என்ன?”

“மீண்டும் இதுக்காக அடுத்து ஒரு வருஷம் காத்திருக்கணுமே!”

நூருத்தீன்

5 Responses So Far:

sabeer.abushahruk said...

நூர் பாய்,

புது வருடம் என்று பிரமிப்புக் காட்டுபவர்களுக்காக ஒரு நச் பதிவு இது.

கூல்!

Ebrahim Ansari said...

புத்தாண்டு என்று தவறாகப் புரிந்துகொண்டு எந்த அன்பரும் தயவு செய்து எனக்கு குறுஞ்செய்தி அல்லது மின் அஞ்சல் ஆகிய எதையும் அனுப்பாதீகள்.

காரணம் இது எனக்குப் புத்தாண்டு அல்ல. காரணம் நான் தமிழன் எனது புத்தாண்டு பொங்கல் நன்னாளில்தான் பிறக்கிறது.

நான் ஒரு முஸ்லிம் எனது புத்தாண்டு முஹரத்தில்தான் தொடங்குகிறது.

புத்தாண்டு என்று தமிழக ஐரோப்பிய கிருத்துவ நண்பர்கள் கொண்டாடும் நாளை அவர்களை நாம் வாழ்த்துவதுடன் நிறுத்திக் கொள்வோம். நமக்கு அதற்காக வாழ்த்துக்கள் வேண்டாம்.

யாருடைய புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கோ இரவு முழுதும் கண் விழிக்கும் நண்பர்களையும், நடுச்சாமத்தில் கோயில்களில் போய் அர்ச்சனை செய்வதற்காக வரிசையில் நிற்கும் நண்பர்களையும், இரவு பனிரெண்டு மணிக்கு இரு சக்கர வாகங்கனங்களில் மது போதையில் உரக்க சப்தமிட்டுக் கொண்டு போகும் இளைஞர்களைக் காணும் போதும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இடங்களை ரிசர்வ் செய்து ஆட்டம் போடும் அறிவீலிகளையும் நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை புத்தாண்டு என்பது ஒரு கணக்குப் பார்க்கும் நாள்.

சென்ற வருடம் நான் செய்த தவறுகளை இந்த வருடமாவது திருத்திக் கொள்ளவேண்டுமென்ற கணக்கு , சென்ற வருடத்தில் நான் செய்யத் தவறிய நல்ல காரியங்களை இந்த வருடமாவது எடுத்துச் செய்ய வேண்டுமென்ற கணக்கு ஆகியவை இவற்றுள் அடங்கும்.

வெறும் பீர்க் குமிழ்களில் அடங்கிவிடும் நீர்க்குமிழிகளா புத்தாண்டு? ,

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// “முதலில் நல்லதைச் சொல்லு.”

“ஆண்டுப் பிறப்புக்கு முந்தைய ரெண்டு வாரத்தில் அதிகப்படியாக லீவு. அந்த நேரம் அலுவலகத்தில் பாதிப் பேருக்கு மேல விடுப்பில் போய், மீட்டிங்குகள் இன்றி வேலையில் இயலமைதி. வெள்ளைக்காரனுடைய பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறையாகி ஹைவேயில் துணி காயப்போடலாம் போல் டிராஃபிக் குறைவு. நினைத்த நேரத்துக்கு அரைமணி முன்னாடியே ‘டான்’னு ஆபீஸ் வந்து விடலாம். இதுக்காகவே ஆபிஸுக்கு வர ஆசையா இருக்கு தெரியுமா. ஐ லைக் திஸ் ஹாலிடே பீரியட்.”//

அதெப்படி எனக்கும் அதே மாதிரி ஃபீளிங் !

Nooruddin said...
This comment has been removed by the author.
Nooruddin said...

பின்னூட்டியவர்களுக்கு நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு