இயற்கை இன்பம் – 11 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 18, 2016 | , , , ,

காற்று



காற்றின்றிக்  கடிதாகும்  உலகின்  வாழ்க்கை
  கருணையிறை  எல்லார்க்கும்  பொதுவாய்த்  தந்த
ஏற்றமுள  அருட்கொடையுள்  அதுவும்  ஒன்றே
  இயற்கையெழில்  இவ்வருளை  அழகாய்  ஆக்கும்
நாற்றுமுதல்  நெடிதுயர்ந்த  மரங்க  ளெல்லாம்
  நமக்கிதனைப்  பரிசாகப்  பருவந்  தோறும்
மாற்றியிறை  இன்னருளாய்த்  துய்க்கும்  வண்ணம்
  மருந்தாக்கித்  தருவதுவும்  வியப்பே  யன்றோ!

அதிரை அஹ்மத்



0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு