Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

புனித‌ ர‌ம‌ளானே வ‌ருக‌! ந‌ல்ல‌ருள் பொழிக‌! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | June 06, 2016 | , ,

தலைப்பிறை மேற்கில் தோன்றும்
உற்சாக குழந்தை ஊரில் பிறக்கும்
சிறுவர் பெரியவரின் உள்ளமோ
சமுத்திர சந்தோசத்தில் மூழ்கும்

பள்ளிகளெல்லாம் பரவசமடையும்
வணக்கவழிபாடுகள் வெள்ளமாய்
வழிந்தோடி வயதுகள் வேறுபாடின்றி
வல்லோனை அழுதுதொழுது புலம்பும்

வீட்டுப்பெண்டிரும் வேண்டியதை
சடைவின்றி சரிவரசெய்து வைப்பர்
நல்ல அமல் பல நன்றாய் செய்திடுவர்
நமக்கெல்லாம் நன்மையை வேண்டிடுவ‌ர்

ஏழை எளியோரும் ஏக்கத்துடன்
எதிர்பார்த்த ஏந்தல்மிக்க ரமளானும்
அவர் ஒரு மாத வாழ்க்கைத்தரம்
உயர்ந்து நிற்கஉன்னதமாய் உதவிடும்.

எல்லோரின் உள்ளமும் உற்சாக
சாரலில் ஒரு மாதம் குளிர்ச்சி பெரும்
நன்மை பல செய்ய நாடி செல்லும்
வரியவரின் பசி உண்மையாய் உணரும்

அஸருக்குப்பின் பள்ளி வாசலில்
அலைமோதும் சிறுவர் கூட்டம்
வரிசையில் நின்று நோன்புக்கஞ்சி
வாஞ்சையுடன் வாங்கிச்செல்லும்

வாடாவும் சம்சாவும் தெருதோறும்
வாய்க்கப்பெறும் காசிருந்தும் இயலாமல்
நோன்பு திறக்கும் சமயம் எண்ணி
அமைதியாய் பொறுமை கொள்ளும்

அன்று வானில் பார்த்த தலைப்பிறையோ
இன்று ஏனோ உள்ளத்தில் தோன்றி மறையுது
வாஞ்சையுடன் வாங்கி வந்த நோன்புக்கஞ்சி
இன்று ஏக்கத்துடன் ஏங்கவைத்து ஏமாத்துது

 உருண்டோடி விட்ட வருடங்கள் பல
உருளாமல் இருக்கும் நினைவுகள் சில
மறைந்த நம் மனிதர்கள் பலர் அதை
மறக்காமல்  நினைக்கும் சிலர்

நீயும் நானும் சிறுவனாய் ஓடித்திரிந்த
நாட்களிலே நல்லநாட்களாய் ரமளானே
இருந்து வந்ததை மறக்க இயலவில்லை
மாற்றாக‌ வேறெதுவும் இருக்கவில்லை

ச‌ஹ‌ரு நேர‌ ச‌வுரு ப‌க்கிர்சாவும்
அவ‌ருட‌ன் வந்த அரிக்க‌ளாம்பும் 
உற‌ங்குவோரை எழுப்பி விடும்
உற்சாக‌ ஓசைக‌ள் இன்றுமுண்டோ?

சிறு வ‌ய‌து சேட்டைக‌ள் இன்று
சில‌ நேர‌ம் நினைவில் வ‌ந்து
குறிப்பிட்ட வ‌யதெட்டிய எம்மை
வாஞ்சையுட‌ன் ப‌க்குவ‌ப்ப‌டுத்தும்

கண்சிவக்க குளித்துவந்த குளக்கரையும்
காணாமல் போன‌ கொரங்குமட்டையும்
அதன் மேல் சவாரி செய்த நினைப்பும்
உள்ள‌த்தில் தூசிதட்டி துப்புறவு செய்யும்

நஹராவின் ஒலி ஊரெல்லாம் கேட்கும்
தொழுகைக்கு எம்மை தயார்படுத்தும்
வல்லோனை வணங்கிநிற்க விரைந்தோடும்
தவறிய தொழுகைக்கு தவ்பா செய்யும்

உற்றார், உறவினர் உறவு பேணும்
இல்லாதோருக்கு உள்ளார் கொடுத்து
இன்பத்தின் சுவைதனை இனிதே சுவைக்கும்
வல்லோனின் வாக்கால் வாழ்க்கை துலங்கும்

க‌ஞ்சி மேல் பிச்சி போட்ட‌‌ வாடா
கெஞ்சினாலும் கிடைக்காதா இன்று
பிஞ்சு ம‌ன‌சு கிழடானாலும் என்றும்
கைத்த‌டியின்றி நினைப்பால் க‌ம்பீர‌மாகும்

பிறை ப‌தினேழில் ப‌டையெடுத்த‌ ப‌த்ருப்படை
கத்தியின்றி ரத்தமின்றி களத்தில் நிற்கும்‌
போரின்றி கொண்டு வந்து குவித்திடும்
ந‌ல்ல‌ நாக்குருசி நார்சாவும் ரெடியாகும்

த‌லை நோன்பு சீனிச்சோறு இனிப்பால்
நினைக்கும் பொழுதெல்லாம் தித்திக்கும்
நித்திரைக்கும் வேட்டுவைத்த‌
நித‌ர்ச‌ன‌மான‌ உண்மையாகும்

உள்ளம் குளிர உம்மா தந்த சர்பத்தும்
பார்வையால் உண்டுமகிழும் பதார்த்தங்கள்‌
பசித்தலால் உருவாகும் பல ருசித்தல்கள்
பழைய நினைவால் வந்த ரசித்தல்கள்

ஏழைகளின் ஏக்கம் தீர்ந்து காசும் சேரும்
பயனடைந்தவர்களின் உள்ளமோ இன்னும்
பன்னிரண்டு மாதமும் ரமளானை வேண்டும்
ரஹ்மத்தும் ரஹ்மானிடமிருந்து வந்துசேரும்

சென்ற‌ ர‌ம‌ளானில் எம‌க்கு ச‌லாம்
சொன்ன‌ சொந்த,ப‌ந்த‌த்தின் பலர்
எம்மை விட்டு சென்று விட்ட‌ன‌ர்
இறைவ‌னடியும் சேர்ந்து விட்ட‌ன‌ர்

இறையை போற்றிப்புக‌ழ்வோரும்
இறை நிராக‌ரிப்போரும் எப்ப‌டியும்
சேருமிட‌ம் இணையில்லா இறைவ‌ன‌டி
எல்லோருக்கும் பொதுவான‌ வழிப்ப‌டி

புனித‌ ர‌ம‌ளானே வ‌ருக!
எங்க‌ளுக்கெல்லாம் ந‌ல்ல‌ருள் த‌ருக‌!

சென்றும‌றைந்த‌ ந‌ம்ம‌வ‌ர்க‌ள் யாவ‌ரின் க‌ப்ருக‌ளுக்கும் சொர்க்க‌த்தின் ந‌றும‌ண‌ம் வீச‌ச்செய்க‌!

என்று புனித‌ ர‌ம‌ளானை வாழ்த்தி வ‌ர‌வேற்றவனாக‌ அதிரை நிருப‌ரின் நிர்வாக‌க்குழுவின‌ர்க‌ளுக்கும், இங்கு ந‌ம் க‌ட்டுரைக‌ளை த‌வ‌றாது ப‌டித்து க‌ருத்திடும் அனைத்து ந‌ல்லுள்ள‌ங்க‌ளுக்கும், உற்றார், உற‌வின‌ர்க‌ள், அன்பு மிகு ந‌ண்ப‌ர்க‌ள், பாசமிகு சொந்த‌ ப‌ந்த‌ அனைவ‌ருக்கும்  முழு ப‌ர‌க்க‌த்தும், ர‌ஹ்ம‌த்தும், ம‌ஹ்ஃபிர‌த்தும் ந‌ம் அனைவ‌ர்க‌ளுக்கும் குறையாது வ‌ந்த‌டைய‌ வ‌ல்ல‌ ர‌ப்புல் ஆல‌மீனை இந்த‌ ந‌ல்ல‌ த‌ருண‌த்தில் து'ஆச்செய்கின்றேன்.

ஆமீன்.... யார‌ப்ப‌ல் ஆல‌மீன்...

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

11 Responses So Far:

Anonymous said...

அதிரைநிருபர் நண்பர்களே,

புனித ரம்ஜான் மாதத்தில் உங்களின் பொறுமையைக் கொண்டும், நல்ல செயல்களைக் கொண்டும் கடமைகளை சிறப்புடன் செய்திட வாழ்த்துகிறேன்.

உலக அமைதிக்கும் பிரார்த்திக்கும்படி உங்களையும் வேண்டுகிறேன்.

நல்லதையே நாடுவோம், நன்மையே செய்வோம் நல்லவர்கள் சூழ்ந்திருக்க வாழ்ந்திடுவோம்.

நட்புடன்,

ஆஷா

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வருக!நெஞ்சம் இனிக்கும் நெய்னாவின்
வரவேற்பு மழை இனிமை.
வழியட்டும் இறையில்லங்கள்.
வணக்கங்களும் நிறையட்டும்.
வம்புகள் ஒழியட்டும்.
வேண்டுதல்கள் நடக்கட்டும்.
வேற்றுமை ஒழியட்டும்.

Yasir said...

புனித‌ ர‌ம‌ளானே வ‌ருக!
எங்க‌ளுக்கெல்லாம் ந‌ல்ல‌ருள் த‌ருக‌!..சகோ.நெய்னாவின் சிறுபிராய நினைவுகளுடன் கூடிய ரமலான் வரவேற்ப்புக்கு வாழ்த்துக்கள்...அல்லாஹ் நாம் அனைவருக்கு இந்ரமளானின் அனைத்து விதமான நல்ல அமல்களை குறைவில்லாமல் நிறைவேற்றுவதற்க்கு “தவ்ஃபீக்” செய்வானாக..ஆமீன்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் அனைவருக்கும்

இந்த ரமழானை கொண்டு நாம் செய்திவிட்டிருந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்போமாக, மேலும் நன்மைகள் பலவற்றையும் சடைத்திடாமல் கொடுக்கும் ஏகனிடம் கேட்போமாக ...

ரமழான் சென்றவுடன் ஓய்வு எடுக்க சென்று விடுபவர்கள் போலல்லாமல், இபாதுத்துகளை தொடர்ந்தே செய்திட வல்ல ஏகனிடம் பிராத்திப்போம் நித்தமும் - ஆமின்.

அலாவுதீன்.S. said...

வல்ல அல்லாஹ்வின் அருள் மழையை
சுமந்து வரும்
புனித ரளானே வருக!

சகோ. மு.செ.மு.நெய்னா முஹம்மதிற்கு: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
****************************************************************

/// வல்ல அல்லாஹ்வின் அருள் மழையை
சுமந்து வரும்
புனித ரளானே வருக! ///

சென்றும‌றைந்த‌ ந‌ம்ம‌வ‌ர்க‌ள் யாவ‌ரின் க‌ப்ருக‌ளுக்கும் சொர்க்க‌த்தின் ந‌றும‌ண‌ம் வீச‌ச்செய்க‌!

என்று புனித‌ ர‌ம‌ளானை வாழ்த்தி வ‌ர‌வேற்றவனாக‌ அதிரை நிருப‌ரின் நிர்வாக‌க்குழுவின‌ர்க‌ளுக்கும், இங்கு ந‌ம் க‌ட்டுரைக‌ளை த‌வ‌றாது ப‌டித்து க‌ருத்திடும் அனைத்து ந‌ல்லுள்ள‌ங்க‌ளுக்கும், உற்றார், உற‌வின‌ர்க‌ள், அன்பு மிகு ந‌ண்ப‌ர்க‌ள், பாசமிகு சொந்த‌ ப‌ந்த‌ அனைவ‌ருக்கும் முழு ப‌ர‌க்க‌த்தும், ர‌ஹ்ம‌த்தும், ம‌ஹ்ஃபிர‌த்தும் ந‌ம் அனைவ‌ர்க‌ளுக்கும் குறையாது வ‌ந்த‌டைய‌ வ‌ல்ல‌ ர‌ப்புல் ஆல‌மீனை இந்த‌ ந‌ல்ல‌ த‌ருண‌த்தில் து'ஆச்செய்கின்றேன். ///

*******************************************************************
வல்ல அல்லாஹ்வின் அருள் மழையை!
சுமந்து வரும்
புனித மிக்க ரமளானை வரவேற்று
தங்களின் பிரார்த்தனையை நானும் செய்கிறேன்!

அலாவுதீன்.S. said...

///வல்ல அல்லாஹ்வின் அருள் மழையை
சுமந்து வரும்
புனித ரமளானே வருக! ///

சகோ. மு.செ.மு.நெய்னா முஹம்மதிற்கு: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// வல்ல அல்லாஹ்வின் அருள் மழையை
சுமந்து வரும்
புனித ரமளானே வருக! ///

சென்றும‌றைந்த‌ ந‌ம்ம‌வ‌ர்க‌ள் யாவ‌ரின் க‌ப்ருக‌ளுக்கும் சொர்க்க‌த்தின் ந‌றும‌ண‌ம் வீச‌ச்செய்க‌!

என்று புனித‌ ர‌ம‌ளானை வாழ்த்தி வ‌ர‌வேற்றவனாக‌ அதிரை நிருப‌ரின் நிர்வாக‌க்குழுவின‌ர்க‌ளுக்கும், இங்கு ந‌ம் க‌ட்டுரைக‌ளை த‌வ‌றாது ப‌டித்து க‌ருத்திடும் அனைத்து ந‌ல்லுள்ள‌ங்க‌ளுக்கும், உற்றார், உற‌வின‌ர்க‌ள், அன்பு மிகு ந‌ண்ப‌ர்க‌ள், பாசமிகு சொந்த‌ ப‌ந்த‌ அனைவ‌ருக்கும் முழு ப‌ர‌க்க‌த்தும், ர‌ஹ்ம‌த்தும், ம‌ஹ்ஃபிர‌த்தும் ந‌ம் அனைவ‌ர்க‌ளுக்கும் குறையாது வ‌ந்த‌டைய‌ வ‌ல்ல‌ ர‌ப்புல் ஆல‌மீனை இந்த‌ ந‌ல்ல‌ த‌ருண‌த்தில் து'ஆச்செய்கின்றேன். ///


வல்ல அல்லாஹ்வின் அருள் மழையை!
சுமந்து வரும்
புனித மிக்க ரமளானை வரவேற்று
தங்களின் பிரார்த்தனையை நானும் செய்கிறேன்!

sabeer.abushahruk said...

எம் எஸ் எம், இப்ப நாங்க இங்கே இருக்கவா இல்லே ஊருக்குப் போகவா?  இப்பிடி கிளப்பி விட்டுட்டியலே?
//ச‌ஹ‌ரு நேர‌ ச‌வுரு ப‌க்கிர்சாவும்//
சஹரு நேர சவுரு பக்கிர்சா
லுஹரு நேரம் வசூல் பக்கிர்சா
 
//க‌ஞ்சி மேல் பிச்சி போட்ட‌‌ வாடா//
கிடைப்பதற்கு இது என்ன நம் நாடா
 
//உள்ளம் குளிர உம்மா தந்த சர்பத்தும்//
அன்று அது அனலாகில் நோன்பு திறப்பதென்றால் அப்படி;
இன்று ஐஸைப் போட்டு டிஜிட்டலில் திறக்கிறார்கள்
 
ரமளான் கறீம்!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பிறை ப‌தினேழில் ப‌டையெடுத்த‌ ப‌த்ருப்படை
கத்தியின்றி ரத்தமின்றி களத்தில் நிற்கும்‌
போரின்றி கொண்டு வந்து குவித்திடும்
ந‌ல்ல‌ நாக்குருசி நார்சாவும் ரெடியாகும்///

இங்கே ஊரில் படையெடுத்த படைத் தளபதிகள் நிறைய இருக்கிறார்கள் !!

//சென்ற‌ ர‌ம‌ளானில் எம‌க்கு ச‌லாம்
சொன்ன‌ சொந்த,ப‌ந்த‌த்தின் பலர்
எம்மை விட்டு சென்று விட்ட‌ன‌ர்
இறைவ‌னடியும் சேர்ந்து விட்ட‌ன‌ர் //

உருக்கமான நினைவுகூறல்...

வல்ல அல்லாஹ்வின் அருள் மழையை! சுமந்து வரும் புனித மிக்க ரமளானை வரவேற்று தங்களின் பிரார்த்தனையை நானும் செய்கிறேன்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

Thanks MSM N

இப்புனித மிக்க ரமளானை வரவேற்று, அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே நாடி நம்முடைய அமல்களை நாம் செய்ய வேண்டும். அல்லாஹ் அதற்கு நல்வழிகாட்ட வேண்டும்.

வீண் பேச்சுக்கள், வீண் விவாதங்கள், வீண் பழிகள் இவைகளிலிருந்து அல்லாஹ் நம்மை எல்லாம் காப்பாற்றி, அவன் சிந்தனையிலேயே என்றோன்று வாழ்ந்து மரணிக்க வழிக்காட்டுவானாக என்று பிரார்த்தனை செய்கிறேன்.

அப்துல்மாலிக் said...

அருமை நெய்னா
மனம் ஊரை நோக்கும்
புனித ரமலானின்
கஞ்சியும், வாடாவும்
வாடை வீசும்....

sheikdawoodmohamedfarook said...

ஸவூறு நேர சாவுறு பக்கிருசாவின் வைற்றில் அலராம் 'அடித்தது'

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு