Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நலமில்லா நவீனமும்..
உழைப்பில்லா உடல்களும்!!
5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2014 | , , ,

(*) மின்னிலே சுழன்றிடும்
மிக்ஸியின் ஆட்சியில்
மண்ணிலே புதைந்தன
அம்மியும் குளவியும்..

(*) அறவை மில்களின்
ஆற்றலின் உதவியால்
உரலும் உலக்கையும்
உதவாக் கரைகளாம்..

(*) ஆயத்த மாவினில்
ஆப்பமும் தோசையும்..
ஆட்டு கல்லுக்கு
அலுவலும் இல்லையாம்..

(*) குடங்கள் சுமந்து
கொண்டு வந்திட்டார்
குடிநீர் ஒருகாலம்!!
குழாய்கள் இப்போது.

(*) அறிவீர் ஓருண்மை..
ஆதியில் சொன்ன
கருவிகள் மாறின
கடைசியில் பலனென்ன?

(*) மறைந்த அம்மியில்
கரங்களின் வலிமையும்
உரலின் மறைவினில்
உரமான தேகமும்

(*) குடைகல்லின் மறைதலில்
விரல்களின் வீரியம்
குடங்களின் மறைதலில்
கொடியிடை மேனியும்

(*) கூடவே மறைந்ததை
குறையல்ல! வரமென்றோம்
மாடர்ன் உலகுக்கு
மாறுதல் பலமென்றோம்..

(*) அறிவியல் வளர்ச்சியில்
யாவுமே நடந்திடும்
துரிதமாய்..அங்ஙணம்
மரணமும் வரின்?

(*) குறைவாய் உழைப்பும்
கூடுதல் உணவும்
நிறைவாய் சேர்க்கும்
நீள்பிணி நம்மில்..

(*) உண்ணுதலொத்த உடலுழைப்பும்
உழைப்பிற்கேற்ற உணவுகளுமே
முன்னவர் சொல்லிய
முறை ஆகும்..

(*) விகிதம் மாறா
விதம், உடல்பேணிடும்
சகிதம்வாழ, நம் அகவை
சதமென்றாதல் சாத்தியமே!! (இன்ஷா அல்லாஹ்)

அதிரை என்.ஷஃபாத்

இது ஒரு மீள்பதிவு

5 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Short and succinct nice poem on health awareness.

Please go through the follwing article I had posted on similar subject.
http://adirainirubar.blogspot.ae/2013/10/easy-life-leads-to-lazy-life.html?m=1

Jazakkallah khairan

B.Ahamed Ameen

sheikdawoodmohamedfarook said...

கூரபுடவ கட்டிகுங்குமமும் நெத்தியிட்டு கூண்டு வண்டி தானும் கட்டி ,கட்டியபுருசனோடுஒருத்திபிறந்த வீடுவிட்டுவாழும்வீடுபோகும்போது மாட்டுவண்டிமணியோசைகலகலத்த காலம்ஒன்றுண்டு!இன்றில்லை!

crown said...

மின்னிலே சுழன்றிடும்
மிக்ஸியின் ஆட்சியில்
மண்ணிலே புதைந்தன
அம்மியும் குளவியும்..
---------------------------------------
அம்மா!ஆட்சியில் இலவச மிக்சி!மண்ணில் புதைந்தன "குறைகளும், நிர்வாக திறமையின்மையும்.

crown said...

ஆயத்த மாவினில்
ஆப்பமும் தோசையும்..
ஆட்டு கல்லுக்கு
அலுவலும் இல்லையாம்..
---------------------------------------------------------
நகரங்களில் இந்த ஆயத்த மாவுதான் அலுவலுக்கு செல்வோருக்கு வரபிரசாதம்!

crown said...

தம்பியின் எழுத்தில் மொழியின் ஆட்சியும்!கருத்து கம்பீரமாய் திடகாத்திரமாய் இருந்து ஆரோக்கியம் சொல்வது!அழகிய மருந்து! வாழ்த்துக்கள்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு