Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 02, 2014 | , , , , ,

தொடர் பகுதி : இரண்டு

வசிக்கத்தக்க வளங்கள் நிறைந்த நாடாக படைக்கப்பட்டு யூதர்களுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது பாலஸ்தீனம். அந்த பாலஸ்தீனம் பல அரசியல் புயல்களில் சிக்கி பல்வேறு ஆட்சியாளர்களின் கரங்களில் சிக்கிச் சீரழிந்தது. அதற்கான காரணங்களாகக் காட்டபடுபவை யூதர்கள் செய்த நம்பிக்கை துரோகத்தால் இறைவனின் கோபத்துக்கு ஆளாகியதுதான் என்றும் காலத்துக்கும் இந்த அமைதியற்ற வாழ்வு யூதர்களுக்கு இறைவனிடமிருந்து பெற்ற சாபத்தின் விளைவு என்று வரலாற்று நிகழ்வுகளைக் காணும் நம்மை நம்ப வைக்கிறது. 

அடிப்படையில் பாலஸ்தீன பிரச்னை ஒரு அரசியல் பிரச்னை போலத் தோன்றினாலும் உண்மை அதுவல்ல. இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்னை அல்ல; நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை அல்ல; அத்துமீறி நாட்டுக்குள் நுழைபவர்கள் பற்றிய பிரச்னை அல்ல. உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு பங்காளிப் போர்; அதுமட்டுமல்லாமல் இது இறை நம்பிக்கையாளர்களுக்கும் இறை மறுப்பாளர்களுக்குமான போர். இந்தப் போரில் நிலையற்ற வல்லரசுகள் இஸ்ரேலுக்குத் துணையாக இருக்கலாம். ஆனால் நிலையான இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான். ஒரு காலம் வரும் அந்தக் காலம் வரும்வரை காஸா நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதுவரை, இஸ்லாத்தின் விரோதிகள் தற்காலிக சந்தோசப் பட்டுக் கொண்டு இருக்கலாம். 

வாருங்கள் பேச வந்த விஷயத்துக்குள் போகலாம். 

ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இறைவனிடமிருந்து தனது தூதர்கள் மூலம் நான்கு வேதங்கள் வந்தன. ஒரு தூதருக்கு வந்த வேதத்தை அதற்கு அடுத்து வரும் வேதம் பயன்பாட்டுக்கு வர இயலாமல் செய்துவிடும். ஏற்கனவே வழங்கப்பட்ட வேதம் இருக்கும் போது புதிய வேதம் இறக்கப்படுவதன் நோக்கமும் அதுதான். அந்த வகையில் நபி மூஸா ( அலை) அவர்களுக்கு வந்த வேதத்தை விட நபி ஈசா (அலை) அவர்களுக்கு வந்த வேதமாகிய இன்ஜீல் மேலோங்கியதாக நம்பிக்கை கொள்ளப்பட்டது. அதேபோல் நபி ஈசா (அலை) அவர்களுக்கு வந்த இன்ஜீல் வேதத்தை விட அதற்கு அடுத்து பெருமானார் (ஸல்) அவர்களுக்கு வந்த வேதம் ஆகிய அருள்மறை குர் ஆன் மேலோங்கி நின்றதாக நம்பிக்கை கொள்ளப்பட்டது. இந்த வேதங்களை வழங்கிய இறைவனின் கட்டளையும் அதுதான். ஆனால் இந்த அடிப்படை உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து தங்களுக்கு முதன் முதலில் வந்த வந்த வேதம் மட்டும்தான் தான் உண்மையான வேதம் என்று யூதர்களும் , கிருத்தவர்களும் நம்பிக்கை கொள்ள மறுத்து ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளவும் இருவரும் சேர்ந்து இஸ்லாத்தின் விரோதிகளாக மாறியதும்தான் பாலஸ்தீனத்தின் அடிப்படைப் பிரச்னை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து , பெருமானார் முகமது (ஸல்) அவர்களை இறைவன் இறுதி நபியாக பெருமைப் படுத்தியது யூதர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. யூதர்களின் கரங்களில் இருந்த முந்தைய வேதங்களில் இறுதி நபி ஒருவர் வருவார் என்று கூறப்பட்டிருந்ததை யூதர்களும் நம்பிக்கொண்டு மட்டுமல்ல எதிர்பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். அந்த நபி மதீனத்து மாநகரில் வந்தமர்வார் என்பதுவரையும் கூட அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. அதனால்தான் பல யூதக் குடியிருப்புகள் மதினத்து மாநகரைச் சுற்றி உண்டாயின. ஆனால் இறுதியாக வந்த நபி பிறந்த கோத்திரம்தான் யூதர்களை வெறுப்புக்கு உள்ளாக்கியது. 

அதாவது நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரு புதல்வர்கள். ஒருவர் இஸ்ஹாக் (அலை) மற்றவர் இஸ்மாயில் (அலை) ஆவார்கள். யூதர்களைப் பொறுத்தவரை பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முன்பு வந்த நபிமார்கள் அனைவரும் இஸ்ஹாக் (அலை) அவர்களுடைய கோத்திரத்தில்தான் வந்தார்கள். ஆகவே இறுதி நபியையும் அவர்கள் அதே போல் யூதர்களின் கோத்திரமான இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழியில்தான் வருவார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில், இஸ்மாயில் (அலை) அவர்களின் கோத்திரத்தில் – வம்சாவழியில் வந்த நபி முகமது (ஸல்) அவர்களின் மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்தக் காரணம் முஸ்லிம்களான பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே பரம்பரை வெறுப்பையும் துவேஷத்தையும் தூண்டிவிட்டது. பெருமானார் ( ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தே அவர்கள் இஸ்லாத்துக்கு எதிரான காரியங்களை செய்யத் துணிந்தார்கள்.

இதனால் முன்பு எந்த இறைவன் இஸ்ரேலியர்களுக்காக இந்த வளம் மிக்க பால்ஸ்தீனத்தை படைத்துக் கொடுத்தானோ, அந்த இறைவனின் கட்டளைகளுக்கு மாறுபாடுகள் செய்து துரோகம் செய்தனர் என்றும் அதற்கான இறைவனின் சாபம் யூதர்களின் மீது இறங்கியது என்றும் இறைவன் வழங்கிய அத்தனை வேதங்களின் நெடுகிலும் கண்டு வருகிறோம். கிட்டத்தட்டத் திருமறையின் அனைத்து அத்தியாயங்களிலும் யூதர்கள் செய்த துரோகம் இறைவனால் கண்டிக்கபடுகிறது. 

யூதர்களின் தவறான செயல்பாடுகளால் இறைவனின் அதிருப்தியை அளவுக்கு அதிகமாக சம்பாதித்துக் கொண்டனர் என்பதையும் நாம் மறுக்க முடியாது. படைத்த இறைவன் இந்த மக்களுக்காகச் செய்த எண்ணற்ற உதவிகளை மறந்துவிட்டு இவர்களின் நன்றி மறந்த செயல்களால் அதிருப்தி அடைந்து தனது கோபத்தை பல இடங்களில் வெளிப் படுத்தி இருக்கும்போது இவர்கள் எவ்விதம் நிம்மதியாக வாழ இயலும். இறைவன் வாரி வழங்கி இருக்கும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாத எந்த சமூகமும் இறைவனின் சாபத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் தப்பித்துவிட முடியாது என்பதற்கும் பாலஸ்தீனம் ஒரு உதாரணம். இதனைக் கொண்டு வல்லோனின் வாக்குகளைவிட்டு வழிதவறிச் செல்கிற உலக மக்களை இறைவன் எச்சரிக்கை செய்கிறான் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். அல்லாஹ் பாதுகாப்பானாகவும். பாலஸ்தீனத்தின் அரசியல் வரலாறுகளைப் பார்க்கும் முன்பு யூதர்களின் மீது இறைவனின் வெளிப்படையான கோபத்தின் வெளிப்பாடுகளின் சில வரிகளையும் சில வரலாற்று நிகழ்வுகளையும் பார்த்து விடலாம்.

சூரத் அல் பகராவின் பல வரலாற்று நிகழ்வுகளை அல்லாஹ் குறிப்பிட்டுக் காட்டுகிறான். 

“இஸ்ராயீலின் வழித் தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கி இருந்த என் அருட்கொடைகளையும் உங்களை உலகத்தோர் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவு கூருங்கள்" ( 47- 48 ) 

பிர் அவுனுடைய கூட்டத்தாரின் (அடிமைத்தளையிலிருந்து) நாம் உங்களுக்கு விடுதலை அளித்ததையும் நினைவு கூருங்கள். (49)

மேலும் இதையும் நினைவு கூறுங்கள். நாம் மூஸாவுக்கு நாற்பது இரவு பகல்களை வாக்களித்திருந்தோம். ஆனால் அவர் சென்றபிறகு நீங்கள் காளைக் கன்றை கடவுளாக ஆக்கிக் கொண்டீர்கள். அப்போது நீங்கள் பெரும் அக்கிரமம் புரிந்தவர்களாக இருந்தீர்கள். அதன் பின்னரும் நீங்கள் நன்றியுடையோராய் இருக்ககூடும் என்பதற்காக நாம் உங்களை மன்னித்தோம். ( 51-51)

மேலும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; உங்களுக்கு மேலும் “மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் (உங்கள் மூதாதையர்கள் வரம்பு மீறினார்கள்) அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். ( 57 ) 

(ஷாமிற்கும் சிரியாவிற்கும் இடையில் உள்ள ஒரு தீவில் அவர்கள் இருந்த போது அவர்களை கோரமான வெயில் தாக்காமல் இருக்க வானில் திரிந்த மேகத்தைக் கொண்டு அவர்கள் போகுமிடங்களிலெல்லாம் அவர்கள் மீது வெயில் படாமல் பாதுகாத்து நிழலைக் கொடுத்து, பசியை போக்க வானில் இருந்து உணவையும் இறக்கி தாகம் தீர கல்லில் இருந்து தண்ணீரையும் வரச் செய்து இன்னும் பல உபகாரங்களையும் செய்தான். இவற்றை எல்லாம் அனுபவித்து விட்டு அல்லாஹ்விற்கு மாறுபாடு செய்தார்கள்.

யூதர்களின் தந்தையான யாகூப் (அலை) அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் வாழ்ந்த பகுதியான பைத்துல்முகத்தஸை யாகூப் (அலை) அவர்கள் எகிப்துக்கு சென்ற பிறகு அமாலிக்கா என்ற கூட்டத்தினர் அதை ஆக்கிரமித்து கொண்டனர். அவர்களிடம் இருந்து அதை மீட்க அவர்களுடன் போர்செய்யும் படி மூஸா நபிக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். மூஸா நபி அவர்களை போருக்கு செல்வதற்காக அழைத்த போது அவர்களுடன் மனமின்றிப் புறப்பட்ட யூதர்கள், பைத்துல் முகத்திஸ்கு அருகில் உள்ள ஒரு தீவில் தங்கிய பொழுது பலசாலிகளான அமாலிக்கா கூட்டத்தாரைப் பற்றி கேள்வி பட்ட அவர்கள், பயந்தாகொள்ளிகளாக போர் செய்ய மறுத்தனர் எனவே அல்லாஹ் அந்த தீவில் அவர்களுக்கு பெரிய சோதனை கொடுத்தான். அவர்கள் அவ்விடத்தைக் கடக்க இரவு முழுவதும் சிரமப்பட்டு நடப்பார்கள். மறுநாள் காலையில் பார்த்தால் முன் இரவில் அவர்கள் எங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்களோ அதே இடத்தில் தான் இருப்பார்கள். இதே போன்று பகல் முழுவதும் சிரமப்பட்டு நடந்து இரவு வந்தவுடன் அவர்கள் பகலில் எங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்களோ அங்கு தான் நின்று கொண்டு இருப்பார்கள். இப்படி 40 வருடங்கள் நடந்தும் அவர்களால் அந்த இடத்தை கடக்க முடியவில்லை . அவர்கள் 6 லட்சம் பேர்களாக இருந்தனர். சிலரை தவிர அனைவரும் அதே இடத்திலேயே மரணமானார்கள்.) இந்த நிகழ்வைத்தான் அல்லாஹ் அல் பகராவில் குறிப்பிடுகிறான். நூல்  : தப்ஸீருல் ஜலாலைன்.

மேலும் அதே அல் பகராவில் , 

“இழிவும் தாழ்வும் (வீழ்ச்சியும்) அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டன. மேலும் அவர்கள் அல்லாஹ்வின் சினத்துக்கும் ஆளாகிவிட்டார்கள். இந்த விளைவு ஏன் ஏற்பட்டதென்றால் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நபிமார்களை நியாயாமின்றி கொலை செய்து கொண்டும் இருந்தார்கள். இந்த விளைவு ஏற்பட்டதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டும் (ஷரீஅத்தின்) வரம்பை மீறிக் கொண்டும் இருந்ததுதான்! ” (61).

“மேலும் உங்களில் எவர்கள் - சனிக்கிழமை வரையறையை மீறினார்களோ அவர்களைப் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்தே இருக்கிறீர்கள். அவர்களை நோக்கி நீங்கள் குரங்குகளாகி (அனைவராலும் வெறுக்கப்பட்டு) இழிவடைந்தவர்களாகி விடுங்கள் என்று நாம் கூறினோம். (இவ்வாறு) அவர்களின் இறுதி முடிவை அன்று வாழ்ந்த மக்களுக்கும் அதற்குப் பின்னர் வரக்கூடிய வழித் தோன்றல்களுக்கும் ஒரு படிப்பினையாகவும் இறையச்சமுடையோர்க்கு நல்லுரையாகவும் ஆக்கினோம்.” (65-66).

“மேலும், நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். மேலும் அவரைத் தொடர்ந்து தூதர்களை அனுப்பினோம். இறுதியில் மரியமுடைய மகன் ஈஸாவுக்கும் தெளிவான சான்றுகளைக் கொடுத்தனுப்பினோம். மேலும் தூய ஆன்மாவைக் கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். யாரேனும் ஒரு தூதர் உங்களுடைய மன இச்சைகளுக்கு இசைவில்லாத ஏதேனும் ஒன்றை உங்களிடம் கொண்டுவந்த போதெல்லாம் நீங்கள் ஆணவம் கொண்டு புறக்கணித்தீர்கள்; சிலரைப் பொய்யரென்று கூறினீர்கள்; மற்றும் சிலரை நீங்கள் கொலை செய்தீர்கள் . ......அவர்களுடைய அவ நம்பிக்கையின் காரணமாக அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டான்.” ( 87 – 90 ).

“(இஸ்ரேலிய வம்சத்திலிருந்தே தோன்றிய) அல்லாஹ்வின் தூதர்களை நீங்கள் ஏன் கொலை செய்துகொண்டிருந்தீர்கள்?” ( 91- 93).

“அல்லாஹ் இறக்கியருளிய வழிகாட்டலை அவர்கள் நிராகரிப்பது – தான் அடியார்களில் தான் நாடுகின்ற ஒருவர் மீது தனது கருணையை (வஹி மற்றும் தூதுத்துவத்தை) அல்லாஹ் இறக்கியருளுவது குறித்துக் காழ்ப்புணர்ச்சி கொண்டு அவர்கள் நிராகரிப்பது எவ்வளவு கெட்டது! ஆகவே இப்போது அவர்கள் கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள். மேலும் இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு இழிவுமிக்க தண்டனை உண்டு (87-90).

இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள், தப்ஸீர் இப்னு கசீர் நூலில் சொல்கிறார்கள் இப்படி “பனூ இஸ்ரவேலர்கள் ஒரே நாளில் 300 நபிமார்களை கொலை செய்தார்கள் .”
.
அனஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.

உக்கல் என்ற கூட்டத்தை சார்ந்த சிலர் நபி ( ஸல்) அவர்கள் இடம் வந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றார்கள் . ஆனால் அவர்கள் மதீனாவில் தங்குவதை விரும்பவில்லை. அவர்களுக்கு நோய் வந்தது. எனவே பெருமானார் ( ஸல்) அந்த மக்களை சதகாவின் ஒட்டகங்களை எடுத்து சென்று அதனுடைய பாலையும் சிறுநீரையும் குடிக்கும் படியும் மதினாவுக்கு வெளியே வாழும் படியும் ஏவினார்கள். அவர்கள் நபி சொன்னதை செய்தார்கள் உடல் நலம் பெற்றார்கள் அத்துடன் மீண்டும் மதம் மாற்றிக் கொண்டார்கள். அத்துடன் நபி (ஸல்) அவர்களின் ஒட்டக மேய்ப்பாளரையும் கொலை செய்து விட்டு ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றார்கள் . நபி ( ஸல்) அவர்கள் அந்த துரோகிகளைத் தேட ஆள் அனுப்பி பிடித்துவரச் செய்தார்கள். அவர்கள் நபி ( ஸல்) அவர்களின் முன்னாள் கொண்டு வரப்பட்டார்கள். இரக்கமே உருவான பெருமானார் (ஸல்) அவர்கள் அந்த துரோகிகளின் கைகளையும் கால்களையும் துண்டித்து அவர்களின் கண்களைப் பறித்தார்கள். மரணிக்கும் வரை அவர்களுக்கு எதையும் குடிக்கவும் கொடுக்கவில்லை.

தனக்கும் தன் குடும்பத்திற்கும் எதிரிகள் எண்ணற்ற கொடுமைகள் செய்த பொழுது அவற்றை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட நபி ( ஸல்) அவர்கள், இஸ்லாமிய உம்மத்தில் ஒரு சகோதரர் நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டு அநீதியாக கொல்லப்பட்ட பொழுது பொங்கி எழுந்தார்கள் என்பதை நாம் இந்த இடத்தில் உணர்ந்து கொள்ள வேண்டும். 

இன்னும் பெருமானார் (ஸல்) அவர்களுடைய வரலாற்றில் யூதர்கள் நல்லவர்கள் போல உறவாடி விஷம் வைத்த நிகழ்வும், செய்வினை வைத்த நிகழ்வையும், பெரிய பாறாங்கல்லை அவர்கள் மீது தள்ளிவிட்டுக் கொலை செய்ய முயன்ற நிகழ்வுகளையும் பார்க்கிறோம். 

“ஒரு யூதனுடன் கை குலுக்கினால் உன் விரல்களை எண்ணிப் பார்த்துக் கொள்” என்று ஒரு பழமொழி உலகெங்கும் உலவி வருகிறது. இது யூதர்களுடைய அடிப்படை குணத்துக்கான உலகத்தர சான்றிதழ். 

Merchant of Venice என்கிற பெயரில் ஆங்கில நாடக உலகின் அறிஞர் ஷேக்ஸ்பியர் ஒரு நாடகம் எழுதி இருக்கிறார். நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை காலத்தின் கண்ணாடி என்று கருதப்பட வேண்டும். அந்த வகையில் இந்த நாடகம் ஒரு யூத இனத்தைச் சார்ந்த ஷைலக் என்கிற வட்டி மூசாவின் கொடிய நெஞ்சின் குணத்தைப் பறை சாற்றுகிறது. அந்த நாடகத்தின் காட்சிகளை இங்கே விவரிக்க விரும்பவில்லை. யூதர்களின் கொடிய குணத்துக்கு ஒரு சான்றாகவே குறிப்பிட விரும்புகிறேன். 

தங்களுடைய துரோகச் செயல்களால், ஈவு இரக்கமற்ற நடவடிக்கைகளால் , சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத வாழ்வால், அடுத்துக் கெடுக்கும் குணத்தால் இந்த யூதர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்; நாடின்றி வீடின்றி உலகெங்கும் அலைந்து திரிய வேண்டுமென்று இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் அவர்கள். இறைவனின் வாக்குப் படி படைப்பினங்கள் யாவும் யூதர்களுக்கெதிராக திரண்டு நிற்குமென்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். ஒரு காலம் வரும் ஒரு யூதன் தனது உயிருக்கு பயந்து ஒரு மரத்துக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டாலும் அந்த மரமே இவனைக் காட்டிக் கொடுக்குமாம்.

இப்படி இறைவனின் கோபத்தையும் சாபத்தையும் உலகமக்களுக்கிடையில் அரக்கர்கள் என்கிற பெயரும் வாங்கி வைத்திருக்கும் யூதர்கள் ஒருகாலமும் நிம்மதியாக வாழ முடியாது. அமைதியான சூழலில் அவர்கள் வாழவே முடியாது என்பதுதான் இறைவன் வழங்கி இருக்கும் தண்டனையின் வெளிப்பாடு. இன்று ஏதோ அமெரிக்க ஆயுத பலத்தால் அவர்கள் வெல்வது போலத் தோன்றினாலும் இறுதியில் தோற்பார்கள். கெடுவான் கேடு நினைப்பான் என்பதுதான் நாம் அறிந்த பழமொழி. நிராயுத பாணிகளை இரக்கமின்றிக் கொலை செய்வது யூதர்களின் இரத்தத்தில் ஊறிய இயல்பு அதற்குரிய விலையை அவர்கள் காலம் வரும்போது செலுத்தியே தீருவார்கள் என்பதை இங்கு நிலை நிறுத்தி இந்த அத்தியாயத்தை நிறைவு செய்வோம். 

மீண்டும் தொடந்து இந்த வரலாற்றை ஆய்வோம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும். 

இபுராஹீம் அன்சாரி

13 Responses So Far:

Aboobakkar, Can. said...

என்னின் மதிப்பிற்குரிய அதிரை நிருபர் வலைதள மூத்த எழுத்தாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நான் தெரிவிப்பது ......பாலஸ்தீனம் ஒரு உலகளாவிய அரசியல் ...........இதில் அவர்களுக்காக கண்ணீர் வடிப்பதை தவிர நமக்கு அல்லாஹ் வேறு எந்த சக்தியையும் தரவில்லை.......ஆகவே சிறு சிறு விடயங்களுக்கு பாலஸ்தீனத்தை உவமை படுத்துவதும் அதில் நம்மை கட்டுபடுத்துவம் நம்மில் நமக்கு ஏற்படும் ஆர்வ கோளாறும் மற்றும் அறிமையாமைஎன்பதை தெளிபடுத்த விரும்புகின்றேன் ...

அல்லாஹ்வால் ஏற்றுகொள்ளபட்ட வழிகளை நாம் பின்பற்றுகின்றோமா ?

சற்றே சிந்தியுங்கள் ................

ஊருக்கு ஒரு அமைப்பு .........தெருவுக்கு ஒரு அமைப்பு ...........பண மமதை .......

மக்களிடம் அதிகம் காணப்படும் கருத்து வேறுபாடுகள் ...........

அமைப்புகளில் சேர்ந்தால் தன்னுடைய சுயநல காரியங்களை அதிகாரத்துடன் சாதிக்கலாம் என்ற நர்பாசை .......

தெரு பாகுபாடு ................உண்மையை வெளிப்படையாக சொல்லுபவர்களை பைதியகாரர்களாக சித்தரிக்கும் ராஜதந்திரம் ..........

ஊரின் பிரபலங்கள் என்று கூறிக்கொள்ளும் முக்கியஸ்தர்களின் விளம்பர பிரியம் ............அடுக்கலாம் அடுக்கலாம் அடிக்கிக்கொண்டே போகலாம் ...........
குடும்ப அரசு நடத்தும் அரபுக்கள் .........மற்றும் அதை சார்ந்த பெட்ரோல் வளம் கொழிக்கும் குட்டி நாடுகள் ..............

அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடாமல் அமெரிக்கர்களை நம்பும் அரபு நாடுகள் ..............
யா அல்லாஹ் எங்களை நல்வழி படுத்துவாயாக

......ஆமீன் .....

sheikdawoodmohamedfarook said...

ஆகமொத்தம் எல்லோரும்ஆதமுடைய மக்களே என்ற போதிலும் கோத்திரபிரிவு, குலப்பிரிவு அண்ணன் தம்பிகளின் அடிபிடிசண்டைகள் பூமிஉருண்டையை ரத்தத்தில்குளிப்பாட்டுகிறது. ஓ!மண்ணுக்கேபோராடும்மனிதா!நீவென்றலும்மண்ணுக்கேசொந்தம்: தோற்றாலும்மண்ணுக்கேசொந்தம்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பாதக யூதர்களைப்பற்றிய அறிமுகக் குறிப்புகள் அவர்கள்மீதான வெறுப்பை மேலும் கூட்டுகிறது.

அவர்களின் அழிவு நம் கண்முன் நிகழ்ந்துவிடாதா என்கிற ஏக்கம் மேலோங்குகிறது.

உபயோகமான தகவல்களோடு எழுதிச் செல்லும் தங்களின் பாணி எங்களை உங்களின் வாசகர்களாகக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது காக்கா.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

(அந்தக் காலத்தில் ஓதித்தரும் பள்ளியில் போடும் குட்டையைப்போல பேரனைக் கொண்டு என்னை வீட்டோடு கட்டிப் போட்டு வைத்துள்ளனர் காக்கா. இன்ஷா அல்லாஹ் தங்களை விரைவில் சந்திப்பேன்)

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி சபீர்! வ அலைக்குமுஸ் சலாம்.

வீட்டோடு கட்டிப் போட்டு வைத்திருப்பவர் பேரன் என்று கேள்விப் பட்டேன்.

விடுமுறையை அனுபவியுங்கள் ஆனந்தமாய்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தொடர் ஆழமாகவும், அதோடு ஆதாரத்தோடும் கியர் போட்டு எழும்பிக் கொண்டிருக்கிறது… இத்தகைய அடித்தளம் அவசியம் அனைவராலும் அறியப்பட வேண்டும் அப்போதுதான் பாலஸ்தீனம் என்ற வலி யை அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும்.

sabeer.abushahruk said...

//
“ஒரு யூதனுடன் கை குலுக்கினால் உன் விரல்களை எண்ணிப் பார்த்துக் கொள்” என்று ஒரு பழமொழி உலகெங்கும் உலவி வருகிறது. இது யூதர்களுடைய அடிப்படை குணத்துக்கான உலகத்தர சான்றிதழ். //

ஒரு சோறு பதம்?

Ebrahim Ansari said...


இன்று ஒரு திருமண நிகழ்வில் மரியாதைக் குரிய அஹமது காக்கா அவர்களை சந்தித்தேன்.

இந்தத்தொடரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்கள் ஒரு நிகழ்வை சொன்னார்கள்.

அதாவது பெருமானார் ( ஸல் ) அவரகளின் மறைவுக்குப் பிறகு உடல் அடக்கப்பட்டதும் நிலத்தின் வழியே மதீனாவுக்குள் ஊடுருவி பெருமானார் அவர்களின் உடலையே கடத்துவதற்காக யூதர்கள் திட்டமிட்டார்களாம்.

பாவிகள்.

பாவத்தின் சம்பளம் மரணம் என்று பைபிளில் ஒரு வாசகம் வரும்.
இன்று யூதர்கள் செய்யும் அத்தனை பாவங்களுக்கும் அவர்களுக்கு சம்பளம் உண்டு. இதை நாம் நம்புகிறோம்.

Ebrahim Ansari said...

இன்று முத்துப் பேட்டையிலிருந்து ஒரு பெரிய மனிதர்- வள்ளல்- கல்வியாளர் அலைபேசியில் அழைத்தார்.
இதுவரை பாலஸ்தீனப் பிரச்னை என்பது ஏதோ இரு நாடுகளுக்கான பிரச்னைதான் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்ததாகவும் - பிரச்னையின் ஆணிவேர் என்ன என்று இந்தப் பதிவில் இருந்தே விளக்கம் கிடைத்ததாகவும் கூறினார்.

அத்துடன் இதே போல சகோதர யுத்தம் மகாபாரதத்தில் துரியோதனக் கூட்டத்துக்கும் பாண்டவர் கூட்டத்துக்கும் நடந்தது போல இருக்கிறது என்றும் அவர் ஒப்பிட்டுக் கூறினார்.

நம்மைப் பொறுத்தவரை மகாபாரதம் ஒரு கதை/ இதிகாசம்.

பாலஸ்தீன விவகாரம் பங்காளிச் சண்டை. .

பெரிய மனிதர்கள் நமது பதிவுகளை படிக்கும் செய்தியும் அதனால் வரும் பாராட்டுக்களும் நமக்கு உற்சாகம் தரும் பூஸ்ட்.

Ebrahim Ansari said...

Merchant of Venice கதை கூட ஒரு இன்ரஸ்டிங்க் ஆன கதை.

ஆங்கில இலக்கியப்பட்டம் பெற்ற யாராவது அதை விலாவாரியாக தமிழில் எழுதலாமே! இந்த யூதர்களின் முகமூடி இன்னும் கிழியட்டுமே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//உற்சாகம் தரும் பூஸ்ட். //

காக்கா, இன்னும் நிறைய இருக்கே... சொல்ல !

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் இல்லாமல் வசித்ததை தங்களைச் சுற்றியிருப்பவர்களின் விவாதிக்கும் பெரியோரும் பெண்டிரும் இருக்கிறார்களே !

இப்னு அப்துல் ரஜாக் said...

இன்ஷா அல்லாஹ்
கல்லும் மண்ணும்
பாறையும் மரமும்
யூதனைக் காட்டிக் கொடுக்கும்
அந்த நாளை எதிர்பார்த்து
காத்திருக்கிறேன்

sheikdawoodmohamedfarook said...

Merchant of Veniceகாதிர்மொஹிதீன்மேல்நிலைபள்ளியில்1954-ம் ஆண்டுவாக்கில்பள்ளிஆண்டுவிழாவில்நாடகமாகநடந்தது.ஷேக்ஸ்பியரின்''ஹாம்லெட்/ஒதெல்லோ'ஆகியஇரண்டுநாடகங்களையும்கவிஞர்புவியரசு தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். .வெளியீட்டாளர்;நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ்41-Bசிட்கோ இன்டுஸ்டரியல் எஸ்டேட்,அம்பத்தூர்,சென்னை-600098.Tel,26251968-26359906

adiraimansoor said...

இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்குபவர்கள் மட்டுமல்ல மடத்தை பிடுங்க உயிரையும் குடிக்கும் காட்டேரிகள் இஸ்ரவேலர்கள்

அன்று ஹிட்ளர் தன்னை பற்றி உலகமக்கள் யஹூதியை பற்றி தெரிந்துகொள்வதற்காக விட்டுச்சென்ற 10% யஹூதிகளே இவர்கள்
அந்த 10% க்கே இவ்வளவு என்றால் ஹிட்லர் யஹூதிகளை அழிக்காமல் விட்டுச்சென்றிருந்தால் நிலமை என்னாவாகி இருக்கும்

மாகா கொடியவர்கள் என்பது தெரிந்துதான் ஹிட்லர் அன்று யஹூதிகளை கூண்டோடு அழித்தான்

மீதமிருக்கும் யஹூதிகளை அழிக்க அல்லாஹ் இன்னொரு ஹிட்லரை உலகத்திற்கு அனுப்புவான்

அது ஐ எஸ் ஐ யாகவும் இருக்கலாம் இறைவனிடம் மன்றாடியவர்களாக காத்திருப்போம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு