Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 051 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 12, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . . 

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

‘’நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும், உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே. (அல்குர்ஆன்: 4:78 அன்னிஸா - பெண்கள்)

இறந்தவரிடம் கூற வேண்டியவை, இறந்தவரின் உறவினரிடம் கூற வேண்டியவை:

''நோயாளியிடமோ அல்லது இறந்தவரிடமோ நீங்கள் இருக்க நேரிட்டால், நல்லதைக் கூறுங்கள். நீங்கள் சொல்லக் கூடியவற்றிற்கு வானவர்கள் 'ஆமின்' கூறுகிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (என் கணவர்) அபூஸலமா (ரலி) இறந்தபோது, நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! அபூஸலமா இறந்து விட்டார்கள்'' என்று கூறினேன். ''அல்லாஹு மஹ்ஃபிர்லீ வலஹு, வஅஹ்கிப்னீ மின்ஹு உக்பன் ஹஸனதன் (இறைவனே! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக, அவரை விட சிறந்த துணையை எனக்கு ஏற்படுத்துவாயாக)'' என்று நீ கூறு! என நபி(ஸல்)கூறினார்கள். அதை நான் கூறினேன். அவரை விட சிறந்தவர்களான முஹம்மத் (ஸல்) அவர்களை எனக்கு அல்லாஹ் துணையாக்கினான். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 920)

''ஒரு மனிதனுக்கு சோதனை ஏற்பட்டதும் ''இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அல்லாஹும்ம அஜிர்னீ ஃபீமுஸீபத்தீ வக்லிஃப்லீ கய்ரன் மின்ஹா (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள். நாம் அவன் பக்கமே மீளுபவர்களாக உள்ளோம். இறைவனே! என் சோதனையில் எனக்கு கூலியைத் தருவாயாக! அதைவிட சிறந்ததை எனக்குப் பகரமாக்குவாயாக) என்று கூறினால், அவருக்கு அல்லாஹ் அவரின் சோதனைக்கு  கூலியைத் தந்து, அதைவிட சிறந்ததை அவருக்கு பகரமாக்காமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (என் கணவர்) அபூஸலமா(ரலி) இறந்தபோது நபி(ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டபடிக் கூறினேன். அவரையும் விட சிறந்த நபி(ஸல்) அவர்களையே எனக்கு கணவராக ஆக்கினான். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 921)

''ஓர் அடியானின் குழந்தை இறந்துவிட்டால், வானவர்களிடம் அல்லாஹ், ''என் அடியானின் குழந்தை (உயிரை) கைப்பற்றினீர்களா?'' என்று கேட்பான். ''ஆம்'' என அவர்கள் கூறுவார்கள். ''என் அடியானின் இதயத்தைக் கைப்பற்றினீர்களா? என்று அல்லாஹ் கேட்பான். ''ஆம்'' என அவர்கள் கூறுவார்கள். ''என் அடியான் என்ன கூறினான்? என்று கேட்பான். ''உன்னைப் புகழ்ந்தான். ''இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன் எனக் கூறினான்'' என்று வானவர்கள் கூறுவார்கள். ''சொர்க்கத்தில் என் அடியானுக்கு வீடு கட்டுங்கள். அதற்கு ''புகழுக்குரிய வீடு'' என்றறு பெயரிடுங்கள்!'' என்று அல்லாஹ் கூறுவான். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) அவர்கள் (திர்மிதீ)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 922)

''ஓர் இறை நம்பிக்கை கொண்ட அடியானின் குழந்தையை இவ்வுலகில் நான் கைப்பற்றி, அவன் அதை பொறுமையாக எடுத்துக் கொண்டால், அவனுக்குக் கூலியாக சொர்க்கத்தைத் தவிர வேறில்லை' என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 923)

''நபி(ஸல்) அவர்களின் பெண் மக்களில் ஒருவர் (ஜைனப்(ரலி) தன் மகன் இறந்து விட்டதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். அப்போது வந்தவரிடம் நபி(ஸல்) அவர்கள் ''என் மகளிடம் செல். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு எடுத்துக் கொள்ளவும், கொடுக்கவும் உரிமை உண்டு என்று அவரிடம் கூறு! அல்லாஹ்விடம் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு.  அவர் (என் மகள்) பொறுமையாக இருந்து, நன்மையை நாடும்படி அவருக்கு கட்டளையிடு'' என்று கூறினார்கள். (இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும்). (அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத்  (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 924)

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். (அல்குர்ஆன் :63:9 அல் முனாஃபிகூன் -நயவஞ்சகர்கள்)

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! ‘’இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே’’ என்று அப்போது மனிதன் கூறுவான். (அல்குர்ஆன் :63:10 அல் முனாஃபிகூன்- நயவஞ்சகர்கள்)

அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் :63:9 அல் முனாஃபிகூன்- நயவஞ்சகர்கள்)

மய்யித்திற்கு துஆச் செய்வது, அதை பின் தொடர்வது:  

''ஒருவர் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டால் அவருக்கு ஒரு 'கீராத்' நன்மை உண்டு. ஒருவர் அதை அடக்கம் செய்யும் வரை கலந்து கொண்டால் அவருக்கு ''இரண்டு கீராத்'' உண்டு என்று நபி (ஸல்) கூறினார்கள். ''இரண்டு கீராத் என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டதற்கு, ''பெரும் இரண்டு மலைகள் போன்றது'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 929)

''இறை நம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் முஸ்லிமின் ஜனாஸாவில் கலந்து கொண்டு, அதற்காக தொழுது, அதை அடக்கம் செய்யப்படும் வரை ஒருவன் இருந்தால், அவன் இரண்டு ''கீராத்'' நன்மைகளை கூலியாகப் பெற்று திரும்புகிறான். ஒரு கீராத், உஹது மலை போலாகும். ஒருவன் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டு, அடக்கம் செய்யப்படும் முன் திரும்பிவிட்டால், அவன் ஒரு ''கீராத்'' நன்மையுடன் திரும்புகிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 930)

''இறந்தவருக்காக நீங்கள் தொழுதால், அவருக்காக துஆவை நீங்கள் மனத்தூய்மையுடன் செய்யுங்கள்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 937)

''ஜனாஸாவை (அடக்கம் செய்ய) தீவிரமாக்குங்கள். அது நல்லதாக இருந்தால், அதை நன்மையின் பக்கம் முற்படுத்தி வைத்தவர்களாவீர்கள். அது தீமையானதாக இருந்தால் உங்களின் பிடரிகளை விட்டும் (உங்கள் பொறுப்பை) அந்த தீமையை இறக்கி வைத்தவர்களாவீர்கள்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 941)

''ஜனாஸா (அடக்கம் செய்திட) தயார் செய்யப்பட்டு, அதை ஆண்கள் தங்களின் கழுத்துகளில் சுமந்து சென்றால், அந்த ஜனாஸா நல்லதாக இருந்தால், ''என்னை சீக்கிரம் கொண்டு செல்லுங்கள்.'' என்று அது கூறும். அது சரியில்லாததாக இருந்தால், தன்னைச் சேர்ந்தோரிடம் ''எனக்கு வந்த நாசமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?'' என்று கேட்கும். அதன் சப்தத்தை மனிதன் அல்லாத அனைத்தும் கேட்கும். மனிதன் கேட்டால் அதிர்ச்சியாகி விடுவான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 942)

''(இறந்து விட்ட) ஒரு மூஃமினின் உயிர், அவனது கடன் அவனை விட்டும் நிறைவேற்றப்படும் வரை கடனால் சூழப்பட்டிருக்கும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 943)

''பகீஉல் அர்கத் என்ற இடத்தில் ஒரு ஜனாஸாவில் நாங்கள் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்து, உட்கார்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்கள் உட்கார்ந்தோம். அவர்களுடன் ஒரு கைத்தடி இருந்தது. தன் தலையைக் குனிந்த அவர்கள்,  தன் கைத்தடியால் தரையைத் தோண்டினார்கள். பின்பு '' ஒருவரின் தங்குமிடம் நரகம், தங்குமிடம் சொர்க்கம் என உங்களில் ஒருவர் எழுதப்படாமல் இருப்பதில்லை' என்று கூறினார்கள். '' இறைத்தூதர் அவர்களே! எங்களின் ஏட்டில் உள்ளபடி நடக்கிறது எனக் காரணம் காட்டி இருந்து விடலாமா?' என, நபித் தோழர்கள் கேட்டார்கள். ''நீங்கள் நற்செயல் செய்யுங்கள். (சொர்க்கம் நரகம் என) எதற்கு படைக்கப்பட்டதோ (அதை அடைய உள்ள வழிகள்) அனைத்தும் இலகுவாக அமைந்திருக்கும்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (இது நீண்ட ஹதீஸாகும்.) (அறிவிப்பவர்: அலீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 945)

''ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்றைத் தவிர அவனது செயல்கள் முடிந்து விடும். (1) நிரந்தரமாக நன்மை பெற்றுத்தரும் தர்மம் (2) பயன் பெறப்படும் கல்வி (3) அவருக்காக துஆ செய்யும்  நல்ல குழந்தை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 949)

''ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்ட நபித்தோழர்கள் இறந்தவரைப் பற்றி நல்ல விதமாகப் புகழ்ந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''அவசியமாகி விட்டது'' என்று கூறினார்கள். பின்பு மற்றொரு ஜனாஸாவின் அருகில் நபித்தோழர்கள் சென்றார்கள் அதனை இழிவாகப் பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''அவசியமாகிவிட்டது'' என்று கூறினார்கள். ''என்ன அவசியமாகி விட்டது?'' என உமர் (ரலி) கேட்டார்கள். ''அந்த ஜனாஸா குறித்து புகழ்ந்து நல்லதைப் பேசினீர்கள்! இவருக்கு சொர்க்கம் அவசியமாகி விட்டது. இந்த ஜனாஸாவைப் பற்றி இகழ்ந்து பேசினீர்கள். அவருக்கு நரகம் அவசியமாகிவிட்டது. நீங்கள் தான் பூமியில் அல்லாஹ்விற்குரிய சாட்சியாளர்களாக உள்ளீர்கள்'' என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 950)

''பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகள் இறந்து போன எந்த ஒரு முஸ்லிமையும் அவர் தன் பிள்ளைகள் மீது காட்டிய கருணையின் காரணமாக அல்லாஹ் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை'' என நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 952)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். (104:1)

அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். (104:2)

தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். (104:3)

அவ்வாறில்லை ஹுதமாவில் அவன் எறியப்படுவான். (104:4)

ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? (104:5)

மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு(104:6)

அது உள்ளங்களைச் சென்றடையும். (104:7)

நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும். (104:8,9)

(அல்குர்ஆன்: 104 அல் ஹுமஸா -புறம் பேசுதல்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? (107:1)

அவனே அநாதையை விரட்டுகிறான். (107:2)

ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை. (107:3)

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான். (107:4,5)

அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். (107:6)

அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர். (107:7)

(அல்குர்ஆன்: 107 அல் மாவூன் - அற்பப் பொருள்)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

7 Responses So Far:

crown said...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
---------------------------------------------------------------------------------------------
100%/100%.

Ebrahim Ansari said...

ஜசாக் அல்லாஹ் ஹைரன் . வெள்ளி மருந்தும் விருந்தும்.

sabeer.abushahruk said...

ஜசாக் அல்லாஹ் ஹைரன் . வெள்ளி மருந்தும் விருந்தும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நிறைய பல நல்லுபதேசங்களுக்கு நன்றி ப்ளஸ் அஸ்ஸலாமு அலைக்கும்.

பெற்றோருக்கு துஆ செய்யும் நல் குழந்தையாக நாமும், நமக்காக துஆ செய்யும் நல்ல பிள்ளைகளாக நம் வாரிசுகளும் அமையட்டுமாக! ஆமீன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா ! நல்ல மருந்து... வெள்ளி விருந்து...

MHJ-சொன்னது : //பெற்றோருக்கு துஆ செய்யும் நல் குழந்தையாக நாமும், நமக்காக துஆ செய்யும் நல்ல பிள்ளைகளாக நம் வாரிசுகளும் அமையட்டுமாக! ஆமீன் //

நானும் சொல்வது : ஆமீன் !

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

sheikdawoodmohamedfarook said...

மானிடர்கள் மாண்புடன் வாழ நல்வழி காட்டும் நல்ல ஆக்கம்.இந்தப்பணி யாற்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்அல்லாஹ் தன் அருளை பொழிவானாக.ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு