Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எய்தவனிருக்க அம்பை நோகலாமா? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | February 02, 2015 | , , , ,

பிஸ்மில்லாஹ்…

அஸ்ஸலாமு அலைக்கும்

பி முஹம்மத் ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டித்தராத மௌலூது இணைவைப்புப் பாடல்களை இபாதத்தாக மஸ்ஜித்களில் அரங்கேற்றுவதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மஸ்ஜித்கள் ஒவ்வொன்றாக ஓரிறைவனான அல்லாஹ்வை வணங்குவதற்குத் தகுதியற்றதாகி வருவது வேதனையளிக்கிறது! 

இந்த மாதம் செக்கடிப்பள்ளியில் நடந்தது போல, சென்ற மாதம் மொய்தீன் பள்ளியில் இவ்வாறான நிகழ்சி நடந்ததை விமர்சித்து வந்த இரு கருத்துக்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை.

தொடர்புடைய பதிவுகள்:

1. "இது ஒரு செய்தியா, அதிரை எக்ஸ்பிரஸ்ஸுக்கு?"
(நானும் முதலில் இவ்வாறான கருத்தையே கொண்டிருந்தேன்! இப்படியான (கெட்ட)செய்தியும் இங்கு வருவதால் தானே அதற்கு மறுப்பாக/மாற்றாக அத்"தீமை"யைத் தடுக்கச் சொல்லி நல்ல செய்திகள் எழுத வாய்ப்பு கிடைக்கிறது!)

2.  "****ஹஜ்ரத் அவர்கள் (இப்பள்ளியின் இமாம் பெயரைக் குறிப்பிட்டு) கடந்த வருடம் ஹஜ் செய்து பாவமன்னிப்பிலிருந்து பாலகனாக சென்ற பின்னும் இந்த ஷிர்கான மௌலூதை விடுவதாக இல்லையா? ஷிர்க்கை விட்டு அல்லாஹ் பாதுகாப்பானாக.."

இரண்டாமவரின் கருத்தைப் படித்த உடன் "எய்தவனிருக்க அம்பை நோகலாமா?" என்ற முதுமொழியே என் நினைவில் வந்தது.

நம் பள்ளிகளுக்குத் தொழ வருபவர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் மார்க்க விழிப்புடன் இருந்தால் அந்த இமாமே விரும்பினாலும் இவ்வாறான மார்க்கத்தில் இல்லாத அனாச்சாரங்களான மௌலூது என்ற இணைவைப்புப் பாடல்களை அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில் அரங்கேற்ற இயலாதல்லவா?

அந்த இமாமை விமர்சித்து கருத்து எழுதியிருந்தவர் கவனிக்கத் தவறியவை சில நம் சிந்தனைக்கு:

1. அந்த இமாம் இணைவைப்புச் செயலை முன்னின்று நடத்துகிறாரே அவரைப் பின்பற்றி நாம் தொழலாமா?

2. அந்த மௌலூது நிகழ்வில் கலந்து கொண்ட, அந்த நிகழ்சி குறித்த புகைப்படத்தொகுப்பில் இடம்பெற்ற ஒருவர் நமதூரில் பிரபலமான ஹஜ் சேவை நிறுவனம் நடத்துகிறார்! அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவருக்கு நாம் ஆதரவளிக்கிறோம்! அவரது ஹஜ் சேவை நிறுவனத்தின் மூலம் நாம் ஹஜ்/உம்ராவுக்குச் சென்று அவரது வியாபாரத்திற்கு ஆதரவளிக்கலாமா? மற்றும் அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் முன் தண்டனையில் இருந்து தப்ப முடியுமா?

3. இதே நம் பள்ளி நிர்வாகத்தினர், மார்க்க/கல்வி விழிப்புணர்வு கருத்தரங்குகளை எல்லாம் நடத்துகின்றனர்! இவை எல்லாம் சொல் ஒன்று, செயல் வேறான முரணான (முனாஃபிக்கான) நயவஞ்சகச் செயல்களில்லையா?

4. நம் பள்ளிகளின் நிர்வாகத்தினர் இஸ்லாத்தின் ஓரிறைக்கோட்பாட்டிற்கே குந்தகம் விளைவிக்கும் இவ்வாறான இணைவைப்புச் செயல்களை அரங்கேற்ற அனுமதிப்பதன் மூலம் அல்லாஹ்வின் இல்லங்களான மஸ்ஜிதுகளை அல்லாஹ்வை வணங்கத் தகுதியற்றதாக்குகின்றதை அவர்கள் உணர்ந்து நம் மஸ்ஜிதுகளை இவ்வாறான இணைவைப்புத் தீமைகளில் இருந்து தடுத்துத் தூய்மைப் படுத்துவது எப்போது?! 

5. இஸ்லாத்தில் "நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது" பிரித்துப் பார்க்க முடியாத ஒரே செயல். நமதூர் அனைத்து மஸ்ஜிதுகளிலும் தடையில்லாது நன்மையை எத்திவைக்கும் தப்லீஃக் ஜமாஅத்தினர் நன்மையை ஏவுவதோடு நின்று விடாமல் நம் மஸ்ஜிதுகளில் நடக்கும் இவ்வாறான இணைவைப்பு மௌலூதுத் "தீமை"களைத் தடுக்க வேண்டாமா? 

6. நன்மையை ஏவுவது எளிது. எவரும் எதிர்க்கமாட்டார்; தீமையைத் தடுப்பதே கடினம். அதிலும் அதிக நன்மை இருக்கிறது. தீமை அகன்று விட்டாலே இன்ஷாஅல்லாஹ் நாமும் முயன்றால் நன்மை தானாக வந்து விடும். தீமைகளிருக்க அதைத்தடுக்காது நன்மைகளை மட்டும் ஏவிக்கொண்டிருந்தால் இவ்வாறான இணைவைப்புத்தீமைகளோடு சேர்ந்த நன்மையால் என்ன பயன்?

7. இவ்வாறான அநியாயங்களை எல்லாம் நம் ஊர் மக்கள், அறிஞர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா?

இன்னும் பல…

"மக்கள் எவ்வழியோ அவ்வாறே தலைவனும்" என்பது போல நமதூரின் பெரும்பாலான மக்களின் மனநிலைக்கேற்றவாறே நம் மஸ்ஜிதுகளின் இமாம்களும் இருக்கிறார்கள். மஸ்ஜித்களில் நடக்கும் இவ்வாறான இணைவைப்புச் செயல்களுக்கு பொதுமக்களான நாமும் அந்தந்த மஸ்ஜித் நிர்வாகமும் தான் பொறுப்பேற்க வேண்டும். அதை விடுத்து ஏழை ஊழியரான அந்த மஸ்ஜிது இமாமை மட்டும் குற்றம் சொல்வது பொதுமக்களான நமது கடமையிலிருந்து தப்பிக்கும் செயல்! கயமையும் கூட.

எவருக்கும் அஞ்சாமல் நமக்கு இஸ்லாத்தை எத்திவைத்த அறிஞர்கள் எல்லாம் நம்மை விட்டுச் சென்று விட்டார்கள். பொதுமக்களான நாம் மார்க்க விழிப்புணர்வு அடையாதவரை இதற்கு விடையில்லை.

கே(மோ)டியின் ஆட்சியில் பம்மாத்து "தூய்மை இந்தியா" திட்டம் பிரபலமான இத்தருணத்தில் நமதூர்களிலும் இணைவைப்பில்லாத "தூய்மை மஸ்ஜிதுகள்" திட்டத்தை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சிந்திப்போம்; செயல்படுவோம்.

Shafi MI

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

களத்தில் இறங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது இந்த பதிவு காலத்தின் கட்டாயமாக பதிக்கப்பட்டு இருக்கிறது !

"தூய்மை இந்தியா" என்ற கொள்கையற்ற செயலோடு "தூய்மை மஸ்ஜிதுகள்" என்ற ஒப்பீடு இல்லாமல், நமக்கு நாமே தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்... அதுதான் இறைப் பொறுத்தத்தை நம்மோடு நிலைத்திருக்கச் செய்யும்.

மறந்த மறக்கடிக்கப்பட்ட விஷயங்களை, மீண்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் இறையில்லத்தில் உட்கார்ந்து கொண்டு இவர்கள் யாரோடு போரிட கிளம்பி விட்டார்கள் ?

Muhammad abubacker ( LMS ) said...

மார்க்கத்தை கற்று நன்மையை ஏவி தீமையை வன்மையாக தடுக்க வேன்டிய உலமாக்கள் மவுனம் சாதிப்பதனால்தான்.தங்களுக்கு அங்கிகாரம் கிடைக்கிறது என்று மனப்பால் குடித்தவர்களாக இது போன்ற செயல்க்ளை மொவ்ளுது பித்தர்கள் ஒவ்வொரு பள்ளியிளும் அரேங்ற்றி வருகிறார்கள்.

நாளை மறுமையில் அல்லாஹ்வின் பிடியில் இருந்து உலமாக்கலே நீங்கள் தப்ப முடியாது.

சொல்ல வேண்டியதை தெளிவாகவும் பகிரங்கமாகவும் சொல்லிவிடுங்கள்.

Muhammad abubacker ( LMS ) said...

தகுதியற்றவர்கள் இறைவனின் இல்லத்தை நிர்வகிக்கப்படும் போது.இது போன்ற பிதத்துக்கள் அரங்கேறுவது ஆச்சிரியப்படுவதற்க்கிள்ளை.

Muhammad abubacker ( LMS ) said...

தகுதியற்றவர்கள் இறைவனின் இல்லத்தை நிர்வகிக்கப்படும் போது.இது போன்ற பிதத்துக்கள் அரங்கேறுவது ஆச்சிரியப்படுவதற்க்கிள்ளை.

sabeer.abushahruk said...

அர்த்தம் விளங்காதவரை நாம்கூடத்தான் இந்தத் தவறைச் செய்து கொண்டிருந்தோம். இன்றும்கூட எனக்கு மனனம் செய்த சில மவுலூது வரிகள் நினைவில் உண்டு. தவறு என அறிவுக்கு, ஐ ரிப்பீட், அறிவுக்கு எட்டிய பின் அதிலிருந்து விலகிவிடவில்லையா?

அப்படி விலகவிடாமல் இவர்களைத் தடுப்பது எது?

நல்லா கேட்டீங்க தம்பி ஷஃபி

Shafi MI said...

ஐ டூ ரிப்பீட்ட்ட் "கவிக்கா'ஸ் கமெண்ட்…

என் தகப்பனார் காலத்தில் மரியாதைக்குறிய என் உஸ்தாது பஷீர் லெப்பை அவர்களிலிருந்து அவர்களுக்கு மூத்த லெப்பைமார்களும் ஃபஜ்ருத் தொழுதவுடன் எங்கள் வீட்டிலிருந்து தான் மௌலூது ஓத ஆரம்பிப்பார்கள்! எங்கள் வீட்டில் நார்சாவெல்லாம் கிடையாது. மௌலூது ஓத(பாட!), கேட்க வருபவர்கள் அனைவருக்கும் விஷேச காலைச்சாப்பாடுதான். அப்போது சிறுவர்களாக இருந்த எங்களுக்கு மௌலூது ஸீசன் என்றாலே கொண்டாட்டம் தான் போங்க… வேண்டுமென்றால் நெய்னாத்தம்பியிடம் கேட்டுப் பாருங்களேன். கதை, கதையாச் சொல்வான்…

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு