Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கச்சா எண்ணெய் வடியுது ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | February 08, 2015 | , , , ,

நேற்று முன்தினம் வலை மேய்ச்சலில் சிக்கிய தொடர் சுட்டியை தட்டிக் கொண்டிருக்கும்போது ஒரு முகநூல் நிலைத் தகவல் சட்டென்று முதுகில் ஓங்கிய அடித்த மாதிரி இருந்தது... ;)

"நம் பிரதமர் ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்தத்தால்தான் உலக அளவில் கச்சா எண்ணை விலை குறைஞ்சதுன்னு சொல்றாங்களே........ உண்மையா?

(முதல் கமெண்ட் பார்க்க)"


மேலும் பதிவில் கண்ட முதல் கருத்து இதோ :-


// Anand Venkat

சில நாட்கள் முன் எண்ணெய் விலை குறைந்ததற்கு நரேந்திர மோதி காரணம் என்று பதிவிட்டேன். பலர் உடன்படவில்லை. இதோ ஆதாரம்...

பெட்ரோல் விலை யாரால் குறைந்தது?? விளக்கம் இதோ...

சமீபத்தில் பாரத பிரதமர் ரஷ்யாவிடம் 13 க்கும் மேற்பட்ட ஒப்பந்தகளில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தில் எரிபொருளும் உள்ளடக்கம் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

பெட்ரோல் விலை இறங்கியதற்கு காரணம் என்னவென்று எதிர்கட்சிகளிடம் கேட்டால்.... கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டதாம்.

சரி.... இத்தனை காலமாக இறங்காத பெட்ரோல் விலை தீடீர் என்று ஏன் இறங்கு முகமாகவே இருக்கிறது? இப்படிப்பட்டவர்களுக்கு புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால்... ரஷ்யாவிடம் போடப்பட்ட அந்த எரிபொருளின் ஒப்பந்தங்களே முக்கிய காரணம் என்பதுதான்...

பல கோடிக்கணக்கான லிட்டர் எரிபொருள் எந்த ஒரு தடங்களும் இன்றி இந்தியாவிற்க்கு வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும். மேலும் இந்தியாவில் இருக்கும் எரிபொருளை எடுக்கும் தொழில்நுட்பத்தையும் இந்தியாவிற்க்கு கொடுக்கவேண்டும் என்பதுதான் அதன் சிறப்பம்சம்..

சவுதி போன்ற நாடுகளில் இருப்பது போன்ற எரிபொருள்கள் நமது நாட்டிலும் இருக்கிறது. ஆனால் அதை நமது நாட்டு தொழில்நுட்பத்தில் எடுத்தால் அதற்கு ஆகும் செலவு ஒரு லிட்டர் எரிபொருளின் விலை 100 ரூபாய் அளவிற்க்கு இட்டுச்செல்லும். இத்தனை காலமாக மக்களை ஏமாற்றி ஆட்சி புரிந்த அயல்நாட்டு மதத்து கைக்கூலிகள் இந்த விஷயம் தெரிந்தும் முயற்சி எடுக்கவே இல்லை. ஆகவே அந்த தொழில்நுட்பத்தினை இந்தியாவிற்க்கு வழங்கி எதிர்கால பெட்ரோலிய பொருட்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அந்த ஒப்பந்தத்தில் இதையும் சேர்த்து பல மாங்காய் அடிப்பது போன்று மத்திய அரசு அடித்துள்ளது.

பெட்ரோலிய பொருட்களை நம்பி இருக்கும் உலகத்தின் மிகப்பெரிய மக்கள் தொகை உள்ள ஒரு (இந்தியா) நாடு ரஷ்யாவிடம் ஒப்பந்த்த்தை மேற்கொண்டு அரபு நாட்டிற்க்குக் சிறிய ஆப்பை வைத்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத சீனா.. இந்தியாவிற்க்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை விட சில மடங்கு அதிக எரிபொருள் வழங்கவேண்டும் என ஒப்பந்தம் ரஷ்யாவிடம் செய்துகொண்டது. சீனாவும், இந்திய பிரதமர் திரு நரேந்திரமோடி ஒப்பந்ததிற்க்கு பயந்து இப்படி ஒரு பதில் ஒப்பந்தத்தை செய்தது, அரபு நாடு வருமானத்திற்க்கு அடுத்த பேரிடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் ஜனத்தொகையில் இருக்கும் இரு மிகப்பெரிய நாடுகளும் சென்ற காரணத்தால் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துகொண்டு இருக்கிறது.

மேலும் உலக வல்லரசுகளுடன் இணைந்து இந்தியா உலக பயங்கரவாதிகளுக்கு மதத்தின் அடிப்படையில் உறுதுணையாக இருக்கும் அரபு நாடுகளின் கொட்டத்தை முழுவதும் அடக்கி ஆள பாரதப்பிரதமர் உட்பட பல வல்லரசுகளால் போடப்பட்ட திட்டம்தான் இது.

எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படும் இந்திய பற்றுடைய பாரத பிரதமர் அவர்கள் ஏற்படுத்திய இந்த திட்டத்தின் மூலம் உலக சந்தையில் மாற்றம் ஏற்ப்பட்டதோடு மட்டுமில்லாமல் வரும் காலங்களில் மாநிலங்களில் வரும் தேர்தல்களில் அரசியல்வாதிகள் பெட்ரோலை இலவசமாகவே வழங்குவார்கள் என்பதை நாம் திடகாத்திரமாக நம்பலாம்.

இதனால் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்... இந்தியா மட்டுமல்லாமல் உலகமுழுவதும் கச்சா எண்ணெய் விலை குறைந்த அனைவரும் பலன் அடைய காரணம் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின் செயல்பாடும் ஒரு முக்கிய காரணம் ..//

***************(0)(0)(0)(0)(0)(0)(0)(0)***************

இதற்கு அன்புச் சகோதரர் புதுசுரபி ரஃபீக் அவர்களின் கீழ்கண்ட கருத்தையும் அவசியம் வாசியுங்கள்


"உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட..."
----------------------------------------------------------------

”உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட” இப்படியொரு சொலவடை நம்ம ஊருப்பக்கம் பேசிக்கிட்டுருப்பத கேட்டிருப்போமுல்ல, இப்ப அதை அமெரிக்காவும், அதன் பேச்சைக் கேட்ட சவூதி, வெனிசூலா போன்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகளெல்லாம் சொல்லிப் புலம்பப் போறத வெகு சீக்க்ரம் கேட்கப்போறோம்...

இப்போது, ஒருவழியாக உலகின் மிகப் பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான சீனாவை தம் பக்கம் சாய்த்து வெற்றி கண்டிருக்கிறது ரஷ்யா. மேற்குலகம் ரஷ்யாவை புறந்தள்ளி அந்நியப்படுத்தியும், பொருளாதாரத்தில் நசிக்கியும் சதிவேலை நடத்திக் கொண்டிருந்த வேளையில், சீனாவுடனான உறவினை பலப்படுத்தி அடக்க விலையில் எண்ணெய் விற்று தமது எதிர்காலத்தின் திட்டத்திற்கு வலுசேர்த்துக் கொண்டிருந்தது ரஷ்யா.

2014ம் ஆண்டில் சீனாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில், 36 சதவீதத்தினை ரஷ்யா கொடுத்திருக்கிறது . இதனால் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவிற்கு 8% இழப்பினையும், வெனிசூலாவிற்கு 11% இழப்பினையும் பரிசாகக் கொடுத்தது சீனா.
இச்சூழ்நிலையில்தான் ரஷ்யாவின் வயிற்றிலடிப்பதற்காக, மேற்சொன்ன எண்ணெய் ஏற்றுமதி நாடுகளைப் பணிய வைத்து விலை குறைப்பு நாடகத்தை அமெரிக்கா அரங்கேற்றி வந்தது. (அமெரிக்கா செய்த இந்த சூழ்ச்சிகளுக்கு / இந்த நாடகத்திற்கு நம்நாட்டில் வேறு வண்ணம் பூசப்பட்டது நகையான ஒன்று.)

ஆனால் ’ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது போல உக்ரைன் உடனான உரசல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் போன்ற பின்னடைவுகளை மிக சாதுர்யமாக கையாண்டு சீனாவுக்கும் ரஷ்யாவிற்குமிடையிலான இயற்கை எரிவாயு திட்டத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தத்தை 2014ம் ஆண்டு மே மாதாம் சீனாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தின் படி 2018ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 38 பில்லியன் கன மீட்டர் அளவிலான இயற்கை எரிவாயுவை சீனாவிற்கு ரஷ்யா ஏற்றுமதி செய்யும். பிறகு இது படிப்படியாக ஆண்டொன்றுக்கு 60 பில்லியன் கன மீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யப்படும். இதில் சிறப்பம்சம் என்னவெனில், ஐரோப்பா கொடுத்தும் வாங்கும் விலையை விட ‘தரை’ ரேட்டுக்கு சீனா பேரம் பேசி முடித்திருக்கிறது. அதாவது ஒரு மில்லியன் BTu அளவிலான எரிவாயு 9 முதல் 10 அமெரிக்க டாலருக்கு வாங்குவதென முடிவு செய்திருக்கிறது. பக்கத்திலிருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கே கூட இந்த அளவுக்கு விற்றது இல்லையாம் ரஷ்யா.

ரஷ்ய நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டு, சீனா முன்பணம் கொடுத்து எரிவாயு/ எண்ணெய் இறக்குமதி செய்கிறது சீனா. அதுமாத்திரமல்லாமல், சில நிறுவனங்களுக்கு சீனா தன் வங்கி மூலம் கடனுதவியும் செய்கிறது.

இதன் காரணமாக மிகவும் குறைந்த விலைக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு பரிவத்தனைக்கு இரு வல்லரசுகளும் பரஸ்பரம் ஒத்துழைக்கின்றது. இன்னும் ஒருபடி மேலே போய் சில பெரிய நிறுவனங்களில் கனிசமான பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது.

இதன் மூலம் மேற்கின் பொருளாதாரத்தடை விலக்கக் கோரல் மற்றும் சர்வதேச நிதியங்களை நாடவேண்டியதில்லை என்ற புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது சீனா.
இனியும் அமெரிக்காவின் யோசனையக் கேட்பதா மறுப்பதா என்று OPEC நாடுகள் குழப்பத்தில் புலம்புவதும் தெளிவாய் கேட்கிறது.

உலகம் இப்படிப் போய்க்கொண்டிருக்கையில், இங்கோ எல்லா அற்புதங்களுக்கும் எங்கள் விளக்கே காரணம் என்று விளக்கம் சொல்லி நம்மை ஏமாற்றும் வியாபாரம் கொழிக்கிறது.

பரிந்துரை : அபூஇப்ராஹீம்

3 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

சுருங்க சொன்னால் இறைவன் தான் நாடியதை நடத்தியே முடிக்கிறான்.என்பதை பேமானிகள் புரிந்துக் கொள்ளட்டும்.

sabeer.abushahruk said...

இவங்க காட்ற பூச்சாண்டிக்கெல்லாம் முதல் ஆப்பு டெல்லியில் தயாராகிக்கொண்டிருக்கிறது.

Shameed said...

//இந்தியா மட்டுமல்லாமல் உலகமுழுவதும் கச்சா எண்ணெய் விலை குறைந்த அனைவரும் பலன் அடைய காரணம் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின் செயல்பாடும் ஒரு முக்கிய காரணம் //

கேப்பையில் நெய் வடியும் கதையாவுள்ள இருக்கு!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு