Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரைநிருபரின் நிழல்கள் ! 110

அதிரைநிருபர் பதிப்பகம் | March 22, 2012 | , , ,


அதிரைநிருபரில் வெளிவரும் பதிவுகள் மட்டுமல்ல அதன் பின்னூட்டங்களும் பேசுபொருளாக மாறி ஏராளமான இதயங்களில் இடம்பிடித்து வீடுகட்டி வாழ்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதெற்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைதியின் ஆளுமையில் ஆராவரமாக அசத்திய ஏராளமான சகோதரர்களை சட்டென்று நினைவு கூறும் நேரத்தில் ஏராளமானோர் நினைவில் வராவிட்டாலும் பேச்சு வழக்கில் சிக்கிய சகோதரர்களின் சந்திப்பு ஒன்று நடந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு ரசனையான கற்பனையொன்றை அதிரைநிருபர் குழு மின்னாடல் சுற்றுக்கு விட்டது. அதன் பிரசவம் தான் இங்கே.... இந்த வலி எங்களோடது அதன் சிரிப்போ உங்களோடது..

இந்தப் பதிவில் நடைபோடும் உரிமையோடும் உறவாடியிருக்கிறோம், ரசனையின் உணர்வுகளை உள்வாங்கி ரசிக்கத் தெரிந்தவர்களோடு ரசனையாடியிருக்கிறோம். குட்டலோ, வெட்டலோ இருப்பின் இதோ மின்னஞ்சல் comments@adirainirubar.in அங்கே எழுதி கேட்டு ஃபோன் நம்பர் வாங்கி அப்புறம் திட்டுங்க. வேனும்னா அட்ரஸ்கூட தருகிறோம் டிக்கெட் போட்டு வந்து அடிச்சிட்டுப் போயிடுங்க... அதுக்காக கோபமாக மட்டும் இருப்பேன்னு இருந்திடாதீங்க ப்ளீஸ்...

நாங்கள் அதிரை நிருபர்கள்:

அந்தக் கனவு அழகாய் உதித்து அருமையாய்த் தொடர்ந்தது. ஓர் ஓளரங்க நாடகம்போல காட்சிகளாய் விரிந்தன அந்த உரையாடல்கள்:

சபீர்: என்ன ஜாயிரு
          இந்த நேரத்தில்
          வந்து நிற்கிறே?

ஜாகிர்: நேரம் முக்கியமல்ல, அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஒரு நிமிஷத்தைக்கூட ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் கழித்தால் அவனுக்கு அன்னை தெரசா ஆஸ்ரமதில்கூட அட்மிஷன் போடமாட்டாங்க 

சபீர்: சரிடா
          ஏன்
          கோபப்பட்றே?

ஜாகிர்: பிறகென்னடா? “நாங்கள் அதிரை நிருபர்கள்”னு நிகழ்ச்சியைப் ப்ரோப்போஸ் பண்ணிட்டு இன்னும் கிளம்பாம, மூனு ஆயுள் தண்டனை வாங்கின பிரேமானந்தா மாதிரி கிடக்கிறியே என்ன அர்த்தம்?

சபீர்: சரிசரி
         வாவா
         போவோம்
         போபோய்
         வருவோம்

ஜாகிர்: பார்த்தியாடா, எல்லோரும் நமக்காக காத்திருக்காங்க. அஸ்ஸலாமு அலைக்கும் அபு இபுறாஹிம். நல்லாருக்கியலா?

அபு இபுறாஹிம்: நா(ன்) நல்லா(த்தான்) இருக்கேன் காக்கா. நீங்க? அஸ்ஸலாமு அலைக்கும் (கவி)க்காக்கா.

சபீர்: வ அலைக்குமுஸ்ஸலாம்
          அபு இபுறாஹீம்
           நலம்தானே ?

ஹமீது: என்ன எல்லோரையும் வரச்சொல்லிட்டு நீங்க மட்டும் ராக்கெட் உட்றிய? நான் கெளம்பி அப்பர் கோதையாறு போய்டவா?

யாசிர்: சரியாச் சொன்னிய காக்கா. புருஷன் பொன்டாட்டிக்குள்ள ஒரு அண்டர்ஸ்டேண்டிங் இருந்தா இப்படியெல்லாம் தாமதமா வரமாட்டாஙக. நான் வேணும்னா கட்டம்போட்டு விளக்கவா?

சபீர்: யாசிர்,
          அடங்குங்க.
          எம் ஹெச் ஜே
          என்ன
          மெளனமாயிட்டிய?

எம் ஹெச் ஜே: அதான் அங்கேயே கருத்துச் சொல்லியாச்சே காக்கா, இங்கேயும் எதுக்கு வரிக்குக்கீழ் வரின்னு மடக்கி மடக்கிப் பேசுறீங்க. அவஅவன் கொட்டுற பனிலே நடுங்குறான்.

அபு இபுறாஹிம்: அன்பு(ள்ள) தம்பி. உங்கள் குளிரை விரைவில் பதிவுக்கு(ள்) கொண்டுவ(ருகிறோம்)ர முயல்வோம்

எம் எஸ் எம்: எடிட்டராக்கா. இப்ப நான் சொல்றதையும் ஏற்கனவே சொன்னதோடு சேர்த்துக்கோங்க. அதாவது, நம்ம பெரியாப்பா மக்க சின்னாப்பா மக்களையும் உடன்பிறந்தவங்க மாதிரிதான் பாக்கனும். இல்லாட்டி நம்ம பிள்ளைலுவோ நமக்கு சோறு தண்ணி தராதுவோ. காசு பணத்தக் காட்டாதுவோ. விசிறி எடுத்து வீசாதுவோ.

எல் எம் எஸ்: அதத்தான் இப்பவே நிறைய கண்கூடாப் பாக்குறோமே. “விசிறி எடுத்து வீசாதுவோ” .நெய்னா,வெளிச்சம்போட்டு காட்டிட்ட.

அலாவுதீன்: என்ன வேணா பேசிக்கோங்க. ஆனா, கடன் வாங்காதீங்க. அல்லாஹ் ரசூல் சொன்னதை அருமருந்தாக பக்கத்திலேயே வச்சிக்கோங்க.

அர.அல: அலாவுதீன் காக்கா பேசுறது மட்டும்தான் பேச்சு. மத்தவங்கல்லாம் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.

ஜாகிர்: அப்ப நான் என்ன மணிமண்டபத்திற்கா “படிக்கட்டு”கிறேன்?

அர.அல: ஜாகிர் காக்காவையும் அலாவுதீன் காக்காவையும் மட்டுமே பேசச் சொல்லி அதிரை நிருபரில் ஆதாரபூர்வமான அறிவுப்புகள் இருக்கு.

அதிரை அஹ்மது காக்கா: "நான் வேனும்னா, 'பேச்சு' - ஒரு பதிவரின் பார்வை"யைத் தொடங்கவா?

சபீர்: அருமை கவியன்பன். அழகான கவிதை. கலக்கிட்டிய

கவியன்பன்: நான் இன்னும் ஒன்னும் சொல்லவே இல்லையே?

சபீர்: உங்கள் மெளனம்கூட வாய்ப்பாடும் விருத்தமுமாய் அழகாய்த்தான் இருக்கிறது.

தலைத்தணையன்: மாப்ளே கலாம், நீ இங்கேயா இருக்கே. நான் உன்னையத் தேடி யு எஸ் வரைப் போயிட்டு வந்தேனே?!

கவியன்பன்: மச்சான், 
            நான் காண்பது கனவா நெனவா?
            நீதானா இது நீதானா
            நிஜம்தானா சொல் நிஜம்தானா
            வேர்போல என் வாழ்வுதனில்
            ஊரி லிருந்தது நீதானா

அர அல : கவிஞர்களை வழிகேடர்களே பின்பற்றுவர்

…சலஃபி: “ஹு வல்லாஹு அஹத்” அல்லாஹ் ஒருவனே என்று விளங்கிக்கொண்டால் சர்ச்சை வராது

சபீர்: நல்ல வேளை
          நான்
          பேசுவது
          கவிதை
          இல்லை

கிரவுன்: ஏற்றுக்கொள்ள முடியாது. நல்லவேளை எனும் சொல்லுக்குள் நல்ல ஆளைப் பார்க்கிறோம்; நல்ல வேலைப்போல விருட்சம் பார்க்கிறோம்; நல்ல வேலென கூர்மையைப் பார்க்கிறோம்

அபு இபுறாஹிம்: கிரவுன்(னு), எங்கேடா(ப்பா) ஆளை(யே) காணோம்?

என்.ஷாஃபாத்: எலெக்ட்ரான் ப்ரொட்டான்
            என எத்தனை அணுக்கள்
            பொக்ரானிலும் போட்டுடைத்தது போதாதா
            கூடங்குளத்தின்
            சிறு அங்குலமும் சிதைய விடமாட்டோம்

அபு இஸ்மாயில்: இந்த மீட்டிங்கை ஊரில் நடத்தி போராடினால் ஜெயிக்கலாம். எதற்காக போராடனும் என்பதை பிறகு தீர்மாணிக்கலாம்.

சபீர்: யாசிர், யாரது எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது?

யாசிர்: ரஃபீக் காக்கா மாதிரிதான் தெரியுது

சபீர்: உள்ளே வாங்களேன்

ரஃபீக்: நடத்துங்க நடத்துங்க. நான் மட்டுமில்லை. என்னைப் போல பலபேர் இங்கிருந்து சைலன்ட்டா வாட்ச் பண்ணிட்டிருக்கோம்.  நாங்கெல்லாம் உள்ளே வந்தால் நீங்க எல்லோரும் வெளியாக வேண்டியிருக்கும் பரவால்லயா? வந்தமா பேசுனோமா புறாக்கறியைத் திண்ணமா போனாமான்னு இருங்க.

தாஜுதீன்: சபீர் காக்கா நல்லாயிருக்கியலா? ஜாகிர் காக்கா நலமா? ஹமீது காக்கா பார்த்து ரொம்ப நாளாச்சு? கோவை அயூப் அவர்களை நேரா வரச்சொல்லிடுவோம். இதோ இப்ப வந்துட்டேன்.

யாசிர் & ஹமீது: இருங்க நாங்களும் வந்துர்றோம்.

சபீர்: இருங்கப்பா. எல்லோருமே இன்னும் கொஞ்ச நேரத்தில போயிடலாம். உஷ்ஷ்ஷ்…அமைதி அமைதி…காக்கா வர்ராஹ.

ஜமீல் காக்கா: பேசும்போது பிழை இல்லாம பேசனும். கொஞ்சமாப் பிழையாப் பேசுறவங்களை மட்டும்தான் லேஸா அதட்டுவேன். உங்கள மாதிரி நிறைய தப்பாப் பேசினா அப்புறம் கண்டுக்கவே மாட்டேன்.

N.ஜமாலுதீன் : நான் என்னமோ புதுசா ஆரம்பிச்ச இயக்க கூட்டமோன்னுல மெதுவா வந்தேன், நானும் உள்ளே வரவா ?

அபுஇபுறாஹிம் : (அட!) வாங்க தம்பி ! எங்கள் உள்ளம் என்றுமே திற(ந்தே இரு)க்கிறது... தெரிந்ததுதானே உங்களுக்கு

சபீர் : நீங்கள் வோ
           தெளிவாத்தான்
           இருக்கிய !

மர்மயோகி: (நல்லவேளை, நாம இருக்கிறத யாரும் கவனிக்கல. நடத்துங்க மக்களே. நாளைக்கு வச்சிக்கிறேன் தனி மெயில்ல).

யாசிர்: வாங்க மாமா, இங்கே வந்து பேசுங்க

இபுறாஹிம் அன்சாரி காக்கா: என்ன நடக்குது இங்கே? கொஞ்ச நேரம் குறுந்தாடி ஒதுக்கிட்டு…சாரி…குறுந்தொடர் எழுதிட்டு வருவதற்குள் இந்த 16 பேரும் 26 நிமிடம் 48 நொடிகளில் ஆயிரத்தி இருநூறு வார்த்தைகளைப் பேசியிருக்கீங்க. தாங்குமா இந்த சபை?

ஹமீது: மாமா பேச்சைச் சின்னப்பிள்ளைலேயே கேட்டிருந்தா சபீர் ஜாயிர் மாதிரி கழிசறைட சகவாசம் இல்லாம சுவிட்ஸர்லான்ட்லே செட்டிலாயிருப்பேன்.

சபீர்: ஹமீது, யார் வந்திருக்கான்னு பாருங்க.

ஹமீது: அடடே வாங்கண்ணே. சட்டையெல்லாம் ஐயன் பண்ணி இன் பண்ணிக்கிட்டு எங்கே கிளம்பிட்டிய. பாஸெஞ்சரா இருந்துக்கிட்டே பின் சீட்டிலேர்ந்து பைக் ஓட்டுனத மறக்க முடியலண்ணே

என் ஏ எஸ் சார்: ஹாய் கேவலப்பயல்ஸ். சபீர், யு ஆர் ரியலீ அமேஸிங் யா. ஜாகிர்ஸ் பீஸ் ஆஃப் ரைட்டிங் இஸ் அப்சொல்யூட்லி சூப்பர்ப். கலாம் ராக்கிங். எம் எஸ் எம்ஸ் ரைட்டிங் இஸ் மைன்ட் ப்லோயிங்யா. அக்ச்சுவலி ஐ டோன்ட் ஹேவ் டைம். அதர்வைஸ் ஐ வில் ரைட் அபவுட் மை டேட்ஸ்…சாரி… டேய்ஸ் இன் வியட்நாம்.

நூர் முஹம்மது காக்கா: கி.மு. நாநூறுல துவங்கப்பட்டது அதிராம்பட்டினம். அப்ப எனக்கு ஏழு வயசு. ரெண்டாம் நம்பர் ஸ்கூல்ல படிச்சிக்கிட்டிருந்தேன். ஈ எம் ஹனீஃபாவோட ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாதான் எங்கேயும் ஒலிக்கும்.

ஜப்பர் காக்கா: இங்கே எவனாவது தொப்பி போட்டிருக்கானா? பேராண்டிவொலா, ராத்திரிக்கு முர்தபா வாங்கித் தரேன், போய் மார்க்கெட்டுல தேசப் பொடி இருந்தா வாங்கியாரியலா. யாருப்பா அது அபு ஈசா பேராண்டியா?

அபுஈசா: தொப்பி போட்டாத்தான் தொழ முடியும்னா யாரும் பள்ளிக்கே வர மாட்டங்க. பிச்சைக்காரவர்கள்தான் வருவார்கள். ஆனா, அவர்களுக்குப் பிச்சை போட்டால் பிச்சையை ஒழிக்க முடியாது.

சேக்கனா M.நிஜாம்: இந்த சப்தம் குறைவதே சமூகத்துக்கு நல்லது. அதற்கு நாம் செய்ய வேண்டியது.
      01) எல்லோரும் வரிசையா உட்காருங்க 
      02) ஒவ்வொருத்தரா கையைத் தூக்கி அனுமதி கேளுங்கள். 
      03) பேசி முடித்ததும் சோடா கேட்காதீர்கள்

அபுபக்கர் அமேஜான் : ஜாகிர் காக்கா நீங்கதான் ஆரம்பிச்சு வச்சியா. சபீர் காக்க பதில் சொன்னாக. வரிசையா எல்லோரும் பேசுறாங்க. அதனால்தான் நானும் துபாய் வந்துட்டேன்.

இர்ஃபான் சி எம் பி: இதேபோலொரு சந்திப்பை ஐ நா சபையில் நிகழ்த்தினால் நம்ம பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம். ஏற்பாடு செய்யுமா அதிரை நிருபர்?

யாசிர்: ச்சான்ஸே இல்ல. காக்கமார்களெல்லாம் அசத்துறீங்க. யாருமே பரோட்டா மட்டும் சாப்ட்டுடாதிய. பரோட்டாய்ட் பீடியா(Parotta pedia) எனும் நோய் தாக்கிடும். பொன்டாட்டிப் பேச்சுக்கு ஆமாம் சொல்றவங்களைத் தவிர மற்ற எல்லோரையும் தாக்கிடுமாம்.

சபீர்: அப்ப எனக்கு வராதுப்பா.

ஹமீது: ப்பாயாவோடு தொட்டு திண்ணாலுமா? எனக்கு அண்டவே செய்யாது.

ஜாகிர்: ஆட்டு பார்ட்ஸ் சாப்பிட்டா நம்ம பார்ட்ஸ் கெட்டுடும். சொன்னா பைதிக்காரேம்பாய்ங்க. நான் மேல்மாடிக்குப் போறேன். படிக்கட்டுகள் எங்கேப்பா.

சபீர்: இருடா நானும் வரேன். யாராவது என் கம்ப்யூட்டரை ரிப்பேர் பண்ணித்தாங்களேன்.

புதுசுரபி: கொஞ்சம் லேட்ட்டாயிடிச்சு. வர்ர வழியிலே ஒரு டாக்ஸி ட்ரைவருக்கு “இறைவனிடம் கையேந்துங்கள்”பாடலுக்கு விளக்கம் சொல்லிட்டு வர தாமதமாயிடிச்சு.

ராஸிக்: எல்லோரும் சொல்லிட்டீங்க. நான் ஏதாவது சொன்னா ஏற்கனவே சொல்லியாச்சுன்னு ஒன்னுமே சொல்ல விடமாட்டேங்கிறீங்களேப்பா.

அப்துல் மாலிக்: சாதிக்கனும்னா அதற்காக முயற்சி செய்யனும். அவ்வ்வ்வ்வ்!

அப்துல் ரஹ்மான்: வண்ணத்துப்பூச்சியின் வர்ணங்கள் வரைந்ததா விலைகொடுத்து வாங்கி யணிந்ததா?

அதிரை முஜீப்: ஆக்கபூர்வமான பேசுபொருள் இல்லாததால் இந்த சபையிலிருந்து வெளிநடப்புச் செய்கிறேன்.

(நியூ காலேஜ் புற்பூண்டுகளை வளர்த்ததோ இல்லையோ நல்ல கழிசடைகளை வளர்த்து விட்டிருக்கு)

NM.மீரா : என்ன தம்பி எண்டரன்ஸ் எக்ஸாமுக்கு பசங்கள தயார் செய்றதுக்குதான் கூடியிருக்கீங்கன்னு வந்தா என்ன இது ? சரி சரி சீக்கிரம் பேசுங்க கல்வி மாநாட்டு தேதியை முடிவுபன்னுவோம்...

அதிரை அஹ்மது காக்கா : 'தம்பி மீரா செயல் வீரர்'

குதுப்: ஏதாவது சொல்லவந்தா நீங்க அவரான்னு கேட்டு ஓச்சிப்பிடறாய்ங்களேப்பா.

ஃபதுதீன்: மேற்கொண்டு விளக்கங்களுக்கு ப்ளீஸ் விசிட் டபிள்யு டபிள்யு டபிள்யு...

சபீர்: காப்பரிட்சையோடு கழண்டுக்கிட்ட மச்சான் ஜலால் வந்திருக்கானா?

ஜலால், யு எஸ்: இங்கேதான் மச்சான் இருக்கேன். பேச்சக்குறைச்சிட்டேன் அவ்ளோவ்தான்.

சபீர்: ஏன் மச்சான் ஆம்பிளப் பிள்ளையா பொறந்தே? பொம்பிளப்பிள்ளையாப் பொறந்துருந்தா உன்னயதான் கல்யாணம் செய்து வச்சிருப்பேன்னு ஆத்தா சொன்னிச்சு தெரியுமா?

ஜலால்: உன்னயத்தான் கட்டிக்கிடனும்னா நான் மாறுவேஷம் போட்டுக்கிட்டு ஊரைவிட்டே ஓடிப்போய்டுவேன். வெளங்குமா?

இர்ஷாத்: காமெடி தூக்கலா இருக்கு. ஆனா, இதை நான் சொல்லல.

ஷாஃபி: பாசக்காரப் பயலுவன்னு மட்டும்தான் நெனச்சேன். பயங்கரமா கலாய்க்கிறாய்ங்களே.

தாஜுதீன்: எங்கே ஒரு காக்காமாரையும் காணோம். லேட்டா வந்துட்டேனோ?! ஓ வெளியே நிக்கிறீங்களா. கொஞ்சம் வேலை ஜாஸ்தியாப் போச்சு. மீட்டிங்கை ஆரம்பிப்போமா?

ரியாஸ் சிங்கப்பூர்: மீட்டிங்குன்னு சொன்னானுவ, என்ன ஒருத்தரையும் காணோம். ரொம்பத்தான் லேட்டா வந்துட்டமோ?

பி.கு.: ச்சும்மா மனச லேசாக்க மட்டும்தான் இந்தப் பதிவு. மீறியும் யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். மனசுல வச்சிக்காம என் மேல் உள்ள கோபத்தை நெறியாளரின் அலைபேசி எண்ணுக்கு அழையுங்கள் இரண்டு நாட்களுக்கு மட்டும் அவருடைய அலைபேசியை நான் தான் வாங்கி் அவரிடமே அதனை வைத்திருக்க சொல்லியிருக்கிறேன் என்ன வேணும்னாலும் திட்டிக்கோங்க. எனக்கு கோபமே வராது பாருங்களேன்.

மின்னஞ்சல் வழி : இந்த புள்ளயளுவோ நல்ல புள்ளையலுவொலாதானேமா இருந்திச்சு ஏம்மா சேட்டை செய்திட்டு இருக்குதுவோ, சேர்மன் கிட்டே சொல்லி சரி செய்ய சொல்லனும் அவ்வோதான் கச்சல கட்டிகிட்டு இறங்கிறவொ

-சபீர்
comments@adirainirubar.in

110 Responses So Far:

Shameed said...

ஹா ஹா ஹா பின்னுட்டம் பிறகு

Noor Mohamed said...

அருமையான பெருமையான ஆக்கம்.

அதிரை நிருபரில் இடம் பிடித்தோர் அத்துனை பேர்களையும் இங்கே காண்கின்றோம்.

தம்பி கவி சபீர் அவர்களே! என்னை வரலாறு படித்தவனாகவல்லவா அறிமுகப் படுத்துகிறீர். எனக்கு வரலாறு வராது. நான் கணிதம் படித்தவன்.

அதிரை நிருபரில் பங்கு கொண்ட நம் கண்ணியத்துக்குரிய ஹாஜா முஹைதீன் சார் அவர்களையும், வாவன்னா சார் அவர்களையும் விட்டு விட்டீர்களே.

ஒரு விசேஷம் என்னவெனில், என் ஏ எஸ் சார் பெயருக்கு அடுத்து என் பெயர். ஆம்! அதிரையில் என் ஏ எஸ் க்கு அறிமுகமான முதல் மாணவனும் நண்பனும் நானே.

adiraidailynews said...

உங்களுடைய கற்பனை மிக அருமை .....உங்களுடைய தளம் மிக தெளிவான ஆக்கங்கள் மற்றும் சிறப்பான கட்டுரை வெளியுடுகிறது...மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ....நிருபரில் ஒரே ஒரு குறை அது நமதூர் செய்திகள் வந்தால் நன்றாக இருக்கும்.

MUBEEN

Noor Mohamed said...

//நூர் முஹம்மது காக்கா: கி.மு. நாநூறுல துவங்கப்பட்டது அதிராம்பட்டினம். அப்ப எனக்கு ஏழு வயசு. ரெண்டாம் நம்பர் ஸ்கூல்ல படிச்சிக்கிட்டிருந்தேன். ஈ எம் ஹனீஃபாவோட ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாதான் எங்கேயும் ஒலிக்கும்//

ஆம்! கி.மு. நாநூருல தோன்றியது தொல்காப்பியம். நாம் ஒன்னா நம்பர் ஸ்கூல்ல படித்தவன்.

sabeer.abushahruk said...

//என்னை வரலாறு படித்தவனாகவல்லவா அறிமுகப் படுத்துகிறீர். எனக்கு வரலாறு வராது. நான் கணிதம் படித்தவன்//

ஹைய்யா. காக்கா, கை கொடுங்க. எனக்கும் ஹிஸ்ட்டரி படிக்கனும்னா ஹிஸ்டிரியா வந்த பேஷ்ன்ட் மாதிரி ஆயிடுவேன்.

அசோகர் மரம் நட்டதற்கெல்லாம் மார்க் வாங்கிடலாம்.

கணக்கு எனக்கும் பிடிக்கும். ஃபேக்ட்டர்ஸ் என்றால் என்ன சொல்லுங்க பார்க்கலாம்.

Noor Mohamed said...

//கணக்கு எனக்கும் பிடிக்கும். ஃபேக்ட்டர்ஸ் என்றால் என்ன சொல்லுங்க பார்க்கலாம்.//

காரணிகள்

sabeer.abushahruk said...

//காரணிகள்//

ஓ... மறந்துட்டேன். தொல்காப்பிய காலத்தில் இங்லிஷ் மீடியம் ஏது?:)

சரி காக்கா, காரணிகளில் உள்ள இரண்டு ஃபங்ஷன்ஸ் என்னென்ன? (கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நான்கில் இரண்டு எவை)
(க்ளூ: நிச்சயமாக கூட்டலும் கழித்தலும் அல்ல)

கேள்வி சிரமமா இருந்தா pause சொல்லிடுங்க.

sabeer.abushahruk said...

நெறியாளருக்கு ஒரு வேண்டுகோள்:

உங்கள் ஃபோனில் கால் டைவர்ட்டை (call divert)செயலிழக்கச் செய்யுங்கள். எல்லா அழைப்புகளும் டைவர்ட் ஆகி எனக்கு வருகிறது. வைறாய்ங்க.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

ஆஹா இ(எ)ப்படியெல்லாம் கற்பனைக்கடலை இந்த பின்னுட்டவாதிகள் என்ற தலைப்பின் கொட்டித்திர்த்துள்ளீர் சபீர் காக்கா அருமை

அழுவகலத்தில் வாய் விட்டு சிரிக்க முடியாதொரு வேதனையுற்றேன் அருமை அருமை

இறுதியில் எதற்காக இந்த மீட்டிங் என்று பல தடவை படிக்க நேர்ந்தது இறுதியில் எதற்கு என்பது தெரியவே இல்லை அனால் நீங்கள் அனைவரையும் வம்பிழுத்தவிதம் எச்சலன்ட் (டாப் கியர்)

sabeer.abushahruk said...

வாங்க சகோதரர் முபீன்,
ஒரு...ஒரு மாசத்துக்கு முன்னாலே வந்திருந்தீங்கன்னா உங்களையும் மீட்டிங்கில சேர்த்திருப்போம். பாசக்காரப்பசய்ங்க நாங்க. இப்ப மட்டும் என்ன குறைஞ்சிபோச்சு. இதோ உங்களுக்கான டயலாக்.

முபீன்: வரும்...ஆனா வராது (நல்லாருக்கு ஆனா...:))

Noor Mohamed said...

//சரி காக்கா, காரணிகளில் உள்ள இரண்டு ஃபங்ஷன்ஸ் என்னென்ன? (கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நான்கில் இரண்டு எவை)
(க்ளூ: நிச்சயமாக கூட்டலும் கழித்தலும் அல்ல)//

மக்ரிப் தொழுது விட்டு, உம்ரா வந்துள்ள கவியண்பன் கலாமிடம் பேசி விட்டு, ஆஃபிஸ் வந்து தங்கள் கேள்வியை கண்டேன். உங்களுக்கு தெரியும், எங்கள் பகுதி கதிபில் அரம்கோவில் பணிபுரியும் அலுவலர்கள் அதிகம் வசிப்பவர்கள். எனவே வியாழன் மாலை டிராவல்ஸ் பிஸியாக இருக்கும்.

பதில்:காரணிகளின் ஒரே ஃபங்க்ஷன் பெருக்கல்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தண்டவளத்தை கிரேனில் தூக்கி வைப்பது போல்.எல்லோருடைய வண்டவளத்தையும்,ஹெல்மெட் இல்லாமல் ரொம்ப பாதுகாப்பாக பக்குவமா அ.நி.தளத்தில் வைத்து இருக்கிறியே!

இதற்க்கு முன் வந்த ஆக்கங்களை எல்லாம் அழித்து விட்டு புதிதாக வீடியோ கவரேஜ் பண்ணுவது போல் ஒரு உணர்வு.

காக்கா உங்களுக்கு ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦00000001.டாப் டென் அவார்டு கொடுக்கணும்.

sabeer.abushahruk said...

//தண்டவளத்தை கிரேனில் தூக்கி வைப்பது போல்//

எல் எம் எஸ்,  
அது தண்டவாளம் அல்ல. என் அன்றாட பொழப்புல ஒரு காட்சி. புல்டோஸரின் blade fit பண்ற சீனாக்கும்.

வெயிட் எ மினிட். இப்பதான் நானே கவனிக்கிறேன். நான் சொல்லீக்கொடுத்தும் என்னய வச்சிக்கிட்டே காலில் அல்லவா போட்டுக்கிட்டான். நாங்கள்லாம் அராம்கோவுல சேஃப்ட்டி (safety)கத்துக்கிட்டவைய்ங்கலாச்சே. நெறியாளர் அவர்களே என்ன குசும்பு இது? என் பாஸ் பார்த்தால் மெமோ கொடுத்துடுவானே?

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அழைக்கும்
சபீர் காகா அவர்களுக்கு கவிதை மட்டும் தான் வருமுன்னு யாரோ சொன்ன நியாபகம் ஆனா எங்களை எல்லாம் என்னமா கலாய்கிரிங்க
(வச்சு காமடிபன்னுரிங்க) அருமை. இரவில் தான் நேரம் கிடைக்கும்
அ.நி. படிப்பதற்கு படிச்சிட்டு சத்தமா சிரிச்சிட்டேன் தூக்கத்தில் இருந்த வீட்டுக்காரம்மா எழும்பி ஏனுங்க நல்லதனே இருந்திய ஏன் இப்படி
ஆயிட்டிய ன்னு கேட்டுபுட்டவோ காகா.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

வாரக்கடைசியில் இப்படி ஒரு சுவையான நகைச்சுவை தேவைதான்.
இப்படி என்னை ' வெடைக்கிற'' ஆட்களாக இருப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் புள்ளிவிபரங்களை கிள்ளிஎறிந்து இருப்பேனே.

இருந்தாலும் இதைப்படித்து முடிக்க எனக்கு ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டது. சிரித்து சிரித்து கண் ஆறு முறை சுருங்கிக்கொண்டது.
கட்டுரையை சபீர் அவர்கள் மட்டும் முதலாளித்துவ முறையில் எழுதியுள்ளார்.
இதற்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி கொடுத்ததா என்று தெரியவில்லை.
இவ்வளவு சிரிக்க விலை கொடுக்க வேண்டுமானால் அலத்திக்கட்டில் உள்ள தோப்பை விற்றுவிடலாம். என் நாற்பத்தி எட்டு வருட நட்பில் கூட -தொப்பிக்கடை மாடியில் கூட நான் இப்படி சிரித்தது இல்லை.
இவ்வளவு கருத்துப் ( கறுப்புப்) பணங்களை எங்கே பதுக்கிவைத்து இருந்தார்கள் என்று தெரியவில்லை. இவைகள் வெளிநாட்டில் இருந்து அதிரைக்குள் அந்நிய முதலீடாக நுழைந்து விட்டது.

சாகுல்/யாசிர் நீங்கள் இருவரும் போதும் என்று மான்சீகமாகவும் தம்பி நூர் முகமது தொலைபேசியில் அழைத்தும் சொல்வதால் நிறுத்திக்கொள்கிறேன்.

பாராட்டுக்கள் தம்பி சபீர்.

இப்ராஹீம் அன்சாரி.

Anonymous said...

//நெறியாளர் அவர்களே என்ன குசும்பு இது?//

கவனிச்சுட்டியலா... அங்கே ஒரு 'க்' வைத்தேன் யார் கண்டுபிடிக்கிறார்கள் என்று ! :)

Anonymous said...

//நிருபரில் ஒரே ஒரு குறை அது நமதூர் செய்திகள் வந்தால் நன்றாக இருக்கும்.

MUBEEN //

தம்பி முபீன்:

தங்களின் கருத்திற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

தங்களைப் போன்ற இளம் செய்தியாளர்களின் சுறுசுறுப்பும் பங்களிப்பும் அதிரைச் செய்திகளை தரும் வலைப்பூக்களில் மிளிர்வதை அறிவோம் உங்களின் சேவையும் பாரட்டத்தக்கது.

செய்திக்கென்று வலைப்பூகள் இருப்பதனால் அதற்காக முன்னுரிமை கொடுக்கும் வலைப்பூக்களையும் வரவேற்று சேவையை தொடர வழிவகை செய்வதில் பெருமையே !

அவ்வப்போது அன்றாட செய்திகள் என்று இல்லாவிட்டாலும் அவசியமான செய்திகளும், அறிவார்ந்த சிந்தனைகளும் அதிரை வாசனையோடு அதனைச் சுற்றியே அதிரைநிருபரில் பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை அறிந்திருப்பீர்கள்.

காலச்சூழலுக்கு ஏற்ப பதிவுகளின் தன்மையும் அதன் தாக்கமும் இருக்க வேண்டும் என்பதை அதிரைநிருபர் கவனமாக இருக்கிறது.

தொடர்ந்து இணைந்திருங்கள், உங்கள் கருத்துக்களையும் சுட்டலையும் தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்...

Anonymous said...

//நெறியாளருக்கு ஒரு வேண்டுகோள்:

உங்கள் ஃபோனில் கால் டைவர்ட்டை (call divert)செயலிழக்கச் செய்யுங்கள். எல்லா அழைப்புகளும் டைவர்ட் ஆகி எனக்கு வருகிறது. வைறாய்ங்க. ///

நீங்கள் கொடுத்த நம்பர் நெட்வொர்க்கிலேயே இல்லையாம் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சைலண்ட் ரிடெர்ஸ் ஒரு கூட்டம் போடப் போறதா மின்னஞ்சல் வந்திருக்கே கவிக் காக்கா ஸாரி கட்டுரை(க்) காக்கா ஓ.. ஸாரி, ஒளரங்க நாடக காக்கா... எனக்கு தனி மின்னஞ்சலில் வந்ததை இங்கே பதியாமல் இருக்க முடியவில்லை !

//லேத் பட்டரையில் செய்து கொட்டும் இரும்பு பிராக்கெட்டை விட அபு இப்ராஹிம் எழுதிய பிராக்கெட்டுகள் அதிகம் என்பது இந்த பதிவில் தெரிகிறது.//

இத யாரு அனுப்பியிருப்பாங்கன்னு... சைலண்ட் ரீடர்ஸில் யாராவது சொன்னா நன்றாக இருக்கும் !

'ஸைலண்ட்'ன்னா அடுத்தவங்க சத்தம் போடுவதை பார்த்துக் கொண்டிருப்பதா கவிக் காக்கா ?

Yasir said...

அசத்தல்
அட்டகாசம்
லொள்ளு
கிள்ளு
ஏதார்த்தம்
கலக்கல்
நக்கல்
நாசுக்கு
குறும்பு
குசும்பு
வம்பு
ஆக எல்லாத்தை கலந்து கொடுத்து கலக்கீ இருக்கீங்க....படிக்க படிக்க சிரிப்பு.வாசர்களின் நாடியை பிடித்துபார்த்தல்லவா ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றீர்கள் நீங்கள் இப்ப “ ஆல் இன் ஆல் காக்கா “

Yasir said...

நெறியாளர் அவர்களே...என் புகைப்படத்தை ஏன் போடவில்லை..அதனை கண்டித்து பரோட்டா போடுவதை 2 நாள்களுக்கு நிறுத்தி வைக்கின்றேன்....எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை விரைவில் அறிவிக்கின்றேன்

அதிரை முஜீப் said...

நல்ல வேலை...! மீட்டிங் தொடங்கும் முன்பே இவ்வளவு ரகளை என்றால், மீட்டிங்கில்......? என்னன்ன உட்காருமோ, நடக்குமோ,ஓடுமோ,.....!.

இந்த மீட்டிங் தொடங்கும் முன்பே என்னை வெளிநடப்பு செய்ய வச்ச சபீர் காக்காவிற்கு என் நன்றிகள்...!.

புதுக்கல்லூரியை (நியூ காலேஜ்)கஷ்டப்பட்டு கட்டினவங்களிடம், இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்தால் வருங்காலம் இப்படித்தான் நடக்குமோ...?

ஆனால் உங்களுக்கு பாடம் சொல்லிகொடுத்த வாத்தியாரை நெனைச்சி ரொம்ப சந்தோசப்பட்டேன். அந்தப்பாவி மனுஷன் வகுப்பறையில் என்ன கஷ்டப்பட்டாரோ..! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்..! உங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்தவருக்கு சொர்க்கம் நிச்சயம்..!

அதிரை முஜீப் said...

அது போகட்டும்.அதிரை நிருபரில் சபீர் காக்காவின் மேற்பார்வையில் டோசரை கிரேனில் லவட்டிக்கிட்டு வருவதுபோல ஓரு புகைப்படம் உள்ளதே..!

சபீர் காக்கா அல் குட்சில் இந்த டோசரை அதிரை நிருபருக்கு லவட்டிக்கிட்டு வந்தது அந்த கம்பெனி ஓனருக்கு தெரியுமா...? அங்கே ஓரு டோசரை காணவில்லை என்று கேள்விபட்டேன்..!

அப்புறம் டோசர் அந்த தொழிலாளி கால் மேலே ஏறுதே, இப்படித்தான் வேலையை சூப்பர்வைஸ் பண்ணுறதா..?. அந்த தொழிலாளியின் மருத்துவ செலவை சபீர் காக்காவின் சம்பளத்தில் கட் செய்ய வேண்டியதுதான்..!

அலாவுதீன்.S. said...

//// பேச்சு வழக்கில் சிக்கிய சகோதரர்களின் சந்திப்பு ஒன்று நடந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு ரசனையான கற்பனையொன்றை அதிரைநிருபர் குழு மின்னாடல் சுற்றுக்கு விட்டது அதன் பிரசவம் தான் இங்கே.... ////

சும்மா சொல்லக்கூடாது!
சரியான கலக்கல்
அனைவரையும் ஒரு
கலக்கு கலக்கி விட்டாய்!

எல்லோரையும் கலக்க
பார்க்கில் அமர்ந்து
யோசித்தீர்களா?
ரூம் போட்டு யோசித்தீர்களா?

என்ன ஹமீது வீடியோவோடு அலைகிறார்.

தம்பி அபுஇபுறாஹிம்
சிரித்துக் கொண்டு
ஓரமாக அமர்ந்து
வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

இவ்வளவு பேரையும்
கலக்க எத்தனை நாள்
யோசித்தாயோ?
நல்ல ஓரங்க சிரிப்பு நாடகம்!

sabeer.abushahruk said...

//அந்த தொழிலாளியின் மருத்துவ செலவை சபீர் காக்காவின் சம்பளத்தில் கட் செய்ய வேண்டியதுதான்..!//

ஆரம்பிச்சாச்சா? எல்லாக் கம்பெனியிலும் கணக்கு வழக்கு மேலாளர் இப்படித்தான் இருப்பாங்களா? தீர விசாரிக்காமல் சம்பள கட்டிங்?

சம்பவம் நடக்கும்போது நான் எங்கே பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதை கவனியுங்கள் யுவர் ஆனர். பேஸ்ஸிவ் வாய்ஸில் சொன்னால் "நான் வேறு பக்கம் பார்க்கும்போதுதான் சம்பவம் நடக்கிறது". எனவே, நான் குற்றமற்றவன் என்பதை ஆணித்தரமாகச் சொல்லிக்கொள்கிறேன் யுவர் ஆனர்.

Yasir said...

"டொக்,டொக் “ நிழல்கள் எல்லாம் இருட்டாகிவிட்டதால் தூங்கிவிட்டதா ? மேலை நாடுகளில் இருக்கும் நிழல்கள் தயவு கூர்ந்து சபைக்கு வந்து கலக்கவும்
நாங்க காலையில மீண்டும் வருவோம்ல

ZAKIR HUSSAIN said...

எனக்கு யாருப்பா இவ்வளவு டைட்டா ட்ர்ஸ் செய்தது.?...[ துணி ஜவுளிக்கடை மஞ்சல் பையிலெ கட் பன்னியதா?-----நாங்களும் பிராக்கெட் போடுவோம்ல..]

# யாசிர் கேரக்டராகவே மாறி நடிப்பது தியேட்டரில் விசில்.
# நூர் முஹம்மது அண்ணன் கேரக்டருக்கு டைரக்டர் சரியாக ஹோம் வொர்க் செய்யவில்லை [ "அசிஸ்டன்ட் டைரக்டர் சொதப்பிட்டான்யா" என்று சாதாரணமாக சொல்லிவிடலாம்.]
# # கடைசிவரை கவியன்பனை காண்பிக்காமல் ..கடைசியில் வந்ததால் இனிமேல் வரும் மினி சீரியலில் அவருக்கு "இன்ஸ்பெக்டர்" கேரக்டர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

# சாகுல் பல கேரக்டரில் சோபித்திருந்தாலும் அவருடைய பாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் கால்சீட் கொடுத்து டைரகடரிடம் சொல்லாமல் கடலுக்கு எல்லாம் போய்வந்ததால் டைரக்டர் கடுப்பில் இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வாய்விட்டு மனம்விட்டு சிரிக்க வைத்த முதல் பதிவு!

எப்பப்பவோ நடந்த நிகழ்வுகளை கண்ணாடியாய் அப்படியே காட்டிய அழகான பதிவு!

//குளிரை விரைவில் பதிவுக்கு(ள்) கொண்டுவ(ருகிறோம்)ர முயல்வோம்//

குளிரின் பின்னே இயற்கை அள்ளித் தரும் அழகு மலர் அணிவகுப்புகள் இப்போது [ஹமிதாக்கா சொல்லும் மூன்றாம் கண்ணில்] பதிவில்! அது விரைவில். (ஓரிரு மாதத்தில்)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இது நிழலா? நிஜமாய் சொல்கிறேன் இது அசல்!. நகைச்சுவை அலசல், இந்த நிழலின் கீழ் குளு,குளுவென சிரிப்பை அனுபவிக்கும் அலாதியே தனிதான்.இப்படி பிட்டு, பிட்டு வைப்பதில் கில்லாடி நீங்கள்! சிரிப்பில் என் பல் சுளுக்கி கொள்ளாததுதான் மிச்சம்.

Ebrahim Ansari said...

நேற்று மாலை தொடங்கிய இந்த சிரிப்புப்புயல் இன்னும் வீசிக்கொண்டு இருக்கிறது. இரவில் தூக்கத்தில் கூட சிரிப்பு. இதனால் இல்லத்தில் கூட ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். இதன் விளைவுகளுக்கு தம்பி முஜீப் அவர்கள் சொல்வதுபோல் சபீர் உடைய சம்பளத்தில் கட பண்ணித்தான் ஆகவேண்டும் என நினைக்கிறேன். யாசீர் உடைய கோரிக்கைக்கு செவிசாய்த்து (மிரட்டலுக்கு பயந்து ? ) மேல் நாட்டு சமூகம் கருத்திட வந்துவிட்டது. தம்பி கிரவுன் இப்படியெல்லாம் பயப்படாதீர்கள். யாசிர் நம்ம ஆளுதான் அப்படியெல்லாம் காலையில் நடவடிக்கை எடுக்க மாட்டார். எத்தனையோ பதிவுகள் வந்திருந்தாலும் இது மறக்க முடியாதது. - இப்ராஹீம் அன்சாரி.

அதிரை முஜீப் said...

//என் அன்றாட பொழப்புல ஒரு காட்சி. புல்டோஸரின் blade fit பண்ற சீனாக்கும். வெயிட் எ மினிட். இப்பதான் நானே கவனிக்கிறேன். நான் சொல்லீக்கொடுத்தும் என்னய வச்சிக்கிட்டே காலில் அல்லவா போட்டுக்கிட்டான். நாங்கள்லாம் அராம்கோவுல சேஃப்ட்டி (safety)கத்துக்கிட்டவைய்ங்கலாச்சே. நெறியாளர் அவர்களே என்ன குசும்பு இது? என் பாஸ் பார்த்தால் மெமோ கொடுத்துடுவானே? //

யுவர் ஆனர்...! நான் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டவில்லை!. குற்றம் சாட்ட்டப்பட்டவரே தன் குற்றத்தை தன்னை மறந்து அவரே ஒப்புக்கொடதற்கான சாட்சிதான் அவரே அளித்த வாக்குமூலம் தான் மேலே சொன்னது.

எனவே பொதுவாக மற்ற கணக்கு மேளாரரை வேண்டுமானால் குற்றம் சாட்டலாம். நான் ஆதாரம் இல்லாமல் கூறவில்லை. (நாங்க டிடக்சனில் கொட்டை எடுத்த புளியாக்கும்!)

மேலும் குற்றம் சாட்டப்பட்டவரே தான் சேப்டி டிரைனிங் எடுத்தவர் என்று கூறியுள்ளதால், இங்கே சேப்டி ஜாக்கெட்டோ, ஹெல்மேட்டோ அணியவில்லை என்பதை புகைப்பட ஆதாரம் தெளிவாக கூறுகின்றது.

எனவே அடுத்த டிடக்சன்.....?. (என்ன சபீர்காக்கா ஆரம்பிசிருவோமா!)

sabeer.abushahruk said...

நெறியாளர் அவர்களே, இதையும் சேர்க்க முடியுமா?

மர்மயோகி: (நல்லவேளை, நாம இருக்கிறத யாரும் கவனிக்கல. நடத்துங்க மக்களே. நாளைக்கு வச்சிக்கிறேன் தனி மெயில்ல)

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
அப்பா ;இந்தப்புள்ள சபீர் புல்டோசருக்கு வைத்தியம் செய்றதோட,நல்ல கவிதையும் எழுதுதேன்னு ரொம்பவும் சந்தோசமா இருந்துந்துச்சு.படிக்கும்போது வந்த வலப்பக்கம் திரும்புன வியாதினாலே
வலக்கரம்னு நல்ல கவிதையும் பாடுனுச்சு. படத்துலயும் அப்படித்தானே
நிக்குது.அந்த வ.தி.வி. க்கு நல்ல வைத்தியம் பாத்தா தேவல.அல்லாஹ்
உதவியால குணமாயிடும்.ஆமீன்.

sabeer.abushahruk said...

முஜீப்: ஏன் இந்த கொலவெறி? வெள்ளிக்கிழமையிலும் டூட்டி மூடா? ஒரே சம்பள கட்டிங்லேயே குறியா இருக்கிய?

புள்ளிக்காரன் (ர்?) ஓஃபீஸ்ல இரிக்கிந்ந சேட்டந்தானே. அப்புறத்து காரியங்கள் மனசுலாக்காம் வைய்யா எந்நுவச்சா ஞான் பறஞ்ஞது.

பக்க்ஷே, நிங்ஙள் சரிக்கு பிடிச்சு.

மாப்பு. நமக்கு ஈ காரியம் குரிச்சு தனிச்சு வச்சி கட்டன் கோஃபியும் கப்பையுமாயிட்டு சம்ஸ்காரிக்காம்.

லேஷ் ஆதா? கல்லிவல்லி கல்லிவல்லி கல்லிவல்லி கல்லி அ வல்லி.

sabeer.abushahruk said...

நெறியாளர் அவர்களே,

ஐ ஏ எஸ் ஆஃபீஸர் பரோட்டா போட்றமாதிரி போஸுக்குப் பொருத்தமில்லாமல் இருக்கு யாசிரின் பளிச் முகம். ட்டை மட்டும்தான் தொங்கலே. யாராவது அவர் தோளிலே ஒரு துண்டைப் போட்டுவிட்டு மூஞ்சில ஒரு மீசையை வரைஞ்சிவிட்டால் உபகாரமாப் போகும்

Anonymous said...

//நெறியாளர் அவர்களே, இதையும் சேர்க்க முடியுமா?//

done !

இப்னு அப்துல் ரஜாக் said...

காக்கா,ரொம்ப லொள்ளுதான் போங்கள்.சிரிச்சி,சிரிச்சி ....வயிறு ..........வலிக்குது.............

ஆனா காக்கா,உச்சாயத்துல இத மறந்துட்டியல காக்கா,

//ஜாகிர்: அப்ப நான் என்ன மாரியம்மன் கோயில்லயா “படிக்கட்டு”கிறேன்?//

இது ஷிர்க்கான வார்தை ஆச்சே.அதுக்காக இப்புடியா.அத கட் பண்ணுங்க காக்கா.

உச்சாயம் வேணும்தான்,அதுக்காக இப்புடியா.அத கட் பண்ணுங்க காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

////ஜாகிர்: அப்ப நான் என்ன மாரியம்மன் கோயில்லயா “படிக்கட்டு”கிறேன்?//

அதனாலென்ன தம்பி, மாரியம்மன் கோயில் பக்கத்துல மனைகள் இருந்தா உளுந்தடிச்சு வாங்கி போடுறவங்க நிறைய இருப்பதால... அதனை,

||| ஜாகிர்: அப்ப நான் என்ன மாரியம்மன் கோயில் பக்கதிலையா “படிக்கட்டு”கிறேன்?||||

இப்னு அப்துல் ரஜாக் said...

அபூ இபுறாஹீம் காக்கா,அந்த முசீபத்து புடிச்ச பெயர வச்சி,நம்ம எதுக்கு கும்மியடிக்கனும்.இஸ்லாம் நமக்குன்னு ஒரு வேலி போட்டிருக்கு,அதோட நிருத்தீகுவோமே,இதுல சமரசம் வேணாமே.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதோட நிருத்தீகுவோமே,இதுல சமரசம் வேணாமே.//

தம்பி சொன்னா இந்த தம்பியும் செய்வான் !

DONE !

சேக்கனா M. நிஜாம் said...

பதிவாளர்களின் தனித்தன்மைகளாகக் கற்பனைக் கலந்த நகைச்சுவையில் உரையாடிய சகோ. கவி சபீர் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

அனைத்து முஹல்லாவே இப்பதிவில் ஓன்று கூடியிருப்பது போன்ற உணர்வு...............

தொடருங்கள்....................................

Noor Mohamed said...

//# நூர் முஹம்மது அண்ணன் கேரக்டருக்கு டைரக்டர் சரியாக ஹோம் வொர்க் செய்யவில்லை [ "அசிஸ்டன்ட் டைரக்டர் சொதப்பிட்டான்யா" என்று சாதாரணமாக சொல்லிவிடலாம்.]//

தம்பி ஜாகிர், நீங்க நல்லா இதை கவனித்துள்ளீர்கள். தம்பி சபீருக்கு என் மீது ஏன் இவ்வளவு வெறுப்பென்று தெரியவில்லை. எல்லோரையும் இக்கால மனிதர்களாக சித்தரித்து விட்டு, என்னை மட்டும் அக்காலத்தில், இடைச்சங்க காலத்தில் படித்தவன் என்றல்லவா கூறிவிட்டார். நல்ல வேலை நான் ரென்டா நம்பர் ஸ்கூல்ல படிக்கல.

அது சரி, என்னை தம்பி என்று அன்போடு அழைக்கும் இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் கூட என்னை பற்றி எழுதியதை படித்து விட்டு எப்படி சிரித்தார்கள் என்று தெரியவில்லையே. காக்கா நீங்களும் தம்பி ஜாகிர்போல் நினைத்து பார்க்காதது ரொம்ப தப்பு.

தம்பி சபீரை கண்டிக்குமாறு என் ஏ எஸ் சாரிடம் கம்ப்ளைன்ட் கொடுக்க முயற்சி செய்றேன். ஆள பிடிக்க முடியலே. அவர் எப்போதுமே சுற்றிக் கொண்டுதானே இருப்பாரு. ஒரு சமயம் வியட்நாம் லேந்து சிங்கப்பூர் போயிருக்கலாம் இல்லையா?

Ebrahim Ansari said...

தம்பிகளின் தலைவரே! நூர் முகமது. //அது சரி, என்னை தம்பி என்று அன்போடு அழைக்கும் இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் கூட என்னை பற்றி எழுதியதை படித்து விட்டு எப்படி சிரித்தார்கள் என்று தெரியவில்லையே. காக்கா நீங்களும் தம்பி ஜாகிர்போல் நினைத்து பார்க்காதது ரொம்ப தப்பு.// நான் குறிப்பிட்டு இருக்கிறேன். படிக்கும்போது ஆறு முறை கண்கள் சுருங்கிக்கொண்டன என்று. அதில் தவற விட்டு இருக்கலாம். ஆனாலும் நான் செய்தது தவறுதான். இப்படியெல்லாம் தவறு செய்ய காரணமான சபீர் அவர்களுக்கு ஒரு தண்டனை ( பரிசு) வழங்கவேண்டுமென்று நெறியாளர் அவர்களை கேட்க விரும்புகிறேன்.

நூர் முகமது! கவலைப்படாதே சகோதரரா! காலம் வரும் நாமும் பார்த்துக்கொள்ளலாம்.

இன்னொன்று என்னை இதுவரை நேரில் பார்க்காமலேயே குறுந்தாடி என்று ஒரு குறிப்பு கொடுத்துள்ளார். இதையும் நான் ஆட்சேபிக்கிறேன். எனக்கே தெரியாமல் என் போட்டோவை காட்டிய யாசிர் மீது தனி வழக்கு இருக்கவே இருக்கிறது. கபர்தார்.

Noor Mohamed said...

நன்றி! இபுராஹீம் அன்சாரி காக்கா. அடுத்து.

தம்பி சபீர் அவர்களே! மேலும் உங்கள் மீது ஒரு ஆவேசமான கடுமையான குற்றச்சாட்டு;

எங்கள் என் ஏ எஸ் சார் படத்தை இப்படி சித்தரிக்கலாமா? அனைவர்களின் கவனித்திற்கு, ஏன் அங்கே வால் முளைத்துள்ளது? என் ஏ எஸ் அவர்களே! எங்கிருந்தாலும் ஓடி வாருங்கள்! சபீரின் சித்தரிப்பை பாருங்கள்!! தண்டனையை கூறுங்கள்!!!

sabeer.abushahruk said...

காக்காமார்களே,

என் ஏ எஸ் சாருக்கு எப்பவுமே கோட்டுசூட்டு போட்டு பார்க்கிற ஆள்தான் நான். தானாய் முளைப்பதற்கெல்லாம் கம்பெனி பொருப்பேற்காது.

அக்கால மனைதரில்தான்
அன்பிருந்தது.

ஜும் ஆவுக்குப்பிறகு விளக்கம் தருகிறேன்.

sabeer.abushahruk said...

நெறியாளர் அவர்களே,
என் ஏ எஸ் சாரின் வாலை ஒட்ட வெட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

//என் ஏ எஸ் சாரின் வாலை ஒட்ட வெட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

கவிக் காக்கா, அது வால் அல்ல ! அமர்ந்திருக்கும் கட்டிலும் வலைவுகால் !

எனக்கென்னமோ தண்ணீரில் "வாள்" நிறைய பயன்படுத்தியதன் தாக்கம் இங்கேயும் வந்து விட்டதோ என்ற ஐயம்...

இப்படிக்கு

'வால்'பையன்

Shameed said...

அதிரை நிருபரில் வந்து போகும் அனைவரையும் அண்ணன் என் எ எஸ் சார் லேபில் வைத்திருக்கும் இயற்பியல் தராசில் ( மரப்பெட்டிக்குள் இருக்கும் அந்த தரசு இன்னும் இருக்குதா சார் )எடை போட்டு கன காட்சிதமா சிரிப்பையும் அள்ளித்தந்த விதம் அருமை

Shameed said...

எல்லாம் சரி அது என்ன என் கையில் ஒரு நீராவி (நிலக்கரி என்ஜின்) என்ஜின் ஒன்றை கையில் கொடுத்து உள்ளீர்களே அது என்னான்னு எனக்கு வெலங்கள

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//# சாகுல் பல கேரக்டரில் சோபித்திருந்தாலும் அவருடைய பாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் கால்சீட் கொடுத்து டைரகடரிடம் சொல்லாமல் கடலுக்கு எல்லாம் போய்வந்ததால் டைரக்டர் கடுப்பில் இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு... //

கடலுக்கு போயிட்டு டைரக்டருக்கு மீனு கொடுத்தும் கோபம் தீரலே காரணம் கொடுத்து அனுப்பிய மீன் பச்சையா இருந்ததாம் ஏன் பொரிச்சமீனை பிடிக்காமல் பச்சை மீனை பிடித்தார் என்ற வருத்தமாம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா நல்லாயிருக்கியலா? ஜாகிர் காக்கா நலமா? ஹமீது காக்கா பார்த்து ரொம்ப நாளாச்சு?

எங்கே ஒரு காக்காமாரையும் காணோம். லேட்டா வந்துட்டேனோ?

:)

-----

என்னை விட்டுவிடுங்க காக்காமார்களா...

அ.நி. சன்டை சச்சரவு இல்லாம எல்லோரையும் முடிந்தவரை இணையத்தில் ஒன்றிணைத்துக்கொண்டிருப்பதில் மிக்க சந்தோசமே..

வெள்ளிக்கிழமை... இன்றைக்கும் வேலை...

:(

Yasir said...

ச்சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் அதற்க்க்கா இவ்வளவு ....(...)வ(ல)ளமா ? என்னை போட்டு இருக்கக்கூடாது :) ஒகே பரோட்டாவை சாப்பிட்டு ஜாமய்ங்க

Yasir said...

கவிகாக்கா லேட்டஸ்ட் ஜோக் மாலிக்கிடமிருந்து....மச்சினன் சிறிதாக டிரிம் செய்யப்பட்ட தாடியுடன் இன்னைக்கு ஜூம்மாவிற்க்கு வந்தார், வந்தவர் மாலிக்கிடம் என்ன நலமா என்று விசாரித்துக்கொண்டு இருக்கும்போது....மாலிக் அவர் முகத்தை பிடித்துக்கொண்டு “என்ன மூஞ்சிய காண்டா விளக்குளயா காட்டிட்டு வந்தீங்க...கரி பிடிச்சாப்ல இருக்கே என்றாரே பார்க்கலாம் மச்சினம் முகத்தில் ஈயாடவில்லை....இன்னையோட இந்த தாடியே எடுத்துவிட வேண்டும் என்ற சபத்தத்தில் இருக்கின்றார்

sabeer.abushahruk said...

நூர் முஹமது காக்கா மற்றும் இபுறாகீம் அன்சாரி காக்கா ஆகியோருக்கு,

நலம் நலமறிய நாட்டம்.
நிற்க,

இடைச்சங்க காலத்தில்தான்
இதயத்தில் மனிதனுக்கு
ஈரமிருந்தது

வீரமிருந்தது வீரத்தோடு
விவேகமுமிருந்தது
பாசமிருந்தது நேசத்தோடு
பற்றுமிருந்தது

கூட்டுக்குடும்பெனும் குதூகலமிருந்தது
கூக்குறலில்லாத குலவலிருந்தது
கூகுளில் தேடத் தேவையில்லாத
கூட்டமிருந்தது

சிம்கார்ட் தேவையற்ற நல்
சிந்தை யிருந்தது

மொத்தத்தில் மனிதமிருந்தது
எனில்,
அக்காலத்தவர் என உஙகளை நான்
புகழ்ந்தேனா புனைந்தேனா?

நேற்றைய சரித்திரம்
இன்றைய வழிகாட்டல்
இன்றைய நிகழ்வுகளே
நாளைய சரித்திரம்

நேற்றை நினைவில் வைத்து
இன்று தரும் காக்காவும்

நாளைய உயர்வுக்கு
வழிகளை
இன்று தரும் காக்காவும்
எங்கள் கண்கள்!

அடுத்த தெருவுக்குப் போகனும்... யாவாரம் கெட்டுடும்...வரட்டா காக்காமார்களே?
(ஐஸ்…பாலைஸ்…சேமியாப்பாலைஸ்…கோனைஸ்…கப்பைஸ்….)

Yasir said...

/யாசிர் மீது தனி வழக்கு இருக்கவே இருக்கிறது// முன் ஜாமீன் எடுத்துட்டுதான்...போட்டவை காட்டினேன் மாமா...கேஸ் போட்டாலும் புஸ்ண்டு போயிடும்

Noor Mohamed said...

//கூட்டுக்குடும்பெனும் குதூகலமிருந்தது
கூக்குறலில்லாத குலவலிருந்தது
கூகுளில் தேடத் தேவையில்லாத
கூட்டமிருந்தது//

பண்டைய பண்பாட்டை பட்டியலின்றி பாடியுள்ளீர். தம்பி கவி சபீர் அவர்களுக்கு நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நலம் நலமறிய நாட்டம்.
நிற்க,

இடைச்சங்க காலத்தில்தான்
இதயத்தில் மனிதனுக்கு
ஈரமிருந்தது

வீரமிருந்தது வீரத்தோடு
விவேகமுமிருந்தது
பாசமிருந்தது நேசத்தோடு
பற்றுமிருந்தது

கூட்டுக்குடும்பெனும் குதூகலமிருந்தது
கூக்குறலில்லாத குலவலிருந்தது
கூகுளில் தேடத் தேவையில்லாத
கூட்டமிருந்தது

சிம்கார்ட் தேவையற்ற நல்
சிந்தை யிருந்தது

மொத்தத்தில் மனிதமிருந்தது
எனில்,
அக்காலத்தவர் என உஙகளை நான்
புகழ்ந்தேனா புனைந்தேனா?

நேற்றைய சரித்திரம்
இன்றைய வழிகாட்டல்
இன்றைய நிகழ்வுகளே
நாளைய சரித்திரம்

நேற்றை நினைவில் வைத்து
இன்று தரும் காக்காவும்

நாளைய உயர்வுக்கு
வழிகளை
இன்று தரும் காக்காவும்
எங்கள் கண்கள்!//


இதையெல்லாம் அடுத்த கவிதைப் பதிவுக்கு உண்டியலில் போட்டு வச்சிருந்தக்கலாம்... சரி, கிரேன் ப்ளேடு விழுந்த மாதிரி கையிலிருந்த கவிதை உண்டியலும் விழுந்திடுச்சு இங்கே... நாங்க ஒன்னொன்னா அள்ளிக்கிறோம் (கவிக்)காக்கா... :)

நிறையபேர் இங்கே பிராக்கெட் போடுறாங்க ! :) யாருக்கு ? ஏன் ? எதற்கு ? என்றுதான் புரியவில்லை !

N.A.Shahul Hameed said...

Dear Brothers!
Assalamu Alaikkum!!!
I used to be a silent spectator of all the creative publications and postings of AN. It does not mean that I am not reading AN regularly. I am a consistent reader and I made it a routine habit of reading AN everyday.
At times I feel so proud of my brought ups like Shabeer, Zakhir, Savanna, Noor Mohamed and all others positing excellent publications. I used to admire the versatile style of Zakhir's motivational articles, brother Ibrahim Ansari's thought provoking statistical Analyses, Alaudeen's inspiring Deeniyat, LSM, Crown and others articles making us to return back to the good old days of our joint family set up, and above all my dearest brother Jameel Kakka's Pazhagu Tamil.
Let me come to the point. Shabeer, I remember you like me to go with Coat to the institution that is indeed the professional attire. But as you know I have been known for my simplicity and non-egoistic attitude. I move with great personalities like Kalvi Thanthai SMS, AMS, MMS and also with the bottom most man like Kaali (he is a Narikkuravar). That is my identity.
When I joined Informatics Singapore our formal attire was to have neck Tie at least. So I adhered to it (Actually I did not know how to knot it at that time). When I assumed charge as Head in Viet nam I abolished the formal attire concept and told my boss that being informal makes our students feel comfortable to move closely with the lecturers. Still I believe the attire does not contribute to the success of a personality. (Eg. A.P.J.Abdul Kalam)
Noor Mohamed, it is not the tail, if you look closely it is one of the legs of the chair I am being seated. These are the legs (the support I received from you all my students) that enabled me to render unblemished service throughout my career.
Shabeer, you know very well, I don't care about washing and ironing my dress because, I thankfully remember that there was a person in my home, who took care of washing all my clothes including my ....
It is fascinating to read this kind of different approaches in a blog that is more entertaining and making all of us relax and relieve of our stress at the week end. Carry on friends.
Hats off AN
Wassalam
N.A.Shahul Hameed

Kuthub bin Jaleel said...

உண்மையை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். சகோதரர்களின் திறமைகளைப் பார்த்து அசந்துதான் நிற்கிறேன். நான் அவர்களில்லை. அவர்களைப்போல் ஆக முடியவுமில்லை. ஓயச்சுப்பிடதான் செய்றாங்க.

நல்ல கற்பனையான பதிவு. சக ஊழியரின் காலை கவிஞர் பதம் பார்த்ததையும், பரோட்டா என்றாலே தம்பி யாசிரை வம்புக்கு இழுப்பதையும் ரசிக்க முடிந்தது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

கொசுறு தகவல்: http://anatomictherapy.org/Videos.html என்ற link-ல் உள்ள அனைத்து video-க்களையும் பார்த்து விட்டு தம்பி யாசிர் மேல் ஒரு முடிவுக்கு வாருங்கள்.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

நெறியாளர் அவர்களே,
/என் ஏ எஸ் சாரின் வாலை ஒட்ட வெட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்//

சார் உங்களை கவுத்த சதி நடக்குது காளை வால் என்று சொல்லி நீங்கள் இருக்கும் இருக்கையை கவுக்க பாக்குறாங்க உங்க வாலை சாரி காளை சரிசெய்து கொள்ளுங்கள்.

Shameed said...

//ஹமீது: ப்பாயாவோடு தொட்டு திண்ணாலுமா? எனக்கு அண்டவே செய்யாது.//

ப்பாயா சம்பவம்(மதுரை) நடந்து இருபது வருடம் இருக்குமா ??

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்!
சபீர் காளை அல்ல காலை.
திருத்திக்கொள்ளவும்
Wassalam
N.A.Shahul Hameed

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

மிக்க நன்றி. உங்களின் அன்புக்கு நன்றி. ஜசக்கல்லாஹ் ஹைரன்.
நானும் நூர் முகமதும் சீண்டிய சீண்டலில் ஒரு ரம்மியமான கவிதை வெளிப்பட்டுள்ளது.( இதில் அபூ இப்ராகிம் அவர்களுக்கு ஏன் பொறாமை? - வற்றாத கவிக்கடலில் இருந்து இன்னும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.)

தம்பி- நூர் முகமது பார்த்தீர்களா? நமது திட்டம் வெற்றி பெற்றுவிட்டது. சபீர் அவர்களை இன்னும் கொஞ்சம் சீண்டினாலும் கவிதை கிடைக்கும்.
நாம் இருவரும் அவரின் புகழ்மொழிகளுக்கு தகுதியாக வேண்டும். நம்மீது பொறுப்புகளை வரிகள் மூலம் சாட்டியிருக்கிறார்.

ஆனாலும் ஒரு வழக்கு பாக்கி இருக்கிறது நேற்று மாலை சிரிக்கவைத்தார் இன்று மாலை ஏன் அழ வைத்தார்?

Noor Mohamed said...

//தம்பி- நூர் முகமது பார்த்தீர்களா? நமது திட்டம் வெற்றி பெற்றுவிட்டது.//

இபுராஹீம் அன்சாரி காக்கா, திட்டங்கள் தீட்டுவதும், அதில் வெற்றி காண்பதும் உங்களுக்கென்று அதிரைநிருபரில் தனித்தன்மையுண்டு. நன்றி காக்கா.

Noor Mohamed said...

//Noor Mohamed, it is not the tail, if you look closely it is one of the legs of the chair I am being seated.//

மெளனமாக பார்த்துக் கொண்டிருக்கும் N A S அவர்களை வெளியில் கொண்டுவருவதற்கே கால் என்று தெரிந்தும் வால் என்று எழுதினேன். வந்து விட்டீர்களே வெளியில்.

நீங்கள் எல்லோருக்கும் நட்பின் உறைவிடம் நண்பன். 'குகனுடன் ஐவரானோம்' என்ற கம்பனின் கூற்று, காளியுடன் நீங்கள் கொண்டுள்ள 30 ஆண்டுகால நட்பு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சி.....ஏன் இப்புடி???? என்று கேட்பதற்கு பதிலாக எல்லாமே சூப்பராத்தான் போயிக்கிட்டு இருக்குது இங்கே.....

சபீர் காக்காவுக்கு : அராம்க்கோ சேஃப்ட்டி மேனேஜர் உங்களை அவர் ஆஃபீஸில் வந்து பார்க்கச்சொன்னார். காரணம் தலையில் சேஃப்ட்டி ஹெல்மட், வாயில் விசில் (ஊக்குரி) இல்லாமல் நீங்களும், காலாவதியான கிரேன் தரக்கட்டுப்பாட்டு ஸ்டிக்கரும், கிரேன் ஆப்பரேட்டர் லைசன்ஸும், உங்களுடைய ரிக்கர் சர்ட்டிஃபிக்கேட்டும் எல்லாத்தையும் கொண்டுக்கிட்டு வரச்சொன்னார். அனேகமாக உங்களுக்கு சேஃப்ட்டி வைலேசன் கிடைத்து சம்பளப்பிடித்தமோ அல்லது அதற்கு நிகரான பதவி உயர்வோ (இங்கே எல்லாம் அப்புடித்தான் சொல்லிக்கிறாங்க) கிடைக்க வாய்ப்புள்ளது. எல்லாத்துக்கும் பிரிப்பேர் பண்ணிக்கிட்டு ரெடியா வாங்க. (அப்புற‌ம் கிரேன் ஆப்ப‌ரேட்ட‌ரெ பயப்புடாமெ சீட்லெ உக்காந்துக்கிட்டு வேலெ செய்ய‌ச்சொல்லுங்க‌).

ஜாஹிர் காக்காவுக்கு : தாய்ப்பாச‌த்துலெ ந‌ம்ம‌லெ மிஞ்சின ஆளா இருக்குமோ என்று (தாயையும், பிள்ளையையும் பிரிக்கிற‌த்துலெ அவ்வ‌ள‌வு இஸ்ட்ட‌ம் என்று) நினைத்துக்கொண்டு நீங்க கட்டுன ப‌டிக்க‌ட்டுலெ ஏறி க‌த‌வைத்திற‌ந்து பார்த்தால் எதிர்ப்பக்கம் 'என்னா இது வெட்ட‌வெளியா இருக்குது?' சீனிய‌ர் ஆபிச‌ர்னாலெ உங்க‌ளெ உட்ருல்லாம்.......

சாகுல் காக்காவுக்கு : கேம‌ரா ஒருப‌க்க‌மும், க‌ண்பார்வை ம‌றுப‌க்க‌மும் இருக்க‌க்கூடாது. அலியார் சார் கிளாஸ்லெ உக்காந்த‌ மாதிரி இர‌ண்டும் ஒரே ப‌க்க‌ம் தான் திரும்பி இருக்க‌னும்ண்டு அவ்வெல்ட்டெ சொல்லிர்ங்க‌.....

என்.ஏ.எஸ் சாருக்காக‌ : முன்னாடி க‌ட்ட‌ வேண்டிய‌ டையை பின்னாடி யாரோ குசும்பா க‌ட்டி உட்டு இருக்கிறாங்க‌ உசாரா ஈந்துக்கிடுங்க‌ சார்.....

ச‌கோ. யாசிருக்கு : பெருநாள் தொழுகைக்கு ரெடியான ஆள் மாதிரி இப்புடி ஃப்ர‌ஸ்ஸா ஆயிட்டு இப்புடி ரொட்டி போட்டா எப்புடி? அந்த‌ கெட்ட‌ப்புக்கு த‌லையிலெ ஒரு அழுக்கு முண்டாசும், வேர்த்து விறுவிறுத்துப்போன‌ ஒட‌ம்பும், ம‌ஞ்ச‌க்க‌ல‌ர்லெ ப‌னிய‌னும் போட்டாத்தான் இண்ட‌ர்வியு இல்லாம‌ல் இங்கு பாஸாக‌ முடியும். (அப்புற‌ம் தோச‌க்க‌ல்லு சூடாயிருச்சாண்டு பாக்குற‌துக்கு வேர்வையை கொஞ்ச‌ம் அதில் தெளிச்சி புஸ்ஸுண்டு ச‌ப்த‌ம் வ‌ருதாண்டு பாக்க‌த்தெரிய‌னும்).

எதோ ந‌ம்ம‌னாலெ முடிஞ்ச‌ அட்வைஸ்......

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எல்லோரையும் கலக்க
பார்க்கில் அமர்ந்து
யோசித்தீர்களா?
ரூம் போட்டு யோசித்தீர்களா?//

அலுவலக பிஸிக்கிடையிலே குஷியாக சொல்ல நினைத்த நினைவுகள் !

//இவ்வளவு பேரையும்
கலக்க எத்தனை நாள்
யோசித்தாயோ?
நல்ல ஓரங்க சிரிப்பு நாடகம்!//

காலை 08:36 மணியிலிருந்து மதியம் 03:48 மணிவரையில்... நாடகம் அரங்கேற்ற எடுத்துக் கொண்ட நேரம்.

பாதிரங்கள் பேசப்படனுமா ? சித்திரங்கள் பேசப்படனுமா என்ற பட்டிமன்றமாக வைத்திடலாமா என்றுகூட தோன்றியது... (இவைகளை behind the screen) அடுத்தடுத்த சூழலில் உருவான விதம் பற்றி விளக்கலாம்...

சித்திரமும் வேண்டும் பாத்திரங்களை நிரப்ப என்ற வேண்டுகோள் வைத்த இடம் புதுமைக்கு புத்துயிர் தரும் என்ற நம்பிக்கையூட்டியது...

பச்சை மீனு பொறிச்ச மீனுன்னு எல்லாம் அடிபடுது... பகல் சாப்பாட்டு அப்புறம் மீனை ஒன்னு ஒன்னா அனுப்பினா !?

மீதியை கவிக் காக்கா வந்து சொல்லட்டும்... எனக்கு அடுத்த சீனுக்கு ரெடியாக வேண்டிய நேரம் வந்திடுச்சு !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

(முத‌ல் ப‌ட‌ம்) போப்பாண்ட‌வ‌ரே இங்கே க‌ருத்து சொல்ல‌ வ‌ந்தாச்சா? சொல்ல‌வே இல்லெ?????

crown said...

இடைச்சங்க காலத்தில்தான்
இதயத்தில் மனிதனுக்கு
ஈரமிருந்தது

வீரமிருந்தது வீரத்தோடு
விவேகமுமிருந்தது
பாசமிருந்தது நேசத்தோடு
பற்றுமிருந்தது

கூட்டுக்குடும்பெனும் குதூகலமிருந்தது
கூக்குறலில்லாத குலவலிருந்தது
கூகுளில் தேடத் தேவையில்லாத
கூட்டமிருந்தது

சிம்கார்ட் தேவையற்ற நல்
சிந்தை யிருந்தது

மொத்தத்தில் மனிதமிருந்தது
எனில்,
அக்காலத்தவர் என உஙகளை நான்
புகழ்ந்தேனா புனைந்தேனா?

நேற்றைய சரித்திரம்
இன்றைய வழிகாட்டல்
இன்றைய நிகழ்வுகளே
நாளைய சரித்திரம்

நேற்றை நினைவில் வைத்து
இன்று தரும் காக்காவும்

நாளைய உயர்வுக்கு
வழிகளை
இன்று தரும் காக்காவும்
எங்கள் கண்கள்!
---------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆமாம் செல்ல சீன்டலில் இந்த வெல்லபாகாய் நல்ல கவிதை பிறந்தது. இதை தனி பதிவாய் இடும் அளவிற்கு வளம் பொருந்தியிருக்கிறது. கவிவேந்தனின் வார்தைகள் மிகையல்ல எதார்த்தம்.ஆமாம் இக்காலம் போலிகளும், வேடங்களும் நிறைந்த காலம். அக்காலத்தில் இயற்கை இதயத்துடன் அது நின்றுவிட்டாலும் மனிதன் இறந்து போவான் !இன்றொ செயற்கை இதயம் பொருத்தும் காலம் மனிதாபிமானம் என்பதற்காக முதலிடம் கொடுத்து மருத்துவம் பார்த்த அக்காலம்.இன்றோ "முதல்"இடம் "பணம்" என்னும் பிணம் தின்னும் "முதல்"போடாத வியாபாரம்.
அக்காலம் "குருகுலம் "என்னும் குருவைத்தேடி போய் கல்வி கற்ற நற்காலம் .இக்காலம் காசுக்கு கல்வி எனும் கல்வியிலும் "மாசு"படிந்த காலம். இப்படி சொல்லிகொண்டே போகலாம். நெறியாளரே! கவிஞரிடம் மேலும் கேட்டு வாங்கி இதை தனிப்பதிவாய் இடவும் அழகா எல்லாம் சொல்லி வாழ்வை படம் பிடிப்பதில் அவர் வேந்தே!வேந்தே

sabeer.abushahruk said...

//என்.ஏ.எஸ் சாருக்காக‌ : முன்னாடி க‌ட்ட‌ வேண்டிய‌ டையை பின்னாடி யாரோ குசும்பா க‌ட்டி உட்டு இருக்கிறாங்க‌ உசாரா ஈந்துக்கிடுங்க‌ சார்//

ஹாஹாஹா. இதுக்காகத்தான் உங்களை ஆவலும் எதிர்பார்த்தோமாக்கும்.

என் ஏ எஸ் சார்: கண்ணாடியைக் கொஞ்சம் துடைச்சிக்கிட்டு சரியாப்பாருங்க. காளை என்று தப்பா எழுதினது லாஸ்ட் பெஞ்ச் ஹமீது, நானல்ல. என்னோட இன்ட்டெர்னல் மார்க்ல கையை வச்சிடாதிய.

sabeer.abushahruk said...

சரி, ச்சின்னதா ஓர் ஏற்புரை:

ஒரு விஷயத்தை நான் தெள்ளத்தெளிவாகத் தெரிந்துகொண்டேன். அது, நாகரிகமானவர்கள் நடமாடும் இந்த தளத்தில் எத்தனைதான் கலாய்த்தும் என்மேல் கோபம் யாருக்குமே வரவில்லை என்பதை கருத்தில் கொண்டால் உங்கள் எல்லோருக்கும் என்மீது உள்ள அன்பு உண்மையானது என்பதை அரிய முடிகிறது.

அம்மட்டிலும் என்மேல் காட்டும் உள்ளன்புக்கு என் சகோதரர்களே மிக்க நன்றியும் கடப்பாடும்.


வஸ்ஸலாம்.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//என் ஏ எஸ் சார்: கண்ணாடியைக் கொஞ்சம் துடைச்சிக்கிட்டு சரியாப்பாருங்க. காளை என்று தப்பா எழுதினது லாஸ்ட் பெஞ்ச் ஹமீது, நானல்ல. என்னோட இன்ட்டெர்னல் மார்க்ல கையை வச்சிடாதிய//

அப்போதான் அண்ணன் தமிழில் பின்னுட்டம் போடுவார்ன்னு காலை மாத்திப்போட்டேன்(சமாளிப்பு எப்புடி) இதுக்குபோய் கடைசி பெஞ்சில் போடலாமா ?

Unknown said...

சபீர் காக்கா வெயிட் பண்ணுங்க !
அதுக்குள்ளே ஏற்பு றை எல்லாம் கூடாது :)

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//சரி, ச்சின்னதா ஓர் ஏற்புரை://

இன்னும் மதுரையில் பாயா சாப்பிட்ட செய்திய போடமா அதுக்குள்ளே ஏற்புறைக்கு போன நாங்க ஒத்துக்க மாட்டோம்

ZAKIR HUSSAIN said...

//உங்கள் எல்லோருக்கும் என்மீது உள்ள அன்பு உண்மையானது//

நெஞ்செ நக்கிட்டீங்க பாஸ்!!

sabeer.abushahruk said...

//நெஞ்செ நக்கிட்டீங்க பாஸ்!!//

வன்ட்டார்பா. மஞ்சள் கலர்ல உடுப்பு போட்றத ராமராசனே உட்டாராம். நீ வுட்லயா? படிக்கட்டு அந்தப் பக்கம் இருக்கு ஜாகிர் அங்க்கிள் இந்தப் பக்கம் பார்க்கிறாங்களே ரிவர்ஸ்லேயேவா மாடிக்குப் போகப்போறாங்க என்று கேட்கும் பசங்களுக்கு நான் என்ன எடுத்து இயம்ப?

ஹமீது, உங்க இலையில் மட்டும் பாயா போட்ட ரியாஸ் இன்னும் வரலயே.

sabeer.abushahruk said...

ஒருத்தரும் மைக்கை வாய்க்கு முன்னால் பிடிக்காததால் ட்டைட்டில் கார்டில் ஆக்கத்திற்கு உருதுணையாயிருந்த அ.நி. ட்டீமுக்கு பிரத்யேக நன்றி சொல்ல மறந்திட்டேன்.

ஆக்ச்சுவலா இது ஒரு ட்டீம் எஃபோர்ட்தான். வைவாங்களோ என்று பயந்து சம்மந்தப்பட்டவங்க என்பேரை மட்டும் போட்டு பேருதவி புரிஞ்சி தப்பிச்சிட்டாங்க.

இந்த கான்செப்ட் தோன்றியதிலிருந்து உருவாகி முடியும் வரை, ஏறத்தாழ ஒரு வேலைநாளுக்கான என் சம்பளம் என் கம்ப்பெனிக்கு அட்டர் வேஸ்ட்.

முதல் சிரிப்பு அபு இபுறாகீமுடையது. நாலைந்து கேரக்ட்டர்களை மேலும் வளர்க்கச் சொல்லியும், சில பேருடைய டயலாக்கை மாற்றி அமைத்தும் தந்தது அவர்தான்.

தலைப்பு தந்து அசத்தியது தம்பி யாசிர்.


இந்த ஆக்கத்திற்கு கோரியோகிராஃபி (கொஞ்சம் ஓவராத்தான் போறமோ)அட்வைசர் அசத்தல் காக்கா ஜாகிர், அவனே சில டயலாக்கை மாற்றினான்.

மேலும் ஆட்களை இணைக்கச்சொன்னது ஹமீது

அப்ரூவல் தந்து சேஃப்ட்டி பின் வித்தது (ஊக்குவித்தது) அமீர் தாஜுதீன்.


இவர்களுக்கும் எனக்குக் கிடைத்த திட்டுகளை பகிர்ந்தளிக்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா:

1978ல் குதிரையில் கல்யாண மாப்பிள்ளையை ஏற்றி பேண்டு வாத்தியச் சத்தம் துவங்கியதும் குதிரை வாலைத் தூக்கி அடித்ததாமே !?

அப்போ கூட எங்க சின்ன மாமா கேமராவோடு அங்கே நின்றதாக ஞாபகம் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா : சித்திரம் பேசியதை சொல்லவே இல்லை !

sabeer.abushahruk said...

//இன்னும் மதுரையில் பாயா சாப்பிட்ட செய்திய போடமா அதுக்குள்ளே ஏற்புறைக்கு போன நாங்க ஒத்துக்க மாட்டோம்//

சொல்லாம விட்டால் ஜன்ம சாயல்பம் கிடைக்காததலால்...

என் நண்பன் பாலாவின் திருமணம் மருத பக்கம் ஒரு குக்கிராமத்தில் நடந்தது. "அவசியம் நீங்க எல்லோரும் வந்தே தீரனும்" என்று கூப்பிடும்போது தான் எவ்வளவு பெரிய கல்சர குரூப்பக் கூப்பிட்டு ரிஸ்க் எடுக்கிறோம் என்று அவருக்குத் தெரியாது. நான், ஹமீத், ரியாஸ் என்று ஒரு பெரிய பட்டாளமே ரெண்டு கார்ல போனோம். கிராமம் மிரண்டு போனதென்னவோ உண்மை.

சாப்பாட்டு வேளையில் குந்த வச்சி இலை போட்டு காக்க வச்சப்போ, வெளியிலே கட்டிக்கிடந்த கடாய் கனவுகளில் இருந்து எங்களுக்கு இடப்பட்டதோ சைவ சாப்பாடு. பசங்க மூஞ்சில ஈயாடல.

ஆனா, திடீர்னு ஹமீது, "என்ன எனக்கு மட்டும் ப்பாயா போட்டிருக்காங்க" என்று மலைக்க, குரோதத்தோடு அவர் இலையைப் பார்த்த் எங்களுக்கு வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத காமெடி காத்திருந்தது. அது...

நெருங்கி உட்கார்ந்து இருந்ததால ரியாஸின் கால் கட்டை விரல் ஹமீதின் இலையில் மனித ப்பாயாவாகக் கிடந்தது.

ஹமீதின் ட்டைமிங் ஜோக்கால் வயிறு ரொம்பிற்று.

போதுமா ஹமீது?

Noor Mohamed said...

//1978ல் குதிரையில் கல்யாண மாப்பிள்ளையை ஏற்றி பேண்டு வாத்தியச் சத்தம் துவங்கியதும் குதிரை வாலைத் தூக்கி அடித்ததாமே !?

அப்போ கூட எங்க சின்ன மாமா கேமராவோடு அங்கே நின்றதாக ஞாபகம் ! //

அட! அந்த கலியாணத்தில் அடுத்த நாள் அடை மழையும் பெய்ததே.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். எடிட்டராக்கா எங்க கோரிக்கையெல்லாம் எடுத்துகுவீங்களா? அதாங்க அந்த காலம் , இந்த காலம் பற்றிய கவிவேந்தரின் கவிதையைப்பற்றி!

sabeer.abushahruk said...

கிரவுன்,
வ அலைக்குமுஸ்ஸலாம்.
நலம் சிறக்க என் து ஆ!

அவங்கள்ட்ட "விலாசம்"னு ஒரு கவிதை கொடுத்து நாளாச்சு. வரிசையில் இருக்கு. அந்தளவு பதிவுகள் காத்திருக்கு. விழிப்புணர்வு தொடர்கள், மனநல தொடர், மார்க்க தொடர் என்று ஆக்கபூர்வமான பதிவுகளுக்கு இடையில் போட்டிபோட தெம்பு இல்லாமல் வெய்ட்டிங்.

இர்ஃபானின் துபாய் பற்றி ஒரு சிறப்பான பதிவும் ரெடியாயிட்டிருக்கு.

Ebrahim Ansari said...

//ஆக்ச்சுவலா இது ஒரு ட்டீம் எஃபோர்ட்தான். வைவாங்களோ என்று பயந்து சம்மந்தப்பட்டவங்க என்பேரை மட்டும் போட்டு பேருதவி புரிஞ்சி தப்பிச்சிட்டாங்க.//

அப்படியா? இது தனி ஆவர்த்தனம் இல்லையா? இப்படி கூட்டாமாக்கூடித்தான் கும்மி அடிச்சீங்களா?

பாவம் தம்பி சபீர் இவ்வளவு பெரும் சேர்ந்து உங்களை மாட்டி விட்டாங்களா? கண்ணைத்துடைச்சுக்குங்க! காலம் இருக்கு பார்த்துக்கலாம்.

அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Anonymous said...

//அஸ்ஸலாமு அலைக்கும். எடிட்டராக்கா எங்க கோரிக்கையெல்லாம் எடுத்துகுவீங்களா? அதாங்க அந்த காலம் , இந்த காலம் பற்றிய கவிவேந்தரின் கவிதையைப்பற்றி! ///

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

சகோதரர் கிரவ்ன் அவர்களுக்கு,

இதென்ன கேள்வி எதனை ஏற்காமல் விட்டுவிட்டோம் ? நிச்சயம் ஏற்கப்படும் இன்ஷா அல்லாஹ் !

"அந்தக்காலம் இந்தக்காலம்" பற்றிய கவிவேந்தரின் கவிதையைப் பற்றி ? - சிரமம் பாராமல் விளக்கமாக சொல்ல முடியுமா ?

Unknown said...

எடிட்ராக்காவை ( குறி ) வச்சு காமெடி பண்ணினது கலகல .....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//(முத‌ல் ப‌ட‌ம்) போப்பாண்ட‌வ‌ரே இங்கே க‌ருத்து சொல்ல‌ வ‌ந்தாச்சா? சொல்ல‌வே இல்லெ?????//

MSM(n): அதெப்படி கரெக்டா சொல்லிட்டிய !?

//எடிட்ராக்காவை ( குறி ) வச்சு காமெடி பண்ணினது கலகல .....//

தம்பி harmys: லேத் பட்டறை மேட்டரை வச்சுதானே சொல்றீய ! :)

இந்தப் பதிவின் நோக்கமே... "பிரசவ வலி எங்களோடது சிரிப்பு உங்களோடது" என்பதே !

இன்று(ம்) நிறைய தண்ணீர் குடித்தேன் அதிகமாக !

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

இன்று(ம்) நிறைய தண்ணீர் குடித்தேன் அதிகமாக !

மறுபடியும் முதலிளிருந்தா.....??????

crown said...

இடைச்சங்க காலத்தில்தான்
இதயத்தில் மனிதனுக்கு
ஈரமிருந்தது

வீரமிருந்தது வீரத்தோடு
விவேகமுமிருந்தது
பாசமிருந்தது நேசத்தோடு
பற்றுமிருந்தது

கூட்டுக்குடும்பெனும் குதூகலமிருந்தது
கூக்குறலில்லாத குலவலிருந்தது
கூகுளில் தேடத் தேவையில்லாத
கூட்டமிருந்தது

சிம்கார்ட் தேவையற்ற நல்
சிந்தை யிருந்தது

மொத்தத்தில் மனிதமிருந்தது
எனில்,
அக்காலத்தவர் என உஙகளை நான்
புகழ்ந்தேனா புனைந்தேனா?

நேற்றைய சரித்திரம்
இன்றைய வழிகாட்டல்
இன்றைய நிகழ்வுகளே
நாளைய சரித்திரம்

நேற்றை நினைவில் வைத்து
இன்று தரும் காக்காவும்

நாளைய உயர்வுக்கு
வழிகளை
இன்று தரும் காக்காவும்
எங்கள் கண்கள்!
---------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆமாம் செல்ல சீன்டலில் இந்த வெல்லபாகாய் நல்ல கவிதை பிறந்தது. இதை தனி பதிவாய் இடும் அளவிற்கு வளம் பொருந்தியிருக்கிறது. கவிவேந்தனின் வார்தைகள் மிகையல்ல எதார்த்தம்.ஆமாம் இக்காலம் போலிகளும், வேடங்களும் நிறைந்த காலம். அக்காலத்தில் இயற்கை இதயத்துடன் அது நின்றுவிட்டாலும் மனிதன் இறந்து போவான் !இன்றொ செயற்கை இதயம் பொருத்தும் காலம் மனிதாபிமானம் என்பதற்காக முதலிடம் கொடுத்து மருத்துவம் பார்த்த அக்காலம்.இன்றோ "முதல்"இடம் "பணம்" என்னும் பிணம் தின்னும் "முதல்"போடாத வியாபாரம்.
அக்காலம் "குருகுலம் "என்னும் குருவைத்தேடி போய் கல்வி கற்ற நற்காலம் .இக்காலம் காசுக்கு கல்வி எனும் கல்வியிலும் "மாசு"படிந்த காலம். இப்படி சொல்லிகொண்டே போகலாம். நெறியாளரே! கவிஞரிடம் மேலும் கேட்டு வாங்கி இதை தனிப்பதிவாய் இடவும் அழகா எல்லாம் சொல்லி வாழ்வை படம் பிடிப்பதில் அவர் வேந்தே!வேந்தே .
----------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சும்மா தமாசுக்கு என் கோரிக்கையெல்லாம் எடுபடுமான்னு கேட்டு வச்சேன். அதாவது மேற்கண்ட விசயமாகத்தான் குறிப்பிட்டேன். அந்த கால சமூக வாழ்கையும், இந்த கால சமூக வாழ்கையோடு ஒப்பிட்டு கவிவேந்தரிடம் கவிதை கறக்கவும்.....

அப்துல்மாலிக் said...

நாந்தான் லேட்டா, சாதிக்கிறது முக்கியம ஆனா இப்படி லேட்டாவந்தா என்னாதான் செய்றது

அருமையான தொகுப்பு காக்கா

நான் எடிட்டராக்காவிடம் அடிக்கடி சொல்வது இதுதான் “ஒரு பதிவர் மீட்டிங்க் அரேஞ்ச் செய்தா என்னா” நமக்குள்ளேயுள்ள புரிதல் இன்னும் ஸ்ட்ராங்க் ஆகுமே, கொஞ்சமா ஆறுதலடைந்தேன் அதை பதிவாக வெளியிட்டமைக்கு.. :):)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// ஜாகிர்: அப்ப நான் என்ன மணிமண்டபத்திற்கா “படிக்கட்டு”கிறேன்?//

மணிமண்டபத்திற்கும் இல்லை , மல்லிப்பட்டினம் கோபுரத்திற்கும் இல்லை. மனிதன் வாழ்க்கையில் வெளிச்சம் பெற படி கட்டுறிங்க என்பதை படிக்கட்டின் உச்சியில் உள்ள நிலைப்படியே ஆதாரமாக வானத்தின் வெளிச்சத்தை தருகிறது

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//ஹமீது, உங்க இலையில் மட்டும் பாயா போட்ட ரியாஸ் இன்னும் வரலயே//

அவரு பாயவே நான் திண்டு விட்டதால் நடந்துவர முடியவில்லை என நினைக்கின்றேன்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அதிரை நிருபர் தினமும் (பதிவாக) மலர்வதால் என்னுள் சின்னஞ்சிறு குழப்பம்
மலர்வது வாசனைக்காகவா?(பின்னுட்டம்) அல்லது அழகு தோற்றதிற்க்காகவா?(தெளிவுத்திறன்)

உயிருள்ளவரை
நம்மால்
நிறுத்தமுடியாத
விஷயம் ஒன்று
காற்றை சுவாசிப்பது..!

உயிர்போனபின்பும்
நிறுத்தமுடியாத
விஷயம் ஒன்று
(இந்த நிருபரில்) நிலைத்து நிற்கும் பின்னுட்டம்..!!!

Kuthub bin Jaleel said...

இந்த பின்னூட்டம் மேற்கண்ட தலைப்புக்கு பொருத்தம் இல்லையென்றாலும்; அதிகம் பேர் இங்கு வருகையளிப்பதாலும் எல்லாருக்கும் தத்தம் நலன்களை பேணுவதில் அக்கறை உண்டு என்பதாலும் மீண்டும் கீழ்கண்ட காணோளிகள் யாவற்றையும் பார்த்து பயன் பெற விரும்புகிறேன். http://anatomictherapy.org/Videos.html

Please don't jump into conclusions just by watching the Introduction-part-1 video alone. As you continue watching the videos you will come to know how knowledgeable the presenter is, although he sounds funny initially.

நம்மில் பல திறமையான சகோதரர்கள் உள்ளதால் யாராவது ஒருவர் மேற்கண்ட காணோளிகளில் உள்ளவற்றை "உடல் ஆரோக்கியம் - செலவில்லாமல்" என்ற தலைப்பில் எழுத வேண்டுகிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதிகம் பேர் இங்கு வருகையளிப்பதாலும் எல்லாருக்கும் தத்தம் நலன்களை பேணுவதில் அக்கறை உண்டு என்பதாலும் மீண்டும் கீழ்கண்ட காணோளிகள் யாவற்றையும் பார்த்து பயன் பெற விரும்புகிறேன். http://anatomictherapy.org/Videos.html//

குதுப் காக்கா, நேற்று உங்களின் பின்னுட்டத்தை பார்த்ததிலிருந்து அதான் வேலையே அவர்கூடத்தான் இருந்தோம் இவ்வ்வ்வ்ளோ நேரம்... இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு இதேபோல் சைலண்டா ஃபேமிலியோட உட்கார்ந்து வேற பார்த்திருக்காங்க நேற்று.... !

பதிவுதானே... வரும் பாருங்கள் !

அதிரைக்காரன் said...

மீட்டிங்கில் கலந்து கொண்டவர்கள் பலரும் பின்ஸ் போட்டிருக்காங்க. நானும் பின்ஸ் போடாவிட்டால் நியூகாலேஜ் கழிசடைகளில் நானும் ஒருவனில்லை என்று யாராவது பிரச்சினை பண்ணக்கூடும்.:)

N.ஜமாலுதீன்

sabeer.abushahruk said...

வாங்க அதிரைக்காரன்,
(ப்ளாக்லெயெல்லாம் ஏன் இப்படி "வாங்க" என்று சொல்லியே பதிலுரைக்கிறார்கள்?)

புதுக்கல்லூரியில் படிக்கும்போது ஒருமுறை இரண்டாம் ஆட்டம் ச்சார்ல்ஸ் ப்ரான்ஸன் படம் பார்த்துட்டு நானும் ஜாகிரும் மெளன்ட் ரோடிலிருந்து ராயப்பேட்டை வந்துகொண்டிருந்தோம். ட்யர்டா இருந்ததால் ரிக்‌ஷா (கவனிக்க: ஆட்டோரிக்‌ஷா அல்ல)பிடிச்சு போய்டலாம்னு எனக்குத் தோன்ற ரிக்‌ஷாக்காரன் ஒருவனை நிறுத்தி வாடகைக்கு அமர்த்திக்கொண்டோம்.

திடீர்னு என்ன நினச்சானோ நம்ம அசத்தல் காக்கா ஜாகிர். சட்டென இறங்கி ரிக்‌ஷாக்காரனை பாஸெஞ்சர்மாதிரி உட்கார வச்சி ரிக்‌ஷா மிதிக்க ஆரம்பிச்சிட்டான். அவன் அப்பவும் சைக்கிள் கம்பி சைசில்தான் இருப்பானா இவன் எப்படிடா மிதிக்கிறான் என்று ஆச்சரியம்.

கடலோரம் வாங்கிய காற்றுன்னு அவன மிதிக்கிற அழகில் எம் சி யாரையேப் பார்த்தேன்.

நியூ காலேஜில் படித்தால்தான் இந்த குசும்புல்லாம் வரும்

sabeer.abushahruk said...

சச்சினோட நூறாவது சதத்தைப்போல இது இந்த இழு இழுக்குதே யாராவது வின்னிங் ரன்னை அடிங்கலேம்பா

Ahamed irshad said...

ஒரு விஐபி’யை கடைசியில் தள்ளியதைக் கண்டித்து இந்தியா தோத்த மேட்ச மறுபடியும் பார்க்கப்போறேன்...

Ebrahim Ansari said...

This is fully qualified for a Century. Congrats to A.N.Team.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இ.அ. காக்கா :

இதனை பார்த்த ஞாபகம் உண்டா ?


http://adirainirubar.blogspot.com/2011/02/blog-post_9382.html

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஒரு விஐபி’யை கடைசியில் தள்ளியதைக் கண்டித்து இந்தியா தோத்த மேட்ச மறுபடியும் பார்க்கப்போறேன்...//

தம்பி இர்ஷாத் : மின்னஞ்சலில் வழி என்று ரூட்டு போட்டுடாதீங்கள் எங்கோ கேட்ட குரலும் ஞாபகத்திற்கு வந்திடுச்ச் ! :)

Noor Mohamed said...

கவியன்பன் கலாம் உம்ரா முடித்து இன்று இரவு அபுதாபிக்கு திரும்பி விட்டார். அவர் வந்ததும் வாய்ப்பாடு இதில் பாக்கியிருக்குமென எண்ணுகிறேன்.

ZAEISA said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

//இ.அ. காக்கா :

இதனை பார்த்த ஞாபகம் உண்டா ?


http://adirainirubar.blogspot.com/2011/02/blog-post_9382.html //

தம்பி அபூ இப்ராஹீம் ! பார்த்த ஞாபகம் இல்லை. காரணம் பார்க்கவே இல்லை. இரண்டாயிரத்து பதினொன்று பிப்ரவரியில் நான் அதிரை நிருபருக்கு அந்நியன். வேறு சில தளங்களில் விளையாடிக்கொண்டு இருந்தேன். மருமகன் யாசிர்தான் கையை தர தர என்று இழுத்துக்கொண்டு வந்து உங்கள் கையில் என்னை ஒப்படைத்து இருக்கிறார். கண்கலங்காமல் காப்பாற்றும்படி. நீங்களும் காப்பாற்றி வருகிறீர்கள். வாழ்வில் நான் இழந்த பலவற்றுள் முன்னரே அ.நி. தொடர்பில்லாமல் போனதும் ஒன்று என இன்று உணர்கிறேன். அல்லாஹ் கரீம்.

Ebrahim Ansari said...

தம்பி அபூ இப்ராஹீம்!

இப்போது பார்த்தேன். படித்தேன்.
முன்னரே தொடர்பு இருந்து இருந்தால் எனக்கும் இரண்டு வரிகள் கவிக்கடலின் மூலம் கிடைத்திருக்குமே என்ற ஒரு ஆதங்கம் ஏற்பட்டது.
இது ஒரு பாடல் பெற களம. வாழ்த்துக்கள்.

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//நம்ம அசத்தல் காக்கா ஜாகிர். சட்டென இறங்கி ரிக்‌ஷாக்காரனை பாஸெஞ்சர்மாதிரி உட்கார வச்சி ரிக்‌ஷா மிதிக்க ஆரம்பிச்சிட்டான்//

ரிக்சாவை கவுக்காதவரை சந்தோசம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு