ஒரு மாலைப் பொழுது ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2012 | , , , , ,



ஓடி விளையாடு வாப்பா
ஒளிந்து விளையாடாதே வாப்பா !

கூடி விளையாடு வாப்பா
கூவி விளையாடாதே வாப்பா !

ஆரோக்கியம் தேடியாடு வாப்பா
அவசரத்தில் ஓடியாடாதே வாப்பா !

மாலை க்காக காத்திரு வாப்பா
மாலை தவறி மாற்றிடாதே வாப்பா !

காணவந்த கார்மேகம்
கனமழைப் பொழியுமுன்
வீட்டுக்கு
ஓடி வந்திடு வாப்பா

இடியிடிக்கும் பயம்போக
எனை
இருக்கி அனைத்திடு வாப்பா

மின்னல் வெட்டி
மின்வெட்டு வருமுன்
மெழுகுவர்த்தி ஏற்று வாப்பா

மெல்லிய வெளிச்சத்தில்
கொஞ்ச நேரம்
மழையை ரசிப்போம் வாப்பா

இப்படிக்கு,
விளையாட இடம் தேடும்!
குழந்தை… !

பட்டைதீட்டிய வரிகள் : அபுசாரூக்
எட்டிப் பிடித்த வரிகள் : அபுஇறாஹிம்
புகைப்படம் : அபுமஹ்மூத்

மாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (2) 11

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2012 | , , , ,

கடந்த அத்தியாயத்தில் மாட்டுக்கறி உணவாக சாப்பிடப்படுவது வேதகாலம்தொட்டு பரவலாக இருந்த பழக்கம்தான் என்பதையும், இந்த உணவுப் பழக்கம் மத ரீதியான சடங்குகளிலும், மரியாதை நிமித்தமாகவும் மேற்கொள்ளப்பட்டன என்பதையும், விவேகானந்தர் போன்ற மகான்கள்  என்று  போற்றப்பட்டோரும் இதனை ஏற்றுக் கொண்டும்  குறிப்பிட்டும் இருககிறார்கள் என்பதையும் ஆதாரங்களுடன் பார்த்தோம். அப்படி இருந்த மாட்டுக்கறி பின்னர் ஏன் இப்படியானது? ஒரு உணவுப் பதார்த்தத்துக்கு  எப்படி மத சாயம் பூசப்பட்டது? என்பதை இப்போது காணலாம். 

முன் அத்தியாயத்தில் பார்த்தபடி வேதகாலத்தில் பசுக்கள் கொல்லப்பட்டாலும் ,        உண்ணப்பட்டாலும் அதில் ஒரு விதிவிலக்கு இருந்திருக்கிறது. அதாவது அந்தப் பசுக்களில் கூட “அக்ஞா” என்று அழைக்கப்பட்ட பசுக்கள் இருந்திருக்கின்றன.  “அக்ஞா” என்ற சொல்லுக்கு கொல்லத் தகாதவை என்று அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. இந்த கொல்லத் தகாத பசுக்கள் எவை என்றால் அவை ஒரு பிராமணருக்கு, ஒரு பலி நடத்திய பிறகு தட்சணையாக- கூலியாக – உயிருடன் கொடுக்கப்படும் பசுக்களாகும். அதாவது ஒரு பிராமணருக்கு கூலியாக கிடைத்த பசு மட்டுமே புனிதமானது அது கொல்லப்படக்கூடாதது; உண்ணப்படக்கூடாதது. இந்த புனிதப்பசுவின் அரிச்சுவடி இப்படித்தான் ஆரம்பிக்கிறது. 

அத்துடன் புத்த, சமண மதங்கள் தோன்றி வளரும்போது பொதுவாக விலங்குகளை வதை செய்வது, அறுப்பது, உண்பது வெறுக்கப்பட காரணமானது. உயிர்  வதைக்கு பொதுவான கருத்து விதைக்கப்பட்டது. அதில் கூட பசுவுக்கு என்று தனியான அந்தஸ்து பிரச்சாரப்படுத்தப்படவில்லை. பிற உயிர்களைக் கொல்லாதே என்கிற பொதுப்பிரிவில்தான் வந்தன. ஆகவே வன்முறைக்கு எதிரான  முறைகளை உபநிடதக் கொள்கைகள் வலியுறுத்தியதித்தத் தொடர்ந்தும்,  புத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சி,  வைணவத்தின் மையக்கருத்து ஆகியன தாம் விலங்குகளைக் கொல்லாமையை உறுதிப்படுத்தின. 

ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் இந்திய சமூகம் நில பிரபுத்துவம், ஜமீன்தார் முறை போன்றவற்றிற்கு மெல்ல மாறத்தொடங்கிய சூழல் வளர்ந்தபோது பசு புனிதமானது என்கிற தத்துவமும் வளர்த்தெடுக்கப்படத்தொடங்கியது.  நிலப்பிரபுத்துவம், குறு நில மன்னர்கள் என்கிற அமைப்புகள் மலரத்தொடங்கியபோது சில சட்டங்கள், சம்பிரதாயங்கள் அரசமைப்பில் உருவாக்கப்பட்டன. அந்தப் பணிகளில் ஆளுமை செலுத்திய பிராமணர்கள், மாட்டிறைச்சி தின்பதை தடுத்து நிறுத்த சட்டமாக்க அரசர்களுக்கு ஆலோசனை சொன்னார்கள். இதற்கு காரணம் மாடுகள் பெருமளவில் விவசாயத்துக்கு பயன்படவேண்டும் – உணவுக்காக அழிக்கப்படக்கூடாது என்பதே. அதோடு கூடவே அரசவைய்ல் வேலை செய்துவந்த பிராமணர்களுக்கு பெருமளவில் பசுக்களே தானமாக வழங்கப்பட்டன. அவை புனிதப்பசுக்களாக நடத்தப்பட்டன. வேளாண்மைச் சமூகத்திலும்  பசுக்களின் பொருளியல் மதிப்பு அந்நிலையை முதன்மைப்படுத்தின. அத்துடன் பசுக்களின் பாலும் உணவாகப் பயன்பட்டதும், பாலைத்தொடர்ந்த அதன் சார்பு உணவுகளான தயிர், வெண்ணெய், நெய் போன்றவைகளுக்கும் பஞ்சம் வரக்கூடாது என்கிற எண்ணத்திலும் அவைகளைத்தருகிற பசுக்களுக்கு, விலங்குகளுக்கு மத்தியில் ஒரு வி.ஐ. பி அந்தஸ்து தரப்பட்டது. 

தாயைப்போல பால் தருவதால் பசு இப்படி கோ மாதா என் குல  மாதா என்று கொண்டாடப்பட்டது. “ பாதிப்புள்ளே பொழைக்குதப்பா பசும்பாலைத் தாய்ப்பாலா நம்பி” என்று அந்தக்காலத்திலேயே இருந்ததிருக்கும் போலத்தோன்றுகிறது. இந்த அடிப்படையில் சட்டத்தில் ஏற்பட்ட நடைமுறைகளுக்கு  'கலிவர்ஞா' என்று பெயர். இந்த முறைப்படி , முன் நடந்த முறைகள் மாற்றப்பட்டன பசுவைக் கொல்வது தவறு என்று பார்ப்பன கருத்துக்கள் பிரச்சாரமாய் பரவத்தொடங்கின. 

அத்துடன் மக்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்த வேதங்கள் உயர்ந்தொரையும் , தாழ்ந்தோரையும்  வேறுபடுத்திப்பார்க்க கையில் எடுத்த ஒரு ஆயுதமாகவும் மாட்டிறைச்சி இருந்தது. மாட்டிறைச்சி தின்போர் புலையர் என்றும், சூத்திரன் என்றும், தாழ்த்தப்பட்டோன் என்றும் முத்திரை குத்தப்பட்டனர். சுருக்கமாக ,  பெற்ற  தாய்க்கு சமமாக  பால் தரும் பசுவை    அறுத்து புசிப்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று தாழ்த்தப்பட்டோரை தரம் பிரிக்கவும் புனிதப்பசு கருவியாயிற்று.  

இந்தியாவை பல்வேறு காலங்களில் ஆண்ட வெவ்வேறு ஆட்சியாளர்களாலும்  பசு அரசியல் கருவியாக்கப்பட்டது. “இவன் ரெம்ப நல்லவண்டா” என்று மற்றவர்களால்     மதிக்கப் படவேண்டுமேன்று எண்ணிய அரசர்கள் தங்களின் கைகளில் குத்திக்கொண்ட அக்மார்க் முத்திரை இந்த  புனிதபசு கொள்கை. இதற்கு இந்த அரசர்களை தூண்டியவர்கள்      அரசவைகளில் திவான்களாகவும் ,ராஜ ரிஷிகளாகவும் நிழல் நிர்வாகம் செய்த பிராமணர்களே. இந்த சூழ்ச்சிக்கு  மொகலாய மன்னர்களும் தப்பவில்லை.  

சமணர்களையும் பார்ப்பனர்களையும் மதிக்கும் பொருட்டு நல்லெண்ணத்தை பறைசாற்றும்  வகையில்  பசுக்களைக் கொல்வதற்கு மொகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர், ஜஹாங்கீர், ஒளரங்கசீபு ஆகியோர் தடை விதித்தனர்.  'நாம் இந்துக்கள் இம்மண்ணின் மைந்தர்களாகிய நாம் பசுக்களைக் கொல்வதோ அதன் வழி பார்ப்பனர்களை ஒடுக்குவதோ கூடாது' என்று பசுக்களையும் பார்ப்பனர்களையும் காப்பாற்ற வந்த அவதாரமாகக் கருதப்படும் மாமன்னர் சிவாஜி பறைசாற்றியிருக்கிறார்.

'சிக் குகா' அல்லது 'நாம்தாரி' என்னும் பெயரில் 1870-களில் பஞ்சாப்பில் தொடங்கப்பட்ட 'இந்து பசுப் பாதுகாப்புப் படை' தான் முதலில் பசுக்களை அரசியல் கருவியாக்கியது; அவர்களுடைய இக்கருத்தியல் பின்னர் தயானந்த சரஸ்வதி அவர்களால் 1882-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'முதல் கோரக்கினி சபை'யால் வலுப்படுத்தப்பட்டது. இவ்வமைப்புத் தான் குறிப்பிட்ட பிரிவு மக்களின் சின்னமாகப் பசுவை அடையாளப்படுத்தியது. 

மேலும் சுவாமி தயானந்த சரஸ்வதி , ஆரிய சமாஜ் என்கிற ஒரு இயக்கத்தை தோற்றுவித்து பசுவின் புனிதம் பற்றி நாடெங்கும் பரவலாக ஒரு இயக்கம் நடத்தினார். ஆரிய சமாஜம் என்பது வேறு பல நல்ல கருத்துக்களையும்  மக்களிடம் பிரச்சாரம் செய்தது. அவற்றுள் சில சிலை வணக்கம் ஒழிக்கப்படவேண்டும், குழந்தை மணம் தடுக்கப்பட வேண்டும், விதவை மணம் ஊக்குவிக்கப்பட வேண்டும், பிறப்பிலேயே மனுநீதியால் விதிக்கப்பட்ட சாதிப் பாகுபாடுகள் அகற்றப்பட வேண்டும் ஆகியனவாகும். இத்துடன் பசுவை போற்றவேண்டும் என்கிற கருத்தும் சுவாமி தயானந்த சரச்வதியால் போதிக்கப்பட்டது. உயர் சாதியினர் இந்த சுவாமி தயானந்தா சரஸ்வதி போதித்த ஏனைய கருத்துக்களை வசதியாக புறக்கணித்துவிட்டு பசுவைப் போற்றவேண்டும், போஷிக்க வேண்டும் என்கிற கருத்தை  மட்டும் பிடித்து தொங்கினர்.  

மாடுகளின் ,  அதிகஅளவு எடை கொண்ட  மாமிச கறி  அளவினை உத்தேசித்தும், விலை குறைவாக கிடைப்பதை உத்தேசித்தும், அன்றாட உணவுக்கும்,  பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் அவர்களின் மார்க்க நம்பிக்கையான பலி இடுவதற்கும் ஏழைகளுக்கு தானம் செய்வதற்கும்  முஸ்லீம்கள் , மாடுகளை அதிக அளவில் வாங்கத்தொடங்கியபோது சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிரச்சாரத்தால்  மாட்டுக்கறி உண்ணும  முஸ்லிம்களை  நோக்கி , அதியே காரணமாக்கி  1880-களிலும் 1890-களிலும் கலவரங்களை ஏற்படுத்தினார்கள். 

இவ்வாறு பசுவதை என்பது செய்யக்கூடாதது- பசுபுனிதமானது என்றெல்லாம்  கடும் பிரச்சாரம் நிகழ்ந்தாலும் ,  1888-ம் ஆண்டில் வடமேற்கு மாகாண உயர் நீதிமன்றம், 'பசு புனிதமான பொருள் அல்ல  என்று  தீர்ப்பு அளித்தது. இது  அவர்களுடைய வேகத்தை மட்டுப்படுத்தியது.; ஆனால் கோபத்தை அதிகப்படுத்தியது. நீதிமன்றத்தில் மூக்குடைந்தவர்கள் காவி உடையணிந்து தடி எடுக்க ஆரம்பித்தனர். இந்து – முஸ்லீம்களுக்கிடையில் ஏற்பட்ட பல கலவரங்களுக்கு பசுவே கருப்பொருள் ஆனது.  கோ மாதா கொல்லப்படுகிறாள் என்று உணர்ச்சியை தூண்டிவிட்டார்கள். 

1893-ம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தின் அஜாம்கர் மாவட்டத்தில் கலவரம் நடந்தது. அக்கலவரத்தால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 1912-13-ல் அயோத்தியாவில் கலவரம் மூண்டது. 1917-ல் ஷாகாபாத்தில் பெரிய கலவரம் மூண்டது. பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்; அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. 

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும்  பல துன்பமான நிகழ்வுகள் பசுவின் பொருட்டால் நடைபெற்றன.  பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று 1966-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள மதவாத அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியைப் பாராளுமன்றம் முன்பு நடத்தின. அப்போது மூண்ட கலவரத்தில் எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். காந்தியடிகளின் ஆன்மீக வாரிசாகக் கருதப்படும் ஆச்சாரிய வினோபா பாவே பசுவதையைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1979-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உண்ணாவிரத  போராட்டம் நடத்தினார். இப்படியாகப் பசு அரசியல் கருவியானது.

பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று சொன்ன ஆதிக்க சாதி அமைப்புகள் எவையும் 'பசுவைக் கொல்லக்கூடாது என்று வேதங்களிலோ பார்ப்பன எழுத்துகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை' என்பதையும் 'காலாகாலமாகப் பசு தின்னப்பட்டு வந்திருக்கிறது' என்பதையோ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

இதனால் -

உண்ண உணவின்றி அவதிப்படும் ஏழை மனிதனை பற்றி கவலைப்படாமல் மாட்டைப்பற்றி கவலைப்பட்டோர்-

மாட்டுக்கறியை உண்ணக்கூடாது ஆனால் மாட்டு  மூத்திரத்தை குடிக்கலாம், வீட்டிலும், உடைகளிலும், உச்சந்தலைகளிலும்  தெளித்துக்கொள்ளலாம் என்றும் ஒவ்வாத  சாத்திரம் பேசியோர்-

பைபிளில் கூட ஆதம் -  ஏவாளுக்கு எல்லாவற்றையும் படைத்து அனுபவிக்கக் கொடுத்த இறைவன் ஒரு பழத்தைக் காட்டி சுவைக்கக்கூடாது என்று  தடுத்த கதை இருக்கிறது. ஆனால் எந்த நான்கு வேதங்களிலும் , உபநிதங்களிலும் மாட்டை அறுப்பதும்  புசிப்பதும்  தடுக்கப்படவில்லையே என்று சிந்திக்காதோர்-

மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் கூட பசு அவதாரம் எடுத்ததாக குறிப்பிடப்படவில்லையே - பன்றி  அவதாரம்கூட எடுத்தார்- நரகலை தின்னும் பன்றிக்கு வேதங்கள் கொடுத்த மதிப்புக்கூட பசுக்கு கொடுக்கவில்லையே அதை ஏன்           புனிதமாக்கவேண்டுமென்று என்று யோசிக்க அறிவுபூர்வமாக மறுத்தோர்-  

ஆள் திரட்டுவதற்கும், அரசியல் நடத்துவதற்கும் பசு மாட்டை பயன்படுத்த ஆரம்பித்தனர். அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கெதிராக பாவப்பட்ட பசுவை புனிதமாக்கி, பசுவின் பெயரால் நாட்டில் பல வன்முறை கலவரங்களை நடத்தினர்.  

அடுத்த அத்தியாயத்தில் நிறைவுறும்.
இபுராஹீம் அன்சாரி


உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2012 | , , ,


"சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த ஓர் அப்பாவி நபரையும் பிடித்து பயங்கரவாதி / தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்காதீர்" என்று நேற்று உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பில் குஜராத் போலீஸ்க்கு ஓங்கி நச்சென மண்டையில் குட்டும் விதமாக, இந்த நெத்தியடி கருத்தினை கூறியது.  குஜராத்துக்கு மட்டுமல்ல... இது அனைத்து மாநில அரசு , காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கும் சேர்த்தே பொருந்தும்..!

'எந்த ஓர் அப்பாவி முஸ்லிமும் "என் பெயர் கான், ஆனால், நான் ஒரு பயங்கரவாதி இல்லை," என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாத ஓர் உறுதியான சூழலை காவல்துறை உருவாக்க வேண்டும்' என்றும் நீதிபதிகள் H.L. Dattu  மற்றும் C.K. Prasad அடங்கிய உச்சநீதி மன்ற பெஞ்ச் நேற்று தனது அதிரடி தீர்ப்பில் நெத்தியடியாக இப்படி கூறியது.  அடி சக்கை..! அப்படி போடு..!

( No innocent person should be branded a terrorist and put behind bars simply because he belongs to a minority community, the Supreme Court has told the Gujarat Police. Police must ensure that no innocent person has the feeling of sufferance only because “my name is Khan, but I am not a terrorist,” a Bench of Justices H.L. Dattu and C.K. Prasad said on Wednesday. )

வழக்கில் இருந்த பொய்யான ஜோடிப்பு புனைவுக்கதைகளை கண்டு எத்தனை தூரம் நொந்து போயிருந்தால் இப்படியெல்லாம் கூறி இருந்திருப்பார்கள் அந்த நேர்மை மிகுந்த நீதிபதிகள்..!? சிந்திக்கவும் சகோஸ்..! அவர்களின் மனிதநேய வரிகளுக்கு வாழ்த்துகளுடன் நமது நன்றிகள் பல உரித்தாகுக..!

வேண்டுமென்றே பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி, 1994 இல் தடா சட்டத்தில் பிடித்த 11 முஸ்லிம்களை 'குற்றமற்ற நிரபராதிகள்' என்று கூறி விடுதலை செய்துவிட்டுத்தான், குஜராத் போலிசை அத்தீர்ப்பில் இப்படி ஒரு 'நெத்திஅடி' அடித்து உள்ளது உச்ச நீதி மன்றம்..! வாறே...வா...!

"1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் ஹிந்துக்கள் நடத்திய ஜஹன்னாத பூரி யாத்திரையின் போது மதக்கலவரத்தை நடத்த சதித்திட்டம் தீட்டினார்கள் இவர்கள்" என்று கூறி, அப்போதைய காங்கிரஸின் குஜராத் முதல்வர் - சபில்தாஸ் மேத்தா ஆட்சில், 11 அப்பாவி முஸ்லிம்கள் மீது 'தடா' சட்டத்தில் பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

அப்போது, தமிழ்நாட்டில் ஜெ. முதல்வராக இருந்தபோதும் இப்படியான அராஜகம் தமிழக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதை அறிவோம். பாபர் மஸ்ஜிதை ஹிந்துத்துவாக்கள்  இடிக்கும்போது வேடிக்கை பார்த்த ஆர் எஸ் எஸ் தொடர்புடைய நரசிம்ம ராவ் ஆண்ட காலத்து காங்கிரசும், பாஜகவுக்கு சற்றும் சளைத்தது இல்லை என்பதையும் அறிவோம்.

பின்னர் வந்த பாஜகவின் நர்ர்ர்ர்ரேந்திர மோடியின் ஆட்சியில், 2002, ஜனவரி 31-ஆம் தேதி அஹ்மதாபாத் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு... (ஏற்கனவே எட்டு ஆண்டுகள் ஜாமீன் இல்லாத தடாவில் சிறையில் இருந்தவர்களுக்கு) ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

எவ்வித ஆதாரமும் இன்றி தண்டனை பெற்றதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர், அந்த 11 அப்பாவி முஸ்லிம்கள்..! வழக்கில் தண்டிக்கப்பட்ட இவர்கள் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இதில், பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் கைது, மற்றும் 1994 ஆம் ஆண்டு அகமதாபாத் ஜெகன்னாத் பூரி யாத்திரை போது வகுப்புவாத வன்முறை உருவாக்க திட்டம், ஆயுதங்கள் வைத்து இருந்தது,  போன்ற அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் 11 முஸ்லிம்களையும் விடுவிக்க உச்ச நீதி மன்ற பெஞ்ச் நேற்று உத்தரவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.      

மேலும் அத்தீர்ப்பில்.... 

சட்டத்தை அமல்படுத்த நியமிக்கப்பட்ட போலீஸ் சூப்பிரண்டும், ஐ.ஜி உள்ளிட்ட இதர அதிகாரிகளும் அதனை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. 'பிறந்த மதத்தின் பெயரால் கொடுமை இழைக்கப்படுகிறோம்' என்று எந்த ஒரு அப்பாவிக்கும் தோன்றக்கூடாது. இதனை சட்டத்தின் பாதுகாவலர்கள் உறுதிச்செய்ய வேண்டும்.  இதனை கூறுகையில்தான், ‘my name is Khan, but I am not a terrorist’ என்ற ஒரு திரைப்பட வசனத்தை சுட்டிக்காட்டினர், நீதிபதிகள்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு தண்டனையை இன்னும் அதிகப்படுத்த கோரும்... (அட... சண்டாளர்களா...) குஜராத் மாநில அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது, அத்தீர்பில்..! 

எஃப்.ஐ.ஆர் சமர்ப்பிக்கும் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அனுமதியை பெறவேண்டும் என்ற தடாச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்டப் பிரிவை அரசு கடைப்பிடிக்கவில்லை என்று நீதிமன்றம் குற்றம் தெரிவித்தது.

'தடா சட்டத்தை சுமத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை பேணாததால் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த தீர்ப்பு, காவல் துறையின் இதுபோன்ற தவறுகள், இப்படி 'மகாத்மா நாட்டில், தவறாக சட்டம் கையாளப்படுகிறது' என்று பிரச்சாரம் செய்ய நம் எதிரி நாடுகளுக்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இதன் மூலம் அவர்களால் இச்சட்டம் சிறுபான்மையோர் மீது துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, சட்டத்தை பிரயோகிக்கும் பொழுது தனி நபரின் சுதந்திரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும்' என்றும் கூறியது.

தீவிரவாதத்தை தடுப்பதிலும், அதிகமான மக்கள் பலியாகக்கூடாது என்பதில் போலீசாரின் உறுதி பாராட்டத்தக்கதுதான். என்றாலும், இவ்வழக்கில் ஆயுதங்களும், வெடிப்பொருட்களையும் கண்டுபிடிக்க புலனாய்வு ஏஜன்சிகளால் இயலவில்லை. இவ்வாறு உச்சநீதிமன்றம் தனது சிறப்பான தீர்ப்பில் கூறியது.

என்னால்  பொருளுணர்ந்தும் அதேபோல சிறப்பாக தமிழில் மொழி பெயர்க்க முடியாத அத்தீர்ப்பின் ஒரு சிறப்பான பகுதி இது : “We emphasise and deem it necessary to repeat that the gravity of the evil to the community from terrorism can never furnish an adequate reason for invading personal liberty, except in accordance with the procedure established by the Constitution and the law,” the Bench said. (சுவை கெடாமல் ஆங்கிலத்திலேயே படியுங்கள்)

நன்றி : உச்சநீதி மன்றம்

இந்திய தேசத்தின் நீதி-சட்டம் மீதான அன்பை-நம்பிக்கையை அவ்வப்போது  வலுக்க செய்வதாக இந்த தீர்ப்பு, மகிழ்வோடு வரவேற்கத்தக்க வகையில் அமைந்து இருக்கின்றது. 

இருப்பினும், ஒவ்வொரு முறையும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் பல்லாண்டுகள் சொல்லொனாத்துயறுற்று,  பின்னர் "குற்றம் யாதுமற்ற நிரபாராதிகள்" என்று உச்சநீதிமன்றாத்தால் அப்பாவிகள் விடுவிக்கப்படும் ஓவ்வொரு முறையும்... நமது மனதினில்... ரணமாகி இருக்கும் அதே பழைய கேள்விகள்... எவரும் எந்த நீதியும் கண்டுகொள்ளாத அரதப்பழைய அதே கேள்விகள்...

கடந்த 18 ஆண்டுகளாக, பொய் குற்றச்சாட்டுக்காக தங்கள் வாழ்வை சிறையிலும், நீதிமன்ற வளாகத்திலும், இவற்றுக்கு இடையே பூட்டப்பட்ட வாகனத்திலும் கழித்த இந்த அப்பாவிகள் இழந்த வாழ்க்கையினை எப்படி அவர்களிடம் திரும்பக்கொடுப்பது..? யார் கொடுப்பது..? எவ்வளவு இழப்பீடு..? எங்கே இழப்பீடு..? கோடி கோடி இழப்பீடு தந்தாலும்... அவர்களின் இளமையை மீண்டும் எப்படி மீட்டுத்தருவது..?
:-(
 'Justice delayed is justice denied'

....என்று  ஒரு ஆங்கில பழமொழி உள்ளது, தெரியுமா..?
-----------------------------------------------------------------------------------------------------------
நிறைய  பேரால் ஏனோ முக்கியத்துவம் அளிக்கப்படாத இச்செய்தியை தந்தமைக்கு மிக்க நன்றி  'தி ஹிந்து' :-


முன்னணி தமிழ் செய்தி தளங்களால் வழக்கம்போல இருட்டடிப்பு செய்யப்படும் செய்திகளை, தொடர்ந்து தமிழில் தந்து கொண்டு இருக்கும் 'தூது'க்கும் மிக்க நன்றி.


நன்றி : முஹம்மத் ஆசிக்_citizen of the world
[http://pinnoottavaathi.blogspot.com/2012/09/supreme-court_27.html]

இருதய சிகிச்சைக்காக உதவி நாடி… 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2012 | , , , , ,


இதயம் என்றொரு பதமெடுத்து உணர்வுகளை காட்டவில்லையென்றால் இரக்கமற்றவன் என்று பின்னுக்குத் தள்ளப்படும் மனிதம், அதே இதயத்தை கருவாகக் கொண்டு காவியம் படைக்கிறான், கவிதை புனைகிறான், காதல், கோபம் கொள்கிறான, அது மட்டுமா மன்னிக்கவும் செய்கிறான்.

இங்கே, உதவி நாடி வேண்டுகோள் வைத்திருக்கும் நபரின் தற்போதைய உடல் ஆரோக்கியமும் அவரின் உருக்கமான வேண்டுகோளும் வாசகர்கள் முன்னால் வைக்க வேண்டிக் கொண்டதனால் இங்கே பதிகிறோம்.


படைத்தவனின் திருப் பொருத்தத்தை நாடி இயன்ற உதவிகளை அவருக்கென்று இருக்கும் வங்கி கணக்கிலோ அல்லது நேரடியாகவோ வழங்க வேண்டுகிறார்.

Bank name: India Bank, Account number: 6068577000, account holder name: K. Shahul Hameed (Mobile No. : +91 8220351291), இருப்பிடம்: கடற்கரை தெரு ஜமாத்திற்கு உட்பட்ட ஏறிப்புரக்கரையில் உள்ள குப்பம்.





குறிப்பு : அதிரைநிருபர் வலைத்தளம் நிதி உதவியென்று நேரடியாக எவ்வகை பரிந்துரையோ அல்லது நித்யுதவி வேண்டி வரும் வேண்டுகோளை பதிவதில்லை என்ற நிலைபாட்டில் தெளிவாக இருக்கிறது. இந்த வேண்டுகோளை வைத்த சாகுல் ஹமீத் என்பவரின் குடும்பச் சூழலை நேரில் ஆராய்ந்து பரிந்துரை செய்த சகோதரர்களின் வேண்டுகோளும், அவர்களின் ஆதரவு இவருக்கு இருப்பதை நினைவில் நிறுத்தி இதனை பதிந்திருக்கிறோம்.

அதிரைநிருபர் குழு

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர்கிறது... 15 10

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2012 | , , , ,

பெண்களுள் பேரறிஞர்

‘பேறு பெற்ற பெண்மணிகள்’ என்ற இத்தொடரில், பேறும் புகழும் பெற்ற புனிதவதி ஒருவரைப் பற்றிக் கூறாவிட்டால்,இத்தொடர் முழுமை பெற்றதாகாது!  அவர் யார் தெரியுமா?

மர்யம் ஜமீலா!

பத்து வயதுச் சிறுமியாக நியூயார்க்கில் தன் யூத மதப் பெற்றோருடன் வசித்துவந்த மார்கரெட் மார்கஸ், யூதர்களின் ஞாயிற்றுக் கிழமைப் பள்ளியில் பயின்றுகொண்டிருந்தபோது, தான் பிறந்த யூத மதத்திற்கும் அரபுகளின் இஸ்லாம் மதத்திற்கும் இடையில் இருந்த ஒற்றுமையால் கவரப்பெற்றாள்.

பின்னர், யூத இளையோர் இயக்கமான ‘மிஸ்ராகி ஹட்ஸாய்ர்’ (Mizrachi Hatzair) என்பதில் உறுப்பினராகச் சேர்ந்து தீவிரமாகப் பாடுபட்டார் மார்கரெட்.  அதில் ஈடுபட்டு உழைத்தபோது, அமெரிக்க யூதர்களின் ‘சியோனிஸம்’ (Zionism) எனும் தீவிரவாதப் போக்கு, கொடிய அரபு-வெறுப்பைக் கொண்டிருந்ததை உணர்ந்தார்.  எனினும், அமெரிக்க யூதர்கள் சியோனிஸத்தின் இரும்புப் பிடியில் அகப்பட்டிருந்ததால், சிலபோது அவர்களுக்கு இயைபாகவே செயல்பட வேண்டியதாயிருந்தது.  யூதர்களின் அரபு வெறுப்பு அளவுக்கு மீறிப் போனதால், மார்கரெட் சில மாதங்களிலேயே அதை விட்டு வெளியேறினார்.

மார்கரெட் தனது இருபதாவது வயதில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பயின்றுகொண்டிருந்தபோது, அதன் ஹீப்ரூ மொழித் துறைத் தலைவரான பேராசிரியர் ரப்பி ஆப்ரஹாம் கட்ஷ், யூத மதத்திலிருந்தே இஸ்லாம் மதம் தோன்றியதென்றும், அதனால், இஸ்லாத்தைவிட யூத மதம்தான் உயர்ந்தது என்றும் அழுத்தமாக வாதாடினார்.  ஆனால் மார்கரெட்டோ, அந்த இனவாத வலையில் விழவில்லை.  மாறாக, ‘சியோனிஸம்’ என்பது, யூத மதத்தின் பூர்வீகக் குடிகளால் தோற்றுவிக்கப்பட்ட ஓர் இனவாத இயக்கமே என்பதைக் கண்டுபிடித்தார்!

“பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களான அரபுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி, அமெரிக்காவின் சியோனிஸ யூதர்கள் கிஞ்சிற்றும் அனுதாபப்பட்டதாகத் தெரியவில்லை!  அதனால், நான் யூத மததைச் சேர்ந்தவள் என்று கூறிக்கொள்ள என் இதயம் இடம் கொடுக்கவில்லை” என்று பிற்காலத்தில் தனது உள்ளுணர்வை வெளிப்படுத்தினார் மர்யம் ஜமீலாவாக மாறிய மார்கரெட்.

பெற்றோரின் வற்புறுத்தலாலோ, அக்காலத்தின் போக்கு (Trend) என்பதாலோ, மார்கரெட் தனது கல்லூரிப் படிப்பின்போது யூதப் பேராசிரியர் கட்ஷின் சிறப்பு வகுப்பில் தொடர்ந்து பயின்றுவந்தார்.  அவ்வகுப்பில் நிகழ்ந்த அற்புதப் பிணைப்பு, தன் வாழ்வின் புரட்சி மிக்க மாற்றத்திற்குக் காரணமாயிற்று என்று நினைவுகூர்கின்றார்.  அது என்ன?

அந்த வகுப்பில் சேர்ந்த முதல் நாள், வகுப்பினுள் நுழைந்த மார்கரெட், அங்கே மாணவர்கள் மட்டுமே அமர்ந்திருக்கக் கண்டார்.  அவர்களும், யூத மத அடையாளமான தலைத் தொப்பி (Skul cap) அணிந்திருந்தனர்.  ஆண்கள் மட்டுமே இருந்த அறையில் அஞ்சியஞ்சி நுழைந்து, காலியாக இருந்த ஓரிடத்தில் அமர்ந்தார்.  சற்று நேரம் சென்ற பின், மாணவி ஒருத்தி வந்து அருகில் அமர்ந்தாள்.  அவள் அழகான, ஒல்லியான, உயரமான, வெளுத்த தோற்றத்திலும், பொன்னிறத் தலை முடியுடனும் இருந்து மார்கரெட்டின் மனத்தைக் கவர்ந்தாள்.  தோற்றத்தில், சிரியா அல்லது துருக்கி நாட்டைச் சேர்ந்தவள் போல் இருந்தாள்.

வகுப்பு முடிந்ததும், இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொண்டனர்.  அவள் பெயர் ஜெனித்தா லீபர்மேன் (Zenita Liebermann) என்றும், அவளுடைய பெற்றோர் ரஷ்யப் புரட்சிக்கு முன் (1917) அங்கிருந்து தப்பி வந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் என்றும், தன் தந்தையின் வற்புறுத்தலால் ஹீப்ரூ மொழியைக் கற்று, அந்தச் சிறப்பு வகுப்பில் வந்து சேர்ந்ததாகவும் கூறினாள் அப்பெண்.  பின்னர் ஒரு சில நாட்களே வகுப்பிற்கு வந்த ஜெனித்தா, முன்னறிவிப்பு எதுவுமின்றித் திடீரென்று  வகுப்பிற்கு வராமல் நின்றுவிட்டாள்!

“பல மாதங்கள் கடந்தன.  நான் ஜெனித்தாவை மறந்துவிட்டேன்.  திடீரென்று ஒரு நாள் அவள் என்னைத் தொடர்பு கொண்டாள்!  பல மாதங்கள் தொடர்பற்றுப் போனது பற்றி வருத்தம் தெரிவித்தாள்.  அன்று மாலை, தன்னை நியூயார்க்கின் ‘மெட்ரோபாலிட்டன்’ அருங்காட்சியகத்தில் வந்து சந்திக்குமாறு அன்புடன் அழைத்தாள்.  நானும் அதை ஏற்று, அங்கே சென்றேன்.  அங்கே அரபு மொழியின் அழகிய வண்ணக் கையெழுத்துகளும், புராதனமான குர்ஆன் பிரதிகளும் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருந்தன.  எனது ஆர்வத்தையும் அக்கண்காட்சி தூண்டிவிட்டது.  (பிரிந்தோர் கூடினால், பேசவும் வேண்டுமோ?)  நாங்கள் இருவரும் ஆரத் தழுவிக்கொண்டோம்!” என்று தனது தோழியை மறுபடியும் சந்தித்ததை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கின்றார் மர்யம் ஜமீலா.

தோழியைச் சென்று கண்டபோது, முதன்முதலாக அவள் கூறிய செய்தி, அதிர்ச்சியளித்தது மார்கரெட்டுக்கு!  ஜெனித்தா இஸ்லாத்தைத் தழுவிவிட்டாளாம்!  எப்படியென்று கேட்டபோது அவள் கூறினாள்:  “எனது இரண்டு கிட்னிகளும் பழுதாகிப் போய், நான் படுத்த படுக்கையிலானேன்.  எவ்வளவோ மருத்துவங்கள் செய்தும், நோய் குணமாகவில்லை.  அதனால், டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலைக்காகி,  மறையப் போகும் நாட்களை எண்ணிக்கொண்டு ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தேன்.  அப்போது யாரோ, முஸ்லிம்களின் வேதமான குர் ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்தார்கள்.  அது அப்துல்லாஹ் யூசுப் அலீ அவர்களின் மொழிபெயர்ப்பும் விளக்கக் குறிப்புகளும் கொண்டது.  அதனைத் திறந்து படிக்கத் தொடங்கினேன்.  படிக்கப் படிக்க, என் இதயம் அதன்பால் ஈர்க்கப்பட்டு, நான் அழத் தொடங்கினேன்.  அந்நிலையில், எனக்குள் ஓர் உணர்வு, நாம் குணமாகிவிடுவோம் என்று!  அடுத்த நிமிடமே என் தோழிகளுள் இருவரைக் கூப்பிட்டு வைத்து, அவர்களின் சாட்சியுடன் ‘ஷஹாதா’ மொழிந்து முஸ்லிமானேன்.”

மறுபடியும் இருவரின் நட்பு தொடர்ந்தது.  அரபு உணவு வகைகளின் மீது ஆவல் கொண்டிருந்த அவ்விருவரும் அவற்றைத் தேடிச் சென்று ஒன்றாக இருந்து உண்பார்களாம்.  அத்தோழியின் மூலமே மார்கரெட்டுக்குக் குர்ஆனின் நெருக்கம் கூடிற்று.  கல்லூரியில் பேராசிரியர் கட்ஷ் யூத வேதமான தல்மூதிலிருந்தும் பழைய ஏற்பாட்டிலிருந்தும் போதித்த யூத மதம், மார்கரெட் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் படித்ததற்கும் மாறுபட்டதாக இருந்தது.

ஜெனித்தாவின் தோழமை புதுப்பிக்கப்பட்டதாலும், அவள் எடுத்த சரியான முடிவின் தாக்கத்தாலும், மார்கரெட்டுக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் கூடிற்று.  மேலும் பல ஆய்வுகள் மேற்கொண்டும், கருத்துப் பரிமாற்றங்கள் செய்தும், இறையருளால், 1961 ஆம் ஆண்டில் மார்கரெட் இஸ்லாத்தைத் தழுவி, மர்யம் ஜமீலாவானார்!

அவரது மத மாற்றம் இலேசாக ஓரிரு வரிகளில் கூறும் விதத்தில், ஓரிரவு மாற்றமாக (overnight change) நிகழ்ந்துவிடவில்லை.  அதன் பின்னணியில் ஒரு பெரும் போராட்டமும்  ஆழ்ந்த ஆராய்ச்சியும் இருந்தன என்று கூறின், அது மிகையாகாது.

முதலில், சிறு வயது முதல் அவருக்கு இருந்த அரபிப் பாடல் ஆர்வம், அதன் பின்னர் குர்ஆன் வசனங்களை இனிய ஓசையில் ஓதும் காரிகளின் ஓதல்கள் அனைத்தும் சேர்ந்து, குர்ஆனின் மீது மர்யமுக்குப் பற்றையும் பாசத்தையும் ஏற்படுத்திற்று.  குர்ஆனின் ஒலி நாடாக்களை வாங்கி வந்து, வீட்டில் போட்டுக் கேட்பார்.  அதனால், பெற்றோரின் வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்தார்.  மகள் குர்ஆன் ஓதலைக் கேட்கும்போதெல்லாம், பெற்றோர் அவளின் அறைக் கதவை ஆத்திரத்துடன் சாத்திவிடுவார்கள்!

மர்யம் சேர்ந்திருந்த யூத சியோனிசப் பிரிவினர் கொதித்தெழுந்தனர்!  “நமது மதத்தை மிக மோசமான விதத்தில் இவள் காட்டிக் கொடுத்துவிட்டாள்” என்று திட்டித் தீர்த்தனர்!  அவரது பரம்பரைக்கே இழுக்கான செயல் என்றும், மற்ற யூதர்கள் அவர் மீது ஆத்திரப் பட்டுத் தாக்கத் தொடங்குவதற்கு இம்மத மாற்றம் காரணமாகும் என்றும் ஏசினர்!  அது மட்டுமா?  அவரது யூத மதத் தொடர்பினால், முஸ்லிம்கள்கூட அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், “மதம் மாறிப் போன மாபாதகச் செயலைச் செய்ததால் நீ நரகத்துக்கே போவாய்!” என்றும் சாபமிட்டனர்!

1954 ஆம் ஆண்டிலேயே இஸ்லாத்தின் மீது காதல் கொள்ளத் தொடங்கிய திருமதி மர்யம் ஜமீலா, எல்லாவற்றையும்விடப் பெற்றோரின் எதிர்ப்பே வன்மையாக இருந்ததாகக் கூறுகின்றார்!  அப்படியானால், என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை ஓரளவு நாம் கற்பனை செய்துகொள்ளலாம்!

யூத கிருஸ்தவ மதங்கள் அமெரிக்காவுக்குப் பழக்கப்பட்ட மதங்களாம்!  இஸ்லாமோ, அரபு நாட்டு மதமாம்!  பெற்றோரின் மிரட்டல்கள், துன்புறுத்தல்களால் மர்யம் நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையிலானார்!  1957 முதல் 59 வரை மருத்துவ                  

மனைகளில் மாறி மாறிச் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்!  அப்போதெல்லாம், ‘நான் ஒரு வேளை நற்சுகம் பெற்று வெளிவந்தால், கட்டாயம் இஸ்லாத்தைத் தழுவுவேன்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டாராம் மர்யம் ஜமீலா!  

அல்லாஹ்வின் அருட்பேற்றால், நற்சுகம் பெற்று மருத்துவ மனையிலிருந்து வெளிவந்த மர்யம், தனது ஓய்வு நேரங்களை நியூயார்க்கின் அரசு நூலகத்தில் செலவிட்டார்.  அங்கு ‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ என்ற நபிமொழித் தொகுப்பு நூலை எடுத்துப் படிக்கத் தொடங்கி, தான் படித்த குர்ஆன் வசனங்களின் சரியான விளக்கத்தை அறிந்து மகிழ்ந்தார்.

மார்கரெட்டாயிருந்து மர்யம் ஜமீலாவான இப்பெண்மணி, இஸ்லாத்தை ஓரிரு சான்றுகளைக் கொண்டு மட்டும் ஏற்றுக்கொண்டதாகக் கூற முடியாது.  இவரோ பெண்களுள் பேரறிஞர்!  இயல்பான ஆங்கில மொழியறிவிற்கு மேல், பிரெஞ்சு, ஸ்பானிஷ், லத்தீன், கிரேக்கம் முதலிய மொழிகளையும், அமெரிக்க-ஐரோப்பிய வரலாறுகள், அரபு-யூத வரலாறுகள், அறிவியலின் பல பிரிவுகள், நுண்கலைகள் அனைத்தையும் கற்று அறிவாளியாகத் திகழ்ந்தவர்! 

இத்தகைய தகுதிகளுக்கும் பின்னர், இவரது விவேகமான இதயத்தில் எழுந்த புதுமையான ஐயங்களையும் நியாயமான உணர்வுகளையும் அமெரிக்காவிலிருந்து கடிதம் மூலம் எழுதி, இருபதாம் நூற்றாண்டின் எழுச்சி மிக்க பேரறிஞராகிய மவ்லானா மவ்தூதி (ரஹ்) அவர்களுக்கு அனுப்பினார்.  அதற்கு அம்மாமேதை சலிப்படையாமல் உரிய மறுமொழிகளை எழுதினார்கள்.  அதன் பின்னர் மார்கரெட், மர்யம் ஜமீலாவாக மாறினார்.

தனது இஸ்லாமிய வாழ்க்கைக்கு, அறுபதுகளில் அமெரிக்காவில் இருந்த சூழ்நிலை சாதகமற்றதாக இருந்ததால், மவ்லானா மவ்தூதி அவர்களின் பரிந்துரையின் பேரில் பாக்கிஸ்தானுக்குக் குடி பெயர்ந்தார் மர்யம் ஜமீலா.  அங்குத் தனியாக முஸ்லிம் பெண் ஒருவர் -மஹ்ரமில்லாமல்- வாழக் கூடாது என்பதால், மவ்லானாவின் பரிந்துரையின்படியே, மனைவியை இழந்த ஜமாஅத் ஊழியர் முஹம்மத் அஷ்ரஃப் அவர்களை மணம் செய்து, தம் இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார் இந்தப் பெண் பேரறிஞர்.  பாக்கிஸ்தானைத் தம் தாயகமாகக் கொண்டு, இன்னும் அங்கேயே வாழ்ந்து வருகின்றார்!

இவரது பேரறிவுப் பெட்டகத்திலிருந்து வெளிவந்த எழுத்தோவியங்கள் ஏராளம்.  அவற்றுள் சில:

Islam versus the West
Islam and Modernism
Islam and Orientalism
Islam and the Muslim women Today
Islam and Social Habits
Islamic Culture in theory and Practice
Modern Technology and the Dehumanization of Man
Islam and Modern Man

உட்பட இன்னும் ஏராளமான நூல்கள்...!
தொடரும்...
அதிரை அஹ்மது

வேவ்ரைடர் விமானம் ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2012 | , , , , , ,


ஒலியை விட ஆறு மடங்கு விரைவாக (காற்றில் ஒலியின் வேகம் வினாடிக்கு 343 மீட்டர் ஆகும்) பறக்கக்கூடிய ஒரு விமானத்தை உருவாக்கி  அதற்கு (முந்தைய கண்டுபிடிப்பு சூப்பர் சானிக்) இப்போ ஹைபர்சானிக் விமானம் (சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட் என்பது போல்தான்)   என்று பெயரும் வைத்து பரிசோதனை செய்தபோது அது பசிஃபிக் பெருங்கடலில் விழுந்து விட்டது (ஹைபர்சானி(பி)க் பசியால் விழுந்ததா?). அங்கே விழுந்தது விமானம் மட்டும் அல்ல அதனோடு ஒரு பெரும் தொகை டாலரும்தான்.


அமெரிக்க படையினரின் பயன்பாட்டுக்காக சோதிக்கப்பட்ட அந்த வேவ்ரைடர் விமானத்தால் ஒலியை விட ஆறு மடங்கு வேகத்தை எட்ட முடியவில்லை. அப்படி எட்டியிருந்தால் அரை மணி நேரத்திற்கு பிறகு சாகடிக்கப்பட வேண்டிய அப்பாவிகள் அரை மணி  நேரத்திற்கு முன்பாகவே அமெரிக்கா படைகளால்  சாகடிக்கப்படுவார்கள்.

வேவ்ரைடர் விமானத் திட்டத்தில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட தோல்வி.  கடந்த ஆண்டும் இதே போன்று ஒரு சோதனை முயற்சியும் தோல்வியடைந்தது. இந்த வேவ்ரைடர் விமானம் புறப்பட்ட 31 விநாடிகளில் அதுவும்  பசிஃபிக் கடலுக்குள் விழுந்து விட்டது (இது பசிஃபிக் கடலா அல்லது பசி(யுடனிரு)க்கும் கடலா?).

பி-52 போர் (இந்த விமானம் gulf-war நடந்தபோது அதிக அளவு பயன்படுத்தப்பட்ட விமானம் நீண்ட தூரம் பறந்து சென்று குண்டு வீசக்கூடிய திறன் படைத்த விமானம். B50, B52 இப்படி 'B'யில் ஆரம்பிக்கும் விமானங்கள் குண்டு வீசக்கூடிய விமானங்கள். F15, F16 என்று 'F'யில் ஆரம்பிக்கும் விமானங்கள்  வானில் சண்டை போட கூடிய விமானங்கள்). விமானத்தில் இறக்கையில் இணைக்கப்பட்ட இந்த வேவ்ரைடர் 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வானில் இருந்து ஒரு ராக்கெட் உதவியுடன்  வானில் உந்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது.


அவ்வாறு உந்தப்படும் வேவ்ரைடர் பின்னர், மணிக்கு 3,600 கிலோ மீட்டர் என்ற  வேகத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வேகத்தை எட்ட முடியாமல்  கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து நொறுங்கியது. அடுத்த தலைமுறை மனிதர்களை கொன்று குவிக்க  இது போன்ற வேகம் கூடிய  ஏவுகணைகளை தயாரிக்க இந்த அளவுக்கு   ஹைபர்சானிக் வேகம் தேவை என்று அமெரிக்க படைகளும் அமெரிக்க அரசும் இணைந்து பலகோடி  டாலர் செலவு செய்து வருகின்றது. அதிவேக உயர்  தொழில் நுட்பத்துக்காக அமெரிக்க இரண்டு பில்லியன் டாலர்களை செலவழித்ததாக் சொல்லப்படுகின்றது. 

இந்தத் திட்டத்தை (அப்பாவி மக்களை கொல்ல) அமெரிக்கா எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பது அதற்கான செலவை பார்த்தாலே விளங்கும்.  இதே  தொழில் நுட்பத்தில் பயணிகள் விமானம் செய்தால் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு ஒருமணி நேரத்தில் சென்றடையலாம்.  இவற்றினால் தொடர்ந்த தோல்விகளைப் பார்த்தால் இவை இறைவனின் படைப்புகளுக்கு பொருத்தம் இல்லாத அழித்தொழிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் எதிரான மக்களின் மனக்குமுறலால் என்றே கணிக்க வேண்டி இருக்கிறது.
மற்ற நாடுகளில் இரசாயண ஆயுதம் இருக்கிறது, தடை செய்யப்பட அணு ஆயுதம் இருக்கிறது என்று வலியச் சண்டைக்கு போகும் அமெரிக்கா இப்படி மனித இனத்தை  அழிக்கும் ஆயுதம் வைத்திருக்க இறைவன் மட்டும் அவ்வளவு சுலபமாக விட்டு விடுவானா?   

இன்னும் பல ஆயிரம் டாலர்களை இந்த முயற்சியில் இழக்க, உலகைப் படைத்தவனும் அவனால் படைக்கப்பட்ட அந்த பசிபிக் கடலும் துணை நிற்குமாக !

முக்கிய குறிப்பு :) இந்த பதிவில் பதியப்பட்டிருக்கும் படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டது, இதெற்கென்று தனியாக சேட்டிலைட் விட்டோ, தனி விமானத்திலோ, ஆள் நடமாட்டமில்லாத இடத்திலிருந்தோ, எடுக்கப்பட்டது அல்ல, இதனை காரணம் காட்டி வேவு பிரிவு, பத்திரிகைகாரர்களின் கதவு தட்டி கூப்பிட்டு 'வாங்க வாங்க' வந்து பாருங்க என்று கடை விரிக்க மாட்டார்கள். ஒருவேளை இந்த ஆர்டிகல் தமிழில் இருப்பதால் தமிழ்நாட்டின் வேவு பிரிவுக் காரங்கதான் இதுக்கும் ஒரு கற்பனைக் கதை வைத்திருந்தால் பத்திரிக்கை, தொலைக்காட்சி காரங்களுக்கு தீனியாக இருக்கும்.

Sஹமீது

நபிமணியும் நகைச்சுவையும்...! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2012 | ,

தொடர் - 3
பட்டப்பெயர்கள்:

நபிகள் நாயகத்தை, தூதராக அனுப்பிய அல்லாஹ், "நற்செய்தி சொல்பவர் (முபஷ்ஷிர்)" என்றும் (அல்-குர்ஆன் 2:223); "மகத்தான நற்குணம் உடையவர்" என்றும் (அல்-குர் ஆன் 68:4); "அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரி" (33:21) என்றெல்லாம் அழைக்கின்றான்.

சொந்த ஊர்க்காரர்கள் "அல்-அமீன் (நன்நம்பிக்கையாளர்) என்ற பட்டமளித்தனர்.

அன்னை கதீஜா (ரலி), "யா அபல்காசிம் (காசிமின் தந்தையே)" என்று பிரியமுடன் அழைத்தனர்.

"என் உயிரினும் மேலானவரே!" என்றும் "என் தாய் தந்தையைவிட மேலானவரே" என்றும் சத்திய சஹாபாக்கள் போற்றி மகிழ்ந்தனர்.

மேற்கண்ட பெயர்கள் மட்டுமல்லாது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இன்னும் பல அழகிய பெயர்களாலும்  பல சமயங்களில் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

அண்ணலாரின் தோழமை சற்றேனும் சடைவு கொண்டதாகவோ அல்லது சுவாரஸ்யமற்ற மந்தமான சூழல் நிலவக்கூடியதாகவோ அவர்களின் தோழர்களுக்கு  ஒருக்காலும் இருந்ததேயில்லை!

அப்துல்லாஹ் இப்னு அல்-ஹாரித் பின் ஜாஸ் (ரலி) என்ற தோழரின் கூற்று: "புன்முறுவல் பூத்த புன்னகை வேந்தராகவே பொன்மனம் கொண்ட பெருமானார் எங்களுக்குத் தோன்றினார்கள், மேலும், பார்க்கும்போதல்லாம் புத்துணர்ச்சியுடன் பெருமானாரைத்தவிர வேறு யாரையும் யான் கண்டதேயில்லை!" (அஹ்மது 17251).

தம்  அருமைத் தோழர்கள் சிலரை நபி (ஸல்) அவர்கள் சில செல்லப்பெயர்களிட்டு அழைத்தார்கள். அந்த செல்லப்பெயர்களால் அழைக்கப்படுவதால் பூரிப்பும் புளகாங்கிதமும் சஹாபாக்களுக்கு ஏற்பட்டதே தவிர,ஒருபோதும் அந்தப் பெயர்கள் தோழர்களுக்கு வருத்தமேற்படுத்தியதேயில்லை!

அபூ துராப்:
ஒருமுறை உத்தமத் திருநபி (ஸல்) அவர்கள் தம் அருமை மகள் பாத்திமாவின் வீட்டுக்குக்கு வருகை தந்து, "உன் கணவர் எங்கே?" என்று வினவினார்கள். "தந்தையே! எனக்கும் அவருக்கும் ஒரு சிறிய விவாதம் நிகழ்ந்தது. எனவே, என் மீது கோபமாக அவர் வெளியேறி விட்டார்" என பதில் கிடைத்தது. ஆளை அனுப்பித் தேடியதில் மஸ்ஜித் நபவீயில் கண்டதாகத் தகவல் கிடைத்தது. போய்ப் பார்த்தால், அலீ(ரலி) அவர்கள் தங்களின் மேனியிலிருந்து மேல் துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள்.  அதைப் பார்த்ததும் அண்ணலார் அவர்கள் மனம் நெகிழ்ந்து, அவர் மீது படிந்திருந்த மண்ணைத் தட்டித் துடைத்து விட்டவாறே,  "எழுந்திரும்! ஓ அபூதுராப். (மண்ணின் தந்தையே) எழுந்திரும்!" என்றார்கள். அவர் உறக்கம் கலைந்தது. அழகிய அழைப்பால் வருத்தம் மறைந்தது. அன்றிலிருந்து அந்த செல்லப்பெயர் நிலைத்துப்போனது. அவருக்கும் அது மிகப் பிடித்துப்போனது. (புஹாரி  6280).

ஒருவர் மிக விரும்பும் ஒன்றின் பெயரோடு 'அபூ' சேர்த்துச் செல்லப் பெயராக்கி விளிப்பது அரபியர் வழக்கம். ஆடுகளை அதிகம் நேசிப்பவர் 'அபுல்கனம்'  என்றும் வல்லூறுகளை நேசிப்பவர் 'அபூஸகர்' என்றும் விளிக்கப்படுவது அரபுகளின்  மரபு. ஐக்கிய அமீரகங்களின் தலைநகர், மானின் தந்தை (அபூதபி) என்பவரின் பெயரால் விளங்குகிறது. தற்போது இணையத்தில் உலவும் தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் கூட 'அபூ' எனும் சொல்லோடு, தாம் அதிகம் நேசிக்கும் மகன்/மகளின் பெயரை இணைத்து, புனைந்துகொண்டு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. (உதாரணம் : அபுஇப்ராஹீம், அபுஷாருக், அபுசுஹைமா).

அபூபக்ரு (ரலி):
இவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் அப்துல் கஅபா.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் அருமைத் தோழருக்கு அப்துல்லாஹ் எனப் பெயரிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லிய தொடக்கத்தில்  வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு நபி (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால் அல்-சித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற காரணப் பெயரும் அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அபூபக்ரு என்பதும் அவர்களின் காரணப் பெயராகும்.   அண்ணல் நபி அவர்கள், மூமின்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை மணந்த பின்னர், அபூபக்ர் (கன்னிப்பெண்ணின் தந்தை) என கண்ணியமாக அழைக்கப்பட்டார்கள்; அப்பெயரே நிலைத்துப் போனது. (அல் இஸாபா பாகம் : 2 பக்கம் : 1088). 

அபூஹுரைரா (ரலி):
கைபர் யுத்தம் நிகழ்ந்த சமயத்தில் பனீ-தவ்ஸ் கிளையிலிருந்து வந்து நபிமணி (ஸல்) அவர்களைச்  சந்தித்து இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதும் அப்துஷ் ஷம்ஸு என்ற இயற்பெயரைப் பெற்றிருந்த அவர் அப்துர்ரஹ்மான் என அழைக்கப்பட்டார். அபாரமான நினைவாற்றல் கொண்டிருந்த அவர், திண்ணைத் தோழர்களில் ஒருவராகத் தன்னையும் இணைத்துக்கொண்டார். அல்லாஹ்வின் தூதரை அதிகம் அண்மியிருந்ததால் அண்ணலின் அங்க அசைவுகளையும் அதோடு அவர்கள் உதிர்த்த பொன்மொழிகளையும் உள்வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் இவர் அறிவித்த ஹதீஸ்கள் மட்டும் 1600 க்கும் அதிகம் என்று வரலாற்றுக் குறிப்பேடுகள் கூறுகின்றன.

பூனைகள் மீது அதிகம் விருப்பங்கொண்டிருந்ததால் நபி(ஸல்) அவரைப் "பூனைத் தோழன்" (அபூஹிர்!) எனச்செல்லமாய் அழைத்தார்கள். அப்துஷ்ஷம்ஸு அத்தவ்ஸீ, அப்துர்ரஹ்மான் அத்தவ்ஸீ என்றெல்லாம் குறிப்பிட்டால் நாமெல்லாம் விளங்காமல்  விழிப்போம். "அபூஹுரைரா" என்றாலோ... 'அட, நம்ம அபூஹுரைரா' என்று சட்டெனப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அண்ணலின் அழைப்பு, உலகப்புகழ் வாய்ந்ததாக அமைந்துபோனது. 

இருசெவிச்சிறுவன்:
அனஸ் இப்னு மாலிக் (ரலி) சிறுபிராயத்திலிருந்தே நபி(ஸல்)அவர்களின் ஊழியத்தில் இருந்தார். ஓர் இனிய நாளில் அவரை "ஓ!  இரண்டு காதுகள் கொண்டவரே!" என அண்ணலார் அன்புடன் அழைத்தார்கள் என நபி மொழிக் குறிப்புகள் கூறுகின்றன. (அபூதாவுத் 4984).

நிற்க, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் அருள்மறையாம் குர்ஆனிலே பட்டப்பெயர் குறித்துக் கூறுவதைக் காண்போம்.
بسم الله الرحمن الرحيم

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَىٰ أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَىٰ أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ ۖ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ ۚ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَِ

முஃமின்களே! ஒரு சமூகத்தார்  இன்னொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில், (பரிகசிக்கப்படுவோர்) அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்.  (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர்(தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப்பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்;  எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (அல் ஹுஜுராத் 11 )

சிந்திக்கவும்:
கெட்டப்பெயர் வைத்து அதனைப் பட்டப்பெயர் என அழைக்கும் அசிங்கமும் அவலமும் குறிப்பாக, வாய் கிழிய மார்க்கம் பேசும் நம் சமூகத்தில்தான் அதிகம் என்பதே ஒரு வெட்ககேடான, வேதனை நிறைந்த விஷயமாகும். இந்த கணத்திலிருந்து ஒவ்வொரு முஸ்லிமும் சக மனிதனை அவன் விரும்பாத கெட்டப்பெயர் வைத்து கூவி அழைக்கும் இந்த ஈனச்செயலை  உடனடியாக நிறுத்த வேண்டும். அவன்தான் உண்மையாகவே அல்லாஹ்வை பயந்த அடிமை. நபியை நேசிக்கும் நல்ல முஸ்லிம். அடையாளம் சொன்னால்தான் விளங்குமென்றால் நபி நாதர் சூட்டியது போல் நல்ல பெயர் சூட்டலாம் அல்லது அவன் தந்தையின் மகன் என அழைக்கலாம் (உதாரணம் : அபுல் கலாம் s/o. ஷைக் அப்துல் காதிர்).
 தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M.ஸாலிஹ்

அப்துல் நாசர் மதானியுடன் இரண்டு மணி நேரம் அ.மார்க்ஸ் கோ.சுகுமாரன் 5

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2012 | , , , ,


கோவை தொடர் வெடிகுண்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஒன்பதரை ஆண்டு காலம் கோவை சிறையில் பிணையின்றி அடைக்கப்பட்டு இறுதியில் குற்றமற்றவர் என சென்ற ஆகஸ்ட் 1, 2007ல் விடுதலையான கேரள ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’த் தலைவர் அப்துல் நாசர் மதானி அவர்கள் மீண்டும் ஆக்ஸ்ட் 17, 2012ல் பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கர்நாடக அரசால் கைது செய்யப்பட்டது ஒரு சிலருக்கு நினைவு இருக்கக்கூடும். கடும் நோய் வாய்ப்பட்டிருக்கும் அவரைப் பிணையின்றி கர்நாடக அரசும் கடந்த மூன்றாண்டுகளாகச் சிறையில் அடைத்துள்ளது. பெங்களூரு பராப்பன அக்ரகாரத்தில் புதிதாகக் கட்டபட்டுள்ள உயர் பாதுகாப்புச் சிறையில் இருக்கும் அவரை இன்று (17.09.2012) சந்தித்தோம். எங்கள் இருவரைத் தவிர நகரி பாபையா, ஆர்.ரமேஷ், ஷோயப், முகம்மது காக்கின்ஜே (பெங்களூரு), ரெனி அய்லின், ‘தேஜஸ்’ நாளிதழ் ஆசிரியர் முகமது ஷெரீப் (கேரளா) ஆகியோரும் வந்திருந்தனர்.

கர்நாடகச் சிறைகளில் கைதிகளைப் பார்ப்பதற்கான சடங்குகளும், கெடுபிடிகளும் அதிகம். ஏற்கனவே இருமுறை மைசூர் சிறையில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியைச் சந்தித்த அனுபவம் எங்களுக்குஉண்டு. எல்லாச் சடங்குகளும் முடிந்து சிறையின் முதன்மை வாயிலுள் நுழையும் போது ஒரு கணம் நிறுத்தி நம் கை ஒன்றில் ஒரு முத்திரை பதிப்பார்கள். அனேகமாக வேறெந்த மாநிலச் சிறைகளிலும் இப்படி ஒரு பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த முத்திரையைக் கைதியைப் பார்த்துவிட்டு வரும் வரையில் நாம் அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். சிறைக்குள் நுழையும் போது போடப்படும் இந்த முத்திரை நமக்கு சோழர் காலத்தில் கட்டாயமாகப் பிடித்து வரப்பட்டு தேவதாசிகள் ஆக்கப்பட்டவர்களுக்கும், நாசி சித்திரவதைக் கூடங்களில் யூதர்களுக்கும் இடப்பட்ட முத்திரைகளை நினைவூட்டுவது தவிர்க்க இயலாது.

மைசூர் சிறையைக் காட்டிலும் பராப்பன அக்ரகாரச் சிறையில் கெடுபிடிகள் அதிகம். சிறைகள் நவீனப்படுத்தப்பட படுத்தப்பட கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் (surveillances) அதிகமாகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி, நம்மூர் புழல் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சிறைகள் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள். பராப்பன அக்ரகாரச் சிறையில் கைதிகளைப் பார்ப்பதற்கு முன்பானசடங்குகளை முடிக்க சுமார் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும். சிறைக் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணகுமார் நமது பேராசிரியர் பாபையாவின் மாணவராக இருந்ததால், சற்றுக் கூடுதல் சலுகை அளிக்கப்பட்டும் கூட, எங்களுக்கும் சடங்குகளை முடிக்க மூன்று மணி நேரமானது. க்யூவில் நின்று மனுக் கொடுத்து நமது இடது பெருவிரல் ரேகை, முகம் அனைத்தையும் நுண்ணிய கேமரா ஒன்றின் முன் அமர்ந்து பதிவு செய்துகொள்ள வேண்டும், நமது தொலைபேசி எண் உட்பட முக்கிய விவரங்களையும் அத்துடன் பதிந்து ‘ப்ரின்ட் அவுட்’ ஒன்றைத் தருவார்கள். இதற்கான இடத்தில் க்யூவில்காத்திருந்தவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பதைதைக் கண்டோம். 

2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி நமது நாட்டிலுள்ள மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.4 சதம். ஆனால்,சிறைச்சாலைகளில் அவர்களின் பங்கு 50 சதத்திற்கும் மேல் என்பது நினைவுக்கு வந்தது. விரல் ரேகை,முகப்பதிவு கொண்ட தாள்களை சிறை வாசலில் கொடுத்து விட்டு மீண்டும் காத்திருந்தால் வெகு நேரம் கழித்துச் சிறை அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பின் நமக்கு அழைப்பு வரும். கண்காணிப்பாளர்,பாபையாவின் மாணவர் என்பதால் நாங்கள் சற்று விரைவாக அழைக்கப்பட்டதோடு, கண்காணிப்பாளரின் அறையிலேயே ஒருபுறம் அமர்ந்து சற்று ஆறஅமரப் பேசவும் முடிந்தது.

நாங்கள் உள்ளே நுழைந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் அப்துல் நாசர் மதானியைச் சக்கர நாற்காலியில் தள்ளி வந்தனர். ஆர்.எஸ்.எஸ்.காரன் ஒருவன் வீசிய குண்டு வீச்சில் வலது காலை இழந்தவர் மதானி. வழக்கு நடந்துக்கொண்டிருந்த போது குண்டு வீசியவன் வந்து அவாரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளான். அவனை மன்னித்ததோடு அவன் மீதான தனது குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்று வழக்கு தள்ளுபடி ஆவதற்குக் காரணமாக இருந்தவர் மதானி.

தூய வெள்ளுடையில் மலர்ந்த முகத்துடன் அருகில் நெருங்கிய மதானியைக் கண்டவுடன் அனைவரும்எழுந்து நின்றோம். துரும்பாய் இளைத்து இருந்தாலும் அவரது கண்களில் ஒளி குன்றவில்லை.ஒவ்வொருவராக அருகில் சென்று அவரது கைகளைப் பற்றி அறிமுகம் செய்துக் கொண்டோம்.கண்காணிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்த பாபையா எழுந்தோடி வந்தார். மதானியின் அருகில்வந்தவுடன் அவருடைய கண்கள் கலங்கின. கன்னங்கள் துடித்தன. அப்படியே அவரை மார்புறத் தழுவிக் கொண்டார். பார்த்திருந்த அனைவருக்கும் நெஞ்சு இரும்பாய் கனத்தது. மனித உரிமைப் பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் சிறை அனுபவித்தவர் பேராசிரியர் பாபையா.

மார்க்ஸ், சுகுமாரன் என்று நாங்கள் பெயர்களைச் சொன்னவுடன் மதானி உடனடியாக எங்களை நினைவுகூர்ந்தார். கோவைச் சிறையில் இருந்த போது சுகுமாரன் அவரைச் சந்தித்துள்ளார். கோவைச் சிறையில் இருந்த அவரை உடல் நலம் கருதி பிணையில் விடுவிக்க வேண்டுமென நாங்கள் முன்னின்று தமிழ் எழுத்தாளர்களிடம் கையொப்பம் பெற்று வெளியிட்ட அறிக்கையை மதானி இருமுறை நினைவுகூர்ந்தார். அறிக்கையில் கலைஞரின் மகள் கனிமொழியும்கையெழுத்திட்டிருந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னார். பிரபஞ்சன், சாரு நிவேதிதா, வெளி ரங்கராஜன்,சுகிர்த ராணி உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர்.

அடுத்த ஒன்றைரை மணி நேரமும் மெல்லிய குரலில் மதானி பேசிக் கொண்டிருந்தார். மதானி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். சுற்றிலும் நாற்காலிகளை நெருக்கமாகப் போட்டு நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். தற்போது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து மிக விரிவாக சொன்னார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை அவர் தெளிவாக விளக்கினார். பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 32 பேர்களில் 31வது குற்றவாளியாக அவர் இணைக்கப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட முக்கியமானவர்களில் ஓரிருவரை முன்னதாகத் தனக்குத் தெரியும் என்பதைத் தவிர இந்தக் குற்றச் செயலில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும், இப்படியான ஒரு செயல் நடக்கப்போகிறது என்பது தனக்குத் தெரியாது என்பதையும் விரிவாக விளக்கிச் சொன்னார்.

விசாரணையில் இருக்கும் வழக்கு என்பதால் எல்லாவற்றையும் இங்கு எழுத முடியவில்லை. எனினும் ஒன்றை மட்டும் இங்கு சொல்லியாக வெண்டும். முக்கிய குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தடியண்டவீடு நசீர் தங்களுடைய சதி குறித்து மதானிக்குத் தெரியுமெனக் கூறியுள்ளதாதாக விசாரணையின் போது மதானியிடம் திரும்பத் திரும்பக் கேட்டுள்ளனர். “நசீரை ஒருமுறை என்னிடம் அழைத்து வாருங்கள். உங்கள் முன் நான் அவரைக் கேட்கிறேன்” என மதானி வற்புறுத்தியுள்ளார். தயங்கிய புலனய்வுத்துறையினர் இறுதியாக வேறொரு சிறையில் இருந்த நசீரை முகமூடியிட்டு அழைத்து வந்து நிறுத்தியுள்ளனர். புனாய்வுத்துறையினர் முன்னிலையில் மதானி கேட்ட போது தான்அப்படிச் சொல்லவில்லை என நசீர் பதிலளித்ததோடு, “உங்களை அரசியலில் இருந்து விலகச் சொல்லிப் பலமுறை எச்சரித்தேனே நான்” என்றும் கூறியுள்ளார்.

குற்றமற்ற என்னை ஏன் இப்படித் திரும்பத் திரும்பக் கொடுமைப் படுத்துகிறீர்கள் என மதானி கேட்டபோது விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒரு கணம் அமைதியாய் இருந்தபின் இப்படிச்சொல்லியுள்ளார். “இந்தப் பிறவியில் நீர் ஏதும் குற்றம் செய்யாதிருக்கலாம். போன பிறவியில் செய்திருப்பீர். அந்தப் ‘பூர்வ கர்மா’வின் பலனை இப்போது அனுபவிக்கிறீர்.”

வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டால் கோவை வெடிகுண்டு வழக்கில் அவர் எப்படிக் குற்றமற்றவர் என்று விடுதலைச் செயப்பட்டாரோ அதேபோல் இதிலும் விடுதலை செய்யப்படுவது உறுதி. ஆனால்,பராப்பன அக்ரகாரச் சிறை வளாகத்தில் இருந்து செயல்படும் தனிநீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிக்கத் தயாராக இல்லை. குற்றம்சட்டப்பட்ட பலரும் வெவ்வேறு சிறைகளில் இருப்பதைக் காரணம் காட்டி விசாரணையை இழுத்தடிக்கிறார்கள்.

அதேநேரத்தில் படிப்படியாக மோசமாகிக் கொண்டிருக்கும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு,அவரைப் பிணையில் விடுதலைச் செய்ய அரசும், நீதிமன்றமும் தயாராக இல்லை. கடும் இருதய நோய், முற்றிய நீரிழிவு நோய், நீரிழிவினால் ஏற்பட்ட சிறுநீரகப் பாதிப்பு, முதுகுத்தண்டுத் தேய்வு என்பவற்றோடு, எல்லாவற்றுக்கும் மேலாகப் பெங்களூருச் சிறைவாசம் இன்று அவர் கண் பார்வையைப்பறித்துள்ளது. வலது கண் பார்வை முற்றிலும் பறிபோய்விட்டது. இடது கண்ணில் 20 சதப் பார்வைதான் எஞ்சியிருக்கிறது. நீரிழிவுனால் ஏற்பட்ட இந்த பார்வைக் குறைவுக்கு உரிய நேரத்தில் லேசர் சிகிச்சை அளித்திருந்தால இன்று அவர் பார்வை காப்பாற்றப்பட்டிருக்கும். துண்டாடப்பட்டு முழங்காலுக்கு மேல் எஞ்சியிருக்கும் அவரது வலது காலின் மேல்புறம் உணர்ச்சியற்றுப் போயுள்ளது. உள்ளே கடுமையான வலி. கேரளம் சென்று ஆயுர்வேத சிகிச்சை செய்தால் நிச்சயம் பலனிருக்கும் என அவர் நம்புகிறார். ஆனால், கர்நாடக அரசும், நீதிமன்றமும் அனுமதி அளிக்கவில்லை. 

உச்சநீதிமன்றம் வரை சென்று வேண்டிய போது பெங்களூரிலேயே ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உத்தரவு கிடைத்தது. 70 ஆயிரம் ரூபாய் அளவில் முடிய வேண்டிய சிகிச்சைக்கு அங்குள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவ மனை எட்டரை லட்ச ரூபாய் ‘பில்’ கொடுத்தது. ஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டுமெனவும், ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை முழு சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த வைத்தியசாலை வலியுறுத்தியும் சிறை அதிகாரிகள் ஒருமுறை கூட அவரைப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை. உள்ளூர் மருத்துவமனை ஒன்றிற்குக் கண் மருத்துவத்திற்காக அனுப்பப்பட்ட போது, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அடுத்த நாள் அவரது வலது கண் பார்வை முற்றிலும் அழிந்து போனது.

இப்படி அவரது உடல் அவயவங்களை ஒவ்வொன்றாகச் சிறை வாழ்க்கை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து மிக விரிவாக அவர் சொன்னார். மிக மிகச் சுருக்கமாகவே நாங்கள் இங்குக் குறிப்பிட்டுள்ளோம். கடைசியாக அவர் சொன்னது எங்கள் எல்லோரது கண்களையும் கசிய வைத்தது.

“எல்லாவற்றையும் நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த முறை நோன்பு நாட்களில் குனிந்து தொழவும் என்னால் முடியவில்லை. ஆனால், அல்லாஹ்வின் அருளால் மன உறுதியை மட்டும் நான்இழக்கவில்லை. என் மனம் தளர்ந்துவிடவில்லை. உடல் உபாதைகளையும் கூடத் தாங்கிக்கொள்கிறேன். ஆனால் கண் பார்வை இழந்ததைவிடவும் என்னால் தாள முடியாத வேதனையாகஇருப்பது எனக்குள்ள மலச் சிக்கல்தான். சாப்பிட்டு இரண்டு நாளானாலும் மலம் கழிவதில்லை. திடீரென இரவு நேரங்களில் என்னை அறியமலேயே மலம் கழிந்துவிடுகிறது. அந்த நேரத்தில் என்னையும் என் படுக்கையும் என்னால் சுத்தம் செய்துக் கொள்ள முடிவதில்லை. இரவு நேரத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் என்னால் அதைச் செய்ய முடியாது. நகர வேண்டுமானால் எனது வலது செயற்கைக் காலைப் பொருத்திக் கொள்ள வேண்டும். தண்ணீரை எடுப்பது, கழுவுவது எதையும் தனியாகச் செய்ய முடியாது. இரவு முழுக்க அப்படியே கிடக்கவும் முடியவில்லை. இந்தக் கொடுமையைதான் என்னால் தாங்க முடியவில்லை.” 

அந்த அறையில் ஒரு கணம் இறுக்கமான அமைதி நிலவியது. நாங்கள் என்ன ஆறுதல் அவருக்குச் சொல்ல முடியும். நேரமாகிவிட்டது என்பதைத் தெரிவிப்பதற்காகக் கண்காணிப்பாளர் ஒருமுறை அங்கு வந்து எங்களைப் பார்த்துப் புன்முறுவலித்துச் சென்றார். நாங்கள் புறப்படத் தயாரானோம்.

“நான் ஒன்பதரை ஆண்டுக் காலம் கோவைச் சிறையிலிருந்தேன். சிறையில் இருந்தது என்பதைத் தவிர எனக்கு வேறெந்தப் பிரச்சினையும் இல்லை. அதிகாரிகள் என்னிடம் அக்கறையுடன் நடந்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டு ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் என்னிடம் அக்கறையாக நடந்து கொண்டார்கள். சிறையில் நான் எதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. இங்கே எல்லாம் தலைக்கீழ். என்னுடைய ‘செல்’ அருகில் ஒரு பூனைக்குட்டிஇருக்கிறது. அதுவொன்றுதான் இங்கே காசு கேட்பதில்லை. இங்குள்ள ஊடகங்களும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் என்னைப்பற்றி மோசமாக எழுதுகின்றன.”

மெல்லிய குரலில் எல்லாவற்றையும் எளிய ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் மதானி. நாங்கள் எழுந்து நின்றோம். குனிந்து ஒவ்வொருவராக அவரைத் தழுவிக் கொண்டோம். நகர மன்மின்றி நகரத்தொடங்கிய போது அவர் குரல் எங்களை அழைத்தது “நீங்கள் வந்து சென்றது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் நாளை நடத்த உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லப் போகிறவை எனது சிகிச்சைக்கும், நான் பிணையில் விடுதலைப் பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒருவேளை அந்தப் பயன் எனக்குக் கிடைக்காமலும் போகலாம். ஆனால் நீங்கள் வந்ததே எனக்குப் பெரும் பயன்தான். அல்லாஹ்வின் அருளால் நான் விடுதலையாகி வெளியே வந்தால்,என்னுடைய எஞ்சிய வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் செலவிடுவேன். அவர்களோடு வாழ்ந்து மடிவேன்.”

மதானியின் ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’, தலித், முஸ்லிம் ஒற்றுமையை முன்னெடுத்துப் பேசுகிற ஒன்று. அவரது நிறுவனங்களின் மூலம் பெரிய அளவில் தலித்கள் பயனடைகின்றனர்.

நாங்கள் படிகளில் இறங்கிக் கீழுள்ள பேரேட்டில் கையெழுத்திட்டோம். எங்களது செல்போன்களைப் பெற்றுக் கொண்டோம். கையிலுள்ள முத்திரை அடையாளத்தைக் கத்தி பொருத்திய துப்பாக்கியுடன் இருந்த காவலரிடம் காட்டிய பின் கதவு திறந்தது..

ஏதோவொரு கொண்டாட்டத்திற்காக ஒளி அலங்காரம் செய்வதற்கென சீரியல் விளக்குகள் சிறை வாசலில் வந்து இறங்கி இருந்தன. எதற்காக இருக்கும் என நாங்கள் சற்று வியப்புடன் நோக்கிய போது மிகப் பெரிய அலங்கரிக்கப்பட்ட ஒரு வண்ண விநாயகர் சிலையை சுமார் 10 கைதி வார்டர்கள் சுமந்துவந்து கொண்டிருந்தனர்,

நன்றி : 'மக்கள்உரிமை'
மின்னஞ்சல் பகிர்வு : முதுவை ஹிதயத்துல்லாஹ்

வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 5 18

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2012 | , ,

அண்ணன் தம்பி உறவு…

தாய்-தந்தை உறவு போல ஒரே கண்ணோட்டத்துடன் அண்ணன் தம்பி உறவை ஒப்பிட முடியாது. ஐந்து வயதிலிருந்து பதினைந்து வயது வரை, உரிமைப் போராட்டம்..! எனக்கு வேண்டும்..! என்ற பிடிவாதம் பிடிக்கும் தம்பி. தன் சொல் கேட்க வேண்டும் என்று அண்ணனும் அவ்வப்போது போடும் சிறு-சிறு சண்டைகள் நிகழ்ந்தாலும், வீட்டிற்கு வெளியே வந்து விட்டால் தம்பியின் பாதுகாவலனாக மாறுவதுதான் வினோதம்.

செல்வசெழிப்புடன் வாழும் குடும்பத்தில் பிறந்த சகோதரர்களுக்குள் இளம் வயதில் அவ்வளவாக பிணக்குகள் வருவதில்லை ஏனெனில், இருவரின் தேவைகளும் தனி தனியே நிறைவேற்றப் படுவதால் என்றுமே சமாதானம்தான். ஆனால், அங்கே பாசப் பினைப்புகளில் குறைகள் ததும்பும். வசதிகள் குறைவான குடும்பத்தில் பிறந்து வளரும் அண்ணன் தம்பிகள் மத்தியில் பாசங்கள் என்றுமே கூடுதலாக இருக்கும். 

இவர்களில் மூத்த அண்ணன் வளர்ந்து ஆளாகி உழைத்து பொருளீட்ட ஆரம்பித்து விட்டால் அண்ணன் தான் ஹீரோ. அண்ணணின் சொல் அரசு உத்தரவு போல் உடனே அமுலாக்கும் தம்பிகள் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அண்ணன்மார்கள் தம்பிகளின் உரிமைகளின் நாயகன். தனக்கு தேவையானதை பெற துடிக்கும் துடிப்பு தம்பிகளின் ஆர்வத் துடிப்பு அது உரிமைகளின் உயிர் துடிப்பு.

என் அண்ணன் என்று சொல்லி பெருமிதம்படும் தம்பிகளின் சந்தோசத்திற்கு அளவே கிடையாது. தம்பிகளின் அந்த உரிமையை தம்பிகளிடமிருந்து பிரிப்பது என்பது இயலாத காரியம். தம்பிகளின் மனதில் ஆழ பதிந்திருக்கும் அந்த உயிர் மூச்சு போன்ற உரிமையை பிரிக்க அண்ணனுக்கு திருமணம் என்ற பந்தத்தின் மூலம் ஏற்ப்படும் உறவு அண்ணனின் மனைவி அண்ணியால் மட்டுமே முடியும். 

உறவின் வலிமை யாருக்கு அதிகம் யார் உரிமை அதிகம் பங்கு உள்ளவர்  என்று பார்க்கும்போது அண்ணனின் மனைவிக்குத்தான். என்றாலும், உயிரோடு ஒட்டிய உறவான தம்பிகளை பிரிக்க நினைக்கும் அண்ணி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்யில் மயிலிறகை போல மிக நளினமாக தன் வயப்படுத்திக்கொள்ளல் வேண்டும். இதன்  கால அளவு குறைந்தது பத்து வருடங்கள் எனலாம். ஆனால், மணந்த மறு நிமிடமே தன வசம் வரவேண்டும் என்பதன் விளைவுதான் குடும்பத்தில் தேவையில்லாத சச்சரவுகள்.

ஒரு தாய் மக்கள், என் அண்ணன் எனக்கு சொந்தம் என்ற உணர்வு பதினைந்து வயது பாலகனிடம் இருக்கும். தம்பியும் பாச உணர்வை அறுத்தெறிய வேண்டும் என்று முனையும் புது உறவான அண்ணனின் மனைவியின் முயற்சி சில சமயங்களில் மிகவும் மோசமாக செயல்பட்டு தம்பியின் உணர்வின் உயிரை பிரிக்க காரணமாக இருப்பார்.  தந்தை காட்டும் பாசத்தின் இரண்டாம் பகுதியாக அண்ணன் காட்டும் பாசம் அமைந்திருக்கும். 

கல்யாணமாகி சில வருடங்களில் திசை திரும்பிய ஏவுகணைபோல் அதி வேகமாக தம்பி மீது கொண்ட பாசம் மறைந்து போகும். இது ஒரு வகையில் அண்ணனுக்கு பாதகமாக கூட அமையும் கல்யாணமாகி மனைவி வகையில் கிடைத்த உறவு பலமாக இருக்கும்பச்சத்தில் தம்பியின் உறவு இல்லை என்று போகும். அண்ணன் மனைவி பாதகியாய் அமைந்து அண்ணனுக்கு துர்சம்பவங்கள் நிகழ நேரிட்டால் தம்பியின் உறவு கைகொடுக்கும் அண்ணன் தம்பி உறவு நீடிப்பது பெற்றோர்களுக்கு கடைசி காலத்தில் மன நிறைவை கொடுக்கும். 

தாய் தந்தையர் தமது தாம்பத்யம் வெற்றி பெற்றதாக எண்ணுவர். தாய் தந்தையரின் தாம்பத்யத்தை புனிதமாக கருதும் ஒவொருவரும் தன் உடன் பிறந்தோரை அன்புடன் பேணுவர். நூற்றாண்டு காலம் கடந்து வெற்றி நடை போடும் நிறுவனகளின் பின்னணி அண்ணன் தம்பி உறவின் வலிமையே பாராம்பர்யமாக பேசப்படும் பல குடும்பங்களின் பின்னணியும் உடன்பிறப்புக்களின் ஒற்றுமையின் பின்னணிதான்.
தொடரும்...
அதிரை சித்தீக்

PLEASE VISIT OUR NEW WEBSITE https://adirainirubar.in/ 

பிறப்பது! இறப்பது! எதற்காக? குறுந்தொடர் - 2 10

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2012 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

ஆந்திராவைச் சேர்ந்த சினிமா டைரக்டரின் மகன் இஸ்லாத்திற்கு வந்த அனுபவத்தை ஒரு பயான் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். சில வருடங்களுக்கு முன் அவர் பேசிய சிடியை கேட்க வாய்ப்பு கிடைத்தது. அவரின் அனுபவத்தை முதல் அத்தியாயத்தில் விளக்கியிருந்தேன். இப்பொழுது இந்த அத்தியாத்தில் தொடர்ந்து அவர் பேச்சைக் கேட்போம் வாருங்கள்.

என் அப்பாவிடம் உங்கள் பெயர் இல்லாமல் வாழ்ந்து காட்டுவேன் என்று சொன்ன வார்த்தை : அல்லாஹூத்தஆலா என் வாழ்க்கையை மாற்ற ஆரம்பித்து விட்டான். என்ன செய்வது , எப்படி வாழ்வது  பிச்சையா எடுக்கறது. என் கனவு பெரிய ஸ்டார். இப்ப என்ன செய்ய?, ஒரு நாளைக்கு 10ஆயிரம் செலவு செய்யும் வழியை கற்று வைத்திருந்தேன். சம்பாரிக்க இல்லை, செலவு பண்றதுக்கு. ''அப்ப வாழ்வது எப்படி'' என்று தெரியவில்லை. வி கே நாட் பேக்.

சின்ன வயதில் விளையாட்டாக கற்றுக் கொண்டது வாட்ச் தொழில். வீட்டில் வாட்ச் நின்று விட்டால் நானே பிரித்துப் பார்த்து கற்றுக்கொண்டேன். மனதில் ஒரு நம்பிக்கை வந்து விட்டது. ''என்னை படைத்த இறைவன் பட்டினியாக போட மாட்டான்'' என்று வாட்ச் ரிப்பேரிங் வேலை தேட ஆரம்பித்தேன். 

அப்பொழுதுதான் ஒரு உண்மையான முஸ்லிமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னடான்னா தொழுகிறவர், அவரிடம் வேலைக்குச் சேர்ந்து அரைநாள் வேலை செய்து ''8 ரூபாய் சம்பளம் கிடைத்தது''. ''என்னை படைச்ச இறைவன் இதே தொழிலாக்கி விட்டான்'' என்று நினைத்துக் கொண்டேன். ஏன்னா செஞ்ச வேலை எல்லாம் முடிந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்!, அப்பொழுது அல்லாஹ் என்று சொல்ல மாட்டேன் தேவுடா (கிரியேட்டர்) என்று சொல்வேன். கிரியேட்டர் ஒருவர் இருக்கிறார் என்று நம்பினேன்.

தொழ போகும்போது என்னை அனுப்ப மாட்டார். லஞ்ச்க்கு போய்ட்டு வந்தா பிறகு வெளியே போக முடியாது.  நான் செயின் ஸ்மோக்கர், அதற்குக் கூட விட மாட்டார். ''நீங்கள் எல்லாம் போறீங்க'' என்னை ஏன்? விட மாட்டேன்கிறீர்கள். நாங்கள் ''அஸர் தொழப் போறோம், மஃரிபு தொழப் போறோம்''. என்று சொன்னார்கள் என்னடா? போறீங்க!, என்னா  தொழுகை? காட்டுங்கள்! என்றேன். பாய் கடையிலே பள்ளிவாசல்  இருக்கிறது (மதராஸ் ஃபேரிஸில்). அங்கே போய் பார்த்தேன் அங்கே எதுமே இல்லை, ஒரு விக்ரகம் கூட இல்லை. ஆஹா!  கரெக்ட் ஓ நிராகாரயா நமஹா! கரெக்ட்.

அந்த விக்ரக ஆராதானை வழிபாடு இல்லாத சமுதாயம் இதுதான். பிரம்ம ரிஷிகளுக்கு தாடி இருந்தது. முஸ்லிம்களும் தாடி வைக்கிறோம். இந்துயிஸத்தில் எல்லா ரிஷிகளுக்கும் தாடி இருக்கனும். தாடி இல்லைனா அவன் ரிஷி இல்லை, இல்லையா? அப்ப இஸ்லாம் ஈஸ் ய ட்ரூ ரிலிஜன் என்று நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். என்ன ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' (இல்லை எவனும் அல்லாஹ்வைத் தவிர), 'வாவ்! கரெக்ட்டய்யா கரெக்ட்', ஆண்டவன் ஒருவன் அவனைத் தவிர எவரும் இல்லை என்று இஸ்லாம் சொல்லுது, இந்துயிஸம் கூட சொல்லுது, அப்ப இஸ்லாம்தான் உண்மையான ரிலீஜன்''என்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அப்ப எனக்கு பாட்சா என்று பெயர் வைத்துக் கொண்டேன். அப்ப நான் முழுசா உள்ளே போகவில்லை காரணம் ''இஸ்லாம் என்னவென்று தெளிவாக சொல்கிறவர்கள்''  சமுதாயத்தில் ரொம்ப கம்மி. இது ''பரிதாபமான சுச்சுவேஷன்''. நான் இஸ்லாத்திற்கு வருவதற்கு என்னோட சிந்தனையும்,  அல்லாஹ்வுடைய ரஹ்மத் தான் காரணம். அல்லாஹ் நேர்வழி போகிறவர்களுக்கு, நேர்வழி தருகிறான். தீய வழி போக விரும்புகிறவர்களை அவர்கள் வழியிலேயே விட்டு விடுகிறான். நீங்கள் விரும்பும் வழிகளை தேர்ந்தெடுக்க சுலபமாக்கி வைத்திருக்கிறான். வெற்றியடைய விரும்பும் மனிதனுக்கும் வழிகளை சுலபமாக்கித் தருகிறான்.

ஆனால் நான் இன்னைக்கு இஸ்லாத்திற்கு வருவதற்கு காரணம் இந்து வேதாஸ் மேலும் என் தாயார் வளர்த்த பண்பாடுதான் இஸ்லாத்திற்கு வந்தது. வந்த பிறகு என்னடான்னா நிறைய தியாகங்கள் நான் செய்ய வேண்டி இருந்தது. யாரை கட்டிக்கலாம் என்று இருந்தேனோ ''அந்த பெண் நீ பெரிய நடிகனாகி, டைரக்டராகி விடுவாய் என்று நினைத்தேன் இப்பொழுது வாட்ச் ரிப்பேர் தொழில் செய்கிறேன் என்று சொல்கிறாய் மேலும் இஸ்லாம் என்று மதம் மாற சொல்கிறாய்'' என்று சொன்னது. 

''மதம் மாறுகிறது இல்லைங்க இஸ்லாம்''. திஸ் இஸ் ட்ரூ. ''நோ படி கேன் சேஞ்ச் தி ரிலீஜன்'' எல்லா மனிதர்களும் இஸ்லாத்தில்தான் பிறந்திருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களால் தவறான பாதையில் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். யாரும் மதம் மாறவில்லை, மதம் மாறுகிறார்கள் என்று சொல்வதே தவறு ''ரிவெர்டெடு முஸ்லிம்''. ''வி ஆர் ரிவெர்டெடு அவர் ஸெல்வ்ஸ் (Ourselves)'' நாம், நம்மை திருத்திக் கொண்டோம். ஆண்டவன் அல்லாஹூதஆலா இஸ்லாத்தில்தான் படைத்திருக்கிறான். எங்கள் தாயார் என்னை இந்துவாக்கினீர்கள். நான் திருந்திக்கொண்டேன் அவ்வளவுதான். 'திஸ் இஸ் ட்ரூ'. ''வி ஆர் ஆல் ரிவெர்டெடு முஸ்லிம்ஸ்''. இன்னைக்கு இருக்கிற எல்லா முஸ்லிம்களும் முஸ்லிம் தாய் வயிற்றில் பிறந்ததற்காக முஸ்லிம் என்று சொல்லக்கூடாது. ஏன் என்றால் ''முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உலகத்தில் ஒரு சமுதாயத்தில் பிறக்கும் குழந்தைகள், நான் என் தாய்மார்கள் மார்க்கத்தில் இறக்கிறேன் என்று நினைப்பது ரொம்ப தவறு, உண்மையான மார்க்கத்தை அறியாமல் தாயின் மார்க்கத்திலேயே இறந்து விட்டால் அவர்கள் யஹூதி, நஸராக்களோடு சேர்ந்து எழுப்பப்படுவார்கள்'' என்று சொன்னார்கள். உடனே 'ஸஹாபாக்கள் யாரஸூலுல்லாஹ் அந்த சமுதாயம் எது என்று கேட்கிறார்கள்' ''நமது சமுதாயம்தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

எல்லா முஸ்லிமும் நாம் சுன்னா என்று சொல்வதற்குக் காரணம் என்ன? நாம் குர்ஆனை கேட்கனும், அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்று தெரிஞ்சுக்கனும். நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்த வழியை பின்பற்றனும். இதுதான் உண்மை. இன்னைக்கு நாம் குர்ஆனை ஓதுகிறோம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை?

ஒன்னா? இரண்டா? ''10 தடவை, 20 தடவை, 30 தடவை ஓதி முடித்து விட்டேன் சார்'' என்று சொல்கிறார்கள். ''குர்ஆனின் விளக்கம் எத்தனை தடவை படித்திருக்கிறாய்'' என்று கேட்டால். 'யாரும் படிக்கச் சொல்லவில்லை அதனால் படிக்கவில்லை' என்று பதில் வருகிறது.

குர்ஆனில் அல்லாஹூதஆலா என்ன சொல்கிறான் என்று பாருங்கள் ஸூரா யூசுப்பில், மிக அழகாகச் சொல்கிறான் சின்ன பிள்ளைக்கு தாயார் புரிய வைப்பது போல் இந்த குர்ஆனின் வசனங்கள் மிகத் தெளிவாக இருக்கிறது. யார் படித்தாலும் புரிந்து கொள்ளலாம். நிச்சயமாக இந்த குர்ஆனை அரபி மொழியில் ஏன் இறக்கினேன் என்றால் மக்கள் புரிந்து கொள்வதற்காக என்று அல்லாஹூதஆலா சொல்கிறான். ஆனால் அரபி மாநகரத்தில் இருக்கும் அரபி நபிக்காக, நபியின் மொழியான அரபி மொழியில் அனுப்பியிருக்கிறான் என்று குர்ஆன் சொல்கிறது. 

இங்குள்ள தமிழ் சமுதாய முஸ்லிம்கள் தமிழ் விளக்கம் படிக்க வேண்டும்.  அப்பொழுதுதான் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியும். இப்ப பாருங்க 'இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட, இஸ்லாத்தில் பிறந்தோம் என்று நினைக்கிற'  நாம்  இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தால் மற்றவர்களுக்கு எப்படி எடுத்து சொல்வது என்று நமக்குத் தெரியாது. இதுதான் இஸ்லாமியர்களின் பரிதாப நிலை. அல்ஹம்துலில்லாஹ்! உங்களைப் பற்றி சொல்லவில்லை. மதராஸில் அதிகமான பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். இங்கெல்லாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறீர்கள் சந்தோஷமான விஷயம்.'நிறைய பிரிவுகள்'நிறைய போரட்டங்கள்' முஸ்லிம்களுக்குள்ளேயே!. காரணம் குர்ஆனை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

தெரியாதவர்கள் குர்ஆனின் விளக்கத்தைப் படியுங்கள். குர்ஆன் தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம் என்று அனைத்து மொழியிலும் வந்து விட்டது. உலகத்தில்  177 மொழியில் குர்ஆன் விளக்கம் வந்துள்ளது. உலகத்தில் அல்லாஹூதஆலா நமக்காக மிக இலகுவாக்கியிருக்கிறான்.
இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
அலாவுதீன் S.

ஊடக தீவிரவாதம் ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | September 24, 2012 | , , , ,


நேற்று(ம்) செய்திச் சேனல்களில் தொடர்ந்து அந்தச் செய்தியை மீண்டும் மீண்டும் வீடியோ கிளிப்புடன் காட்சிப்படுத்தி வாசிக்கப்பட்டது - அதுதான் "அதிரையைச் சேர்ந்த சகோதரரின் கைது" செய்தி. அந்தச் செய்தியின் காட்சிக்குள்ளே, செய்தி சேகரித்து அளிப்பவர் ஒருவரின் வக்கிரமான மிகைப்படுத்தப்பட்ட செய்தியை ஏதோ புதிய பரபரப்பை ஏற்படுத்துவதுபோல் பிரம்மையை உருவாக்கிக் கொண்டு கற்பனை கட்டுக் கதைகளை நேரில் கண்டவர் போல் கைகளை ஆட்டிக் கொண்டு பரபரப்புடன் பீதியை கிளப்ப எத்தனித்திருப்பதை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.

அவதூறுக்கு பேர்போன மீடியாவின் பிம்பமாக மாறிவரும் இன்றைய தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் இம் மாதிரியான ஒருதலைபட்ச வக்கிரப் போக்கு தொடர்வது நம் சமுதாய நலனுக்கு நல்லதல்ல.

ஒருவரின் கைது நடவடிக்கையை பரபரப்புக்காக எதையும் செய்யலாம் என்ற வன்மம் கொண்ட இந்த கேடுகெட்ட தொலைக்காட்சி, இணைய, மற்றும் அச்சு மீடியாக்கள் அனைத்தையும் புறக்கனிக்கப்பட வேண்டும். அவர்கள் செய்திடும் இவ்வகையான தரம் தாழ்ந்த தவறினை உணர்த்தி அதே ஊடகம் வழியாக மனிதநேயம் போற்றுவோம், இந்திய ஒருமைப்பாட்டை மதிப்போம்.

மற்றுமொரு தொடர் நேரலை தொலைக் காட்சியியில் நேற்று அதிரையைச் சார்ந்த சகோதரர் அவர்களின் பேட்டியைக் கேட்டவர்களுக்கு வேதனையே மிஞ்சும், அவரின் உருக்கமான வேண்டுகோள் "நிஜத்தை எழுதுங்கள்" என்பதே !

கேடுகெட்ட ஊடக தீவிரவாதிகள் அத்தோடு நிற்கவில்லை தங்களின் பங்கிற்கு கற்பனைக் கதைகளை அள்ளி விடுவதில் எவ்வகையிலும் சலைத்தவர்களல்ல என்று எல்லா சூழலிலும் செய்துகாட்டி வருகின்றார்கள் இந்த ஊடக பயங்கரவாதிகள்.

மேலும் பார்க்க : 

அதிரைநிருபர் குழு

பயணங்களில் பரவசம் ! குறுந்தொடர் - 2 15

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2012 | , , , , ,

தொடர்கிறது… 2

உறைந்த கடப்பாசியை கீரி விட்டது போன்ற சுர்ரென்ற உணர்வு, அங்கே கண்ட காட்சி மரத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர். எந்த விதமான உடல் மறைக்கும் ஆடைகளின்றி குப்புற படுத்துக்கிடந்தார். 

மேலும் நம்மை நோக்கி டேய் “வாங்கடா உங்களுக்கெல்லாம் பைத்தியம் பிடித்துள்ளது அதற்கு மருந்து என்னிடம் உள்ளது வாங்கடா” என்று மீண்டும் அழைத்தார்.

அவரின் நிலையை கண்டு மனம் கனத்தது. மேலும் நடந்து போகும்போது ஒரு இளம் பெண்ணின் குரல் ஓங்கி ஒலித்தது “எவிடாடா வந்து”என்று மலையாளத்தில் விளித்ததும்,  இந்த அர்த்த ராத்திரியில் ஒரு இளம் பெண்ணின் மலையாளக் குரல் கேட்டதும் அடிமனம் ஆட்டம் கண்டது. 

‘நெருக்கமான நண்பர்களுக்குள்’ இன்னும் ‘நெருக்கம்’ ஏற்பட்டது பயத்தால் சத்தம் போட்ட மலையாள ஸ்திரியிடம் கண்டது ‘நடையா’ அல்லது ‘ஓட்டமா’ என்று பட்டிமன்றமே வைக்கலாம் அந்த அளவிற்கு இருந்தது அந்த நடை ஓட்டம். தர்காவை  சுற்றி வலம் வந்து கொண்டிருந்த அந்த இளம் பெண் இடையிடையே தர்கா சுவற்றில் ஓங்கி ‘பளீர் பளீர்’ என அடித்துக்கொண்டு சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார். 

நாங்கள் அருகாமையில் பள்ளிவாசலுக்கு வந்ததும் ஒளு செய்து விட்டு இரண்டு ரக்காத் தொழுதுவிட்டு “யாஅல்லாஹ்! இந்த மக்களுக்கு நல்வழி காட்டுவாயக!” என்று எங்களின் பிரார்த்தனையை அல்லாஹ்விடம் மன்றாடிவிட்டு கனத்த மனதுடன் பள்ளிவாசலிருந்து வெளியேறி அந்த தர்காவை மெல்ல பயத்துடன்  கடந்து, எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

அதிகாலையே ! குற்றாலம் சென்றடைந்தோம், அங்கு சென்றடைந்ததும் தான் தெரிந்தது தொலைக்காட்சி செய்திகளில் அருவிகளில் நீர் கொட்டுகின்றது என்று பொய்(ச்செய்தியாக) சொன்னது புரிந்தது. அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியில் காட்ட வெட்கப்பட்டுக்கொண்டு அங்கே ‘குளித்தவர்கள்’ போல் தங்களை பாவ்லா(!!?) செய்து கொண்டு கால்வெட்டிய கால் சட்டையுடன் (!!!) திரிந்தனர். 

இங்கே ஒரு விசயத்தை குறிப்பிட வேண்டும் ‘சுற்றுலா பயணிகள் அரைக்கால் டிராயரையும் “T ஷர்ட்டும்” போட்டதும்’ மனதில் ‘ஜேம்ஸ் பாண்ட்’ என்ற எண்ணம் வந்து பல ‘ஜீரோ’த்தனமான வேலைகளை ஆரம்பித்து விடுகின்றனர். நடுரோட்டில் வாகனங்களுக்கு வழி விடாமல் நாங்கள் ஆடு-மாடுகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை அவ்வப்போது நிருபித்த வண்ணம் ரோட்டில் குடி-நடை போட்டனர்.

இதையெல்லாம் விட கொடுமை குடி(மக்களின்) நாற்றம் இவைகள் அனைத்தையும் சகித்துக் கொண்டுதான் குற்றாலம் சென்றடையனும். நாம் வழக்கம் போல் இட்லி கடையை தேடிப்போய் காலை பசியாறிவிட்டு, இனி இங்கே குளிக்க வழியில்லை என்றதும் ‘அப்பர் கோதையர்’ போகலாம் என்று முடிவு செய்து இன்னோவா அப்பர் கோதையர் நோக்கி பயணமானது.  இந்த அப்பர் கோதையார் செல்ல குற்றாலத்திலிருந்து பாபநாசம் வழியாக அம்பாசமுத்திரம் போய்தான் அங்கு செல்ல வேண்டும். 

குற்றாலத்தில் இருந்து அம்பாசமுத்திரம் சுமார் 55 கிலோ மீட்டர் இருக்கும் அங்கிருந்து ‘மணி முத்தாறு அருவி’ சுமார் 10 கிலோ மீட்டர் இருக்கும். அங்கிருந்து அப்பர் கோதையார் கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டார் தூரம். 'மணி முத்தாறு அருவி' வரைதான் ஃபாரெஸ்ட் அனுமதி கொடுப்பார்கள். நாம் “ஃபாரெஸ்ட் செக்-போஸ்ட்டில் அப்பர் கோதையார்  போக வேண்டும்” என்றதும் அங்கு போக அனுமதி இல்லை என்றனர். நாமோ நம்மூர் கல்லூரி பேராசியரின் பெயரை சொன்னதும். “ஓ! (ஏற்கனவே இவருக்கும் அவருக்கும் நல்ல பழக்கம் உண்டு) அவர்  உங்களுக்கு  தெரிந்தவரா?” என்று கேட்ட அலுவலர் உடனே அவருக்கு போன் செய்து பேசிவிட்டு போனை நம்மிடம் கொடுத்தார்.

நாம்முடைய பேராசிரியரிடம் பேசும்போது “நீ எப்போ சவுதியிலேயிருந்து வந்தே?” என்றார்”,

“மூன்று நாள் ஆச்சு சார்” என்றதும்.. போனை  ஆபிசரிடம் கொடுக்க சொன்னார். 

இருவரும் பேசி முடித்ததும் ‘அப்பர் கோதையார்’ போக உடனே கடிதம் ரெடி செய்து கொடுத்தனர். 

நமது கார் செக்-போஸ்ட்டை தாண்டி மணிமுத்தாறு அருவி அருகே உள்ள செக்-போஸ்ட் வந்ததும் பர்மிசன் கடிதத்தை காட்டி விட்டு அனுமதி கிடைத்ததும், ‘அப்பர் மலை’ ஏற்றத்தில் ஏற தொடங்கிய அரைமணி நேரத்தில் மாஞ்சோலை என்ற எஸ்டேட் வந்தது. இந்த மாஞ்சோலை பிரச்சனையால் திருநெல்வேலியில் பல வருடங்களுக்கு முன்பு பல உயிரிழப்புகள் நிகழ்ந்தது நினைவிருக்கலாம். 




வண்டியை நிறுத்திவிட்டு அங்கு விளைந்த “டீ தூளில்” ருசியாக டீ குடித்ததும் இரவு முழுதும் கார் ஓட்டி கலைத்த உடம்புக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. புத்துணர்ச்சி  மேலோங்க காரும் செங்குத்தான மலை(!!!) ஏறத்தொடங்கியது. புறப்பட்ட சிறிது நேரத்தில் ஆங்காங்கே கருங்குரங்குகள் தென்பட ஆரம்பித்தது. குரங்கை தெளிவாக புகை படம் எடுக்க முடியவில்லை காரணம் மரத்துக்கு மரம் தாவிக்கொண்டே இருந்தது. குரங்கு மட்டும் என்னவாம் “ஏம்ப எங்களையும் போட்டோ எடுப்பா!!” என்று போஷா கொடுக்கும். 


அப்பர் கோதையாரின் உச்சிக்கு சென்று ‘அப்பர் கோதையாரின்’ இயற்கை காட்சிகளை  நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கு 1942ல் கட்டிய ‘மரப்பாலம்’ இன்றும் வாகனங்கள் போய் வருகின்றது. அதையும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு பகல் சாப்பாடு சாப்பிடாமல் (சாப்பாடு கிடைக்கவில்லை அதுதான் உண்மை) ‘டீ வடை’ சாப்பிட்டதோடு கார் கீழிறங்க தொடங்கியது. வழியில் மஞ்சோலை டீ எஸ்டேட்டில் ஆர்கானிக் ‘டீ’த்தூள் (இயற்கையான உரத்தில் விளையும் ‘தேயிலை’) வாங்கிக் கொண்டு  கிழே உள்ள மணி முத்தாறு அருவியில் அலுப்பு தீர குளித்து விட்டு மாலை ஐந்து மணிக்கெல்லாம் குற்றாலம் நோக்கி புறப்பட்டோம்.




புறப்பட்ட சிறிது நேரத்தில் எல்லோருக்கும் பசி (குடலை உருவ ஆரம்பித்து விட்டது ) கார் நேராக செங்கோட்டை ரோட்டில் உள்ள ரஹ்மத் “நாட்டுக்கோழி” கடையை நோக்கி சீறிப்பாய்ந்தது.

பயணம் தொடரும்.. .
Sஹமீது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)