Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

"BLACKBERRYயா?" இல்லை "கருப்பு எலியா?" 9

அதிரைநிருபர் | August 16, 2010 | , , ,

சொந்த ஊர்ல மூக்குப்பொடிக்கு வக்கில்லாதவன் கிட்டயெல்லாம் இந்த “கருப்பு எலி” இருந்துக்கிட்டு                       என்னா ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கிறது.    
நல்ல பயனுல்ல இந்த அறிவியல் கண்டுபிடிப்பு சாதனம், வியாபாரம் வணிகத்துறையில் உள்ளவர்களுக்கு உதவியாகவும், பிரயோஜனமாகவும் இருப்பது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

கடந்த சில நாட்களாக பத்திரிக்கைகளில் இந்த “கருப்பு எலி” சம்பந்தமாக இந்தியா, அமீரகம், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது என்பதை நாம் அறிவோம். இந்த “கருப்பு எலி”யின் மேல் நம் மக்களுக்கு அவ்வளவு ஈர்ப்பு. இந்த “கருப்பு எலி”யின் வரலாறு பற்றிய செய்திகளை கீழே தரப்பட்டுள்ள ஆங்கில விளக்கத்தை பாருங்கள்.

Blackberry Trivia

The first BlackBerry, the 850, launched in 1998, used two AA size batteries.

It took until 2004 for BB makers Research in Motion to reach two million subscribers.

RIM did not add a camera to a BlackBerry smartphone until 2007; BlackBerry Curve was the first one.

In January 2010, RIM shipped its 50 millionth BlackBerry smartphone.

BlackBerry smartphones are sold in over 150 countries from over 425 carriers and national distribution partners.

RIM continues to grow even during the economic decline. RIM hired more than 4,000 employees last year. In January this year RIM had over 12,000 employees.

ஒருவன் பிறந்தது முதல் மண்ணறைக்கு செல்லும்வரை இந்த “கருப்பு எலி” உதவியாக இருக்குமாம், என்னா காமெடி அடிக்கிறாங்க. ஈமெயில், சாட்டிங் பேன்ற வசதிகள் கொண்ட இந்த “கருப்பு எலி”யால் நன்மையா தீமையா என்று அளசும் போது, அது மக்கள் இதை பயன்படுத்தும் விதத்தில் தான் இதன் நன்மை தீமைகள் வித்யாசப்படுகிறது.

காலையில் விழித்தது முதல் இரவு படுக்கைவரை இந்த “கருப்பு எலி” சிலரின் நிம்மதிக்கும் அவர்களை சுற்றியுள்ளவர்களின் நிம்மதிக்கும் அல்வா கொடுக்கிறது என்பது நடைமுறையான உண்மை என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொண்டுதான் ஆகாவேண்டும்.

ரோட்டில் சிக்னலில் இருக்கும் போதும், வாகனங்களில் சொல்லும் போதும், பேருந்துகளில் இருக்கும் போது,  வழிபாட்டுதலங்களிலும், இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். அப்பாப்பா இந்த இரண்டு கட்ட விரலால் இந்த “கருப்பு எலி”யை வச்சுகிட்டு என்னாமா பந்தாவிடுராங்க. இதை ஒருவிதமான நோய் என்று சொன்னால் மிகையில்லை.

இந்த “கருப்பு எலி”யால் கட்டவிரலுக்கு என்று புதிய நோய் உருவாகியுள்ளதாம்.

எல்லாத்தைவிட கொடுமை, நாம் நல்லா அழகா வரி வரியா ஒரு மடல் எழுதியிருப்போம் ஒருவருக்கு, அவரிடமிருந்து வரும் இரண்டுவரியில் கேவலமான ALIGNMENTல வரும் பாருங்க பதில், வேறுத்து போவியிடுவோம். காரணம் அவர் “கருப்பு எலி”யிலிருந்து பந்தாவா பதில் போட்டிருப்பாரு.

எத்தனையோ குடும்பங்களில் கணவன், மனைவி இடையே இந்த "கருப்பு எலி"யால் நிறைய பிரச்சினைகள் வருவதாக புதிதாக எடுக்கப்பட்ட சர்வே தெரிவிக்கிறது.

அமீரகத்தில் அடிக்கடி காதில் முனுமுனுத்துகிட்டு இருக்கும் கேள்வி இது தான் “கருப்பு எலி”க்கு கண்டிப்பா தடை வருமாaaaaaa? வராதாaaaaaa? என்னிடம் இப்படி கேட்பவர்களுக்கு என்னுடைய பதில் இதோ “உலக மகா பாப்புலர் ஜோசியர் ஒருத்தர் இருக்காரு” அவர்கிட்ட போய் கேளுங்க, அவர் யாரு? “அட நம்ம ஆக்டோபஸ்தாங்க”.

அது சரி  "கருப்பு எலி" என்று இந்த கட்டுரையில் ஏன் உள்ளது என்று யாராச்சும் சொல்லுங்களேன்.

எத்தனையோ சகோதரர்கள் இந்த நவீன கண்டுபிடிப்பை (BLACKBERRY)  நல்ல பயனுள்ளவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள், அவர்கள் அனைவரையும் சாடுவது இந்த கட்டுரையின் நோக்கமில்லை. இக்கட்டுரை “BLACKBERRY”யை பந்தாவுக்காக நல்ல விசயங்களுக்காக பயன்படுத்த தவறியவர்களை சும்மா நக்கலடிப்பதற்காக மட்டுமே.

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள சுட்டியை படித்துப்பாருங்கள் என்ன கொடுமையேல்லாம் இதை வச்சு நடக்குது என்று.

http://gulfnews.com/business/telecoms/the-great-divide-blackberry-blues-1.667175


நன்றி:  Gulf News

9 Responses So Far:

Ahamed irshad said...

Blackberry'ya illa Black'Worry' ya....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நடைபாதை வழியாக தலை கவிழ்ந்து தீவிரமாக இரண்டு கைகளால் இருக்கிப்பிடித்து பிபி(blackberry) (பிவீயில்லைங்க)ஐ பார்த்தவராக சென்றவர் பிளாட்பாரம் ஓராத்தில் இருந்த பார்க்கிங் டிக்கட் மெஷின் கம்பத்தில் மோதியவரை நினைத்து சிரிப்பதா அல்லது கோபப்படுவதான்னு தெரியலைங்க...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///எல்லாத்தைவிட கொடுமை, நாம் நல்லா அழகா வரி வரியா ஒரு மடல் எழுதியிருப்போம் ஒருவருக்கு, அவரிடமிருந்து வரும் இரண்டுவரியில் கேவலமான ALIGNMENTல வரும் பாருங்க பதில், வேறுத்து போவியிடுவோம். காரணம் அவர் “கருப்பு எலி”யிலிருந்து பந்தாவா பதில் போட்டிருப்பாரு.///

மெய்தானுங்கோ... சூப்பரா கலர்ஃப்புல்லா Bossஸிடம் அப்ருவல் வாங்கிறதுக்கு ஈமெயில் அனுப்பினால் வருமே பதில் உடைஞ்ச எழுக்களாக அவரோட மனசுபோல..

Shameed said...

கட்டுரைக்கு படங்கள் தெரிவு செய்வது யார் அருமை . கடைசி படம் சூப்பர்ப்பா

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

சகோ. தாஜூத்தீன் சொல்வது போல் சகோ. சாஹூல் 'குடுத்துவச்ச ஆளு'ண்டு

யாரு கண்ணு பட்டதுன்னு தெரியலே ஒரு வாரமா தமிழ் டைப் கட்டு.
இனிமே கொடுத்து வச்ச ஆளு வாங்கிவச்ச ஆளு எடுத்து வச்ச ஆளுன்னு ஆளுஆளுக்கு கன்னுபோடதியா வாப்பமாரா நல்லா இருப்பிய (வீட்டுல உள்ள பட்டமிளகாய் எல்லாம் காலியா போச்சி களிப்பு களிச்சதுலே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///வாப்பமாரா நல்லா இருப்பிய (வீட்டுல உள்ள பட்டமிளகாய் எல்லாம் காலியா போச்சி களிப்பு களிச்சதுலே ///

சாஹுல் அது பட்ட மிளகாயா அல்லது காய்ந்த மிளகாயா ? அடுப்பில் போட்டது நொடி மூக்கைத் துளைத்து விட்டதோ ? கவலப்படாதிய இது சின்ன புள்ளைவோ கண்ணூருதான் ஒன்னும் செய்யாது !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு