Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 2 11

அதிரைநிருபர் | March 28, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ‘’நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! கூலியை அதிகம் பெற்றுத்தரும் தர்மம் எது?' என்று கேட்டார். 'நீ ஆரோக்கியமாகவும், ஏழ்மையை பயந்து, செல்வத்தை எதிர்பார்த்திருக்கும் ஏழையாகவும் இருக்கும் நிலையில் நீ தர்மம் செய்வதுதான். உயிர் தொண்டைக்குழியை அடைந்து, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு என நீ கூறும் நேரம் வரை, (தர்மம் செய்ய) தாமதிக்காதே' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘’  (புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 90)


அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ‘’'நரகம், மனோ இச்சைகளால் திரையிடப்பட்டுள்ளது. சொர்க்கம், கஷ்டங்களால் திரையிடப்பட்டுள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘’ (புகாரி, முஸ்லிம்).  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 101)

ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்: '(உணவை உண்டு முடித்ததும்) விரல்களையும், தட்டையும் நன்கு சுத்தம் செய்து (சாப்பிட) கட்டளையிட்ட நபி(ஸல்) அவர்கள், ''நீங்கள் அந்த உணவில் எதில் பரக்கத் உள்ளது என்பதை அறிய மாட்டீர்கள்' என்று கூறினார்கள். (முஸ்லிம்).

முஸ்லிமின் மற்றொரு அறவிப்பில் கீழ்கண்டவாறு ஹதீஸ்கள் உள்ளது:

1) 'உங்களில் ஒருவரின் ஒரு பருக்கை உணவு கீழே விழுந்து விட்டால், அதை அவன் எடுக்கட்டும்! அதில் உள்ள அசுத்தத்தை நீக்கட்டும். பின்பு அதை சாப்பிடட்டும்! ஷைத்தானுக்காக அதை விட்டு விட வேண்டாம். தன் விரலை சூப்பி சுத்தம் செய்யும் முன் தன் கையை துண்டில் துடைக்க வேண்டாம். நிச்சயமாக தன் உணவில் எதில் பரக்கத் (அபிவிருத்தி) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

2) நிச்சயமாக ஷைத்தான், உங்கள் ஒவ்வொரு செயலின் போதும் ஆஜராகிறான். இதுபோல் ஒருவர் சாப்பிடும் போதும் ஆஜராகிறான். உங்கள் ஒருவரிடமிருந்து ஒரு பருக்கை விழுந்துவிட்டால், அதில் உள்ள அசுத்தத்தை(தூசியை) நீக்கி விட்டு, சாப்பிடட்டும்! ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (ரியாளுஸ்ஸாலிஹீன்: 164)

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: 'என்னை மறுத்தவர் தவிர என் சமுதாயத்தினர் அனைவரும், சொர்க்கத்தில் நுழைவார்கள்!' இறைத்தூதர் அவர்களே! மறுப்போர் யார்? என்று கேட்கப்பட்டது. 'எனக்குக் கட்டுப்பட்டவர், சொர்க்கத்தில் நுழைவார். எனக்கு மாறு செய்தவர், என்னை மறுத்தவராவார்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ' (புகாரி).
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 158)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''.
(நூல்: புகாரி,முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

-- அலாவுதீன். S.


11 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஒரு இம்மை மறு மறுமை சூப்பர் நிருபர்(அதிரை)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு அலாவுதீன் காக்கா அவர்களுக்கு மிக்க நன்றி. உண்மையில் அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்தே நீங்கள் தொகுத்தளித்த ஹதீஸ்கள்.

//நரகம், மனோ இச்சைகளால் திரையிடப்பட்டுள்ளது. சொர்க்கம், கஷ்டங்களால் திரையிடப்பட்டுள்ளது //

இந்த இரண்டு வரிகளில் எவ்வளவோ அர்த்தங்கள் உள்ளது என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகளார் நமக்கு எத்திவைத்துவிட்டார்கள். நம்மவர்கள் பலருக்கு இன்னும் இது புரியவில்லையே.

இது போல் தொடர்ந்து தொகுத்துத்தாருங்கள் காக்கா...

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

நல்லதொரு தொகுப்பு

மேலும் இது போன்று எதிர் பார்க்கின்றோம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அவசியமான அருமையான மருந்து.. காலம் அறிந்து நினைவூட்டும் பதிவு...

யா அல்லாஹ் ! அரும்பு மீசை பருவத்தில் இதே போல் எங்களுக்கு எடுத்து வைத்து நல்லதை மட்டுமே சொல்லித்த தந்த நல்லவர்கள் இன்று ஏனோ சந்தர்ப்ப வசத்தால் அமைதியற்ற அரசியல் சூழலுக்குள் சுழன்று இன்று ஆளுக்கொரு முடிவு எடுத்து இங்கே ஒரு கால் அங்கே ஒரு கால் என்று அல்லாடும் சமுதாயத்தை ஒருங்கினைத்து அமைதியைக் கொடுத்திடுவாயாக !

sabeer.abushahruk said...

நன்றி அலாவுதீன்,

நீ தொகுத்தளித்த நல்லுபதேசங்கள் இன்றைய தினத்திற்கு இதமான விடியலைத் தந்துள்ளது!

Yasir said...

தேர்தல் விவாதம்,கலக்கல் கவிதை என பரபரப்பாக இம்மை பற்றிய பேசிகொண்டிருந்த நமக்கு ஒரு நல்ல ஹதீஸ் தொகுப்பை தந்து இறையச்சத்தை ஏற்படுத்திய அலாவுதீன் காக்காவிற்க்கு வாழ்துக்கள்

அப்துல்மாலிக் said...

தேர்தல் தொல்லைகளால் குழப்பத்திலுள்ள மக்களுக்கு ஒரு தெள்ளத்தெளிவு ஹதீஸ்/வசனம்

அபு ஆதில் said...

"குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்".
நல்லதொரு நினைவூட்டல்.
நன்றி சகோ.அலாவுதீன்.

Riyaz Ahamed said...

சலாம்
உள்ளம் அமைதி பெற உண்மையில் நாம் மார்கத்தை சரியா பேணி நடக்க குரான் ஹதீஸ் தொடர்ந்து படிப்பதுடன் பிறருக்கும் எத்திவைத்து கொண்டே இருக்கணும் -நன்றி

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் .எக்காலத்துக்கும் ஏற்ற பொக்கிஷம்.எக்காலம்மிடும் இறை மருப்பாளர்களும் படித்து தெளிய வேண்டிய அற்புதம்.மனனோய்,இன்ன பிற நோய் போக்கும் மாமருந்து. எல்லாருக்கும் பொது மறை.இறைவனின் அருட்கொடை. இதன் படித்து அதன் வழி நடப்பது நம் கடமை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு