Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என்னாம்மா பெரளியெ(புரளி) கெழப்புறாங்கைய்யா..! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | December 11, 2012 | , , , , ,


என்னுடம் பணிபுரியும் கடலூரைச்சார்ந்த நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னது "பாய், ஊருக்கு ஃபோன் பண்ணுனேன். அங்கு ஒரே பீதியாகவும், அச்சத்துடனும் எல்லோரும் இருந்து வருவதாக சொல்றாங்க".

"ஏன் எதுக்காக?" என்றேன். 

அதற்கவர் "வர்ர டிசம்பர் 23ம் தேதி உலகம் அழியப்போவுதாம், (என்றோ மாயமா மறைந்து போன எவனோ ஒரு மாயன் என்பவன் தயாரித்த காலண்டர் 23ம் தேதி டிசம்பர், 2012 வுடன் முடிவடைகிறதாம். அதுக்கு நாம என்னா செய்றது? அவருக்கு மேக்கொண்டு தயாரிக்க இயலாமல் சுகக்குறைவா போய் இருக்கலாம்? அந்நேரம்  காசு, பணம் முடையாக இருந்திருக்கலாம்? அதை விட வேறு நல்ல ஒரு இடத்தில் கை நிறைய சம்பளம் கிடைத்து அந்தப்பணியை பாதியிலேயே விட்டிருக்கலாம்? யாருக்குத்தெரியும்?)

எல்லோரும் பரவலா பேசிக்கிடுறாங்களாம் ஊரில்" அதைக்கேட்டு மெய்சிலிர்ப்பதாக சொல்லி கொஞ்சம் சிலிர்த்துக்கொண்டார்.

அதற்கு நான் உடனே பதில் சொன்னேன். பருவ நிலை மாற்றங்களாலும், பனிப்பாறை உருகுவதனாலும், உலகம் வெப்பமயமாதலாலும், சுனாமி, பூகம்பம், எரிமலை வெடித்தல் போன்ற எதிர்பாராத சம்பவங்களாலும், ஓசோன் படலம் ஓட்டையானதாலோ இன்னும் வேறு பிற காரணங்களால் உலகின் சில பகுதிகள் ஆங்காங்கே அழியலாம். ஆனால் இறைவனின் திருமறையிலும், கிருஸ்தவர்களின் பைபிளிலும் பிரகடணப்படுத்தப்பட்ட ஈஸா (அலை.)/ஜீஸஸ் வருகை நிச்சயம் இருக்கிறது. பிறகு ஒற்றைக்கண்ணன் தஜ்ஜாலின் வருகை இருக்கிறது. குள்ளர்களின் வருகை இருக்கிறது. இறைவனால் அவனுடைய திருவேதத்தில் என்றோ சொல்லப்பட்ட இவர்களின் வருகைகளெல்லாம் இல்லாமல் உலகம் நிச்சயம் ஒருபோதும் அழியப்போவதில்லை. அதனால் நீங்கள் தேவையில்லாத  பதஸ்ட்டத்திற்கு(பேனிக்) ஆளாக வேண்டாம் என்றேன்.

"90 சதவித இந்தியர்கள் முட்டாள்கள்" என சமீபத்தில் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவரும், நீதிபதியுமான திரு. மார்கண்டேய கட்ஜூ வெளிப்படையாக பேசியது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது.

வருடம் 1857க்குப்பிறகு நம் நாட்டில் மக்கள் கண்டதையும் நம்பி நாட்டையே (மத)கலவர பூமியாக மாற்றியுள்ளனர் என்றும் அதனால் வானுயர வளர்ச்சியை இந்நேரம் எட்டிப்பிடித்திருக்க வேண்டிய நாம் 150 வருடங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர் தைரியமாக ஒரு உயர் பதவியில் இருந்து கொண்டு போட்டுடைத்தது நம்மை எல்லாம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

21 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// 90 சதவித இந்தியர்கள் முட்டாள்கள்" என சமீபத்தில் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவரும், நீதிபதியுமான திரு. மார்கண்டேய கட்ஜூ வெளிப்படையாக பேசியது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது.//

அப்ப எதை வைத்து நம் நாடு வல்லரசாக ஆகபோவுது என்று சொல்லிகிட்டு இருக்காங்க?

ஜப்பானிஸ் அடிக்கடி சொல்லும் வார்த்தை (இந்தோ ஜீ அத்தமாய் ஈனே) இந்தியர்களுக்கு அதிக மூளை என்று சொல்லுவார்களே!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இறைவனின் கட்டளைப்படி இயங்கும் இயற்கை சீற்றங்களால் உலகில் சில இடங்கள் அங்கொன்று, இங்கொன்றுமாக அவ்வப்பொழுது பாதிக்கப்படலாம். என்றோ அவன் அழகுடன் உருவாக்கிய இவ்வுலகம் எவனோ ஒரு மாயன் கூறுவதால் எளிதில் அழிந்து விடுமா என்ன?

நாம் தான் அதை நினைத்து அஞ்சி, அஞ்சி அழிந்து போவோமேயொழிய இறைவனின் அத்தாட்சிகளை நிறைவு செய்யாமல் உலகம் அவ்வளவு ஈசியாக அழிந்து விடாது என்பது மட்டும் திண்ணம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

திரு. மார்க்கண்டேய கட்ஜூ பெரிய விசயமான இன்னொன்றையும் வெரி சிம்ப்ளா சொல்லி இருக்கிறாரு..."வெறும் 2000 ரூபாயை வைத்து டெல்லியில் ஒரு பெரும் மதக்கலவரத்தை ஏற்படுத்தி உயிருக்கும், உடமைக்கும் நாசத்தை ஏற்படுத்த முடியும்".


கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
...

கர சேவகரே வருவீரா

மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை

கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்

(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில்
இடிந்து போய் எழுதியது என்று
கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய இந்த கவிதை
தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில்
வெளிவந்துள்ளது..)

அப்துல்மாலிக் said...

//90 சதவித இந்தியர்கள் முட்டாள்கள்"//

ஒலகம் அழியப்போவுது என்று அதிகம் பயப்படுறது மேலை(ஐரோப்பா/அமெரிக்கா)நாட்டவர்தான். அவனுங்கதான் இந்த மாயன் காலண்டரை நம்புறாய்ங்க. ஃபிரான்ஸ்லே 50 குடித்தனங்களுடன் மக்கள் வாழும் ஒரு மலை இருக்காம், அங்கே சென்றா அந்த குறிப்பிட்ட நாளில் வெளிகிரகங்களிலேர்ந்து சிலர் வந்து அங்கே உள்ளவங்களை மட்டும் தூக்கிட்டுபோய்டுவாங்களாம், எனவே நாமும் உலக அழிவுலேர்ந்து தப்பிக்கலாம் என்று எண்ணி ஒரு மாதம் முன்னரே மக்கள் சாரை சாரையாக போறாங்களாம், போலீஸ் அங்கே போகும் பாதையை அடைத்து அந்த 50 குடித்தன மக்களுக்கு நீங்க செல்வதால் சிரமமே ஒழியே வேறு இல்லை என்று சொல்றாங்களாம்..


இப்போ சொல்லு நெய்னா 90% முட்டாள் இந்தியாவுலேயா இல்லை மற்றநாட்டினரா?

Yasir said...

இது நம்மாட்கள் பரப்பிவிட்ட செய்தி அல்ல,நீண்ட காலமாகவே நாகரிகம் மட்டும் தொழிநுட்ப வளர்ச்சியில் உச்சாணிக்கொம்பில் இருக்கும் மேலைநாட்டவர்கள் கிளப்பிவிட்ட புரளி....

மனிதர்களை கை கால்களை கட்டுபோட்டு நெஞ்சை பிளந்து இதயத்தை தனியாக எடுத்து பலி கொடுக்கும் இந்தமாயர்கள் யாருமல்ல ஆத்&சமுது கூட்டம் தான்..அல்லாஹ் குர் ஆனில் அவர்களைப்பற்றி கூறும்பொழுது

Have they not traveled in the Earth and seen the final fate of those before them? They had greater strength than them and cultivated the land and inhabited it in far greater numbers than they do… (Qur'an, 30:9)

அவர்களை அல்லாஹ் அழித்தொழித்தான் அல்லாஹூ அக்பர்

Yasir said...

some more Quran Aya about them

Have they not traveled in the Earth and seen the final fate of those before them? They were greater than them in strength and left far deeper traces on the Earth . . . (Qur'an, 40:21)

Have they not traveled in the land and seen the final fate of those before them? They were more numerous than them and greater in strength and left more and deeper traces on Earth, but what they earned was of no use to them. (Qur'an, 40:82)

How many wrongdoing cities We destroyed, and now all their roofs and walls are fallen in; how many abandoned wells and stuccoed palaces! (Qur'an, 22:45)

Yasir said...

one more

Haven't they traveled in the land and seen the final fate of those before them? They were far greater than them in strength. God cannot be withstood in any way, either in the heavens or on Earth. He is All-Knowing, All-Powerful.
(Qur'an, 35:44)

These statements imparted in the Qur'an are supported by archaeological findings. When archaeological discoveries and the sites where past communities lived are examined, it can indeed be seen that most of these societies enjoyed a higher level than some present-day communities, and that they made enormous advances in the fields of construction technology, astronomy, mathematics and medicine. This yet again invalidates the Darwinist myth of the evolution of history and societies.

visit : www.thestoneage.org

sabeer.abushahruk said...

தலைவா அப்துல் மாலிக்,

தூள். நான் உங்க கட்சிதான்.

நெய்னா,

உங்கப் பக்கம் யாரார்னு சொல்லிடுங்க. பேசித்தீர்த்துக்குவோம் " முட்டாள்கள் அவிங்களா நாமளா" என்று.

நான் அடிச்சு சொல்வேன். உலகத்தை அழிக்கிற அளவுக்கு பெரிய அழி ரப்பர் இன்னும் கண்டுபிடிக்கப்படலன்னு.

தம்பி நெய்னா, இந்த அறிவிப்புக்குப்பின்னால் "அட்ஷய திருத்தி - பவுனு வாங்குறது" மாதிரி யாவார மேட்டர் இருக்கும் பாருங்களேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

காற்றில் பரவும் வைரஸ் கிருமியை விட வேகமாகமாய் பரவக்கூடியது தான் மதக்கலவரங்கள். நம் நாட்டில் இராணுவம், கடற்படை, விமானப்படை, தரைப்படை என எல்லாத்துறைகளிலும் சில பிற்போக்கு சீருடை அணிந்த பாஸிச காவிச்சிந்தனையாளர்கள் இருந்து வருவதால் மதக்கலவரங்கள் குதூகலமாய் ஆங்காங்கே அதன் கொட்டத்தை அடித்து விடுவதைத்தான் நீதிபதி தன் பார்வையில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார்.

மதக்கலவரங்கள் எல்லாம் என்றோ நம் நாட்டில் ஒழிக்கப்பட்டிருந்தால் ரிலைன்ஸ், டாடா போன்ற பெரும் நிறுவனங்களின் மொத்த வணிகமும், புலி மார்க் சீயக்காய் போன்ற சிறு தொழில்களும் அந்நிய நாட்டு முதலீடு நம் நாட்டில் நுழைய அனுமதிக்கக்கூடாது என அமெரிக்கர்களும், அதன் பாராளுமன்ற எம்பிக்களும் இந்நேரம் போர்க்கொடி தூக்கி இருப்பார்கள் அமெரிக்காவில் (அந்தளவுக்கு நம் நாடு வானுயர வளர்ச்சியை என்றோ எட்டிப்பிடித்து தன்னிகர் அடைந்திருக்கும் என்று சொல்ல வந்தேன்).

அந்நிய முதலீட்டைத்தான் ஆதரிக்கமாட்டோம். சரி உள்நாட்டு தண்ணீரையாவது தாராளமாய்த்திறந்து விடுங்களம்ப்பா....

நம் நாட்டின் அணைகளின் ஷட்டர்கள் எல்லாம் நவீனமயமாக்கப்பட்டு கணிப்பொறி மூலம் தானியங்கியாக செயல்படும் வண்ணம் ஆக்கப்பட்டு அதன் சாவிகள் எல்லாம் டெல்லியில் இந்திய ராணுவத்தின் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். நாட்டில் உண்மையில் காயும் பகுதிகளையும், காயாமல் பசுமையாய் இருக்கும் பகுதிகளையும் அவர்கள் சாட்டிலைட் மூலம் நன்கு கண்காணித்து அதன் படி தண்ணீர் பகிர்மானம் நியாயமாய் இருக்க வேண்டும்.

Shameed said...

//"90 சதவித இந்தியர்கள் முட்டாள்கள்"//
உண்மை சில நேரங்களில் கசக்கும்

Abdul Razik said...

Mr. Sabeer
நான் அடிச்சு சொல்வேன். உலகத்தை அழிக்கிற அளவுக்கு பெரிய அழி ரப்பர் இன்னும் கண்டுபிடிக்கப்படலன்னு என்னும் உங்கள் கருத்து தவரு, அல்லாஹ் அப்பவே உருவாக்கி வச்சிட்டான் அது முறையாக முஸ்லீம்களுக்கு சொல்லப்பட்டு விட்டது. எந்த நாள் மட்டும் என்பது சரியாக குறிப்பிடவில்லை.
கியாம நாள் வரும் வரை இது போன்ற பொய்த்தகவல்களை முட்டாள்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்று நினைக்கிறேன் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

Abdul Razik
Dubai


Unknown said...

Assalamu Alaikkum

The hottest topic that could lead to end of the world is Global Warming Alarm(Its a kind of an eraser to end world). Human invented so many things for his easiness in living. But neglected the negative consequences. - gradually impacting in moral level, health level, and earth and environment level.

May Allah save us and whole humanity.

ZAKIR HUSSAIN said...

ஒரு பக்கம் "மாயன் காலண்டர்". இன்னொரு பக்கம்
12 / 12 / 12 தேதியில் பிள்ளை பிறப்பதற்காக ஆப்பரேசன் தியேட்டர்கள் எல்லாம் முன்கூட்டியே புக்கிங்.இந்த தேதியில் கல்யாணம் செய்து கொள்வதால் வீட்டு வாசலுக்கே எல்லா செல்வமும் கூரியரில் வந்து சேர்ந்துவிடும் எனும் எண்ணத்தில் பல ஜோடிகள் அநியாயத்துக்கு கல்யாண ஹாலையும், மற்ற செலவுகளையும் மாய்ந்து மாய்ந்து செய்கிறது.



இதில் என்ன காமெடி தெரியுமா?....இப்படி லூஸ்தனமாக நடந்து கொள்பவர்கள் அனைவருக்கும் கடவுள் / இயற்கை / விதி மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தேதியை கண்டுபிடித்தது மனிதன் தான் என்பதை சுத்தமா மறந்து விட்டார்கள்

sabeer.abushahruk said...

dear brother Abdul Razik,
Assalamu alaikkum varah...

First of all, welcome in Tamil :-)

Seriously, I was just kidding with that comment. It's a type of boyhood wits spoken among friends.  They call it, "kadi joke".

If it was taken seriously then it will be counted as a sin committed by me. I seek Allaah's forgiveness.

Ebrahim Ansari said...

மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் கூறியதை நான் என் பார்வையில் காண்பது என்ன வென்றால் 90% பேர் முட்டாள்கள் என்று அவர் சொன்னது தவறு 97%என்று சொல்லி இருக்க வேண்டும். காரணம் மொத்த ஜனத்தொகையில் 3% மக்கள் தொகை உள்ள ஓர் உயர் சாதி மற்றவர்களை முட்டாள்களாக்கி அடிமைப்படுத்தி கல்விக்கு விலங்கிட்டு வைத்து இருந்தது. இன்றும் இந்த மூன்று சதவீத மக்களே உயர் பதவியில் .

ஒரு சாம்பிள் : தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி ஒரு பட்டை. உள்துறை செயலாளர் ராஜகோபால் மறு பட்டை. முதல்வரின் நான்கு செயலர்களில் மூன்று செயலர்கள் பட்டைகள். இதனால்தான் மற்றவர்கள் எல்லாம் மொட்டைகள். அவர் ஒரு விரக்தியில் அப்படிக் கூறி இருக்கலாம்.

Ebrahim Ansari said...

பசு மாட்டின் கண்ணில் பாலமுருகன் தெரிகிறார் என்றால் நம்புகிறான்.

வேப்ப மரத்தில் வடியும் பாலை விநாயகர் குடிக்கிறார் என்றால் நம்புகிறான்.

பள்ளிவாசல் கட்ட அஸ்திவாரம் தோண்டினால் அங்கு திடீர்ப் பிள்ளையார் தோன்றினார் என்று புருடா விடுகிறான்.

பெற்ற குழந்தைகளை மண் குழியில் போட்டுப் புதைத்து மீண்டும் தோண்டி எடுத்தால் ஆயுள் அதிகமாகும் என்று நம்புகிறான்.

தீச்சட்டி ஏந்தி வந்தால் தீர்ந்துவிடும் கஷ்டமெல்லாம் என்று நம்புகிறான்.

மொட்டைத் தேங்காயை மொட்டை மண்டையில் வைத்து அடித்தால் ஆயுள் கூடும் என்று நம்புகிறான்.

இதை நம்ப மாட்டானா?

KALAM SHAICK ABDUL KADER said...

Beliefs are the operating system of human brain. The eyes see, ears hear and body feels only what the mind wants, What the mind wants is totally directed by our beliefs. The people should come out of negative thoughts and beliefs that have been stopping them for years (as noted by our Doctor. Ibrhaim Ansari kakka).

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்போ நான் என்னா பன்னனும் !?

عبد الرحيم بن جميل said...

மார்கேண்டையன் சொன்னதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை! 90% இந்தியர்கள் முட்டாள்கள் இல்லையானால், ஏன் திருடர்களாகிய காங்கிரஸ் காரர்களும் தீவிரவாதிகளாகிய பா.ஜ.க வும் மாறி மாறி நாட்டை ஆளும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது? பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடும் கூட்டம் தானே நம் நாட்டு கூட்டம்!! 2020 குள் இந்தியா வல்லரசாகிவிடும் என்று அப்துல் கலாம் சொன்னார்,அவசர பட்டு உளரிவிட்டோமோ என்று கூட யோசித்து கொண்டிருப்பார்

sabeer.abushahruk said...

End-Of-The-World which was scheduled for Dec 2012 has been postponed to 3012 due to some "Technical Problems"..!!
Please co-operate & CONTINUE life with good spirit.

Good wishes,

J.a. Thajudeen

MD
Naina Exports, Chennai

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//End-Of-The-World which was scheduled for Dec 2012 has been postponed to 3012 due to some "Technical Problems"..!!//

தள்ளிப் போட்டாச்சா!
சூப்பர்
சந்தோசம்

அஸ்தஃபிருல்லாஹ்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு