Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 23 31

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2012 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

பக்கத்து வீட்டாரின் உரிமைகளும், அவர்களின் நலன் நாடுதலும்

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைளுக்கும், ஏழைகளுக்கும்,நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: அன்னிஸா 4:36)

'(பக்கத்து வீட்டார்) எனக்கு வாரிசாக ஆக்கப்பட்டு விடுவாரோ என, நான் எண்ணும் அளவுக்கு பக்கத்து வீட்டார் பற்றி (அவர்களுக்கு நல்லது செய்ய) எனக்கு ஜிப்ரீல்(அலை) உபதேசம் செய்து கொண்டே இருந்தார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு உமர் (ரலி), அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் இருவரும்  அறிவிக்கின்றார்கள் (புகாரி, முஸ்லிம்)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 303)

''அபூதர் அவர்களே! நீர் குழம்பை (சால்னாவை) தயார் செய்தால், அதில் தண்ணீரை அதிகப்படுத்துவீராக! அதனைக் கொண்டு உன் பக்கத்து வீட்டாரை கவனித்துக் கொள்வீராக என்று நபி (ஸல்) கூறினார்கள்.

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் (கீழ்க்கண்டவாறு) உள்ளது:

நீ குழம்பை தயார் செய்தால், அதில் தண்ணீரை அதிகமாக்கி, பின்பு உன் பக்கத்து வீட்டாரை கவனித்து, அதில் நல்லதை அவர்களுக்கு ஊற்றிக் கொடுப்பீராக என்று என் நேசர் நபி(ஸல்) எனக்கு உபதேசம் செய்தார்கள் என அபூதர்(ரலி) அறிவிக்கின்றார்கள். (அறிவிப்பவர்: அபூதர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 304)

''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் மூஃமின் அல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் மூஃமின் அல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர் மூஃமின் அல்ல என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! எவர்? என்று கேட்கப்பட்டது. எவனது தீங்கைக் கண்டு பக்கத்து வீட்டார் பயப்படுகிறார்களோ அவன்தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 305)

'முஸ்லிம் பெண்களே! ஒரு பக்கத்து வீட்டுப் பெண், மற்றொரு பக்கத்து வீட்டுப் பெண்ணை இழிவாக எண்ணிட வேண்டாம். ஒரு ஆட்டின் கால்குளம்பாயினும் சரியே! (அதையேனும் வழங்கலாம்)'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 306)

''ஒரு பக்கத்து வீட்டார், தன் வீட்டுச் சுவரில் குச்சியை நட்டு வைக்க மற்றொரு பக்கத்து வீட்டார் தடுத்திட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆனால்) இந்த நபிமொழியைப் புறக்கணித்தவர்களாகவே உங்களை நான் பார்க்கிறேனே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களுக்கிடையே இதை நான் கூறிக் கொண்டேதான் இருப்பேன். (என்று அபூஹுரைரா(ரலி) கூறுகிறார்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 307)

''அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் பக்கத்து வீட்டாரை நோவினை செய்ய வேண்டாம். மேலும் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிய ஒருவர் நல்லதைச் சொல்லட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்)                  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 308)

'அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் பக்கத்து வீட்டாரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளட்டும், அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர் தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், நல்லதைப் பேசட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஷுரைஹ் குஸாஈ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)        (ரியாளுஸ்ஸாலிஹீன்: 309)

''நபி (ஸல்) அவர்களிடம், ''இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு பக்கத்து வீட்டார் உண்டு. அவ்விருவரில் எவருக்கு நான் அன்பளிப்பு வழங்குவது?'' என்று கேட்டேன். ''அவ்விருவரில் எவரின் வாசல் உமக்கு நெருக்கமாக உள்ளதோ அவருக்கு'' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி)  அவர்கள் (புகாரி)                  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 310)

''தன் தோழரிடம் சிறந்தவரே, அல்லாஹ்விடம் தோழமைக்குரியவர்களில் சிறந்தவர் ஆவார். தன் பக்கத்து வீட்டாரிடம் சிறந்தவரே, அல்லாஹ்விடம் சிறந்தவராவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு(ரலி) அவர்கள் (திர்மிதீ)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 311)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
 அலாவுதீன் S.

31 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

அண்டை வீட்டாருக்கான அங்கீகாரம் இந்தப் பதிவு !

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா!

இப்னு அப்துல் ரஜாக் said...

மாஷா அல்லாஹ் !

அண்டை வீட்டாருக்கான அங்கீகாரம் இந்தப் பதிவு !

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா!

KALAM SHAICK ABDUL KADER said...

அண்டை வீட்டாருடனும்
அண்டை நாட்டாருடனும்
சண்டை போட்டே
மண்டை ஓட்டை
மலிவாக்கினோம்!

அண்ணல் நபிகளார்(ஸல்)
சொன்னப் பொன்மொழிகள்
கன்னல் கரும்பாயிருந்தும்
கண்டுகொள்ளாமலிருப்பதேன்?!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு