Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பத்ரு களம் - நினைவு கூறுவோம் - மீள்பதிவு 5

அதிரைநிருபர் | August 17, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அஸ்ஸலாமு அலைக்கும், அன்பான வாசக நேசங்களே ! பத்ரு களம் என்ற இந்த பதிவு சென்ற ரமளான் மாதத்தில் நம் அதிரைநிருபரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பதிவை இன்று மீள்பதிவு செய்கிறோம்.


-- அதிரைநிருபர் குழு


ரமளான் மாதம் பிறை 17ல் இஸ்லாமிய முதல்போர் பத்ரு யுத்தம்.
                                                                                                                                       
பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் அந்த நிகழ்வை ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை அதிகரிக்கலாம்.

எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பதுர் யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் ,இஸ்லாம் அழிக்கப்படாமல் பரவுவதற்கும், முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களும் முஸ்லிம்களின் எதிரிகளும் கி.பி. 623 ம்  ஆண்டு ஹிஜ்ரி 2 ம் வருடம் யுத்த களத்திற்குச் சென்று யுத்த ஆயத்தங்கள் செய்து கொண்டனர். இவ்யுத்தத்தில் கலந்துக் கொண்ட முஸ்லிம்கள்  எண்ணிக்கை 313 பேர் என்றும் எதிரிகளின் தொகை ஏறக்குறைய 1000 என்றும் ஹதீஸ்களில் காணப்படுகிறது.

எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தாமே அணியை ஒழுங்கு செய்தனர். இதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவர் என்ற நற்செய்தி பேரிறையிடத்திருந்து வந்ததை எம்பெருமானார் (ஸல்) முஸ்லிம் வீரர்களுக்கு எடுத்துரைத்தார்கள்...

மக்காவின் இறை நிராகரிப்பாளர்களுடனான பத்ரு போர் நடைபெறுவதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள் ஒவ்வொருவரின் பெயரைக் கூறி அவர்கள் கொல்லப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டினார்கள். பின்னர் பத்ரு போர் நடைபெற்று முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் கூறியவாறே அப்போரில் எதிரிகள் கொல்லப்பட்டனர் என்பதை அப்போரில் கலந்துக் கொண்ட நபித்தோழர்கள் அறிந்து நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு மெய்பிக்கப்பட்டதை உணர்ந்தார்கள்.

பத்ரு களம் கண்ட வீரத் தியாகிகள் (ஷுஹதாக்கள்)

01. உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
02. ஸஃப்வான் இப்னு வஹப்(ரலி)
03. துஷ்ஷம்மாஃ இப்னு அப்து அம்ர்(ரலி)
04 .முஸஜ்ஜஃ இப்ன ஸாலிஹ்(ரலி)
05.ஆகில் இப்னுல் பக்ரு(ரலி)
06.உபைதா இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப்(ரலி)
07.உமைர் இப்னுல் ஹம்மாம்(ரலி)
08 .யஸீது இப்னுல் ஹாரித் இப்னு கைஸ்(ரலி)
09 .அவ்ஃப் இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ (ரலி)
10 .மஸ்வூது இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ(ரலி)
11 .மஸ்அத் இப்னு ஹத்மா(ரலி)
12 .முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்திர்(ரலி)
13 .ஹாரிதா இப்னு ஸுராக்கா (ரலி)
14 .ராஃபிஃ இப்னுல் முஅல்லா (ரலி)

பத்ருப் போர் பற்றிய இந்த சொற்ப்பொழிவை கேட்டுப் பாருங்கள், கண்ணிர் வராதவருக்கும் வந்துவிடும்.

பகுதி 1 http://www.islamkalvi.com/media/iyub41/audio1.mp3



பகுதி 2 http://www.islamkalvi.com/media/iyub41/audio2.mp3



நன்றி-இஸ்லாம் கல்வி

போர் நடந்த அந்த இடங்களின் படங்களை கீழே பாருங்கள்

On 17th Ramadan Year 2nd of Hejra, Prophet Mohammad (PBUH) came to BADER from MADINA With around 300 of his Followers from the way shows in picture (Red Arrow).

Prophet Mohammed (PBUH) Camp with his Army in this Area and The Hill in the Picture is Called (Odoat Al Dunea)
Right Arrow Shows (Al Odoat Al Dunea) and on versant of it Muslims Camp, Middle Arrow Shows the way which ABO SOFEAN Convoy pass all the way through and Left Arrow Shows Malaeka mountain  (where JEBREAL and MEKAEAL sent By ALLAH with 1000 Of Malaeka to help Muslims Army against Unbelievers.)

This is where Muslims Army moved to where BADER WELL was at the back of them

A different picture angle of (Al Odoat Al Dunea) and Malaeka Mountain and the new camp area where Muslims moved to.

The Arrow shows the place of the Followers Graves

BADER THE OLD TOWN

இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான பத்ரு தற்காப்பு யுத்ததையும், பத்ரு யுத்தப் போராளிகளை நாம் நினைவு கூர்ந்து நம்முடைய தக்வாவை அதிகரிக்க முயற்சி செய்யலாமே.... அல்லாஹ் போதுமானவன்.

தொகுப்பு: அதிரைநிருபர் குழு

நன்றி: சுவனத்தென்றல், சகோ.இஸ்மத் வலைப்பூ

5 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சூழலறிந்து பதியப்பட்ட நல்ல நினைவூட்டல் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சரியான நேரத்தில் அவசியமான பதிவும் படங்களும். இறை பக்தியூட்டக்கூடியவை!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கண்கள் கலங்குதே! மனசெல்லாம் பதறுதே!

உலகம் வரலாறு காணாத ஒரு மாபெரும் வெற்றியை பெறுவதற்கு நபி (ஸல் ) அவர்களோடு தோளோடு தோல் நின்று பத்ரு போரை சொற்ப்ப சஹாபாக்கள்.சந்தித்து வெற்றி வாகை சூடிய நிலையில்.சில சஹாபாக்கள் உயிர் தியாகம் செய்ததை நினைத்து. அவர்களை நாம் அதிகமாக நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம் என்பது மட்டுமல்லாமல்.நாம் படிப்பினையும் பெறவேண்டும்.அவர்களின் உறுதியான ஈமான்.அசைக்க முடியா மறுமை பற்றிய நம்பிக்கை.அல்லாஹ்வின் மீது கொண்டுள்ள அச்சம் தான் அவர்களுக்கு சஹாபாக்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இன்று சமுதாயத்தின் நிலைமை இன்ன பள்ளிவாசலுக்கு பத்ரு படை வசூல் என்ற பெயரில் வீட்டுக்கு வீடு ரொட்டி தேங்காய்.போன்ற பொருள்களை வாங்கி தின்பண்டங்கள் செய்து சஹாபாக்களை நினைவு கூறாதது மட்டுமில்லாமல்.திங்கக்கூடிய தீனிக்கு கூட அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாமல்.செம்மறி ஆட்டு கூட்டம்போல் நம் சமுதாயம் போய்கொண்டு இருக்கிறது .நம் அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக.ஆமீன்.

அப்துல்மாலிக் said...

இந்த இடங்களை நேரில் பார்த்து பரவசம் ஆனேன், பகிர்வுக்கு நன்றி

crown said...

அருமையான மீள்பதிவு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு