Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஊடக போதை - தொடர்கிறது... 3 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2011 | , , , , ,

version : 3
அஸ்ஸலாமு அலைக்கும்,

ஊடக போதை இதுவரை வெளியான பதிவுகளில் அதிரை சார்ந்த வலைத்ததளங்களில் போலி மற்றும் புனைபெயர்களின் நிலைபாடுகளை விரிவாக அலசினோம். தொடரும் இந்த மூன்றாவது பதிவில் தற்போதைய அரசியல் சூழலில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் முக்கிய பிரச்சினையாக்கப்பட்ட(!?) முல்லை பெரியாறு அணையைத்தான, தமிழக ஊடகங்கள் மனசாட்சியில்லாமல் தங்களின் கல்லாவை நிரப்பும் கண்மூடித்தனமான போக்கை மாற்றம் என்றொரு இணையதளத்தில் வெளிவந்த ஒரு பதிவில் நமது கவனத்தை ஈர்த்த விமர்சனத்தை உங்கள் பார்வைக்கும் தருகிறோம்.

கேடுகெட்ட ஊடங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?

பத்தாம் நாள் போராட்டம், பதினொன்றாம் நாள் போராட்டம், பனிரெண்டாம் நாள் போராட்டம் என ஒவ்வொரு நாளும் முழுப்பக்க படங்களோடும், ஒவ்வொரு பக்கத்திலும் ஏதாவது தாக்குதல் செய்திகளுமாய் தினகரன் பத்திரிகை வெறிபிடித்து வருகிறது. டயர் எரித்தாலும் செய்தி. உம்மன் சாண்டியின் கொடும்பாவியை எரித்தாலும் செய்தி. கேரள எல்லையில் கூட்டம் சென்றாலும் செய்தி. தனியாய் நின்றாலும் செய்தி. கேரள மக்களுக்குச் சொந்தமான கடைகளை அடித்து நொறுக்கினாலும் செய்தி. தமிழக மக்கள் கேரளாவிலிருந்து விரட்டப்பட்டாலும் செய்தி. தினகரனுக்குத் தாங்களும் சளைத்துப் போய்விடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் தினமலரும், வரிந்து கட்டிக்கொண்டு செய்திகளை வெளியிடுகின்றன.  பிறகு முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை பேசித் தீர்வு காண்பதா அவர்களின் நோக்கமாக இருக்கப் போகிறது?

போதாக்குறைக்கு இருக்கவே இருக்கின்றன தொலைக் காட்சி சேனல்கள். தமிழக மக்களிடையே பெரும் கோபத்தையும், வெறியையும் திட்டமிட்டு பெயரளவில் பிரபல ஊடகங்கள் அனைத்தும் ஒன்றாக இருப்பதுபோல் தங்களுக்குள்ளேயே ஊட்டிக்கொண்டு இருக்கின்றன. இதனைப் பார்க்கிற கேரள மக்களுக்கும் இதே கோபமும் வெறியும் ஒரு சாராரிடம் ஏற்படும். அங்கு இருக்கிற பத்திரிகைகளும் இதே காரியத்தைத்தான் அங்கு செய்கின்றன. இரண்டு மாநிலத்து மக்களும் ஒருவருக்கொருவர் மோதி  அடித்துக் கொள்வதில்தான் இந்த ஊடகங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்? தங்கள் தந்திரங்கள் சரியாக கிளிக் ஆகி, பத்திரிகை விற்பனையும் அமோகமாக நடக்கிறதல்லவா?

கேரளாவில் ஊடகங்களின் மூலம் இதுபோல் ஊட்டப்படும் வெறிக்கு ஆளாகும் அங்குள்ள மக்களை, ‘மலையாளிகளின் அட்டகாசம்’ , ‘மலையாளத் திமிர்’ என்றெல்லாம் இந்த பத்திரிகைகள் அடைமொழிகள் இடுகின்றன. தமிழகத்தில் உள்ளவர்கள் கேரளாக்காரர்களின் கடையை அடித்து நொறுக்கினால் ‘தமிழர்களின் எழுச்சி’ என்றும், வீரம் போலவும் சித்தரிக்கின்றன. இந்த வார்த்தைகள் இனவெறியையும், இனப்பகைமையையும் விதைக்கின்றனவா இல்லையா? இதில் என்ன பெருமைப்படவும்,  போற்றிக்கொளவும் இருக்கிறது? மக்கள் ஒருவருக்கொருவர் தங்களை அடித்துக் கொள்வதில் என்ன எழுச்சி வேண்டிக் கிடக்கிறது என்பதை போராட்டங்களை முன்னின்று நடத்தி அற்ப லாபமடைய இருக்க்கும் அரசியல் கோமாளிகளுக்கு ஆதரவளிக்கும்  பொதுமக்கள் தான் சிந்திக்க வேண்டும்.

இருதரப்பு எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் தமிழகத்திலிருந்து காய்கறி, பால், முட்டை போன்ற உணவுப்பொருட்கள் கேரளம் செல்வது தடைப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது கேரள மக்கள் மட்டுமல்ல. தமிழக விவசாயிகளும் தான் என்பதை மறந்துவிடலாகாது. கேரளம் செல்லும் அனைத்துப் பாதையையும் அடைப்போம் என்றெல்லாம் இங்குள்ள சிலர் கோஷம் எழுப்புவதும் மக்களை உசுப்பிவிடுவதும் எந்த வகையிலும் பிரச்சனை தீர உதவாது என்பதோடு, தமிழக மக்களுக்கும் நலன் பயக்காது என்பது உறுதி. 

மக்களை முன்வைத்துத்தான் அணை பாதுகாப்பற்றது எனப் பிரச்சினையை ஒருபக்கம் ஆரம்பித்தார்கள். மக்களை முன்வைத்துத்தான் அணை பாதுகாப்பானது, தண்ணீர் வேண்டும் என்பதில் இன்னொரு பக்கம் உறுதியாய் இருந்தார்கள். மக்களை முன்வைத்துத்தான் இருபக்கமும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்தன. மக்களை முன்வைத்துத்தான் அரசியல் கணக்குகளும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் தீர்மானிக்கப்பட்டன.   ஆனால் இந்த மொத்த விவகாரத்திலும் இரு மாநிலத்து மக்களுக்கும் என்ன பங்கு இருக்கிறது, தத்தம் தலைவர்கள் சொன்னதைக் கேட்டதைத் தவிர.  ஆனால் அந்த மக்கள்தாம் ஒருவருக்கொருவர் இன்று அடித்துக்கொண்டு சாகின்றனர். இது என்ன கொடூரம்? 

இரண்டு பக்கமும் அமைதி வேண்டி, மக்களின் நல்லிணக்கம் வேண்டி குரல்கள் எழுகின்றன. அவைகள் இந்தப் பத்திரிகைகளால் கண்டு கொள்ளப்படுவதில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதுவரை இருபக்கமும் பொறுமையாய் இருக்க வேண்டும் என சுமூகத் தீர்வுக்கு பேசும் சக்திகள் இந்த பத்திரிக்கைகளால் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

மத்திய மாநில அரசின் மோசமானக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வீடிழந்து, மண்ணிழந்து, வாழ்க்கையிழந்து நடுத்தெருவில் வீசியெறியப்பட்ட  மக்கள் தேசமெங்கும் நிறைந்து கிடக்கின்றனர். அவர்களிடம் உருக்கமானப் பேட்டிகளை வாங்கி வெளியிடுவார்களா? தங்கள் ஆதிக்கத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிரான சிறு கல்லையும் எடுத்துப் போடாத இந்த பத்திரிகைகள் மக்களின் மீது பாறாங்கல்லைத் தூக்கிப் போட கொஞ்சமும் யோசிப்பதில்லை.  தங்களுக்கு கல்லா கட்டினால் சரி.

மாநில அரசாங்கங்களும், மத்திய அரசும், நீதிமன்றமும் மக்கள் நலன் கருதி நிச்சயம் பாகுபாடு இல்லாமல் நல்ல தீர்வு வரும் என்பது இரு மாநிலத்தின் பொதுவான மக்கள் அனைவரின் நம்பிக்கை.

தமிழகத்தில் பரபரப்புக்காக விற்பனையே குறிக்கோளாக கொண்ட ஊடகங்களில் மனசாட்சி ஊனமுடன் இருப்பதே காரணம், இவ்வகையான ஊடக போதை உவகைக்கு அடிமையாகி ஊக்கமளிக்கும் தமிழ்(!!!) மக்களே உங்களுக்குமா மனசாட்சி என்பது இல்லை ?

வேதனையான விடயம் என்னவென்றால் இந்த கேடுகெட்ட ஊடகங்களின் நாடகத்தில் தாங்களும் கதாபாத்திரம் ஏற்று பங்குபெற வேண்டும் என்ற வேடதாரிகளின் போராட்டத்தில் தங்களையும் இணைத்து அற்ப அரசியல் இலாபத்திற்காக இனவெறியூட்டி கரிசனம் காட்டி வேடிக்கை வேசம் போட்டு வருகிறார்கள் நம் இஸ்லாமிய இயக்கங்களும். முல்லை பெரியார் அணை போராட்டத்தினால் இன்று அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லீம்களும், ஏழை விவசாயிகளும் என்பதை ஏனோ இந்த இயக்க சகோதரர்களுக்கு சிந்தையில் எட்டவில்லை என்பது வேதனையே.

மொழியை முன்னிறுத்தி போராட்டம், இனத்தின் பெயரால் போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டம், பக்கத்து மாநிலங்களுக்கு எதிரான போராட்டம் என்றாலும் அதன் பின்னனிக்கு பணமுதலைகளின் ஆளுமை வெறியும் அடுத்தவனை அழிக்கும் குரூரம்தான் எங்கோ ஒரு மூலையில் இருந்து கிளம்பியதே. நியாவான்களை ஓரங்கட்டவும், அவர்களின் வியாபார ஸ்தலங்களை முடக்கவும்தான் இப்படியான போராட்டங்களுக்கு பொருளுதவி செய்து வரும் பணமுதலைகளின் சதியே. இதனால் பாதிக்கப்படுவது சாமானியமும் அன்றாடம் பொளப்பு நடத்தும் சிறு வியாபாரிகளுமே. இவ்வகையான போராட்டத்திற்கு ஊக்கம் எங்கிருந்து வருகிறது ஏன் அவர்கள் அள்ளிக் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்திராத அப்பாவிகள் நமக்காத்தான் போராடுகிறார்கள் என்று தினசரி பத்திரிகையில் முகத்தை புதைக்கிறான், விழித்தது முதல் உறங்கும் வரை செய்திச் சேனல்கள்களில் மூழ்கிப் போகிறான் தன்னைப் பற்றியும் தான் சார்ந்திருக்கும் நாட்டின் இறையான்மையையும் மறக்கடிக்கப்பட்டவனாக.

அராஜகங்களையும் வன்முறைகளையும் அரங்கேற்றிவிட்டு மக்களிடம் உணர்வு போராட்டம் என்ற போர்வையில் கண்ணாம்பூச்சி விளையாட்டு விளையாடி வரும் தரம் கெட்ட அரசியல்வாதிகளும், மற்றும் இது போன்றவைகளை ஊக்கப்படுத்தும் அனைத்து ஊடகங்களும் தமிழக நன்னோக்கு கொண்ட மக்களால் கண்டிக்கப்பட வேண்டியவைகளே.. !

இந்திய ஒருமைப்பாடு எங்கே?????? 

நன்றி: (எடுத்தாய்ந்த கருத்துக்களுக்கு) மாற்றம் இணையதளம்.

- அதிரைநிருபர் குழு

10 Responses So Far:

Yasir said...

//இரண்டு பக்கமும் அமைதி வேண்டி, மக்களின் நல்லிணக்கம் வேண்டி குரல்கள் எழுகின்றன. அவைகள் இந்தப் பத்திரிகைகளால் கண்டு கொள்ளப்படுவதில்லை.// நெத்தியடியாக சொல்லி இருக்கிறீர்கள்...அருமையான ஆக்கம் அ.நி....பரபரப்பை கொண்டு மட்டும் பிசினஸ் செய்யும் இந்த பாவிகள்...படிக்கும் மக்களின் மனோபவம் / சிந்திக்கும் அறிவு மாறினால் மட்டுமே திருந்துவார்கள்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பத்திரிக்கைகள் பணம் பார்க்க குறுகிய மனப்பான்மையுடன் எதையும் செய்வார்கள் என்பதற்கு நல்ல சான்றளிக்கும் ஆக்கம்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

படத்தைக் காட்டி மக்களை பகடை காயாக ஆக்கும் கேடு கெட்ட பத்திரிக்கைகள் திருந்த போவதில்லை என்பது நிதர்சன உண்மை.

// மொழியை முன்னிறுத்தி போராட்டம், இனத்தின் பெயரால் போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டம், பக்கத்து மாநிலங்களுக்கு எதிரான போராட்டம்.//

எவன் மொழின் பெயராலோ இனத்தின் பெயராலோ போராடுகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதிஸை நம் சகோதரர்கள் உணர்ந்து விழிப்புணர்வு கொள்ளவேண்டும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"நம்ம ஆளுவொல்லேயே பல பேர் பெயருக்காகவும், புகழுக்காகவும், பணத்திற்காகவும் மற்றும் இன்ன பிற உலக ஆதாயங்களுக்காகவும் (கடன் வாங்கல், கொடுக்கலில்) கொஞ்சம் கூட நா கூசாமல் தைரியமாகவும், தெளிவாகவும் பல பொய்களையும், இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் சொல்லி வரும் இன்றைய சூழ்நிலையில் இறை நிராகரிப்பாளர்களைப்பற்றி என்னெத்த சொல்ல???"


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Shameed said...

நாட்கள் கணக்கில் கேரளா எல்லையிலும் மாதக்கணக்கில் கீத்து கொட்டாய் போட்டுக்கொண்டு கூடான்குலத்திலும் போராடும் இவர்களுக்கு உணவு உடை இன்ன பிற பொருட்கள் எப்படி கிடைக்கின்றன
இவர்களின் பிள்ளைகளின் படிப்பு என்ன ஆகின்றது ஒன்றும் புரியவில்லை .

இன்று வேலை செய்தால்தான் நாளை சாப்பிட முடியும் என்ற நிலை வந்தால்தான் இவர்கள் திருந்துவார்கள்
இலவசங்களையும் ஓசி சாப்பாட்டையும் (மதிய உணவு ) முதலில் ஒழிக்க வேண்டும் .மக்கள் மாறினால் ஊடகங்கள் உண்மைக்கு மாறாக செயல் பட முடியாது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒரே ஒரு டவுட்டுதாங்க !

போராட்டம்னா சாப்பாடு உறுதிதானே ?

சரி போராட்டத்துக்கு வருகிறேன் நானும்...

சரிங்க மொழிப்போராட்டம்னு ஒன்னு நடத்தி திராவிடக் கட்சிகளின் பத்திரிக்கைகள் கொடிகட்டி பறந்தது...

சாதிப் போரட்டம் என்று அவரவர் சாதிக் காரர்கள் ஆக்கிரமித்திருக்கும் பத்திரிக்கைகள் அங்கே கல்லா கட்டியது...

கள்ளத் தொடர்பு, க.க.வுடன் ஓட்டம், தீர்த்துக் கட்ட திட்டம், என்று தூங்கிறவய்ங்களை அதிகாலையிலே எழுப்பிவிட்டு அதுக்கப்புறம் கொட்ட கொட்ட தேடவைக்கிற வேலையை செய்வதை சிறப்புடன் செய்து கல்லாவை நிறப்பும் தூரோகம்....

இதையெல்லாம் விடுத்து... சிக்கினான், கண்டுபிடிப்பு, தப்பி ஓட்டம், பிடிபட்டனர், பதுங்கியிருந்தனர், அம்பலம் இவைகளுக்கு முன்னுக்கும் பின்னுக்கும் போட்டுக்க ஒரு வார்த்தை தீவிரவாதி அதனை பொருத்தி அவர்களின் பொன்னேடுகளில் பொறிக்கவும் வலுசேர்க்கவும் இந்திய மொழிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரே வார்த்தை "முஸ்லிம்"... அதுவும் எந்த ஊடகத் துரோகிகளுக்கும் பிடிக்காத வார்த்தை..

அயோக்கியர்கள் அடுப்படியில் விறகால் எழும் நெருப்பைக் கூட முஸ்லிம் தீவிராதியின் சதி எனும் இனவெறி மதவெறி பிடித்தவர்கள் பரபரப்பு ஊடக விபச்சரம் செய்யும் இந்தக் கயவர்களின் கல்லா நிறையும்...

இது இன்று நேற்றா தொடர்கிறது... !

என்னதாங்க வழி ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//இது இன்று நேற்றா தொடர்கிறது... !
என்னதாங்க வழி ?//


போராட்டங்களே முறையான சிகிச்சை

செய்தியை படித்து நொந்து மூளையில் செரிவூட்டம் அடையாமல் வீதியில் வந்து நம் வீரியத்தை, எதிர்ப்பை அவ்வப்போது காட்ட வேண்டும்.

களம் காண்பவர்களை கலங்கச்செய்யாமல் ஒற்றுமையுடன் எதிர்ப்பை காட்டவேண்டும்.

அமைதி வழியில் எதெற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தி நம் மனக்குமுறல்களை தெருவில் கொண்டு வருவதே நாளைய நம் பாதகங்களை முழுமையாக களைய வழி வகுக்கும்.

சுதந்திரம் என்ற பெயரில் பத்திரிக்கைகள் எதையும் செய்யலாம் என்றில்லாமல் அரசு கண்காணித்து அப்பப்ப அவற்றை வரைமுறைப் படுத்த வேண்டும்.

sabeer.abushahruk said...

They are all money minded, what else?

ZAKIR HUSSAIN said...

நீங்கள் எழுதியிருப்பது சாதாரண விசயம் அல்ல. "காலாகாலமாய் கல்லா நிரப்ப பயன்பட்ட ஃபார்முலா" வை தவறு என சுட்டியிருக்கிறீர்கள்.

அப்படி லேசில் விட்டுகொடுப்பானுங்க என நினைக்கிறீர்களா?....அப்படியானால் "குடி குடியைக்கெடுக்கும்" 'தைரியமாகச்சொல் நீ மனிதன் தானா? ' என்று பாட்டுப்பாடி கல்லா கட்டிய எம். ஜி. ஆர் ஐ "இதய தெய்வம் , நுரையீரல் சாமி" என கொண்டாடும் அரசாங்கமும் , முன்னால் அரசாங்கமும் இதுவரை மதுவிலக்கு கொண்டு வந்திருக்க வேண்டுமே?...

வரமாட்டானுக....ஈசியாக பணம் கொட்டும் எதுவும் தமிழ்நாட்டில் தப்பில்லை....

தாஜுதீன் (THAJUDEEN ) said...

உண்மையை அழுத்தமாக எடுத்துச்சொல்ல முஸ்லீம்களுக்கு என்று தினசரி செய்தி நாளிதழ் அவசியம், குறைந்த பட்சம் மாநில அளவிலாவது எந்த இயக்கம் சாராமல் இருக்க வேண்டும் என்பது நம் எல்லோரின் ஆவல் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வோம். சுயநலன்களை தூக்கி எறிந்தால் மட்டுமே நமக்காக நம்மவர்களால் தினசரி நாளிதழ் உருவாகும்...

எப்போது?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு