Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையின் முத்திரை ! - காணொளி கீதம் - காட்சியுடன்.... 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 18, 2015 | , ,

அதிரையின் முத்திரை கவிதைக்குப் பிசிரற்ற அசலான குரல் வளத்தோடு இனிமையுடன் சகோதரர் ஜஃபருல்லாஹ் அவர்களின் மெட்டுக்களில் இந்தக் காணொளி காட்சிப் படைப்பு அனைவரின் செவிக்கும் இனிதாகட்டும்.

ஜனகனமன இந்திய தேசிய கீதமென்றால் அதிரையின் முத்திரையோ அதிரை கீதமன்றோ !

இசையின்றி அதனுள் இச்சைகளின்றி இப்படியும் இயல்பானவைகளை இயற்ற முடியுமென்றால், இடர்களைக் களைய இறை வேதம் துதிக்க நமக்கெல்லாம் எந்நேரமும் இயலும் தானே !?



அதிரைநிருபர் பதிப்பகம்

8 Responses So Far:

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ்!

தம்பி ஜாஃபரின் குரல் வளம் மாஷா அல்லாஹ்.

"குளிரலைக் கொஞ்சும்" என்று பாடும்போதும் "மல்லிகை மணக்கும்" என்று பாடும்போதும் குரலும் மொழியும் கொஞ்சிக் கொள்கின்றன!

தொகுப்பின்வாயிலாக "ஹோம்சிக்"கை வரவழைக்கிறார் தம்பி தாஜுதீன்.

க்ரேட் வொர்க் மக்கா!

அதிரை.மெய்சா said...

நண்பன் சபீரின் எழுத்தில் உருவான ''அதிரையின் முத்திரை'' அசலாய் ஜொலித்து தேன் குரலுக்குச் சொந்தமான சகோதரர் ஜஃபருல்லாஹ் அவர்களின் இனிய குரலில் இன்னும் மெருகேறியுள்ளது. என்றே சொல்லலாம்

சொல்லப் போனால்
அதிரையின் முத்திரை
இருவரும் கூடிச் செய்த
அறுசுவை உணவு


இப்னு அப்துல் ரஜாக் said...

க்ரேட் வொர்க் மக்காஸ், காக்காஸ்

ZAKIR HUSSAIN said...

Wonderful Work....

Beautiful voice
Beautiful Kavithai
Beautiful Editing..

Unknown said...

நன்றி அதிரை நிரூபர் குழு. மற்றும் சகோ விஸுவலை அழகுற வடிவமைத்த சகோ. தாஜூத்தீனுக்கும் ஜஸாக்கலாஹ் ஹைரன்

கவி காக்கவுக்கு லடங்களில் க்ளாப்ஸ்

பின்னூட்டமிட்டவர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன்

Ebrahim Ansari said...

நாம் பிறந்து தவழ்ந்து வாழ்ந்த / வாழும் மண்ணின் மாண்புகளை கவிதையாகவும் இசையாகவும் மட்டுமல்லாமல் காணும் காட்சிகளாகவும் பதிவாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணைத்து தந்திருக்கும் விதம் அருமை! அமர்க்களம்!

அனைவரையும் பாராட்டுகிறேன்.

குறிப்பாக உயிரோட்டமுள்ள கவிதையின் உயிருக்கு தனது குரல்வளத்தால் உருவகம் தந்த தம்பி ஜாபர் அவர்களை சிறப்புடன் பாராட்டுகிறேன்.

சிறந்த கூட்டணி என்றுமே வெற்றி பெறும்.

Ebrahim Ansari said...

நெறியாளர் தம்பி அவர்களுக்கு,

மனுநீதி நூல் பற்றிய அறிவிப்புப் பகுதிகளை இனி அகற்றி விடலாம். காரணம் பிரதிகள் யாவும் விற்றுத் தீர்ந்தன. ( பணம் வரவில்லை என்பது வேறு விஷயம் ) குடந்தை தமிழ் இலக்கிய மாநாட்டில் முன்னூறு பிரதிகள், உலகத் தமிழ் நாடுகளில் இருந்து வருகை தந்த பிரதிநிதிகளுக்கு விழாக்குழுவினரால் வழங்கபப்ட்டு உலகெங்கும் பகிரப்பட்டன என்ற ஒரு பெருமை நமக்குண்டு.

மறு பதிப்பு செய்யும் முயற்சிகள் இல்லை.

மேலும் வரலாற்றுத் தொடரும் பொருளாதாரத் தொடரும் நூறுவில் உருவாக்கி இன்னமும் சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில்தான் கிடக்கின்றன.

Ebrahim Ansari said...

//மேலும் வரலாற்றுத் தொடரும் பொருளாதாரத் தொடரும் நூறுவில் உருவாக்கி //
நூலுருவில் உருவாகி என்று படிக்க வேண்டுகிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு