கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை ! 51

அதிரைநிருபர் | August 27, 2016 | , , , ,

(2007 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்இயற்றியளித்த ஆய்வுக் கட்டுரை. வலைத்தள வாசகர்களின் வசதியைக் கருதி, சில தகவல்களை விடுத்தும், சில தகவல்களை எடுத்தும் உருவாக்கப்பட்டது, இத்தொடர்.)

உம் இரட்சகனின் பாதைக்கு மக்களை நுண்ணறிவைக் கொண்டும் அழகிய நல்லுரையைக் கொண்டும் அழைப்பீராக!” (அல்குர்ஆன்-16:125) எனும் இறைவசனத்தில் இடம்பெற்றுள்ள ஹிக்மா’ (நுண்ணறிவு) என்ற சொல்லையும், “இன்ன மினஷ் ஷிஅரி ஹிக்மா” (திண்ணமாக, கவிதைகளில் நுண்ணறிவு பொதிந்துள்ளது. - இப்னு மாஜா) என்ற நபிமொழியையும் பொருத்திப் பாருங்கள்.

உண்மையும் அழகுணர்வும் நிறைந்த சொற்களால் வாழ்க்கையைச் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டுவதே கவிதைஎன்று கூறுகின்றார் இலக்கிய மேதை ஒருவர். (இலக்கியக் கலை பக்கம் 46) “ஊடுருவி நிற்கும் உண்மைப் பொருளை உணர்த்த வல்லது கவிதைஎன்பர் ஆய்வாளர்கள்.

ஓரிறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியில் கவிதைக்கென்று ஒரு கட்டுப்பாடான இலக்கணமே வகுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ‘கவிதைகளெல்லாம் பொய்என்ற பொதுவான கருத்தை மக்கள் கொண்டிருப்பதாலும், கற்பனைகளையே மூலதனமாகக் கொண்டு முற்காலக் கவிஞர்கள் கவி பாடியதாலும், இஸ்லாமியத் திருமறை குர்ஆன், “கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுவர்” (26:224) என்று கூறுகின்றது.

என்றாலும், இறைவன் அல்லாஹ் இறக்கிய வேதமும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசிய மொழியும் அரபியாக இருப்பதால், குர்ஆனிய வசனங்களும் நபிமொழிகளும் சில இடங்களில் கவிதையின் இலக்கியத் தரத்தில் அமைந்திருக்கக் காண்கின்றோம். அரபி இலக்கியத்தில், இஸ்லாத்திற்கு முந்திய ஜாஹிலிய்யாஎனும் அறியாமைக் காலத்திலிருந்தும், கவிதைகள் மலிந்து கிடக்கின்றன. இம்ரஉல் கைஸ்,

உமைய்யத் இப்னு அபிஸ்ஸல்த், லபீத் போன்ற புகழ் வாய்ந்த கவிஞர்கள் அன்று இருந்துள்ளனர். ஆனால், அத்தகைய கவி வல்லாரையும் மலைக்க வைக்கும் விதமாக, “மா ஹாதா கலாமுல் பஷர்என்று கூற வைத்தது அல்குர்ஆன்!

மக்காவில் தொடக்கமாக இறங்கிய இறைவசனங்கள் மக்கத்து இலக்கிய விற்பன்னர்களுக்கும் அறிவில் முதிர்ந்த குறைஷியருக்கும் வாயாப்புக் கொடுக்கும் விதத்தில், இனிய ஓசையுடன் கவிதைகளைப் போன்று அமைந்திருப்பதை நாம் காண முடிகின்றது. இதற்குச் சான்றாக, அன்றாடத் தொழுகைகளில் நாம் ஓதும் சிறு சிறு அத்தியாயங்கள் ஓசை நயத்துடன் உள்ளதை நாம் உணரலாம்.

இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நல்ல கவிஞர்களை ஊக்கப் படுத்தியுள்ளார்கள்! சிறந்த கவிதைகளைச் செவி மடுத்துப் பாராட்டியும் உள்ளார்கள்! கவிஞர்களைக் கவி பாடத் தூண்டியும் உள்ளார்கள்! ஏன், அவர்களே சில வேளைகளில் கவி பாடியும் உள்ளார்கள்! நபிமொழி இலக்கியங்களையும் நபி வரலாற்றையும் நன்கு ஆராய்பவர்கள் இதற்கு ஏராளமான சான்றுகளை அவற்றில் காண முடியும்.

மாநபியவர்கள் மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து சென்றபோது, மதீனாவில் அவர்களை எதிர்கொண்டு அன்பாதரவுடன் சிறுவர் சிறுமியர் கூடிப் பாடிய இசைப் பாடல் நாம் அனைவரும் அறிந்த ஒன்றல்லவா? அது இதோ:

தலஅல் பத்று அலைனா, மின் தனிய்யாத்தில் வதாஇ
வஜபஷ் ஷுக்று அலைனா, மா தஆ லில்லாஹி தாஇ
அய்யுஹல் மபுஊது ஃபீனா, ஜுர்த்த மன் இலைஹி தாஇ

* சான்றுகள்: பைஹகீ, அபூதாவூத்

இந்த வாழ்த்துக் கவிதை வரிகளைக் கீழ்க் கண்டவாறு தமிழ்க் கவிதை வடிவில் ஆக்கலாம்:

எங்கள் மீதே ஒளிவீச எழுந்து வந்த வெண்ணிலவு
மங்கா தனியத் துல்வதாவின் மருங்கி ருந்து வந்ததுவே.

அல்லா வின்பால் அழைப்பாளர் அழைக்கும் போது நாங்களெலாம்
வல்லா னுக்கே நன்றியினை வழங்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இறைவ னனுப்பிய தூதரிலே இறுதித் தூதாய் வந்தவரே!
குறையில் லாவும் நேர்வழியில் கூடி யுமக்குக் கீழ்ப்படிவோம்.

இறை உவப்பையும் நபி நேசத்தையும் இதயத்தில் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இது போன்ற கவிதை வரிகளில் இன்பத்தைக் காண்பார்கள் என்பதில் ஐயமுண்டோ?

தாரகுத்னிஎன்ற நபிமொழித் தொகுப்பில் இடம்பெறும் நபிமொழிப் பகுதியொன்று நற்கவிதைகளுக்குக் கட்டியம் கூறுவதைப் பாருங்கள்:

கலாமுன் ஃப ஹசனுஹு ஹசனுன்; வ கபீஹுஹு கபீஹுன்.

(நற்கருத்துடைய சொற்கள் கவிதைகளாகும். தீய கருத்துள்ளவை தீயவையாகும்.)

*** இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்

அதிரை அஹமது

51 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைக் கவிகளுக்கு ! ஆராவராமின்றி அமைதியாக ஆளுமை செய்திட விடுத்திருக்கும் அழைப்பே இந்த ஆய்வுக் கட்டுரை...

இதைத் தொடர்ந்து கவிதைத் தொடர் நடை பயில வாருங்கள் என்று விரைவில் அதிரைநிருபரில் எதிர்பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்... !

//“எங்கள் மீதே ஒளிவீச எழுந்து வந்த வெண்ணிலவு
மங்கா தனியத் துல்வதாவின் மருங்கி ருந்து வந்ததுவே.

அல்லா வின்பால் அழைப்பாளர் அழைக்கும் போது நாங்களெலாம்
வல்லா னுக்கே நன்றியினை வழங்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இறைவ னனுப்பிய தூதரிலே இறுதித் தூதாய் வந்தவரே!
குறையில் லாவும் நேர்வழியில் கூடி யுமக்குக் கீழ்ப்படிவோம்.”//

நபிகளரை மதீனத்து சிறுவர்கள் வரவேற்று பாடிய கவிதையினை மொழியாக்கம் செய்து எங்களுக்கு தந்த அஹ்மது மாமா அவர்களுக்கு நன்றி...

"வென்னிலவை" கவிதையில் இணைத்துக் கொள்ளாத கவிஞர்களே இல்லை ! :)

Shameed said...

கவிதை பற்றி தவறான புரிதலுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு இந்த தொடர்

KALAM SHAICK ABDUL KADER said...

ஆசான் அஹ்மத் காக்கா அவர்களின் ஆய்வு:
//என்றாலும், இறைவன் அல்லாஹ் இறக்கிய வேதமும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசிய மொழியும் அரபியாக இருப்பதால், குர்ஆனிய வசனங்களும் நபிமொழிகளும் சில இடங்களில் கவிதையின் இலக்கியத் தரத்தில் அமைந்திருக்கக் காண்கின்றோம். அரபி இலக்கியத்தில், இஸ்லாத்திற்கு முந்திய ‘ஜாஹிலிய்யா’ எனும் அறியாமைக் காலத்திலிருந்தும், கவிதைகள் மலிந்து கிடக்கின்றன. இம்ரஉல் கைஸ்,

உமைய்யத் இப்னு அபிஸ்ஸல்த், லபீத் போன்ற புகழ் வாய்ந்த கவிஞர்கள் அன்று இருந்துள்ளனர். ஆனால், அத்தகைய கவி வல்லாரையும் மலைக்க வைக்கும் விதமாக, “மா ஹாதா இல்லா கலாமுல் பஷர்” என்று கூற வைத்தது அல்குர்ஆன்!

மக்காவில் தொடக்கமாக இறங்கிய இறைவசனங்கள் மக்கத்து இலக்கிய விற்பன்னர்களுக்கும் அறிவில் முதிர்ந்த குறைஷியருக்கும் வாயாப்புக் கொடுக்கும் விதத்தில், இனிய ஓசையுடன் கவிதைகளைப் போன்று அமைந்திருப்பதை நாம் காண முடிகின்றது. இதற்குச் சான்றாக, அன்றாடத் தொழுகைகளில் நாம் ஓதும் சிறு சிறு அத்தியாயங்கள் ஓசை நயத்துடன் உள்ளதை நாம் உணரலாம்.//

மாணவன் அடியேனின் மதிப்பீடு:
”கவிதைகள் என்பது” என்ற என் கவிதையில்...
//கவிதைகள் யாவும்
பொய்மைகள் அல்ல;
ஈற்றெதுகையில் மிளிரும்
இறைமறையும்
இலக்கிய நடையால்
இதயத்துக்குள் உறையும்
பெருமானார் முஹம்மத்(ஸல்)
அருள்மொழிகள் யாவும்
புதுநடையில் போதிக்கும்
புரட்சிகளாய் சாதிக்கும்//

ஆசான் அவர்களின் ஆய்வும் மாணவன் அடியேனும் கவிதை அடிகளும் ஒத்துப்போவது கண்டு, அல்லாஹ்வுக்கு நன்றி. அல்ஹம்துலில்லாஹ்!

sabeer.abushahruk said...

வாங்க காக்கா. வந்திங்கு எங்களை பலப்படுத்துங்கள்.

இந்தத் தொடர் தவறான இருள் நீக்கும் சுடர் என வளரட்டும்.

நன்றியும் வாழ்த்துகளும் காக்கா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கவியாளர்களை வரவேற்கும் சமிக்ஞை
தமிழில் 'தல-அல் பதுரு'...மொழியாக்கம் நல்ல கருத்தாக்கம்.
'திக்ரின்' போது உற்சாகப்படுத்த அரபுக்கவிதை படிக்கப்படுவதும் நல்ல சான்று.

அதிரை என்.ஷஃபாத் said...

கவிதை-இஸ்லாமிய பார்வை என்னும் இத்தொடர் நிச்சயமாக மிகவும் பயனுள்ளதாக அமையும் (இன்ஷா அல்லாஹ்) என்பதில் துளியும் ஐயமில்லை.

சேக்கனா M. நிஜாம் said...

சகோ. அதிரை அஹமது அவர்களின் “ கவிதை – இஸ்லாத்தில் ஓர் பார்வை “ விளக்கங்கள் கூடிய தொடரை எதிர்பார்க்கும் வாசர்களில் நானும் ஒருவன்.

தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இந்த மூதறிங்கரின் ஆக்கம் நம் சந்தேகத்திற்கு நல்லதொரு முடிவாகவும். பல நல்ல கவிதையும், கவிஞர்களும் உருவாகவும் தூண்டுகோளாகவும் இருக்கும் என்பது திண்ணம்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

//ஆனால், அத்தகைய கவி வல்லாரையும் மலைக்க வைக்கும் விதமாக, “மா ஹாதா இல்லா கலாமுல் பஷர்” என்று கூற வைத்தது அல்குர்ஆன்!//

இச்சொற்றொடரில் இல்லா எனும் சொல் நீக்கப்படவேண்டும். நீக்கப்படாவிடில், "இது மனிதக் கூற்றேயன்றி வேறில்லை" எனும் எதிர்மறைப் பொருள் தரும். பார்க்க: அல்குர்ஆன் 74:21-25.

N. Fath huddeen said...

"ma huwa be qawli bashar" FROM THAFSEER FOR AYAH "INNALLAHA WA'AMURU BIL ADLI WAL IHSANI WA EETHA....

Unknown said...

தம்பி ஜமீலுக்கு நன்றி.
எனது ஆய்வுக் கட்டுரையை 'அதிரை நிருபர்' வாசகர்களுக்காகச் சுருக்கியத்தில் ஏற்பட்ட பொருள் மயக்கமே காரணம். நானறிந்தவரை, இது பற்றி இரு வேறு தகவல்கள் உள்ளன.

அழகிய ஓசை நயத்துடன் அமைந்த சிறு சிறு குர்ஆன் அத்தியாயங்களைக் கண்டவுடன், மக்கத்துக் காபிர்கள் அவற்றைப் போன்று சில வரிகளைப் புனைந்து, அவற்றைக் கஅபாவின் வாசலில் தொங்கவிட்டனர். அதைப் பரிகசிக்கும் விதத்தில்,"என்ன இது?! இது மனிதனின் கூற்றன்றி வேறில்லை" என்று அதை வாசித்தவர்கள் எழுதிவிட்டுச் சென்றனர்.

இன்னொன்று. இறைவசனம்தான் என்பதை உறுதி செய்யும் விதத்தில், "இது மனித வாக்கன்று" (மா ஹாதா கலாமுல் பஷர்) என்ற வாசகர்களின் கூற்று.

இதைச் சுருக்கியதால் ஏற்பட்ட பொருள் மயக்கம்தான்.
மொத்தத்தில், குர்ஆனிய வசனங்களில் கவிதை நயம் மறைபொருளாய் இருப்பதை அன்றைய மொழி வல்லார் உறுதி செய்தனர்.

மிக்க அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

KALAM SHAICK ABDUL KADER said...

//குர்ஆனிய வசனங்களில் கவிதை நயம் மறைபொருளாய் இருப்பதை அன்றைய மொழி வல்லார் உறுதி செய்தனர்.//

மறையருளும் வசனங்களில் கவிநயம் மறைபொருளாய் இருப்பதை அறிவித்து மகத்தானத் தீர்ப்புக் கூறிய அஹ்மத் காக்காவின் அறிவும் ஆயுளும் வளர்க (ஆமீன்)

அதிரை தாருத் தவ்ஹீத் said...

இன்னா அஃத்தைனாக்க(அ)ல் கவ்ஸர்
فصل لربك وانحر
ஃப ஸல்லி லி ரப்பிக வன்ஹர்
إن شانئك هو الأبتر
இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்

எனும் 108ஆவது அத்தியாயம் அருளப் பெற்று, அது கஅபாவில் எழுதித் தொங்கவிடப்பட்டது.

ஒரு பெரும் புலவன் அதற்குக் கீழே "மா ஹாதா கவ்லுல் பஷர்" (இது மனிதக் கூற்றன்று) என எழுதிச் சென்றான் எனும் தகவல் ஒன்றுண்டு.

இறைவனின் சொல்லும் மனிதனின் சொல்லும் எவ்வாறு வேறுபட்டு நிற்கின்றன என்பதற்கு அந்நிகழ்வே சான்றாக அமைந்து போனது.

கவ்ஸர், வன்ஹர், அப்தர் என முடியும் மூன்று வசனங்களின் சந்தங்கள் முறையே
வ்+ஸர் வன்+ஹர் அப்+தர் என்று ஒன்றேபோல் அமைந்துள்ளன.

ஆனால், மனிதன் எழுதிய ஈற்றுச் சொல்லான "பஷர்"இன் இரண்டாம் எழுத்தில் அந்த ஒற்றுச் சந்தம் இல்லாமல் இருந்ததையும் கருத்தில் எடுத்தனர் அரபுக் கவிஞர்கள்.

நிற்க,
இறைமறை குர்ஆனை மனிதக் கவிதைகளோடு ஒப்பிடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். காரணம் அல்லாஹ்வே கூறுகிறான்:
وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ قَلِيلًا مَا تُؤْمِنُونَ இது ஒரு கவிஞனின் கூற்றன்று
(69:41).

அல்குர்ஆன் எனும் பேரிலக்கியம், ஒருக்காலும் வெறுங் கவிதைகளோடு ஒப்பிடப்படலாகாது.

இப்னு அப்துல் ரஜாக் said...

அஸ்ஸலாமு அலைக்கும். தேவை இல்லாத இந்த கட்டுரையை நீக்குங்கள்.“கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுவர்” (26:224)என்ற குரான் வசனம் என்றும் அழியாத அல்லாஹ்வின் வார்த்தை.கவிதைக்கு ஊக்கம் தரும் அனைவரும் கவிஞர்களை ஆதரித்தால்,வழி கேடுதான் என்பதை குரான் எச்சரிப்பதை சுட்டிக்காட்டுகிறேன்.அல்லாஹ்வின் வார்த்தைகளை - வழிகேட்டு கவிஞர்களுடன் ஒப்பிடுவதை கடுமையாக கண்டிக்கிறேன்.

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அப்துல் லத்தீப்,

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..

இஸ்லாத்தில் கவிதை சரியா தவறா என்பதை தெளிவு பெறுவதற்காகவே இந்த பதிவு, கண்ணியமாக கருத்துக்கள் எடுத்துறைக்கப்படுகிறது. இங்கு எந்த ஒரு தனிமனிதனையோ அல்லது எந்த ஒரு இயக்கத்தையோ குறைகூறவில்லை என்பதை நினைவுறுத்துகிறோம்.. தேவையற்றது என்று சொல்லுவதை தவிர்க்கவும்.

மின்னஞ்சல் குழுமத்திலும், எண்ணமும் எழுத்தும் என்ற பதிவின் பின்னூட்டங்களிலும் விளக்கங்கள் ஹதீஸின் படிப்படையில் தெளிவு படுத்தப்பட்டது.

சகோதரர் அப்துல் லத்தீப் “கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுவர்” (26:224)

இந்த குர்ஆன் வசனம் இறை நிராகரிப்பு கருத்துடையவர்களை குறிப்பிடுகிறது என்று புரிந்துக்கொண்டால் குழப்பமில்லை.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்..

அதிரைநிருபர் said...

சகோதரர் அப்துல் லத்தீப்...

எண்ணமும் எழுத்தும் என்ற பதிவில் சகோதரர் அஹம்து ஆரிப் அவர்களின் பின்னூட்டத்தை உங்கள் அனைவரின் பார்வைக்காக மீண்டும் இங்கு பதிகிறோம்..

----------

இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள். (224) நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (225) இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள். (226) ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் தங்களுக்கிடையில் (நியாயத்திற்காக) உதவிக் கொள்வார்களே அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்) அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள். (227)
(அல்குர்ஆன் / 26:224-227)

சபீர்காக்கா அவர்களிடம் அதிரை சகோதரர் ஒருவர் கவிதை வேண்டாம் எனக் கூறியது கவிஞர்களைப் பற்றிக் கூறும் மேற்கண்ட குர்ஆனின் வசனத்தை இதுபோன்று சில – அல்ல – பல சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் அல்லது தவறாகப் புரிய வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. அது என்னவெனில், 224, 225, 226 ஆகிய வசனங்கள் கவிஞர்களிடம் காணப்படும் தவறான ஒரு குணத்தைக் கண்டித்தாலும், அதன் பின் 227ஆம் வசனத்தில் / ஆனால், ஈமான் கொண்டு ஸாலிஹான நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாகத் தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர என்ற வசனத்தையும் சேர்த்துப் படிக்காததன் காரணம் தான்.

‘இது நிராகரிப்பவர்களைக் குறிக்கின்றது, அதாவது இறைநிகாரிப்பைச் செய்யும் கவிஞர்களைக் குறிக்கின்றது. அவர்களையே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள வழிகெட்டோர் பின்பற்றுகின்றார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்கள். எனவே, இந்த வசனம் மார்க்க விதிகளுக்குட்பட்டுக் கவிதைகள் பாடும் கவிஞர்களைக் குறிக்காது என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
---------

sabeer.abushahruk said...

//நிற்க,
இறைமறை குர்ஆனை மனிதக் கவிதைகளோடு ஒப்பிடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்//

காக்கா,

இறைமறை குர் ஆனை மனிதக் கவிதைகளோடோ, மனிதக் கட்டுரைகளோடோ, மனிதக் கதைகளோடோ, மனித வசனங்களோடோ, ஏன் நபி மொழியோடோ, சஹாபாக்கள் கூற்றுகளோடோக்கூட ஒப்பிடுவதை நான்கூட கண்டிக்கிறேன்.

அஹ்மது காக்கா மற்றும் தங்களைப் போன்ற அறிஞர்களோடு விவாதிக்கும் தகுதி எனக்கில்லை. ஆயினும், தங்களின் மேற்குறிப்பிட்ட வாசகம், தவறான புரிதலுக்கு வகை செய்வதைக் கீழே கவனியுங்கள்:

//கவிதைக்கு ஊக்கம் தரும் அனைவரும் கவிஞர்களை ஆதரித்தால்,வழி கேடுதான் என்பதை குரான் எச்சரிப்பதை சுட்டிக்காட்டுகிறேன்//

ஆகவே, இறைமறை அல்லாஹ்வின் வசனங்களாகும். அதை மனிதன் உருவாக்கிய மொழியின் எந்த வடிவத்தோடும் ஒப்பிடுதல் மகா தவறு என்பது என் நிலைப்பாடு. கவிதையோடு மட்டுமல்ல.

நன்றி காக்கா.

KALAM SHAICK ABDUL KADER said...

//இறைமறை அல்லாஹ்வின் வசனங்களாகும். அதை மனிதன் உருவாக்கிய மொழியின் எந்த வடிவத்தோடும் ஒப்பிடுதல் மகா தவறு//

’’அல்-குர்-ஆனைப் போல எங்களின் கவிதைகள் உள’’ என்று எங்கும் எவ்விடத்திலும் சொல்லவே இல்லையே!! அல்-குர்-ஆனும் “கவிதை” மற்றும் “இலக்கிய-இலக்கண” நடையில் (சந்தங்களில் ஓசையுடன் ஈற்றெதுகையில்) அமையப் பெற்றிருக்கும் போது, நாங்களும் “கவிதை நடையில்” எழுதுவதில் தடையில்லை என்று தானே புரிந்து கொள்ள முடிகின்றது. படிப்பவரின் உள்ளத்தில் பதிவதற்கும்; ஓர் ஈர்ப்புச் சக்தியாகத் தானே “ஈற்றெதுகை”-சந்தம் -ஓசை நயம் தேவைப்படுகின்றது என்பதால், உரை நடையாகச் சொல்லும் ஒரு விடயத்தை இவ்வண்ணம் ஓசை நயம்- கவிநயம் மிக்க நடையில் அதே விடயம் சொல்லப்படும் பொழுது- படிக்கப்படும் பொழுது- மனதிற்கு இதமாகவும்- எளிதில் ஞாபகத்தில் பதிவதாகவும் தானே அமையும் என்பதற்க்கு அல்-குர்-ஆனின் நடையினைச் சான்றாகச் சொல்கின்றோமேத் தவிர, அல்=குர்-ஆனும் மற்ற கவிதைகளும் ஒன்று என்ற எண்ணமும் எழுத்தும் கிடையாது. அப்படி ஓர் எண்ணம், எழுத்து உண்டானால், “குஃப்ர்’ என்ற நிலைதான் என்று கூட அறியாதவர்கள் அல்லர், நாங்கள்!

அல்-குர்-ஆன் கவிதை-ஓசை நடையிலும்
தஃப்ஸீர்கள் உரை நடையிலும் இருப்பதும்

வேறுபாடுகளை அதன் மூலச்சொல்லின் மூலமே அறியாலாம்; “இக்ர அ” என்ற மூலச்சொல் ஓதுதல் என்பதிலிருந்த்து “குர்-ஆன்” என்ற பெயரும்; அதனை ஓசை நயத்துடன் ஓதுவோரை “காரி” என்றும் சொல்லப்படுவதும், “தஃப்ஸீர்” என்பதே விளக்கவுரை என்பதும்; செய்யுள் வடிவமான ஒன்றுக்குத் தான் விளக்கவுரை அளிக்கப்படுகின்றது என்பதும் ஒப்பிட்டு நோக்கினால்

அல்-குர்-ஆன் கவிதை நடையில் உள்ள- செய்யுள் இலக்கண இலக்கியம் என்பதால், நாமும் செய்யுள், இலக்கியம் எழுதுவதில் தவறில்லை என்று தான் புரிந்து கொள்கின்றோம். அதனால், அல்லாஹ்வின் அறிவோடு, அவன் அளித்த நமது சிற்றறிவை ஒப்பிடவும் இல்லை; அவனது இலக்கண இலக்கிய கவிதை நடையுடன் எங்களின் யாப்புகளை ஒப்பிடவும் இல்லை. அல்லாஹ் பாதுகாப்பான் அப்படிப்பட்ட எண்ணம் கிஞ்சிற்றும் வராமல். எங்கள் வாதத்திற்கு வலு சேர்க்க “மேற்கோளாக”வே மேற்காணும் கட்டுரையினை மேதகு புலவர் பெருமகனார் அஹ்மத் காக்கா அவர்கள் இங்குப் பதிவு செய்துள்ளார்கள்.

//நல்லதைச் சொல்லுவோம்; அல்லதைச் சாடுவோம்// என்று கவிதை நடையில் தன்னை அறியாமல் சொன்ன-
//உங்களைப் போல் கவிதை எழுதினால் தவறு இல்லை// என்று எனது வலைத்தளத்தில் “கலாமின் கவிதைகளை”க் கண்ணுற்றப் பின்னர் சொன்ன , அதே அ.ர. அப்துல்லத்தீஃப் அவர்கள் இப்பொழுது மறுபடியும் பிடிவாதம் பிடிப்பது முரண்பாடாகவே எனக்குத் தென்படுகின்றது


அபுல்கலாம் (த/பெ. ஷைக் அப்துல் காதிர்

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்புத் தம்பி சபீர்,

இங்கு இரு வேறுபட்ட கருத்தாடல்கள் நடைபெறுகின்றன என்பது எனது துணிபு.

1. கவிதைகள் கூடா - தம்பி அப்துல் லத்தீஃப்
2. குர்ஆனும் கவிதையே - தம்பி அபுல் கலாம்.

இவை இரண்டும் பிழையான கருத்துகள் என்பது எனது தெரிவு.

அதில், முதலாவதாக கவிதைகளே கூடாதவை என்பதில், எடுத்துவைக்கப்பட்ட சான்றில் விதிவிலக்கு வசனமான 26:227 விடுபட்டு நிற்கிறது. அந்த வசனத்தின் பின்னணியில் சிறு குறையுடைய அறிவிப்பு இருப்பினும் நல்ல கவிதைகளுக்கு, குறிப்பாக - இஸ்லாமிய விழுமியங்களை எடுத்தோதும் கவிதைகளுக்குத் தடையிடவில்லை என்பது நானறிந்த வரையில் தெளிவாக இருக்கின்றது. 26:227இன் விரிவுரை:

The Exception of the Poets of Islam


إِلاَّ الَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ الصَّـلِحَـتِ

(Except those who believe and do righteous deeds,) Muhammad bin Ishaq narrated from Yazid bin `Abdullah bin Qusayt, that Abu Al-Hasan Salim Al-Barrad, the freed servant of Tamim Ad-Dari said: "When the Ayah --

وَالشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ
(As for the poets, the erring ones follow them.) was revealed, Hassan bin Thabit, `Abdullah bin Rawahah and Ka`b bin Malik came to the Messenger of Allah , weeping, and said: "Allah knew when He revealed this Ayah that we are poets. The Prophet recited to them the Ayah,

إِلاَّ الَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ الصَّـلِحَـتِ
(Except those who believe and do righteous deeds,) and said:

«أَنْتُم»
((This means) you.)

وَذَكَرُواْ اللَّهَ كَثِيراً
(and remember Allah much). He said:

«أَنْتُم»
((This means) you.)

கூடுதல் விளக்கம் பெற : http://ibnkathir.atspace.com/ibnkathir/ibnkathir_web/26.38041.html

இரண்டாவதாக, "குர்ஆனும் கவிதையே" என நேரடியாகச் சொல்லாவிடினும் தம்பி அபுல் கலாம் அடிக்கடி, "குர்ஆனின் ஈற்றெதுகை ..." என்று அடிக்கடி என்னைப் போன்றோருக்குத் தெளிவாகப் புரியாத வகையில் கருத்திட்டுக் கொண்டிருந்தார். அவரது கருத்தும் தவறு என அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியது எனது கடமையானது.

எனவேதான், "இறைமறை குர்ஆனை மனிதக் கவிதைகளோடு ஒப்பிடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனும் கருத்துத் தெறிப்பு.

sabeer.abushahruk said...

Got it kaakkaah.
jazaakallahu haira!

(எனக்குத் தெரியும் காக்கா. மார்க்கம் தொடர்பான தங்களின் போதனைகளை மிகச் சரியாக புரிந்துகொண்டவர்களில் நானும் ஒருவன். ஆயினும், சகோதரர் அப்துல் லத்தீஃபுக்கு
//இவை இரண்டும் பிழையான கருத்துகள் என்பது எனது தெரிவு.// என்று தாங்கள் தங்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்றுதான் சற்றேச் சீண்டினேன்.)

நான்/நாங்கள் சொன்னால் கேட்க மறுக்கும் பலர் தாங்கள் சொன்னால் மறுக்கமாட்டார்கள் என்பதும் என் கணிப்பு.

((அப்புறம், தங்களிடமிருந்து என்ன பதில் வரப்போகிறதோ என்று கணினியும் கையுமாகவேக் காத்திருந்தேன் தெரியுமா?))

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய கவியன்பன் கலாம்,

கவிதை எனும் மொழி வடிவம் எதுகை, மோனை, அசை, சீர், தளை, தொடை, வெண்பா போன்ற மனிதன் வரையறுத்த இலக்கண சட்டங்களுக்கோ; "உள்ளத்துள் உள்ளது கவிதை" எனும் மனிதன் மேற்கோள் கட்டிய வரையறைக்குட்பட்டோ; உவமானங்களைக் கொண்டோ, கற்பனை செய்தோ புனையப்படுவதால், குர் ஆனை கவிதை எனும் கட்டுக்குள் கொண்டு வருதல் தவறு. Words of God is Unique as you know; and therefore no any comparision should be attended whatsoever the topic of the concept.

இங்கு நம் வழக்கும் அதுவல்ல.

இஸ்லாத்தில் கவிதை எழுதுதல் கூடாதா என்ற கேள்விக்கு விடை காண்பது மட்டுமே நம் நோக்கம். எனக்குத் தெரிந்து நாம் மதிக்கும் அஹ்மது காக்கா மற்றும் ஜமீல் காக்கா ஆகியோர் "கூடும்" என்று அறிவித்துவிட்ட படியாலும், சகோதரர் அப்துல் லத்தீஃப் அவர்களின் கருத்துக்கு சகோதரர் அஹ்மது ஆரிஃப் விளக்கமாக பதில் தந்துவிட்டபடியாலும் மேற்கொண்டு விவாதத்திற்கான ஆதாரங்களை யாரும் வைக்காத வரையில் நாம் அமைதியாக இக்கட்டுரையை வாசிப்பதே நலம்.

KALAM SHAICK ABDUL KADER said...

அல்லாஹ் அழகானவன்; நானும் அழகாக இருக்க விழைகின்றேன்
அல்லாஹ் அன்பானவன்; நானும் அன்பாக இருக்க விழைகின்றேன்
அல்லாஹ்வின் திருமறையின் பெயரில் "கலாமுல்லாஹ்" என்பதில் "கலாம்" என்ற பதம் இருக்கின்றது
எனது பெயர் "அபுல்கலாம்" என்பதிலும் "கலாம்" என்ற பதம் இருக்கின்றது என்று சொல்லுகின்றேன் என்றால்

அல்லாஹ்வின் அழகு,அன்பு,வசனம் ஆகியனவற்றுடன் எனது அழகு,அன்பு, பேச்சு ஆகியனவற்றை ஒப்பிடுகின்றேன் என்று புரிந்து கொள்ள மாட்டீர்கள் அல்லவா?

அதுவேப்போல,

அல்லாஹ்வும் "கவிதை நடையில்' சொல்லுகின்றான்,
நானும் "கவிதை நடையில்' சொல்லுகின்றேன் என்று சொல்லுகின்றேன் என்றால்,

அல்லஹ்வின் வசனத்தின் "கவிதை நடை"யும் எனது வார்தைகளின் "கவிதை நடையும்" ஒன்றல்ல என்று புரிந்து கொள்வீர்கள் அல்லவா?

//கவ்ஸர், வன்ஹர், அப்தர் என முடியும் மூன்று வசனங்களின் சந்தங்கள் முறையே
கவ்+ஸர் வன்+ஹர் அப்+தர் என்று ஒன்றேபோல் அமைந்துள்ளன.//

சந்தம் ஒன்றி ஈற்றில் அமைவது கவிதை நடை என்று கருதலாம் அல்லவா?

அல்லாஹ்வின் வசன நடையழகும், மனிதர்களின் வசன நடையழகும் "ஒன்று" என்பதல்ல என் கருத்து.

அல்லாஹ்வும் சந்த அழகுடன் சொல்லும்பொழுது, நாமும் சந்த அழகுடன் சொல்லலாம் என்பதே என் கருத்து.

இரண்டிலும் சந்த அழகு "உண்டு" என்பது வேறு;
இரண்டிலுமுள்ள சந்த அழகு "ஒன்று" என்பது .வேறு

அல்-குர்-ஆன் கவிதை என்று யானும் சொல்லவில்லை; ஆசான் அஹ்மத் காக்கா அவர்களும் சொல்லவில்லை
//இனிய ஓசையுடன் கவிதைகளைப் போன்று அமைந்திருப்பதை நாம் காண முடிகின்றது//
அதன் ஓசை நயம் ஈற்றில் முடியும் RYTHM

KALAM SHAICK ABDUL KADER said...

குர்ஆனிய வசனங்களும் நபிமொழிகளும் சில இடங்களில் கவிதையின் இலக்கியத் தரத்தில் அமைந்திருக்கக் காண்கின்றோம்//

//மக்காவில் தொடக்கமாக இறங்கிய இறைவசனங்கள் மக்கத்து இலக்கிய விற்பன்னர்களுக்கும் அறிவில் முதிர்ந்த குறைஷியருக்கும் வாயாப்புக் கொடுக்கும் விதத்தில், இனிய ஓசையுடன் கவிதைகளைப் போன்று அமைந்திருப்பதை நாம் காண முடிகின்றது. //

/அடைப்புக்குள் அடைபட்டிருக்கும் இக்கட்டுரையாளர் அஹ்மத் காக்கா அவர்களின் கருத்துக்களில் "கவிதை" "கவிதை நயம்" "கவிதை நடை" என்ற பதங்களில் அவர்கள் என்ன அர்த்தம் கொண்டிருக்கின்றார்களோ அதே விதமாகவே அடியேனும் "கவிதை நடை" "கவிதை நயம்" என்று அர்த்தம் கொண்டிருக்கின்றேன் என்பதை அறிந்தால், மனிதன் வகுத்துக்கொண்ட யாப்பிலக்கண வழியில் அல்லாஹ்வின் வசன நடை என்று ஆசான் அஹ்மத் காக்க அவர்களும் கருதவில்லை; அடியேனும் கருதவில்லை.

மாறாக அல்-குர்-ஆன் கவிதை தான் என்று அடியேன் சொல்லத் துணிந்ததாகத் தவறான புரிதலுடன் பின்னோட்டமிட்டு என்னை பாவியாகக் கருதிட வேண்டா.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

//எனக்குத் தெரிந்து நாம் மதிக்கும் அஹ்மது காக்கா மற்றும் ஜமீல் காக்கா ஆகியோர் "கூடும்" என்று அறிவித்துவிட்ட படியாலும், சகோதரர் அப்துல் லத்தீஃப் அவர்களின் கருத்துக்கு சகோதரர் அஹ்மது ஆரிஃப் விளக்கமாக பதில் தந்துவிட்டபடியாலும் மேற்கொண்டு விவாதத்திற்கான ஆதாரங்களை யாரும் வைக்காத வரையில் நாம் அமைதியாக இக்கட்டுரையை வாசிப்பதே நலம்.//

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்லாஹ் ரப்பில் அஃலமீன் அல் குர் ஆனில்


36:69 وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنبَغِي لَهُ ۚ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُّبِينٌ
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.(அல் குர் ஆன் 36:69)

இந்த குர் ஆன் ஆயத் பற்றி கொஞ்சம் எனக்கு விளக்கம் தாருங்கள்....

இப்னு அப்துல் ரஜாக் said...

மீண்டும் சொல்லுகிறேன்.நாம் விவாதிப்பது குரான் பற்றி.எனவே கவிதைகளை வைத்து,போற்றி,தலையில் வைத்துக் கொண்டாட நினைக்கும் சிலர்,ஏன் இன்னும் வக்காலத்து வாங்குகிறீர்கள் என தெரியவில்லை.கவிதைக்கு என சிந்திக்கும் நீங்கள்,ஏன் குரானின் ஒரு வசனத்தை வைத்து ஆராயக் கூடாது.நன்மை கிடைக்குமே ! கவிதையால் அல்லாஹ்விடம் கூலி கிடைக்குமா?

என் மதிப்புக்குரிய ஆசான் ஜமீல் காக்காவின் கருத்தை ஆமோதிக்கும் (ஹதீஸ் ஆதாரம் உள்ளதால்)அதேசமயம் மற்றவர்களுக்கு ஒரு கேள்வி ?நீங்கள் ஒன்றுக்கும் உதவாத கவிதையை பிடித்து கொண்டிருப்பது ஏன்?குரானை பிடிப்போம்,சிந்திப்போம்,அதன் படி நடப்போம்,பரப்புவோம் இன்ஷா அல்லாஹ்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்பு சகோதரர் சபீர் காக்கா,அப்துல் கலாம் காக்கா,அபூ இபுறாஹீம் காக்கா மற்றும் அனைத்து சகோதரகளுக்கும் என் அன்பான வேண்டுகோள்>கவிதை பற்றி இனி சிந்திக்காமல்,இனி குர் ஆன் பற்றி ஹதீஸ் பற்றி சிந்திக்கலாமே?

நம் கைகள் எழுதும் கவிதைக்காக,தமிழுக்காக நாம் நேரம் ஒதுக்கி விவாதிக்கிறோம்,அது கூடும் என்று.

ஆனால்,நம்மை படைத்த ரப்பு நமக்கு தந்த குரான் சொல்லுகிறது,"இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்"என்று.

நல்ல கவிதைகள்தானே - அது கூடும் என ஒரு வாதத்துக்கு வைத்துகொண்டாலும்,நம் கரங்கள் எழுதிய கவிதை சிறந்ததா?அல்லது குரானா?அல்லாஹ்வின் அருள்மறைக்கு முதலிடம் கொடுப்போம்.

கவிதைகளை குப்பையில் தள்ளுவோம் இன்ஷா அல்லாஹ்.


அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி சொன்னது…

36:69 وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنبَغِي لَهُ ۚ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُّبِينٌ
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.(அல் குர் ஆன் 36:69)

இந்த குர் ஆன் ஆயத் பற்றி கொஞ்சம் எனக்கு விளக்கம் தாருங்கள்....

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்புத் தம்பி அப்துல் லத்தீஃப்,

இரு திருத்தங்கள்:
1. நான் எப்போதும்போல் உங்கள் அண்ணனாகவே இருக்க விரும்புகிறேன்; ஆசானாக அல்ல (நான் எப்போது ஆசான் ஆனேன்?)

2. எதையும் முழுக்க அறிந்துகொள்ளாமல், அதைப் பற்றிய முடிவுக்கு வருதல் பிழையானது என்பது (இறைமறையின் அடிப்படையில்) எனது கருத்து. "(நபியே! அனைத்தையும்) செவியுற்று, அவற்றுள் அழகானவற்றைப் பின்பற்றுபவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். அவர்கள் அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்டவர்கள்; அவர்கள்தாம் பகுத்தறிவாளர்கள்" (அல்குர்ஆன் 39:18) என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்தத் தொடரை எழுதும் காக்கா அபூபிலால், தொடர் இறுதியில் "கவிதைகளில் காலத்தை வீணாக்க வேண்டாம்" என்றுகூட முடிக்கக் கூடும் :-)

படித்துப் பார்ப்போமே!

இப்னு அப்துல் ரஜாக் said...

அப்படியே ஆகட்டும் ஜமீல் காக்கா.

//இந்தத் தொடரை எழுதும் காக்கா அபூபிலால், தொடர் இறுதியில் "கவிதைகளில் காலத்தை வீணாக்க வேண்டாம்" என்றுகூட முடிக்கக் கூடும் :-)//

நல்லதாகவே ஆரம்பித்து,நல்லதாகவே முடியட்டும்,இன்ஷா அல்லாஹ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பு சகோ. அப்துல் லத்தீப்,

முதலில் அல்லாஹ் நல்ல ஞானத்தையும், புரிந்துக்கொள்ளும் தன்மையையும் நம் எல்லோருக்கும் அதிகப்படுத்துவானாக.

குர்ஆன் ஹதீஸுடன் இங்கு கருத்திடும் சகோதரர்கள் முரண்பட்டு விவாதிப்பது போன்று உங்கள் கருத்தை பதிந்துள்ளது வேதனையே. கவிதைக்கு தான் முதலில் முக்கியத்துவம், குர்ஆன் ஹதீஸுக்கு முக்கியத்துவம் பிறகு தான் என்று யாராவது நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறியுள்ளார்களா? சுட்டிக்காட்டுங்கள்...

இஸ்லாம் ஒன்றும் கடினமான மார்க்கம் கிடையாது, இனிய மார்க்கம்.. எளிமைய மார்க்கம்... எல்லா காலத்திற்கும் பொருந்தும் மார்க்கம். நாம் மற்றவர்களுக்கு நம் மார்க்கத்தை எடுத்துச்சொல்லும் விதத்தில் இனிமை, எளிமை,பொருத்தம், கடினம் உணர்த்தப்படும்.

நம்மில் பலர் செய்யும் தவறு, குர்ஆன் வசனங்களை ஆராயமல் உடனுக்குடன் மார்க்க தீர்ப்பாக எடுத்துரைக்க முயல்கிறோம். குர்ஆன் வசனங்களை விளங்கும் போது அவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்டு விளங்குவது அறிவுடமை. ஒரு குர்ஆன் வசனத்தை படிக்கும் போது முன்பும் பின்பும் உள்ள வசனங்களையும் சேர்ந்து படிப்பது இன்னும் அந்த வசனத்தை புரிந்துக்கொள்வதற்கு மிக்க ஏற்புடையதாக இருக்கும். மேலும் புரிந்துக்கொள்ள அந்த வசனம் தொடர்பான வரலாற்று பின்னனிகளை ஆராய்வது மிக மிக அவசியம். ஒரு மார்க்க அறிஞரோ, ஒரு ஆசிரியரோ, ஒரு மனிதனோ எந்த விளக்கம் சொன்னாலும் அப்படியே கண்மூடித்தனமாக நம்புவது என்பது எக்காலத்திலும் அறிவுடமையல்ல.. தெளிவடைவதற்காக மேலும் பல மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

நவ்துபில்லாஹ்... குர்ஆன் வசனங்களையும், மனித எழுத்துக்களையும் இந்த பதிவில் யாரும் ஒன்றிணைத்து சொல்லவில்லை.. இனி யாரும் கவிதை, கட்டுரை வேறு எந்த விடைவில் அப்படி குர் ஆன் வசனங்களுடம் ஒப்பிட்டு சொல்ல முன்வந்தாலும் அவைகளை வன்மையாக ஒன்றிணைந்து கண்டிப்போம்..

இங்கு கவிதை, கட்டுரை மட்டுமல்ல வேறு எந்த ஒரு விடையமாக இருந்தாலும் குர்ஆன் ஹதீஸ் இவைகளுக்கே முதலிடம் கொடுப்பவனே உண்மை முஸ்லீமாக இருக்க வேண்டும்.

மக்களை நேர்வழி படுத்த மக்களுக்கு எளிதில் புரியும் கவிதை, கட்டுரை வடிவில் ஒரு நல்ல இஸ்லாமிய நல்ல செய்தியை (ஷிர்க் கலக்காத) பரப்புவதை ஏன் ஒரு ஊடகமாக கருதக்கூடாது?

அறிவில் மிகைத்தவன் அல்லாஹ் ஒருவனே.. அவனே மிக்க அறிந்தவன்.

கவிஞர்களை பின் பற்றுபவர்களை ஏன் அல்லாஹ் வழிகேடர்கள் என்று சொல்லுகிறான் மேலும் கவிதைக்கும் கவிஞனுக்கு என்ன வரையரைகள் என்பதை சகோ. அப்துல் லத்தீப் போன்றவர்கள் குர் ஆன் ஹதீஸுடன் விபரமாக விளக்கினால் மேலும் தெளிவுர ஒரு வாய்ப்பாக இருக்கும்.. செய்வீர்களா...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி அப்துல் லத்தீஃப்:

முதலில் தாங்கள் புரிந்து கொண்ட அல்லது "கவிதை" என்பதன் பதம் அல்லது அப்ப்டின்னா என்னா ? என்று எவ்வாறு விளங்கியிருக்கிறீகள் சொல்லுங்க(தம்பி) !

முதலில் அதனைத் தெளிவாக நாம புரிந்துக் கொள்வோம்...

Yasir said...

நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்..

இங்கு காட்டப்படும் குர்ஆன் / ஹதீஸ் படி நடக்கும் ”வேகம்”..அல்லாஹ்வால் ”ஹாரம்” என்று சொல்லப்பட்ட விசயங்களில் காட்டப்பட்டு இருக்குமேயானால் அட்டீஸ்ட் சமுதாயம் உருப்பட்டு இருக்கும்
முதிர்கன்னிகளும் / முதிர்ந்த கன்னிகள் ஜினா செய்வது குறைக்கபட்டு/தடுக்கப்பட்டு இருக்கும் / குடித்துவிட்டு கும்மாளமிடும் கயவர்களின் எண்ணிக்கை குறைக்கபட்டு இருக்கும்/வரதட்சணை ஒழிக்கபட்டு இருக்கும் / வீடு கொடுத்து முதுகெலும்பு ஒடிக்கப்பட்ட தகப்பன்களின்/சகோதர்களின் ஆயுள் கூட்டப்பட்டிருக்கும்/விதவைகளை ஒரு கண்ணாகவே பார்க்கும் கண்ராவி ஒழிக்கப்பட்டு இருக்கும் / பேங்கில் பணம்போட்டு அதற்க்கு கொடுக்கும் வட்டியை லாபமாக கருதி வரும் மூடர்களின் மூளை முடப்பட்டு இருக்கும்/பக்கத்துவீட்டில் பசியுடன் வாடும் கொடுமை ஒழிக்கபட்டு இருக்கும்/பள்ளிகளெல்லாம் நிறைந்து வழிந்து பக்தி பரவசமாக காணப்படும் /நிலத்தை வாங்கிபோட்டு தலைகனம் ஏறி தான் தோன்றிதனமாக திரிவது குறைக்கபட்டு இருக்கும்.....

இதையெல்லாம் அல்லாஹ் சொல்லவில்லையா ?நபி(ஸல்) அவர்கள் கடைப்பிடிக்கவில்லையா ??அல்லது உங்கள் சுயநலங்களுக்காக பொதுவில் விவாதிக்க தயக்குகின்றீர்களா ?

hassaan said...

ஷிர்க் அல்லாத தமிழ் இலக்கியங்களில் அல்லாஹுவை புகழ்த்து எதனையோ கவிதைகள் உண்டு எடுத்துகாட்டாக பேராசிரியர், இறையருட்கவிமணி, அப்துல் கபூர் அவர்கள் இயற்றிய சூரத்துல் ஃபாத்திஹாவின் தமிழ்க் கவியாக்கம் ஒரு சான்று

அருளன்பு பண்பில் அளவற்ற அல்லாஹ்
திருப்பெயர் போற்றித் திறப்பு.

அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி
உலகெலாம் படைத்தே உயர்வுறக் காக்கும்
புலமையோன் தனக்கே புகழெலாம் உரிய
அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோர் இறையே! இனியபேர் இறையே!
முடிவுநாள் அதனின் முழுமுதல் அரசே!
அடியேம் யாமுன் அடியினைத் தொழுதேம்
உன்னையே நாங்கள் உவந்தேத்து கின்றோம்
உன்பால் அன்றோ உதவியை நாடுவோம்
நன்னெறி மீதெமை நடத்துவா யாக!
நின்னருள் பொழிந்த நேயர்தம் நெறியில்
நின்சினம் கொண்டோர் நெறிவிட் டகன்றோர்
செல்நெறி அன்றது செம்நெறி யன்றே!

இதில் யாராவது குறை கூற முடியுமா????

நல்லதை மட்டும் எடுப்போம் தீயதை தவிர்ப்போம்

sabeer.abushahruk said...

சகோதரர்களே, எனக்கு விளங்கியதை நான் இங்கு பதிந்து விடுகிறேன்:
 
01)   ஆர்வக்கோலாறோ தவறானப் புரிதலோ மார்க்கத்தில் சொல்லப்படாத எந்தக் கருத்தையும் நிலை நிறுத்திவிடாது
 
02) //“கவிதை சிறந்ததா?அல்லது குரானா?அல்லாஹ்வின் அருள்மறைக்கு முதலிடம் கொடுப்போம்.”// என்பது போன்ற வாசகத்தைக் கனவிலும்கூட பிரயோகிக்காதீர்கள்.  காரணம், கவிதை என்பது மனிதன் கற்ற மொழியின் ஒரு வடிவம் மட்டுமே.  ஆனால், குர் ஆன் இறைவேதம். முதலிடம் இரண்டாமிடம் என்றெல்லாம் பேசி ஈமானை பலகீனப்படுத்திக்கொள்ளாதீர்கள்.  குர் ஆன் ஓர் இறை வேதம் ஆதலால் தனித்தன்மை வாய்ந்தது (உனிஃஉஎ) அதற்கு ஒப்பீடு ஏதுமில்லை, அதன் இலக்கியத் தரத்திலும், வாழ்வியல், மறுமை, உளவியல், அண்டம், ஆகாயம் என்று குர் ஆனில் சொல்லப்படாதவை ஒன்றுமில்லை.  அவற்றை இறைவனைத்தவிர வேறு யாராலும் தந்திருக்கமுடியாது. எனவே, இனியாவது குர் ஆனை நம்மைப் போன்ற அரைகுரைகள் சம்மந்தமில்லாமல் இழுக்காதீருத்தால் நலம்.  விவாதம், கவிதை கூடுமா கூடாத என்பது மட்டுமே.
 
 
03) //(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.(அல் குர் ஆன் 36:69)

இந்த குர் ஆன் ஆயத் பற்றி கொஞ்சம் எனக்கு விளக்கம் தாருங்கள்....//
 
இப்படி விவாதிப்பதுதான் ஆரோக்கியமானது. நன்று சகோதரரே. ஆயத் பற்றி விளங்கிக்கொள்வதற்கு முன் அதிலுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் விளங்கிக்கொள்ளுதலும், நாம் இருவரும் ஒரு வார்த்தைக்கு சரியான பொருளை விளங்கிக்கொண்டோமா என்று உறுதி செய்தபின்னர்தான் ஆயத்தின் மொத்த விளக்கம்பற்றி சிந்திக்க முடியும். எனவே, முதலில், இந்த விவாதத்தைத் தொடர, “கவிதை” என்றால் என்ன என்று தாங்கள் புரிந்து வைத்துள்ளீர்கள் என்று இங்கே பதியவும்.  

உடனே நீங்கள் முதலில் சொல்லுங்கள் என்று சொல்லத்தோன்றும். 

ஆகவே, எனது புரிதல் என்னவெனில் “:கவிதை என்பது மொழியின் ஒரு வடிவம் மட்டுமே.  அந்த வடிவம் காலச்சூழலுக்கேற்ப மனிதர்களால் மாற்றி அமைக்கப்பட்டே வந்திருக்கிறது. கவிதைக்கென்று பிரத்தியேக அர்த்தம் கிடையாது. அதில் பொதிந்துள்ள் அர்த்தம் (அ) கருவைக்கொண்டே நல்லதா கெட்டதா அன்பதை தீர்மாணிக்க வேண்டும்” .
 
இப்ப நீங்க சொல்லுங்க. கவிதை என்றால் என்ன? மேற்கொண்டு பேசி தீர்வை எட்டுவோம்.
 
மேலும், தம்பி அப்துல் லதிஃப்,
 
                //இனி குர் ஆன் பற்றி ஹதீஸ் பற்றி சிந்திக்கலாமே?//
                குர் ஆனைப் பற்றி, ஹதீஸைப் பற்றி சிந்திக்க வேண்டுமெனில் பெரிய இயக்கம் வேண்டும், தலைவர் வேண்டும், விவாத மேடைகள் வேண்டும், கவிதையாகவல்ல உரைநடையாகவும் வசனமாகவும் கட்டுரைகளாகவும் ஒரு மூமீனை மற்றொரு மூமீன் திட்டித் தீர்க்க வேண்டும். நமது மார்க்கத்தில் ஓட்டைகளை உருவாக்கி அதைப் பேசிப்பேசியே பெரிதாக்கி உலகத்தோர் முன்னிலையில் அவமானப்பட வேண்டும்.  இதற்கெல்லாம் மேலாக, வேலையை ராஜினாமா செய்துவிட்டு முயன்றால்கூட நேரப்பற்றாக்குறையால் அரைகுறையாகவே தீர்மாணங்களை எட்ட வேண்டி வரும்.  நானோ,
குர் ஆனையும் ஹதீஸ்களையும் இயன்றவரை பின்பற்றும், வாய்க்கும்போதெல்லாம் மார்க்கத்தின் அழகிய கோட்பாடுகளை எத்திவைக்கும் ஒரு சாமான்யன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

sabeer.abushahruk said...

//அருளன்பு பண்பில் அளவற்ற அல்லாஹ்
திருப்பெயர் போற்றித் திறப்பு.

அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி
உலகெலாம் படைத்தே உயர்வுறக் காக்கும்
புலமையோன் தனக்கே புகழெலாம் உரிய
அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோர் இறையே! இனியபேர் இறையே!
முடிவுநாள் அதனின் முழுமுதல் அரசே!
அடியேம் யாமுன் அடியினைத் தொழுதேம்
உன்னையே நாங்கள் உவந்தேத்து கின்றோம்
உன்பால் அன்றோ உதவியை நாடுவோம்
நன்னெறி மீதெமை நடத்துவா யாக!
நின்னருள் பொழிந்த நேயர்தம் நெறியில்
நின்சினம் கொண்டோர் நெறிவிட் டகன்றோர்
செல்நெறி அன்றது செம்நெறி யன்றே//

-இது கூடாது. காரணம் இது கவிதை வடிவம்.
அருளன்பு பண்பில் அளவற்ற அல்லாஹ் திருப்பெயர் போற்றித் திறப்பு.

அலகிலா அருளும் அளவிலா அன்பும் இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி. உலகெலாம் படைத்தே உயர்வுறக் காக்கும் புலமையோன் தனக்கே புகழெலாம் உரிய. அலகிலா அருளும் அளவிலா அன்பும் இலகுமோர் இறையே! இனியபேர் இறையே! முடிவுநாள் அதனின் முழுமுதல் அரசே,அடியேம் யாமுன் அடியினைத் தொழுதேம். உன்னையே நாங்கள் உவந்தேத்து கின்றோம் உன்பால் அன்றோ உதவியை நாடுவோம். நன்னெறி மீதெமை நடத்துவா யாக! ன்னருள்பொழிந்த நேயர்தம் நெறியில் நின்சினம் கொண்டோர் நெறிவிட் டகன்றோர் செல்நெறி அன்றது செம்நெறி யன்றே!

-இது கட்டுரை வடிவம். எனவே கூடும்.

sabeer.abushahruk said...

//இந்த கட்டுரையை நீக்குங்கள்.“கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுவர்”//

தம்பி அப்துல் லதீஃப், இது கட்டுரையாயிற்றே இதை ஏன் நீக்க வேண்டும்? கவிதையைத்தானே நீக்க வேண்டும். கட்டுரையை அல்லவே?!!!

வட்டிதானே ஹராம், வட்டியைப்பற்றிய கட்டுரையோ உரைநடையோ ஆராய்ச்சியோ ஹராமா? உங்களுக்கு கவிதைதானே வேண்டாம்.கவிதையைப்பற்றிய ஆராய்ச்சியே வேண்டாம் இன்பது என்ன நிலைப்பாடு?

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இங்கு மட்டுமன்று, எங்குக் கருத்தைப் பதிவதாக இருந்தாலும் பதிவதற்கு முன்னர் ஆக்கத்தின் தலைப்பை ஒருமுறை படித்துவிட்டுப் பதிவது நல்லது. இது தம்பி யாஸிருக்கு மட்டுமன்று.

ஹஸ்ஸான்,
ஷிர்க் கலவாத கவிதைகளுக்கு இறைமறை விலக்கு அளித்திருக்கிறது. அதை எவரும் மீறமுடியாது என்பது முடிவாகிவிட்டது. அதை மீண்டும் கிளறாதே!

இப்போது, கவிதையில் நாம் காலத்தை வீணாக்கலாமா? என்பது மட்டுமே எஞ்சி நிற்கிறது. அதற்கான விடை, இந்தத் தொடர் முடிவுறும்போதுதான் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்.

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் காக்கா,

//ஷிர்க் கலவாத கவிதைகளுக்கு இறைமறை விலக்கு அளித்திருக்கிறது. அதை எவரும் மீறமுடியாது என்பது முடிவாகிவிட்டது//

இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். வாதிட்ட தம்பி அப்துல் லத்தீஃபும் ஏற்றுக்கொண்டதாக இங்கு பதிந்தால்தானே மேற்கொண்டு நகர முடியும்? அல்லது விவாதமும் ஒரு பட்டிமன்ற தன்மையதாக ஆகிவிடும் அபாயம் உண்டே?

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பான தம்பி சபீர் & அ.நி.,

நேரம் போக்கும் நெடிய விவாதத்துக்கு நானில்லை.

நான் இங்கு வந்த
நோக்கம்
இன்னும் நிறைவேறவில்லை:
http://adirainirubar.blogspot.com/2012/01/blog-post.html?showComment=1325492796699#c661324858930904909

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

sabeer.abushahruk சொன்னது…
//(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.(அல் குர் ஆன் 36:69)

இந்த குர் ஆன் ஆயத் பற்றி கொஞ்சம் எனக்கு விளக்கம் தாருங்கள்....//

இப்படி விவாதிப்பதுதான் ஆரோக்கியமானது. நன்று சகோதரரே. ஆயத் பற்றி விளங்கிக்கொள்வதற்கு முன் அதிலுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் விளங்கிக்கொள்ளுதலும், நாம் இருவரும் ஒரு வார்த்தைக்கு சரியான பொருளை விளங்கிக்கொண்டோமா என்று உறுதி செய்தபின்னர்தான் ஆயத்தின் மொத்த விளக்கம்பற்றி சிந்திக்க முடியும். எனவே, முதலில், இந்த விவாதத்தைத் தொடர, “கவிதை” என்றால் என்ன என்று தாங்கள் புரிந்து வைத்துள்ளீர்கள் என்று இங்கே பதியவும்.

உடனே நீங்கள் முதலில் சொல்லுங்கள் என்று சொல்லத்தோன்றும்.

ஆகவே, எனது புரிதல் என்னவெனில் “:கவிதை என்பது மொழியின் ஒரு வடிவம் மட்டுமே. அந்த வடிவம் காலச்சூழலுக்கேற்ப மனிதர்களால் மாற்றி அமைக்கப்பட்டே வந்திருக்கிறது. கவிதைக்கென்று பிரத்தியேக அர்த்தம் கிடையாது. அதில் பொதிந்துள்ள் அர்த்தம் (அ) கருவைக்கொண்டே நல்லதா கெட்டதா அன்பதை தீர்மாணிக்க வேண்டும்”

இப்ப நீங்க சொல்லுங்க. கவிதை என்றால் என்ன? மேற்கொண்டு பேசி தீர்வை எட்டுவோம்.//

அன்பு சகோதரரே...
அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக... அல்லாஹ்வின் கலாமாகிய அல் குர் ஆனில் எம்முடைய விளக்கம் கொடுப்பதை தவிந்துகொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த ஆயாத்திற்க்கு என்ன விளக்கம் கொடுத்தார்கள் என்று பார்ப்பதுதான் சிறந்தது, அல்லது அருமை சகாப்பாக்கள் இந்த ஆயத் பற்றிய விளக்கம் எப்படி கொடுத்தார்கள் என்று பார்பதுதான்... குர் ஆன் சுன்னாவை விளங்கி கொள்ளும் வழிமுறை.

எனவே நம்முடைய சொந்த விளக்கத்தை தவிர்ந்து குர் ஆன் சுன்னா மற்றும் சகாப்பாக்கள் விளக்கத்தின் அடிப்படையில் இதை எவ்வாறு விளங்குவது என்பதில் நாம் முயற்ச்சி செய்வோம்..இன்ஷா அல்லாஹ்..

அபூ பிலால் காக்கா...
இந்த பற்றிய விளக்கதை தாங்கள் மூத்த அறிஞ்ர்களிடம் கேட்டு அல்லது அவர்களது கிதாபுகளை படித்து எங்களுக்கு விளக்கம் கொடுத்தாள் மிகவும் பிரயோசனமாக இருக்கும் என்று நம்புகிறேன்... இன்ஷா அல்லாஹ்.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்...

(ஒரு முறை) நாங்கள் அல்லாவின் தூதர் (ஸல்)அவர்களுடன் “அல் அர்ஜ்” அனுமிடத்தில் பயனம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞ்ர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த ஷைத்தானைப் பிடியிங்கள்” ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீல் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று என கூரினார்கள். அறிவிபாலர்: அபூ செய்து அல்குத்ரி (ரலி) ஆதராம்: முஸ்லிம் 4548.

Unknown said...

ஆமாம்...!
ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) போன்றவர்களைக் கவி பாடத் தூண்டிய நபி (ஸல்) அவர்கள், இந்தக் கவிஞனைச் சாடியுள்ளார்கள் என்றால், இவன் பாடியது முரணான கவிதை என்று விளங்கிக் கொள்வதுதான் அறிவுடைமை.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்புச் சகோதரர் அபூ அப்துல்லாஹ்,

நீங்கள் கேட்டிருந்த 36:69 எண்ணிட்ட இறைவசனத்துக்கு இமாம் இபுனு கஸீர் அவர்களின் நெடிய விளக்கம் உள்ளது. இங்கு முழுமையாக இடமுடியாது. சுருக்கம்:
{69} وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنْبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُبِينٌ

. وَقَالَ الْإِمَام أَحْمَد حَدَّثَنَا قَزَعَة بْن سُوَيْد الْبَاهِلِيّ عَنْ عَاصِم بْن مَخْلَد عَنْ أَبِي الْأَشْعَث الصَّنْعَانِيّ ح وَحَدَّثَنَا الْأَشْيَب فَقَالَ عَنْ أَبِي عَاصِم عَنْ أَبِي الْأَشْعَث عَنْ شَدَّاد بْن أَوْس رَضِيَ اللَّه عَنْهُ قَالَ : قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " مَنْ قَرَضَ بَيْت شِعْر بَعْد الْعِشَاء الْآخِرَة لَمْ تُقْبَل لَهُ صَلَاة تِلْكَ اللَّيْلَة " وَهَذَا حَدِيث غَرِيب مِنْ هَذَا الْوَجْه وَلَمْ يُخَرِّجهُ أَحَد مِنْ أَصْحَاب الْكُتُب السِّتَّة وَالْمُرَاد بِذَلِكَ نَظْمه لَا إِنْشَاده وَاَللَّه أَعْلَم عَلَى أَنَّ الشِّعْر فِيهِ مَا هُوَ مَشْرُوع وَهُوَ هِجَاء الْمُشْرِكِينَ الَّذِي كَانَ يَتَعَاطَاهُ شُعَرَاء الْإِسْلَام كَحَسَّانِ بْن ثَابِت رَضِيَ اللَّه عَنْهُ وَكَعْب بْن مَالِك وَعَبْد اللَّه بْن رَوَاحَة وَأَمْثَالهمْ وَأَضْرَابهمْ رَضِيَ اللَّه عَنْهُمْ أَجْمَعِينَ وَمِنْهُ مَا فِيهِ حِكَم وَمَوَاعِظ وَآدَاب كَمَا يُوجَد فِي شِعْر جَمَاعَة مِنْ الْجَاهِلِيَّة وَمِنْهُمْ أُمَيَّة بْن أَبِي الصَّلْت الَّذِي قَالَ فِيهِ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " آمَنَ شِعْره وَكَفَرَ قَلْبه " وَقَدْ أَنْشَدَ بَعْض الصَّحَابَة رَضِيَ اللَّه عَنْهُمْ لِلنَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مِائَة بَيْت يَقُول صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ عَقِب كُلّ بَيْت " هِيهِ " يَعْنِي يَسْتَطْعِمهُ فَيَزِيدهُ مِنْ ذَلِكَ وَقَدْ رَوَى أَبُو دَاوُد مِنْ حَدِيث أُبَيّ بْن كَعْب وَبُرَيْدَة بْن الْحُصَيْب وَعَبْد اللَّه بْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمْ أَنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " إِنَّ مِنْ الْبَيَان سِحْرًا وَإِنَّ مِنْ الشِّعْر حِكَمًا " وَلِهَذَا قَالَ " وَمَا عَلَّمْنَاهُ الشِّعْر " يَعْنِي مُحَمَّدًا صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَا عَلَّمَهُ اللَّه الشِّعْر " وَمَا يَنْبَغِي لَهُ " أَيْ وَمَا يَصْلُح لَهُ " إِنْ هُوَ إِلَّا ذِكْر وَقُرْآن مُبِين " أَيْ مَا هَذَا الَّذِي عَلَّمْنَاهُ " إِلَّا ذِكْر وَقُرْآن مُبِين " أَيْ بَيِّن وَاضِح جَلِيّ لِمَنْ تَأَمَّلَهُ وَتَدَبَّرَهُ .

http://quran.al-islam.com/Page.aspx?pageid=221&BookID=11&Page=1

Anonymous said...

அஹமது காக்கா அவர்கள், கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை! என்ற பதிப்பை 01/01/2012 பதிய, இன்று 05/01/2012 வரை வந்து கொண்டிருக்கும் பின்னூட்டங்கள் குழப்புவதும் குழம்புவதுமாக உள. தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

எனக்கு தெரிந்த ஒன்றை இங்கு கூற விரும்புகிறேன்.

கவிதை என்ற தமிழ் சொல்லின் உருவம் செய்யுள் வடிவமே.

தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கண இலக்கியங்கள் இவைகளையெல்லாம் நமக்கு தரும் மூல நூல்கள்:

முதற்சங்கம் தந்த அகத்தியம்

இடைச்சங்கம் தந்த தொல்காப்பியம்

கடைச்சங்கம் தந்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு

மேலும் தொல்காப்பியத்திற்கு விளக்கம் தரும் நன்னூல், வீரசோழியம்

அதுவன்றி காப்பியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை அத்துனையும் செய்யுள் வடிவமே.

ஆனால்! அல்லாஹ்வின் அருள்மறை-அல்குரான், ரசூல்(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அடங்கிய ஹதீஸ், மேலும் குரான் ஹதீஸ் இவைகளுக்கு விளக்கம் தரும் நூல்கள், இமாம்களின் சட்டங்கள், அறிஞர் பெருமக்களின் கருத்துக்கள் இவைகள் ஏதும் செய்யுள் வடிவமல்ல.

எனவே, தமிழ் மொழியில் நம் கவிஞர்கள் கவிதை புனைகிரார்கலெனில், அவை தமிழ் மூல நூல்களை அடிப்படையாகக் கொண்ட தமிழ்க் கவிதைகளேயன்றி வேறெதுவுமில்லை.

அதே நேரத்தில் இந்த கவிதைகளை இஸ்லாமிய முறையில் ஒப்பீடு செய்து இது சரியா? தவறா? என்று தயவு செய்து தவறான முடிவுக்கு வந்து விடவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

மக்கா இருந்த மக்களை மதி-நாவால் திருத்தினார்கள் என் பெருமானார் ரசூல்(ஸல்) அவர்கள்.

நூர் முஹம்மது / கதீப்-தம்மாம் / சவூதி அரேபியா.

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மொழிப்புலமை மிக்க ஜெமீல் காக்கா :

//கவ்ஸர், வன்ஹர், அப்தர் என முடியும் மூன்று வசனங்களின் சந்தங்கள் முறையே
கவ்+ஸர் வன்+ஹர் அப்+தர் என்று ஒன்றேபோல் அமைந்துள்ளன.//

சந்தங்கள் ஓசை நயத்துடன் ஒன்றி வருவதை -இறுதியில் அவ்வாறு அமைவதை "ஈற்றெதுகை" என்று நாம் விளங்கியுள்ளோம். ஆங்கிலத்தில் RHYTHM என்றும் சொல்வதை , அரபு மொழியில் , என்ன அரபுப் பதம் என்பதை அடியேன் அறியாத காரணத்தால் குழப்பம் உண்டானது போல் தெரிகின்றது. , இறை வசனங்கள் வாக்கியத்தின் முடிவில்-இறுதியில் ஓசை நயத்துடன் இருப்பதை அவதானிக்கின்றேன்; அவ்வோசை நயம் என்னை ஈர்ப்பது நாம் கூறும் "ஈற்றெதுகை" யின் ஈர்ப்பினைப்போல் உள்ளது என்பதால் மனிதன் வகுத்த இலக்கண வார்த்தையான "ஈற்றெதுகை" என்று குறிப்பிட்டேன். அதனால், இறைவன் வசனம் நாம் விளங்கியுள்ள மனிதன் வகுத்த இலக்கண வார்த்தைக்குச் சமம் என்று கருதிவிட்டேன் என்றும்; அல் குர் ஆனும் கவிதை தான் என்று நான் கருத்திடுவாதாக நீங்கள் கருதி விட வேண்டா. அல்லாஹ் அப்படிப்பட்ட பாவத்தை விட்டும் என்னைக் காப்பற்றுவனாக; நீங்களும் நான் கருதாத ஒன்றை "இப்படித்தான்" கருதியிருப்பேன் என்றும்
யூகத்தின் அடிப்படையில் கருத வேண்டா. அரபி மொழிப்புலமை மிக்க நீங்கள் மேலேச் சுட்டிக்காட்டிய "ஒன்றுபோல்"அமையும் வார்த்தைகளின் கோர்வைக்கு அரபு மொழியில் "என்ன" பதம் உண்டென்று கருதுவீர்களோ, அவ்வண்ணம் தான் என் எண்ணம் என்று மட்டும் உணர்க. குர் ஆன் வசனங்களில் உள்ள அதே மாதிரியான இறுதிச் சொற்களின் அணிவகுப்பு, குத்பா பயான்களிலும் கேட்கும் பொழுது அவ்வகையான ஈற்றுச்சந்தங்களின் ஓசை தேனாய்ப் பாய்வதால், குர் ஆனும் , குத்பா பயானும் ஒன்றல்ல என்பது எப்படி நமது பகுத்தறிவு உணருமோ, அதுவேப்போல, குர் ஆனும் , மனிதக் கவிதைகளும் ஒன்றல்ல என்றும் சத்யமிட்டுச் சொல்கின்றது எங்கள் உணர்வு.


ஆசான் அஹ்மத் காக்கா:

இக்கட்டுரையில் நீங்கள் சொல்லும் "கவிதை போன்ற" "ஓசை நயம்" என்பதன் விளக்கம் நான் புரிந்து கொண்ட - மேற்காணும் வண்ணம் தானா? அல்லது, அப்பதங்களின் விளக்கம் தான் என்ன ? ஒருவேளை, எல்லாரும் கருத்திட்டப் பின்னர் உங்களின் முடிவுரையில் விளக்கம் தருவீர்களா?

Anonymous said...

//மக்கா இருந்த மக்களை மதி-நாவால்//

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு நண்பரும் பேச்சாளருமான நூர் முஹம்மது அவர்கட்கு,

"மக்கா இருந்த
மக்களை
மதி நாவால்
திருத்திய
மதினா நாதர் "

இதனைச் சொன்னவர் இறையருட் கவிமணி பேராசிரியர் அப்துல் கஃபூர் அவர்களும் ஓர் இஸ்லாமியக் கவிஞரே!!

உங்களை அறியாமலே (அப்துல் லத்தீப் சொன்னதுபோல் "உள்ளதைச் சொல்வோம்;அல்லதைச் சாடுவோம்" என்று கவிநயமாய்ச் சொன்னது போல் ) புகழப் பெற்ற இறைமறையின் தோற்றுவாய் அத்யாயத்திற்கு கவிநடையில் - செய்யுள் வடிவில் பாடல் எழுதிய அக்கவிஞரின் கவிநயமான வார்த்தைகளையே இங்கு பதிவு செய்ததன் மூலம் ஓசை நயம் - கவி நயம் கொண்ட வார்த்தைகள் உங்களையும் ஈர்த்துவிட்டது என்பதே "நற்கவிதைக்கு"க் கிட்டிய நற்சான்று. நாடறிந்த நாவலரான நீங்களும் உங்கள் பேச்சுக்களில் நிரம்பக் கவிதைகளை மேற்கோள் காட்டியுள்ளீர்கள்.

அபுல் கலாம் (த/பெ.ஷைக் அப்துல் காதிர்)

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

பாரக்கல்லாஹூ ஃபீக்...
அபூ பிலால் காக்கா ஜசாக்கல்லாஹூ ஹைர்.

காக்காவின் விளக்கத்தின் அடிப்படையில்...

நபி(ஸல்) சில இடங்களில் பாட சொல்லி ஏவி இருக்கிரார்கள் என்பதனாலும், மேலும் குர் ஆன் சுன்னாவிற்க்கு எதிரான எந்த கருத்தும் இடம் பெராமல் இருந்தால் அது போன்ற கவிதைகளை நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்...
அரபியர் சொன்ன சொற்களிலேயே மிகவும் சிற்ந்தது(கவிஞ்ர்) லபீத் சொன்ன
”அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே”

எனும் சொல்தான்.
இதை அபூஹூரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஆதாரம் முஸ்லிம் 4541.

//நீங்கள் கேட்டிருந்த 36:69 எண்ணிட்ட இறைவசனத்துக்கு இமாம் இபுனு கஸீர் அவர்களின் நெடிய விளக்கம் உள்ளது. இங்கு முழுமையாக இடமுடியாது. சுருக்கம்:
{69} وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنْبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُبِينٌ

. وَقَالَ الْإِمَام أَحْمَد حَدَّثَنَا قَزَعَة بْن سُوَيْد الْبَاهِلِيّ عَنْ عَاصِم بْن مَخْلَد عَنْ أَبِي الْأَشْعَث الصَّنْعَانِيّ ح وَحَدَّثَنَا الْأَشْيَب فَقَالَ عَنْ أَبِي عَاصِم عَنْ أَبِي الْأَشْعَث عَنْ شَدَّاد بْن أَوْس رَضِيَ اللَّه عَنْهُ قَالَ : قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " مَنْ قَرَضَ بَيْت شِعْر بَعْد الْعِشَاء الْآخِرَة لَمْ تُقْبَل لَهُ صَلَاة تِلْكَ اللَّيْلَة " وَهَذَا حَدِيث غَرِيب مِنْ هَذَا الْوَجْه وَلَمْ يُخَرِّجهُ أَحَد مِنْ أَصْحَاب الْكُتُب السِّتَّة وَالْمُرَاد بِذَلِكَ نَظْمه لَا إِنْشَاده وَاَللَّه أَعْلَم عَلَى أَنَّ الشِّعْر فِيهِ مَا هُوَ مَشْرُوع وَهُوَ هِجَاء الْمُشْرِكِينَ الَّذِي كَانَ يَتَعَاطَاهُ شُعَرَاء الْإِسْلَام كَحَسَّانِ بْن ثَابِت رَضِيَ اللَّه عَنْهُ وَكَعْب بْن مَالِك وَعَبْد اللَّه بْن رَوَاحَة وَأَمْثَالهمْ وَأَضْرَابهمْ رَضِيَ اللَّه عَنْهُمْ أَجْمَعِينَ وَمِنْهُ مَا فِيهِ حِكَم وَمَوَاعِظ وَآدَاب كَمَا يُوجَد فِي شِعْر جَمَاعَة مِنْ الْجَاهِلِيَّة وَمِنْهُمْ أُمَيَّة بْن أَبِي الصَّلْت الَّذِي قَالَ فِيهِ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " آمَنَ شِعْره وَكَفَرَ قَلْبه " وَقَدْ أَنْشَدَ بَعْض الصَّحَابَة رَضِيَ اللَّه عَنْهُمْ لِلنَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مِائَة بَيْت يَقُول صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ عَقِب كُلّ بَيْت " هِيهِ " يَعْنِي يَسْتَطْعِمهُ فَيَزِيدهُ مِنْ ذَلِكَ وَقَدْ رَوَى أَبُو دَاوُد مِنْ حَدِيث أُبَيّ بْن كَعْب وَبُرَيْدَة بْن الْحُصَيْب وَعَبْد اللَّه بْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمْ أَنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " إِنَّ مِنْ الْبَيَان سِحْرًا وَإِنَّ مِنْ الشِّعْر حِكَمًا " وَلِهَذَا قَالَ " وَمَا عَلَّمْنَاهُ الشِّعْر " يَعْنِي مُحَمَّدًا صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَا عَلَّمَهُ اللَّه الشِّعْر " وَمَا يَنْبَغِي لَهُ " أَيْ وَمَا يَصْلُح لَهُ " إِنْ هُوَ إِلَّا ذِكْر وَقُرْآن مُبِين " أَيْ مَا هَذَا الَّذِي عَلَّمْنَاهُ " إِلَّا ذِكْر وَقُرْآن مُبِين " أَيْ بَيِّن وَاضِح جَلِيّ لِمَنْ تَأَمَّلَهُ وَتَدَبَّرَهُ .
//
இதற்க்கான தமிழ் விளக்கம் தந்தால் நலமாக இருக்கும்...

KALAM SHAICK ABDUL KADER said...

//நபி(ஸல்) சில இடங்களில் பாட சொல்லி ஏவி இருக்கிரார்கள் என்பதனாலும், மேலும் குர் ஆன் சுன்னாவிற்க்கு எதிரான எந்த கருத்தும் இடம் பெராமல் இருந்தால் அது போன்ற கவிதைகளை நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்...
அரபியர் சொன்ன சொற்களிலேயே மிகவும் சிற்ந்தது(கவிஞ்ர்) லபீத் சொன்ன
”அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே”

எனும் சொல்தான்.
இதை அபூஹூரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஆதாரம் முஸ்லிம் 4541.//
அல்-ஹம்துலில்லாஹ். தீர்ப்பு நெருங்கி விட்டது. விரைவில் ஆசான் அஹ்மத் காக்கா அவர்களின் முடிவுரையினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

கவிவேந்தர் சபீர் அவர்களின் “பிஞ்சுத் தூரிகை” கவிதை ஜெமீல் காக்கா அவர்களின் உள்ளத்தை ஈர்த்ததும், அவர்களின் இல்லத்துச் சுவரை அலங்கரித்ததும்;

கவிவேந்தர் சபீர் அவர்களின் “தோழர்கள்” கவிதையினை அஹ்மத் காக்கா நூல் வெளியீட்டு விழாவில் நேசித்ததும்- வாசித்ததும்;

கவிவேந்தர் சபீர் அவர்களின் “யாதும் தெருவே யாவரும் கேளிர்” கவிதையினை ஜெமீல் காக்காவும், பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும் புகழ்ந்து பாடியதும்

கவிவேந்தர் சபீர் அவர்களின் கவிதை இஸ்லாத்திற்கு முரண்பட்டவைகளாக இல்லாமல் உடன்பட்டவைகளாக அமைந்தன என்பதே போதுமானச் சான்றுகள்.

“தெருக்கள் ஊரின்
கருக்கள்” என்ற வரிகளும்;
“மாற்றுக்கருத்து இல்லாத
மார்க்கம் போதிக்கணும்” என்ற வரிகளும் AAMF ன் “கரு”வாக அமையப் பெற்ற கவிதை அன்றோ?

“தோழர்கள்” பற்றிக் குறிப்பிடும் பொழுது:
“நட்சத்திரங்கள்; ஆனால்
நடிக்கத் தெரியாதவர்கள்”

இவ்வரிகள் இஸ்லாத்திற்கு முரண்பட்டவைகளா? உடன்பட்டவைகளா?

அதனால், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கல்வி விழிப்புணர்வு மாநாட்டிலும் கவிவேந்தர் சபீர் அவர்களின் கவிதை தான் முத்திரைப் பதிக்கும் என்பது எனது அவாவும் துஆ வும்.

Anonymous said...

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

அதிரையில் ஓர் அதிசயம் நடந்தது! ஆம். சலாஹிய்யா மதரசா விழாவில் மர்ஹூம் AMS அவர்களின் ஆதரவில் "ஆலிம்கள் பங்குபெறும் கவியரங்கம்" முன்பு நடந்தேறியது. அப்பொழுது சகோதரர் அப்துல் லத்தீஃப் அவர்கள் பக்கத்து வீட்டீல் இருந்த AMS ஹாஜியார் அவர்களிடம் சொல்லி அக்கவியரங்கைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். இப்பொழுது, AIM நடாத்தும் கவியரங்கினைத் தடைச் செய்யும் முனைப்பு , குர் ஆன் ஹதீஸ் கற்று, கற்றுக் கொடுக்கும் ஆலிம்களைப் புலவர்களாய் பாட வைத்த நிகழ்வைத் தடுக்கவும் இயலவில்லையே . ஒருவேளை அத்தருணம் அப்துல் லத்தீஃப் அவர்கள் சிறுவனாக இருந்திருக்கலாம் அல்லது அயல்நாட்டில் அமர்ந்திருந்து இருக்கலாம். அந்தக் கவியரங்கில் ஓர் ஆலிம் பாடிய வரிகள் இன்னும் என்றன் உள்ளத்தில் பசுமையாய்ப் பதிவாகி உள்ளது.

"உலகில் எல்லா நீரும் துருவை
உண்டாக்கும் ; எனினும்
ஒளுச் செய்தால்
உள்ளத்தின் துரு அகலும் !"
இந்தக் கவி வரிகள் வழிகேடா?
அக்கவியரங்கின் தலைவராகப் பொறுப்பேற்றுத் திறம்பட நடாத்திக் கொடுத்தத் தேங்கை ஷரஃபுத்தீன் ஓர் ஆலிம் புலவர் தானே? அவர்கள் வழிகேட்டில் உள்ளவர்களா? அல்லது, முதன் முதலாக மதரசாவில் அதுவும் ஆலிம்கள் நிரம்பிய அதிரைப்பட்டினத்தில்-ஆலிம்களின் புரவலராகவேப் புகழப் பெற்ற மர்ஹும் AMS அவர்களை எந்த ஓர் ஆலிம் தடுத்தார்கள்? அன்று நடந்தது முதற் கவியரங்கம் ஆலிம்களை உருவாக்கும் மதரசாவில் ஆலிம்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது போலவே, இன்ஷா அல்லாஹ், எதிர் வரும் மே மாதம் அதிரைத் தமிழறிஞர் புலவர் மர்ஹூம் பஷீர் ஹாஜியார் நினைவரங்கில் நடாத்தப்படவுள்ள கவியரங்கினைக் காணுங்கள்; ஓசை நயத்துடன் ஓரிறைக் கொள்கை ஓங்கி ஒலிப்பதைக் கேளுங்கள். சந்தங்கட்குச் சொந்தங்களான எங்களின்
பந்தங்களை விட்டும் பிரிந்து விடாதீர்கள் .

பாங்கின் வரிகள் ஈற்றுச் சொல் ஒன்றி வருவதால் கேட்பதற்குத் தேனாய்ச் செவிகளில் பாய்வது போலவே, எங்களின் கவிதைகளின் "ஓசை நயம்" உங்களின் செவிக்குணவாக அமையும், இன்ஷா அல்லாஹ் !!

அபுல்கலாம் (த/பெ. ஷைக் அப்துல் காதிர்)

Anonymous said...

சகோ. அப்துல் லத்தீப் அவர்களின் பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது.

இங்கு கருத்து பதியும் சகோதர்கள் தாஜுதீன்,நெய்னா தம்பி காக்கா,சபீர் காக்கா,ஜமீல் காக்கா இன்னும் மற்ற சகோதரர்கள் எல்லாரும் கவிதை பற்றி இஸ்லாம் சொல்வதென்ன என விளக்க முயற்சி செய்கிறார்கள்.அதன் அடிப்படையில் ஷிர்க் இல்லாத கவிதைகளை ஆதரிக்கலாம்,தவறில்லை என்ற அளவில் வந்திருக்கிறோம்.இதில் எனக்கும் உடன்பாடு உண்டு,ஆனால் கவிதைக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். காரணம்,கவிதையை வைத்து மார்க்க விஷயத்தில் உள் நுழைந்து,குழப்பம் விளை விக்க முடியும்.சிறு உதாரணம்,அப்போ உமறு புலவர்,இப்போ நாகூர் ஹனிபா.அந்த கவிதை,பாடல்,இசை நயத்தில் உள்ளே நுழைந்துள்ள ஷிர்க்கை,பித் அத்தை கண்டு கொள்ள முடியாது.பேச்சு,உரை நடையில் கண்டுகொள்ள இயலும்.எனவே கவிதையை புறந்தள்ள வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

--அப்துல் லத்தீப்

-----

எல்லோரும் தெளிவு பெறவேண்டும் என்ற நல்லொண்ணத்தில் இங்கு கருத்துப்பரிமாற்றம் நடைப்பெறுகிறது என்பதை கருத்திடும் சகோதரர்கள் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறோம்..

எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே..


-- நெறியாளர்

அதிரை தாருத் தவ்ஹீத் said...

//அக்கவியரங்கின் தலைவராகப் பொறுப்பேற்றுத் திறம்பட நடாத்திக் கொடுத்தத் தேங்கை ஷரஃபுத்தீன் ஓர் ஆலிம் புலவர் தானே? அவர்கள் வழிகேட்டில் உள்ளவர்களா?//

அன்புத் தம்பி கலாம்,

தேங்கை ஷரஃபுத்தீன் மிஸ்பாஹி வழிகேட்டில் இருக்கிறாரா? என்பதைத் தீர்மானமாக சொல்லமுடியாது. ஆனால், அவர் தூக்கிப் பிடிக்கும் மவ்லிதுக் குப்பைகளும் ராத்திபு ஜலாலியாவும் வழிகேட்டுக்கு இட்டுச் செல்லக்கூடியவை என்பதை அழுத்தமாகச் சொல்லமுடியும்.

விபரமாக வேண்டுமெனில் கேளுங்கள். தருவேன், இன்ஷா அல்லாஹ்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//"உலகில் எல்லா நீரும் துருவை
உண்டாக்கும் ; எனினும்
ஒளுச் செய்தால்
உள்ளத்தின் துரு அகலும் !"
இந்தக் கவி வரிகள் வழிகேடா?//

அன்புள்ள சகோதரர்அபுல்கலாம் (த/பெ. ஷைக் அப்துல் காதிர்)அவர்களுக்கு,மேற்சொன்ன கவிதை மார்க்கம் பற்றி வருகிறது.மார்க்கம் என்றால் அல்லாஹ்வும்,ரசூல் ஸல் அவர்கள் மட்டுமே அத்தாரிட்டி.
உள்ளத்தின் துரு மறையும் என குரான் ஹதீஸ் சொன்னால் அது மார்க்கம்,எனவே இது இந்தக் கவிதை ஒரு வழிகேடு.அல்லாஹ்வும் ரசூலும் சொல்லாததை சொன்னதால்.

அடுத்து,இல்லை,இல்லை இங்கே உவமையுடன் ஆளப்பட்டுள்ளது என்றால்,அதுதான் கவிதையின் வேலையே என புரிந்து கொள்ளுங்கள்.(துரு-பாவம் என சமாளிப்பீர்கள்).இந்தக் கவிதைகள் முன்னுக்கு பின் முரண் மற்றும் இல்லாததை சொல்லி,இதுதான் அர்த்தம் என சொல்லும்.

ஆனால் நம் உயிரினும் மேலான குரான் என்ன சொல்கிறது.

சொல்வதை,நேரடியாக,தெளிவாக சொல்லுங்கள்.அல்லாஹு அக்பர்.இங்கும் கவிதைக்கு சம்மட்டி அடி.

மர்ஹூம் சம்சுதீன் ஹாஜியார் அவர்கள் செய்தது மார்க்கம் அல்ல.எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் கபுரை வெளிச்சமாக்கி வைப்பானாக.ஆமீன்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)