Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திக்க வேண்டுகிறோம் ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 15, 2013 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரைநிருபரின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவரான அன்புக்குரிய யாசிர் அவர்களின் மருமகன் ஆஷிக் அஹமது அவர்கள் சமீபத்தில் நடுவிக்காடு சந்திப்பில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயம்பட்டு தஞ்சை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரு நல்ல வளர்ந்து வரும் பட்டதாரி இளைஞர், அமீரகத்தில் வேலைக்கான அழைப்பு கடிதம் பெற்றுக் கொண்டு பெருநாளைத் தொடர்ந்து புதுவீடு குடிபுகலுக்காக ஊருக்குச் சென்றிருந்தவர், லாரல் பள்ளி வேன் ஓட்டுனரின் கவனக் குறைவால் இந்த விபத்தில் பாதிக்கப் பட்டுள்ளார்.

ஆஷிக் அஹமது அவர்கள் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.

மேலும் அதிரைநிருபர் சார்பாக நமது மூத்த பங்களிப்பாளர் இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வந்துள்ளார்கள்.

நம் அனைவரது பிரார்த்தனையும் இணையட்டும் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்

12 Responses So Far:

sabeer.abushahruk said...

யாசிருடன் பேசியதில் மருமகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார்.

ஆனால், அவர் ரொம்ப மனஅழுத்தத்தோடும் வேதனையோடும் இருப்பதை குரலில் உணர முடிந்தது. நண்பர்களின் ஆறுதல் அவரைத் தேற்றும்.

ஆஷிக் விரைவில் பூரண குணமடைய துஆச்செய்யுங்கள்.

யாசிர் இந்தியாவில் 00918012754005

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஷிக் அஹமது அவர்கள் விரைவில் பூரண குணமடையவும், ஆரோக்கியத்துடன் சீக்கிரத்தில் மீண்டெழுந்து வழமைக்கு வரவும் அல்லாஹ் அருள்புரிவானாக !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவங்கள் மருத்துவத்துக்கு கொடுக்கும் விலைக்கு இறைவனின் உதவி கிடைத்து பூரண ஷிஃபா அடைந்திட துஆ செய்கிறேன்.

சகோ. யாசிருடன் பேசிக் கொண்டேன். இன்சா அல்லாஹ் நலம் அடைந்துவிடுமென்று சொன்னார். ஆமீன்.

Shameed said...

நம் அனைவரது பிரார்த்தனையும் இணையந்து சீக்கிரம் குணமடைய படைத்த இறைவனிடம் துவா கேட்ப்போம்

Unknown said...

யா அல்லாஹ் ஆஷிக் அகமது நல்ல பூரண உடல் நலம் பெற்று , தன குடும்பக்
கனவுகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றும் முகமாக , தங்கள் வீடு
வந்து சேர உன்னை வேண்டுகிறோம்.

எங்கள் துஆவை ஏற்றுக்கொள்வாயாக |

ஆமீன்.

அபு ஆசிப்.

adiraimansoor said...

ஆஷிக் அஹமது அவர்கள் பூரண உடல் நலம் பெற்றிட துஆ செய்கிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

ஆஷிக் அஹமது அவர்கள் பூரண உடல் நலம் பெற்றிட துஆ செய்கிறேன்.

ZAKIR HUSSAIN said...

May Allah bless Ashik Ahamed for a speedy recovery.

Ebrahim Ansari said...

குடும்பத்தின் பாரத்தை தனது தோளில் சுமக்க ஆயத்தமான ஒரு நல்ல குணமுள்ள ஆஷிக் அல்லாஹ் உதவியால் நலம் பெற்று இந்த சோதனையில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை நேற்று மருத்துவமநெய்யில கண்டதும் எனக்கு ஏற்பட்டது.

ஒட்டு மொத்த குடும்பத்தின் துயர் துடைக்க அவர்களின் கண்ணீரையும் து ஆவை யும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்று இந்த வளரும் பயிரை நலமுடன் காப்பானாக!

Anonymous said...

தம்பி ஆசிக் அஹமத்! சீக்கிரமே நலம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம்
துஆ செய்கிறேன்! தம்பி ஆசிக் கவலை பாடாதீர்கள்! சீக்கிரமே அல்லாஹ் பூரண நலம் தருவான். ஆமீன், நம்பிக்கயுடன் இருங்கள் நலம்பெறுவீர்கள்!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

அப்துல்மாலிக் said...

வல்ல இறைவன் உடல் ஆரோக்கியத்தை தருவானாகவும் ஆமீன்

மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப என் ஆழ்ந்த பிரார்த்தனைகள்..

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

I have talked with Bro. Yasir this morning and asked about the health of his nephew Mr. Ashik Ahamed who got injured in recent accident at PKT road due to the reckless driving of Laurel's school van driver. May Allah bless him fastest cureness from the injuries. Aameen. One day, I have seen in my own eyes that the van driver of Laurel's school parked his van side of the road and buying bottles of liquor from the shop of 'TASMAC' which is located in the PKT road. Then, why don't happen this kind of accident frequently at our hometown surroundings? Ruf and tuf road is not the matter. Habits of alcoholic consumption of our country even normal people is the main cause for the every accidents around our country.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு