Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள் 17

அதிரைநிருபர் பதிப்பகம் | May 10, 2014 | ,

தொடர் 24

கடந்த சில வாரங்களாக இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக தங்களின் உடல் பொருள்,  ஆவியை தியாகம் செய்த பல இஸ்லாமியப் பெருமகன்களின் வரலாற்றை  சுருக்மாக கண்டு வருகிறோம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர்களிலும் உயிர்களை தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அவர்களின் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகவே இருந்தார்கள் என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையில் எழுதி அது 20/12/1975 அன்று வெளிவந்தது. 

ஆனால் மறு புறத்தில் முஸ்லிம்கள் செய்த தியாகங்களை குறைத்து மதிப்பிடுகிற ஒரு கூட்டம் அளவற்ற பொய்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களை  ஏதோ ஒரு வேண்டாத தலைச்சுமை போல ஆட்சியாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் இந்த நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டுமென்றும் அள்ளிவிட்டுக் கொண்டிருக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் சட்டத்துக்கு விரோதமான அவர்களின்  இந்த  க் கருத்துக்கள், சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவ்விதம் பேசுவோர் மீது ஏவி விடப்பட்டாலும்,அவை யாவுமே    கண் துடைக்கும் காரியங்கள்தான்.  

அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாள்கின்ற அவலம் ஒருபுறம் ; சுதந்திரத்துக்காக வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் மறுபுறம்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு அவர்களின் பிரதிநிதிகளாக இருந்தூ கிஸ்தி வசூ¬லித்து தந்தவர்கள் எல்லாம் , இன்று தியாக வேஷம் போட்டு முஸ்லிம்களின் தியாகத்தின்  சூரியனின் கதிர்களை ,  கரங் கொண்டு மறைத்து விடலாம் என்று நினைக்கலாம், ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது. எவ்வளவு காவிச்சாயம் அடித்தாலும் இந்த தியாகங்களை மறைக்க முடியாது.

சிறு குறிப்புகளுடன் இந்தப் பட்டியல் நீளும். 

வேலூர் சிப்பாய்க் கலகம்:-

ஒரு சுதந்திரத்துக்கான முதல்  போராட்டம என்று வர்நிக்கப்படும் சிப்பாய் புரட்சியைக்  கூட முஸ்லிம்கள் தொடர்புடையதால்  செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்கிறார்கள். இந்தப் பாவிகள் .  1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசினார்கள்.  இந்த உயிர்த் தியாகங்களைக் கூட  மறந்துவிட்டு வரலாற்றுப் பாடங்களில் இரண்டு மார்க் கேள்விக்கு பதிலாகவே  இந்த சம்பவம் சித்தரிக்கப் படுகிறது.

மாப்பிள்ளைமார்கள் போராட்டம்:

1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு ஒரு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி, நசுக்கிக் கொல்லப்பட்டார்களே! இந்த மாப்பிள்ளைமார் மணவறையில் அனுபவிக்காமல் , பிணமாகி  அடக்கப் பட்ட மண்ணறைகள் இன்றும் கோவை ரயில் நிலையில் அருகில் அமைதியாக சான்று பகர்கிறதே! இந்த வரலாற்று தியாகத்தை  எப்படி மறக்க முடியும்? மறைக்க முடியும்?

காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்பு போராட்டம்:-

அன்றைய வெள்ளையன் ஆட்சியில் 13% இடஒதுக்கீட்டில் இருந்த முஸ்லிம் சமுதாயம் காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கான் சாஹிபிலிருந்து, காயிதே மில்லத் வரை 90% அதிகமானோர் தங்கள் பட்டங்கள் பதவிகளைத் துறந்தனர். அன்று பட்டங்கள் பதவிகளைத் துறக்காமல் இருந்திருந்தால், இன்று, இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் அவல நிலை இருந்திருக்காதே ! அரசுபபதவி அதிகாரங்களில் முஸ்லிம்களின் சதவீதம் குறைந்ததற்கு இதுவும் ஒரு வலுவான காரணமல்லவா? முஸ்லிம்களை உசுப்பேத்திவிட்டு விட்டு மற்றவர்களுக்குப் பதவிகளைப் பெற்றுத்தந்த ஒரு அரசியல் அசித்க்கு ஆளானவர்கள்தானே முஸ்லிம்கள்?

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.

வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி  என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.

19 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி 1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லிம் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.

காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19 பேரில் 10 முஸ்லிம்கள் . இட ஒதுக்கீட்டில் பதிமூன்று சதவீதமே பெற்றிருந்த முஸ்லிம்கள் தியாகம் செய்வதில் – சுதந்திரத்துக்காகப் போராடுவதில் – துன்பங்களைத் தாங்கிக் கொள்வதில்  50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டிருந்தனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி:

1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை)

2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்)

3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)

4.முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)

5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை 
வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்)

6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்)

7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)

8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)

9. அப்துல் ஹமீது

10. மௌலானா அப்துல் காதர்

1973 ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி¬ம்களின் பெயர்கள் இடம் பெற்று  இருந்தன. 

அவர்களின் விபரம் வருமாறு:

பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
இராஜகிரி அப்துல்லா
இளையான்குடி கரீம் கனி
திருப்பத்தூர் அபூபக்கர்
திருப்பத்தூர் தாஜிதீன்
அத்தியூத்து அபூபக்கர்
பக்கரி பாளையம் அனுமன் கான்
சென்னை அமீர் ஹம்சா
சென்னை ஹமீது
செங்குன்றம் கனி
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
புதுவலசை இபுராஹிம்
பார்த்திபனூர் இபுராஹிம்
வனரங்குடி இபுராஹிம்
இளையான்குடி அப்துல் கபூர்
மேலூர் அப்துல் ஹமீது
சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார்
தத்தனனூர் அப்துல் காதர்
பட்டுக்கோட்டை அப்துல் காதர்
திருப்பூர் அப்துர் ரஜாக்
காரிவிப்பட்டினம் அப்துல் மஜித்
குருவம் பள்ளி அப்துல் மஜீத்
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
ராம்நாடு அப்துல் வஹாப்
மானாமதுரை அப்துல் பாசித்
திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்
அத்தியூத்து இபுராஹிம்
சென்னை ஜாபர் ஹக்கிமி
சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
திருப்பத்தூர் காதர் பாட்ஷா
புதுவலசை முஹம்மது லால் கான்
பார்த்திபனூர் கச்சி மைதீன்
தஞ்சை முஹம்மது தாவூது
அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்
வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
சிவகங்கை முஹம்மது இபுராஹிம்
சென்னை முஹம்மது உமர்
மதுரை மொய்தீன் பிச்சை
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
திருப்பத்தூர் பீர் முஹம்மது
கும்பகோணம் ரஹ்மத்துல்லா
குடியத்தம் நஜீமுல்லாஹ்
கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
இராமநாதபுரம் சையது கனி
பரங்கிப் பேட்டை  தாஜிதீன்
மன்னர்குடி சிக்கந்தர்
கம்பம் சிக்கந்தர்
முதுகுளத்தூர் சுல்தான்
கும்பகோணம் சுல்தான்
இராமநாதபுரம் தாஜிதீன்

இந்திய சுதந்திரத்துக்கான விடுதலைப் போரில் இவ்வளவு முஸ்லிம்களும் தங்களுடைய  தியாகத்தால் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வடிவமைத்தார்கள். தங்களின் இரத்தத்தை சிந்தினார்கள். இன்னுயிர் ஈந்தார்கள். கண்ணீர் சிந்தினார்கள். தியாகத் தழும்புகளை ஏற்றார்கள். 

இன்ஷா அல்லாஹ் அன்னியருக்கு மண்டியிட மறுத்த , மருத நாயகம் என்கிற மாவீரனின் வரலாற்றோடு  அடுத்த வாரம் இத்தொடர் நிறைவு பெறும். 

இபுராஹீம் அன்சாரி

17 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இவ்வளவு முஸ்லிம்களும் தங்களுடைய தியாகத்தால் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வடிவமைத்து தங்களின் இரத்தத்தையும் கண்ணீரையும் சிந்தி, இன்று அதன் எதிர்மறையாக அவர்கள் அனைவரையும் மறக்கடித்த துரோகிகளை நினைத்து நாம் கண்ணீர் சிந்த வேண்டியிருக்கிறது.

adiraimansoor said...

//1973 ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி¬ம்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. /////
இதிலும் எத்தனை தியாகிகளின் பெயர்கள் மறைக்கப்பட்டிருக்கும்

காரணம் அன்றைய இஸ்லமிய மக்கள் ஒரே கட்டுப்பாடில்தானே இருந்தார்கள் இன்று இருப்பதுபோல் முட்டால்கள் அன்றில்லையே
அதனால் இன்னும் அதிகமான முஸ்லீம் தியாயிகள் இருந்திருக்கலாம் அவரகள் பெயரும் மறைக்கப்பட்டிருக்கலாம்

sabeer.abushahruk said...

மனிதனுக்கு தலை வணங்காத மார்க்கம் பயின்றதால்தான் வெள்ளையனை எதிர்த்துப் போராட முடிந்தது.

சக மனிதனைச் சின்னச்சின்ன உதவிகளுக்கெல்லாம் தலை வணங்கப் படித்த எட்டப்பர்களுக்கு வெள்ளையர்கள் பண்டு தந்த சலுகைகளே தொன்றுதொட்டு அவர்களை முன்னேறிய சமூகமாகப் பார்த்துக் கொண்டது.

எடுத்தவன் பிழைத்துக் கொண்டான்; கொடுத்தவன் தெருவில் நின்றான் என்று சும்மாவா சொன்னார்கள்?

அருமையான தொடர் தரும் காக்கா, அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

sheikdawoodmohamedfarook said...

1973ம்ஆண்டுதமிழகஅரசுவெளியிட்டபுத்தகத்திலும்இன்னும்நிறையவே விடுபட்டிருக்ககூடும்.எனக்குதெரிய அதிராம்பட்டினம் சாயக்காரதெருவை சார்ந்த காதர்சாவும் ஒருவர்.அவரும் இந்தியவிடுதலைக்காக நேத்தாஜி படையில்நெஞ்சு நிமிர்த்தி நின்ற வீரர்.

Ebrahim Ansari said...

இன்று ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது. அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் ஏ எல் எம் பள்ளியில் நடைபெற்ற கோடைகாலப் பயிற்சி முகாமில் இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் வீர வரலாறு என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்காக வகுப்பு எடுக்கும் வாய்ப்பைத் தந்திருந்தார்கள்.

இந்தத்தொடரில் நான் எழுதிய பல சம்பவங்களைத் தொகுத்து மாணவ மணிகளுக்கு வழங்கக் கிடைத்த வாய்ப்பை வழங்கிய ஏ டி டி அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அழகான அனுபவமாக இருந்தது. ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

அதிரை தேனருவி said...

ஆகமொத்தம்இந்திய விடுதலைபோரில் முஸ்லிம்களின்பங்கு விகிதாசாரத்தைவிடஅதிகமாகஇருந்தும் திட்டமிட்டேகுறைத்துக்காட்டபட்டிருக்கிறது.வெள்ளைதோல்காரனுக்கு சாமரம்வீசியவனுக்கெல்லாம்சரிநிகர்சாய்மானநாற்காலிகொடுத்துவிட்டுஉண்மைதியாகம்செய்தமுஸ்லீம்கள் சந்தியில்விடப்பட்டார்கள்.''மாங்குமாங்குண்டுஇடிதவளுக்கு ஒருகொலக்கட்டையாம்!ஏன்டியக்கா?''என்றவளுக்குஇரண்டுகொலகட்டையாம்!'' என்ற சொல்லடைஇங்கேஉண்மையாகிறது.என்றாலும்உண்மைஎன்னும்நெருப்பைபஞ்சுமூட்டையால் அணைக்கமுடியாது.

sabeer.abushahruk said...

ஈனா ஆனா காக்கா,

உங்கள் பயிற்சியை அனுபவித்தவர்களும் அதிர்ஷ்டக்காரர்களே காக்கா.

அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஹயாத்தையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் கொடுத்து மென்மேலும் சமூகப்பணியைத் தொடர என் துஆ.

இப்னு அப்துல் ரஜாக் said...

மனிதனுக்கு தலை வணங்காத மார்க்கம் பயின்றதால்தான் வெள்ளையனை எதிர்த்துப் போராட முடிந்தது.

இப்னு அப்துல் ரஜாக் said...

இதே போன்ற பயிற்சி எல்லா பள்ளி ஆசிரியர்களுக்கும் இ அ காக்கா கொடுக்க ஆவன செய்தல் வேண்டும்.

அதிரை தேனருவி said...

இதுவரையில்இந்ததளத்தில்வந்தமதச்சாயம்பூசிமறைக்கபட்டவரலாறுகளை காணும்போதுஇந்திய சுதந்திரவரலாற்றில்இஸ்லாமியர்களின்தியாகமும் பங்கும்வேண்டுமென்றே நீக்கப்டிருக்கிறது. சரித்திரம்என்னபத்தியமாகாக்கிறது? இஸ்லாமியர்களின் பெயர்களைஅது சொன்னால்பத்தியம்முறிந்துவிடுமா?

Unknown said...

இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களுடன் எனது முதற் சந்திப்பும் அவர்கள் ADT பயிற்சி முகாமில் நடத்திய பாடத்தினையும் நேரில் பருகும் பக்கியத்தினையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏற்படுத்தி தந்தான். காக்கா அவர்களின் பல்துறை அறிவு நம் மாணவ சமுதாயங்களுக்கு கிடைத்திட பள்ளி, கல்லூரிகள், சங்கங்கள், தனி நபர்கள் என அனைத்து தரப்பினரும் ஏற்படுத்தித்தர முன்வர வேண்டும். பயன்படுத்த தவறினால் இழப்பு நம் சமுதாயத்திற்கே!

இப்னு அப்துல் ரஜாக் said...

//இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களுடன் எனது முதற் சந்திப்பும் அவர்கள் ADT பயிற்சி முகாமில் நடத்திய பாடத்தினையும் நேரில் பருகும் பக்கியத்தினையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏற்படுத்தி தந்தான். காக்கா அவர்களின் பல்துறை அறிவு நம் மாணவ சமுதாயங்களுக்கு கிடைத்திட பள்ளி, கல்லூரிகள், சங்கங்கள், தனி நபர்கள் என அனைத்து தரப்பினரும் ஏற்படுத்தித்தர முன்வர வேண்டும். பயன்படுத்த தவறினால் இழப்பு நம் சமுதாயத்திற்கே! //

வழி மொழிகிறேன் ஆமீன் காக்கா .

இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களை நம் சமுதாயமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே போல,இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ள இத் திறமைகளை சமுதாயத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும்.மனித வள மேம்பாட்டுக் கருத்துக்களை ஊர் தோறும் சென்று power point மூலம் சொல்ல வேண்டும்.இதற்கு cmn சலீம் போன்ற சகோதரர்களுடன் இணைந்தும் adt போன்ற அமைப்புக்களுடன் இணைந்தும் செயல் படுத்தலாம்.

ZAKIR HUSSAIN said...

To Brother Ebrahim Ansari,

இப்போதைக்கு இது போன்ற விழிப்புணர்வுகள்தான் இஸ்லாமிய மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் தேவை. தொடர்ந்து இஸ்லாமியர்களின் தியாகங்கள் இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்பட்டு ...குண்டு வெடித்தாலே 'முஸ்லீம் தீவிர வாதிகள் மட்டும்தான் குண்டு வைப்பார்கள் ' தீவிரவாத ஹிந்துக்களுக்கு தீப்பட்டி கூட பத்த வைக்க தெரியாது என்பதுபோல் ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது.


இந்திய சுதந்திரப்போராட்டத்தில் முஸ்லீம்களின் முக்கிய பங்கை நீங்கள் பாடம் நடத்தியிருப்பது, இந்தியாவில் முதல் முயற்சி...அதுவே பின்னாளில் இந்தியர்கள் அனைவரும் சரியான சரித்திரத்தை தெரிந்து கொள்ள ஏற்படுத்தப்பட்ட தொடக்கம்.

பல இயக்கங்களும் , முயற்சிகளும் இப்படி குறைவான ஆட்களை வைத்து எங்கோ ஒரு மூலையில்தான் ஆரம்பிக்கப்பட்டது .

[ REF: இந்திய சுதந்திரப்போராட்டத்தின் விதை காந்தி தென் ஆப்ரிக்காவில் ஒரு சாதாரண இடத்தில் ஒரு சொற்ப கூட்டத்தை வைத்தே ஆரம்பித்தார் Reference : Richarda Attanbarough's Film " GHANDHI" ]


ZAKIR HUSSAIN said...

//பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்)//

இவரை பற்றி எனது வாப்பா சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஜனாப் அப்துல் மஜீத் [ பண்டிட் ] அவர்களின் மகன் எனது வாப்பாவின் நெருங்கிய நண்பர்.

Ebrahim Ansari said...

கருத்திட்டுள்ள அனைத்து சகோதரர்களுக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

அன்பின் தம்பி அமீன் அவர்களை நேற்று நேரில் சந்திக்கும் சந்தர்ப்பமும் பம்பரமாக அவர்கள் பணியாற்றும் விதமும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். .

தம்பி இப்னு அப்துல் ரெஜாக் அவர்களும் தம்பி ஜாகிர் அவர்களும் கூறி இருப்பது போல் நம்மால் முடிந்தவரை சமுதாயத்தின் நன்மைக்காகத் தேவைப்பட்ட போதெல்லாம் சென்று பணியாற்ற அனைவரின் து ஆ வையும் வேண்டுகிறேன்.

sheikdawoodmohamedfarook said...

Ditik Ditk Menjadi Laut/ இது ஒருமலாய் நாட்டு பழமொழி.பொருள் சொட்டுசொட்டாகவீழ்ந்த நீர்த்துளிகள் போகப்போக சமுத்திரமாகிறது.

adiraimansoor said...

////இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களை நம் சமுதாயமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே போல,இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ள இத் திறமைகளை சமுதாயத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும்.மனித வள மேம்பாட்டுக் கருத்துக்களை ஊர் தோறும் சென்று பொநெர் பொஇன்ட் மூலம் சொல்ல வேண்டும்.இதற்கு ச்ம்ன் சலீம் போன்ற சகோதரர்களுடன் இணைந்தும் அட்ட் போன்ற அமைப்புக்களுடன் இணைந்தும் செயல் படுத்தலாம்.////

காக்கா இப்னு அப்துல் ரஜாக்வுட கருத்துக்களை நானும் பதிகின்றேன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு