Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அரசு வேலை வாய்ப்பு ஞாபகப்படுத்துகிறோம் 5

அதிரைநிருபர் | January 22, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்,


அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்லீம்களுக்கு உயர்பதவிகளில் அறியவாய்ப்பு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது என்பது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். இந்த கட்டுரை ஒட்டிய செய்தியை நமக்கு சகோதரர் அதிரை அப்துல் மாலிக் நமக்கு மின்னஞ்சலில் ஞாபகப்படுத்தினார். அந்த கட்டுரையை மீள்பதிவு செய்வது நல்லது என்று கருதி இங்கு மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். இதைப்படிப்பவர்கள் உள்ளூரில் இருக்கும் உங்களுக்கு தெரிந்த சகோதரர்களை ஊக்கப்படுத்தி இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறோம்.

-- அதிரைநிருபர் குழு

முஸ்லிம்களுக்கு உயர்பதவிகளில் அறியவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கீழ்கண்ட தமிழக அரசின் உயர் பதவிக்கான (GROUP 1 ) வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மிக முக்கியமானது ஆகும். தமிழக அரசின் உயர்பதவிகளை நம் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் எட்டிப்பிடிக்க வேண்டும் என்று நாம் குரல் கொடுத்துவரும் இவ்வேளையில், இத்தேர்விற்க்கு நம் சமுதாயதிணை சேர்ந்தவர்கள் முன்னுரிமை கொடுத்து, எல்லா ஜும்மாவிலும் முன்னறிவிப்பு செய்தும், நம் சமுதாயத்தில் தகுதி உள்ளவர்களை இத்தேர்வை எழுதும்படி உடனடி பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். ஏனெனில் இது களத்தில் இறங்கவேண்டிய தருணம். இதை மற்ற இணையதளத்திலும் செய்தியாக வெளியிட்டு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். இத்தேர்விற்காண விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் 28-01-2011 ஆகும்.


TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION NOTIFICATION / ADVERTISEMENT
Applications are invited upto 5.45 p.m. on 28-01-2011 for direct recruitment to the vacancies in the following posts included in Group-I Services (Service Code. 001):-.

Name of the Post Service                               

1. (i) Deputy Collector Tamil Nadu Civil Service                                                                                
No. of vacancies           33

(ii) Deputy Collector           
No. of vacancies:           23*
(Backlog vacancies for
SC/ST candidates only)                                                                     
(22 SC and 1 ST backlog vacancies in recruitment by transfer)

2. Deputy Superintendent of Police
(Category-I) Tamil Nadu Police Service
No. of vacancies: 29

3. Assistant Commissioner 
(Commercial Tax Officer)
Tamil Nadu Commercial Taxes Service
No. of vacancies    28

4. District Registrar
Tamil Nadu Registration  Service
No. of vacancies: 7

5. Assistant Director of Rural Development Department
No. of vacancies:  10
Tamil Nadu Panchayat Development Service

6. Divisional Officerin theFire                                                                                             
and Rescue Services
Department Tamil Nadu Fire and Rescue Services
No. of vacancies: 1 

Please visit for  more details:

http://www.tnpsc.gov.in/Notifications/257_not_eng_grp2k11.pdf

Thanks to MUJEEB.COM and ADIRAI MEERA

5 Responses So Far:

அதிரை முஜீப் said...

சமயோசிதமாக சிந்தித்து, மீண்டும் இந்த பதிவை வெளியிட்டு, நம் மக்களுக்கு ஞாபகப்படுத்தும் வேலையை செவ்வனே செய்த சகோதரர் அதிரை மாலிக் மற்றும் அதிரை நிருபருக்கு வாழ்த்துக்கள்.

அபு ஆதில் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
நமதூரில் தொடக்கப்பள்ளி தொடங்கி கல்லூரி வரை ஆசிரிய பணிகளுக்கு சேர நமதூர் மாணவர்களை தயார் படுத்தலாம் தானே.உயர் பதவிகளை அடைய மாணவர்களை தயார் செய்ய சேவை மனப்பான்மையுள்ள ஆசிரிய பெருமக்களும் நம் சமூகத்துக்கு தேவை.அது பற்றியும் சொல்லுங்களேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அபுஆதில் அவர்களுக்கு,

நீங்கள் சொல்வதை நானும் வழிமொழிகிறேன்.

ஊரில் பள்ளிக்கூடங்களில் இது பற்றிய விழிப்புணர்வை பள்ளி ஆசிரியர்கள் முன்னின்று செய்து ஊக்கப்படுத்த வேண்டும். சேவை மனப்பான்மையுடைய ஆசிரியர்கள் இன்று கண்டுப்பிடிப்பது கடினமே என்றாலும், நம் பிள்ளைக்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு நாம் முதலில் கற்றுக்கொடுக்கும் காலமாகிவிட்டது என்பது தான் வேதனை. அதற்காக எல்லா ஆசிரியர்களையும் குறை சொல்வதாக அர்த்தமாகாது.

அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் தொடர்ந்து இந்த கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்களில் தானாக முன்வந்து ஒத்துழைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

sabeer.abushahruk said...

ஆமாம் அபு ஆதில்,
வளருகையில் போதிப்பதைவிட ஆணி வேராம் ஆசிரியர்களின் போதனையிலிருந்தே ஆட்டாத்தை ஆரம்பித்தல் வெற்றியை அடைய சிறந்த மார்க்கம்தான் என்பதில் எனக்கும் உடன்பாடுண்டு.

வாருங்கள், எல்லா சிந்தனைகளையும் திட்டமிட்டு இலக்கை நோக்கி நகர்த்துவோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு