Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மந்திரவாதி ! 28

அதிரைநிருபர் பதிப்பகம் | May 09, 2012 | ,


ஒருவர் தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவருக்கோ அல்லது அவருக்கு எதிரியாகக் கருதப்படுகிற இன்னொருவருக்கோ..........

1. கை கால்களை முடக்கிக் காண்பிக்கிறேன் பார்......... இல்லை... இல்லை முறித்துக் காண்பிக்கிறேன் பார்............. 

2. என்னை சீண்டி விட்டான்.......அந்த “படுவா”வை சும்மா விட மாட்டேன் அவனுக்கு மர்ம நோயை உண்டாக்கி வாயிலிருந்து இரத்தம் இரத்தமாக கக்க வைக்கிறேன் பார்..........

3. ஐயோ....என்னை சீக்கில் படுத்த படுக்கையாய் படுக்க வைத்துவிட்டார்களே ! நான் குணமாக வேண்டுமே.........

4. அந்த கஷ்டத்தை ஏங்க கேக்கிறிய......என் மாப்பிள்ளை கடந்த அஞ்சு வருசமா என்னிடம் பேசாம இருக்கிறார். அவர் என்னிடம் பாசம் நேசமாக இருக்க வேண்டும். பணங்காசு அள்ளி அள்ளி அனுப்ப வேண்டும் அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்........... 

5. எனது மகன் படித்துவிட்டு வேலை வெட்டியில்லாமல் சும்மா ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறான். அவன் வெளிநாடுச் செல்ல வேண்டும். அவனுக்கு சீக்கிரம் “விசா” கிடைத்து லட்சம் லட்சமாக அங்கே சம்பாதிக்க வேண்டும் அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்.... 

6. எனது பிள்ளைக்கு வயது கடந்து விட்டது. நல்ல “வரன்” கிடைத்து கால நேரத்தோடு அவனுக்கு/அவளுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....

7. எனது குழந்தைக்கு “காய்ச்சலுங்க” ராத்திரியான அழுகையை நிறுத்த மாட்டேன்ங்குதுங்க அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....

8. விலை மதிப்புள்ள அந்த நிலத்தை அவர்களிடமிருந்து சுலபமாக குறைந்த விலையில் எழுதி வாங்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....

என இதுபோன்றவற்றைச் சொல்லி, பலர் நாடிச்செல்வது மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிற மந்திரவாதியையே....

மந்திரவாதியோ............

1. நான் அனைத்தையும் வசப்படுத்தி வைத்துள்ளவன்.

2. அவன் வயிற்றிலிருந்து முட்டை வரவழைத்து அவனைக் குணமாக்கி காண்பிக்கிறேன் பார்......இல்லை...இல்லை அவனுக்கு நோயை ஏற்படுத்தி காண்பிக்கிறேன் பார்......

3. பைத்தியமாக்குவது / பைத்தியத்தை தெளியவைப்பது

4. கணவன் மனைவியைப் பிரிப்பது / சேர்ப்பது

5. திருமணம் நடைபெற / தள்ளிப்போட

6. பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கொடுப்பது / தடுப்பது

7. வியாபாரம் செழிப்பாக வளர / முடக்க 
8. காணாமல்போன பொருளைக் கண்டுபிடித்துத் தருகிறேன் பார் எனச்சொல்லி பொருள் “அங்கே உள்ளது”.... “இங்கே உள்ளது”.....என்ற பொய்யைச் சொல்லி உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் போன்றவர்களிடேயே சண்டையை வளர்த்து விடுவது

9. பிள்ளைகளுக்குப் படிப்பை வரவழைக்கிறேன் பார்..... வேண்டும் என்றால் அவர்களை “பாஸ்” ஆக்கி காட்டுகிறேன் எனச் சொல்வது.

10. உனது மகனுக்கு ஒரே மாதத்தில் வெளிநாடு விசா வரவழைத்துக் காண்பிக்கிறேன் பார்........நல்ல வேலை கிடைக்க வைக்கிறேன் பார்......

11. உனக்கோ, உன் வீட்டிற்கோ பேய், பிசாசுகள் அண்ட விடாமல் தடுக்கிறேன் பார்........

12. பயத்தை போக்கி காட்டுகிறேன் பார்................

என இதுபோன்றவற்றைச் சொல்லி நமது சமுதாய பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் மந்திரவா(வியா)திகள். 

இன்னும் எத்தனை காலத்திற்கு நமது சமுதாயம் இணைவைப்பிலும் மூட நம்பிக்கையிலும் தங்களுடைய மூளையை அடகு வைத்துக் கொண்டிருக்கும். இந்த நம்பிக்கையின் மூலமாக எதை சாதித்துக் கொண்டார்கள் ? மேலும் இந்த தவறான நம்பிக்கையின் மூலமாக இந்த அறியாத மக்கள் பயனடைந்தார்களா ? அல்லது தங்களுடைய பொருளாதாரத்தை இழந்தார்களா ? இந்த அறியாமையைப் பயன்படுத்தி காசு பறிக்கும் கொள்ளைக் கூட்ட கும்பலை நாம் அடையாளம் காண வேண்டும். 

செய்வினை, சூனியம், தாயத்து என்று ஏமாற்றும் போலி மந்திரவாதிகளை சமுதாயத்திலிருந்து விரட்டி அடிக்க வேண்டும் . இவர்களால் பயனடைந்தவர்களை விட தங்கள் பொருளாதாரத்தையும் நேரத்தையும் அறிவையும் இழந்தவர்கள் தான் அதிகம் . எனவே நம் சமுதாய மக்கள் இவைகளின்பால் தங்கள் கவனத்தை செலுத்தாமல் அல்-குர்-ஆனை  ஓதுவதிலும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து சிந்திப்பதிலும் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதல்களில் இருந்து பெறப்படும் செய்திகளை அறிந்து அதன்படி நடப்பதிலும் நமது சமூதாயம் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களையும் உண்மையான  முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்க செய்வானாக ! ஆமீன் !

-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்.......

28 Responses So Far:

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அன்பு சகோதரர் நிஜாம் அவர்களின் ஆதங்கம் பதிவின் மூலம் அனல் பறப்பது நன்கு தெரிகிறது...அருமையான விழிப்புணர்வு வாழ்த்துக்கள்

முன்பே இத்தளத்தில் சகோ கிரௌன் அவர்கள் பாகமாக இத்தலைப்பில் "மூடப்பழக்கம் மண்மூடிப் போகட்டும்" நமக்களித்தார் என்பதை நினைவு கூறுகிறேன் அதன் லிங்க் http://adirainirubar.blogspot.com/2010/11/3.html

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மந்திரத்தைக் கொண்டு தந்திரமா காசை கொள்ளையடிக்கும் பொருக்கி ஆசாமிகளிடமிருந்து.நபி (ஸல்) அவர்களின் உம்மத்தை மீட்டு எடுப்பது நம் அனைவரின் மீது கட்டாய கடமை.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இந்த மாதிரி மேட்டருக்கு செல பேரு கருத்து சொல்ல கூட பயப்படுவாங்க. காரணம் கருத்து சொன்னதுக்காக நம்மள்க்கு ஏதாச்சும் செஞ்சி உட்டுருவாங்களோண்டு பயந்தான் காரணம்.....

ஆஸ்த்மாவால் அவஸ்த்தை பட்டுக்கிட்டு இருந்த அருணகிரி நாதருக்கு நித்தி வைத்தியம் பார்த்து சரிபண்ணிடுச்சாம். அதுனாலெ 293வது ம.ஆ. பட்டத்து இளவரசர் பதவியை தன் கிரீடத்தை நித்திக்கு அணிவித்து கொடுத்துடுச்சாம்.......ஹக்கீம் அக்பர் கவுசரும் தான் நெறையா நோய்களை சரி செஞ்சிவுடுறதா சொல்றாங்க.....அப்பொ கொடுத்துருவியளா அவருக்கு?????

மனுசன் மனுசன் தான்ய்யா.....உடல் பசி, உள்ளப்பசிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் தான் இறைவன்.

இன்னும் என்ன, என்ன கண்ட, கண்ட‌ பிலாய்களையெல்லாம் பார்க்கப்போறோமோ???????

அப்துல்மாலிக் said...

நம்மூருக்கு முக்கியமா தேவையான விழிப்புணர்வு, நாம என்னதான் தடுத்தாலும் அவங்கவங்க (பெரியவங்க குறிப்பா பெண்கள்) மன ஆறுதலுக்கு இதுமாதிரி ஏதாவது செஞ்சிக்கிட்டுதான் இருக்காங்க என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை :(

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கடுமையான நோய்நொடிகளில், கஷ்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ் நிவாரணத்திற்கு முன் மன தைரியத்தை முதலில் தர வேண்டும். காரணம், கடுமையான மன/உடல் வேதனையில் கஷ்டப்படும் அவர்களுக்கு ஏதேனும் வழியில் சுகம், நிவாரணம், விடுதலை கிடைக்காதா? என ஏங்கித்தவிக்கும் அந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் தான் சைத்தான் தன் வேலையை கச்சிதமாக முடிக்கிறான். அந்த‌ நேர‌த்தில் சிர்க், பித்‍அத் எது என்று பகுத்தறிவுடன் பாகுப‌டுத்திப்பார்க்க‌ சைத்தான் அவர்களுக்கு ச‌ந்த‌ர்ப்ப‌ம் கொடுப்ப‌தில்லை.

அல்லாஹ் ந‌ம் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளை ம‌ன்னித்து பிழைபொருத்த‌ருள‌ வேண்டும்....ஆமீன்....

Noor Mohamed said...

மந்திரத்தை வைத்து தந்திரமாய் பிழைப்பு நடத்துபவர்கள் ஊரில் இப்போது குறைந்து விட்டனர். மந்திர வியாபாரத்தை மறந்து மனைக்கட்டு வியாபாரத்தில் இறங்கி விட்டனர். அதுதான் இன்றைய அதிரையின் சீசன் வியாபாரம்.

sabeer.abushahruk said...

சேக்கனா நிஜாம்,

பரிச்சயம் கிடைத்த சில மாதங்களுக்குள் தங்களின் விழிப்புணர்வு ஆக்கங்களால் எங்களைக் கட்டிப்போட்டிருக்கிறீர்களே...நீங்கள் எழுதுகிறீர்களா எங்களுக்கு ஓதிப்பார்க்கிறீர்களா?

தொடர்ந்து எங்களுக்கு தாயத்து கட்டவும், புத்திமதிகளை உட்புகுத்தி.

அதிரை சித்திக் said...

மனிதனின் பலவீனங்களை அறிந்து கொண்டால்

இலகுவாக வயபடுத்தி விடலாம் ..,உதாரணத்திற்கு

அண்ணன்தம்பி சொத்து விவகாரம் ..வக்கீலிடம் செல்கிறார்

வக்கீல் சொல்வார் கவலை படாதே உன் தரப்பு ரொம்ப ஸ்ட்றாங்க

இருக்கு நான் முடுச்சி தருகிறேன் என்பார் ..வந்தவனின் பலகீனம்

அறிந்த வக்கீல் பணத்தினை கறந்து விடுவார் ..பிள்ளை பேரு இல்லாதோர் டாக்டரிடம் செல்வார்

டாக்டர் என்ன சொன்னாலும் கேட்ப்பார் . இவை போன்று எத்தனையோ விசயங்கள்

எல்லாவற்றிற்கும் தீர்வு ஒரே இடம் தர்கா .,மந்திரவாதி ..,என நம்பும் பலகீனர்களுக்கு

மதம் மார்க்கம் எல்லாம் தடையாய் இருப்பதில்லை ...மார்கத்திற்கு அப்பாற்பட்ட

நம்பிக்கை ..ஒருவரின் நோய் அல்லது இயலாமை .,மனம் சஞ்சலம் இவைகளுக்காக்

தீர்வு பெற யாரிடமாவது ஆலோசனை கேட்டால் அவர்கள் நம்பும் வழியை காண்பிப்பார்கள்

டாக்டரா மந்திரவாதியா ..,சொல்பவரின் ஆலோசனையை பொருத்தது ..,நானும் எங்கெல்லாம்

போய் பார்த்தேன் தீரவில்லை எஜமான் தர்காவில் மூன்று நாள் தங்கினேன் எல்லாம்

சரியா போச்சு.., இந்த டயலாக் ..,பல இடத்தில் நான் காத்து பட கேட்டிருக்கிறேன்

இப்னு அப்துல் ரஜாக் said...

//அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களையும் உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்க செய்வானாக ! ஆமீன் !//

ஆமீன்.

இதுக்கு காரணம் உண்மையான இஸ்லாமிய போதனை தெரியாமல் இருப்பது.மார்க்கத்தில் சமரசம் செய்து கொள்வது.(சிலர் அறியாமைக்கால வார்த்தைகளை இன்னும் பயன்படுத்தி,அதை இன்னும் மறக்காமல் இருப்பது,)இஸ்லாம் என்ன என்று தெரிந்தும்,உதாரணமாக,விளையாட்டுக்கு என "தாயத்து கட்டு,சூடம் கொளுத்து,அணைத்து சத்தியம் செய்,இன்னும் இது போன்ற வார்த்தைகளை உபயோகிப்பதும்,எழுதுவதும்,ஊக்கப்படுத்துவதும்.இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அறிவில்லாமல் இருப்பது.

இதற்கு,சகோ நிஜாம் அவர்கள் இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைகளை பற்றிய கட்டுரைகளை மக்கள் மன்றத்தில் கொண்டு வந்து விழிப்படைய செய்யவேண்டும்.உண்மையை இன்னும் உரத்து சொல்லி,விளக்க வேண்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவன் அனுமதியின்றி அணுவும் அசையாது.
இந்த மாதிரி அறியாமை,மற்றும் பெரும்பாவ செயல்களிலிருந்து விலகி இருப்போம்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ,
மந்திரவாதியை பற்றியும்,
மந்திரவாதிகளிடம் செல்பவர்களைப் பற்றியும்
நல்லதொரு விளக்கம்.
////Noor Mohamed சொன்னது…
மந்திரத்தை வைத்து தந்திரமாய் பிழைப்பு நடத்துபவர்கள் ஊரில் இப்போது குறைந்து விட்டனர். மந்திர வியாபாரத்தை மறந்து மனைக்கட்டு வியாபாரத்தில் இறங்கி விட்டனர். அதுதான் இன்றைய அதிரையின் சீசன் வியாபாரம். ////

கோவை சகோதரரிடம் அதிரையின் மனை விலைகளை கூறினேன். என்னென்ன வசதிகள் இருக்கிறது என்று கேட்டார். பஸ் நிலையம், இரயில் நிலையம், மருத்துவமனை ''நல்ல பள்ளிக்கூடம்'' அனைத்து வசதிகளும் இருக்கிறதா? என்று கேட்டார். ''

அதிகம் இல்லை என்றேன். சாக்கடை வசதி கூட இல்லை என்றேன். கோயம்புத்தூரில் கூட இப்படி யானை விலை இல்லையே! நீங்கள் சொல்வது ஆச்சர்யமாக உள்ளது என்றார். (தற்பொழுது அதிரையில் ஒரு மனை விலை 10 முதல் 17 வரை சொல்கிறார்கள்.)

ZAKIR HUSSAIN said...

//இதுக்கு காரணம் உண்மையான இஸ்லாமிய போதனை தெரியாமல் இருப்பது.மார்க்கத்தில் சமரசம் செய்து கொள்வது.(சிலர் அறியாமைக்கால வார்த்தைகளை இன்னும் பயன்படுத்தி,அதை இன்னும் மறக்காமல் இருப்பது,)இஸ்லாம் என்ன என்று தெரிந்தும்,உதாரணமாக,விளையாட்டுக்கு என "தாயத்து கட்டு,சூடம் கொளுத்து,அணைத்து சத்தியம் செய்,இன்னும் இது போன்ற வார்த்தைகளை உபயோகிப்பதும்,எழுதுவதும்,ஊக்கப்படுத்துவதும்.இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அறிவில்லாமல் இருப்பது.//

To Bro Ara Ala...can you explain on this with some examples...

Noor Mohamed said...

அலாவுதீன்.S. சொன்னது…
//கோவை சகோதரரிடம் அதிரையின் மனை விலைகளை கூறினேன். என்னென்ன வசதிகள் இருக்கிறது என்று கேட்டார். பஸ் நிலையம், இரயில் நிலையம், மருத்துவமனை ''நல்ல பள்ளிக்கூடம்'' அனைத்து வசதிகளும் இருக்கிறதா? என்று கேட்டார். ''//

மேற்கண்ட செய்தியை என்னிடம் வெளியூர் நண்பர்கள் பலர் கேட்டு விட்டனர். என்ன பதில் சொல்வது? சீதன வீடு என்ற பெயரில் வரும் கொடுமையினால் வாழ்க்கையே சீரழிந்து இன்னும் திருந்தவில்லையே?!

// (தற்பொழுது அதிரையில் ஒரு மனை விலை 10 முதல் 17 வரை சொல்கிறார்கள்.) //

சகோ அலாவுதீன் அவர்களே, தற்போது வீடு கட்டுவதற்கு தோதாக CMP LANE மற்றும் அதனருகில் மேற்கண்ட விலைக்கு மனை ஏதுமுண்டோ? அங்கு 20 க்கு குறைந்து மனையே இல்லை.

சகோ அலாவுதீன் அவர்களே, வரதட்சனை கொடுமை பற்றி தாங்களும் வாரி வாரி எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். யாராவது ஊரிலுள்ளவர்கள் அதை படித்தார்களா?! நானும் கல்வி கற்றவர்கள் பலருக்கு போன் செய்து கேட்டேன். அப்படியா என்ற பதில்தான் வந்தது. வெளி நாட்டிலுள்ளவர்கள் சிலர் பார்த்தனர், படித்தனர், பின்னூட்டம் கொடுத்தனர். அவ்வளவுதான்.

Ebrahim Ansari said...

அன்பு நண்பர்களே!

ஊரில் பச்சைக்கொடி பறக்கும் வீடு , பால் கிதாப் பார்க்கும் வீடு என்றெல்லாம் பல வீடுகள் இருந்தன. அவை இன்னும் இருக்கின்றனவா?

சோம்பேறிகள் மக்களின் மனநிலையை மட்டுமல்ல கஷ்டத்தை அல்லது பிரச்னையை தெரிந்துகொண்டு காய் நகர்த்தி ஏமாற்றுகிறார்கள். அறியாமையில் , மக்கள் துன்பங்களுக்கு வடிகால் என்று நம்பி மேலும் துன்பங்களில் மாட்டிக்கொள்கிறார்கள். நாம் முன்னேற்றத்துக்கு மிகவும் தூரத்தில் இருக்கிறோம் என்பது வேதனையான உண்மை.

மிக முக்கியமான இந்த சமுதாயப் பிரச்னையை சுட்டி அருமையான பதிவு தந்த தம்பி நிஜாம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

Ebrahim Ansari said...

//சகோ அலாவுதீன் அவர்களே, வரதட்சனை கொடுமை பற்றி தாங்களும் வாரி வாரி எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். யாராவது ஊரிலுள்ளவர்கள் அதை படித்தார்களா?! நானும் கல்வி கற்றவர்கள் பலருக்கு போன் செய்து கேட்டேன். அப்படியா என்ற பதில்தான் வந்தது. வெளி நாட்டிலுள்ளவர்கள் சிலர் பார்த்தனர், படித்தனர், பின்னூட்டம் கொடுத்தனர். அவ்வளவுதான்.//

தம்பி நூர் முகமது அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.

சகோதரர் அலாவுதீன் அவர்கள் தரும் முக்கியமான சமுதாயப் பிரச்னை பற்றிய பதிவுகள் பலரையும் சென்றடைய வழிகாணவேண்டும்.

தம்பி அ.இ. என்ன வழி?

Ebrahim Ansari said...

தம்பி நூர் முகமது

C.M.P. பகுதியில் 20 க்கு மனை கிடைக்கிறதா? ஹி ஹி ஹி ஒரு இரண்டு குமராளிக்கு இரண்டு மனை கிடைக்குமா? அவர் கேட்டபோது 25 ல் குறையாது என்கிறார்களாம்.
ஒருவர் நெசவுக்காரத்தெருவில் கட்டிய புதுவீட்டை இருபதுக்கு விற்றுவிட்டு C.M.P.யில் மேலும் இரண்டு போட்டு மனை வாங்கியதாக சொன்னார்கள்.
தற்போது வாடகை வீட்டில் இருக்கிறாராம்.

வாடகை சோபா இருபது ரூபா
விலைக்கு வாங்கினால் முப்பதே ரூபா - நினைவுக்கு வந்தது.

இப்னு அப்துல் ரஜாக் said...

//இதுக்கு காரணம் உண்மையான இஸ்லாமிய போதனை தெரியாமல் இருப்பது.மார்க்கத்தில் சமரசம் செய்து கொள்வது.(சிலர் அறியாமைக்கால வார்த்தைகளை இன்னும் பயன்படுத்தி,அதை இன்னும் மறக்காமல் இருப்பது,)இஸ்லாம் என்ன என்று தெரிந்தும்,உதாரணமாக,விளையாட்டுக்கு என "தாயத்து கட்டு,சூடம் கொளுத்து,அணைத்து சத்தியம் செய்,இன்னும் இது போன்ற வார்த்தைகளை உபயோகிப்பதும்,எழுதுவதும்,ஊக்கப்படுத்துவதும்.இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அறிவில்லாமல் இருப்பது.//

//To Bro Ara Ala...can you explain on this with some examples...//

அன்பு சகோதரர் ஜாகிர் காக்கா அவர்களுக்கு,அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் நம் மீது நிலவட்டுமாக.தங்களின் விளக்கம் கோரிய கேள்விக்கு முதலில் நன்றி.ஜசாக்கல்லாஹு க்ஹைர்.

ஒன்று) மார்க்க அறிவு இல்லாமை.

நமக்கு நம் மார்க்கம் எப்படி நடக்கச் சொல்கிறது என்று தெரியாத காலமெல்லாம் - அந்த அறியாமை இருக்கும் போதெல்லாம் மந்திர-தந்திர,தாயத்து,தட்டுக்கள் இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைகள் இருந்து கொண்டே இருக்கும்.ஆனால் எப்பொழுது குரான்,ஹதீஸ் இப்படித்தான் போதனை செய்கிறது என நாம் தெரிந்து கொண்டு விடுவோமேயானால் இன்ஷா அல்லாஹ் விழித்துக் கொண்டுவிடுவோம்.உதாரணமாக,சுமார் இருபது வருடங்கள் முன்பு இருந்த அறியாமை இருள் இன்று கொஞ்சம் விலகி இருக்கிறது,காரணம் - குரான்,ஹதீஸ் பற்றிய விழிப்புணர்வு.ஆக மார்க்க அறிவு (குரான்-சுன்னா அடிப்படையில்)இல்லையன்றால் மேற்கண்ட முசீபத்துக்கள் நம்மை ஆட்கொண்டுவிடும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

இரண்டு) மார்க்கத்தில் சமரசம் செய்தல்,

வாழ்க்கையில் பலவற்றில் சமரசம் செய்து கொள்ளலாம்,ஆனால் அல்லாஹ்,ரசூல் ஸல் அவர்கள்,குரான்-ஹதீஸ்,(இஸ்லாம்)விஷயத்தில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது.உதாரணமாக,நமக்குத் தெரிந்தவர்,வேண்டப்பட்டவர் ஒருவர் ஒரு விஷயத்தை எழுகிறார் அல்லது சொல்கிறார் என வைத்துக் கொள்வோம்.அப்படி சொல்லப்படும்,எழுதப்படும் செய்தியை படிப்பவர்கள் முதலில் அதனை குரான்-ஹதீஸ் கண் கொண்டு நோக்கி,மார்க்க முரண் இல்லாத கருத்தாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்.(அல்லாஹ்,குரானில் கூறப்படும் விஷயங்களாக இருந்தாலும் சிந்தியுங்கள் எனக் கூறுகிறான்).அது சரியான கருத்தாக இருப்பின்,அதை ஊக்கப்படுத்தலாம்,மற்றவர்களிடம் கொண்டு போகலாம்.
ஒரு சமயம்,அது மார்க்கத்திற்கு முரணாக,குரான்,ஹதீஸ் கருத்துக்கு மாற்றாக இருந்தால்,அந்தக் கருத்தை எத்தனை பேர் ஆதரித்தாலும்,நாம் எதிர்த்து வாதிடவேண்டும்,நம்மை திட்டினாலும்,எள்ளி நகையாடினாலும் அல்லாஹ்வுக்காக நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.எழுதினவர் நம்ம சாச்சா,பெரியப்பாதானே,நமக்கு தெரிந்தவர்தானே என்று கொண்டு ,மார்க்க விஷயத்தில் சமரசம் பண்ணிக் கொண்டால் ,அந்த மூடக் கருத்துக்கள் நம் மக்களிடையே பரவி,இதுவும் இஸ்லாத்தில் உள்ளதுதானோ எனும் நிலைக்கு வரும்.அல்லாஹ் பாதுகாப்பானாக.

இப்னு அப்துல் ரஜாக் said...

மூன்று) இது போன்ற வார்த்தை பிரயோகம்.

தாயத்துக் கட்டு,சூடம் கொழுத்து,அணைத்து சத்தியம் செய்,படி கட்டு,( அப்ப நான் என்ன மாரியம்மன் கோயில்லயா “படிக்கட்டு”கிறேன்?)இன்னும் இது போன்றும் இன்னும் மற்ற சில வார்த்தைகளையும் நாம் பயன்படுத்துவதால்,புழங்குவதால் நாம் அறியாமையின் காரணமாக் முன்பு செய்த சில தீய பழக்கங்களை அதே பொருள்தரக் கூடிய,அல்லது அதற்க்கு நெருக்கமாக பொருள் வரக் கூடிய வகையில் இருக்கும் போது ,அல்லாஹ் நம்மை மன்னிக்கட்டும்,நாம் பாவியாகிவிடுகிறோம்.அதனால் இது எவ்வளவு விபரீத செயல்.

அல்லாஹ்,இனி மது அருந்தக் கூடாது என தடை விதித்தவுடன்,சாராய ஊரல்களை போட்டு உடைத்தனர் நம் கண்மணிகள் சஹாபா பெருமக்கள்.ஆனால் மது குடிக்கும் கோப்பைகள்,குடுவைகளை வீட்டில் வைத்து இருந்தார்கள்.ஆனால் நம் தலைவர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அந்தக் கோப்பைகளையும் (மதுக் கோப்பை)இனி பயன்படுத்தக் கூடாது என தடை போட்டார்கள்.சாராயத்தை போட்டு உடைத்தாயிற்று,எனவே அந்த கிண்ணங்களில் தண்ணீர் ஊற்றி வைக்கலாமே?ஏன் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் - மொத்தமாக தடை செய்தார்கள்.இங்கேதான்,நமக்கு நம் தலைவரின் சைக்காலஜி திறன் புரிகிறது.சாராயம் இனி இல்லை என்றாலும்,அந்தக் குடுவை வீட்டில் இருந்தால்,அந்தக் குடுவையை பார்க்கும் போதெல்லாம் சாராய நினைவு வந்து விடும்,அப்படி வந்து,மீண்டும் குடிக்க நேர்ந்து விடக் கூடாது என்ற கணிப்பு.சுபானல்லாஹ்.

அடுத்து,நம் தலைவர் ஸல் அவர்கள், அய்யாமுல் ஜாஹிளிய்யாஹ் (அறியாமைக் காலம்)கால வார்த்தைகளையும் பேச தடை செய்துள்ளார்கள்.அந்த வார்த்தைகள் எல்லாமும் ஷிர்க்கை அடிப்படையாக,மூட வழக்கத்தை அடிப்படையாக கொண்டவை.நாம் மேற்சுட்டி காட்டிய வார்த்தைகளை யார் பயன்படுத்தியது,மூலம் யார் என இப்போது பாருங்கள்.ஒன்று காபிர்கள்,மற்றது குரான்,சுன்னாவை பேணாத,பித் அத களையும்,தர்காக்களையும்,தரீக்காக்களையும் கட்டி மேயும் எத்தர்கள்,(மார்க்க அறிவு இல்லாதவர்கள்).ஆக அந்த வார்த்தைகளையும்,அன்று அவர்கள் புழங்கிய அந்த வார்த்தைகளையும் நாம் ஒப்பிட்டால்,விடை ஒன்றே.ஆக-இப்படி நாம் பயன்படுத்துபோது,நம்மிடம் அந்த செயல் இல்லை என்றாலும் - அந்த நினைப்பு இருக்கிறது,அதனால்தான் அந்த வார்த்தைகளை நாம் பேசுகிறோம்.எனவே,நாம் திருந்தி விட்டோம் என எண்ணுகிறோம்,ஆனால் உண்மையில் அப்படி இல்லை.ஏனென்றால்,அந்த ஜாஹிலிய்யா வார்த்தைகள் நம் உள்ளத்தில் ஊடுருவிக் கொண்டு,சமயம் வரும்போதெல்லாம் வந்து எட்டிப் பார்க்கிறது,அதனால் ஈமான் பலவீனமைடைந்து,அந்த மூட வார்த்தைகள் வலுப்பெறுகின்றன.இப்படி வரும் சூழ் நிலையில் அந்த மூட செயலை(தட்டு,தாயத்து,மந்திரம்,தந்திரம் இன்னபிற) நாம் செய்யும் நிலை வந்துவிட்டால்????????????இந்த நேரத்தில் சைக்காலஜி அணுகுமுறையை நம் தலைவர் கையாண்ட முறையை மீண்டும் சிந்தியுங்கள்.மதுக் கோப்பைக்கும் தடை,அறியாமைக்கால வார்த்திகளுக்கும் தடை!!!!காரணம்,மனோ தத்துவ ரீதியாகவும் நாம் அந்த தீமைகளில் இருந்து விடுபடவேண்டும்.அந்த நினைப்பே வரக் கூடாது என்பது தானே?

இப்போதுள்ள மருத்துவர்கள் ,மனோ தத்துவ அறிஞர்கள் சொல்வதாக நாம் அறிந்துள்ளோம்,
காலையில் எழுந்து பச்சை பசேல் என்ற காட்ச்சிகளைப் பார்த்தால் மனம் உற்சாகப்படும் என்று.
திரைப்படம் அதிகம் பார்க்கும் ஒருவனிடம் பேசினால்,படங்களில் வரும் காட்ச்சிகளை மேற்கோள் காட்டி பேசுவான்.
பழனி பாபா அவர்களை ஒருவருக்கு மிகவும் பிடிக்கும்,அவர் பேச்சை அதிகம் கேட்கிறார்,அவரை கவனியுங்கள்,பாபாவின் பேச்சும்,மானரிசமும் அவரிடம் ஒட்டிக் கொடிருக்கும்.


ஆக,அல்லாஹ்வும்,ரசூலும் கற்றுத் தராத வார்த்தைகள்(யும்)புறக்கணிப்போம்,ஏனெனில் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.


இக் கருத்தில் குறை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்,மனிதன் தவறு செய்யக் கூடியவனே.நிறை இருப்பின்,அது அல்லாஹ்வையே சாரும்.அல்லாஹ் நிறைவானவன்,அழகானவன்,மன்னிக்க கூடியவன்.அவனே நமக்கு போதுமானவன்.

sabeer.abushahruk said...

சகோ அர.அல.:

அஸ்ஸலாமு அலைக்கும். நலமா?

பக்கம் பக்கமாகவும் பத்தி பத்தியாகவும் விவாதம் செய்ய எனக்கு விவரமும் போதாது நேரமும் கிடையாது.

தங்களின் தீர்மாணங்களின்படி:
“தீ” என்று சொல்லாதே, வாய் வெந்துபோய்விடும். “தேன்” என்று சொல், நாவினிக்கும் என்றே என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

“அம்மனுக்கு படிகட்டாதே” என்ற அறிவுரையை, அம்மன், படி, கட்டுதல் ஆகிய வார்த்தைப் பிரயோகங்கள் இல்லாமல் எப்படி எழுதுவது எனும் வித்தையை நீங்கள்தான் சொல்லித் தரவேண்டும்.

//ஆக,அல்லாஹ்வும்,ரசூலும் கற்றுத் தராத வார்த்தைகள்(யும்)புறக்கணிப்போம்,ஏனெனில் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்//

ச்சும்மா இப்படியெல்லாம் பூச்சாண்டி காட்டாதீர்கள். இந்த மார்க்க ஆதாரமற்ற ஸ்ட்டேட்மென்ட்தான் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்..

மேலே நீங்கள் சொல்லும் அறிவுப்புக்கு குர் ஆன் ஹதீஸ் ஆதாரம் காட்டுங்கள். மேற்கொண்டு பேசுவோம்.

ZAKIR HUSSAIN said...

To Bro Ara Ala,...Wa alaikkum Salam.

உங்கள் விளக்கமான பதிலுக்கு நன்றி .

உங்களிடம் நான் கேட்டதன் காரணம். நீங்கள் எழுதியிருந்த வாசகம்தான்.////இதுக்கு காரணம் உண்மையான இஸ்லாமிய போதனை தெரியாமல் இருப்பது.மார்க்கத்தில் சமரசம் செய்து கொள்வது.(சிலர் அறியாமைக்கால வார்த்தைகளை இன்னும் பயன்படுத்தி,அதை இன்னும் மறக்காமல் இருப்பது,)இஸ்லாம் என்ன என்று தெரிந்தும்,உதாரணமாக,விளையாட்டுக்கு என "தாயத்து கட்டு,சூடம் கொளுத்து,அணைத்து சத்தியம் செய்,இன்னும் இது போன்ற வார்த்தைகளை உபயோகிப்பதும்,எழுதுவதும்,ஊக்கப்படுத்துவதும்.இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அறிவில்லாமல் இருப்பது.//

நான் சமீபத்தில் எழுதியிருந்த பதிவில்

//இந்த விமானம் நடத்தும் ஆப்பரேசன் சீஃப் நம் ஊரில் இருக்கும் வரதட்சினை வாங்கும் மாப்பிள்ளை வீட்டார்களிடம் ட்ரைனிங் எடுத்திருக்க வேண்டும், என்று சூடம் அனைத்து சத்தியம் செய்யலாம். [ அ.நி அமீர் ! "சூடம்... ஒரு ஃப்லோவில் எழுதியது... சூடத்துக்கும் மார்க்கத்துக்கும் சம்பந்தமில்லையே காக்கா என நெறிச்சுடாதீங்க ஸாரி எடிட் செஞ்சிடாதீங்க... அப்புறம் நாம் தடுமல் வந்தால் 'விக்ஸ்' கூட போட முடியாது... ஏன்னா சூடம் இருக்குலே..]//

நான் நகைச்சுவையாக " சூடம் அணைத்து சத்தியம் ' என்ற வார்த்தையை எழுதியிருந்தேன். எனக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இஸ்லாமிய அறிவு இல்லையென்றாலும் நீங்கள் எழுதியிருக்கும் ' இது போன்ற வார்த்திகளை பயன்படுத்தினாலேதவறு என்றும் எழுதியிருக்கிறீர்கள். எனக்கு என்னவோ இது மாதிரி சிந்தனைகள் "தொட்டால் தீட்டு--- ஸ்நானம் செய்துகொள், பேசினால் தீட்டு - மந்திரம் சொல்லிக்கொள்" எனும் பிராமனீயக்கொள்கைகள் மாதிரி தெரிகிறது.

எனக்கு தோன்றிய சில கேள்விகள்:

* இப்படி வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டால் நமது ஒரிறைக்கொள்கைக்கு பங்கம் வரும் அளவுக்கு நம் ஈமான் அவ்வளவு பலகீனமானதா?

*கோயில், சர்ச், பைபிள், பகவத்கீதை என்ற இஸ்லாத்துக்கு சம்பந்த்மில்லாத வார்த்தைகளை பயன்படுத்தாமல் மாற்றுமத சகோதரர்களிடம் அழைப்பு பணி செய்யமுடியுமா?

*நீங்கள் சொன்ன மதுக்கோப்பைக்கும்-வார்த்தையை உச்சரிப்பதற்கும் லின்க் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.அப்படி என்ன லின்க் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் தேவலாம்.

*கிருமிகளின் பெயரைச்சொன்னால் அல்லது எழுதினால் நோய் வந்துவிடுமா?.பிறகு எப்படி மருத்துவம் பார்ப்பது?

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

அதிரையில் உள்ள மந்திரவாதிகள் என்ன செய்கிரார்கள் என்றால் பெனாடால் மாத்திரையை தன்னிரில் கரைத்து ஒரு ஓலையில் எதோ அரபியில் எழுதி கொடுத்துவிடுகிரார்கள்.... அதனால் அந்த நோய் குனம்மும் அடைகிரது.

அதனால் நமது மக்கள் அந்த மக்கள் மந்திரவாதிகலிடம் சென்று ஏமாந்து பொகிரார்கள்...

இவர்களின் உன்மை முகத்தை கிலிக்க வேண்டும்....

எனக்கு தெரிஞ்சு கலிப்புல்லா மற்றும் தாஜ்தீன் என்று அதிரையில் ஓதி பார்க்கிரேன் என்று சொல்லிக்கொண்டு இரு மந்திரவாதிகள் உள்ளனர். ”சிற்க்கான” காரியங்களை செய்து கொன்டு இருக்கின்றனர். இவர்கள் இந்த கேடுகெட்ட செயல்கலில் விடு பட வில்லை என்றால் இந்த இறுவர்களின் முதுகலும்மையிம் அல்லாஹ் முறிப்பானாக.....ஆமீன்.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

இஸ்லாமிய மார்க்கத்தில் மந்திர்ததல் பற்றி குர் ஆன் சுன்னாவில் என்ன சொல்லி இருக்கின்றது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மந்திரித்தல் முறையில் ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் ஷிர்க் காணப்பட்டதால் நபி(ஸல்) அவர்கள் ஒட்டு மொத்தமாகவே அதைத் தடை செய்திருந்தார்கள்.

மந்திரித்தல், தாயத்து அணிதல், கணவன், மனைவியை சேர்ப்பதற்காக செய்யப்படும் மருத்துவ முறை போன்றன ஷிர்க்காகும் என நபியவர்கள் கூறினார்கள் என்று அப்துல்லாஹ் கூறினார். அதற்கு நான் அப்துல்லாஹ்விடம் ‘ஏன் அவ்வாறு கூறுகிறீர் அல்லாஹ்வின் மீது ஆணையாக எனது கண்ணில் நோயேற்பட்டிருந்து போது மந்திரிப்பதற்காக ஒரு யூத மனிதரிடம் செல்வேன் அவர் மந்திரித்தால் அது குணமாகிவிடுகிறதே’ என்று கூறினேன். அதற்கவர் ‘அது ஷெய்தானுடைய வேளையாகும். நீங்கள் அவனைத் திருப்திப்படுத்தும் போது அவன் அமைதியடைகிறான். நீங்கள் அவனுக்கு எதிரான வேளைகளைச் செய்யும் போது நோயை ஏற்படுத்துகின்றான்.
அறிவிப்பவர் : ஸைனப் (ரழி)
ஆதாரம் : அபூதாவூத்

குர் ஆன் சுன்னாவில் மந்திரிப்பதை ஏவிய முறைபடி நாம் செய்தால் அதில் குனம் கிடைக்கும். என்பதை பல ஹதிஸ்களின் மூலம் நாம் அறிந்துகொள்ளாம்.


ஆயிஷா(ரலி) அவர்களிடம், விஷக் கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
ஆதாரம் : புஹாரி

‘கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (சிறப்பு) கிடையாது.
அறிவிப்பவர் : இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி)
ஆதாரம் : புஹாரி

கண்ணேறு, விஷம், புண் போன்றவற்றுக்கு மந்திரிப்பதை நபியவர்கள் அனுமதித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்

இஸ்லாம் முறையான மந்திரித்தலை அனுமதிக்கின்றது என்பதற்கு மேல் உள்ள மூன்று ஹதீஸ்களும் சான்றாக இருகின்றன.

அல்லாஹ் அஃலம்

KALAM SHAICK ABDUL KADER said...

//* இப்படி வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டால் நமது ஒரிறைக்கொள்கைக்கு பங்கம் வரும் அளவுக்கு நம் ஈமான் அவ்வளவு பலகீனமானதா?

*கோயில், சர்ச், பைபிள், பகவத்கீதை என்ற இஸ்லாத்துக்கு சம்பந்த்மில்லாத வார்த்தைகளை பயன்படுத்தாமல் மாற்றுமத சகோதரர்களிடம் அழைப்பு பணி செய்யமுடியுமா?

*நீங்கள் சொன்ன மதுக்கோப்பைக்கும்-வார்த்தையை உச்சரிப்பதற்கும் லின்க் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.அப்படி என்ன லின்க் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் தேவலாம்.

*கிருமிகளின் பெயரைச்சொன்னால் அல்லது எழுதினால் நோய் வந்துவிடுமா?.பிறகு எப்படி மருத்துவம் பார்ப்பது? //

என் எண்ணங்களையே அன்புச் சகோதரர் ஜாகிர் ஹுசைன் வினாக்களாகத் தொடுத்துள்ளார்கள்:
தமிழில் ஒரு சொல் அடிக்கடி மார்க்கம் அறிந்தச் சான்றோர்களால் கூறப்படுகின்றது:

”சீதேவி” (ஸ்ரீதேவி என்பதன் மரூஉச் சொல்)

குறிப்பாக அதிரையிலும் தமிழக முஸ்லிம்களிடமும் நற்பெயர் பெற்ற = மார்க்கம் அறிந்தவர்களைப் பாராட்டும் விதமாக அயலூர்க்காரர்கள் நம்மிடம்,” ஓ அந்த சீதேவி பிறந்த ஊர்க்காரரா நீங்கள்?” என்றும், அந்த மார்க்கம் அறிந்த “சீதேவி”யே நல்லவர்களைப் பிறரிடம் அறிமுகம் செய்யும் பொழுது “ இந்த சீதேவி அல்லாஹ்வுடைய பாதையில் நான்கு மாதம் பெயர் கொடுத்திருக்கின்றார்கள்” என்றெல்லாம் அறிமுக உரையை அல்லாஹ்வுடைய இல்லத்தில் வைத்துப் பேசுவது உங்கள் வாதப்படி என்னவென்பது. எங்களின் (கவிவேந்தர் சபீர் அவர்கள் சொன்னபடி “தீ” என்றால் சுடும் என்றும் கருதாமல், அன்புச் சகோதரர் ஜாகிர் ஹீசைன் அவர்களின் கருத்துரையின்படி//*கோயில், சர்ச், பைபிள், பகவத்கீதை என்ற இஸ்லாத்துக்கு சம்பந்த்மில்லாத வார்த்தைகளை பயன்படுத்தாமல் மாற்றுமத சகோதரர்களிடம் அழைப்பு பணி செய்யமுடியுமா?.._ கருத்துரைகள் கூறும் சுருக்கம்:

சொற்களின் பயன்பாடு “ஷிர்க்” என்ற உங்களின் கணிப்புத் தவறானவையாகும். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் முஹம்மத்(ஸல்)அவர்கள் மீதும் உங்கட்கு இருக்கும் “முஹப்பத்” ஐ விடவும் அதிகமாக இத்தளத்தின் வாசகர்கட்கு உண்டென்பதும் உண்மை; அதனாற்றான், அன்புச் சகோதரர் ஜாகிர் ஹீசைன் அவர்கள் //இப்படி வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டால் நமது ஒரிறைக்கொள்கைக்கு பங்கம் வரும் அளவுக்கு நம் ஈமான் அவ்வளவு பலகீனமானதா?// என்ற வினாவும் கவனத்திற் கொள்க,

உங்களுடைய “கோபம் புரிகின்றது” (புரிதலில் குறைவுடையவர்களாக இருந்தால் இத்தளத்தில் உளவியல் அறிஞர்களும், கவிஞர்களும் , பொருளாதார விற்பன்னரகளும், நாவலர்களும் உலா வர இயலுமா?)அல்லாஹ்வின் மீதுள்ள அளவிலா அன்பை வெளிப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு //ச்சும்மா இப்படியெல்லாம் பூச்சாண்டி காட்டாதீர்கள். இந்த மார்க்க ஆதாரமற்ற ஸ்ட்டேட்மென்ட்தான் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்//
தமிழில் புழக்கத்தில் உள்ள வார்த்தைகளை எல்லாம் “நாடு கடத்தி விட்டால்,,,” மிஞ்சுவதை வைத்து என்ன பேச முடியும்? எப்படி எழுத முடியும்? ;;அவாள்’’ பயன்படுத்தும் சொற்களை நாம் சொல்லக் கூடாது என்றும் அவைகள் அறியாமைக் காலத்துச் சொற்களைப் போன்றது என்றும் வாதிடுவது அறிவுடைமை ஆகாது. தூய தமிழில் சொன்னால் “கவிதை நடை” வேண்டாம் என்கின்றீர்கள்; புழக்கத்தில் உள்ளத் தமிழ்ச் சொற்கள் “ஷிர்க்” என்கின்றீர்கள்.
அழைப்புப் பணியில் ஈடுபடும் அறிஞர்கள் மர்ஹூம் அஹ்மத் தீதத் மற்றும் அவர்களின் மாணவர் டாக்டர் ஜாகிர் நாயக், ஹிந்துச் சகோதரர்கட்கு இஸ்லாமிய அழைப்பு விடும்பொழுது/ விவாதங்களில் சமஸ்க்ருத சொற்களான ஈஸ்வர், பக்வான், விஷ்ணு, ரிஷி, புருஷர், பார்வதி போன்றவைகள் ஹிந்து வேத, உபநிதங்களில் இறைவனைப் பற்றியும் , இறைத்தூதர்(ஸல்) அவர்களைப்பற்றியும் முன்னறிவிப்புச் செய்யும் விளக்கங்கள் என்று ஆதாரங்களுடன் வாதிட்டு concept of God in all religions என்று உலகம் சுற்றி உண்மைகளை அடுக்கிச் சொல்லி “அவாளை” அசத்தி , இஸ்லாத்தில் புதியவர்கள் இணைய உதவிய இச்சொற்கள் இணைவைப்பு என்றும் அதனால் அம்மாமேதைகள் “ஷிர்க்: செய்து விட்டார்கள் என்றும் புரிந்து கொண்டால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் உங்களின் “எடுத்தேன்; கவிழ்த்தேன்” என்ற நீண்ட விவாதம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

வ அலைக்கும் சலாம் சகோ சபீர் காக்கா,
//தங்களின் தீர்மாணங்களின்படி:
“தீ” என்று சொல்லாதே, வாய் வெந்துபோய்விடும். “தேன்” என்று சொல், நாவினிக்கும் என்றே என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. //

உங்கள் புரிதல் ஒரு தவறான புரிதல்,நான் அப்படி சொல்லவில்லை.

//“அம்மனுக்கு படிகட்டாதே” என்ற அறிவுரையை, அம்மன், படி, கட்டுதல் ஆகிய வார்த்தைப் பிரயோகங்கள் இல்லாமல் எப்படி எழுதுவது எனும் வித்தையை நீங்கள்தான் சொல்லித் தரவேண்டும்.//

சகோ அவர்களே,அப்ப நான் என்ன மாரியம்மன் கோயில்லயா “படிக்கட்டு”கிறேன்?இந்த வார்த்தையை பயன்படுத்தியது,நானா அல்லது நீங்களா?நீங்கள் அவ்வாறு தேவையின்றி எழுதுவது தவறு என்று சுட்டிக் காட்டி தான் நான் எழுதினேன்.அதே சமயம்,இந்த படிக்கட்டும் செய்தியை சொல்லி,அதை நீங்கள் கண்டிக்கும் விதமாக சொன்னால்,ஏற்றுக் கொள்ள முடியுமே?ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை,மாறாக - ஜஸ்ட் லைக் தட் நீங்கள் உபயோகித்தீர்கள் என்பதை மறந்துவிட்டு,அல்லது மறைத்துவிட்டு எழுத வேண்டாம்,அல்லாஹ் பார்த்துக்கொண்டுல்லான்.

//ச்சும்மா இப்படியெல்லாம் பூச்சாண்டி காட்டாதீர்கள். இந்த மார்க்க ஆதாரமற்ற ஸ்ட்டேட்மென்ட்தான் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்..//

இன்னும் பயன்படுத்துவேன் என நீங்கள் சொன்னால் உங்கள் இஷ்டம்.ஒவ்வொரு முஸ்லிம்களுக்குள்ளும் இப்படி எச்சரிக்கை தன்மை இருக்க வேண்டும்,அதையே செய்தேன்,அப்புறம் - உங்கள் இஷ்டம்.நன்றி

இப்னு அப்துல் ரஜாக் said...

வ அலைக்கும் சலாம் சகோ ஜாகிர் காக்கா,


//* இப்படி வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டால் நமது ஒரிறைக்கொள்கைக்கு பங்கம் வரும் அளவுக்கு நம் ஈமான் அவ்வளவு பலகீனமானதா?//

அப்படி வரக் கூடாது என்று நான் பயப்படுகிறேன்.ஈமான் எல்லா நேரத்திலும் ஒரே அளவாக இருப்பதில்லை.அளவு கூடும்,குறையும்,அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோம்,ஈமான் மேலும்,மேலும் அதிகரிக்க.

//*கோயில், சர்ச், பைபிள், பகவத்கீதை என்ற இஸ்லாத்துக்கு சம்பந்த்மில்லாத வார்த்தைகளை பயன்படுத்தாமல் மாற்றுமத சகோதரர்களிடம் அழைப்பு பணி செய்யமுடியுமா?//

நாம் பயன்படுத்தும் வார்த்தயை பொறுத்து - சூழ்நிலையை பொறுத்து.

மேற்கொண்டு நீங்கள் சுட்டிக்காட்டிய படி நான் சொல்லாத விஷயத்தை பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள்.ஒரு கோயிலை கோயில் என்றும்,ஒரு சர்ச்சை ஒரு சர்ச் என்றும் சொல்வதில் தவறில்லை.ஆனால்,நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு முரண் இருக்கும் சொல்லை,முஸ்லிம்களாகிய நாம் பயன்படுத்தக் கூடாது என்பதே என் வாதம்.அதை விட்டு,விட்டு மற்ற சொற்களை பயன்படுத்தலாம்,
அதே சமயம் ஏற்கனவே சகோ சபீர் அவர்களுக்கு நான் சொன்ன பதில் சுட்டிக் காட்டியபடி சொன்னால் தவறில்லை,அதாவது,"சகோ அவர்களே,அப்ப நான் என்ன மாரியம்மன் கோயில்லயா “படிக்கட்டு”கிறேன்?இந்த வார்த்தையை பயன்படுத்தியது,நானா அல்லது நீங்களா?நீங்கள் அவ்வாறு தேவையின்றி எழுதுவது தவறு என்று சுட்டிக் காட்டி தான் நான் எழுதினேன்.அதே சமயம்,இந்த படிக்கட்டும் செய்தியை சொல்லி,அதை நீங்கள் கண்டிக்கும் விதமாக சொன்னால்,ஏற்றுக் கொள்ள முடியுமே?ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை,மாறாக - ஜஸ்ட் லைக் தட் நீங்கள் உபயோகித்தீர்கள் என்பதை மறந்துவிட்டு,அல்லது மறைத்துவிட்டு எழுத வேண்டாம்,அல்லாஹ் பார்த்துக்கொண்டுல்லான்."





//*நீங்கள் சொன்ன மதுக்கோப்பைக்கும்-வார்த்தையை உச்சரிப்பதற்கும் லின்க் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.அப்படி என்ன லின்க் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் தேவலாம்.//

மதுக் கோப்பையையும் ரசூல் ஸல் அவர்கள் தடை செய்தார்கள்,ஏனெனில் அந்த மதுக் கோப்பை பார்க்கும் போது,முன்பு பழக்கத்தில் இருந்த மதுவை ஞாபகப் படுத்தி விடக் கூடாது,மீண்டும் அந்தப் பழக்கம் வந்துவிடக் கூடாது என்ற நோக்கம் அவர்களுக்கு இருந்தது.அதே போன்றுதான்,மார்க்கத்திற்கு முரணாக உபயோகப் படுத்தும் வார்த்தைகள்,இதுவும் மீண்டும் நம்மை அறியாமைக் காலத்திற்கு இட்டு செல்லக் கூடாது என்ற கரிசனம்,இவிவ்ரண்டிலும்,சைக்காலஜி-மனோ சிகிச்சை மூலம் ரசூல் ஸல் அவர்கள் மருந்து கொடுத்துள்ளார்கள் என்பது என் சிந்தனை.ஏற்றுகொள்ள நீங்கள் மறுப்பது உங்கள் இஷ்டம்.ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உள்ள ஒரு கடமையில் என் கடமையை செய்தேன்,(என் கருத்தில் மார்க்க முரண் இருப்பின்,நீங்கள் சுட்டுவது,உங்கள் அல்லது மற்றவர் கருத்தில் மார்க்க முரண் இருப்பின் சுட்டுவது )அப்படித்தான் நாங்கள் பயன்படுத்துவோம் என்றால்,நீங்கல்கலாச்சு,படைத்த இறைவனாச்சு.உங்கள் இஷ்டம்.நானும்,நீங்களும் தனிதனியாகத்தான் அல்லாஹ்விடம் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளோம்.

//*கிருமிகளின் பெயரைச்சொன்னால் அல்லது எழுதினால் நோய் வந்துவிடுமா?.பிறகு எப்படி மருத்துவம் பார்ப்பது?//

உடல் நோய் வராது,உள்ள நோய் வரும்.இஸ்லாத்திற்கு முரணான சொற்களை பயன்படுத்தினால் உள்ள நோய் வரும்.அது நம் ஈமானை அழித்து,கேடைத் தரும்.(அல்லாஹ்வுடைய திக்ர் உள்ள இதயம் அமைதி பெரும் என்ற கருத்துடைய குரான் வசனம் காண்க).அதுக்கு எதிர் அல்லாஹ்வுக்கு மாற்றமான - இஸ்லாத்திற்கு முரணான வார்த்தைகள் அமைதி தராது என்பது தானே.


சகோதரே,உங்கள் இஷ்டம்.இது என் கருத்து.அல்லாஹ் மிக மிக அறிந்தவன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) காக்கா,

மேலேயுள்ளதைப் படித்துக் கொள்ளுங்கள்.நீங்கள் செய்வது சரியென்றால் செய்யுங்கள்,உங்கள் இஷ்டம்.முதலில் என் ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளவே இப்படி எழுதும் படி,ஆகி விடுகிறது.அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்ற பயம்,உங்கள் வழி உங்களுக்கு,என் வழி எனக்கு. லகும் தீனுக்கும் வலியதீன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) காக்கா,

தங்களின் மேலான கவனத்திற்கு,

ஸ்ரீதேவி யார்?

http://adiraixpress.blogspot.com/2010/11/blog-post_07.html

நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு