Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வி விழிப்புணர்வு மாநாடு - இனிதே நிறைவுற்றது ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | May 20, 2012 | , ,


அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை எஜுகேஷனல் மிஷன் அமைப்புகள் இணைந்து நடத்திய "நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நிறைவு விழாவும், கல்வி விழிப்புணர்வு இரண்டாவது மாநாடும் மிகச் சிறப்பாக அதிரை CMP லேன் ALM பள்ளி வளாகத்தில் அதிரை அறிஞர் "தமிழ் மாமணி", புலவர் அஹ்மது பஷீர் அரங்கத்தில் 19-05-2012 அன்று மாலை நடைபெற்றது.


அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் அமீர் அறிஞர் அதிரை அஹ்மது அவர்களின் தலைமையில், அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் மூத்த ஊழியர் சகோதரர் ஜமீல் M.சாலிஹ் அவர்கள் மாநாட்டு நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.

மாநாட்டின் துவக்கத்தில் நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மிகச்சிறப்பாக தங்களது திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகளின் சிறப்பு நிகழ்சியும் நடைபெற்றது, அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பிரிவில் தங்களின் திறமைகளை திரளாக கூடியிருந்தவர்கள் முன்னிலையில் செய்து காட்டினார்கள்.

அதன் பின்னர் இளம் மவ்லவி அப்துல் பாசித் அல் புகாரி MBA., அவர்களின் அற்புதமான குரல் வளத்துடன் இனிமையாக ஆரம்பித்த சிறப்பு சொற்பொழிவு பின்னர் "மார்க்கக் கல்வியின் சமகால நிலையும் அதன் கட்டாயத் தேவையும்" என்ற தலைப்பில் எழுச்சியூட்டும் விதமாக அனைவரையும் உலுப்பி எடுத்தார்கள், குறிப்பாக பெண்கள் ஆர்வமாக கேட்டனர்.

மஃரிப் தொழுகைக்கான இடைவெளி அறிவிக்கப்பட்டது இந்நிலையில் இந்த சிறப்பான மாநாட்டை நேரலை செய்து கொண்டிருந்த சகோதரர்கள் மாநாடு ஆரம்பிக்கும்போது மாணவிகளின் திறன் வெளிகாட்டும் சிறப்பு நிகழ்வுகளில் பதியப்பட்ட காணொளியை மீண்டும் வெளிநாடுவாழ் சகோதரர்களின் வேண்டுகோளுக்கினங்க ஒளிபரப்பப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ந்து கல்வி மாநாட்டின் சிறப்பு பேச்சாளார் சகோதரர் CMN சலீம், M.A. அவர்கள் "கல்வியில் விழிப்புணர்வு அடைந்துவிட்டோமா?" என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தார்கள், வழமையான சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்கள் இதன் காணொளி விரைவில் அதிரை வலைத்தளங்களில் பதியப்படும் இன்ஷா அல்லாஹ்...

மாநாட்டின் நிறைவாக நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் தவறாமல் கலந்து கொண்ட மாணவிகள், நிறைவுநாள் அன்று நடந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகள், ஒவ்வொரு பிரிவிலும் தனித்து மிளிர்ந்த மாணவிகள், மிகச் சிறப்பாக பயிற்சி முகாமை நடத்திய ஆசிரியைகள் மற்றும் பணியாளார்கள் என்று ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக சான்றிதழுடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிறைவில் விழாவும் நபிவழி காட்டிய முறைப்படி இனிதே நிறைபெற்றது.

மாணவிகள் சிறப்பு நிகழ்வுகள், மாநாட்டு சிறப்பு பேச்சாளர்களின் சிறப்புரை காணொளிகள் விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்...

மாநாட்டினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ADT – அதிரை தாருத் தவ்ஹீத் ஊழியர்கள் அனைவரின் கடின உழைப்பினை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

-அதிரைநிருபர் குழு

2 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அல்ஹம்துலில்லாஹ்.
பதிவுக் காணொளியை விரைவில் காண எதிர்பார்ப்புடன்...

KALAM SHAICK ABDUL KADER said...

அல்ஹம்துலில்லாஹ்!
பெண்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுதல் அறிந்து மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து படிப்பதற்கு “மகளிர் கல்லூரி” நமதூரில் நிறுவினால், தயக்கமின்றி இப்பெண்மணிகள் மேற்படிப்புப் படிக்கலாம். இருபாலர் கல்லூரியில் ஏற்படும் விபரீதங்கள் அறிந்து பெற்றோர் இப்பெண்மணிகளைத் தொடர்ந்து படிக்க வைக்காமல் இருந்து விடலாம். இதுபற்றிப் பல முறை நம் சமுதாயத் தலைவர்கள், புரவலர்களிடம் ஆர்வமூட்டியும், இன்னும் நம்தூரில் மகளிர் கல்லூரி இல்லாமல் இருப்பதால், பட்டுக்கோட்டைக்குச் சென்றுப் படிக்கின்றனர். அம்மாபட்டினத்தில் உள்ள மகளிர் கல்லூரிக்குச் சென்று வர நம் பெண்மணிகட்குச் சிரமம் ஏற்படும்; அல்லது, திருச்சி அய்மான் / கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் உறைவிடத்தில் தங்கிப் படிப்பதில் பெற்றோர் அல்லது மாணவியோ ஆர்வம் காட்டுவார்கள் என்றும் சொல்ல முடியாது. எனவே, இப்பொழுது மிகவும் அவசியமான- அவசரமான தேவை நமதூரில் மகளிர் கல்லூரி வேண்டும் என்பதே!

கல்லூரியும் மகளிர் மட்டும் படிக்கக் கூடியதாகவும்/ பெண் பேராசிரியைகளை மட்டும் வைத்துக் கற்பிக்கக் கூடியதாகவும் அமையுமானால் கா.மு. பெண்கள் மேனிலைப் பள்ளி மற்றும் இமாம் ஷாஃபி (ரஹ்)பள்ளியின் மாணவிகள் அப்படிப்பட்ட மகளிர் கல்லூரியில் இதைவிட இன்னும் சிறப்பாகப் பயின்று நல்ல மதிப்பெண்களுடன் பட்டதாரிகளாகவும் எந்த விதமான விபரீதங்கட்கும் ஆளாகாமல் வெளியேறுவார்கள்; அவர்களே அப்பள்ளிகளின் ஆசிரியைகளாகவும் ஆகலாம்; இன்னும் மார்க்கம் அனுமதித்தப் பணிகளில் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுவார்கள்.

இப்பின்னூட்டங்களைக் காணும் சகோதரர் MST காக்கா மற்றும் சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள கல்வி ஆர்வலர்கள் உடன் நல்ல முடிவினை எழுதுமாறு கேட்டுக் கொள்கின்றேன்

--

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு