Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் - 3 19

அதிரைநிருபர் பதிப்பகம் | June 11, 2012 | , , , , ,

அலசல் தொடர் : மூன்று.

இந்த தொடரில் மனு நீதியை அத்தியாயத்துக்கு அத்தியாயம் – வரிக்கு வரி – வசனத்துக்கு வசனம் அலசும் அதே வேளையில் தலைப்புக்கு தொடர்புடைய சில அசைக்க முடியாத வரலாற்று சம்பவங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் சுட்டிக்காட்டிக்கொண்டே வருவேன். (சுக்கு, மல்லி கலந்த  காபிதானே சுவையாக இருக்கும்?)

அவற்றுள் ஒன்று ஆடைகள் பற்றியதும் நடமாட்டம் பற்றியதுமாகும். 

ஒரு காலத்தில் சூத்திரர் என்று ஒடுக்கப்பட்டவர்களுக்கு மேலாடை அணிய உரிமை இல்லை. காலில் செருப்பு அணிய உரிமை இல்லை. சில குறிப்பிட்ட அக்கிரகாரத் தெருக்களில் அவர்கள் நடக்கக் கூடாது. ஆண்கள் தங்களின் உடல் மீது துண்டு போர்த்தினால் எவ்வளவு குளிர் அடித்தாலும் வெயில் அடித்தாலும் “ அவாளைக்” கண்டால் அந்தத் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்ளவேண்டும்.  இல்லாவிட்டால் தண்டனை. தாழ்த்தப்பட்டோர் மேலே சட்டை போடுவது அரசியல் சட்ட அத்துமீறல் என்பது சில சமஸ்தானங்களில் சட்டமாக்கப்பட்டிருந்ததுதான் வேதனை தரும் தகவல். காலில் செருப்பணிவது கள்ளநோட்டு அடித்த குற்றத்துக்கும் பொதுக்குளத்தில்  குளிப்பது அபின், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கடத்தும் குற்றத்துக்கும்  இணையானவையாக கருதப்பட்டடன.  

இந்த மேலாடைத்தடை சட்டம் – கட்டுப்பாடு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு மட்டும்தானா? பெண்களுக்கும்தான். பெண்கள் இப்படி மேலாடை அணியாமல் இருப்பது இன்றும் கூட ஆப்ரிக்காவில் சில நாடுகளில் உள்ளது. இதேநிலையில்தான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இங்கும் நடத்தப்பட்டிருக்கிறார்கள். இதைக்கண்டு வருந்திய ஒரு ஆங்கிலேய ஆட்சியாளரின் மனைவிதான் இன்று பெண்கள் அணியும் ஜாக்கெட்டை வடிவமைத்ததாக கூறுகிறார்கள். இப்படி பெண்கள் மேலாடை இல்லாமல் அலைந்த அருவருப்பான  காட்சி கண்டு வருந்திய மாவீரன் திப்பு சுல்தான் தனது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களில் சாதிப்பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பெண்களும் மேலாடை அணியவேண்டுமென்று ஆணை பிறப்பித்தார். Thank you Thippu. 

அதேபோல் உயர்சாதியினர் வசிக்கும் சில தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்க நேரிட்டால் தண்டனை. இந்த சம்பவம்தான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த வைக்கம் என்ற ஊரில் ஒரு போராட்டத்துக்கு வித்திட்டது. இந்த போராட்டத்தை நடத்தி, தடுக்கப்பட்டிருந்த அக்கிரகாரத்தெருக்களில் தாழ்த்தப்பட்டோரையும் இஸ்லாமியரையும் உடன் அழைத்துச்சென்ற இராமசாமிப் பெரியார் கைது செய்யப்பட்டு - சிறையில் அடைக்கப்பட்டு – ஆங்கில அரசு தலையிட்டு - அந்த தடை நீக்கப்பட்டு விடுதலையுடன் வெற்றி கண்ட காரணத்தால்தான் பெரியார் “ வைக்கம் வீரர் “ என்று அழைக்கப்பட்டார். 

அதேபோல் ஆலயங்களில் பிரவேசிக்கவும் தாழ்த்தப்பட்டோருக்குத் தடை இருந்ததை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்களை பல அரசியல் தலைவர்கள்- காந்தி  உட்பட - நடத்தியே இருககிறார்கள். இவையெல்லாம் ஏன்? பிறப்பிலேயே ஏற்றதாழ்வைக் கற்பித்த மனு நீதியால் அல்லவா?

இந்த நிலைமைகள் இன்றும் கூட முழுக்க முழுக்க மாறிவிட்டனவா என்றால் இல்லை. கிராமங்களில் உணவு விடுதிகளில் இரட்டைக்குவளை முறையும்- தாழ்த்தப்பட்டோருக்கான தடுப்புச்சுவர்களும்- கோயில் திருவிழாக்களில் தேர் இழுக்க உரிமை மறுத்தலும்  இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.  முகப்பருவை விரைவில் நீக்கிவிடலாம். மனு நீதி ஏற்படுத்தியது இரத்தப் புற்று நோய்; பிறவிப் போலியோ. இந்த உயர்சாதி வன்கொடுமையின் ஒரு வெளிப்பாடுதான் அண்மையில் அம்பேத்கார் படம் கேலிச்சித்திரமாக பள்ளிப் பாட நூல்களில் இடம் பெற்றதாகும். இந்த பட்டியலில், வாசாத்தியில் தாழ்த்தப்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டதும், திருக்கோயிலூரில் இருளர் பெண்கள் கற்பழிக்கப்பட்டதும் அடங்கும். இத்தகைய சீண்டல்களும் சேட்டைகளும்  ஆரியர்களின் இரத்தத்தில் ஊறியவை.

இந்த அத்தியாயத்தில் நான் கூறப்போவது மனித குலத்தில் பிறந்த- நாகரிகம் படைத்த – பகுத்தறிவு படைத்த எவரும் – எந்நாளும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் இந்த மனு நீதியில் சட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளதைப பற்றியதாகும்.  இது மனு நீதியின் இரண்டாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகிறது . CHAPER : TWO  29 TO 32. . இது குலவாரியாக பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதில் கூட பாகுபாடு கற்பித்த பகுதிகளாகும்.. 

இதன்படி பூணூல் அணிவிக்கப்படும் முன்பாக ஒரு உயர்சாதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு Gatakarman என்று அழைக்கப்படுகிற பிறப்புரிமை சடங்கு நடத்தப்பட வேண்டும். இதில்தான் குழந்தைக்கு அதன் தந்தையால் ஒரு சுப நாளில், சுப முகூர்த்ததில், சுப நட்சத்திரத்தில் Namadheya  என்று அழைக்கப்படும் பெயர் சூட்டும் விழாவும் நடத்தப்படவேண்டும். இதில் நமக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டட்டும் வாழ்க! வளர்க! 

ஆனால் குழந்தைக்கு சூட்டப்படும் பெயர்கள் எப்படி இருக்கவேண்டுமென்று அதிலும் சாதிவாரியாக சில வரையறைகளை மனு நீதி சொல்கிறது. இதில்தான் நமக்கு பிரச்னை. 

அதாவது, பிராமணக் குழந்தையின் பெயரின் முதல் பகுதி நல்ல அதிருஷ்டத்தை சுட்டிக்காட்டுவதாக இருக்கவேண்டுமாம்; ஷ்த்ரிய குலத்தில் பிறந்த குழந்தையின் பெயரின் முதல் பகுதி சக்தியையும் வீரத்தையும் குறிப்பிடுவதாக இருக்க வேண்டுமாம்; வைசிய குலத்தில் பிறந்த குழந்தையின் முதல்பகுதி செல்வத்தை காட்டுவதாக இருக்கவேண்டுமாம். ஆனால் சூத்திர குலத்தில் பிறந்த குழந்தையின் முதல் பெயர் express something contemptible அதாவது இழிவானதும், வெட்கப்படத்தகுந்ததுமாக இருக்கவேண்டுமாம். முதல் மூன்று சாதிக்கும் முக்கனி கொடுப்பார்களாம். நாலாம் சாதிக்கு நாறிப்போன நரகலை அள்ளித்  தரவேண்டுமாம்.  

அதுமட்டுமல்ல  பெயரின் இரண்டாவது பகுதியிலும்  கூட பிராமணக் குழந்தையின் பெயரில் சந்தோஷமும், ஷத்ரியக் குழந்தையின் பெயரில் பாதுகாப்பு அம்சமும், வைசியக் குழந்தையின் பெயரில் செழிப்பும் இடம்பெற்று இருக்க வேண்டுமாம். ஆனால் சூத்திரக்குழந்தையின் பெயரில் இட்டபணிகளை நிறைவேற்றும் எடுபிடி என்ற அம்சம் இடம் பெற வேண்டுமாம். ஒரு பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதத்தின் சட்டங்கள் இப்படி இருந்தால் எப்படி வரும் சமத்துவம் என்பதை சம்பந்தப்பட்டோர் சிந்திக்க வேண்டும். 


மேலே நான் சாராம்சமாக சுட்டிக்காட்டிய கருத்துக்களைப் பொழியும் மனுவின் வரிகள் இதோ:

29. Before the navel-string is cut, the Gatakarman (birth-rite) must be performed for a male child; and while sacred formulas are being recited, he must be fed with gold, honey, and butter. 

30. But let the father perform or cause to be performed the Namadheya (the rite of naming the child) on the tenth or twelfth day after birth, or on a lucky lunar day, in a lucky muhurta (under an auspicious constellation). 

31. Let the first part of a Brahmin's name denote something auspicious, a Kshatriya's be connected with power, and a Vaisya's with wealth, but a Shudra's express something contemptible. 

32. The second part of a Brahmin's name shall be a word implying happiness, of a Kshatriya's a word implying protection, of a Vaisya's a term expressive of thriving, and of a Shudra's an expression denoting service. 
இதனால்தான் இன்றும் கூட உயர்குலத்தில் பிறந்தவர்கள் சூரிய புத்திரன் , சந்திர குமாரன் என்றெல்லாம்  பெயர் சூட்டிக்கொள்ளும் வேளையில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்கள் மண்ணாங்கட்டி, ஓணான் குட்டி, மாக்கான்  என்றெல்லாம் பெயரிட்டுக்கொள்கிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு. 

வாணியம்பாடியில் என்னுடன் திண்டிவனம் என்ற பெயருடைய தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஒரு நண்பர் பயின்றார். ஏன் இப்படி ஊர் பெயரை வைத்து இருக்கிறாய் என்று கேட்டேன். அவர்கள் குடும்பம் சாலைப்பணியாளர்கள் குடும்பம். ஊர் ஊராகப் போய் சாலைகள் போடுவது அவர்கள் வேலை. எந்த ஊரில் குழந்தை பிறக்கிறதோ அந்த ஊரின் பெயரை பிறக்கும் குழந்தைக்கு வைத்து விடுவார்களாம். இதே போல் எனது வகுப்புத்தோழர் திண்டிவனத்துக்கு மலைக்கோட்டை , பண்ருட்டி , மருங்காபுரி  , பனைமரத்துப்பட்டி என்றெல்லாம்  சித்தப்பா, பெரியப்பா மக்கள் உண்டாம். (இன்று திரு. திண்டிவனம் கூட்டுறவுத்துறையில் சார் பதிவாளர் பதவி வரை  சேவை செய்து ஒய்வு பெற்று விழுப்புரத்தில் வசிக்கிறார். அவர் பெயரில் இருந்த இடக்கு மடக்கு காரணமாக படிக்கும் காலத்தில் அவரை நாங்கள் திவான் என்று நல்ல பெயரிட்டு அழைத்தோம் )

இன்னும் சுழலும் இந்த சாட்டை ...


-இபுராஹீம் அன்சாரி

19 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

உங்களுடைய இந்த தொடர் பல்கலைக்கழகங்களில் / அல்லது பள்ளிக்கூடங்களில் பாடமாக்கப்பட்டால் குறைந்த பட்சம் ஜாதி வேறுபாடுகள் ஒழியும்.

Yasir said...

இது மனு நீதியாக தெரியவில்லை மண்ணு நீதியாக தெரிகிறது....தான் அறிந்ததை அனைவரும் அறிய வேண்டி (அவசியம் அறிய வேண்டியது இது ) தொய்வு இல்லாமல் தரும் அன்சாரி மாமா அவர்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை

Anonymous said...

ஜாகிர் காக்கா அவர்களை நீங்கள் சொன்னது எல்லாம் சரிதான். யார் எதை சொன்னாலும், எழுதினாலும் ஜாதி வேறுபாடுகள் ஒழிய போவதில்லை. நாம் வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

அப்படியே இந்த தொடரை நாம் பல்கலைக்கழகங்களில் / அல்லது பள்ளிக்கூடங்களில் பாடமாக்கப்பட்டு படித்தாலும் ஜாதி வேறுபாடுகள் ஒளிவதில்லை. ஒவ்வொருவரும் நன்றாக சிந்தித்தாலே ஜாதி என்ற பிரச்சினைக்கே இடமில்லை.

இந்த தொடரை படித்துவிட்டாவது திருந்தட்டும். எங்கு சென்றாலும் உன் ஜாதி என்ன மதம் என்ன என்று தான் கேல்வி எழுப்புகின்றார்கள். அப்படியே கேட்டாலும் விட்ட பாடு இல்லை. நான் அந்த ஜாதி, இந்த ஜாதி என்று சொல்லிக்கொண்டு பல பிரச்சினைகள் செய்து வருகிறார்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தெரியாத பல விஷயங்களை பொறுமையாக வாசிக்க எங்களை வசப்படுத்தியிருக்கும் இ.அ. காக்கா அவர்களுக்கு நன்றிகள் பல !

அண்ணாதுரை எழுதிய புத்தகம் என் கையில் இருக்கிறது (வாங்கிவிட்டேன்), கி.விரமணி எழுதிய புத்தகம் கையிருப்பில் இல்லை அடுத்தமாத இறுதியில் அச்சுக்கு வந்து வெளியாகும் என்று பெரியார் திடலில் சொன்னார்கள் அதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறேன்...

கையில் இருபப்தை விரைவில் உங்கள் கைகளில் சேர்க்கிறேன் இன்ஷா அல்லாஹ்...

அதிரை சித்திக் said...

மூன்று நாட்களுக்கு முன் 'புதிய தலைமுறை '

தொலை காட்சியில் ஒரு செய்தி ..இந்த தொடருக்கு

பொருத்தமானது ..விருது நகர் மாவட்டத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட

ஊராட்சி மன்ற தலைவரை ..ஊராட்சி மன்ற கூட்டத்தில் உயர் ஜாதி

கவுன்சிலர்கள்.நாற்காலியில்அமர்ந்துகொண்டு .ஊ .தலைவரை

தரையில் உட்கார வைத்து அவமானபடுத்தியது மட்டுமின்றி சில உயர் ஜாதியினர்

எங்களுக்கு நீ தலைவராக இருக்ககூடாது ..ஒழுங்கா பதவியை ராஜினாமா செய்து விடு இல்லையேல்

உன் தலையை கொய்து விடுவோம் என மிரட்டியுள்ளார்கள் ..பாவம் அரண்டு போன

ஊ .தலைவர் அம்மாவட்ட கலெக்டரிடம் ஜாதிய வன்கொடுமை சட்டத்தின் அடிப்படையில்

நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்துள்ளார் கருப்பன் என்ற அந்த அப்பாவி.

அந்த ஊராட்சி மன்றம் ,தனி தொகுதி என்பது குறிப்பிட தக்கது .நேரடி ஒளிபரப்பில் காட்டினார்கள்

ஊராட்சி மன்ற தலைவர் திரு கருப்பன் அவர்களால் பேச முடிய வில்லை நடுங்கிய

குரலில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே கூற இயன்றது ..எவ்வளவுஜாதிய கொடுமை

நடந்தாலும் ..நல்வழி நாடி வராதது தான் பெரும் கொடுமை ..

Shameed said...

//சில குறிப்பிட்ட அக்கிரகாரத் தெருக்களில் அவர்கள் நடக்கக் கூடாது//

அது அக்கிரகாரத் தெரு அல்ல அக்குருமக்காராதெரு?

சேக்கனா M. நிஜாம் said...

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துக்கூடிய தொடர்.........

வாழ்த்துகள் மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களுக்கு,

நமதூரில் உள்ள ஆதி திராவிட சகோதரர்களுக்கு இப்பதிவை பிரசுரமாக அடித்து கையில் கொடுத்தாலே போதுமானதாகும். சமூகத்தில் உள்ள அவர்களின் உண்மை நிலையை அறிந்து தெளிவான கொள்கைகளைப் பின்பற்ற வாய்ப்புகள் ஏராளம்.

Ebrahim Ansari said...

அன்பு சகோதரர் நிஜாம் அவர்களுக்கு,

நன்றியுடன்.

நமதூரில் மட்டுமல்ல, நமது நோக்கத்துக்குப் போதாது.

உங்கள் கருத்தை இந்த தொடர் முடிவுற்றதும் உங்கள் மூலமே அச்சிட்டு வெளியிடுவது என்றும் அந்த செலவைத் தந்துவிடுவது என்றும் ஓரு ஆசை இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் . தொடர் முடியட்டும்.

தம்பி அபூ இப்ராஹீம். சலாம். சலாம் போடுறேன் சார். நல்ல செய்தி . உங்களை எதிர் பர்ர்க்கிறேன்.

sabeer.abushahruk said...

சாட்டையில் வேகம் கூடுகிறது. அடியில் சூடு பறக்கிறது. ரோஷம் இருந்தால் சுரீர் என உரைக்கும் உண்மைகள் மாற்ற வேண்டும் மண்டூகங்களை.

sabeer.abushahruk said...

//கையில் இருபப்தை விரைவில் உங்கள் கைகளில் சேர்க்கிறேன் இன்ஷா அல்லாஹ்...
//

கை குடுங்க, வெல் டன் அபு இபுறாகீம்

இப்னு அப்துல் ரஜாக் said...

இழிவு கொண்ட இந்து மதம் துறந்து,எப்போது அந்த மக்கள் இஸ்லாம் நோக்கி வருவார்களோ,அன்று வரை இந்த இழிவு அவர்களை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.படித்த தலித்துக்கள் கூட,சிந்திக்க மறுப்பது இன்னும் அவர்களின் இனம் மான,மரியாதை எல்லாவற்றையும் கால காலமாக இழந்து நிற்பதை ஊக்குவிப்பதாகவே அமையும்.இதை உணர்வார்களா சகோதரர்கள் திருமாவளவன்,டாக்டர் சேப்பன்,டாகடர் கிருஷ்ணசாமி போன்றோர்.

சகோ ஜாகிர் அவர்கள் சொன்ன மாதிரி, இது கல்வி நிறுவன பாடத்திட்டத்தில் சேர்க்கவும் தகுதி உள்ளது, சகோ நிஜாம் அவர்கள் சொன்ன மாதிரி அவர்கள் வாழும் இடங்களில் நோட்டீஸ் அடித்து கொடுக்கவும் ஏற்றது.

இன்னும் வேண்டும் இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களே,அத்துடன் எல்லாரையும் சமமாய் பாவிக்கும் குரான்,ஹதீஸ் மேற்கோள்கள் தந்தால் மிக சிறப்பாக இருக்கும்.

அது போல riddles of rama and krishna என்ற ஆங்கில புத்தகம் இருக்கிறது.அது தி க (பெரியார் திடலில்)வினர் வெளியிட்டது,அதையும் ரெபர் செய்தால்,பார்ப்பன விஷத்தின் ஆழத்தை இன்னும் ஆராயலாம்.இதை எழுதியது டாக்டர் அம்பேத்க்கார்.

Noor Mohamed said...

காக்கா, உங்களின் ஏவுகணைத் திறனை மேம்படுத்திக் கொண்டே செல்கிறீர்கள். தொடரட்டும்!!!

//திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த வைக்கம் என்ற ஊரில் ஒரு போராட்டத்துக்கு வித்திட்டது. இந்த போராட்டத்தை நடத்தி, தடுக்கப்பட்டிருந்த அக்கிரகாரத்தெருக்களில் தாழ்த்தப்பட்டோரையும் இஸ்லாமியரையும் உடன் அழைத்துச்சென்ற இராமசாமிப் பெரியார் கைது செய்யப்பட்டு - சிறையில் அடைக்கப்பட்டு – ஆங்கில அரசு தலையிட்டு - அந்த தடை நீக்கப்பட்டு விடுதலையுடன் வெற்றி கண்ட காரணத்தால்தான் பெரியார் “ வைக்கம் வீரர் “ என்று அழைக்கப்பட்டார். //

சுதந்திர இந்தியாவிலிருந்து கணக்கிட்டால், வடக்கே ஆரம்பத்திலிருந்தே RSS இயக்கத்தின் அராஜகமும் அக்கிரமும் தலை விருத்தாடின. ஆனால் அந்த RSS தெற்கே தலையை நுழைக்க முடியாமல் தடைக்கல்லாய் திகழ்ந்தவர் வெந்தாடி வீரர் தந்தை பெரியார் என்றால் அது மிகையாகாது.

பலர் முன்னிலையில் பெரியார் இராமன் சிலையை செருப்பால் அடித்தார். கண்டதுண்டோ! கண்டதுண்டோ!! கல் உடைக்கும் பார்ப்பானை கண்டதுண்டோ!!! என மக்களை கர்ச்சிக்க வைத்தார். இவ்வாறு வீர தீர செயல் புரியும் ஆற்றல் இன்று யாருக்குமுண்டோ?! பெரியார் போன்ற தலைவர்கள் தொடர்ந்திருந்தால் இன்று ராமர் பாலம் எனற கற்பனை கதை வந்திருக்குமா?!!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இதுவரை அறியாத நாற்ற விசயங்கள்.
இதுகளை களைத்து மனிதன் ஆண் பெண் என்ற இரு பிரிவு மட்டும் இருந்தால் தான் அரசு உருப்படும்.
இருதலைகொள்ளியாக இருப்பது அரசு இன பிரிவினைக்கு வழிவகுப்பதாகவே தெரிகிறது.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். மனு நீதி யெனும் நீதம் இல்லாத அவாளின் வேதம் .அது சைத்தான் ஓதும் வேதம் , அதனால் மனித குலத்துக்குள் வகுத்தது வகுப்பு பேதம்! அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது என்பதை மிக அழகாய், ஆதரசுருதியுடன் அந்த குடும்பிகளின் குடும்பியை பிடித்து காக்கா ஆட்டும் விதம் அருமை! அருமை! தொடரட்டும் இந்த பணி, சுழலட்டும் சாட்டை இனி!

Unknown said...

பெயரிலும் தள்ளிவைக்கும் கொடுமை . இதை மனு நீதி என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை .தலித்துகளுக்கு வைக்கப்படும்
பெயர்களை பற்றி விளக்கம் எனக்கு புதியது .அதிர்ச்சியாகவும் இருந்தது எப்படி இதற்கெல்லாம் தலையசைத்து அடிபணிந்து வாழ்ந்தார்களோ ? அல்லது வாழ்கிறார்களோ ?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

வழக்கத்தை விட சற்று வீரியம் மிகுந்ததாக இருக்கிறது இபுறாஹிம் அன்சாரி காக்காவின் இவ்வாக்கம்.

கள்ளன், மறவன், இருளன், அகமுடையான், சக்கிலியன், பறையன், குறவன், துலுக்கன், திராவிடன், தமிழன் என்று அவன், இவன் என்று "ன்" வைத்து மரியாதைக்குறைவாக பிற மத,சாதி இனத்தவர்களை அழைத்து மகிழ்ந்த ஆரிய இனம் அவன் பெயருக்கு மட்டும் ஐயர் என இறுதியில் "ர்" வைத்து மரியாதையாக அழைத்து மகிழ்ந்து கொண்டான்.

பெரியார் வழி, அண்ணா வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட பணம், பதவி பலத்துக்காக ஆரியனிடம் சில வேளை பல்லிளித்து நின்று விடுகின்றனர். (அதனால் தான் என்னவோ? யார் யார் மேலே பாயும் கைது வாரண்ட் இதுவ‌ரை "கேடி" பிர‌த‌ர்ஸ் மீது பாய‌ வில்லையோ?)

நான் ஏற்க‌ன‌வே ப‌ல‌ இட‌ங்க‌ளில் குறிப்பிட்ட‌து போல், ந‌ம் நாட்டில் ப‌ர‌வ‌லாக‌ ஆரிய‌ர்க‌ளின் க‌ட்ட‌ளையில் அவ‌ர்க‌ளால் அடிமைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ த‌லித்/தீண்ட‌த்த‌காத‌வ‌ன் என‌ அழைக்க‌ப்ப‌டும் ச‌முதாய‌ம் நாட்டில் ந‌ட‌க்கும் ப‌ல‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ளில் அப்பாவி த‌ன் இன‌த்தையே/ஒத்த‌ க‌ருத்துடைய‌ ம‌த‌த்தின‌ர்க‌ளை கூட‌ க‌ருவ‌றுத்து த‌ன் இன‌த்திற்கு எதிரான‌ இன‌த்திற்காக‌ கூலிக்கு மார‌டித்து விடுகின்றான்.

கால‌மெல்லாம் இஸ்லாம் க‌டும் க‌ச‌ப்பைத்த‌ரும் வேப்ப‌ங்காயாக‌ தெரியும் இவ‌ர்க‌ளுக்கு என்று தான் அதில் புதைந்துள்ள‌ ம‌ருத்துவ‌ குண‌ங்க‌ள் விள‌ங்க‌ப்போகிற‌தோ? தெரிய‌வில்லை.

அப்துல்மாலிக் said...

//மாவீரன் திப்பு சுல்தான் தனது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களில் சாதிப்பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பெண்களும் மேலாடை அணியவேண்டுமென்று ஆணை பிறப்பித்தார்//

இதையெல்லாம் பள்ளி வரலாறு பாடப்புத்தகத்தில் பதியாமல் செய்திருக்கானுங்க, இதிலேயும் சாதீயம் ஒழிந்துஇருப்பதில் ஐயமில்லை

Yasir said...

//குடும்பிகளின் குடும்பியை பிடித்து காக்கா ஆட்டும் விதம் அருமை! // ரசித்”தே”ன்..சிரித்”தேன்”....உங்கள் எழுத்து எனக்கு தித்திக்கும் “தேன்”

Ebrahim Ansari said...

அன்பானவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

அனைவருக்கும் ஜசக்கல்லாஹ் ஹைரன்.

தம்பி சபீர் அவர்களுடன் பேசி நாளாகிறது. கொசு ஆக்கத்துக்கு நீங்கள் போட்ட பின்னூட்டம் கண்டு கோபப்பட்ட ஒரு கொசு கடித்துவிட்டதாக சொன்னார்கள். காய்ச்சலுக்கு கவிஞரும் தப்பவில்லையா? நலமா?

தம்பி அர.அல. தங்களின் அன்பான ஆலோசனைக்கு நன்றி. தொடர் முடியும்போது ஒப்பீடுகளும் நிச்சயம் இருக்கும். இடையில் கலந்து எழுதும்போது அத்தியாயம் நீண்டுவிடும் என்பதால் குர்-ஆன், ஹதீஸ், இஸ்லாமிய வரலாற்று சம்பவங்களை சேர்த்து எழுதவில்லை. இதன் நோக்கமே அழைப்பு விடுதல்தான். அதற்கு ஏற்றபடி முழுமை பெறும்போது அமையும். இன்ஷா அல்லாஹ்.

தம்பி நெய்னா அவர்களின்

//ந‌ம் நாட்டில் ப‌ர‌வ‌லாக‌ ஆரிய‌ர்க‌ளின் க‌ட்ட‌ளையில் அவ‌ர்க‌ளால் அடிமைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ த‌லித்/தீண்ட‌த்த‌காத‌வ‌ன் என‌ அழைக்க‌ப்ப‌டும் ச‌முதாய‌ம் நாட்டில் ந‌ட‌க்கும் ப‌ல‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ளில் அப்பாவி த‌ன் இன‌த்தையே/ஒத்த‌ க‌ருத்துடைய‌ ம‌த‌த்தின‌ர்க‌ளை கூட‌ க‌ருவ‌றுத்து த‌ன் இன‌த்திற்கு எதிரான‌ இன‌த்திற்காக‌ கூலிக்கு மார‌டித்து விடுகின்றான்.// என்கிற கருத்து மிகவும் கவனிக்கத் தக்கது.

இதற்கும் காரணம் மூளைச்சலவையே.தொடர் முடிவுறும் முன்பு தங்களின் இந்த கருத்தும் சேர்த்து இன்ஷா அல்லாஹ் விவாதிப்போம்.

அன்புத் தம்பி ஜாகீர்! என்னை திருச்சி சிறையில் பச்சை வாழைப்பழமும், மேரி பிஸ்கட்டும் , உளுந்து வடையும் வாங்கிக்கொண்டுவந்து தந்து பார்க்க ஆசையா? இப்போது நடைபெறும் ஆட்சியில் நீங்கள் இப்படியெல்லாம் எழுதினால் என் மேல் நில மோசடி வழக்கு நிச்சயம்.

மருமகன் யாசிர்! போகரைன் இயந்திரம் இன்னும் கொஞ்ச நாட்களுக்குத் தேவைப்படுகிறது. தம்பி சபீர் அவர்களிடம் கூறி இன்னும் நல்ல ஹெவியாகத் தர சிபாரிசு செய்யுங்கள். இனிதான் ஆழ உழுவது இப்போதுவரை அகலத்தான் உழுது இருக்கிறோம்.

தம்பி நூவன்னா . என்றும் உங்களோடும் உங்களின் அன்போடும்.

அப்துல் மாலிக்/ சா ஹமீது/ ஹார்மிஸ்/MHJ அனைவரின் ஆர்வமூட்டளுக்கு நன்றி.

பேரன்பு மிக்க ஜணாப். சித்தீக் அவர்கள் கூறி இருப்பது போல் பல இடங்களில் நடக்கின்றன. ஆனாலும் நாம் எவ்வளவுதான் அந்த மக்களுக்காக வரிந்து கட்டி எழுதினாலும் நம்மை அன்னியராகவே பார்த்து - நெய்னா அவர்கள் குறிப்பிட்டு இருப்பதைப்போல் - நம்மை எதிர்த்தே அணி திரளுகிறார்கள். ஆனாலும் நாம் அழைப்பு விடுவது என்ற குறிக்கோளில் எழுதுகிறோம். சங்கு ஓதுவோம். விடியும்வரை காத்து இருக்கலாம்.

தம்பி கிரவுன்! குடுமியைப் பிடித்து ஆட்டி கை வலிக்கிறது. ஜாகீர் இடம் கூறி ஒரு பாட்டில் கிளிச்சாப் தைலம் அனுப்ப சொல்லுங்கள்.

வஸ்ஸலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு