Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தலைபோகிற விஷயம்! தடுப்பது யார்?. 5

அதிரைநிருபர் | July 25, 2011 |


பெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும் புதிய பெயரையும் அரசு கெஜட்டில் வெளியிட்டால்தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒரு முறை அரசிதழ் (Gazette) ஒன்றை வெளியிட்டுவருகிறது. இதன் விலை ரூ. 30.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஜூலை (13) - 2011 கெஜட்டை (Part VI - Section4) அண்மையில் பார்க்க நேர்ந்தது. இதில் பெயர் மாற்றங்கள் மட்டுமன்றிமதமாற்றங்கள் பற்றிய அறிவிப்பும் காணப்படுகிறது.
ஜூலை (13) - 2011 இதழில் பெயர் மாற்றம் செய்துகொண்டோர் சுமார்1330 பேர். இவர்களில் மதம் மாறியோர் 106 பேர். அதன் சுருக்க விவரம் வருமாறு:
  • இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியோர் 38 பேர். இது மதம் மாறியோர் எண்ணிக்கையில் 35.84% விழுக்காடு ஆகும்.
  • இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 31 பேர். இது    மொத்தத்தில் 29.24% விழுக்காடு ஆகும்.
  • இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறியோர் 5 பேர். இது 4.71% விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியோர் 18 பேர். இது 16.98% விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 3 பேர். இது 2.83% விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து புத்த மதம் சென்றோர் 2 பேர். இது 1.88% விழுக்காடு.
  • இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்கள் 8பேர். இது மொத்தத்தில் 7.54% விழுக்காடு.
  • இஸ்லாத்திலிருந்து கிறித்தவம் சென்றவர் ஒருவர். இது 0.94% விழுக்காடு.
    இவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள்இருவர் வேறு மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறிபின்னர் மதம் மாறியவர்கள் என்று தெரிகிறது.

    இன்னொரு விவரம்: மதம் மாறிய இந்த 106 பேரில் இந்து மதத்திலிருந்து விலகியோர் 74 பேர்அதே நேரத்தில்இந்து மதத்திற்கு திரும்பியோர் அல்லது புதிதாகச் சேர்ந்தோர் 26 பேர். மீதி 48 பேர் இந்து மதத்தைத் துறந்துள்ளனர்.

    கிறித்தவத்திலிருந்து வேறு மதம் சென்றவர்கள் மொத்தம் 23 பேர். வேறு மதங்களிலிருந்து கிறித்தவத்திற்கு வந்தோர் 39 பேர். ஆக, 16 பேர் அதிகமாகியுள்ளனர்.

    இஸ்லாத்திலிருந்து வேறு மதம் மாறியோர் 9 பேர். புதிதாக இஸ்லாத்தில் இணைந்தோர் 34 பேர். ஆக, 25 பேர் அதிகமாகியுள்ளனர்.

    ஏன் மாறினர்?
    இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கும் கிறித்தவ மதத்திற்கும் சென்ற அந்த 9 பேர் ஏன் சென்றனர்அவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்களாயிற்றே! காரணம் என்னபெற்றோர்களும் சமுதாயமும் தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டிய விஷயமல்லவா இதுஅதிகாரபூர்வமாக அரசிதழின் ஒரு வெளியீட்டில் தெரிந்த எண்ணிக்கைதான் இது. வெளியுலகுக்குத் தெரியாமல் நடக்கின்ற மாற்றங்கள் எத்தனையோ!

    பெரும்பாலும் இந்த மாற்றங்களுக்குக் காரணம் காதல் வலையில் சமுதாய இளவல்கள் சிக்கித் தவிப்பதுதான். கல்லூரிகள்விடுதிகள்,அலுவலகங்கள் ஆகிய ஆண் - பெண் கலப்புள்ள இடங்களில் நம் பிள்ளைகளும் சுதந்திரமாகப் பழகிவருகின்றனர். இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டுகாதல் என்ற பெயரில் எல்லாவற்றையும் இழக்கத் துணிந்துவிடுகின்றனர். இது ஒரு வரட்டுத் துணிச்சல் என்பது திருமணத்திற்குப் பின்போகற்பை இழந்ததற்குப் பின்போதான் அந்த இளசுகளுக்குத் தெரிகிறது. அதற்குள் காரியம் கைமீறிப்போயிருக்கும்.

    பெற்றவர்கள்உடன்பிறந்தவர்கள்உறவினர்கள்சமுதாயம்ஏன் விலைமதிக்க முடியாத ஈமானையே தூக்கியெறியத் துணியும் இன்றைய இளவல்கள் யாரைப் பற்றியும்எதைப் பற்றியும் யோசிக்கத் தயாராயில்லை. காதல் மயக்கம்அதில் கிடைக்கும் தாற்காலிக சுகம்,சிறகடித்துப் பறக்கும் பக்குவமில்லாத பருவம்நண்பர்கள் தரும் ஊக்கம்,சினிமாத்தனமான ஹீரோயிஸம்... எல்லாம் சேர்ந்து எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகின்றன.

    பெற்ற தாயும் தந்தையும் புத்திர சோகத்தால் அழுது புலம்பிவெளியே தலைகாட்ட முடியாமல் கூனிக் குறுகிஅணுஅணுவாகச் செத்துக்கொண்டிருப்பதோஉற்றார் உறவினர் பரிதவிப்பதோ,சமுதாயத்திற்கு ஏற்படும் தலைகுனிவோ எதுவும் காதல் போதையில் இருக்கும் அவர்களின் கண்களில் படுவதில்லை. குறைந்தபட்சம்,தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இதே பாணியைக் கையாண்டால்,தங்கள் நிலைமை என்னவாகும் என்பதைக்கூட இந்த விடலைகள் எண்ணிப்பார்ப்பதில்லை.

    இதையெல்லாம் காதலுக்குச் செய்யும் தியாகம்‘ என இவர்கள் சினிமா வசனம் பேசுகிறார்கள். சினிமாநடைமுறைக்கு ஒத்துவராது என்பதும் இவர்களுக்கு உறைப்பதில்லை. மூன்று மணிநேர பொழுதுபோக்குக்காக,எதார்த்தங்களுக்கு எதிரான கற்பனைகளைக் கலந்து இளசுகளை நாசமாக்கிக்கொண்டிருக்கும் திரையுலகத்தினருக்குச் சிறிதளவேனும் மனசாட்சியும் சமூக அக்கறையும் இருக்க வேண்டும். பணம் மட்டுமே கோலோச்சும் அந்த உலகில் குணத்தை எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்.

    அடிப்படை கோளாறு
    பெற்றோர்கள்தம் பிள்ளைகளைக் கஷ்டமே தெரியாமல் செல்லமாக வளர்க்கிறார்கள்கடன் பட்டாவது படிக்கவைக்கிறார்கள்மக்களின் மனம் நோகாதுகேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்கொஞ்சம் வளர்ந்தவுடன் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்கிறார்கள்.

    ஆனால்பாலுக்கும் பாய்ஷனுக்கும் வித்தியாசம் சொல்லி வளர்த்தவர்கள்பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் வித்தியாசம் சொல்லி வளர்க்கவில்லையே! மார்க்கத்தின் அறநெறிகளைச் சொல்லி வளர்க்க வேண்டிய அவர்கள்மேலை நாட்டு நாகரிக்கத்தையல்லவா புகட்டுகிறார்கள்!

    இதனால்நம் இளைய தலைமுறையினரிடம் வெட்கம்மானம்ஒழுக்கம் ஆகிய மாண்புகள் எல்லாம் கேலிப்பொருட்களாகத் தெரிகின்ற பரிதாப நிலைதான் காணப்படுகிறது. தொழுகைதிக்ர்நோன்புநல்லுரைகள் கேட்பதுநல்ல பழக்கவழக்கங்கள்நபிவழிநல்ல நண்பர்களுடனான பழக்கம் - இவற்றையெல்லாம் சொல்லி வளர்க்காத வரை உங்கள் மக்கள் செல்வம் உங்களுக்குச் சொந்தமில்லை.

    மதமாற்றத்திற்கு வறுமையும் ஒரு காரணம்தான். வறுமையால் ஈமானையே இழக்கத் துணிகின்ற ஒருவரிடம்அந்த ஈமான் ஆழமாகப் பதியவில்லை என்பதுதான் பொருள். இதற்கும் பெற்றோரே காரணம்! சிறுவயதிலேயே இஸ்லாத்தைக் கற்பிக்க வேண்டும்! ஈமானின் அவசியத்தை உணர்த்த வேண்டும்! மறுமையைப் பற்றிய சிந்தனையை ஊட்ட வேண்டும்!

    அத்துடன்வறுமைக் கோட்டிற்குக் கீழே மூச்சுவிட முடியாமல் திணறும் குடும்பங்களைக் கண்டறிந்துஅவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற மஹல்லா ஜமாஅத்கள்இஸ்லாமிய அமைப்புகள்இளைஞர் மன்றங்கள் பாடுபட வேண்டும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் நம் பிள்ளை தானே வளரும்! இறைவன் வளர்ப்பான்!

    ஆகமதமாற்றம் என்பது சமுதாயத்தின் அழிவுக்கு அடிகோலும்;கலாசாரச் சிதைவுக்கு வழிகோலும்நம் இருப்பையே கேள்விக் குறியாக்கிவிடும்! சம்பந்தப்பட்ட அனைவரும் இதன் தீவிரத்தை உணர்ந்துஉடனடியாகச் செயல்பட முன்வர வேண்டும்!


    தமிழ்நாடு அரசிதழில் வெளியானவர்களின் பெயர்விவரம்
     
     
     

    5 Responses So Far:

    m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

    ஒட்டு மொத்தமாக பெற்றோர் மட்டுமே இதற்கு காரணமல்லவே !

    கூடா நட்பும் மிக முக்கிய ஒரு காரணமும் ஆகும்.

    அடிப்படியிலேயே மார்க்க உணர்வுகளை வேறூண்ட தவறிய அனைவரும் இதற்கு பொறுப்பாளிகள்.. பெற்றோர், ஊர் காரர்கள், மார்க்கம் அறிஞர்கள் இன்னும் நிறைய...

    காலத்தையும் சூழலையும் எத்தனை நாட்களுக்கு முட்டி மோதி குறை சொல்லிக் கொண்டிருப்பது !?

    பெயர் தாங்கி முஸ்லீமாக இருக்க விட்டது யார் !?

    M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

    இஸ்லாத்தில் இணைவோர் எண்ணிக்கை அதிகமென்றாலும் வெளியேறும் சிலரை நினைக்கும் போது அதிர்ச்சியைத்தான் தருகிறது.ஆண்டவன் காப்பாத்தனும்.

    வறுமையை விட கல்விமுறை, காதல் இவை இரண்டும் முக்கிய காரணியாக உள்ளது.

    பிள்ளைகளுக்கு முழு ஈமானை விளங்கச் செய்து வளர்ப்பதற்கு தகுந்தவாறு தான் அந்தப் பிள்ளைகளைக்கொண்டு பலனை பெறமுடியும்.

    ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி குறிப்பாக பெண்ணுக்கு முழுமையான ஈமானுடன் கூடிய கல்வி கடைசிவரை கிடைக்கும்படியாக இருக்க வேண்டும்.

    சிந்தனைக்கு:படிப்பு என்ற ஒரே காரணத்திற்காக சென்னையில் அடைக்கலம் புகுந்த நம்மில் எத்தனை பேர் இஸ்லாமியப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளனர்?

    crown said...

    M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…

    இஸ்லாத்தில் இணைவோர் எண்ணிக்கை அதிகமென்றாலும் வெளியேறும் சிலரை நினைக்கும் போது அதிர்ச்சியைத்தான் தருகிறது.ஆண்டவன் காப்பாத்தனும்.

    வறுமையை விட கல்விமுறை, காதல் இவை இரண்டும் முக்கிய காரணியாக உள்ளது.

    பிள்ளைகளுக்கு முழு ஈமானை விளங்கச் செய்து வளர்ப்பதற்கு தகுந்தவாறு தான் அந்தப் பிள்ளைகளைக்கொண்டு பலனை பெறமுடியும்.

    ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி குறிப்பாக பெண்ணுக்கு முழுமையான ஈமானுடன் கூடிய கல்வி கடைசிவரை கிடைக்கும்படியாக இருக்க வேண்டும்.

    சிந்தனைக்கு:படிப்பு என்ற ஒரே காரணத்திற்காக சென்னையில் அடைக்கலம் புகுந்த நம்மில் எத்தனை பேர் இஸ்லாமியப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளனர்?

    Mohamed Meera said...

    பட்டியலை கவணியுங்கள் மாறிய சிலர் ,வந்த இடத்திற்கே சென்றுள்ளார்கள்.

    நம்மை போன்றவர்கள், இஸ்லாதிற்கு அழைப்பு விடுக்கின்றோம், வந்தவர்களை கணிக்கின்றோமா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். நம் இஸ்லாமிய மார்க்கத்தில் சமதுவமும் ,சகோதரத்துவோம் எல்லாம் இருக்கின்றது, ஆனால் பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் பலரிடம் (குறிப்பாக நம்ம மாவட்டம் ) இது எல்லாம் வாய் அளவில் மட்டுமே உள்ளது?

    குடும்பத்தை துறந்து இஸ்லாத்தை நோக்கி வரும் மற்றுமத சகோதரிகள்/சகோதரர்களுக்கு,என்ன மாதிரியான உதவிகளை நாம் செய்துவிட்டோம்? ( சில அமைப்புகள் உதவி செய்கின்றார்கள்)

    மற்றும் சிலர், காதலுக்காக மாறிய காம கலுச்சடைகள்.

    நம் சமுதாய சமூக ஆர்வலர்களால் கவணிக்கபடாமல் பெரும் தொகையானா இஸ்லாமிய சமுகத்தினர் உள்ளார்கள் !! அவர்களிடம் சரியான மார்க்கத்தை கொண்டு சேர்க்காமல் இன்னும் உள்ளோம். என்பது கவலை கொள்ளவைக்கின்றது.

    இது போன்ற பதிவுகள், பொது பதிவாக வராமல்.
    மின்னஞ்சல் சுற்றுக்குள் வருவது தான் நல்லது. என்பது என் தனிப்பட்ட கருத்து.

    Ameena A. said...

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

    சகோதரர்களுக்கு,

    பொதுவில் அதிகம் விவாதிப்பதை தவிர்த்து, நம்முடைய செயல்களாலும் இறையச்சத்துடன் கூடிய அமல்களாகும் இம்மக்களை நன்னெறியின் பக்கம் மீள்வதற்கு முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்.

    உமர் தமிழ் தட்டசுப் பலகை



               

     

    உமர் தமிழ் தட்டசுப் பலகை

    தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

    நபிமணியும் நகைச்சுவையும்

    உமர் தமிழ் தட்டசுப் பலகை

    மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

    Linked to ஊடக போதை

    அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு