Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கிரிமினல் சமூகமாகும் இளம் தலைமுறை - ஓர் ஆய்வு 12

அதிரைநிருபர் | July 05, 2011 | , ,

ஒரு ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்ட கட்டுரை இளைய சமூகத்தை குறை சொல்வதற்கல்ல, சரி செய்வதற்காக..

பிறக்கும்போதே யாரும் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. வளர்ப்பும் சூழ்நிலையும் தான் அவர்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாற்றுகிறது. பின் நாட்களில் அதுவே அவர்களது வாழ்க்கையின் அடையாளமாகவும் மாறிவிடுகிறது.
இளம் ரத்தம் பயமறியாது என்பார்கள் உண்மைதான். சில குழந்தைகள் செய்யும் செயல்கள் கிரிமினல் குற்றவாளிகளையே அதிர வைத்து விடுகின்றன. அந்தளவுக்கு இன்றைய புதிய தலைமுறையினரில் சிலர் ‘பிளான் பண்ணிகொலை செய்யத் துணிகின்றனர். செல்போன் வாங்க ஆசைப்பட்ட சக மாணவனைக் கடத்தி பணம் கேட்டதும் கொடுக்க மறுத்ததால் அவனை கொன்று கூறு போட்டதும் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த பயங்கரம்.

து, இது என்று எந்த வரையறையும் இல்லாமல் கைதேர்ந்தவாகள் செய்யும் எல்லாவிதமான குற்றங்களிலும் இன்றைய புதிய தலைமுறை இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 14 வயது வரை உள்ளவர்களைக் குழந்தைகள் என்று சொல்லும் நமது சட்டம் தான் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் தவறிழைக்கும்போது அவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாமல் இளம் குற்றவாளிள் என்று சொல்லுகிறது. அதேநேரத்தில் அவர்களை மிகவும் கவனத்துடன் பார்க்கிறது. மற்றவர்கள் குற்றம் செய்து நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை, மரண தண்டனை என்கிறது சட்டம் 18 வயதிற்குட்பட்டவர்களை விவரம் அறியாத பருவத்தினராகக் கருதிஇ சிறுவர் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறது. ஆனால் பெரும்பாலான கூர்நோக்கு இல்லங்கள் அந்த இளம் குற்றவாளிகளைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக அடிமைகளாகவே நடத்துகின்றன. இதனால் அவர்கள் மென்மேலும் கிரிமினல்களாவதற்கே வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

நாட்டில் நடைபெறும் குற்றங்களில் 2 சதவீதக் குற்றங்கள் இளம் குற்றவாளிகளால் செய்யப்படுபவை. இந்த குற்றங்கள் இரண்டு வகையாக நடக்கின்றன. ஓன்று சம்பந்தப்பட்ட குற்றவாளியின் விருப்பம் இரண்டாவது தேவையின் அடிப்படையில் நடைபெறுபவை. மற்றவை சமூக விரோதிகள் அல்லது குடும்பத்தினர் தூண்டுதலின் போல் நடைபெறுபவை. எப்படியிருந்தாலும்; அதற்கு சூழ்நிலைகளும், குடும்பமும் முக்கிய காரணமாக அமைகின்றன. எனவே இளம் குற்றவாளிகளின் குற்றங்களுக்குப் பின்னால் மற்றவர்களின் செயல்பாடுகளும்,தூண்டுதலும் இருக்கின்றனஎன்கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.

குறிப்பாக இளம் குற்றவாளிகள் உருவாவதில் குடும்பத்தினர். உறவினர் ஆகியோர் அதிக பங்கு வகிக்கின்றனர். மற்றும் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்தும் நெருக்கடி என்பது இன்னொரு அதிர்ச்சி தகவல். அதேநேரத்தில் குடும்ப பொருளாதாரமும் குற்றம் நடப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

திருட்டுக் குற்றங்களில் அதிக அளவில் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 80 சதவீத திருட்டுக்கள் மற்றவர்களின் தூணடுதலின் பேரில் மற்றவர்களுக்கு துணை நின்றதால் நடந்தவை. 2007 ஆம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 5606 திருட்டுக்கள் இளம் குற்றவாளிகள் மூலம் நடைபெற்றுள்ளனர்.

இன்னொரு அதிர்ச்சி தகவல்

2007ம் ஆண்டு மட்டும் 672 கொலைகள் நடந்துள்ளன. இதில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முதல் இடம். அதாவது 141 கொலைகள. அடுத்து மத்திய பிரதேசம். தமிழ் நாட்டிற்கு 10வது இடம். 28 கொலைகள்தான் என்பது சற்று ஆறுதல்! 746 கற்பழிப்புகளுக்கு துணை போயுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தில் ஈடுபட்டதாக 1400 சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதர சட்டங்களில்

ஆயுதங்கள் ,போதைப்பொருள்,சூதாட்டம், சாரயம் விற்பனை என 22க்கும் அதிகமான குற்றங்களில் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில் எல்லாம் இளம் குற்றவாளிகள் ஒரு கருவியாகப் பயன்படுகின்றனர்.

2007ம் ஆண்டில் நடந்த இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்கள் இதர சட்டங்களின் கீழ் 4163 வழக்குகளும். 2008ம் ஆண்டில் 3156 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில்

தமிழகத்திலும் இளம் குற்றவாளிகளால் அரங்கேறிய குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகாத்து வருகின்றன. 2006 முதல் 2008 வரையில் பதிவான குற்ற விவரங்களை மாநில குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ளது.
2009 ஆண்டின் குற்றங்கள் தொகுப்பட்டு வருகின்றன.

குற்றம்
2006
2007
2008
கொலை
23
38
26
கொலை முயற்சி
18
17
17
கற்பழிப்பு
8
13
7
கடத்தல்
0
4
3
பெண் கடத்தல்
0
2
3
வீடு புகுந்து திருட்டு
1
14
3
வழிப்பறித்திருட்டு
6
1
13
கொள்ளை
119
138
106
திருட்டு
304
387
410
ஆட்டோ திருட்டு
44
56
56
வன்முறை
6
26
23
அடிதடி
41
32
158
மானபங்கம்
5
2
5
பாலியல் தொந்தரவு
5
0
0
அலட்சியம் காரணமாக
--------
---------
----------
ஏற்படுத்திய உயிரிழப்பு
78
0
6
மற்ற குற்றங்கள்
29
65
75
மொத்தம்
687
805
911


ஆண்டுதோறும் அதிகரிக்கும் இளம் குற்றங்கள்

நகத்திலும், குடும்ப உறவுகளிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்கள் விவரம்
1998
9352
1999
8888
2000
9267
2001
16, 509
2002
18,560
2003
17,819
2004
19,229
2005
18,939
2006
21,088
2007
22,865
2008
24,535

2009ம் ஆண்டிற்கான குற்றப்பட்டியல் தொகுக்கபட்பட்டு வருகின்றன

குற்றவாளிகளில் சிறுவர், சிறுமியர்

தேசிய அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகள் எண்ணி;க்கை கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகாத்துள்ளது. சிறுமிகளின் எண்ணிக்கை 3 மடங்கு குறைந்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறுவர் இ சிறுமிகள் 12 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள்.

ஆண்டு
சிறுவர்கள்
சிறுமிகள்
மொத்தம்
1998
13974
4949
18,923
1999
13088
5372
18,460
2000
13874
4128
17,982
2001
31295
2133
33,628
2002
33551
2228
35,779
2003
30985
2335
33,320
2004
28878
2065
30,943
2005
30606
2075
32,681
2006
30375
1770
32,145
2007
32671
1856
34,527
2008
32795
1712
34,507

2009ம் ஆண்டுக்கான குற்றப்பட்டியல் தொகுக்கப்பட்டு வருகின்றன.

அன்பானவர்களே !

ஏதோ பார்வைக்கு பங்கு மார்க்கெட் புள்ளி விபரங்கள் போல் தெரியலாம். எங்கோ தவறு நடந்துவருகிறது எனபது மட்டும் உண்மை. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை வளர்ப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த பதிவை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறோம். இந்த அருமையான எச்சரிக்கையூட்டும் பதிவை எழுதிய பதிவருக்கு மிக்க நன்றி.

-- அதிரைநிருபர் குழு.

12 Responses So Far:

Yasir said...

அதிர்ச்சி அளிக்ககூடிய புள்ளி விபரங்கள்...இளம் கன்று பயம் அறியும் அவருக்கு சமுதாய சிந்தனைகள், சமுதாய நடப்புகள் முறைப்படி பெற்றோர்களால்/வளர்ப்பவர்களால் ஊட்டப்பட்டால்

Yasir said...

//ஆண்டுதோறும் அதிகாக்கும் இளம் குற்றங்கள்// அ.நி...”ர” வை போட்டு ஒரு கொம்மை வைத்து விடுங்களேன்...நல்ல இருக்கும்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//ஆண்டுதோறும் அதிகாக்கும் இளம் குற்றங்கள்// அ.நி...”ர” வை போட்டு ஒரு கொம்மை வைத்து விடுங்களேன்...நல்ல இருக்கும்///

சொல்லிகிட்டு இருக்கும்போதே செய்தாச்சுல ! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்று மாலை அசத்தல் காக்காவோடு பேசிகிட்டு இருக்கும்போது பெற்றோர்களின் வளர்ப்பு பற்றி விமர்சனமாக பேசிக் கொண்டிருந்தோம்... ! இப்பதிவு ஏதோ வாக்குகள் எண்ணிக்கை புள்ளிவிபரப் பட்டியல் என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாது.

தொலைக்காட்சியில் கானும் நிகழ்வுகள் கற்பனைக் கதைகளின் கதாபாத்திரங்கள் வீட்டு வரவேற்பரை என்று போய் இன்று உறங்கும் தனியரை வரை தனித் தனி தொலைக்காட்சிப் பலகைகள். இவைகள் அனைத்திறுகும் குறிப்பிட்ட நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் திரைபோட வேண்டும் நித்திரைக்குச் செல்லும் வரை அதன் திரைதான் கண்களின் திரைகளை மூடவைக்கிறது இன்றைய இளம் சிறார்களுக்கும் / பெரியோர்களுக்கும்.

கல்வி மாநாட்டில் சகோதரர் CMN-சலீம் அவர்கள் அழுத்தமாக சொன்னது இதைத்தான் "மார்க்கக் கல்வியோடு அடிப்படை உலகக் கல்வியும்" என்று பிரித்துப் பார்க்காமல் ஒன்றாக ஒரே கல்வியாக சிறார்களுக்கு அரம்பத்திலிருந்தே ஊட்டப்பட வேண்டும்.

பழைய (வழி)மொழிதான் "பெண்னைப் பெற்றால் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும்" என்றுபோய் ஆனால் இன்றோ பெண்ணை மட்டுமல்ல ஆண்/பெண் பிள்ளைகளை பெற்றதன் நிலை இதுதான் பெற்றோர்களின் மத்தியிலே அச்சம் எழுந்திருப்பது நிதர்சனமே!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//நகரத்திலும், குடும்ப உறவுகளிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.//

மேலே சொல்லப்பட்ட புள்ளி விபரங்கள் 2008ம் ஆண்டு வரை மட்டுமே என்றாலும், குடும்ப உறவுகளில் ஏற்படும் மாற்றங்களும் பிரச்சினைகளினால் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்.

மேலும் புள்ளிவிபரங்களை காணும் போது இளம் பெண் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது என்பது வரவேற்படவேண்டிய செய்தியாக இருந்தாலும், இளம் ஆண் குற்றவாளிகளின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது தான் மிக வேதனை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஆயுதங்கள் ,போதைப்பொருள்,சூதாட்டம், சாரயம் விற்பனை என 22க்கும் அதிகமான குற்றங்களில் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில் எல்லாம் இளம் குற்றவாளிகள் ஒரு கருவியாகப் பயன்படுகின்றனர்.//

மிகவும் எச்சரிக்கையூட்டும் தகவல். வெளியூர்களில் சுதந்திரமாக படிக்க அனுமதிக்கப்பட்டுள்ள இளம் மாணவர்களை பெற்றவர்கள் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம் என்பது இந்த பதிவின் மூலம் நமக்கு உணர்த்தபடுகிறது என்பது என்னவோ உண்மைதான்.

ZAKIR HUSSAIN said...

இப்போது எல்லா ஊரிலும் நிரம்பி வழியும் சாராயமும் [ அல்லது எந்த பிரான்ட் மதுவும்], சில வயது வரும்போது தெரிய வேண்டிய விசயங்கள் மிக ஈசியாக கிடைக்கச்செய்யும் ஊடகமும், கேட்ஜெட்களும், பணம் சம்பாதிக்காதவர்கள் கையில் அளவுக்கு அதிகம் புழங்குவதும் குற்றவாளிகள் பெருக மிகப்பெரிய காரணங்கள்.

வளர்ப்பு சரியில்லை என்றால் பல வருடம் சேர்த்துவைத்த கெளவுரமும் ஒரு நொடியில் நாறிப்போய்விடும்.

sabeer.abushahruk said...

இப்பவே கண்ணக் கட்டுதே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா: நலமா ? எங்கே இப்போ !

sabeer.abushahruk said...

அமீரகம் திரும்பியாயிற்று அபு இபுறாகீம். நாளை அழைக்கிறேன். அ.நி.யின் பதிவுகள் சில வாசிக்க விடுபட்டிருக்கிறது. பயணக் களைப்பு நீங்கியபின் வாசிக்க வேண்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அட்டவணைத் தகவல்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவை.
அதிரைக்கும் அட்டவணைக்கும் அறவே சம்பந்தமில்லாமல் ஆண்டவன் பாதுகாக்கனும்.நாமலும் இறை அச்சத்தை முழுக்க பேணணும்.

அப்துல்மாலிக் said...

அதிர்ச்சியான தகவல்... பகிர்வுக்கு நன்றி
இது சம்பந்தமாக நான் எழுதியது கீழே...

குழந்தை வளர்ப்பு என்பது

கம்பி மேல் நடக்கும்

குரலிவித்தையில்லை

எப்படிவேனாலும் வளரலாம் (மேலும்...)

http://buafsar.blogspot.com/2011/06/blog-post_28.html

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு