Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வியும் கற்போர் கடமையும் ! - குறுந்தொடர் - நிறைவு 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2011 | ,

மனனம் செய்தல்:

தேர்வுக்காகப் படிக்கும் போது மனப்பாடம் செய்வது நல்லதா ? பல்வேறு பாடங்களிலுள்ள நூற்றுக் கணக்கான செய்திகள் அத்தனையும் மனப்பாடம் செய்வது எளிதான செயலன்று. அவற்றை மனனம் செய்வதற்கு அதிகமான நேரம் தேவைப்படலாம். இதனால் பல செய்திகள் மனனம் செய்ய முடியாமல் விட்டுப் போகலாம். அப்படியே எல்லாவற்றையும் மனனம் செய்திருந்தாலும் எந்த அளவு அவை நினைவில் நிற்கும் என்பது உறுதியல்ல. எனவே எல்லாவற்றையும் மனனம் செய்வது என்பது ஏற்கத்தக்கதல்ல. முக்கியமான சிலவற்றை மட்டும் மனனம் செய்வது தவறல்ல. குறிப்பாக கனிதம், அறிவியல், பாடங்களைல் உள்ள வரையறைகள் (diffiniations) சூத்திரங்கள் (formulas)வரலாற்றுப் பாடத்தில் வரும் வரலாற்று நிகழ்வுகள் நடந்த ஆண்டுகள், இடங்கள், மொழிப் பாடங்களில் இடம் பெறும் செய்யுள் வரிகள்,இதரப் பாடங்களில் இடம் பெற்றுள்ள பாட வல்லுநர்களின் மேற்கோள்கள் (Quotations) போன்றவற்றை மனனம் செய்து கொள்வது நல்லது. மற்ற பாடச் செய்திகளைப் படித்துப் புரிந்து மனதில் உள்வாங்கிக் கொண்டு தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தகுந்த முறையில் விடை எழுதுவதே சாலச் சிறந்தது.

நினைவாற்றல்

பொதுவாகக் கல்விக்கு - குறிப்பகத் தேர்வுக்கு நினைவாற்றல் என்பது மிக இன்றியமையா அம்சமாகும். படித்தவை நினைவில் நில்லாது போனால் தேர்வைச் செம்மையாகச் செய்ய முடியாது போய்விடும். நினைவாற்றலை வளர்க்க சில நடைமுறைகள், பயிற்சிகள் மிக உதவும். ஆண்டுத் தொடக்க முதலே தேர்வைக் கருத்தில் கொண்டுப் படிக்கத் தொடங்க வேண்டும். இவ்வாறின்றித் தேர்வுக் காலத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாகப் படிப்பது பாடத்தை மனதில் திணிப்பது போலாகிவிடும். இவ்வாறு திணிக்கப்படுபவை நிச்சயமாக நினைவில் நிற்காது அடுத்ததாக, படிக்கும் போது மனதை ஒருமுகப்படுத்துதல் (concentrations) அவசியம். தேவையற்ற விஷயங்களில் மனதை அலையவிடக்கூடாது. மனம் ஒரு பதிவு செய்யும் கருவி அது சிதைவடையும் போது பதிவு செய்ய இயலாது. மனம் சிதைவடையாது அதை ஒருமுகப்படுத்துவதற்கு தொழுகை அதாவது இறைவணக்கம் நல்ல பயிற்சியாக அமையும். எனவே தினமும் மாணவர்கள் படிக்கத் தொடங்கும் போதே இறைச் சிந்தனையோடும் பிரார்த்தனையோடும் தொடங்குவது நல்லது. அடுத்ததாக, படித்தவற்றை நினைவு படுத்திப் பார்க்க வேண்டும். படித்தவற்றை பல முறை எழுதிப் பார்ப்பது மிகுந்த பலனைத் தரும்.

செயல் முறை ஈடுபாடு:

சீனநாட்டுக் கல்வியாளர் ஒருவரின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கது. "பாடச் செய்திகளைச் சொல்லக் கேட்டேன்; உடன் மறந்து விட்டது;அச்செய்திகளைப் படித்தேன்; கொஞ்ச நேரம் நினைவில் நின்றது. அது பற்றிய செயல் முறையை (Experiment) உற்று நோக்கினேன்; இன்னும் கொஞ்ச நேரம் நினைவில் நின்று மறைந்தது; நானே அச்செயல் முறையில் ஈடுபட்டேன்; என்றும் மறக்காது நினைவில் நின்று விட்டது". கணிதப்பாடத்தை சுமையாகக் கருதும் மாணவர்களே இன்று அதிகம். அத்தகையோர் இச்சீனக் கல்வியாளரின் கூற்றை நினைவில் கொள்ள வேண்டும். வகுப்பில் ஆசிரியர் செய்து காட்டும் கணக்குகளைக் கவனித்தால் மட்டும் போதாது. அக்கணக்கையும் அதையொட்டிப் பயிற்சிக்ககத் தரப்பட்டுள்ள மற்றக் கணக்குகளையும் போட்டுப் போட்டுப் பார்க்க வேண்டும். அதமிழ்ல் இப்படி ஒரு பழமொழி உண்டு. 'மூட மூட ரோகம்; பாட பாட ராகம்; போட போட கணிதம்.

வேகமும் நுட்பமும்:

தேர்வு அறையில் அமர்ந்துத் தேர்வு எழுதுகின்ற நாம் மிக்க கவனத்துக்குரிய தருனமாகும். அத்தருனத்தில் தேர்வர்களிடம், வேகம், திட்பம் (speed and accuracy) இரு திறமைகளும் ஒருங்கே வெளிப்பட வேண்டும். தேர்வுக்காக அனுமதிக்கப்படும் 2 1/2 அல்லது 3 மணிநேரத்திற்குள் வேகமாகச் செயல்பட்டுக் கேட்கப்படும் எல்லா வினாக்களும் விடை எழுத வேண்டும். அதே நேரத்தில் விடைகள் பிழையின்றிச் சரியாக அமையுமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புற ஆற்றல்:

படிப்பைப் பூரித்தி செய்து விட்டுக் கல்விக் கூடத்தை விட்டு வெள்யேறும் நம்மை சமுதாயம் பல்கலை அறிந்த ஓர் அறிஞனாக அங்கீகரிக்க வேண்டும் என ஆசைப்படுவது தவறல்ல. அதற்காகப் படிக்கின்ற காலத்திலேயே பாடம் தவிர்த்த பல்வேறு கலைகளிலும் (exta-curricular activities) தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும். அவ்வகையில் எழுத்தாற்றல், பேச்சற்றல், பொது அறிவுத்திறன் முக்கியமானவை. கல்விக் கூடங்களில் அமையப் பெற்றுள்ள மாணவர் மன்றங்களை முழுமையாகப் பயண்படுத்திக் கொண்டு இத்தகைய திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்வது நலம் பயக்கும். இவை பிற்காலத்தில் சமுதாயத்தில் மிகச் சிறந்த அந்தஸ்த்தை பெற்றுத்தர வல்லவை.


ஆரோக்கியமான உடல் படைத்தோரே அறிவார்ந்த ஆற்றல்களை வெளிக் கொணர முடியும். ஆரோக்கியமான உடலுக்கு உடற்பயிற்சி அவசியம். கல்விக் கூடங்களிலுள்ள உடற்கல்விக் கழகம் மூலம் உடற்பயிற்சிலும்,, விளையாட்டுக்களிலும் ஆர்வத்தோடு பங்கேற்று உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். "சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும்" என்ற தமிழ் பொன் மொழியையும் "Saound mind in Sound Body" என்ற ஆங்கிலப் பொன் மொழியையும் மறந்து விட வேண்டாம்.

ஒழுக்கம்:

ஒழுக்கமே கல்வியின் உயர் நோக்கம் என்பதால் கல்வி கற்போர் ஒழுக்கத்தை உயிர் எனப் போற்ற வேண்டும். "ஒழுக்கத்தை ஊட்டாத கல்வி வேண்டாத ஒன்று" என்பது மாநபி(ஸல்) அவர்களின் மணிமொழி. கூர்மையான அறிவு படைத்தவனாயினும் சரி அவனிடம் மனிதப் பண்பு அறவே இல்லையெனில் அவன் ஓங்கி வளர்ந்த ஒரு மரத்துக்குத் தான் ஒப்பாவான் என்பதை

"அரம்போலும் கூர்மை ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்"

என்ற குறட்பா குறிக்கிறது. பெற்றோர்களுக்குப் பணிந்துப் பணிவிடை செய்தல், ஆசிரியர்களுக்குக் கீழ்படிதல், மூத்தோரர மதித்தல்,இளையோரிடம் அன்பு காட்டுதல், எளியோரிடம் இரக்கம் காட்டுதல், சம வயதினரிடம் நட்பு பாராட்டுதல், பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுதல் போன்றவை மாணவர்களை மாண்புறச் செய்யும் ஒழுக்க நெறிகளாகும்.

இறையச்சம்:

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கல்வியாளரிடம் இறையச்சமும், இறைபக்தியும் அவசியம் இருத்தல் வேண்டும். தான் நாடியவர்களுக்கே இறைவன் கல்விச் செல்வத்தை வழங்குகிறான் என்பதால் அவனுடைய அருளின்றி அச்செல்வத்தை முழுமையாக அடைய முடியாது. கற்றதன் பயன் இறைவனைத் தொழுதலே என்பதை

"கற்றதனா லாய பயனென்கொல் வாளறிவன்
நாற்றாள் தொழார் எனில்"

என்ற திருக்குறள் தெளிவுபடுத்துகிறது, அதுவே இறைவன் அவனுடைய திருமறையில் கூறுவதற்கிணங்க "எனக்குக் கல்வி அறிவை அதிகப்படுத்தித் தருவாயாக" என தினமும் அவனைத் தொழுது வணங்கி பிரார்த்தித்து நம்முடைய கல்வியறிவைப் பெருக்கிக் கொள்வோமாக.


SKM ஹாஜா முகைதீன் M.A. Bsc., BT.
 (முன்னால் தலைமையாசிரியர். கா.மு. மேல்நிலை பள்ளி, அதிரை)

10 Responses So Far:

அதிரை fact said...

நமதூர் சகோதரர்களின் இணைய தளங்களில் வெளிவரும் சிறந்த கட்டுரைகளோடு பிற இணைய தளங்களிலும் வெளியான பயனுள்ள கட்டுரைகளை "ADIRAIFACT" ல் உடனுக்குடன் காணலாம்.

sabeer.abushahruk said...

ஒரு பீரியட் உங்கள் வகுப்பில் இருந்த உணர்வு சார். பாடம்தான் கணிதத்திற்குப் பதில்; நீதி போதனை!

வாழ்க எங்கள் சார்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நிறைவான வகுப்பில் இருந்த திருப்தி...

உங்களின் அடுத்த பதிப்பாக இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பில் தங்களால் எழுதி வெளியான புத்தகத்தையும் அதிரைநிருபரில் வெளியிட அனுமதி தந்திருப்பதையும் அறிந்தோம்..

அதனையும் பதிவுக்குள் வெகுவிரைவில் வந்திட துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல பாடம் தேன்க்யூ சார்.
அடுத்த உங்களின் மேலான ஆக்கத்தொடர்களை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------

படித்து விட்டீர்களா ?

பள்ளி மாணவர்கள் படித்து பயன் பெரும் வகையில் பத்து கட்டுரைகள் அமைந்த ஓர் அற்புத நூல்.

என்றும் - எதிலும்
இஸ்லாம்


ஆசிரியர்
அல்ஹாஜ் S. K. M. ஹாஜா முகைதீன் M.A., B.Sc., B.T.

வெளியீடு
ஸலாமத் பதிப்பகம்
சென்னை - 1

முதல் பதிப்பு : நவம்பர் 2003

நூர் முஹம்மது / கதீப் - தமாம் / சவூதி அரேபியா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

நூர் முஹம்மது காக்கா உங்களின் நினைவாற்றல் வியக்க வைக்கிறது, அப்படியே அச்சு பிசகாமல் தெளிவாக எல்லா விபரங்களையும் பளிச்சென்று அன்றைய மாணவரைப்போல் கைதூக்கி எழுந்து நின்று சொல்லி விடுகிறீர்கள்

அல்ஹம்துலில்லாஹ் !

இன்ஷா அல்லாஹ் விரைவில் அந்த புத்தகத்தின் எழுத்துக்கள் இணைய கட்டுரைகளாக அதிரைநிருபரில் வெளிவர இருக்கிறது.

அப்துல்மாலிக் said...

பகிர்வுக்கு நன்றி சார், உடல் ஆரோக்கியத்தை கொடுத்து மேலும் நம் சமுதாயத்துக்கு நல்லது செய்ய என் துஆ

Anonymous said...

சார் மீண்டும் பள்ளிக்கூடம் வந்து சென்ற சந்தோஷம் உங்களின் கட்டுரையை வாசித்ததும்.

கடலோரக் கவிதைகள், பள்ளிக்கூடம் என்ற திரைப்படங்களெல்லாம் பள்ளிக்கூடத்தை மையமாக வைத்து வந்த திரைப்படங்கள் ஆனால் அங்கே பள்ளிக்கூடம் ஞபகத்தில் வரவில்லை, ஆனால் உங்களைப் பற்றிய கட்டுரையிலும் சரி நீங்கள் எழுதிய கட்டுரையிலும் எங்களின் பள்ளிக்கூடம் நினனவில் வந்து நிற்கிறது.

கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்க என்றும் பிரார்த்திக்கிறேன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
----------------------------------------------

கல்வி கற்பிப்பதில் கணித ஆசான்

இடையிடையே புகட்டுவது தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கணம் மற்றும் பொது அறிவு.

பள்ளியில் நடைபெறும் விளையாட்டுகளையும் அதன் விழாவையும் காண்போர் இவர் விளையாட்டு ஆசிரியர் என்று எண்ணுவர்.

இலக்கிய மன்ற ஆண்டு நிறைவு விழாவை காண்போர் இவரை மூத்த தமிழாசிரியர் என்று எண்ணுவர்.

மொத்தத்தில் Curricular & Extra Curricular ஒருங்கே அமையப்பெற்ற எங்கள் ஆசான் ஹாஜி S K M ஹாஜா முகைதீன் அவர்கள்.

கல்வியும் கற்போர் கடமையும் குறுந்தொடர் நிறைவுற்றது. ஆனால் எங்கள் ஆசான் அவர்களிடம் கற்ற நினைவுகள் முடிவின்றி நீண்டுகொண்டே செல்கின்றன.

எங்கள் ஆசான் ஹாஜி S K M ஹாஜா முகைதீன் அவர்கள் வளமுடன் நலமாய் என்றென்றும் வாழ வல்ல இறைவனை வழுத்துகிறேன்.

நூர் முஹம்மது / கதீப்-தமாம் / சவூதி அரேபியா.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

மனனம் செய்தல், நினைவாற்றல், செயல் முறை ஈடுபாடு, வேகமும் நுட்பமும், புற ஆற்றல், ஒழுக்கம்,இறையச்சம் பேன்றவைகளை மிக சுருக்கமாக சொல்லி, மாணவ சமுதாயம் முன்னேற்ற வழிகாட்டிய அமைந்துள்ளது இந்த கட்டுரை.

தொடர்ந்து இது போன்ற கல்வி தொடர்பான பதிவுகள் எழுதுங்கள். படித்து பயன்பெற உங்கள் மாணவர்கள் காத்திருக்கிறோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு