Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | June 14, 2012 | , , , , ,

குழந்தையோடு பேசுகிறீர்களா ?

உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு முதல் தேவை என்ன தெரியுமா ? 

உங்களிடம் உங்கள் குழந்தை பாதுகாப்பை உணர்வது தான். “என்ன பிரச்சினைன்னாலும் உம்மா பாத்துப்பாங்க, வாப்பா பாத்துப்பாங்க” எனும் ஆழமான நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

அதற்கான முதல் தேவை குழந்தைங்க கூட போதுமான அளவு நேரம் செலவிடறது ! குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கு ? அவர்களுடைய நாள் எப்படி கழிந்தது ? அவர்கள் என்ன பண்ணினாங்க ? போன்ற எல்லா விஷயங்களையும் அன்புடன் கேட்டறியுங்கள். அவர்களுக்கு ஒரு நல்லதொரு ஆறுதலாக இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பதின் வயதுப் பிள்ளைகளிடமெல்லாம் அதிக நேரம் மனம் திறந்த உரையாடலில் செலவிடுங்கள். அவர்களுடைய வழிகளைச் செம்மைப் படுத்தவும், அச்சுறுத்தல்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும் உங்கள் உரையாடல் உதவ வேண்டும். அவர்களுடைய பயங்கள், கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

“இதெல்லாம் நான் எப்படி உம்மா கிட்டே சொல்வது” என குழந்தை நினைக்கக் கூடாது. “எதுவா இருந்தாலும் உம்மா கிட்டே சொல்வேன்” என குழந்தை நினைக்குமளவுக்கு இயல்பாகப் பழகுங்கள்.

பள்ளி செல்லும் போது வாகனங்கள் எச்சரிக்கை !

பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகள் நடந்து போகிறதென வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு சிறிது நாட்கள் நீங்களும் கூடவே நடந்து செல்லுங்கள். சாலையில் எப்படி நடப்பது, எங்கெங்கே கவனமாக இருப்பது போன்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள். எந்த இடம் பாதுகாப்பானது, யாரிடம் உதவி கேட்கலாம் போன்ற விஷயங்களையும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

நம்தூர் பள்ளி வாகனங்கள் தெருக்கள் வழியாக வேகமாக செல்வது மிகவும் ஆபத்தானது, எதோ அவர்கள் பைபாஸ் வழியே போவது போன்றொரு உணர்வு அதில் ஏற்படும் புழுதிகாற்று அவ்வழியே செல்லும் அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மையே, இதை அந்தந்த பள்ளிகள்தான் வாகன ஓட்டிகளை கவனம் கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று! 

ஒருவேளை பொது வாகனங்களில் பயணிக்கும் குழந்தையெனில் ஸ்கூல் பஸ் ஸ்டாப்பில் போய் குழந்தைக்கு எந்த ஸ்கூல் பஸ், எங்கே ஏறுவது, எங்கே இறங்குவது, எப்படி ஏறி இறங்குவது போன்ற விஷயங்களை பழக்குங்கள். பஸ்பயணத்தில் அச்சுறுத்தலெனில் ஓட்டுநரை அணுக குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் போன்றவையெல்லாம் குழந்தைகள் அறிந்து வைத்திருப்பது அவசியமானது !

தெரியாத நபர் “லிஃப்ட்” கொடுத்தால் மறுக்கப் பழக்குங்கள். ஒவ்வொரு முறையும் உங்களிடம் அனுமதி வாங்கச் சொல்லுங்கள் !

குழந்தைகள் பயணிக்கையில் எப்போதும் ஒன்றிரண்டு நபர்களாக நடப்பது, பஸ்ஸில் பயணிப்பது பாதுகாப்பானது. தனியே எங்கே செல்வதாக இருந்தாலும் உங்களுக்குத் தகவல் தெரிய வேண்டும் என்பது பாலபாடம்.

வாகனங்கள் குழந்தைகளின் மிகப்பெரிய எதிரிகள். அதுவும் சென்னை போன்ற பெரும் நகர்புறங்களில் வசிப்பவர்கள் பத்து மடங்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இரண்டு விதமான ஆபத்துகள் வாகன விஷயத்தில் உண்டு.

ஒன்று விபத்து. சாலையோரம் அல்லது நடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் பின்னாலோ, பக்கவாட்டிலோ குழந்தைகள் போகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக வாகன டயரின் அருகே நின்று பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் வரும் சாலையில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.

இரண்டாவது கடத்தல் ! குழந்தைகள் கடத்துபவர்கள் வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளை வசீகரிக்கும் விதமாக சாக்லேட், பொம்மை போன்ற ஏதாவது பொருளைக் காட்டி அவர்கள் காரின் அருகே வந்ததும் சுருட்டிக் கொண்டு பறந்து விடுவது அவர்களுடைய பாப்புலர் திட்டம்.

தெரியாத நபர் இருக்கும் காரின் அருகே எக்காரணம் கொண்டும் போகவேண்டாம் என குழந்தைகளைப் பழக்குங்கள் !

போன் நம்பர் தெரியுமா ?

உங்க போன் நம்பர் உங்க குழந்தைக்குத் தெரியுமா ? தெரியாவிட்டால் முதலில் அதைச் சொல்லிக் கொடுங்கள். குட்டிப் பிள்ளைகள் கூட ஒரு போன் நம்பரை எளிதில் கற்றுக் கொள்வார்கள். பள்ளி செல்லத் துவங்கிவிட்டால், வீட்டு விலாசத்தையும் கூடவே சொல்லிக் கொடுங்கள்.

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சில முக்கிய அடையாளங்களையும் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். அவ்வப்போது வீட்டில் விளையாட்டாக குழந்தையிடம் விளையாடி போன் நம்பர், விலாசம் எல்லாம் கேட்டு பழக்கப்படுத்துங்கள்.

விளையாட்டாய் பழகும் விஷயங்கள் குழந்தையின் மனதில் எளிதில் பதியும் என்பது குழந்தை உளவியல் !

கைவசம் ஃபோன் நம்பர்

குழந்தைகளின் கையிருப்பில் போன் நம்பரை எளிதில் அழியாத பேனாவைக் கொண்டு எழுதி வைக்கலாம். வெளியிடங்களில் ஒருவேளை குழந்தை தவறிப் போனால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் என்பது சிலருடைய கருத்து. குறிப்பாக பேசத் தெரியாத குழந்தைகள் விஷயத்தில் இது ரொம்ப பயன் தரும். ஒரு வேளை குழந்தை பதற்றத்தில் எண்ணை மறந்து விட்டால் கூட இது உதவும் !

வெளியூரில் போய் ஏதாவது ஷாப்பிங், தீம்பார்க் போன்ற இடங்களுக்குப் போனால், எக்காரணம் கொண்டும் அந்த இடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லுங்கள். வெளியே வந்தால் ஆபத்து அதிகமேயன்றி குறைவில்லை ! குழந்தை குட்டிகளுடன் நிற்கும் ஏதேனும் பெற்றோருடன் சென்று உதவி கேட்பது ரொம்ப நல்ல விஷயம் என்பதையும் சொல்லிக் கொடுங்கள் !

உடல் நலம் கவனம்

பொது இடங்களுக்குப் போகும் போது குழந்தைகளின் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். தண்ணீர் விளையாட்டெனில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணி மணிகள் கைவசம் இருக்கட்டும். வெயில் எனில் குடை தொப்பி போன்றவை நிச்சயம் தேவை.

தண்ணீர் எப்போதும் கையில் இருக்கட்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது சுற்றுலா, ஷாப்பிங், பார்க் போன்ற இடங்களில் ரொம்ப அவசியம். உடலில் தண்ணீர் பற்றாக்குறை நிலை வந்தால் சோர்வும், நோய்களும் வந்து விடும்.

குழந்தைகள் பெரும்பாலும் “தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்பதில்லை. எனவே பெரியவர்கள் தான் அதைக் கவனித்து அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

நல்ல வசதியான செருப்பை அணிவது அவசியம். சிம்பிளாக காலை உறுத்தாத செருப்புகள் சிறப்பானவை. அதே போல நல்ல பொருத்தமான ஆடைகள் அணிவியுங்கள். ஸ்டைலாக இருப்பதை விட உடல்வாகுக்கு பொருத்தமாக இருப்பதே அதிக மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் என்பது மனதில் இருக்கட்டும் !

எங்கே இருக்காங்க குழந்தைகள் ?

உங்க குழந்தைங்க விளையாடப் போவதிலோ, நண்பர்களுடன் வெளியே போவதிலோ தவறில்லை. ஆனால் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் ? யாருடன் இருக்கிறார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்

“வெளியே போறேன்னு சொன்னான், எங்கே போனான், யார் கூட போனான்னு தெரியலையே” என புலம்பும் நிலையை வைத்துக் கொள்ளாதீர்கள். பக்கத்து தெருவுக்குப் போனால் கூட சொல்லி விட்டுப் போகும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

கொஞ்சம் பெரிய பிள்ளைகளெனில் (ஆணாக இருந்தாலும் சரி) அவர்களுடன்  தொடர்பில் இருங்கள். அவர்கள் பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாய் தோன்றினால் உங்களின் கவனத்தை அதிகப்படுத்துங்கள்.

பள்ளிக்கு சென்றுவரும் இளம் தளிர்களுக்கும் பதின் பருவ மாணவமணிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளும்... துவாவும் இன்ஷா அல்லாஹ் !

-அதிரை தென்றல் (Irfan CMP)

12 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சரியான நேரத்தில் பிள்ளைகள் பற்றிய அருமையான விழிப்புணர்வு ஆக்கம் தந்த சகோ. இர்ஃபானுக்கு நன்றிகள் பல.

பிஞ்சுக்குழந்தைகள் இருக்கும் என தெரிந்தும் நடக்கும் போரில் குடியிருப்பு பகுதிகளில் குண்டு மாரி பொழியும் அரக்கர்களையும், ஆணவ அதிகார வர்க்கங்களையும் என்ன வென்று சொல்வது?

என்னைப்பொருத்தவரை "உலகப்போர்களை விட கொடூரமானது உள்நாட்டில் நடக்கும் மத, இன அழிப்புக்கலவரங்களே".

உலகப்போரில் போடப்பட்ட அணு குண்டுகள் பரவலாக எல்லோரையும் கொன்றது. ஆனால் மத, இனக்கலவரங்கள் ஒரு சில குறிப்பிட்ட மத, இனத்தவரை மட்டுமே வேரறுக்கும்.

குழ‌ந்தைக‌ள் ம‌ற்றும் வீட்டின் பெரிய‌வ‌ர்க‌ள் மீது அன்பு செலுத்தி அவ‌ர்க‌ளை உரிய‌ முறையில் ப‌ராம‌ரித்தால் அல்லாஹ் ந‌ம்மை ந‌ல்ல‌ வித‌மாக‌ ப‌ராம‌ரிப்பான்.......இன்ஷா அல்லாஹ்....

பிள்ளைக‌ளை ப‌ற்றி ஆயிர‌ம் தான் எழுதினாலும் பிள்ளை இல்லாத‌வ‌ர்க‌ளுக்கு தெரியும் "பிள்ளை" என்ப‌து இங்கிலாந்து ராணியின் த‌லைக்கீரிட‌த்தில் ப‌திக்க‌ப்ப‌ட்டுள்ள‌ உல‌கின் விலையுய‌ர்ந்த‌ வைர‌த்தை விட‌ விலை ம‌திப்ப‌ற்ற‌து என்று.......

Abu Easa said...

மாஷா அல்லாஹ்!
தெளிவான, சமூக அக்கறை கொன்ட பதிவு!
அனைவரும் அவசியம் பின்பற்ற வேண்டியது!
காலத்தின் கட்டாயம்!

சேக்கனா M. நிஜாம் said...

அருமையானப் பதிவு !

வாழ்த்துகள் சகோ. இர்பான் அவர்களுக்கு

பள்ளி செல்லத் தயாராகும் குழந்தைகளுக்கு...............!

கல்லூரிச் செல்லத் தயாராகும் மாணாக்கர்களுக்கு.............!!

பிள்ளைப் பெற தயாராகும் சகோதரிகளுக்கு................!!!

கேட்டதை வாங்கிக்கொடுக்கும் வாப்பாக்களுக்கு.................!!!!

பேரன், பேத்தி எடுத்த/எடுக்க இருக்கும் அப்பாக்களுக்கு...............!!!!!


போன்றோருக்கு ஏற்றப் பதிவு... தொடருங்கள்.....

Noor Mohamed said...

தற்காலத்தில் நடைபெறும் தகவல்களை மையமாகவைத்து நல்ல அறிவுரைகளைக் கூறும் ஆக்கம் இது. பெரும்பாலும் இதை வெளி நாட்டில் வசிப்போர்தான் படிக்கின்றனர். கண்டிப்பாக ஊரிலுல்லோர்க்கு இதை விளக்கமாக எடுத்துக் கூறி மற்றவர்களுக்கும் எத்திவைக்க வேண்டும். இதுபோன்ற பயலுள்ள அறிவுரைகள் அவ்வப்போது கூறிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஆபத்துகளை நீக்கும் அறிவுரைகளை தந்த சகோ. இர்ஃபான் அவர்களுக்கு மிக்க நன்றி.

எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லோரையும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவானாக.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பிள்ளை பாதுகாப்பில் பயன்மிக்க நல்லுபதேசங்கள்.

ZAKIR HUSSAIN said...

நல்ல பதிவு..இப்போதைக்கு தேவையான பதிவும்கூட.

இன்னும் பதின்ம வயது பிள்ளைகளை வளர்ப்பதில் உள்ள சவால்களையும், அதை சரி செய்ய இப்போதைக்கு இருக்கும் பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சகோதரர் இர்ஃபான் எழுத வேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள்.

Shameed said...

இர்பானின் விழிப்புணர்வு தென்றலாய் வீசுகின்றது சரியான நேரத்தில் சரியான பதிவு

Yasir said...

நல்ல விசயங்கள் பொதிந்த பொக்கிஷம் உங்கள் ஆக்கம்.....நன்றி சகோ.இர்பான்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஊரில் இருக்கும்போது... இபுறாஹிமோடு நடப்பதில் ஓர் அலாதி சுகம், இடதுபக்க ஓரமாக நடந்து சென்றேன்... தெருவின் திருப்பத்தில் அப்படியே கையை பிடித்துக் கொண்டு வலப்பக்கமாக நடந்தேன், சட்டென்று நின்ற 'இபு' 'அபு'விடன் கேட்டது "சொல்லிக் கொடுத்ததுக்கு மாற்றமாக நீங்க கையை பிடித்து நடத்திகிட்டு போறிங்க" என்று !

சுல்லென்று உரைத்தது (!) நம் ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதை அருகிலிருக்கும்போது கிடைத்த அனுபவம் !

பதின்ம வயதுடைய இளசுகளை செல்ஃபோன் இல்லாமல் பள்ளிக்கு செல்ல பழக்கிடவும் வேண்டும் !

நல்லதொரு கையேடுக்கான பதிவு !

அதிரை சித்திக் said...

சகோ .சேகன.நிஜாம் ..சொன்ன கருத்தும் ..என்

எண்ண ஓட்டமும் ஒன்றே .......

வாழ்த்துகள் சகோ. இர்பான் அவர்களுக்கு

பள்ளி செல்லத் தயாராகும் குழந்தைகளுக்கு...............!

கல்லூரிச் செல்லத் தயாராகும் மாணாக்கர்களுக்கு.............!!

பிள்ளைப் பெற தயாராகும் சகோதரிகளுக்கு................!!!

கேட்டதை வாங்கிக்கொடுக்கும் வாப்பாக்களுக்கு.................!!!!

பேரன், பேத்தி எடுத்த/எடுக்க இருக்கும் அப்பாக்களுக்கு...............!!!!!


போன்றோருக்கு ஏற்றப் பதிவு... தொடருங்கள்.....

இப்னு அப்துல் ரஜாக் said...

கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள் என்று நம்மை அன்போடு அழைக்கும் சகோ அதிரைத் தென்றல் இர்பான் அவர்களே,உங்கள் எழுத்தின் பயன் இன்ஷா அல்லாஹ் இம்மையிலும்,மறுமையிலும் நமக்கு கிடைக்கட்டுமாக.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கு நன்றி...

\\பிள்ளைக‌ளை ப‌ற்றி ஆயிர‌ம் தான் எழுதினாலும் பிள்ளை இல்லாத‌வ‌ர்க‌ளுக்கு தெரியும் "பிள்ளை" என்ப‌து இங்கிலாந்து ராணியின் த‌லைக்கீரிட‌த்தில் ப‌திக்க‌ப்ப‌ட்டுள்ள‌ உல‌கின் விலையுய‌ர்ந்த‌ வைர‌த்தை விட‌ விலை ம‌திப்ப‌ற்ற‌து என்று....... //

மிக அருமையாக கூறினீர்கள், இன்ஷா அல்லாஹ் குழந்தை இல்லா சகோதர / சகோதரிகளுக்கு இக்குறைகளை தீர்த்து வைப்பானாக....ஆமீன்

\\இன்னும் பதின்ம வயது பிள்ளைகளை வளர்ப்பதில் உள்ள சவால்களையும், அதை சரி செய்ய இப்போதைக்கு இருக்கும் பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சகோதரர் இர்ஃபான் எழுத வேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள். //

தங்களின் வேண்டுகோளை என்னால் முடிந்த அளவிற்கு (பதிவாக) தருகிறேன்...இன்ஷா அல்லாஹ்

எடிட்டராக்கா...

அல்ஹம்துலில்லாஹ் தங்களின் மகனுடன் நடந்த நிகழ்வை எங்களுடன் பகிர்ந்து எங்கள் அனைவரின் ஏக்கத்தை அதிகரிக்கக செய்தமைக்கு நன்றி

கருத்திட்ட நண்பர்களுக்கு மேலும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு