Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பரீட்சையை கண்டுபிடித்த புண்ணியாவனே ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2012 | , , , ,

1980 - 90களில்... நினைவலைகள் !

பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. - அவர் தலை மேல.! ஆவல் தீர குட்டனும்னு கோபம் கோபமா வருதே !

பின்ன என்ன தலைவா.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!

பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, டிவி பாக்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.

பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும். எட்டாவது நிமிஷம் டீ வரும்.

உம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.

பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு டிவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.

எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.?

ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், ஃபுட்பால், ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..

காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து காலை சாப்பாடு, மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி தெருவில் இருக்கும் முச்சந்தியில் நிற்பது இல்லாட்டி ஏதாவது குளக்கரையோரம் அரட்டை, டிவி, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.

"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் ஜூன் மாதம்.. " உம்மாடியோவ்.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே.."

நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.

இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை..?"னு மாமா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். மாமா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை மாமாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?

மாமா நகர்ந்ததும் உம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? யாரும் என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா  ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!

மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த மாமா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!

மாமா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத மாமாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!

இறைவா.. நான் எப்படியாவது பாஸ் ஆகிடணும்.. இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு...!

எங்க செட்ல யாரெல்லாம் பெயில் ஆவான்னு யோசிச்சு பாத்தேன்.. ம்ஹூம்.. சொல்ல முடியாது.. எல்லாருமே பாஸ் ஆனாலும் ஆயிடுவானுங்க.. நான் மட்டும் பெயில் ஆகி, மத்தவன் எல்லாம் பாஸ் ஆகிட்டா.. உம்மாடியோவ்.. அதுமட்டும் நடக்கக் கூடாது.. குறைந்தபட்சம், பக்கத்து வீட்டு நண்பன் மட்டுமாவது பெயில் ஆயிடணும்.. அவன் பிட் அடிச்சிருப்பானோ.. இறைவா.. என்னை பாஸ் பண்ண வெக்க முடியாட்டி, அட்லீஸ்ட் எனக்கு கம்பெனி குடுக்க ஒரு நண்பனையும் பெயில் ஆக்கிடு.. டீலிங்..!

அதுக்கப்பறம் எந்த எதிர்மறையான வார்த்தைகள் காதுல விழுந்தாலும், அது என் ரிசல்ட்டை பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது. 'போச்சு' 'வராது' 'இல்லை'ன்னு எல்லா வார்த்தைகளையும் மாத்தி மாத்தி யாராவது சொல்லிகிட்டே இருந்தாங்க.

பஸ்ல போயிட்டிருக்கும்போது, என் கணக்கு பேப்பரை திருத்தும்போது, திருத்தரவருக்கு பைத்தியம் பிடிச்சு, நூத்துக்கு 80 மார்க் போடற மாதிரி பகல் கனவெல்லாம் கண்டேன்.. திட்டமிட்டு காணும் கனவு எல்லாம் பலிக்குமான்னு தெரியலை.

ரிசல்ட் வந்த அன்னிக்கு பசிக்கவே இல்லை.. உம்மா என்னை விடாம "சீக்கிரம் சாப்பிட்டுடு.."ன்னு வம்படியா சாப்பிட வெச்சாங்க.. அன்னிக்கு வீட்ல எல்லாரும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்தாங்க.. மாமா ஆபிஸுக்கு போவாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது.. இறைவா.. அவர் கிளம்பி ஆபிஸ் போயிடணும்.. வம்படியாக பிரார்த்தனை முணுமுணுத்தது...

இப்ப மாதிரி ரிசல்ட்டை பிரவுசிங் சென்டர்ல எல்லாம் போய் பாக்க முடியாது.. பேப்பர் தான்.

ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது.

பேப்பர்ல நம்பரை தேட முடியலை.. கண்ல பூச்சி பறக்குது.. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..

என் நம்பர் சுத்தமா மறந்து போச்சு.. பேப்பரை தரைல விரிச்சு, அது மேலயே மண்டி போட்டு உக்காந்து, நம்பரை ஞாபகப்படுத்தி, கஷ்டப்பட்டு தேடிப் பாத்ததுல.. நம்பர் இல்லை.. இன்னொரு தடவை ஒழுங்கா பாக்கறேன்.. ம்ஹூம்.. இல்லை.. என்னமோ தெரியலை.. எல்லா டென்ஷனும் போய், நிம்மதியா இருந்தது..

நாம ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் மார்க் எதிர்பார்த்து அது வரலைனா வருத்தப்படலாம்.. பேப்பர்ல போட்டோ வர வேண்டாம் பாஸ்.. வெறும நம்பர் மட்டும் வந்தா போதும்னு பொன் செய்யும் மருந்தா மனசை வெச்சிருக்கோம்.. அதுக்கு கூட வழியில்லாம போயிடுச்சு..

திடீர்னு பக்கத்து வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. நண்பனை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!

மேட்டரை கன்ஃபர்ம் பண்ணிக்க பக்கத்து வீட்டுகிட்ட போனேன். பக்கத்து வீட்டு பையனும் உங்கூட தானே படிக்கறான்.. அவன் பாஸ் பண்ணிட்டான்.. நீயும் இருக்கியே தண்டம்.. தண்டம்.. "

என்ன சொல்றாங்க.. நான் பாஸா.. ? எப்படி?

அட, ஆமா.. பதட்டத்துல என் நம்பருக்கு பதிலா நண்பர்களின் நம்பரை மட்டுமே பேப்பர்ல தேடியிருக்கேன்.

பேப்பரை எடுத்து பார்த்ததுல, என் நம்பர் என்னைப் பார்த்து கண் அடிச்சுது.

மாமா வீட்டுக்குள்ளேயிருந்து பயங்கர சந்தோஷத்துடன் வெளியே வந்து, முதுகைத் தட்டி விட்டு ஆபிஸுக்கு போனார். கண்ணாடி போடாத மாமாவின் முகம் இப்ப அழகா இருந்தது.

மறுபடியும் மறுபடியும் பேப்பரை தரைல பரப்பி, என் நம்பரை பாத்துகிட்டே இருந்தேன்.

இப்ப நினைச்சு பாத்தா அந்த ரிசல்ட் டென்ஷன் இருக்கே, அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு, இல்லை.!
குறிப்பு : சமீபத்தில் ஒரு பிரபல வரப்பத்திரிகையில் வெளியான இந்த கட்டுரையை வட்டார பேச்சு மொழி இணைத்து சின்ன சின்ன நெறியாடல் செய்து வித்தியாசமான ரசனையாக அந்த மீடியம் கிளாஸ் மாணவனின் ஏக்கத்தில்தான் இந்தப் பதிவு...


இப்படிக்கு இவ்வாறன அவஸ்த்தைகளில் சில வற்றை அனுபவித்த...


அன்றைய மாணவன்


-அபுஇபுறாஹிம்

17 Responses So Far:

Noor Mohamed said...

தம்பி அபு இபுராஹீம்,
அஸ்ஸலாமு அலைக்கும்

தாங்கள் 1984-1985 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு SSLC படித்து பரீட்சை-பாஸ் செய்த அழகிய அனுபவத்தை தந்துள்ளீர்கள். மேலே குறிப்பிட்ட கல்வியாண்டு சரியா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சம்மர்லே வந்த ஜுரத்தாலே மெடிக்கல் லீவு வாங்கி, அதோடு நர்சுக்கும் லீவு வாங்கச் செய்து அன்றைய பத்தாவது பரிச்சை பற்றி எழுதியது நல்ல உற்சாக பிட்டாடல்!
.ஜுரமெல்லாம் போயிடுச்சுன்நு நல்லாத் தெரியுது. அப்படியே நலமாகட்டும்.

வசப்பட்டவார்த்தைகள்: மந்திரிச்ச ஆடு, மந்திரிச்ச கோழி, திட்டமிட்ட கனவு, உம்மா தரும் டீ க்கு வரும் Fresh தூக்கம் என
மொத்தத்தில் சூப்பரு!

Unknown said...

அபூ இப்ராஹீம் காக்கா மேலே உள்ள படத்துல உங்க எண் எங்கே இருக்கு? ஏன்னா இப்ப இதுமாதிரி பேப்பர்ல ரிசல்ட் வருவது இல்லேன்னு நினைக்கிறேன்!

நிச்சயமா ஃபெயிலாகிவிடுவோம்னு இருப்பவங்களுக்கு மேலே சொன்ன டென்ஷன் இருக்க வாய்ப்பில்லை.. எத்தனை பேப்பர்ல போகும்னு ஒரு டென்ஷன் இருக்கலாம்

சமீபத்தில் ஒரு சிலர் தவிற பெரும்பாலும் பாஸ் ஆகும் அளவுக்காவது நம் மாணவர்கள்? தேர்வு எழுதிவிடுகிறார்கள்.

எனக்கு தெரிந்து 25 சதவீதம் கூட தேறாத காலம் எல்லாம் இருந்திருக்கிறது இப்போது அப்படியில்லை சராசரியாக 80 சதவீதம் வரை வெற்றி கிடைத்துவிடுகிறது

இப்போதைய மாணவர்களுக்கு இருக்கும் டென்ஷன் எத்தனை மதிப்பெண் எடுப்போம்? என்றுதான். மேற்படிப்புக்கு அதுதானே அவர்களுக்கு மிக முக்கியம்!

அதிரை சித்திக் said...

sammary படித்ததிலையே..எனது படிப்பு முற்றுபுள்ளி யாயிற்று .

ஆங்கிலத்தில் 29 மார்க் மற்ற பாடங்களில் சராசரி 55 ..ஆங்கிலத்தை

ஒரு மொழியாக கற்று கொடுக்க வில்லை .ஒரு பாடத்தை ஆங்கிலத்தில் படித்து

தமிழில் மொழி பெயர்த்து கூறி விட்டு ஆசிரியர் சென்று விடுவார் ..என்னமோ போங்க ..

முக்கியமான விஷயம் ...மானுக்கு ஆபத்து பின்னூட்டத்தில் கவி புகாரி

ஈமானுக்கும் வரம்பு உண்டு என்று எழுதி உள்ளார் ,தயவு செய்து பார்த்து பதிலிடவும் ..,

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ. ஜாபர் அவர்களே! இந்தக்கால உணர்வுகளையல்ல

எங்கள் கால உணர்வுகளை வடித்துள்ளார் அ.இ. . இந்த அவஸ்தைகள் - அந்த விடுமுறைக்கால கர்ப்பம்- பேப்பர்களில் பிரசவிக்கும் வரை- பதட்டம்- எதிர்பார்ப்புகள் எல்லாம் அனுபவித்து பல ஆண்டுகளானாலும் மறக்கமுடியவில்லை. அவற்றை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார் தம்பி அ.இ.

பாராட்டுக்கள்.

Unknown said...

இப்ராஹீம் அன்சாரி காக்கா...

உங்கள் காலம் மட்டுமல்ல எங்கள் காலத்திற்கும் அ.இ.காக்காவின் கட்டுரை பொருந்தும்...எங்க காலத்திலே ஏது இன்டெர்நெட்டெல்லாம்? என் கால நினைவுகளையும் துண்டிவிட்டுள்ளது இக்கட்டுரை

சும்மா தமாஷுக்குதான் அ.இ.காக்காவோட நம்பர் எங்கேன்னு கேட்டேன்

பேப்பரில் ரிசல்ட் பார்க்கும் டென்ஷனே தனிதான்...

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர் அபுஇப்ராஹிம் பாஸ் ஆகி விட வேண்டும் என்ற டென்சன் கூடியே, இறைவனுடன் வேண்டிக் கொண்டே இத்தொடரைப் படிக்கவைத்த அந்த எழுத்து நடையும் இவர் ஓர் அற்புதமான கதாசிரியராக வரலாம் என்றே எண்ணினேன்! இப்பொழுதும் அ.நி.யின் ஆசிரியர் தானே! ஏற்கனவே துபை அனைத்து முஹல்லா கூட்டத்தில் முதற் சந்திப்பில், “என்னை திரைப்பட இயக்குநர் சேரன் கதை டிஸ்கஸனில் கலந்து கொள்ள அழைத்தார்; இஸ்லாம் திரைப்படத்துறையை அனுமதிக்காததால் போகவில்லை” என்றார்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

ஒரு நாவலுக்குண்டான
நடையுடன் கூடிய
அசத்தலான பதிவு

//ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது.//
அந்த ரிசல்ட் வர்ற பேப்பரு விக்கிற வெலை இருக்கே,அதுக்கும் அப்போ பிளாக் லதான் வாங்கணும்.

ZAKIR HUSSAIN said...

இதை படித்துக்கொண்டிருந்தபோது பட்டுக்கோட்டைக்கு ஹையர் செகன்டரி பரீட்சை எழுத சக்திவினாயகர் பஸ்ஸுக்கு நின்றதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. [ அப்போது நம் ஊரில் ஹையர் செகன்டரிக்கு சென்டர் தரவில்லை]

கடைசியில் பரீட்சை முடித்து 'குர்பானி" படம் பார்க்க [வீரா தியேட்டர்] போனதோடு கலைந்த கிளாஸ் மேட் எல்லாம் இப்போது வெள்ளை தலையுடன் பார்க்கும்போது கால ஓட்டத்தின் உண்மை தெரிகிறது.


ரிசல்ட்டை பொருத்தவரை நான் இங்கு வந்து விடுவதால் அது சபீர் பொறுப்பு. அவன் தான் நான் பாசாகிவிட்டதாக ஒவ்வொரு வருடமும் தந்தியடிப்பான்.

இளமையை எக்ஸ்டன்ட் செய்ததற்கு அபு இப்ராஹீமுக்கு நன்றி.

Unknown said...

இளமையை எக்ஸ்டன்ட் செய்ததற்கு அபு இப்ராஹீமுக்கு நன்றி.
-----------------------------------------------------------
Sweet Memories that never ends..

Noor Mohamed said...

முக்கிய அறிவிப்பு

தம்பி அபுஇபுராஹீம் SSLC படிக்கும் காலங்களில், ஏதேனும் ஒரு பேப்பர் ஃபெயில் ஆகிவிட்டால் அதை மட்டும் மீண்டும் எழுதி பாஸ் ஆகிவிடலாம். ஆனால் நாங்கள் SSLC படிக்கும் காலங்களில் ஒரு பேப்பர் ஃபெயில் ஆகிவிட்டாலும் மீண்டும் எல்லா பேப்பர் களையும் எழுதிதான் பாஸ் செய்ய வேண்டும். காலப் போக்கில் பரீட்சை விதிகளை அரசு மிகவும் சுலபமாக ஆக்கிவிட்டது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Noor Mohamed சொன்னது//க்கு//…

//தாங்கள் 1984-1985 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு SSLC படித்து பரீட்சை....///

ஆமாம் காக்கா !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது//க்கு//…

ஜஸாக்கல்லாஹ் ஹைர்...!

JAFAR சொன்னது//க்கு//…

என் நம்பர் இந்த பேப்பரில் நம்பர் வரவில்லை இது I.A.S.பரீட்சை ரிசல்ட்டாம் ! :))

நம்ம (கொஞ்சனஞ்ச) ஃபீலிங்க்தான் உங்களுக்கும் ! இருக்கனுமே... அதுதானே அந்தக்கால எழுதப்படாத விதி ! :)

அதிரை சித்திக் சொன்னது//க்கு//…

//sammary படித்ததிலையே..எனது படிப்பு முற்றுபுள்ளி யாயிற்று .//

ஆங்கிலத்தில் 29 மார்க், பயந்தே கேட்டை விட்டவர்கள் ஏராளம் அன்று !

Ebrahim Ansari சொன்னது//க்கு//…

ஆமாம் காக்கா, பிரசவ வேதனையை வித்தியாசமாவுல இருக்கும் அந்த அவஸ்தை... பரீட்சை பேப்பர் திருத்தும் வாத்திக்கு வரவேண்டிய வரக்கூடாத நல்லது கெட்டதெல்லாம் வேண்டுதலாக மனசுல அலைபாயுமே !!!

JAFAR சொன்னது//க்கு//…

//எங்க காலத்திலே ஏது இன்டெர்நெட்டெல்லாம்? என் கால நினைவுகளையும் துண்டிவிட்டுள்ளது இக்கட்டுரை//

//பேப்பரில் ரிசல்ட் பார்க்கும் டென்ஷனே தனிதான்...//

பேப்பரில் ரிசல்ட் பார்க்கும் த்ரில்லிங்கே தனிதான் ஆம் !

அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது//க்கு//…

அர அல சொன்னது//க்கு//…

ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

ZAKIR HUSSAIN சொன்னது//க்கு//…

//இளமையை எக்ஸ்டன்ட் செய்ததற்கு அபு இப்ராஹீமுக்கு//

கிளறிவிட்டது என்னவோ உண்மைதான் காக்கா...

harmys .abdul rahman சொன்னது//க்கு//…

//Sweet Memories that never ends..//

என்னவோ உண்மைதான்

Noor Mohamed சொன்னது//க்கு//…

//முக்கிய அறிவிப்பு !

தம்பி அபுஇபுராஹீம் SSLC படிக்கும் காலங்களில், ஏதேனும் ஒரு பேப்பர் ஃபெயில் ஆகிவிட்டால் அதை மட்டும் மீண்டும் எழுதி பாஸ் ஆகிவிடலாம். ஆனால் நாங்கள் SSLC படிக்கும் காலங்களில் ஒரு பேப்பர் ஃபெயில் ஆகிவிட்டாலும் மீண்டும் எல்லா பேப்பர் களையும் எழுதிதான் பாஸ் செய்ய வேண்டும். காலப் போக்கில் பரீட்சை விதிகளை அரசு மிகவும் சுலபமாக ஆக்கிவிட்டது.//

மிகச் சரியே !

ஆக !

இப்படிக்கு,

குறிப்பு : சமீபத்தில் ஒரு பிரபல வரப்பத்திரிகையில் வெளியான இந்த கட்டுரையை வட்டார பேச்சு மொழி இணைத்து சின்ன சின்ன நெறியாடல் செய்து வித்தியாசமான ரசனையாக அந்த மீடியம் கிளாஸ் மாணவனின் ஏக்கத்தில்தான் இந்தப் பதிவு...

இப்படிக்கு இவ்வாறன அவஸ்த்தைகளில் சில வற்றை அனுபவித்த...

அன்றைய மாணவன்

Shameed said...

என்னமா யோசிகிரான்கப்பா

அப்துல்மாலிக் said...

ஏற்கனவே ஒவ்வொருதடவை ரிசல்ட் வரும்போது இந்த கொசுவர்த்தி யாபகம் வரும், இத படிச்சி இன்னும் அந்த தருணத்தின் துடிப்பை அதிகப்படுத்திடுச்சு...

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

இந்தப் பதிவை நான் கவனிக்கவேயில்லை. என் சென்னை விசிட்களினிடையே பார்க்க தவறியது போலும்.

பரீட்சை கால சுவாரஸ்யங்களில் என்னையும் சேர்த்திருந்தால் உரையாடி ஜமாய்த்திருக்கலாம்.

பாஸாகிவிடுவோம் என்று உறுதியாகத் தெரிந்தும் அந்த பய ஜூரம் என்னையும் விட்டதில்லை.

ஹோம்சிக் பதிவு.

Meerashah Rafia said...

பத்து வருடம் என்னை பின்னுக்கு தள்ளிவிட்டீர்கள்..

திரைக்கு முன் புன்னகை குலுங்க வாசித்தேன். நானும் வாழ்ந்த காகித வாழ்க்கையை நினைத்து.

Yasir said...

திக் திக் நிமிடங்களை அழகாக நம் சொல் வழக்கில் அளித்த அபுஇபுராஹிம் காக்கா பாராட்டுகுறியவர்கள்....அந்த நாட்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது உங்கள் ஆக்கம்....
எங்களுக்கெல்லாம் மார்க் எவ்வளவு வரும் என்பதில்தான் கவலையே

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு