Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள் - மீள்பதிவு 9

அதிரைநிருபர் | November 28, 2011 | , ,

பொதுவாக ஹஜ்பெருநாளை நாம் தியாகத்திருநாள் என அழைக்கிறோம்...நம் வாழ்க்கையிலும் சில நல்ல உள்ளங்கள் மிகப் பெரிய தியாகங்களை செய்திருக்கிறார்கள்.
நமது இன்றைய இளமைக்கும் , வசதிக்கும் அவர்களின் பங்களிப்பும் தியாகமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது வெற்றி பெற்ற பிறகு அதற்க்கு 'நான்"தான் காரணம் என மார்தட்டுபவர்கள் மறவாமல் ஒரு மண்டலம் "மந்துகாபர்னி [வல்லாரை மாத்திரை ] எடுத்துக்கொள்ளலாம். ஒரு மாதிரியான செலக்டிவ் அம்னீசியா , ஞாபக சக்தியின்மை பிரச்சினைகளுக்கு உதவும்.

நான் ஓவ்வொறு முறையும் ஊர்வரும்போது சில பெரியவர்களிடம் "மெனக்கட்டு" போய் பேசிக்கொண்டிருப்பேன், இதை எழுத இது போன்ற நம் ஊர் முதியவர்களின் மெளன அழுகையும் காரணம்.அப்போதெல்லாம் அவர்களின் குறைபடு லிஸ்ட் ரொம்ப நீளமாக இருக்கும். இதன் காரணம்தான் என்ன என்றால் இது பெரும்பாலும் பிரச்சினை possessiveness லிருந்து ஆரம்பித்ததாக இருக்கும்.

இவர்களின் குறை பெரும்பாலும் "பொட்டியோட நேரா பொண்டாட்டி வீட்டுலெ போயி எறங்கிட்டான் வாப்பா' ...இப்படித்தான் இருக்கும். நாம் இப்போது internet உலகத்தில் இருக்கிறோம் , சமயங்களில் "நானோ" டெக்னாலஜி பற்றி பேசுகிறோம், ஆனால் நமது சின்னவயதில் நம்மை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி வாசலில் நின்ற இதுபோன்ற எத்தனையோ உயிர்களின் உள்ளத்தை புரிந்து கொள்ளத்தவறிவிட்டோம்.நம் ஊரில் எல்லோருக்கும் சம்பாதிப்பதின் முக்கியத்துவம் தெரிந்து விட்டது. இந்த நவீன காலத்தின் தாக்கம் [ தாக்கம் தவறல்ல] சில சமயங்களில் நம் கூட இருந்த முதியவ்ர்களை [அப்பா..உம்மும்மா/ராத்தம்மா, வாப்புச்சி உறவுகள்....அல்லது உங்கள் தாயாக கூட இருக்கலாம்] நம்மையும் அறியாமல் ஒதுக்கி விட்டோமா என கேட்கத்தோன்றுகிறது.

மாத வருமானம் ஆயிரம் ரூபாயில் 5 பிள்ளைகளை காப்பாற்றிய தாய் தந்தையருக்கு 10 ஆயிரம் வருமானம் பெரும் ஒரு பிள்ளை ஐநூறு கொடுக்க முடியாததற்க்கு ஆயிரம் காரணம் சொல்கிறது.


இந்த முதியர்களின் புழக்கத்தை அதிகம் போனால் ஒரு 40X50 ல் சுருக்கிவிட்டோம் பெரும்பாலான பெரியவர்களை நாம் கல்யாணம்/காது குத்து / சுன்னத் மஜ்லீஸ்களில் " வாழ்ந்த மனுசிலெ..அவ்வொ கையாலெ மாலெ போடச்சொல்லுங்க" என்ற வசனத்துக்கு மட்டும் பயன்படுத்துகிறோம். அல்லது நோயில் விழுந்தால் கஞ்சி / மாத்திரை கொடுக்கும்போது மட்டும் பேசுகிறோம்.

வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்களுக்கு இதுவொரு வேண்டுகோள்..முடித்தால் இவர்களுக்கு நோய்க்கும் / பிணிக்கும் பார்க்கும் அம்பாசிடர்களை அழைக்கும்போது கொஞ்சம் காற்றோற்றமான பகுதியில் கொஞ்சம் நிறுத்தி உலகத்தின் விசாலம் காட்டுங்கள்..முடிந்தால் உங்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் அவர்களின் கேட்டராக்ட் விழுந்த கண்களும், ரத்தம் சுண்டிப்போய் சுருங்கிய விரல்களும் எப்படி ஏணியாய் இருந்தது என்று அவர்கள் காது பட சொல்லுங்கள்.அந்த முதியவர்களை அழைத்துக்கொண்டு குளுமணாலிக்கும்,கொடைக்கானலுக்கும் அழைத்துபோக சொல்லவில்லை. அட்லீஸ்ட் பக்கத்தில் இருக்கும் அதிராம்பட்டினத்து கடற்கரை, கொஞ்சம் தூரப்போனால் ராஜாமடத்துபாலம் [ அங்கு உட்கார்ந்து அந்தி சாயும் பொழுதை ரசித்துப்பாருங்கள்] ...இப்படி அழைத்துசெல்ல பேரன் இருக்கிறான் / மகன் இருக்கிறான் .என்ற சூழ்நிலை இருந்தாலே இந்த வயதானவர்களின் கடைசிகாலம் கொஞ்சமாவது சந்தோசம் கலந்து இருக்கும்.


"அப்படி ஒன்றும் ஒதுக்கவில்லை அவர்களை" என்ங்கிறீர்களா?..வாழ்த்துக்கள்... எப்படி இப்படி வேறுபட்டு அனுசரனையாய் இருக்கிறீர்கள் என்று எழுதுங்கள். வரும் சந்ததியினருக்கு ஒரு reference கிடைக்கும்.


வீட்டுப்பிரச்சினைகளில் இவர்கள் சம்பந்த பட்டிருந்தால் ..தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு பிரச்சினையை விசாரிக்காதீர்கள்.சமயங்களில் காலம் மிகத்தாமதமாக சில விசயங்களை உணர்த்தும்..அது வரை அந்த முதியவர்களும் உயிருடன் இருக்க வேண்டும். அவர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை சந்தோசமாக வைத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கிறது.



- Zakir Hussain


9 Responses So Far:

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு வாசக நேசங்களே.. மூத்த அதிரைநிருபர் வாசகரின் கோரிக்கை ஏற்று இந்த பதிவை மீள் பதிவு செய்கிறோம்.

சகோ. ஜாஹிர் ஹுசைன் அவர்கள் எழுதிய தரமான பல பதிவுகளில் இதுவும் ஒன்று, இந்த பதிவை மீள்பதிவு செய்திவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியே.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நம்மை குழந்தையாய் அன்று நேசித்து வளர்த்த வீட்டுப்பெரியவர்களே காலத்தால் குழந்தைத்தனம்(தோற்றத்தை தவிர)ஆகிவிடும்போது அவர்களை நேசிப்பது நல்லதோரு கைமாறு.
கடமைக்கு செய்யும் போக்கு இல்லாமல் மனதார எதையும் செய்யும் நல்லுள்ளத்தை நாயன் நமக்கெல்லாம் தந்தருள்வானாக ஆமீன்.
பெரியவர்களை நேசிக்கும் முறைபற்றி நல்ல ஆக்கம். ஜஸாக்கல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முதுமை போற்றுவோம்...
முதுமை காத்திடுவோம்...
முதுமை க்கு முதல் மரியாதை...

ஒருநாள் நம்மிடமும் சேரும் முதுமை
அன்று ஏங்குவோம் எங்கே (என்) இளமை என்று !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மனதில் முத்திரை போல் பதிந்த பெரியவர்களின் தியாகங்களை (அ.நி) ல் மீள் பதிவாக மீட்டெடுத்த ஜாஹிர் காக்கா அவர்களுக்கு.ஜஜாகல்லாஹ் ஹைரா.

சொல்லி முடிக்க முடியாத தியாகங்களை எங்களுக்கு செய்த எங்கள் பெரியம்மா அவர்களுக்கு கைமாறு செவதாக இருந்தால் உலகத்தையே சுற்றி சுற்றி காண்பித்தாலும் கைமாறு நிறைவு பெறாது.

எங்களுக்கு தாயாகவும்,மருத்துவராகவும் இருந்து.எங்களை அல்லாஹ்வின் உதவியால் வளர்த்து ஆளாக்கி எங்களின் ஆறுதல் பெறாமல் சென்று விட்டார்கள்.

அல்லாஹ் அவர்களின் மன்னரை வாழ்க்கையையும்.மறுமையின் வாழ்க்கையும் ஈடேற்றம் பெற்று ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் என்னும் சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சொல்லி முடிக்க முடியாத தியாகங்களை எங்களுக்கு செய்த எங்கள் பெரியம்மா அவர்களுக்கு கைமாறு செவதாக இருந்தால் உலகத்தையே சுற்றி சுற்றி காண்பித்தாலும் கைமாறு நிறைவு பெறாது.//

அதனாலத்தான் "வாப்பிச்சா" ன்னு ஒரு பதிவே வந்தது இங்கே ! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

LMS(அ)வின் பார்வைக்கு : http://adirainirubar.blogspot.com/2011/06/blog-post_20.html

sabeer.abushahruk said...

.//.தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு பிரச்சினையை விசாரிக்காதீர்கள்.//

வாட் அ க்வாட் (quote)!

பெரும்பாலும் இதுதான் நடப்பு.

கொச்சினிலிருந்து சபீர்

Shameed said...

எல்லோருக்கும் வெத்திலை பாக்கு வைத்து அழைப்பு கொடுக்க வேண்டி இருந்ததால் பின்னுட்டம் இட தாமதம் ஆகி விட்டது

தலைத்தனையன் said...

நல்ல அட்வைஸ் நண்பரே. எத்தனையோ நீண்ட இரவுகளில் தாயும், தந்தையும் எமை மறந்து, தமை நினைந்து பெரியோரின் கைகளிலே எமைக்கொடுத்து, அவரின் தூக்கம் பிரித்து அந்த இளகிய வாயில்லா, பாசத்தில் வலுவான சீவன்கள் சிறு குரலெடுத்து பாடும் "கண்ணான கண் மணியே, ஈன்ற இளங்கொடியே, கண்ணின் மகனாரோ உன்னை பெற்று பூ வாக்கு சொல்லுகிறேன்"

அவைகளெல்லாம் இன்று உள்ளதா என்று தெரியவில்லை.

அந்த தூய உள்ளங்களுக்கு சொந்தமான அந்த மலை மனத்தினரை மறக்கமுடியுமா?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு