உலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா? - 3 42

அதிரைநிருபர் பதிப்பகம் | June 13, 2012 | , , , ,


உலகின் முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா? - (3)

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பட்ட இடம் இந்தியா என்பதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் சான்றுகள்.

حَدَّثَنَا الحسن بن يحيى ، قال : أخبرنا عبد الرزاق ، قال : أخبرنا معمر ، عن قتادة ، قال : " أهبط الله عز وجل آدم إلى الأرض ، وكان مهبطه بأرض الهند " 

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் பூமிக்கு இறக்கினான். அவர்கள் இறங்கிய இடம் இந்தியாவாக இருந்தது என்று கதாதா அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: மஃமர்

(حديث موقوف) حَدَّثَنِي ابْنُ سِنَانٍ ، قَالَ : حَدَّثَنِي ابْنُ سِنَانٍ ، قَالَ : حَدَّثَنَا الْحَجَّاجُ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ يُوسُفَ بْنِ مِهْرَانَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلامُ : " أَطْيَبُ أَرْضٍ فِي الأَرْضِ رِيحًا أَرْضُ الْهِنْدِ ، أُهْبِطَ بِهَا آدَمُ فَعَلِقَ شَجَرُهَا مِنْ رِيحِ الْجَنَّةِ " .

பூமியில் நறுமணம் மிகுந்த இடம் இந்தியா, அங்குதான் ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பெற்றார்கள். அங்கிருக்கும் மரங்கள் சுவனத்தின் நறுமணத்தைப் பெற்றுள்ளன என்று அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் – யூஸுஃப் இப்னு மிஹ்ரான்


 (حديث موقوف) حَدَّثَنَا أَبُو هَمَّامٍ ، قَالَ : حَدَّثَنِي أَبِي ، قَالَ : حَدَّثَنِي زِيَادُ بْنُ خَيْثَمَةَ ، عَنْ أَبِي يَحْيَى . بَائِعِ الْقَتِّ قَالَ : قَالَ لِي مُجَاهِدٌ : لَقَدْ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ، " أَنَّ آدَمَ عَلَيْهِ السَّلامُ نَزَلَ حِينَ نَزَلَ بِالْهِنْدِ ، وَلَقَدْ حَجَّ مِنْهَا أَرْبَعِينَ حِجَّةً عَلَى رِجْلَيْهِ

ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பொழுது இந்தியாவில் இறங்கினார்கள். இன்னும் அவர்கள்  அங்கிருந்து கால்நடையாக 40 ஹஜ்ஜுகள் செய்துள்ளார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஜாஹிது

حَدَّثَنَا ابن حميد ، قال : حَدَّثَنَا سلمة ، عن ابن إسحاق ، قال : وأما أهل التوراة فإنهم ، قالوا : " أهبط آدم بالهند على جبل ، يقال له : واسم عند واد يقال له : بهيل بين الدهنج والمندل ، بلدين بأرض الهند ، قالوا : وأهبطت حواء بجدة من أرض مكة ، وقال آخرون : بل أهبط آدم بسرنديب على جبل يدعى بوذ 

தவ்ராத் வேதத்தை உடையவர்கள் ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் தஞ்ச், மன்தல் எனப்படும் இடங்களுக்கிடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலையின் மீது இறக்கப் பெற்றார்கள்.  இன்னும் ஹவ்வா (அலை) அவர்கள் மக்காவின் நிலப்பரப்பைச் சேர்ந்த ஜித்தாவில் இறக்கப் பெற்றார்கள், என்று கூறுகின்றார்கள். இன்னும் சிலர், ஆதம் (அலை) அவர்கள் ஸரந்தீப் (இலங்கையின் பழைய அரபிப் பெயர்) என்ற இடத்தில் உள்ள பூத் எனும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்றும் கூறுகின்றனர்.  அறிவிப்பவர் – அபூ இஸ்ஹாக்

وأخرج ابن جرير وابن أبي حاتم والحاكم وصححه عن ابن عباس قال أول ما أهبط الله آدم إلى أرض الهند وفي لفظ بدجنى أرض الهند

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் முதலில் இந்தியப் பூமியில்தான் இறக்கினான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்னொரு அறிவிப்பில் இந்தியப் பூமியில் தஜ்னா என்ற இடத்தில் இறக்கினான் என்று கூறியதாகவும் வருகின்றது. அறிவிப்போர்: இப்னு ஜரீர், இப்னு அபீ ஹாத்திம், ஹாகிம்

(حديث موقوف) حَدَّثَنِي الْحَارِثُ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ سَعْدٍ ، قَالَ : حَدَّثَنَا هِشَامُ بْنُ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " أُهْبِطَ آدَمُ بِالْهِنْدِ وَحَوَّاءُ بِجِدَّةَ , فَجَاءَ فِي طَلَبِهَا حَتَّى اجْتَمَعَا , فَازْدَلَفَتْ إِلَيْهِ حَوَّاءُ فَلِذَلِكَ سُمِّيَتِ الْمُزْدَلِفَةَ ، وَتَعَارَفَا بِعَرَفَاتٍ فَلِذَلِكَ سُمِّيَتْ عَرَفَاتٍ ، وَاجْتَمَعَا بِجَمْعٍ فَلِذَلِكَ سُمِّيَتْ جَمْعًا ، قَالَ : وَأُهْبِطَ آدَمُ عَلَى جَبَلٍ بِالْهِنْدِ ، يُقَالُ لَهُ : بُوذُ " .

ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறக்கப் பெற்றார்கள். ஹவ்வா (அலை) அவர்கள் ஜித்தாவில் இறக்கப் பெற்றார்கள். ஆதம் (அலை) அவர்கள் ஹவ்வா (அலை) அவர்களைத் தேடி வந்துகொண்டிருந்தபொழுது ஹவ்வா (அலை) அவர்களும் அவர்களை நெருங்கினார்கள். அவர்கள் இருவரும் நெருங்கி வந்த இடம் முஸ்தலிஃபா என்று அழைக்கப் பெற்றது. பின்னர், அவர்கள் இருவரும் அரஃபாத் என்ற இடத்தில் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டனர். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டதால், அந்த இடம் அரஃபா என்று பெயர் பெற்றது. இன்னும் அவர்கள் இருவரும் ஜம்உ எனும் இடத்தில் ஒன்றிணைந்தனர். அதனால், அவ்விடம் ஜம்உ என்று பெயர் பெற்றது. இன்னும், ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் பூத் என்று அழைக்கப் பெறும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அபூஸாலிஹ்

இந்த அறிவிப்புகள் அனைத்தும் இமாம் தபரீ அவர்கள் தொகுத்த தாரீஃகுத் தபரீ என்ற உலக வரலாற்று நூலில் வருகின்றன.

மேற்கண்ட அறிவிப்புகளில், இந்தியாவில் தஞ்ச், மன்தல் எனப்படும் இடங்களுக்கிடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று வரும் அறிவிப்பில் வரும் தஞ்ச் என்ற வார்த்தை தெங்கணம், (தென்+கணம்) என்ற வார்த்தையை ஒத்திருக்கின்றது. இன்னும், அவ்வறிவிப்பில் வரும் மன்தல் எனும் வார்த்தை (மண்டல், கோரமண்டல்) போன்ற இந்தியாவின் தென் பகுதிகளின் பெயர்களுடன் ஒத்துப் போகின்றது. 

தஞ்ச்  எனப் பெயர் கொண்ட அல்லது அப்பெயருடன் தொடர்புள்ள நிலப்பகுதி ஏதும் தமிழ்நாட்டின் பகுதியாக இருந்ததா என்ற கேள்வியுடன், இணையத்தில் தேடும் பொழுது கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன.

கடல் கொள்வதற்கு முன் இருந்த குமரிக் கண்டத்தில் தெங்க நாடு இருந்தது என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூறியுள்ளார். தெங்கணம் என்ற பழைய குமரிக் கண்ட நகரத்தின் பெயராக இருக்க வேண்டும்.


பண்டைய தமிழகத்தின் பாண்டிய நாட்டின் பகுதிகளாக 49 நாடுகள் இருந்தன வென்றும் அவற்றில் தெங்க நாடு என ஒன்று இருந்தது என்ற தகவல் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் தொடர்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குணகரை குன்றங் குறும்பனை யோடு
மணமிகு தெங்க மதுரைமுன் பாலை 
இணருபின் பாலையோ டேழ்தலை மேய 
உணவமல் நாற்பதோ டொன்பது நாடே. 

(ஏழ்தலைமேய - ஏழ்என்னும் எண்ணை முதலிலுடைய ஏழ்குணகரைநாடு, ஏழ்குன்றநாடு,
ஏழ்குறும்பனை நாடு, ஏழ்தெங்கநாடு, ஏழ்மதுரைநாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை
நாடு எனக் கொள்க.)

மாறிமாறி வந்த கடற்கோள்களினால் பாண்டி நாட்டைச் சேர்ந்த 49 நாடுகளாகிய ஏழ் தெங்க நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் குணக்கரை நாடு, ஏழ் குறும்பனை நாடு ஆகியன மறைந்தன என ஆய்வாளர் கூறுவர். பார்க்க: http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311332.htm

 “ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்தியப் பூமியில்தான் இறக்கினான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள், இன்னொரு அறிவிப்பில் இந்தியப் பூமியில் தஜ்னா என்ற இடத்தில் இறக்கினான் என்று கூறியதாகவும் வருகின்றது” – இப்னு ஜரீர், இப்னு அபீ ஹாத்திம், ஹாகிம் ஆகியோர் அறிவிக்கும் இந்த அறிவிப்பில் வரும் ‘தஜ்னா’ என்ற வார்த்தையில் வரும் ஜீம் என்ற அரபி எழுத்தினை geem என்றும் கூறுவர். அதன்படிப் படித்தால் ‘தக்னா’ என்றும் அவ்வார்த்தையைப் படிக்கலாம். அந்த உச்சரிப்பு ‘தக்கன்’, ‘தக்காணம்’ போன்ற வார்த்தைகளின் உச்சரிப்புடன் ஒத்திருக்கின்றது.

“ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் ‘பூத்’ என்று அழைக்கப் பெறும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்”- என்ற அறிவிப்பில் வரும் ‘பூத்’ வார்த்தையினை ‘புத்’ என்றும் வாசிக்க இயலும். அது ஏனெனில், அரபி அல்லாத வார்த்தைகளை அரபியில் எழுதும் பொழுது உகரத்தைக் குறிக்க அரபி மொழியின் எழுத்தான் ‘வாவ்’ என்ற எழுத்தைப் பயன்படுத்துவது அரபிகளின் வழக்கம். அவ்வகையில், புத் என்று அழைக்கப் பெறுவதாக இவ்வறிவிப்பில் குறிப்பிடப் பெறும் அம்மலை, இலங்கையில் உள்ள ‘புத்தர் பாதம்’ என்று அழைக்கப் பெறும் மலையாக இருக்கலாம்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆதம் (அலை) அவர்கள் நூஹ் (அலை) அவர்களது காலத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்கு முன் இலங்கையுடன் ஒன்றாக இருந்த இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மலை ஒன்றின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று கருத அதிகம் வாய்ப்பிருக்கின்றது.


- இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்..
- அஃப்ளலுல் உலமா
- அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
- இயக்குநர், அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-600092.

42 Responses So Far:

Yasir said...

சகோதர் ஆரிஃப் அவர்களுக்கு...உங்களின் இந்த ஆக்கம் எங்களைபோன்ற வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களுக்கு தீனி போடுவதாய் உள்ளது..அல்லாஹ் உங்களுக்கு அறிவை விசாலமாக்கி வைத்து இத்தொடர் மேலும் பல ஆதார “உண்மையுடன்” வெற்றி கரமாக முடிய துவாச்செய்கின்றேன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அறிய வேண்டிய அருமை பெருமையுடன் கூடிய அரிய வரலாறு.

ஆதம் (அலை) இறக்கப்பட்ட நம் தாய்நாடு, கிட்டத்தட்ட நம் மண்டலம், ஆக நம் தாய்மொழியாகிய தமிழாக இருக்க இன்னும் அதிக வாய்ப்பு.

இன்னும் அதிகம் தாருங்கள், ஆவலுடன்....

Ebrahim Ansari said...

Assalaamu Alaikkum (Warah )

அன்பின் சகோதரர் ஆரிப் அவர்களுக்கு,

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அறிய வேண்டிய கருத்துக்கள் ஆதாரங்களுடன்.

சேக்கனா M. நிஜாம் said...

மிகவும் பயன் தரும் தகவல் !

வாழ்த்துகள் சகோதரருக்கு............

இப்னு அப்துல் ரஜாக் said...

//ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பொழுது இந்தியாவில் இறங்கினார்கள். இன்னும் அவர்கள் அங்கிருந்து கால்நடையாக 40 ஹஜ்ஜுகள் செய்துள்ளார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஜாஹிது//

காக்கா,இப்ராஹீம் நபிக்கு அல்லவா அல்லாஹ் கட்டளை இட்டான்,எல்லாரையும் ஹஜ்ஜுக்கு அழையுங்கள் என்று!நீங்கள் சொல்வது ஒரு வரலாற்று புரட்டு மட்டுமல்ல,இஸ்லாத்தில் இல்லாதது.எச்சரிக்கை.அல்லாஹ்வும்,ரசூலும் சொல்லாததை,சொன்னதாக சொன்னால் நரகம் என்ற ஹதீஸைக் கொண்டு எச்சரிக்கிறேன்.


//தவ்ராத் வேதத்தை உடையவர்கள் ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் தஞ்ச், மன்தல் எனப்படும் இடங்களுக்கிடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலையின் மீது இறக்கப் பெற்றார்கள். இன்னும் ஹவ்வா (அலை) அவர்கள் மக்காவின் நிலப்பரப்பைச் சேர்ந்த ஜித்தாவில் இறக்கப் பெற்றார்கள், என்று கூறுகின்றார்கள். இன்னும் சிலர், ஆதம் (அலை) அவர்கள் ஸரந்தீப் (இலங்கையின் பழைய அரபிப் பெயர்) என்ற இடத்தில் உள்ள பூத் எனும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்றும் கூறுகின்றனர். அறிவிப்பவர் – அபூ இஸ்ஹாக்//

தவ்ராத் என்பது மூஸா நபிக்கு அல்லவா அல்லாஹ் அருளினான்.

விளக்கம் தருவீர்களா?

அப்துல்மாலிக் said...

தகவல் பகிர்வுக்கு நன்றி.. மேலும்
//அவர்கள் அங்கிருந்து கால்நடையாக 40 ஹஜ்ஜுகள் செய்துள்ளார்கள் //
இபுராஹீம் நபி காலத்துலேதான் ஹஜ் கடமையாக்கப்பட்ட்து என்று படித்த ஞாபகம், தெளிவு படுத்தவும்

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இப்பதிவில் கொடுக்கப்பட்ட அரபி/தமிழ் சான்றுகள் அனைத்தும் நபித்தோழர்களின் சொந்தக் கருத்துகளாகும். அவை, இறைமறை/நபிமொழி ஆகிய வஹீத் தொடர்புடையவையாக இருந்தால் மறுக்கவியலாது; ஆனால் அவ்வாறு ஒன்றுமேயில்லை. நபித்தோழர்கள் கத்தாதா, இப்னு அப்பாஸ், அலீ (ரலி-அன்ஹும்) ஆகியோருக்கு இந்தத் தகவல்கள் எப்படித் தெரியவந்தன என்ற வேரடி வேண்டும்.

என்னுடைய மொழி எனக்கு உவப்பானதுதான். எனது ஊரும் எனக்கு உவப்பானதே. எனது மாவட்டமும் எனக்குப் பெருமையான ஒன்று. அதற்காக 'தஞ்ச்' என்பது தஞ்சாவூரைக் குறிக்கும் என்றெல்லாம் நான் பெருமை கொள்ளவியலாது.

Noor Mohamed said...

அவ்வப் போது செவி வழியாகக் கேட்டு நினைவில் நிற்காதிருந்த வரலாற்றை தெளிவான விளக்கத்துடன் இக்கட்டுரையில் விளக்கும் அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த ஆய்வை அவர்கள் தொடர்ந்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Shameed said...

//ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பொழுது இந்தியாவில் இறங்கினார்கள். இன்னும் அவர்கள் அங்கிருந்து கால்நடையாக 40 ஹஜ்ஜுகள் செய்துள்ளார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஜாஹிது//

அப்போது இருந்தே ஹஜ் என்ற வணக்க வழிபாடு இருந்ததா? கொஞ்சம் விளக்கம் தாருங்களேன்

sabeer.abushahruk said...

மேற்கண்ட கேள்விளுக்கு ஆதாரங்களுடன் பதில் தர வேண்டிய பொருப்பு கட்டுரையாசிரியருக்கு உள்ளது.

அதிரை சித்திக் said...

தலைப்பை பார்த்துமே ஆக்கத்தை படிக்க நான் முயற்சிக்க வில்லை. பின்னூட்டம் வருகை ..கண்டபின் விஷயம் ..விபரீத மாகுமோ என்பதால் படித்து பார்த்தேன் ..அர.அலஅவர்களின் வினா ..அறிஞர் ஜமீல் காக்காவின் ஆதங்கம் ..நான் வரவேற்கிறேன் ..என்னுள் எழும் கேள்வி தமிழ் விர்ப்பன்னர்கள் கூட தமிழின் வயதை இந்த அளவிற்கு கூற வில்லையே ..ஆதம் (அலை ) மொழி தேவை பட்டிருக்காதே ..யாரோடு பேசி இருப்பார்கள் இறைவன் ..அதன் பின் ஹவ்வா (அலை ) ..இதனை அலி (ரலி )அவர்கள் எப்படி அறிந்தார்கள் ..

சில அரபி வார்த்தைகள் அதன் கீழ் சில அர்த்தங்கள் ..பார்க்க கட்டுரை அழகாக இருக்கும் ..

ஆனால் எல்லோரும் ஏற்று கொள்ள கூடியதாக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்

.

.

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். இந்த ஆக்கத்தின் நோக்கம்?புரியவில்லை! இதனால் சொல்லவிளைவது யாது?இது நேரவிரயம். ஆதம்(அலை)அவர்கள் தமிழில் பேசி இருந்ததாகவே இருந்தாலும் அதனால் என்ன பயன்? இந்த ஆக்கமே தேவையில்லை என எனக்குப்படுகிறது!.

அதிரை சித்திக் said...

நபிமார்களை பற்றிய இஸ்லாமிய பதிவுகள்

ஆதாரமாக ..முதலில் எடுத்துக் கொள்ளும்

கால அளவு நூஹு நபி காலத்திற்கு பிறகுதான்

அதற்கு முன் என்றால் நபிமார்களுக்கு இறைவனால்

தெரிய படுத்தும் வேதங்கள் ஒன்றே ..எனவே நூஹு

நபி காலத்தில் ஏற்பட்ட உலக அழிவு நமது நம்பிக்கைக்கு

உள்பட்டது ..எந்த கிரகந்த ஆதாரமும் நாம் ஏற்க்க கூடாது

வேதங்களின் அடிப்படையில் ஆதாரம் தாருங்கள் அல்லது

நபி மொழி ..அதற்க்கு அப்பால் வந்தவர்களின் ..பதிவு

நாம் ஏற்ப்பது ..நல்லதல்ல ..

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். ஆதாரத்தை மையமாக வைத்து நம் சமூகத்தின் தேவை அது எப்படி பெறுவது? எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம்? எது உண்மை , எது இடைச்சொறுகள் என்பதையெல்லாம் ஆதரத்துடன் குறிப்பிட்டு ஆக்கம் இருந்தால் நல்லதும் அதன் விளைவு. பயன். எதன் நோக்கம் கொண்டு எழுதப்படுகிறது என்பதையும் நிறுவாக ஆசிரியர் கவனம் கொள்ளவும்.தயவு செய்து யாரும் தறாக புரிந்து கொள்ளவேண்டாம். இது போல் ஆக்கம் எழுதுவதை விட வேறு பல நல்ல ஆக்கம் சகோதரர் ஆரிப் அவரிகளிடம் எதிர் பார்க்கும் வாசகன் நான்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

முன்பு ஒரு பதிவில் நான் கேட்டிருந்த கேள்விக்கு பதிலாக சகோ. ஆரிஃப் அவர்கள் சில விளக்கங்களுடன் அதை ஒரு பதிவாக தந்து அது இன்று மூன்றாம் பாகமாக நீண்டிருக்கிறது. அப்படியே இந்த ஆய்வின் ஆதாரப்பூர்வமான முடிவு ஒரு வேளை தமிழாகவே இருந்து விட்டாலும் அதனால் நமக்கு ஈருலக பயன் ஏதுமில்லை என்பது திண்ணம். எனவே என்னுடைய தனிப்பட்ட‌ வேண்டுகோள் என்னவெனில் அருமையான எழுத்தாற்றல் வளத்தை பெற்றிருக்கும் சகோ. ஆரிஃப் அவர்கள் மற்ற விடயங்கள் பற்றி இங்கு எழுத ஆரம்பித்தால் அதை ஆர்வமுடன் படிக்க காத்திருக்கும் எண்ணற்ற வாசகர்களுள் நானும் ஒருவனாக இருப்பேன் இன்ஷா அல்லாஹ்.

நகைப்புக்காக தயவு செய்து யாரும் இவ்வாக்கம் பற்றி எதுவும் பின்னூட்டத்தில் எழுதி விடாதீர்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

ஒன்றும் பிரச்சினையில்லை. அதிரை நிருபரில் இக்கட்டுரையை எழுதுவதை நான் நிறுத்திக் கொள்கிறேன். அதிரை நிருபர் இணைய தளப் பொறுப்பாளர் இதுவரை வந்த இக்கட்டுரைத் தொடரை நீக்கிவிட்டாலும் அதனாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனினும், என்னுடைய http://ahamedarif.blogspot.in பிளாக்கில் இக்கட்டுரையைத் தொடர்வேன். விருப்பம் உள்ள சகோதரர்கள் அங்கு வந்து பார்வையிட்டுக் கொள்க. வஸ்ஸலாம். அஹ்மது ஆரிஃப்.

Yasir said...

//பிளாக்கில் இக்கட்டுரையைத் தொடர்வேன்./// உங்களை எழுத்தை விரும்பி படிப்பவன் நான் ஆனால் சகோதரரே விளக்கங்கள் கேட்டால் தலைதெரிக்க ஒடுவது ஒரு நல்ல கட்டுரையாசிரியருக்கு அழகல்ல....”இசை இரைச்சல்” ஆக்கத்தை பாருங்கள் மூச்சை பிடித்துக்கொண்டு தம் கட்டிகொண்டு பதில் கொடுத்து கொண்டு இருக்கின்றார்கள்......இக்கேள்விகளுக்கு பதில் அளிப்பதின் மூலம் பல விசயங்களை நாங்கள் அறிந்துகொள்ள முடியும்.....தவறிப்பின் திருத்தி அல்லது திருந்தி கொள்ளலாம்...அதற்க்காக வேறோரு பிளாக்கில் இதனை செய்வேன் என்ற வார்த்தைகள் உங்களை போன்றோருக்கு பொருத்தமாக தெரியவில்லை

Yasir said...

அன்பு அ.நி நெறியாளர் அவர்களுக்கு...எங்களுக்கு தெரியும் எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் எவ்வித பிரதிபலனுமின்றி இச்சேவையை செய்துவருகின்றீர்கள்....மார்க்க சம்பந்தமான ஆக்கங்களில் கொஞ்சம் இன்னும் சிரத்தை எடுத்து ஒரு தரத்துடன் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்....மார்க்கத்தில் விசயங்களின் தவறான தகவல்கள் ஒரு தீக்குச்சி போன்று சைஸ் சின்னதாக இருந்தாலும் ஒரு பெரிய வனத்தையே அழித்துவிடுவதுபோல்.....சமுதாயத்தில் பரவி கேடுவிளைவிக்கும் அல்லது ஒரு சலசல்ப்பை உண்டாக்கும் ........அல்லாஹ் பாதுகாப்பான்.....

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

//அர அல சொன்னது…
நீங்கள் சொல்வது ஒரு வரலாற்று புரட்டு மட்டுமல்ல,இஸ்லாத்தில் இல்லாதது.//

//மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
அப்படியே இந்த ஆய்வின் ஆதாரப்பூர்வமான முடிவு ஒரு வேளை தமிழாகவே இருந்து விட்டாலும் அதனால் நமக்கு ஈருலக பயன் ஏதுமில்லை என்பது திண்ணம். எனவே என்னுடைய தனிப்பட்ட‌ வேண்டுகோள் என்னவெனில் அருமையான எழுத்தாற்றல் வளத்தை பெற்றிருக்கும் சகோ. ஆரிஃப் அவர்கள் மற்ற விடயங்கள் பற்றி இங்கு எழுத ஆரம்பித்தால் அதை ஆர்வமுடன் படிக்க காத்திருக்கும் எண்ணற்ற வாசகர்களுள் நானும் ஒருவனாக இருப்பேன் இன்ஷா அல்லாஹ்.//



//அதிரை சித்திக் சொன்னது…
ஆனால் எல்லோரும் ஏற்று கொள்ள கூடியதாக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்//

//crown சொன்னது…
அஸ்ஸலாமுஅலைக்கும். இந்த ஆக்கத்தின் நோக்கம்?புரியவில்லை! இதனால் சொல்லவிளைவது யாது?இது நேரவிரயம். ஆதம்(அலை)அவர்கள் தமிழில் பேசி இருந்ததாகவே இருந்தாலும் அதனால் என்ன பயன்? இந்த ஆக்கமே தேவையில்லை என எனக்குப்படுகிறது!.//


மேற்கண்ட சகோதரர்கள் போன்றோர், இக்கட்டுரை வரலாற்றுப் புரட்டு, நேரவிரயம், மக்களுக்குப் பயனுள்ளதாக இல்லாதது, இன்னும் குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமானது, முட்டாள்தனமான கட்டுரை என்று கருத்துக்களைப் பார்த்த பின்னர் நான் இக்கட்டுரையை எழுதுவதை பலர் விரும்பவில்லை என்று தோன்றியதால் அவர்களின் பொன்னான நேரத்தை நாம் ஏன் வீணடிக்க வேண்டும் என்று அவ்வாறு கூறினேனே அன்றி, கேட்கப்படும் கருத்துக்களுக்குப் பதிலளிக்க இயலாமல் அல்ல. இத்தொடரின் 2ஆவது கட்டுரையின் பின்னூட்டங்களுக்குக் கருத்துரையாக மொத்தமாக ஒரே கட்டுரையாக அஹ்மது சாச்சா அவர்களுக்கு மே 2ஆம் தேதியன்று அனுப்பி உள்ளேன். அது அவர்கள் அனுமதி பெற்ற பின் வெளியிடக் கோரியுள்ளேன. இந்த மூன்றாம் தொடரின் பின்னூட்டங்களில் உள்ள கேள்விகளுக்கும் தேவையான கருத்துகளைத் தயார் செய்து கொண்டு தான் உள்ளேன்.

Ebrahim Ansari said...

அன்புள்ள ஜனாப். அஹமது ஆரிப் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தொடர்கள் எழுதும்போது இப்படி சில கேள்விகள் எழவே செய்யும். நாங்கள் அவ்வளவு மார்க்க கல்வி படித்தவர்கள் அல்ல. உங்களைப்போல் மார்க்க கல்வி படித்துப் பட்டம் பெற்று எழுதுபவர்களைத்தான் நம்பி இருக்கிறோம். நம்புகிறோம். எங்களில் சிலர் கேட்கும் கேள்விகளுக்கு தெரியாத்தனமாக கேட்பதாக எடுத்துக் கொண்டு பொறுமையாக விளக்கம் தந்தால்தான் நாங்களும் அறிவீட்ட முடியும்.

மூன்றாம் தொடரின் பின்னூட்டங்களுக்கும் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கும் தேவையான கருத்துக்களை தயார் செய்து கொண்டுதான் உள்ளேன் என்று ஒற்றை வரி பதிலை ஆரம்பத்திலேயே நீங்கள் அளித்து இருந்தால் அனைவருக்கும் திருப்தியாக இருந்து இருக்கும். அதைவிட்டு தளத்தில் இருந்தே வெளியேறுவேன் என்று அறிவித்தது என் போன்றவர்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

ஒருவேளை இந்த தொடரின் கருப்பொருளில் - அது கற்பிக்கும் வினைக்கருத்தில் பெரிய பயன்படும் விளைவுகள் இல்லையே என்று தம்பி கிரவுன் போன்றவர்கள் சொன்ன அபிப்பிராயத்தை ஏற்று தொடரை முடிக்கவேண்டுமென்று நீங்கள் கருதி இருந்தால் உங்களின் மற்ற தலைப்பில் தரும் ஆக்கங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்த அறிவுத்திரை போடவேண்டுமென்று அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.

மருமகன் யாசிர் அவர்கள் கூறுவதுபோல் இசை பற்றிய ஒரு பட்டி மன்றம் நடைபெற்று வருகிறது. ரசித்துப் படிக்கிறோம். காரணம் பலரின் பல அறிவுப் பரிணாமங்கள் வெளிப்படுகின்றன. வாதப்பிரதிவாதங்களில் வெளிப்படும் கருத்துச்சுடர்கள் மகிழ்வையே ஏற்படுத்துகின்றன.

உங்களின் மற்ற தலைப்பில் இனி வரும் கட்டுரைகளை விரும்பிப் படிக்கலாம் என்று இருந்தோம். அவைகளை உங்கள் தனி வலைப்பூவில்தான் வண்டுபோல் பறந்து வந்து படிக்கவேண்டுமென்று இறைவன் நாடினால் அப்படியே நடக்கட்டும்.

வஸ்ஸலாம்.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

//Ebrahim Ansari சொன்னது…
தளத்தில் இருந்தே வெளியேறுவேன் என்று அறிவித்தது என் போன்றவர்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.//

இப்ராஹிம் காக்கா,
இக்கட்டுரையை எழுதுவதை நான் நிறுத்திக் கொள்கிறேன் என்று தான் எழுதினேனே அன்றி, தளத்தில் இருந்தே வெளியேறுவேன் என்று நான் அறிவிக்கவில்லையே!

Noor Mohamed said...

மரியாதைக்குரிய சகோ. அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில். அவர்களின் மன வேதனையில் நானும் பங்கு கொள்கின்றேன்.

//அர அல சொன்னது…
நீங்கள் சொல்வது ஒரு வரலாற்று புரட்டு மட்டுமல்ல,இஸ்லாத்தில் இல்லாதது.//

இவ்வாறாக எடுத்தேன் சாய்த்தேன் என்று அர்த்த மற்ற முறையில் பத்வா கொடுத்திருப்பதும், மேலும் புரட்டு, இல்லாதது என்ற நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதும் வேதனைக்குரியதே.

பக்குவமான பண்பாடு காத்து பயன் பல பெற வல்ல அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நல்லருள் புரிவானாக.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்கினிய சகோதரர்களுக்கு !

சகோதரர் அஃபளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்ஃபில் அவர்கள் குறிப்பிட்டது போல் இரண்டாம் அத்தியாயம் வரை வாசகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலுரையாக ஒரு தனி பதிவை அனுப்பித் தந்தார்கள், இதற்கிடையில் பதிலுரைகள் பதிவை நிறைவில் பதியலாம் தொடரை தொடரலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது அவ்வாறே தொடர்கிறார்கள்...

விமர்சனங்களும் கேள்விகளும் பதிவுவைச் சுற்றியே இருந்திருக்கனும்... அதைவிடுத்து பதிவாளரை விமர்சிப்பதை தவிர்த்தே ஆகவேண்டும்.

இதுவரை வெளியான மூன்று அத்தியாயங்களில் காரணிகளையும், தொடர்புகளையும் பேசப்பட்டு வந்ததையும் எழுதப்பட்டு வந்ததையுமே விளக்கிக் கொண்டு வந்திருக்கிறார் சகோ.அஹமது ஆரிஃப் அவர்கள்.

தனி மின்னஞ்சல்களாக கிடைக்கப்பெற்ற விமர்சனங்களில் கூட கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிவாளர் பதில் தரவேண்டும் என்றும் கேட்டிருந்தார்கள் அதில் சில தொடரை நிறுத்திவிடுங்கள் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

தொடர் நீளும்வரை அந்தந்த அத்தியாங்களில் எழும் ஐயங்களை, கேள்விகளை கேட்டுவைப்போம், அல்லது கண்டங்களை பதிந்தும் வைப்போம், அவைகளுக்கு பதிலுரை அளிப்பது கட்டுரையாளரின் கடமை என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்வோம்.

நேர விரயம் என்பதை விடுத்து, நம்மால் தேடி எடுக்க வியலாத அல்லது முயற்சிக்காத ஆய்வுகளை தேடியெடுத்து பதிவாக தருவதற்கு மதிப்பளித்து சகோதரர் அவர்களின் தெளிவான பதிலுரைக்கும் காத்திருப்போமே...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கட்டுரையாளர் அவர் ஆய்வில் கிடைத்ததை பெரும்பாலும் ஆதாரங்களுடன் தான் கொடுத்துள்ளார்கள்.

ஆதி காலத்தைய வரலாறுகளில் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். சர்ச்சையாக தெரிந்தால் அதை மறுத்து நாம் அறிந்த ஆதாரங்களை காட்டி கட்டுரையாளரின் விளக்கத்தை நாடனும்.

கட்டுரைக்குத தான் கருத்துரை கொடுக்கனும். அதை விடுத்து ஒருவர் பின் ஒருவராக ஏற்கனவே கொடுத்த கருத்தை அடிப்படையாக வைத்து அதையே பின் பற்றி ஆய்வாளரின் ஆர்வத்தை குலைக்கும் வகையில் கருத்திடுவது நல்லதாக தெரியவில்லை.

மரியாதைக்குரிய சகோ. அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில். அவர்களின் மன வேதனையில் நானும் பங்கு கொள்கின்றேன்.

Ebrahim Ansari said...

அன்புள்ள ஜனாப். அஹமது ஆரிப் அவர்களுக்கு,

தவறுக்கு வருந்துகிறேன். தளத்தில் இருந்து வெளியேறுவதாக புரிந்துகொண்டது என் தவறுதான்.

தம்பிகள் அபூ இப்ராஹீம், எம். ஹெச் ஜெ., நூர் முகமது ஆகியோரின் உணர்வுகளோடு என் உணர்வுகளையும் இணைக்கிறேன்.

வஸ்ஸலாம்.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

கட்டுரை என்பதற்கு ஆங்கிலத்தில் artical என்று எழுதுவோர் இக்கட்டுரையினை ‘முட்டாள்தனமான கட்டுரை’ என்று கூறியதாலும், அதுபோன்று ஸுன்னா என்றால் என்ன என்று தெளிவாகக் குறிப்பிடாமல், இக்கட்டுரை குர்ஆன் ஸுன்னாவிற்கு மாற்றமாக உள்ளது என்றும், அறிவிப்பாளர் பெயர், அறிவிக்கும் ஸஹாபி அல்லது தாபிஈயின் பெயர், அறிவிப்பாளர் தொடர், நூலின் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட்ட பின்னரும் இது வரலாற்றுப் புரட்டு, இஸ்லாத்தில் இல்லாதது என்றும் கூறி, கட்டுரையின் நோக்கம் கட்டுரையின் தொடர் (1)லேயே தெளிவு படுத்தப்பட்டதன் பின்னரும், புரியாமல் இருக்கிறார்களே என்ற வருத்தம் தான். Nothing else..

எனவே, கட்டுரையின் நோக்கம் இதுவரை புரியாமல் இருக்கும் சகோதரர்கள் இக்கட்டுரையின் தொடர் (1) ஐ மீண்டும் படிக்குமாறு வேண்டுகிறேன்.

அஹ்மது சாச்சா அவர்கள் இத்தொடரின் (2) ஆம் கட்டுரையின் பின்னூட்டங்களுக்கான எனது கருத்துரையைப் பதியுமாறு அனுமதி அளித்து விட்டார்கள். எனவே, முதலில், அதனை இக்கட்டுரையின் (2) ஆம் தொடரின் பின்னூட்டப் பகுதியில் பதிகின்றேன்.

சகோதரர்கள் இப்ராஹிம் அன்சாரி, யாஸிர், நூர் முஹம்மது ஆகியோருக்கும், நெறியாளருக்கும் எனது நன்றி.

அதிரை சித்திக் said...

எழுத்தாளன் பண்முகம் கொண்ட ஆசாமி

அவன் பிடிக்கும் எழுத்தாணி பல வகை கொண்டது

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தான் கையாளும் விதம்

வேறு படும் ..ஆவேசப்படும் எழுத்து அச்சப்படும் எழுத்து

வரலாற்று நுணுக்கம் கொண்ட எழுத்து ..வியக்கும் எழுத்து

கவிதை .. ரசனை எழுத்து ..கேட்டதை பார்த்ததை அப்படியே

பதியும் பதிவு ..இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்

சகோ .ஆரிப் .கடினமாக உழைத்து சரித்திர ஆதாரங்கள் .பழமையான

ஊளை சுவடி ஆதாரங்கள் கொண்டு தங்களின் எழுத்து முயற்சி

தொடரட்டும் ..நீங்கள் எங்கு எழுதினாலும் நல்லதைத்தான்

எழுத போகிறீர்கள் ..ஒவ்வொருவரின் எழுத்து சாயலை நாம்

ரசித்து படிக்க வேண்டும் . முழு புத்தகமாக நீங்கள் எழுதிய பின்னர்

என் கையில் கிடைத்திருந்தால் என் உணர்வுகள் மாறி மாறி

வந்திருக்கும் ..நவீன யுகம் உடனுக்குடன் பதில் தங்கள்

மனதினை சலன படுத்தியதற்கு வருத்துகிறேன் ..

நீங்கள் வரலாற்று பின்னணியோடு ஆய்வு கட்டுரை

எழுதுபவராக இருப்பதால் .தூற்றுதலை போற்றுதலை

உணர்வுகளை ..சமமாக மதியுங்கள் ..நம்ம எழுத்தில்

இதனை தாக்கமா எனா மகிழுங்கள்

சிலரின் எழுத்தாணி சிர்ப்பியின் உளி ..

சிலரின் எழுத்தாணி வீரனின் வாள் ..,

சிலரின் எழுத்து தாகம் தீர்க்கும் நன்னீர்

சிலரின் எழுத்து கசக்கும் கசாயம்

சில நேரங்களை ஆளுயர அலை கரையை

தொடும்போது குதிகாலை தழுவி செல்லும்

சில சமயம் அலையே தெரியாது அது ஆழி பேரலையாக

வந்து அடித்து செல்லும் அது போன்று தான் எழுத்து .

அச்சம் வேண்டாம் ஆவேசமும் வேண்டாம்

தொடருங்கள் உங்கள் பணியை ..ஊதியம் இல்லா பணிக்கு

இத்தனை வசவுகளா ..உறவின் வசவு ..வீரியம் இருக்காது

தொடருங்கள் ஆரிப் உங்கள் பணியை .,,.

Noor Mohamed said...
This comment has been removed by the author.
Noor Mohamed said...

மரியாதைக்குரிய சகோ. அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில். அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

குரான் மற்றும் சில ஹதீஸ் தொகுப்புகளின் தமிழ் மொழி பெயர்ப்பையும் அரபி அகராதியையும் கையில் வைத்துக்கொண்டு, சிலரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, மக்களை குழப்பிக் கொண்டு, பத்வா கொடுத்துக் கொண்டு, குதர்க்கம் பேசுபவர்களுக்கு, அறிவுக்கு விருந்தாக குரான் ஹதீஸ் அடிப்படையாகக் கொண்ட தப்சீர் விளக்கத்தை தெளிவாக தங்கள் கட்டுரையின் (2) ஆம் தொடரின் பின்னூட்டப் பகுதியில் பதிந்துள்ளீர்கள். இன்ஷா அல்லாஹ் மூன்றாம் தொடரின் பின்னூட்டங்களில் உள்ள கேள்விகளுக்கும் தேவையான கருத்துகளைத் தயார் செய்து இதுபோன்று விரிவான விளக்க்ம் தர வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.

தொடருங்கள் உங்கள் பணியை. அறிவை அள்ளிக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.ஆரிப் அவர்களுக்கு,என் கருத்தை மறுபடியும் படித்து பார்க்கவும். நான் யாரையும் குறை கூறுபவன் அல்லன். மேலும், இது போல் ஆய்வு என் வாழ்னாளில் நினைத்தாலும் முடியாது. அது "முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைபடுவது போல்". ஆனால் உங்களின் அருமையான இந்த ஆய்வின் பயன் என்ன என்பதுதான் என் கேள்வி!. மேலும் நீங்கள் பல ஆக்கம் எழுதனும் என்பதும் என் வேண்டுகோள். மேலும் சகோ. யாசிர் சொன்னதை நான் வழி மொழிகிறேன். கட்டுரை ஆசிரியர் என்பவர் பலரின் கேள்விக்கு பதில் அளிக்கக்கூடியவராக இருக்க வேண்டுமே ஒழிய சினம் கொண்டு நான் இத்துடன் இந்த ஆக்கத்தை முடிக்கிறேன் அல்லது முன்பு எழுதிய ஆக்கத்தை அழித்துவிடுங்கள் என்று சொல்வது உங்களைப்போல் ஆராய்ந்து எழுதும் எழுத்தாளருக்கு, படைப்பாளிக்கு நல்லதல்ல என்பது இந்த இளைய சகோதரனின் கருத்து.

இப்னு அப்துல் ரஜாக் said...

bro Ahamed Arif (Arabic Institute of Commerce), bro noor mohamed


'என் மீது, எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால்தான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்" என அனஸ்(ரலி) அறிவித்தார். புகாரி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய் யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்; மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது."
முகீரா(ரலி) அறிவித்தார். புகாரி


10:69. “அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று (நபியே!) கூறிவிடும்.THE QURAN


மேற்கண்ட குரான்,ஹதீஸ் சொல்லும் விஷயத்தில் அக்கறையாய் இருந்து,பதில் சொல்லுங்கள்.இதுவரை மக்கள் மன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதில் எங்கே?இனி கேட்கும் கேள்விகளுக்கு அந்தப் பதிவில் பதில் தந்தால் நல்லது.நீங்கள் சொல்ல வரும் செய்தி ஒரு நபியைப் பற்றி,அல்லாஹ்வின் ஒரு தூதர் பற்றி.அதீத கவனம் தேவை.

Noor Mohamed said...

//மேற்கண்ட குரான்,ஹதீஸ் சொல்லும் விஷயத்தில் அக்கறையாய் இருந்து,பதில் சொல்லுங்கள்.//

சகோ. அர அல, அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் குரான்,ஹதீஸ் தாங்கள் மட்டுமே பின்பற்றுவது, தங்களுக்கு மட்டுமே அக்கறை இருப்பது போலும் சித்தரித்து எழுதியுள்ளீர்கள்.

நானும் தங்களின் பல பின்னூட்டங்களை படித்துக் கொண்டுதான் வருகிறேன். இதில் வேதனையான விஷயம் என்னவெனில், வரிக்கு வரி குரான்,ஹதீஸ் வார்த்தைகளை எழுதிக் கொண்டே இருப்பீர்கள் ஆனால் விளக்கம் என வரும்போது, கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையில், onlinepj.com தளத்தை விளக்கம் என்பீர்கள். onlinepj.com எல்லாம் குரான்,ஹதீஸ் விளக்கம் காண ஏற்றுக் கொள்ள முடியுமா? வேண்டுமானால் தங்களைப் போன்று PJ மத்ஹபு பின்பற்றுபவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

இக்கட்டுரையின் ஆசிரியர் மிகவும் தெளிவாக,
//இந்த அறிவிப்புகள் அனைத்தும் இமாம் தபரீ அவர்கள் தொகுத்த தாரீஃகுத் தபரீ என்ற உலக வரலாற்று நூலில் வருகின்றன// என்றும், அறிவிப்பாளர் பெயர், அறிவிக்கும் ஸஹாபி அல்லது தாபிஈயின் பெயர், அறிவிப்பாளர் தொடர், ஆகியவற்றைக் குறிப்பிட்ட பின்னரும், இந்த விளக்கங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளாத நீங்கள், onlinepj.com விளக்கங்களை மட்டும் பிறருக்கு எத்திவைப்பது எந்த வகையில் நியாமானது? நீங்களே உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய அதிரை நிருபர் குழுவுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் - அன்பும் அமைதியும் நிறைக!

---------------------------------------------------------
அங்கே அடைப்பிட்டதை இங்கே திறக்கிறேன். ஏனெனில் உண்மை எப்படி மறுக்கப்பட்டாலும் திறக்கப்படுதல் வேண்டும். தகாத செயலை எவர் செய்தாலும் ஹராம் என்று அறிவித்து அதை இறைவன் மன்னிக்கமாட்டான் என்பதை நினைவில் கொள்க! இந்த மடல்லின் அத்தியாவசியம் கருதி இவ்விழை ஆசிரியர் என்னை மன்னிப்பாராக!
---------------------------------------------------------

>>>>பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் ஆய்வுகளின் அடிப்படையில் இசை கருவிகளுடன் இசைக்கப்படும் இசையை இஸ்லாம் தடை செய்துள்ளது,

ஆதரிக்கவில்லை<<<<<<

”**********பெரும்பாலான************ மார்க்க அறிஞர்கள்”

இதற்கு என்ன பொருள் அதிரை நிருபர்களே?

மார்க்க அறிஞர்கள் என்று கூறப்படும் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு விசயம். உண்மைதானே? இங்கே நான் ஏதாவது மாற்றிச்

சொல்கிறேனா என்ன?

அன்று *****பெரும்பாலான***** மார்க்க அறிஞர்கள் உலகம் தட்டை என்றுதான் அழுத்தமாகக் கூறிக்கொண்டிருந்தார்கள். பிறகு என்னாயிற்று?

இன்றும் *****பெரும்பாலான***** மார்க்க அறிஞர்கள் கவிதை எழுதுவது ஹராம் என்றுதான் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதை அதிரை

நிருபர் உடைத்தது. மூத்தசகோ அஹ்மது அவர்கள் உடைத்தார்கள். அதற்குத் தளம் அமைத்துக்கொடுத்த பெருமை அதிரை நிருபருக்கு உண்டு.

அதனால்தான் நான் அதிரை நிருபர் வலைப்பூவை நேசிக்கத் தொடங்கினேன். இல்லாவிடில் நான் இங்கே வந்திருக்கவே மாட்டேன். குண்டுச் சட்டியில்

குதிரை ஓட்டிவோர் என்றால் நான் ஏன் போட்டிபோடப் போகிறேன்? அப்படியே அவர்களை ஓட்டவிட்டுவிட்டு வேடிக்கை பார்த்தல்லவா சிரிப்பேன்.

”என்னை வணங்குவதற்கேயன்றி வேறு எதற்காகவும் உங்களை நான் படைக்கவில்லை” என்று இறைவன் கூறுவதாகத்தான் *****பெரும்பாலான*****

மார்க்க அறிஞர்கள் இன்றும் கூறுகின்றார்கள். ஆனால் அதை அகமது ஆரிப் என்ற ஆய்வாளர் இதே அதிரை நிருபரில் உடைத்தார். “என்னை

அறிவதற்கேயன்றி வேறு எதற்காகவும் உங்களை நான் படைக்கவில்லை” என்று இறைவன் கூறிய உண்மையைச் சொன்னார். அதனாலும் எனக்கு

சகோ அகமது ஆரிபையும் அதிரை நிருபரையும் பிடித்துப்போயிற்று.

இன்னும் இங்கே, இறைவன் ஆணா பெண்ணா என்ற அறிவுத்தள ஆய்வு, உருவமுள்ளவனா இறைவன் என்ற அற்புதக் கருத்தாடல்கள் என்று நிறைய

விலங்கிடப்படாத அறிவினைத் திறந்து கலந்துரையாடல் நிகழ்ந்ததால்தான் அதிரை நிருபரை நான் ஏற்றேன். இல்லாவிட்டால்...... ..... ...... ......

(தொடரும்)

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

(தொடர்ச்சி....)

>>>>குர்ஆன் ஹதீஸ்களுக்கு தவறான சுயவிளக்கங்களுடன் தெளிவற்ற தகவல் பரிமாற்றம் செய்வதால்<<<<

நல்லதொரு கருத்தை இங்கே முன்வைத்திருக்கிறீர்கள். அப்படி தவறான சுயவிளக்கங்களைத் தருவது யார் எனபதை நாம் தயைகூர்ந்து கவனிக்க

வேண்டும். ஒருவன் பிரபல்யமாக இருக்கிறான் என்பதாலேயே அவன் சொல்வதெல்லாம் சரியென்று நீங்கள் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

ஏனெனில் நீங்கள் அறிவுடையவர்கள் அல்லவா? அறிவைத் தேடுபவன்தானே? உண்மையான முஸ்லிம் தானே?

சாத்தானால் கூட்டத்தைச் சேர்க்க முடியும். சத்தியவானால் கூட்டத்தைச் சேர்க்க முடியாது, ஆனால் அவனால் உயர்வான சத்தியத்தைக் காக்க முடியும்.

அது நிதானமாக.... அமைதியாக.... மெதுவாகத்தான்... தன் வீரத்தை நிலைநாட்டும். ஆனாலும் அது ஒன்றுதானே வீரம்? உண்மை ஒன்றுதானே

உண்மையான வீரம்?

>>>நம் மூத்த சகோதரர் ஜமீல் கேட்டுக்கொண்ட பிறகும் பதிவுக்கு தொடர்பில்லாத மறுமொழிகள் பதியப்பட்டுவருகிறது.<<<<

சகோ ஜமீல் எனக்கு மிக நெருக்கமானவர். என் உடன்பிறவா அண்ணன். சகோ ஜமீலுக்குத் தெரியும் நான் யார் என்று. நாங்கள் ஏராளமான

விசயங்களில் தாராளமாகக் கருத்தாடி இருக்கிறோம். அவரின் மகா கர்வத்தை ஏற்க முடியாமல் வெகுண்டு, ஆனாலும் மெல்ல கிரகித்து நான்

அன்போடு ஏற்றிருக்கிறேன். அதற்குக் காரணம் அவரின் அறிவு தேடும் அறிவு. அன்பு தேடும் அளப்பரிய பாசம். அவரின் மச்சான் அன்புச்சகோ ஜமீல்

பற்றி எனக்கு அருமையான விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். ஓ அப்படியா என்று சமாதானம் அடைந்திருக்கிறேன். ஆனாலும் துபாயில் பிரியாவிடை

தந்தபோது ஜமீல் நாணா மாறவே இல்லையா என்று வேதனையும் பட்டேன்.

இங்கே இந்தப் பதிவில் இசை கேலிசெய்யப்பட்டது. அதனால் மட்டுமே நான் இங்கே எழுதினேன். நீங்கள் எல்லாம் கவனித்தீர்கள் என்றால். நான் வேறு

எந்த இழையிலும் இழைய முற்பட்டதில்லை.

>>>>பதிவுக்கு தொடர்பில்லாத சுய விளங்களுடன் பின்னூட்டங்கள் தொடருவதால், இத்துடன் பின்னூட்டங்கள் நிறுத்தப்படுகிறது.<<<<<

தொடர்பில்லாத விசயம் என்று எப்படி கணித்தீர்கள் நிருபர்களே? உங்களை நான் மேன்மைனவர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்? இப்படிக்

கவிழ்த்துவிட்டீர்களே? நியாமமா? அறிவுக்குப் புறம்பான செயலல்லவா இது?

>>>இறைவன் நாடினால்... ஒரு தனி பதிவில் இது தொடர்பாக உங்கள் எல்லோருடைய கருத்துக்களை பதியலாம்.<<<<

இப்படித்தான் நீங்கள் மற்ற இழையிலும் சொன்னீர்கள். இது வெறுமனே தப்பிக்கும் வழி என்று இப்போதுதானே தெரியவருகிறது. ஒரு மட்டுநர் செய்யும்

காரியமா இது? நான் பல காலம் மட்டுநராய் இருந்து தமிழ் அறிவுசார் உலகுக்குச் சேவை செய்திருக்கிறேன். ஒருபோதும் இப்படி ஒரு குழந்தையை

ஏமாற்றுவதுபோல் எவரையும் ஏமாற்றியதில்லை.

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பின் சகோ அர அல அவர்களுக்கு,AOA

>>>>>>இப்ராஹீம் நபிக்கு அல்லவா அல்லாஹ் கட்டளை இட்டான், எல்லாரையும் ஹஜ்ஜுக்கு அழையுங்கள் என்று! நீங்கள் சொல்வது ஒரு வரலாற்று புரட்டு மட்டுமல்ல, இஸ்லாத்தில் இல்லாதது. எச்சரிக்கை. அல்லாஹ்வும், ரசூலும் சொல்லாததை, சொன்னதாக சொன்னால் நரகம் என்ற ஹதீஸைக் கொண்டு எச்சரிக்கிறேன்.<<<<<<

ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பொழுது இந்தியாவில் இறங்கினார்கள். இன்னும் அவர்கள் அங்கிருந்து கால்நடையாக 40 ஹஜ்ஜுகள் செய்துள்ளார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஜாஹிது

இதுவும் மேலே உள்ள ஹதீஸ் மூலம்தானே நிறுவப்பட்டுள்ளது. நீங்கள் ஹதீஸ்கள் சொல்வதைக் கேட்பவர்தானே? இங்கே என்ன பிரச்சினை? சற்று விளக்கமாகக் கூறுவீர்களா? இதற்கு நீங்கள் கூறும் பதில் வழியாக உங்கள் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக அறிய விழைகிறேன்

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ இப்றாஹிம் அன்சாரி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்!

>>>>>மருமகன் யாசிர் அவர்கள் கூறுவதுபோல் இசை பற்றிய ஒரு பட்டி மன்றம் நடைபெற்று வருகிறது. ரசித்துப் படிக்கிறோம். காரணம் பலரின் பல அறிவுப் பரிணாமங்கள் வெளிப்படுகின்றன. வாதப்பிரதிவாதங்களில் வெளிப்படும் கருத்துச்சுடர்கள் மகிழ்வையே ஏற்படுத்துகின்றன. <<<<

இங்கே எழுதுவது வீண் அல்ல என்ற நம்பிக்கையைத் தருகின்றன உங்கள் சொற்கள். நன்றி.

இஸ்லாமியர் அனைவரும் சகோதரர்கள். ஏற்ற இறக்கம் என்பதை இஸ்லாம் போதிக்கவில்லை. சரி தவறுகளை மட்டுமே வலியுறுத்துகிறது. இறைவனை அறியமுயலும் அறிவுடையோனாய் இஸ்லாமியனை வாழச் சொல்லுகிறது. அப்படியான அறிய முயலும் அறிவுடையோனே இஸ்லாமியன்.

அன்புடன் புகாரி

Unknown said...

http://islamqa.info/en/ref/5000

Conclusion

Perhaps – for fair-minded and objective readers – this summary will make it clear that the view that music is permissible has no firm basis. There are no two views on this matter. So we must advise in the best manner, and then take it step by step and denounce music, if we are able to do so. We should not be deceived by the fame of a man in our own times in which the people who are truly committed to Islam have become strangers. The one who says that singing and musical instruments are permitted is simply supporting the whims of people nowadays, as if the masses were issuing fatwas and he is simply signing them! If a matter arises, they will look at the views of fuqahaa’ on this matter, then they will take the easiest view, as they claim. Then they will look for evidence, or just specious arguments which are worth no more than a lump of dead meat. How often have these people approved things in the name of sharee’ah which in fact have nothing to do with Islam!

Strive to learn your Islam from the Book of your Lord and the Sunnah of your Prophet. Do not say, So-and-so said, for you cannot learn the truth only from men. Learn the truth and then measure people against it. This should be enough for the one who controls his whims and submits himself to his Lord. May what we have written above heal the hearts of the believers and dispel the whispers in the hearts of those who are stricken with insinuating whispers. May it expose everyone who is deviating from the path of Revelation and taking the easiest options, thinking that he has come up with something which none of the earlier generations ever achieved, and speaking about Allaah without knowledge. They sought to avoid fisq (evildoing) and ended up committing bid’ah – may Allaah not bless them in it. It would have been better for them to follow the path of the believers.

And Allaah knows best. May Allaah bless and grant peace to His Messenger who made clear the path of the believers, and to his companions and those who follow them in truth until the Day of Judgement.

Summary of a paper entitled al-Darb bi’l-Nawa li man abaaha al-Ma’aazif li’l-Hawa by Shaykh Sa’d al-Deen ibn Muhammad al-Kibbi.

For more information, please see:

Al-I’laam bi Naqd Kitaab al-Halaal wa’l-Haraam, by Shaykh al-‘Allaamah Saalih ibn Fawzaan al-Fawzaan

Al-Samaa’ by Shaykh al-Islam Ibn al-Qayyim

Tahreem Aalaat al-Tarab, by Shaykh Muhammad Naasir al-Deen al-Albaani (may Allaah have mercy on him)



Islam Q&A
Sheikh Muhammed Salih Al-Munajjid

அன்புடன் புகாரி said...

நல்ல எண்ணங்கள் சொன்னது… music is permissible has no firm basis

இஸ்லாம் இசையைத் தடை செய்துவிட்டதாக இதில் ஏதும் குர்-ஆன் வசனங்கள் இணைக்கப்படவில்லையே?

இணையம் முழுவதும் இதுபோல பலப்பல கட்டுரைகள் குவிந்து கிடக்கின்றன. இங்கே அவற்றையெல்லாம் வெட்டி வெட்டி இங்கே ஒட்டினால், எவரேனும் வாசிப்பார்களா? வாசிப்பீர்கள் என்றால் ஒரு வார்த்தை சொல்லுங்கள், கொண்டுவந்து குவித்துவிடுகிறேன்.

அன்புடன் புகாரி

sabeer.abushahruk said...

I agree with the above comment of bro Buhari. First of all I would ask AN to identify "Nalla Yennangal" as it is one of our terms that to have known persons only to comment here. Secondly, we asked that to have Quran hadhees reference on any religious sayings but not just declaration.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அன்புச் சகோதரர்களுக்கு:

நல்ல எண்ணங்கள் நம் யாவரிடமும் இருப்பதில் சந்தோஷமே !

"அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துக்கள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துக்கள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசகர் நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துக்கள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு"

"நல்ல எண்ணங்கள்" என்ற பெயரில் கருத்து பதிந்திருக்கும் சகோதரர்/சகோதரி பற்றிய சுய அறிமுகமில்லாததால் அதற்கான பதிலுரைகளை தவிர்த்து கொள்ளும்படி வாசகர்களை அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

பதிவுகளுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை அங்கே பதிவதனையும் தவிர்த்துக் கொள்ள வேண்டுகிறோம் !

அதனாலென்ன, செழுமையான கருத்தாடல்கள் தொடரும் நம் அதிரைநிருபரில் "இசை" பற்றிய தனி ஒரு பதிவும் விரைவில் வெளிவர இருக்கிறது !

நிற்க !

சுய அறிமுகம் பொதுவில் / தனிமின்னஞ்சலில் கிடைக்கும் பட்சத்தில் அவரின் கருத்துக்கான பதிலுரைகளை தொடரலாம்...

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)