Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இலங்கை தமிழ் மக்களின் அவதியும் அதற்கான தீர்வும்...! - ஆவணப்படம் ! 10

அதிரைநிருபர் | March 16, 2013 | , , , , ,


தமிழ் கூறும் நல்லுள்ளம் கொண்ட மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கும் மனித உரிமை ஆர்வர்களும் கண்ணீர்விடும் கொடுமைகள் இலங்கை மக்களால் சொல்லெனாத் துயரை அனுபவப் பட்டிருப்பதை எழுத்திலும்புகைப்படங்களாலும் காணொளிகளாவும் விவரித்துக் கொண்டிருக்கும் ஊடகங்களும், அந்த மக்களுக்காக ஆதரவுக் கரங்கள் நீட்டும் அமைப்புகள்இயக்கங்கள்அரசியல் கட்சிகள் வாழ்வாதார தீர்வுதான் என்ன என்று சொல்வதில் குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.
தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்திய இயக்கம் எதர்க்காக போராடத் துணிந்தார்களோ அவர்களாலே தன் இன மக்களான தமிழ் மொழியை மட்டுமே பேசக்கூடிய மக்களை பாகுபாடின்றி கொன்று அழித்த அத்து மீறல்களை மறைத்து விட்டு, இலங்கை இரணுவ அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக் நீதி கேட்டு போராடும் இயங்கங்ளால் இன்றைய நிலையில் இருக்கும் அந்த அப்பாவித் தமிழர்களுக்கு எவ்வகை நன்மைகள் செய்திருக்கிறார்கள் !?
அம்மக்களின் அமைதியான வாழ்வுக்கும், செழிப்பான எதிர்காலத்திற்கும் ஆக்கபூர்வமாக செயல்படத் தவறும் இந்த கேடுகெட்ட அமைப்புகளும், அரசியல்கட்சிகளும் அவர்களின் வேதனையிலும், வெந்த புண்ணிலும் நெருப்பை கொழுத்திப் போட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர்.
போருக்கு பின்னர் எவ்வாறு அரசும், மக்களும், கைதிகளும், பாதிக்கப்பட்டவர்களும் நடத்தப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறும் நெறிகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இதுவரை வெளிவந்தும் வராததுமான காணொளிகள், விரட்டியடிக்கப்பட்ட ஒரு சமுதாயம், கொன்று குவிக்கப்பட்ட சமுதாயம், பரதேசிகளாக தெருவில் தூக்கியெறியப்பட்ட சமுதாயம் ஒன்றின் கதறலை திட்டமிட்டே மறைத்து, தனது காலில் குத்திய முல்லுக்கு செருப்பை தேடும் இந்த கயவர்களின் கயமையை போட்டு உடைக்கும் இந்த ஆவணப்படம் சொல்லும் உண்மையை நன்னெறியாளர்களுக்கும், மனிதம் போற்றும் ஆர்வலர்களுக்கும் உண்மையை உரக்கச் சொல்லும்.

அதிரைநிருபர் பதிப்பகம்

10 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதுவரை இலங்கையில் காணாமல் போயிருக்கும் ஏராளமான முஸ்லீம்களின் நிலை என்னவென்பதே தெரியாமல் இருக்கிறது....

சந்தேகம் இன்னும் வலுக்கிறது, இந்த கூட்டுக் களவானிகள் மீதுதான்! சேனல் 4 என்ற ஆவணப்படத்தில் சுட்டுத் தள்ளும் மனித உயிர்கள் யாருடையதாக இருக்கும் என்று !!!!??

வல்லமை நிறைந்த அலலஹ்விடமே கையேந்துவோம் இன்ஷா அல்லாஹ் !

அந்த மக்களுக்கான வாழ்வாதாரத்திற்கும் அவர்களின் நல்வாழ்வுக்கும்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இலங்கையில் இஸ்லாமிய ரீதியில் தீர்வு கிடைத்திட துஆ செய்வோம்.

KALAM SHAICK ABDUL KADER said...

கண்ணீரும் செந்நீரும் கலந்த ஆவணம்
கண்டும் காணாமல் போவது கேவலம்!

عبد الرحيم بن جميل said...

நானும் ஒரு காலத்தில் விடுதலை புலிகளை ஆதரித்தவன் தான்!என்னை போன்று பலர் விடுதலைப் புலிகளின் உண்மையான முகத்தை அறியாதவர்கள் பலர் இன்னும் நம் சமுதாயத்திலும்,மாற்று மத தமிழர்களிளும் இருக்கின்றனர்.விடுதலை புலிகளாயினும் அவர்களை ஆதரிப்பவர்களாயினும் அவர்களை ஆதரிப்பது சரியன்று

KALAM SHAICK ABDUL KADER said...

//நானும் ஒரு காலத்தில் விடுதலை புலிகளை ஆதரித்தவன் தான்!என்னை போன்று பலர் விடுதலைப் புலிகளின் உண்மையான முகத்தை அறியாதவர்கள் பலர் இன்னும் நம் சமுதாயத்திலும்,மாற்று மத தமிழர்களிளும் இருக்கின்றனர்.விடுதலை புலிகளாயினும் அவர்களை ஆதரிப்பவர்களாயினும் அவர்களை ஆதரிப்பது சரியன்று//

இப்படித்தான் முஸ்லிம்களைப் பற்றிய உண்மையான நிலவரம் மறைக்கப்படும் பொழுது, நம் அறிவுக்கண்கள் மூடப்பட்டிருப்பதால், நாம் அறிந்தும் அறியாமலும் ஏமாற்று வ்லைகளில் சிக்கி விடுகின்றோம். அறிவுக்கண்ணைத் திறந்து விட்ட அ.நி.யின் இப்பதிப்பால் இன்னும் திருந்த வேண்டியவர்கள் பலர் உளர். அதனாற்றான், நேற்றிரவு இதன் இணைப்புச் சுட்டியை (யூட்யூப் லிங்க்) என் முகநூல் நண்பர்கட்கு அனுப்பி வைத்தேன். ஆனால், தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள் (டி என் டி ஜே தவிர்த்து) இக்குட்டையில் அரசியல் மீன் பிடிக்கின்றன; இஃதென்ன வேடிக்கை?! அரசியலுக்காக மார்க்கம் மற்றும் ஈமானின் அடிப்படையில் உற்ற சகோதரர்களாக (ஹதீஸின் கருத்துப்படி”ஒரு முஸ்லிம் உடைய வேதனை மற்றொரு முஸ்லிம் உணர வேண்டும்” என்பதும்) உணரமல் இருப்பவர்கள் இலங்கை முஸ்லிம்கள் படும் வேதனையில் “விசுவரூபம்” எடுக்காமல் இந்தத் தறுதலைகளின் பின்னால் கொடி பிடிப்பது ஏன் தானோ?!

அறிவுக்கண்ணைத் திறந்து விட்ட அதிரை நிருபர்க்கு அல்லாஹ்வின் அருள் கிட்டுமாக(ஆமீன்)

KALAM SHAICK ABDUL KADER said...


இன்று கண்டியில் “பொதுபல சேனா”வின் அட்டூழியங்களால் நம் சொந்தங்கட்கு அச்சுறுத்தல் ஏற்படவுள்ளதை அல்லாஹ் தடுக்க வேண்டும் என்ற வேண்டுதலில் அங்குள்ள முஸ்லிம்கள் நஃபிலான நோன்பு பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படிருக்கின்றனர். முன்னர் புலிகளால் தொல்லைகள்; இன்று சேனாவால் தொல்லைகள் என்று இருபக்க அடிகளால் இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் இலங்கை முஸ்லிம்களைப் பற்றி எண்ணாமல் இருப்பவனும் ஒரு முஸ்லிமா? என்றே எண்ணத் தோன்றுகின்றது. இலங்கை முஸ்லிம்கட்காக இறைவனிடம் கையேந்துவோம்; அவர்கட்காகக் கேட்கப்படும் பிரார்த்தனையின் பலனால், நமக்கும் அப்படிப்பட்ட பாதிப்புகள் வருவதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான் (ஆமீன்)

குறிப்பு: அதிரைப்பட்டினத்தில் என் வாப்பா அவர்களைப் போன்று 1957 க்கு முன்னர் இலங்கையில் வணிகம் செய்து இந்தியாவிற்குத் திரும்பி வந்தவர்கள் பலர் உளர். அவர்களிடம் கேட்டுப்பார்த்தால் உண்மை விளங்கும். அன்று அவர்களை எல்லாம் திருப்பி அனுப்பியது போன்றே, இன்று கொழும்பிலிருந்து திட்டமிட்டு அங்குள்ள ,முஸ்லிம்களை அழித்தொழிக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. (குறிப்பாக: என் புதிய அறை நண்பர் அவர்கள் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவராதலால் எனக்கு இப்பொழுது இலங்கையின் கண்ணீர்க் கதைகள் தினமும் சொல்லக் கேட்டு என் மன்மும் வாடுவதால் இதனை இங்குக் குறிப்பிட்டேன்; என் வாட்டத்தை மேலும் அதிகப்படுத்து விட்டது இந்த ஆவணப்படம்)

அலாவுதீன்.S. said...

விடுதலைப்புலிகளின் அநியாயம், அக்கிரமங்கள், அட்டகாசங்கள் இஸ்லாமியர்களை இன சுத்திகரிப்பு செய்த அனைத்தையும் - தமிழ்நாடு கேடு கெட்ட அரசியல் வியாதிகள், மீடியா கொடுங்கோலர்களும் வசதியாக மறைத்து இப்பொழுது தமிழ்நாடு முழுவதும் மாணவர்களை மூளை சலவை செய்து குளிர் காயந்து கொண்டு இருக்கிறார்கள்.

புலிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு எந்த மீடியாவும், அரசியல் வியாதிகளும் குரல் கொடுத்தார்களா?

அலாவுதீன்.S. said...

விடுதலைப்புலிகளுக்கு மாற்றாக சேனா என்ற சிங்கள ரவுடிகள் வளர்ந்து கலவரத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்க ரவுடிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சேனா ரவுடிகளின் அக்கிரமங்கள் தலை விரித்து ஆடிக் கொண்டு இருக்கிறது.

இந்த இலங்கை சேனா ரவுடிகளையும் இந்த ரவுடிகளை ஆதரித்து நிற்கும் இலங்கை அரசாங்கத்தையும் வல்ல அல்லாஹ் பார்த்துக் கொண்டு இருக்கிறான் தண்டிப்பதில் வல்ல அல்லாஹ்வே கடுமையானவன். இந்தக் கயவர்களின் அட்டகாசங்கள் நீண்ட நாள் தொடராது. வல்ல அல்லாஹ் நிச்சயம் பழி வாங்குவான்.

அலாவுதீன்.S. said...

யா அல்லாஹ்!
இந்தியா தொடங்கி உலகம் முழுவதும்
முஸ்லிம்களை பழிவாங்க துடித்துக் கொண்டு
இருப்பவர்களின் உள்ளங்களை நடுங்கச் செய்து
நீயே அவர்களின் அட்டகாசங்களில் இருந்து
முஸ்லிம்களை பாதுகாத்து நல்லருள் புரி கருணையாளனே!

இன்றுவரை உலகம் முழுவதும் கலவரங்களால் வீடு முதல் உறவு வரை அனைத்தையும் இழந்து நிற்கும் முஸ்லிம்களுக்கு
எல்லா வகையிலும் உதவி புரிந்து நல்லருள் புரி இரக்கமுடையோனே!

உலகம் முழுவதும் உன்னை அஞ்சக் கூடியவர்களின்
கைகளில் ஆட்சி அதிகாரத்தை வழங்கி நல்லருள் புரி ரஹ்மானே!

Adirai pasanga😎 said...

//உலகம் முழுவதும் உன்னை அஞ்சக் கூடியவர்களின்
கைகளில் ஆட்சி அதிகாரத்தை வழங்கி நல்லருள் புரி ரஹ்மானே!//

இஸ்லாத்தின் கொள்கைகளை முழுவதுமாக விளங்கி அதனை மனதார ஏற்று அல்லஹ்விற்கு மட்டுமே அஞ்சி உளத்தூய்மையோடு செயல்பட்டதால் சத்திய ஸஹாபாக்களுக்கு அல்லாஹ் உலகையே கட்டுப்பட வைத்தான், அங்கே கொள்கைகளில் பிளவு இல்லை. எனவே அவர்களில் பிரிவு இல்லை. ஆனால் இப்போதோ நாம் சொல்லத்தேவையே இல்லை. எத்தனை கொள்கைகள் அதனால் எவ்வளவோ குழப்பங்கள்.

இஸ்லாமிய சமுதாயம் விழிப்புணர்வு பெற எத்தனையோ சம்பவங்கள் நடந்தேறிக்கொண்டுள்ளன, வழி காட்ட வேண்டிய சமுதாயமே வழிமாறிச் செல்வதால் வழி தேடுபவர்கள் மூலம் அல்லாஹ் நம்மை சோதிக்கின்றானோ என எண்ணத்தோன்றுகின்றது, யா அல்லாஹ் அகில உலக மனித சமுதாயத்திற்கும் நீயே நேர்வழி காட்டி நல்லருள் புரிவாய் ரஹ்மானே.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு