Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பாலியலுக்கு பலியாகாதே! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | March 17, 2013 | ,

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ் பெயரால்..

நேர்வழி பெற்றோர் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தி என்றென்றும் உண்டாகட்டுமாக!

சமீபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் 6 மனித மிருகங்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு அந்தப் பெண்ணை ஆயுதம் கொன்டு தாக்கி, ஓடும் பேருந்திலிருந்து தூக்கி எறியப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஆர்பாட்டங்களும், போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேற்றப்பட்டன.

அரசியல்வாதிகளும், அறிவு ஜீவிகளும் தங்கள் அறிவுக்கு எட்டிய சில விசயங்களை தீர்வாகச் சொல்லி பலர் வாங்கியும் கட்டிக் கொன்டார்கள். இவர்களுடைய கருத்துக்கள் இவர்களும் இந்நாட்டில் இருக்கின்றார்கள் என்று காட்ட உதவியதே தவிர வேறு எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை.

பாதிக்கப் பட்ட பெண் சிகிச்சைப் பலனிற்று மரணித்தாள். கண்ணீர் அஞ்சலியுடன் அடக்கம் செய்ததோடு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் அதை தொடர்ந்து உண்டான எழுச்சியும் சேர்ந்தே அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. பரந்து விரிந்த புள் தரையில் கால்நடைகள் மேய்வதைப் போல அடுத்த பிரச்சனையை நோக்கி மக்களின் கவனமும் கருத்தும் திசை திரும்பிவிட்டது.

மீண்டும் டெல்லியில் 7 வயது சிறுமி வன்புணர்வைத் தொடர்ந்து அங்கே வன்முறை வெடித்துள்ளதாகவும், முந்தைய சம்பவம் போன்று வன்முறை மிகைத்துவிடக் கூடாது என்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெறிவிக்கின்றன.

அரசு இயந்திரங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்துவிடக் கூடாது என்று பாதுகாப்பை பலப்படுத்தி கவனமாக இருக்கிற அரசாங்கம் மக்குளின் பாதுகாப்பிலும், நலனிலும் அக்கரை கொன்டிருக்குமானால் இது போன்று தொடர்ந்து கொன்டிருக்கும் பாலியல் வன்கொடுமைக் கெதிராக என்றோ தீர்வுகள் காணப்பட்டிருக்கும். ஆனால் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் அரசியல் தந்திரம் எப்பிரச்சனைக்கும் தீர்வைக் கொன்டுவராது.

அதே சமயம் தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் பாதுகாத்துக்கொள்வது தனி மனித உரிமை. அரசாங்கம் பாதுகாக்கும் என்று தாந்தோன்றித் தனமாக நடந்தால் வலியும், வருத்தமும் நம்மையே சாரும் என்பதை அறிவுடையோர் ஒருபோதும் மறுக்கவே மாட்டார்கள். வேலியில் போகிற ஓணாணை வேட்டிக்குள் விட்ட பின் குத்துகிறது, குடைகிறது என்று அழுது புழம்பி என்ன பயன்?

டெல்லி மாணவி மரணம்! திராவகத்தில் கருகிய வினோதினி மற்றும் வித்யாவின் உயிர்கள்! வாசிப்பவர்களுக்கு செய்தி ஆனால் அவர்களின் குடும்பத்திற்கு!?

பெண்களுக்குக் கெதிரான பலியல் வல்லுறவுகள் இன்னும் வெளிச்சத்திற்கு வராதவை ஏராளம். பாதுகாப்பாக இருக்க வேண்டிய தகப்பனும், அண்ணனும், தாய்மாமனும் சீரழித்த சம்பவம் சுமார் ஈராண்டுகளுக்குப் பிறகே வெளிப்பட்டது. அதற்கிடையில் கொடுமை தங்காமல் ஒருத்தி தன்னையே மாய்த்துக் கொன்டால், மற்றவள் போகும் வழியறியாது பள்ளிக் கூடத்திலேயே உட்கார்ந்திருந்த போதுதான் சம்பவம் வெளி உலகிற்கு தெறியவந்து அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது.

வேலிகளே பயிரை மேய்ந்த வெட்கக் கேடுகளை நினக்கும் போது கோபம் கொப்பளித்து வார்தைகள் வர மறுக்கின்றது. பல்வேறு தரப்பிலிருந்தும் பாலியல் துன்புறுத்தல் நடந்தேறினாலும் கடைசில் கற்பையும், உயிரையும் இழந்து அதிகப் பட்ச பாதிப்புக்கு பெண்ணே ஆளாகிறாள்.

எனவே இது போன்ற சம்பவம் நம்மில் யாருக்கும் நடந்தேறிவிடக் கூடாது. நம்மை சார்ந்த எவரும் குற்றவாளியாகவோ, பாதிக்கப்பட்டவராகவோ ஆகிவிடக்கூடாது. எனவே நம் சிந்தைக்கு எட்டிய சில விசயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விளைகிறோம். நாம் ஒன்றும் புதிதாகச் சொல்லிவிடப் போவதில்லை என்றாலும் இது ஒரு நினைவூட்டலாக இருக்கட்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்
அபு நூரா

மேலும் பார்க்க : 'மைனர் விபச்சாரத்துக்கான(?) இந்த  புதிய மேஜர் சட்ட திருத்தம்(!) ஏன் வந்தது' என்பதற்கு ஒரு பின்னணி உள்ளது. (இந்த சுட்டியை தட்டிப் பார்க்கவும் http://pinnoottavaathi.blogspot.com/2013/03/16-ok-but-1821.html)

5 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நாம் ஒன்றும் புதிதாகச் சொல்லிவிடப் போவதில்லை என்றாலும் இது ஒரு நினைவூட்டலாக இருக்கட்டும்.//

நேற்று மட்டும்...
18 கற்பழிப்புகள் செய்தித் தாள்களில் வெளிவந்தது அதில் ஒன்று உ.பி.நடந்தது (முஸ்லிம் பெண்) செய்தித் தாள்களில் ஃபோட்டோவுடன் வெளி வந்ததும் தன்னைத்தானே தீயிட்டுக் கொண்டாள் அந்தப் பெண்.... !

Abu Easa said...
This comment has been removed by the author.
Abu Easa said...

நவூதுபில்லாஹ்!

இன்னாட்டில் முஸ்லிம்களுக்கு என்றுமே தனி (அ)நீதி!

டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை மற்றும் ஏனைய பாலியல் வன்முறைகளிலும் பெயர் கூட வெளியிடாத நிலையில் முஸ்லிம் என்றதும் புகைபடத்தையும் வெளியிட்டிருப்பது வன்மையான கன்டனத்திற் குறியது.

அரசாங்கத்திற்கும், ஊடகங்களுக்கும் மக்களின் நலனில் அக்கறை இல்லை என்பதையும் அதும் முஸ்லிம்களென்றல் மேலும் பாதிப்புக் குள்ளாக்கும் வஞ்சக வலைகளைப் பின்ன மறப்பதில்லை என்பதையுமே இச்சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

எங்கே இஸ்லாம் மேலோங்கிவிட்டால் வஞ்சக அரசியல் வாய் பிளந்துவிடும் என்பதாலேயே முஸ்லிம்களை நசுக்க முற்படுகின்றனர்.

காபிர்கள் வெறுத்த போதும் அல்லாஹ் தன் ஒளியை பூரனமாக்கி வைப்பான்!

ஹஸ்புனல்லாஹு நிஃமல் வகீல்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இன்றொன்று... சர்ச் ஃபாதரின் அலுசாட்டியம்

http://www.ndtv.com/article/south/church-priest-in-coimbatore-arrested-for-molestation-bid-343320?pfrom=home-health

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அல்லாஹ் காப்பாத்துவானாக ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு