Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நாய்களை வைத்து ஊடக விபச்சாரம் ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | June 02, 2013 | , , , , ,

இந்தியாவைப் பிடித்த சாபக்கேடுகளில் முதல் இடம் பிடிப்பது ஊடகங்கள்...!!!

ஊடக விபச்சாரம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் கீழ்கண்ட உண்மை நிகழ்வைக் கண்டு தெளிவு கொள்ளலாம்..!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலும் அதன் சுற்றுபகுதிகளிலும் சில மாதங்களுக்கு முன்பு வீதியில் அலைந்து திரியும் நாய்களின் உடலில் காயங்கள் ஏற்பட்டு இறந்து காணப்பட்டது.

இந்த தெரு நாய்கள் காயம்பட்டு இறந்த நிகழ்வை ஊடகங்கள் எப்படி கொண்டாடி தீர்த்தன என்று தெரிந்து கொண்டால் ஊடகம் என்ற பெயரில் பத்திரிக்கைகள் நடத்தும் எழுத்து விபச்சாரத்தினைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளலாம்.


நாய்களின் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் வெட்டு காயங்கள் என்றும் இதன் பின்னணியில் தேச விரோத அமைப்புகளுக்குத் தொடர்புகள் இருக்கிறது என்றும் ஆயுத பயிற்சியின் போது நாய்களுக்குக் காயங்கள் ஏற்பட்டு அவைகள் இறந்திருக்கின்றன என்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது.

காவல் துறை அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் தந்த தகவலின் அடிப்படையில் என்ற அடிக்கோட்டுடன் செய்திகளை வெளியிட்டு இருந்தார்கள்.(அதாவது பெயர் சொல்லாத விரும்பாத அதிகாரி தெரிவித்ததாவதுனு அடிச்சி உடுவானுங்க பாருங்க அதான் அது)

குறிப்பாக போப்புலர் பிரண்டை குறிவைத்து ஊடகங்கள் அவதூறு பிரச்சாரங்களை முன்வைத்தது.

நாய்களுக்கு வெட்டு காயங்கள் ஏற்பட்ட சம்பவங்களுக்குப் பின்னணியில் இசுலாமிய அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கிறது என்பதனை மத்திய உளவுபிரிவு உறுதி செய்து இருக்கிறது என்று ”மாத்ரு பூமி” போன்ற பிரபல பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டு இருந்தன.

அதாவது மனிதர்களை வெட்டிக்கொல்ல நாய்களைக் கொண்டு பயிற்சி எடுக்கிறார்கள் இசுலாமியர்கள் என்பதே ஊடகங்கள் சொல்ல வந்த செய்தி...!!!

ஆனால் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி உண்மை நிலையை அறிந்த போது இந்த எழுத்து விபச்சாரர்களின் முகமூடிகள் கிழிந்து தொங்கியது மட்டுமல்லாமல் இந்த ஊடக விபச்சாரர்களின் மேல் காறி துப்பவும் தோன்றுகிறது..

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி பெற்ற தகவல்கள்...!

மலப்புரம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் ஆட்சி துறை பிரிவு டி.எஸ்.பி யும் மக்கள் தகவல் தொடர்பு துறை அதிகாரியுமாகிய ஆர்.பிரதிப் குமார் கூறியதாவது...

* தெரு நாய்களுக்குக் காயங்கள் ஏற்பட்ட சம்பவத்தின் பின்னனியில் தீவிரவாத குழுக்களுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறாகும். இது குறித்த விசாரணையில் அது பொய் என்று நிரூப்பிக்கப் பட்டுள்ளது.

* பத்திரிக்கைகள் கூறியது போன்று பதினாறு வழக்குகள் பதியப்பட்டு இருப்பதாக கூறப்படுவதும் தவறாகும். வழக்குகள் ஏதும் பதியப்படவில்லை.

* மத்திய - மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும், உளவுப்பிரிவு அமைப்புகளுக்கும் காவல் துறை பல்வேறு அறிக்கைகளை சமர்பித்து இருக்கிறது என்று பத்திரிக்கைகள் எழுதி இருந்தன....இது முற்றிலும் தவறாகும்.

இந்நிகழ்வு குறித்து உள்துறை அமைச்சகத்திற்கோ, உளவு பிரிவு அமைப்புகளுக்கோ, நீதிமன்றத்திற்கோ காவல் துறையின் சார்பாக ஒரு அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.

* நாய்களுக்குக் காயம் ஏற்பட்டது கன்னி மாசத்தில் நாய்கள் இன பெருக்கத்திற்காக இணை சேரும் போது நகங்கள் கொண்டு உண்டாகிய காயம் என்று இறந்த நாய்களின் உடல்களைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள்.

* இது குறித்து குற்றப்பிரிவு காவல்துறை, குற்றப்பிரிவு டி.எஸ்.பி. அபிலாஷ் தலைமையில் விசாரணை செய்து நாய்கள் காயம் பட்டு இறந்ததன் பின்னணியில் ஒரு மர்மமும் இல்லை என்று உறுதி செய்து இருக்கிறார்கள்.

நாய்களின் உடம்பில் காயம் ஏற்பட்டதை இசுலாமிய தீவிரவாததோடு தொடர்புபடுத்தி எழுதிய பத்திரிக்கைகள்:






இன்று உண்மை வெளி வந்து இருக்கும் நிலையில் ஒரு பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை..

தேஜஸ் என்கிற மலையாள பத்திரிக்கை மட்டுமே செய்தி வெளியிட்டு இருக்கிறது.


##இது தான் இந்திய ஊடக துறைகளின் சனநாயக கடமை ஆற்றும் லட்சணம்...?!

இவிங்களை சொல்லி குத்தமில்லை. இவிங்க பத்திரிக்கைகளையும் காசு கொடுத்து வாங்கி படிக்கிறாங்க பாரு அவிங்களை சொல்லணும்....இந்தியாவைப் பிடித்து உலுக்கும் சாபக்கேடுகளில் முதன்மை இடத்தை பிடிப்பது எழுத்து விபச்சாரம் என்பதனை மெய்பிக்கும் உண்மை நிகழ்வு இது.##

- Social Media
நன்றி : இந்நேரம்.com

17 Responses So Far:

Unknown said...

"ஊடக விபச்சாரம்"
இந்த நாய்களுக்கு (ஊடகம் வாயிலாக இஸ்லாத்தை கொச்சை படுத்துபவர்களுக்கு)
இந்த பெயர் ரொம்ப பொருத்தம். ஏனனில் விபச்சாரம் செய்பவன் தனனக்கு உரிய்மையில்லாத ஒன்றை தவறான வழியில் தேட முர்ப்படுகின்றான். இந்த ஊடக நாய்களும் நாய்களை வைத்து ( ஏதாவது ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டியது ) இஸ்லாத்திற்கு எப்படியாவது ஒரு களங்கத்தை ஏற்ப்படுத்த வேணும் என்ற கொள்கையில் வெற்றி அடைய நினைத்து மூக்கருபட்டுக் கொள்கின்றார்கள். இது ஊடகங்களின் வாடிக்கையாகவே இருந்து வருகின்றது.

விபச்சாரம் செய்ய நினைத்து அதற்க்கான முயற்ச்சியில் இறங்கி கையும் களவுமாக பொதுமக்க மத்தியில் பிடிபட்டு கேவலப்பட்டு நிர்ப்பவனின் நிலையில்
இந்த ஊடகங்களின் நிலை. இவர்கள் இந்த போக்கு நீடித்தால் அல்லா இதைவிட கேவலப்படுத்தப் போதுமானவன்.

இஸ்லாத்தையும், அதன் தூய்மையையும், புனிதத்துவத்தையும் , கேவலப்படுத்த நினைப்பவர்கள் கேவலப்பட்டுபோவார்கள் ( இன்ஷா அல்லாஹ்)


அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

இதைப் படிக்கும்போது பிரான்சு நாட்டின் மாவீரன் நெப்போலியன் உடைய வரலாறு நினைவுக்கு வருகிறது.

ரஷ்யாவில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு பிரிட்டன் முதலிய கூட்டுப்படையால் நெப்போலியன் எல்பா என்ற தீவில் சிறை வைக்கப்பட்டார். ஆனால் ஓராண்டுக்குள் தீவில் இருந்த சிறையில் இருந்து நெப்போலியன் தப்பினார். சுற்றிலும் கடல்.

நெப்போலியன் தப்பிய செய்தியை ஊடகங்கள் வெளியிட்டன இப்படி " கொடுங்கோலன் சர்வாதிகாரி தப்பினான் . திமிங்கல மீன்களுக்கு இரையாவான் " என்று.

ஆனால் நெப்போலியன் நீந்தியே கரைஎறினான் உடனே ஊடகங்கள் செய்தி வெளியிட்டன இப்படி

" சக்கரவர்த்தி பத்திரமாக கரை சேர்ந்தார். மீண்டும் மாவீரன் ஆட்சி "

சிறையிலிருந்த தப்பி வந்த நெப்போலியனை பிரெஞ்சு மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மீண்டும் பிரான்ஸின் சக்ரவர்த்தியானார் நெப்போலியன்.

நாய்களை வைத்து நக்கிப் பிழைக்கும் ஊடக நாய்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

உண்மையான நாய்களின் காயங்களுக்கும், தீவிரவாத சக்திக்கும் பொய்த்தொடர்பை ஏற்படுத்திய ஊடகநாய்கள் உண்மை வெளியான பின் இங்கு காயம்பட்டு நிற்கின்றன.

அதிரை முஜீப் said...

அட சொறி நாய்க்கு பிறந்த வெறி நாய்களா...!
http://adiraimujeeb.blogspot.ae/2013/05/blog-post_30.html#more

அப்துல்மாலிக் said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க.. பாவம் நாய்களையும் விட்டுவைக்கலே இவய்ங்க...

Yasir said...

அட சொறி நாய்க்கு பிறந்த வெறி நாய்களா...!....நாயை இந்த கேவல ஊடகப்.....னிகளுடன் உவமை செய்வதை வன்மையாக கண்டிக்கின்றேன்..நாயைவிட கேவலம் கெட்ட ஜென்மங்கள் இவைகள்..இந்த மாதிரி தொழில் செய்வதற்க்கு வேறு எதாவது செய்து பிழைக்கலாம்

sabeer.abushahruk said...

நாமும் இப்படியே சொல்லித் திரிய வேண்டியதுதான்.

நமக்கென்று ஒரு ஜனரஞ்சகமான ஊடகம் வாய்க்காவிடில் இதற்கு முடிவிருக்காது.

Anonymous said...

இதற்கு தமிழில் கொச்சை பேச்சு வழக்கு உண்டு அது ''நாய்...... தேன் வடிந்தால் நாக்கை போட்டு நக்குவார்கள்''. இதை இஸ்லாமிய எதிர்ப்பு ஊடகங்கள் செய்கின்றன .இஸ்லாத்திற்கு கெட்ட பெயர்சூட்ட இவர்கள் நாய்க்கு பதில் விபச்சாரியை நக்குவார்கள்.

s.முஹம்மது பாரூக். அதிராம்பட்டினம்

Adirai pasanga😎 said...

//இவிங்களை சொல்லி குத்தமில்லை. இவிங்க பத்திரிக்கைகளையும் காசு கொடுத்து வாங்கி படிக்கிறாங்க பாரு அவிங்களை சொல்லணும்....//

அதுமட்டுமல்ல.
இது சம்பந்தமாக பேசவேனுமெனில் நிறைய விசயங்கள் உள்ளன. இஸ்லாம் என்பது பெரும்பாலும் தற்போது குர் ஆன், ஹதீஸ் மற்றும் அது சம்பந்தமான வெறும் பேச்சுக்கள் என்று மட்டுமே ஆகிவிட்டது. முஸ்லிம் என்பவன் வெறும் பெயரளவில் மட்டும்தான் என்றும் ஆகிவிட்டது.

சுருங்க சொன்னால் முஸ்லிம்களுக்குண்டான செயல்பாடுகள் நம்மில் குறைந்ததுதான் இதற்கெல்லாம் காரணம்.

Anonymous said...

//நாமும்இப்படியே சொல்லித் திரியா வேண்டியதுதான்///

மருமகன் சபீர் அபுசாருக் சொன்னதுதான் பாயிண்ட். காலமாற்றத்தை கண்டு கொள்ளமால் நாம் இன்னமும் கி.மு.வில் இருந்து கொண்டு குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுகிறோம் நமக்கு பிரச்னை வரும்போது மட்டும் கூட்டம் போட்டு ஆஆஆஆஆவேசத்துடன் பேசி முடித்ததும் ஒரு அஸ்ஸலாமு அலைக்கும் சொன்ன தோடு சரி..

மீண்டும் நமக்கு ஆவேசம் வரவேண்டுமானால் வேறு யாரவது விஸ்வருபம்எபிசோட்two படம் எடுக்க வேண்டும்.

s,முஹமதுபாரூக்.அதிராம்பட்டினம் .

Anonymous said...

உலக ஊடகங்களில் இஸ்லாமீயர்களின் முதலீடு அதிகம். இருந்தும் அவைகள் இஸ்லாத்துக்கு எதிராகவே செயல் படுகிறது. இதை சொன்னவர் oxford universityயில் படித்து டாக்டர் phd; பட்டம் பெற்ற தமிழ் முஸ்லிம் மலேசியா குடிமகன் நமக்கு ஊடக பலம் இல்லை என்பதை உணர்ந்தோமா? .

S.முஹமதுபாரூக்.அதிராம்பட்டினம் .

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஊடக விபச்சாரத்துக்கு இந்த சுட்டியும் உதாரணம்!
www.facebook.com/photo.php?fbid=532380940160119&set=a.237395156325367.61844.100001646533432&type=1&theater

Unknown said...

//நமக்கென்று ஒரு ஜனரஞ்சகமான ஊடகம் வாய்க்காவிடில் இதற்கு முடிவிருக்காது.//


முற்றிலும் சரி

abu asif.

Ebrahim Ansari said...

நமக்குள் ஜனரஞ்சகமான ஊடகம்? கனவு. இன்றைய நிலையில் நிறைவேற்ற முடியாத கனவு.

புற்றீசல் போல் பல்வேறு இயக்கங்கள். பலபேர் தலைவர்கள். ஒரு இயக்கம் தொடங்கும் ஊடகத்தை மற்றவர்கள் வாங்காவிட்டாலும் பரவாஇல்லை- படிக்காவிட்டாலும் பரவாஇல்லை. முச்சந்தியில் வைத்து கொளுத்துவார்கள்.

எங்கே யாவது ஒரு சாவு ஏற்பட்டால் நம்மை நாமே கொலைக் குற்றம் சாட்டுகிறோம்.

ஒருவர் நல்ல செய்திகள் சொல்ல ஆரம்பித்தால் அவரை நாமே தீவிரவாதி என்று போட்டுக் கொடுக்கிறோம்.

நமக்குள் ஏற்படும் சிறு நிகழ்வுகளை நமக்குள் ஜமாஅத் மூலம் தீர்க்காமல் காவல்துறையை நாடுகிறோம்.

அரசியல் செல்வாக்குகளை வைத்து ஆளுக்கு ஆள் மிரட்டுகிறோம்.

மாற்றார் இப்படியெல்லாம் நாயைவைத்து நம்மை மிரட்டக் காரணம் நம்மில் சிலரே அந்தக்குனம் கொண்டோராக ஆனதால் என்பதை சமுதாயம் உணரவேண்டும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்தான்.

முதலில் தேவை ஒற்றுமை! ஒரே குரல்! நான் சொல்வது தவறானால் இதை வாபஸ் பெறுகிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நான் சொல்வது தவறானால் இதை வாபஸ் பெறுகிறேன்.//

காக்கா, உங்களின் கருத்தாடலில் சொன்னவைகளை செய்பவர்கள் முதலில் வாபஸ் வாங்கட்டும் அப்புறம் நீங்கள் சொன்னவைகளை வாபஸ் வாங்குவதைப் பற்றி யோசிப்போம் !

பிரச்சினையை உருவாக்கிவிட்டு, பிரச்சினை தீரும் சூழல்கள் ஏற்படும்போதெல்லாம் ஒரு முட்டுக் கட்டையை அங்கே வெட்டிப் போட்டுவிட்டுச் செல்லும் தலை(தெரிச்சவய்)ங்க !

அடாடா ! எங்களுக்கு ஒன்னுமே தெரியலை, அவய்ந்தான் இப்புடி எங்கள பாடா படுத்திட்டானு புலம்பும்போது இவர்கள் நல்லவர்களா / நல்லவர்கள் மாதிரி இருக்க முயற்சிக்கிறாங்களா !?

நல்லா சொல்லுங்க ! நான் ஒன்னும் செய்யலைதானே.... திரும்பவும் கேட்கிறேன் இங்கே பார்த்துச் சொல்லுங்கள் நான் ஒன்னுமே செய்யலைதானே ! ஆமா !

அதிரை முஜீப் said...

சில தினங்களுக்கு முன் சென்னை லயோலா கல்லூரி மானவர்கள் ஒரு சர்வே நடத்தினார்கள். அந்த சர்வேயின் முடிவை கன்டு அதிர்ந்தே போனேன். அதாவது பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் தீவிரவாதியின் படத்தை, தோற்றத்தை தங்களின் மனதில் பதிந்துள்ளதை காகிதத்தில் வரைந்து காட்டும்படி கூறியுள்ளனர்.

அதில் பெரும்பாலோனோர்கள் தாடிவைத்தும், தலையில் தொப்பியுடனும், ஜிப்பா அனிந்தும் (பெரும்பாலும் முஸ்லிம்களின் தோற்றதையே)சித்திரமாக வரைந்து கொடுத்துள்ளனர். உடனே அதிர்ச்சியடைந்த அந்த சர்வே குழுவினர் ஏன் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரியே ஒரே தோற்றமுடையவர்களை வரைந்தீர்கள் என்ற கேள்விக்கு

"இப்புடித்தானே டி.வி யில் காட்டுகின்றார்கள்" என்ற ஒரே பதிலையும் சொல்லி ஒரு கனம் இதயமே நின்டுவிடும் அளவிற்கு பதிலை அளித்துள்ளனர்.

இந்த பிஞ்சி மனதில் கூட நஞ்சை விதைத்த கொடுமை இந்த ஊடகங்களையே சாரும். அது மட்டுமல்லாமல், தங்களின் பெற்றோர்கள் கூட, தங்கள்கூட படிக்கும் முஸ்லிம்மானவர்கள் கூட எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று கூறியதாகவும் சொல்லி அடுத்த அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்போ தெரிகின்றதா இந்த ஊடகங்கலின் விபச்சாரமும் அதன் வீரியமும் எந்த அளவிற்க்கு மக்களின் மனதில் பதியவைக்கப்படுள்ளது என்று......!

Shameed said...

நாய் "ஊடல்" அறியாத ஊடக பயல்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு