Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை வரலாற்றில் பெண்களால் நடத்தப்பட்ட ஸனது (பட்டம்) வழங்கும் விழா ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | June 08, 2013 | , , , ,

அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் மேற்பார்பார்வையில் இயங்கி வரும் அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் ஸனது (பட்டம்) வழங்கு விழா நேற்று (07-Jun-2013) மாலை சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் !

நிகழ்வின் ஆரம்பமாக இரண்டாம் ஆண்டு மாணவி மர்யம் அப்துர் ரஸ்ஸாக் அவர்களின் கிராத்துடன் இனிதே துவங்கியது.

அடுத்ததாக பேராசியை ரியானா அவர்களின் வரவேற்புரையுடன் தொடர்ந்து.

இளையோரின் திறன் காட்டும் நிகழ்ச்சித் தொகுப்புகளும் சிறப்புடன் நடைபெற்றது கலந்து கொண்ட மாணவிகள் மற்றும் அவர்களின் தாய்மார்கள்,சகோதரிகள், உறவினர்கள் அனைவரையும் மகிழ்சியில் ஆழ்த்தியது மற்றுமொரு சிறப்பு !

* ஸூரத்தில் ஃபாத்திஹா - ஃபர்ஷிதா ஃபைஸல் அஹ்மது
* அன்றாட துஆக்கள் - சன்ஃபியா அஹ்மது ஜலீல்
* அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் - மஹ்மூதா முஹம்மது ஹனீஃபா
* நாளும் செய்ய வேண்டிய நல்ல அமல்கள் - முர்ஷிதா ஃபைஸல் அஹ்மது
* அரபு மாதங்களின் பெயர்கள் - ஃபாஹ்மிதா ஜஹபர் ஸாதிக்
* 'பரிசு' எனும் தலைப்பில் கவிதை - வஸீமா ஜாஹிர் ஹுஸைன்
* தவ்ஹீத் எனும் தலைப்பில் உரை - நபீஹா அஹ்மது அனஸ்
* நபிமார்களின் பெயர்கள் - நுஸ்ரத் ராஜா முஹம்மது.

மாணவிகளின் நிகழ்வைத் தொடர்ந்து கல்லூரியின் ஆண்டறிக்கையை பேராசிரியை எஸ்.மும்தாஜ் அவர்கள் வாசித்தார்கள்.

பட்டம் பெறும் மாணவிகளில் ஒருவரான ஏ.மும்தாஜ் அவர்களின் சிற்றுரை "ஆலிமாக்களின் பொறுப்புகள் என்ன" என்ற தலைப்பில் அற்புதமான உரையை நிகழ்த்தினார்கள்.

சிறப்பு விருத்தினராக பங்கெடுத்த பேராசிரியை சயீதா பானு M.A.B.Ed., - தாளாளர் அன்னை கதீஜா அறிவியல் கலை மகளிர் கல்லூரி, அம்மாப்பட்டணம். பெண்மக்களிடையே விழிப்புணர்வு பற்றிய சிறப்பான மருத்துவ ஆலோசனைகளுடன், இன்றைய பெண்களுக்குரிய அறிவுரைகளை அழுத்தமாக எடுத்துரைத்தார்கள். குறிப்பாக பட்டம் பெறும் மாணவிகளுக்கும் அவர்களைச் சுற்றியிருக்கும் பெண்களுக்கும் நல்லதொரு முத்தாய்ப்பான உரையாக அது அமைந்தது என்றால் மிகையில்லை - மாஷா அலலஹ் !

நிகழ்வின் நட்சத்திர அறிவுரை என்று சொல்லுமளவுக்கு கல்லூரி முதல்வர் அவர்களின் உரை 'எமது மாணவிகளுக்கு' என்று அருமையான அறிவுரைகளை நபிமார்களின் வரலாற்றிலிருந்து வழங்கினார்கள். மாணவிகளுக்கு மட்டுமல்ல கலந்து கொண்ட அனைவருக்கும் பொருந்தும் விதமாக தவ்ஹீத் பற்றிய அவர்களின் அழுத்தமான உரையாக அமைந்தது.

தொடர்ந்து 2011 - 2012 கல்வியாண்டிற்கான ஸனது (பட்டம்) ஐந்து மாணவிகளுக்கு வழங்கப்பட்டது, இதில் அனைவருமே தரத்தில் உயர்ந்த பெண்மக்களாக திகழ்ந்தார்கள்.

பட்டம் பெற்ற மாணவிகள் விபரம்

மும்தாஜ் த/பெ.அப்துல் வஹாப்
நபீலா த/பெ. முஹம்மது தம்பி
சுமையா த/பெ.லியாகத் அலி
சஃப்ரின் த/பெ.அபூபைதா
ஹாஜரா த/பெ.அன்வர்தீன்

2011-12 மற்றும் 2012-13 வருடத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளுக்கான பரிசுகள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

நிறைவாக பேராசிரியை ரிழ்வானா அவர்களின் நன்றியுறையுடன் கஃப்பாரா ஓதி சிறப்பாக நிறைவுற்றது.

பெண்களால் நடத்தப்பட்ட, பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட இவ்விழாவில் அதிரையின் பல்வேறு பகுதியிலிருந்து வந்து கலந்து கொண்ட பெண்கள் மாலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரை அமைதி காத்து சிறப்பித்தார்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக !

நிகழ்வை சிறப்புடன் மேற்பார்வை செய்த அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகிகளுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.








அதிரைநிருபர் பதிப்பகம்

9 Responses So Far:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்


மாசா அல்லாஹ் ரொம்ப சந்தோசம்.

இது போன்ற கூடங்களில் பெண்களை கேமரா எடுப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.சற்று பாருங்கள் அந்த பெண்களே எவ்வளவு வெட்கப்படுகின்றார்கள்.

Unknown said...

நல்லதொரு முயற்சி,
அதற்க்குக் கிடைத்த நல்லதொரு பலன்.

இன்ஷா அல்லா ஒவ்வரு வருடமும் தொடர்ந்து பெண் ஆலிம்கள்
உருவாக என்னுடைய துஆக்கள்.

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

அர்ரவ்ழா மகளிர் அரபி கல்லூரியில் பட்டம் பெற்ற அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்.சிறப்பு விருந்தினர் சகோதரி சயிதா பானு (தாளாளர்:அன்னை கதீஜா மகளிர் கல்லூரி) அவர்களுக்கு நன்றி.மார்க்க கல்வியின் அவசியத்தை செயல் திட்டமாக கொண்டு சிறப்பாக செயல்படும் அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகிகள் அதிரை அஹ்மத் காக்கா,கணினி தமிழறிஞர் ஜமீல்.M.சாலிஹ்,அன்பின் தம்பி செயல் வீரர் ஜமாலுதீன் ஆகியோருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்

Unknown said...

மாஷா அல்லாஹ்
பதிப்புக்கு நன்றி
அர்ரவ்ழா மகளிர் அரபி கல்லூரியில் பட்டம் பெற்ற அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்.சிறப்பு விருந்தினர் சகோதரி சயிதா பானு (தாளாளர்:அன்னை கதீஜா மகளிர் கல்லூரி) அவர்களுக்கு நன்றி.மார்க்க கல்வியின் அவசியத்தை செயல் திட்டமாக கொண்டு சிறப்பாக செயல்படும் அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகிகள் அதிரை அஹ்மத் காக்கா,கணினி தமிழறிஞர் ஜமீல்.M.சாலிஹ்,ஜமாலுதீன் காக்கா ஆகியோருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
-----------------------
இம்ரான்.M.யூஸுப்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்


மாசா அல்லாஹ் ரொம்ப சந்தோசம்.

இது போன்ற கூடங்களில் பெண்களை கேமரா எடுப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.சற்று பாருங்கள் அந்த பெண்களே எவ்வளவு வெட்கப்படுகின்றார்கள்.

Unknown said...

ஆண்களே போட்டோ எடுக்க கூடாது என ஆலிம்கள் பலர் விலகி இருக்கும் பொழுது பெண்களை போட்டோ எடுத்து வெளியிடவும் வேன்டுமா? அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்....!!!!!

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்


மாஷா அல்லாஹ்

பட்டம் பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்
அல்லாஹ் உங்களை ஈருலகிலும் சிறப்பைக்க அருள் புறிவானாக ஆமீன்

மிக சிறப்பாக நடந்தேறிய பட்டமளிப்பு விழாவை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக
பட்டம் பெற்ற மாணவிகள் தொடர்ந்து தாம் கற்றதை மற்றவர்களுக்கு போதிக்க‌ தம்மை இஸ்லாத்திற்காக அர்பனிக்கும் மன வலிமையைக் கொடுக்க அல்லாஹ் உதவி செய்வானக ஆமீன்



கடுமையான உழைப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் இரு காக்காமார்களுக்கும் மற்றும் யாரெல்லாம் தாருத்தவ்ஹீதின் செயல் பாடுகள் சிறக்க உடலாலும் பொருளாலும் பாடுபடுகின்றார்களோ அவர்கள் அனைவருக்கும்
இறைவன் நீண்ட ஆயுளையும் உடல் சுகத்தையும் கொடுத்து மென்மேலும் தாருத்தவ்ஹீதின் பனிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற வல்ல அல்லாஹ் அவர்களுக்கு துணை நிற்பானாக ஆமீன்
அவர்களுடய தொழிலிலும் அபிவிருத்தியை ஏற்படுத்துவனாக‌

அதிரைமன்சூர்

adiraimansoor said...

இப்படி ஒரு மதரஸா இயங்குவதை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் யாருடைய முகமும் தெளிவாக தெரியாமல் போட்டோக்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் தேவையில்லாத சர்ச்சைகளிலிருந்து விடுபடுமுகமாக இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த வருடங்களில் போட்டோக்கள் எடுக்காமல் இருக்கலாம் என்பதை நான் வலியுறுத்துகின்றேன்.நிர்வாகிகளும் அதை அமுல் படுத்துவார்கள் என நம்புகின்றேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு