Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

'விக்கிலீக்ஸ்' என்னும் பூச்சாண்டி 9

அதிரைநிருபர் | November 30, 2010 | ,

அமெரிக்கா அதன் நேச நாடுகளும் மற்றும் நேசமில்லாத நாடுகளும் தன் ஆட்சி, அதிகார அடக்குமுறையாலும், ஆணவத்தாலும் திரைமறைவில் செய்து முடித்த, இன்றும் செய்து கொண்டிருக்கும் கணக்கிலடங்கா கொலைபாதக செயல்களையும், கோடிக்கணக்கான ஊழல்களையும், பல ரகசிய ஆவணங்களையும் தன் இணைய தளம் மூலம் 'விக்கிலீக்ஸ்' வெளியுலகிற்கு கசிய விட்டிருக்கிறது.


'அடப்பாவி இவனா அவன்? இப்படி செய்தான்?' என சாதாரன மக்களும் வியப்பால் தன் மூக்கில் கை வைத்து ஆச்சரியப்படும் பல அவலங்களையும், செய்து முடித்த பல கொடூரங்களையும் அவிழ்த்து விட்டிருக்கிறது இந்த விக்கிலீக்ஸ் இணையதளம்.

'பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்' என்பது பழைய மொழியாக இருந்தாலும் அதை தன் கோடூர முகத்தால் அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகள் அவ்வப்பொழுது புதுப்பித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌.

இன்னும் இந்த‌ இணைய‌ த‌ள‌ம் மூல‌ம் என்னென்ன‌ பூத‌ங்கள் கிளம்பப்போகின்ற‌ன‌வோ? என்று த‌வ‌று செய்த‌வ‌ர்க‌ளுக்கு "குற்ற‌முள்ள‌ ம‌ன‌சு குறுகுறுக்கும்" என்பது போல் புளியைக்க‌ரைத்துக்கொண்டிருக்கிற‌து.

அமெரிக்கா ஈராக் மீது ப‌டையெடுத்து அந்நாட்டை த‌ன் முழுக்க‌ட்டுப்பாட்டிற்குள் கொண்டு வ‌ந்த‌ பிறகும் அங்குள்ள அப்பாவி பொதும‌க்க‌ள் உயிருக்கு ப‌ய‌ந்து கூட்டம், கூட்ட‌மாக‌ த‌ன் கைக‌ளில் வெள்ளைக்கொடிகளை (ச‌மாதானத்தின் சின்னமாய்) ஏந்தி அமெரிக்க‌ ராணுவ‌த்தை நோக்கி ச‌ர‌ண் அடைய‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளை கூட‌ விட்டு வைக்க‌வில்லை. வானிலிருந்து ஹெலிகாப்ட‌ர் மூல‌ம் அவ‌ர்க‌ளை ஈவு இரக்கமின்றி சுட்டு வீழ்த்தி இருப்பதையும்‌ இந்த‌ இணைய‌ த‌ள‌ம் தெளிவாக‌ ப‌ட‌ம் பிடித்து உலகுக்கு வெளியிட்டுள்ள‌து.

அமெரிக்க அதிபர் முதற்கொண்டு அனைத்து அதிகார வர்க்கங்களும் இணைய தளம் மூலம் உலக ரகசியங்களை வெளியிட்ட 'விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க திசை திருப்பப்பட்டுள்ளார்களே தவிர தவறு செய்தவர்களை தண்டிக்க அல்ல.

இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' இதன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்ப‌டுத்தியுள்ள‌து. அது ப‌ற்றி விள‌க்க‌ங்க‌ளை இன்னும் ஒரு சில‌ நாட்க‌ளில் அல்ல‌து ம‌ணித்துளிக‌ளில் வெளிவ‌ர நாம் அறிய‌லாம்.

இது போன்ற‌ உல‌க‌ மகா த‌வ‌றுக‌ளையும், குற்ற‌ங்க‌ளையும் செய்த‌வ‌ர்க‌ள் உல‌க‌ ச‌ட்ட‌த்தின் முன் ஒரு போதும் முறையே விசாரிக்கப்பட்டு த‌ண்டிக்க‌ப்ப‌டுவ‌தில்லை. மாறாக ஊடகங்கள் மூல‌ம் உல‌க‌ ந‌ட்ச‌த்திர‌ அந்தஸ்த்தை பெற்று அத‌ன் மூல‌ம் மேலும் ப‌ல‌ ஆதாய‌ங்க‌ளை அடைந்து கொள்கின்ற‌ன‌ர்.

இது போன்ற‌ ஆயிர‌மாயிர‌ம் அவ‌ல‌ங்க‌ள் ஆங்காங்கே அர‌ங்கேறியிருந்தாலும் இதெல்லாம் அவ‌ல்பொறி திண்ப‌து போல் ஆகிவிட்ட‌து அதை அன்றாடம் கேள்விப்ப‌டும் சாதாரன பொதும‌க்க‌ளுக்கு எதிர் கேள்வி கேட்க‌ எவ்வித‌ ச‌க்தியும் அற்ற‌வ‌ர்க‌ளாய்.

இரும்புக்கோட்டைக்குள் செய்து முடித்த‌ பேர‌க‌சிய‌ங்க‌ளையும், ச‌தித்திட்ட‌ங்க‌ளையும், அவலங்களையும் பாதுகாக்க‌ முடியாத இந்த ம‌னித‌ வ‌ர்க்கம் (வல்லரசுகள்) ப‌டைத்த‌வ‌ன் முன் எப்ப‌டி தன் த‌வறுகளை ம‌றைத்து விட‌ முடியும்?

உல‌க‌ம் இப்ப‌டியே சென்று கொண்டிருந்தால் கடைசியில் 'பூனைக்கு யார் தான் ம‌ணிக‌ட்டுவ‌ர்'? நிச்ச‌ய‌ம் ஒரு நாள் க‌ட்ட‌ப்ப‌டும் அது யுக‌ முடிவு (கியாமத் நாள்) நாளாக‌த்தான் இருக்கும்.

-- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

9 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்னதான் பூச்சாண்டி காட்டினாலும் "MSM(n)" நிறைவில் சொல்லியிருப்பதை நினைவில் கொள்ளத்தக்கது.

/// இரும்புக்கோட்டைக்குள் செய்து முடித்த‌ பேர‌க‌சிய‌ங்க‌ளையும், ச‌தித்திட்ட‌ங்க‌ளையும், அவலங்களையும் பாதுகாக்க‌ முடியாத இந்த ம‌னித‌ வ‌ர்க்கம் (வல்லரசுகள்) ப‌டைத்த‌வ‌ன் முன் எப்ப‌டி தன் த‌வறுகளை ம‌றைத்து விட‌ முடியும்? ///

it's a time to say !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பொதுமக்களாகிய வாக்காளர்கள் லாயக்கற்ற ஆட்சியாளர்களை தேர்தலில் தன் வாக்கு என்ற பேராயுதத்தை பயன்படுத்தி மாற்ற முடிகின்றது. ஆனால் தொடரும் இது போன்ற அநியாய அட்டூழியங்களையும், மகா ஊழல்களையும், அக்கிரமங்களையும், போர்க்குற்றங்களையும் ஒழிக்க முடியவில்லை, கட்டுப்படுத்தவாவது இயலவில்லை.

வேண்டாம் வரதட்சணை said...

//உல‌க‌ம் இப்ப‌டியே சென்று கொண்டிருந்தால் கடைசியில் 'பூனைக்கு யார் தான் ம‌ணிக‌ட்டுவ‌ர்'? நிச்ச‌ய‌ம் ஒரு நாள் க‌ட்ட‌ப்ப‌டும் அது யுக‌ முடிவு (கியாமத் நாள்) நாளாக‌த்தான் இருக்கும்.//

I like this golden word.thanks bro naina

Yasir said...

வீக்கிலீக்ஸ் விக்க விக்க தந்திருக்கும் விசயங்கள்....”பெரியமாமா” வின் லீலைகளை கக்க வைக்கும் என்பதில் ஜயமில்லை ( 291 டாக்குமென்ஸ் தான் வெளியாகி இருக்கிறது. மொத்தம் 251,287 ).சகோ.நெய்னா சொல்வது போல் வல்லவனிடம் எதையுமே மறைக்கமுடியாது

sabeer.abushahruk said...

/// இரும்புக்கோட்டைக்குள் செய்து முடித்த‌ பேர‌க‌சிய‌ங்க‌ளையும், ச‌தித்திட்ட‌ங்க‌ளையும், அவலங்களையும் பாதுகாக்க‌ முடியாத இந்த ம‌னித‌ வ‌ர்க்கம் (வல்லரசுகள்) ப‌டைத்த‌வ‌ன் முன் எப்ப‌டி தன் த‌வறுகளை ம‌றைத்து விட‌ முடியும்? ///

well said MSM

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
MSM எல்லா சேதியும் நல்லா தான் சொல்லி இருக்கின்றீர்கள்

அந்த கடைசி சேதி நல்லா அழுத்தம் திருத்தமா இருக்குது.

Meerashah Rafia said...

/// இரும்புக்கோட்டைக்குள் செய்து முடித்த‌ பேர‌க‌சிய‌ங்க‌ளையும், ச‌தித்திட்ட‌ங்க‌ளையும், அவலங்களையும் பாதுகாக்க‌ முடியாத இந்த ம‌னித‌ வ‌ர்க்கம் (வல்லரசுகள்) ப‌டைத்த‌வ‌ன் முன் எப்ப‌டி தன் த‌வறுகளை ம‌றைத்து விட‌ முடியும்? ///

சாச்சா... அருமை..

மு.செ.மு.மீரஷாஹ் ரபி அஹ்மத்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் நெய்னா முகம்மது,

விக்கீலீஸ் தொடர்பான செய்தி சொல்லப்பட்ட விதம் அருமை.

இறுதியாக சொல்லப்பட்ட வரிகள் மிக அருமை. இவ்வரிகள் அனைத்து தனிமனிதனுக்கும் பொருந்தும்.

வாழ்த்துக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதென்னங்க விக்கி-லீக்ஸ், விக்கி-லீக்ஸ்'ன்னு சொல்றாங்களே... ஊரில் மழையாமே ! எங்கெல்லாம் லீக் அல்லது வீக்'ன்னு இவய்ங்க சொல்லுவாங்களா ?

---------------------
அதிரைப்பட்டினத்தில் தொடர் மழை பெய்து கொண்டிருப்பதால் அன்றாட நிகழ்வு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக ஊரிலிருப்பவர்களின் தகவல்.

ஆங்காங்க மழை நீர்த்தேக்கங்களும் குளங்கள், ஏரிகள் வழிந்தோடி வருகிறது, மேலும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளில் மழை நீர் புகுந்திருக்கிறது.

மின்சார கம்பங்களில் மின்சாரம் கசியும் அபாயங்களிருப்பதால், சிறுவர்களை வெளியில் அனுப்பமலும், பெண்கள் வெளியூர் பயணக்களையும் தவிர்த்துக் கொள்ளுவது நல்லது.
---------------------

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு