Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தீன்குல ஹீரோக்களுக்கு 17

அதிரைநிருபர் | November 28, 2010 |

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (உங்கள் மீது எகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)

அன்பிற்கினிய சகோதரர்களே! என் அருமை இளைஞர்களே!நீங்கள் நன்மையடையும் பொருட்டு சில அறிவுரைகளை அல்லாஹ் உங்களுக்கு போதித்துள்ளான்! அவற்றில் சில உங்களுக்கு கூற ஆசைப்படுகிறேன்! சற்று கவனமாக படித்து,சிந்தித்துப் பாருங்கள்!

இன்றைய நவீன யுகத்தில் சினிமா! தொ(ல்)லைக்காட்சிகள்!, இரட்டை வசன மற்றும் ஆபாச பாடல்கள்! அதற்கேற்றவாறு தங்களுடைய ஆடை அலங்காரம், பைக், செல்ஃபோன், இளம் ஆண் மற்றும் பெண்களின் மேல் காதல் எனும் கன்ராவி மோகம் போன்றவைகளின் மூலம் நீங்கள் ஷைத்தானால் தீண்டப்படலாம்! கவனமாக வாழவும்!

மேற்கண்ட பழக்கவழக்கங்களில் மாட்டிக்கொண்ட இன்றைய இளைஞர்கள் தங்களை ஹீரோக்களாக பாவித்து பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் துச்சமாக மதித்து உதாசீனப்படுத்தி வருகின்றனர். மேலும் திருமணமானவுடன் பெற்றோரை கவனிக்கத் தவறுவதும், பெற்றோரால் மணமுடித்து வைக்கப்பட்ட மனைவியை கவனிக்கத் தவறுவதும் இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமான மாறிவிட்டது. இதனால்தான் சில வயதான வசதி வாய்ப்பற்ற பெற்றோர் திக்கற்றவர்களாக 5க்கும் 10க்கும் மற்றவர்களின் கைகளை பார்த்து ஏங்கித் தவிக்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட பெற்றோரின் மகன்களோ 10 ஆயிரம் ருபாய்க்கு கேமரா செல்போன் வாங்கி மூன்றே மாதத்தில் 3-ஆயிரம் ரூபாய்க்கு விற்று ஆன்டியாகும் நிலைமைகள்!!!

பெற்றோர் தட்டிக் கேட்டால் என் பணம், என் வருமானத்தில் வாங்குகிறேன் நீ யார் அதை கேட்க? என்ற பதில் தான் அவர்களுடைய முதல் கலிமாவாக உள்ளது. ஆனால் அல்லாஹ் சொல்வதை சற்று கேட்கவும்

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும் அவனுக்கு பால் குடி மறக்கச் செய்வதும்(மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும் "இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதம் புரிந்த நிஃமத்துக்காக (அருட்கொடைகளுக்காக!) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்லஅமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாவிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக)சீர்படுத்தி அருள்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்" என்று கூறுவான். (அல்குர்அன் 46:15)

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும் பொற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான். அவ்விருவறில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்துவிட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்)சொல்ல வேண்டாம்- அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவறிடமும் கனிவான கண்ணியமான பேச்சையை பேசுவீராக! (அல்குர்அன் 17:23)

இன்னும் நினைவு கூறுங்கள் நாம் ( யாஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில் "அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் வணங்கக் கூடாது! (உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழைகளுக்கும்) நன்மை செய்யுங்கள்! மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்! மேலும்தொழுகையை முறையாக கடைபிடித்து வாருங்கள்! ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்! என்று உறுதிமொழியை வாங்கினோம் ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல் அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்! (அல்குர்அன் 2:83)

என் அருமைச் சகோதரர்களே! நம் அன்பிற்கினிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகளை கேளுங்கள்.

'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறை நம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச்செல்வதை வெறுப்பது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume:1 Book:2 : Verse 16


(அல்லாஹ்வுக்காக பெற்றோரையும் தத்தமது குடும்பத்தினரையும்
நேசிக்கக்கூடாதா!)

'ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாம் விடும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூமஸ்வூத்(ரலி) அறிவித்தார். (சஹீஹுல் புகாரி Volume:1 Book:2, Verse:55)

மனைவியின் மீது உங்கள் கடமை

'அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச்செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர்.உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி)அறிவித்தார். (சஹீஹுல் புகாரி )

'உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே பதிவு செய்யப்படும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். சஹீஹுல் புகாரி

திருந்துவதற்கு வாய்ப்புகள் இந்த உலகில் உள்ளது திருந்திக்கொள்ளவும் உங்களை திருத்திக் கொள்ளவும். இறைவன் நாடினால் அடுத்த வினாடி கூட நமக்கு மரணம் சம்பவிக்கலாம் இப்போதே இந்த வினாடியே தங்களை இந்த படுபாதக பாவங்களிலிருந்து தங்களை காத்துக் கொள்ளவும் தங்களது சுவனப் பாதையை எளிதாக்கிக் கொள்ளவும்

அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும்அல்லாஹ்வுக்கே!)

***********************************************

எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன்.- (அல் குர் ஆன்59:10)

"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.(குர்ஆன் 13:11)

தகவல்: சின்னகாக்கா

17 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எளிமையான எழுத்துக்களோடு எடுத்து வைத்த அனைத்து அறிவுரைகளும் "இளஞர்கள்" வட்டத்திற்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்குமே பொருந்தும்.

சின்ன வயதில் ஜாவியா புஹாரி சரீஃப்க்கு சென்று வந்த ஞாபகம் வருகிறது...

சின்னக்காக்க(வின்) டச் எப்பவுமே ஒரு ஹை பிட்ச்(தான்).. தெடருங்கள் இன்ஷா அல்லாஹ்...

Unknown said...

சினனகாக்காவின் பெரிய போதனைகள்...! சிந்திக்கத் தக்கவை...! இக்கட்டுரையை ஒருவருக்குப் படிக்கக் காண்பித்தேன்; 'ஏன் இவர் சொந்தப் பெயரில் எழுதக் கூடாது? நல்ல விஷயங்கள்தானே?' என்றார். சிந்திக்கவும்!

sabeer.abushahruk said...

நல்ல பதிவு. நன்றி!

மீரா(முத்து) said...

சின்னகாக்காவின் போதனைகள் காலத்துக்கு ஏற்றவை

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
பெயர் சிறிதில் ஆரம்பித்தாலும் எழுதும் விசயங்கள் அனைத்தும் மிகப் பெரிதானவை என்பது உண்மை.
தொடரட்டும் உங்கள் தீன் குலப்பணி

Yasir said...

பொன்னெழுத்துக்களால் வார்க்கப்பட வேண்டிய போதனைகள்....அடிக்கடி இதை மாதிரி எழுதுங்கள் சின்ன காக்கா

ZAKIR HUSSAIN said...

To சின்ன காக்கா...
//இதனால்தான் சில வயதான வசதி வாய்ப்பற்ற பெற்றோர் திக்கற்றவர்களாக 5க்கும் 10க்கும் மற்றவர்களின் கைகளை பார்த்து ஏங்கித் தவிக்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட பெற்றோரின் மகன்களோ 10 ஆயிரம் ருபாய்க்கு கேமரா செல்போன் வாங்கி மூன்றே மாதத்தில் 3-ஆயிரம் ரூபாய்க்கு விற்று ஆன்டியாகும் நிலைமைகள்!!!//

ஊர் இந்த நிலையில் போனால் வறுமையில் பாதிக்கப்படும் குடும்பங்கள் பெருகும். மானங்கெட்ட விசயங்கள் அதிகமாகும். வாழ்ந்த குடும்பங்கள் மற்றவர்களால் விமர்சிக்கபடுவார்கள். சரியான நேரத்தில் சொல்லப்பட்ட அறிவுரை. என்னுடைய பயம் தெரிந்தும் கிணற்றைல் விழாமல் இருக்க வேண்டும் நம் மக்கள்.

chinnakaka said...

அதிரை நிருபர் குழுமத்திற்கும், வாசகர் வட்டத்திற்கும் அஸ்ஸலாமு அலைக்கும் பின்னுட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. அகமது காக்கா சொலவதும் சரிதான் அதை ஏற்கின்றேன். எனது நண்பர்கள் மூலமும் தாயிகள் முலமூம் கேட்ட சம்பவங்களின் தொகுப்புதான் இது. மற்றுமொரு சம்பவம் இது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நண்பர் சொன்ன உண்மை சம்பவம் இது!
தனது உறவுகாரர் ஒருவரை பல நாட்கள் தேடியும் கிடைக்காமல் ஒரு முதியேர் இல்லம் போய் தேடி பார்த்துள்ளார், அப்போது அங்கு மூன்று முதியவர்களை சந்தித்து பேசிக்கொண்டிருக்கும்போது அவருகளுடைய பேச்சுக்கள் அனைத்தும் முஸ்லீம்களுடைய சயலில் இருந்ததால் பெயர்களை கேட்டுள்ளார் அவர்களோ முன்பு அப்துல்லாஹ், பசீர், பக்கீர் முகம்மது என்றும் இப்போது ஆல்பட், அலெக்ஸன்டர், ஆண்டர்ஸன் என்றும் சொல்லி உள்ளனர். ஏன் இப்படி பெயரை மற்றியுள்ளீர்கள் என்று கேட்டதற்கு பெற்றபிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என்றும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு சாப்பிட கூட வலியில்லாமல் இருக்கும் போது ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர், பள்ளிவாசல்களில் ஏறி யாசகம் கேட்க மானம் தடுக்கவே முதியோர் இல்லத்தில் சேருவதற்கு முடிவெடுத்து இங்கு வந்ததாகவும் இங்கு உள்ளவர்கள் பெயரை மாற்றினால்தான் சேர்த்து கொள்வதாகவும் சொல்லியதால் வயற்று பசிக்காக பெயரை மாற்றினாலும் இப்பவும் ஈமானுடன் வாழ்வதகவும் சொல்லி மெய்சிலிர்கவைத்துள்ளனர் சில காலத்திற்கு பிறகு மூவரையும் அங்கிருந்து வெளியேற்றி அவருடைய சொந்த செலவில் இதுவரையும் பரமறித்து வருகின்றார். தீன்குல செலவங்களே சிந்தியுங்கள்!
இந்நிலை நம் சமுதயத்திற்கு தேவைதான இதற்கொல்லாம் இளைஞர்களாகிய நாம் காரணமாகிவிட கூடாது நமது பக்கம் நடக்கவில்லை என்பதற்காக கண்டுகொள்ளாமல் இருக்காமல் நண்பர்களுக்கும் போதித்து எச்சரிக்கை மணி அடிப்போமாக

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நினைவுக்குள் சுற்றியே வரும் பக்கத்து வீட்டு சிறார்கள் எல்லோருடைய சின்னகாக்காவின் பின்னூட்டம் கலங்க வைத்து விட்டது..

அல்லாஹ்தான் நம்மை பாதுகாக்கனும்..

சின்னகாக்கா தொடருங்கள்...

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
நாம் தவற விட்ட ஒரு சில நல்ல விசயங்களை நமக்கு பின் வருபவர்கள் தவறவிடக்கூடாது என்பதில் நாம் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும்
.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அபுல்ஹசன்,

இன்றைய காலத்திற்கு தேவையான போதனைகள். விஞ்ஞான உலகத்தில் அனாவசிய செலவுகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகமாக காணப்படுகிறது. நீங்கள் சொன்ன செல்போன் உதாரணம் நிறைய சகோதரர்களின் சிந்தனைகளை தட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொடருங்கள் இது போன்ற நல்ல கருத்துக்களை.

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ சின்ன காக்கா(அபுல் ஹசன்).வழக்கம் போல் மார்கத்தை பொழிந்துள்ளார். நன்மையின் பாதையில் போக வழி சொல்லியது அருமை.இங்கே, இப்படிச் செல்(அம்புகுறி). நில்,கவனி,சொர்கம்செல்.
இப்படி வகைப்படுத்தி நல்ல பாதைக்கு வழி சொல்லியுள்ளார்.அந்த பாதையை உபாதையாக மாற்றாமல் இருப்பது நம் கையில் தான் உள்ளது.

அன்புடன் மலிக்கா said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைவருக்கும் இறைவனின் கருணையும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.

நல்லதொரு அறிவுரைகள் அனைவரும் ஏற்கக்கூடியதும்கூட.
வல்ல அல்லாஹ் எல்லாரையும் நன்மையின்பால் தம்முகங்களையும் தம்மனங்களையும் திருப்புவானாக.

RAFIA said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
கட்டுரையாளர் நல்ல முறையில் 'அச்சமூட்டி எச்சரிக்கை 'செய்து பாச நேச அறிவுரைகள் அழகாக கூறப்பட்டுள்ளது.ஜெசகல்லாஹ்!
தம் நண்பர்கள் முன்னிலையில் தனது பெற்றோர்கள் ஸ்டைலாக இல்லையென்ற காரணத்திற்க்காக அறிமுகம் செய்ய அருவெறுத்த (அச்தவ்ப்ருல்லா)
ஹீரோக்களை கேள்விப்பட்டுள்ளேன்.ஹாலில் அமர்ந்திருந்த போது பிரவேசித்த தகப்பனாரை ஏன் கொல்லைப் பக்கம் வரவேண்டியது தானே ..?!என்று வினவிய இளைஞர் கள் உண்டு.
சில மாதங்களுக்கு முன் நானூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களை கொண்ட கூட்டத்தில் நாம் "எம் இஸ்லாமியர்களிடத்தில் வருமையிருக்கலாம் தப்பான தொழில்களிருக்கலாம் . ஆனால் ஒரு "முஸ்லீமைக் கூட நீங்கள் முதியோர் இல்லத்தில் காண முடியாது.எங்களுக்குஇறையச்சத்துக்கு அடுத்தபடியாக பெற்றோரைப் பேணுதல் சொல்லப்
பட்டுதுள்ளது "என்று பீத்திக் கிட்டோம்.மாற்று மதத்தினரும் ஒப்புக் கொண்டனர்.ஆனால்
வேற்றுப் பெயரில் நம்மவர்கள் -வாழ வழியின்றி ...என்று வாசிக்கும்போது..நெஞ்சு கனக்கின்றது.யா அல்லாஹ் எம் சமுதாயத்தினரை வறுமையிலிருந்து காப்பாயாக!

crown said...

Rafia சொன்னது… ..
நெஞ்சு கனக்கின்றது.யா அல்லாஹ் எம் சமுதாயத்தினரை வறுமையிலிருந்து காப்பாயாக!
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.ரபியா காக்கா 13வருடங்களுக்கு முன் நீங்கள் விளயாட்ட சொல்லிகாட்டினீகள் அதாவது
முதுமை வந்தா வருமை வருமே(வரும்) என்று தமிழின் சொல்லழைப்பற்றி சிலாகித்து .இன்று அதே நீங்கள் வருந்தி அழும் அழவிற்கு நம் சமுதாயம் ஆகிவிட்டது. அல்லாஹ்தான் எல்லாரையும் காப்பாற்றானும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு