Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மவ்லூதுக்கு மகுடமா ? - விவாதக்களம் 79

அதிரைநிருபர் பதிப்பகம் | April 07, 2013 | ,

அன்பிற்கினிய சகோதரர்களே !

சமீபத்தில் நமது சகோதரர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிகழ்வுதான் நமதூர் பாரம்பரியமிக்க தக்வா பள்ளியில் நிர்வாக மாற்ற நிகழ்வை மவ்லூது ஓதி நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள் என்பதே.

இதனை இணைய செய்திகள் வாயிலாகவும், நமதூர் சகோதரர்களோடு கலந்துரையாடும் போதும் தெரிய வந்தது. சட்டென்று எழுந்த ஆதங்கம் "அடப் பாவிகளா !? இன்னுமா திருந்தவில்லை !?"

இன்றைய இளைஞர்கள் யாரைக் கேட்டாலும் இந்த மவ்லூது ஒரு பித்அத் மார்க்கத்தில் புதினம் என்று சுவற்றில் அடித்த பந்து போல் பதில் வரும். 

இன்றைய காலத்தில் இருக்கும் பெரியவர்களிடமும் இதே கேள்வியை வைத்தால் "ஆமாந்தம்பி கூடாதுதான் ஏந்தான் இதைச் செய்றானுவொளோ" என்று வெதும்பல் ஒரு பக்கம்.

இப்படி இருக்க, தலை தெரிக்க ஓட வேண்டிய தறுதலைக் கோமாளிகளின் ஆர்வக் கோளாறுகளால் உருவாக்கப்பட்ட இந்த அரபி மொழிப் பாடலின் அர்த்தம் விளங்கியும் இன்னும் அதனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு  அதிரையின் பாரம்பரியமிக்க பள்ளியின் நிர்வாகப் பொறுப்புக்குள் வந்த நாள் ஆரம்பித்து விட்டனர்.

என்ன இது இன்றுதான் புதிதா ? இதற்கு முன்னர் இங்கு இதே போன்றெல்லாம் நடக்கவில்லையா ? என்று எதிர் கேள்வி கேட்கத் தோனுமே !?

இணைவைப்பை தன்னகத்தே இருத்திக் கொண்டிருக்கும் இவ்வகை மவ்லூதுக்கு ஏன் அரிதாரம் கட்டி ஆராதனைகள் ? 

அல்லாஹ்வை மட்டுமே வணங்கவும் அவனது பொருத்தத்தை நாடிய செயல்களை மட்டுமே அங்கே நிறைவேற்றவும் இருக்க வேண்டிய பள்ளியில், நிர்வாக மாற்றம் என்ற போர்வையைப் போர்த்தி கொண்டு மவ்லூது கச்சேரிகள் நடத்துவது சரியாகுமா ?

பொறுப்பில் இருப்பவர்களும் நம்மவர்கள்தான் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை, அவர்களுக்கு எப்படி புரிய வைக்க வேண்டும் என்பதையும் எடுத்துரையுங்கள் இன்ஷா அல்லாஹ் !

வாருங்கள் விவாதிக்கலாம்...

அதிரைநிருபர் பதிப்பகம்

79 Responses So Far:

Unknown said...

பேய் சாம்பிராணி போட்டு ஆடுதூ........!

sabeer.abushahruk said...

உண்மையிலேயே நபிமணி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் புகழத்தான் மவுலூது என்றால், அந்த புகழாரங்களை எந்தவித ஷிர்க்கும் கலக்காமல் எழுதித்தர எத்தனையோ அறிஞர்கள் உண்டு.

உதாரணத்திற்கு, அதிரை நிருபரில் வெளிவந்த நபிமணியும் நகைச்சுவையும் என்னும் தொடரில் இக்பால் எழுதிய புகழுரைகள் இணை வைப்பில்லாத அழகான மொழியில் எழுதப்பட்ட்வை.

தேவைப்பட்டால் அப்படி ஓதிக்கொள்ளட்டமே.

கீழே சாம்ப்பிள்:

(இன்று முழு அரேபியாவையே ஆளும் மன்னராக மட்டுமல்ல, மதீனத்து மக்களின் மனங்களில் வீற்றிருக்கும் மனசாட்சியின் காவலராக, இளைஞர்கள் மத்தியில் இலட்சிய புருஷராக, வயதானோர் வாக்கெடுப்பில் வெற்றிவேந்தராக, விசுவாசிப் பெண்களின் விடிவெள்ளியாக, தன் மழலை நண்பர்களுக்கு வழிகாட்டும் ஓர் ஒளிவிளக்காக, மொத்தத்தில் அந்த எல்லோருக்கும் சுவனத்தைப் பற்றிச் சொல்லி, தங்கள் கவனத்தைக் கவர்ந்த ஒரு காந்தப் புள்ளியாகவே நம் கண்மணி நாயகம் (ஸல்) தோன்றினார்கள்.)

ஆனால், வீம்புக்கு மருந்து ஏது?

வழிகேட்டிலிருந்து இளைஞர்களை மீட்க வேண்டிய பொறுப்பிலுள்ள பெருசுகளே இப்படின்னா யாரிடம் போய் புலம்புவது.


sabeer.abushahruk said...

//பேய் சாம்பிராணி போட்டு ஆடுதூ........!//

இந்த வேஷம் களையாதா காக்கா?

நார்ஷா, ரொட்டியும் கறியுமா?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

மவ்லிது மார்க்கத்தில் புதிதாக யூதக் கைக்கூலி இப்னு ஷஃபாவின் அடிவருடிகள் ஷியாக்களின் வம்சாவழிகளால் உருவாக்கப்பட்டது என்பதை நம் சமுதாயத்திற்கு எடுத்துச்சொல்லியும், வீண் விதாண்டத்திற்காக ஒரு சிலர் இவைகளை செய்கிறார்கள்.

ஒரு சிலரின் பொருளாதார தேவைக்காகவும், மற்றும் சிலரின் அரசியல் இலாபத்திற்காகவும், வேறு சிலரின் பழிவாங்கும் கொள்கைக்காகவும் மார்க்கத்துக்கு விரோதமான காரியங்களை (நபி(ஸல்) அவர்களும் சத்திய சஹாப்பாக்களும் செய்யாத நூதன காரியங்களை) தூண்டிவிட்டு, வேடிக்கை காட்டிவரும் எதிரிக்கு எதிரி நண்பன் என்று நிரம் மாறும் பச்சோந்தி மனிதர்களின் நிலை என்னவாகும் என்பது கடந்த கால வரலாறுகளே சாட்சி. சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் என்பது மட்டும் நிச்சயம்.

ஊரில் உள்ள ஆலிம்கள் யாரும் இதனை ஆதரிக்காத நிலையில், இவைகளுக்கு துணை போகும் அனைவரின் செயல்கள் கண்டிக்கதக்கது. இது போன்ற நிகழ்வுகளை கண்டித்து செய்து வெளியிடாமல், ஊக்கப்படுத்தும் விதமாக செய்திகளை வலைத்தளங்களில் வெளியிடுவதும் வேதனையானது என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

பெண்களிடம் இருக்கும் விழிப்புணர்வு கூட நம் ஆண்களிடம் இல்லையே என்பது வேதனைக்குறியது.


அறிந்தோ அறியாமல் தவறிழைத்து மவ்லிது என்று இணைவைப்பு பாடல்களை பாடிவரும் ஆதரித்து வரும் இந்த சமூகத்துக்கு நேர் வழி காட்டுவாயாக.

மவ்லிதுகள் கூடும் என்று ஆதரித்து கருத்திடும் சகோதரர்களிடம் கண்ணியமாக கருத்தாட நான் தயார்.

sabeer.abushahruk said...

//ஊரில் உள்ள ஆலிம்கள் யாரும் இதனை ஆதரிக்காத நிலையில்,//

வினோதமாக இருக்கிறது இந்தச் செய்தி. ஆலிம்கள் ஆதரிக்காதவற்றை பள்ளியில்... அதாவது ஆலிம்கள் கூடும் பள்ளியில் நடத்திக்காட்டியது எந்த சக்தியாம்?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!! இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா? முஸ்லிம்களா?

1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப் பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப் பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம் : இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம் : இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபர் மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில்தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பேய் ஆடும்
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு
27. அங்கே தீமிதி உண்டு : இங்கே முஹர்ரம் மாதம் தீமிதி
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்

இவை மட்டுமா??? இன்னும் எத்னை எத்தனையோ??? சடங்குகள்! இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக!

சிந்திப்பதற்காகவே இந்த ஒப்பீடு... இவைகளை பெரும்பாலனவைகள் ஏகத்துவ பிரச்சாரத்தினால் நம் சமூத்திடமிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளது.

குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் மிகத் தெளிவான ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை.

அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள். (அல்குர்ஆன் – 12 : 106) என்ற மறை வசனமும், யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களே! (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//sabeer.abushahruk சொன்னது… வினோதமாக இருக்கிறது இந்தச் செய்தி. ஆலிம்கள் ஆதரிக்காதவற்றை பள்ளியில்... அதாவது ஆலிம்கள் கூடும் பள்ளியில் நடத்திக்காட்டியது எந்த சக்தியாம்?//

அதான் முதல் கருத்திலிருந்தே பதில் வந்துடுச்சே காக்கா..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

மவ்லிது என்ற வார்த்தைக்கு பிறந்த நாள் விழா என்பது பொருள். மவ்லிது என்ற பிறந்த நாளை புனிதர்களுக்கு கொண்டாடுவது எகிப்து நாட்டில் வாழும் கிருத்தவர்களின் வழக்கம்! இந்த எகிப்து நாட்டு கிருத்தவர்கள் மவ்லிது விழாவை தங்கள் கிருத்தவ புனிதர்ளின் பிறந்த நாளை மையமாக வைத்து கொண்டாடி வருகின்றனர். வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காப்டிக் கிருத்தவர்களால் மவ்லிது பாடல்களும் விழாக்களும் நைல் நதிக்கரை முதல் அஸைட் என்ற பகுதிவரை கொண்டாடுவது வாடிக்கையாகும்! இதை மையமாக வைத்தே குர்ஆன் ஹதீஸ்களை விளங்காத இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் முஸ்லிம்களில் சிலர்

சுப்ஹான மவ்லிது,
முஹையித்தீன் மவ்லிது,
ஷாகுல் ஹமீத் மவ்லிது,
முர்தா மவ்லிது,
பர்சஞ்சி மவ்லிது,
ஹசன் ஹுசைன் மவ்லிது,

என்று ஷிர்க்கான வார்த்தைகள் நிறைந்த இது போன்ற மவ்லிதுகளை படித்து இதுவும் மார்க்கம் என்று அப்பாவித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
"நபி(ஸல்) அவர்கள், 'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்" என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்.
(புகாரீ3445 Volume :4 Book :60)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆகுமான நன்மையான பர்ளுகள் பல இருக்க, ஆகாது சர்ச்சைக்குரியதென தீர்வாகியதை அமல்களென படித்து கொண்டாடுவதை விட, ஏற்கனவே பிடிக்காத நிர்வாகம் செய்தவர்கள் வீடுகள் முன் பட்டாசு வெடித்து கொண்டாடி இருந்தால் மஸ்ஜிதின் புனிதமாவது காப்பாற்றப்பட்டிருக்குமே!

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன்! அஸ்ஸலாமு அலைக்கும். //இவை மட்டுமா??? இன்னும் எத்னை எத்தனையோ??? சடங்குகள்! இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக!//

உங்களின் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளவும்.

அங்கே வளைகாப்பு இங்கே ஒப்புச்சிப் பார்ப்பது
அங்கே காத்து குத்து இங்கும் காதுகுத்து
அங்கே பூ நீராட்டுவிழா இங்கேயும் ருதுவான பெண்பிள்ளைகளுக்கு ஒப்புச்சிப் பார்ப்பது
அங்கே கருமாதி இங்கே ஹத்தம்

இன்னும் இருக்கிறதா?

ZAKIR HUSSAIN said...

முஸ்லீம்கள் எழுதிய அரபிப்பாடலில் மிகப்பெரிய 'ஹிட்" பாடல் மவ்லூதுதான். அதைத்தவிர மவ்லூதில் எந்த வணக்கமும் இல்லை என்று தெரிந்து பல வருடம் ஆகியும் இன்னும் 'ஹிட்' பாடல்களை 'சங்கை'யுடன் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

கடற்கரைத்தெருவில் புதிதாக வந்த 'கபுர்'...இப்போது தக்வா பள்ளியில் 'மவ்லூது'.....சபாஷ் சரியான போட்டி.

"தமிழ்நாட்டின் மிகப்பெரிய முஸ்லீம் சென்டர் அதிராம்பட்டினம்"

....எதை உலகத்துக்கு தெரிவிக்கிறோம்???

Unknown said...

அதிரை நிருபர் குழுவுக்கு,

மௌலூதுக்கு இவர்கள் மகுடம் ஏற்றி, அதை ஓரிறைபற்றி பறை சாற்றவேண்டிய பள்ளிவாசளில் அரங்கேற்றியது ஒன்றும் ஆச்சரியப்படவேண்டிய விஷயமல்ல. காரணம், மௌலூது என்றால் என்ன ?அதன் பின்னணி என்ன ? அதை எழுதியது யார் ? எப்பொழுது எழுதப்பட்டது?
எதற்காக எழுதப்பட்டது? அது எதைக்குறித்து சொல்கிறது? எந்த விதத்தில் சொல்கிறது? இதை ஓத அல்லஹ்வினிடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும்
அங்கிகாரம் உண்டா? நாளை மஹ்ஷரில் இதைக்கொண்டு ஓதியர்வகளுக்கு பயன் உண்டா?

இந்த அனைத்து கேள்விகளும் இதற்க்கு மகுடம் சூட்டி அழகு பார்ப்பவர்களைக்கேட்டால் கண்டிப்பாக ஒரு பயன் தரத்தக்க உருப்படியான ஒரு பதிலை இவர்களா சத்தியமாக தரமுடியாது.

நானும் ஒருகாலத்தில் இதே பள்ளியில் மௌலூதுக்கு மகுடம் சூட்டி அலங்கரித்தவர்களில் ஒருவன். என்றைக்கு ஓரிறைக்கொள்கையின் உண்மைத்தத்துவம் நெஞ்சில் ஆழப்பாய்ந்து வேரூன்ற ஆரம்பித்ததோ (1986)
அந்தக்காலத்திலிரிந்தே இந்த்தக்குப்பைகளை தூக்கி எரிய அல்லாஹ் என் உள்ளத்தை மாற்றினான்.அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.


இந்த மௌலூது என்னதான் சொல்கிறது ?

இதை ஓதுவதின் நோக்கமாக இவர்கள் சொல்வது, உலகில் எத்தனையோ தலைவர்களுக்கு விழா எடுக்கின்றார்கள், நாம் நம்முடைய ரசூல் (ஸல்) அவர்களுக்கு எடுத்து அவர்களை புகழக்கூடாதா ?

அந்த மௌலூதில் இருக்கும் ஓரிறைக்கொள்கைக்கு வேட்டு வைக்கும் வரிகள்:

நீங்கள் தான் பாவங்களை மன்னிக்கக்கூடியவர்,
நீங்கள்தான் சூரியன்
நீங்கள்தான் சந்திரன்
நீங்கள்தான் ஒளி
ஒளிக்குமேல் ஒளி
மனிதனை அழித்துவிடக்கூடிய பாவங்களையும் மன்னிக்கக்கூடியவர் நீங்களே.

மேலே கண்ட வரிகளை ரசூல் (ஸல்) அவர்கள் முன்னிலையில் இவர்கள் ஓதினால். இவர்களை கண்டதுண்டமாக வெட்டிப் புதைத்து விடுவார்கள்.

ஏன் நீங்கள் ஓதவில்லையா? என்று எதிர் கேள்வி கேட்ப்பார்கள். அறியாமல் ஓதியது வேறு. அது அல்லாஹ்வால் மன்னிக்கப்படக்கூடியது. அறிந்து ஓதுவது அல்லாஹ் மன்னிக்க மறுப்பது.

இன்றுவரை இதைத்தெரிந்துதான் ஒதிவந்து கொண்டிரிக்கின்றார்கள்.

இறக்கும் தருவாயில் கண்மணி நாயகம் (ஸல்) சொன்னார்கள் : " ஈசா நபியை அவர்கள் கூட்டம் வரம்பு மீரிப்புஹழ்ந்ததுபோல் என்னை வரம்பு மீறி புகழாதீர்கள்."

அவர்கள் நல்லடியார்களின் கப்ருகளை தங்கள் வணங்குமிடமாக ஆக்கிக்கொண்டார்கள். அவர்கள் அல்லாஹ் சபிப்பானாக ! என்றார்கள்.

இவ்வளவு கடுமையான , முன்ஜாக்கிரதையான வார்த்தைகளை முன்வைத்துச்சென்ற ரசூளுல்லாமீது இவர்கள் உண்மையான் உகப்பு உள்ளவர்களாக இருந்தால்,

இவர்கள் செய்யவேண்டியது,

" மண் அஹப்பனி பல் ஈஸ்தன்ன பி சுன்னதி"

எவன் ஒருவன் என்னை நேசம் வைக்க பிரியப்படுகிரானோ அவன் என் நடை முறையை பின்பற்றட்டும்" என்றார்கள்.

இவர்கள் அதற்க்கு எதிர் முனையில் செயல் படுகிறார்கள்.

அல்லாஹ் இவர்களையும், நம்மையும் ஷிர்க்கைவிட்டும் காப்பாற்றி , நல்லோர்கள் ஸாலிஹீன்கள், முத்தகீன்கள் ,ஷுஹதாக்கள் கூட்டத்தில்
சேர்க்கப்பிரார்த்திதவனாக !

அபு ஆசிப் என்ற அப்துல் கதர்,
ரியாத் சவுதி அரேபியா.







adiraimansoor said...

தக்வா பள்ளியின் பொறுப்பு என்னமோ அமெரிக்கா வொய்ட் ஹவுசின் பொறுப்பாக நினைக்கின்றார்கள் போலும் அங்கே யாருடைய ஆட்சி மாறினாலும் கொள்கை மாறாது அது போன்றுதான் இருக்கின்றது தக்வா பள்ளியின் நிலமையும்
அறிவு ஜீவியாக தம்மை காட்டும் யார் பொறுப்பேற்றாலும் கொண்ட கொள்கையில் (பித் அத் ஷிர்க் கொள்கை) உறுதியாக இருக்கின்றார்கள் தக்வா பள்ளியின் பதிவியேற்பே ரொம்ப விமர்சையாக பித் அத்தான மொவ்லீதுடன் அறங்கேற்றம் மிகவும் வேதனைக்குரியது.
இது அறியாதன்மையா, இஸ்லாத்தின் அலட்சியபோக்கா? அல்லது வீராப்பா?
கண்டிப்பாக இது வீரப்புதான் இதில் எள் அளவும் சந்தேகமில்லை. டேய் அல்லாஹ்வை மறந்துவிட்டு ஆடாதீனங்கடா அல்லாஹ் ஒரு நரம்பை பிடித்து இழுத்தால் தெரியும் இந்த ஆட்டமெல்லாம் எங்கே போகுமென்று
என்று திருந்துமோ இந்த ஜடங்கள்
என்று ஓரிரைக்கொள்கையை சார்ந்தவர்களிடம் ஒட்டு மொத்த நிர்வாகமும் வருகிறதோ
அன்றுதான் உண்மையான் தக்வாவுடன் விளங்கும் தக்வா பள்ளிவாசல்
அதிரைமன்சூர்

அப்துல்மாலிக் said...

கையா? வாயா? (நார்சாவை சொன்னேன்)

விபரம் தெரியாத வயதில் நானு இதை தீவிரமா கற்று ஓதினேன்(பாடினேன்) என்று எண்ணும்போது வருத்தமாத்தான் இருக்கு....

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ZAKIR HUSSAIN சொன்னது… முஸ்லீம்கள் எழுதிய அரபிப்பாடலில் மிகப்பெரிய 'ஹிட்" பாடல் மவ்லூதுதான். அதைத்தவிர மவ்லூதில் எந்த வணக்கமும் இல்லை என்று தெரிந்து பல வருடம் ஆகியும் இன்னும் 'ஹிட்' பாடல்களை 'சங்கை'யுடன் பாடிக்கொண்டிருக்கிறார்கள். //

நேற்று ஒரு சுப்ஹான மவ்லிது காணொளி இணையத்தில் பார்த்தேன் காக்கா, பழைய சினிமா பாடல் கேடுகெட்ட மேட்டிலே அரை மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து பாடுகிறார்கள். அதற்கு கின்னஸ் சாதனை விரு(ந்)து கொடுத்தாலும் கொடுப்பானுக.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

p.j அவர்களின் காணொளியை இணைத்திடுங்கள் [மவுலூது பற்றியது]
மவுளுதின் தமிழாக்கம் தெரிந்தவர்கள் இதில் பதியவும்

Ebrahim Ansari said...

வீடுகளில் அந்தக் காலத்தில் மவுலூது ஓதுவது தொடர்ந்த பழக்கமான நேரம். நாங்கள் சிருவயதினர். அதற்காக விரிப்பதர்காக ஒரு பெரிய விரிப்பு- எழுத்து வெல்வெட் தலையணைகள்- பன்னீர் செம்பு- சந்தனக் கிண்ணம் எல்லாம் இருக்கும்.

மவுலூது ஓத ஆளிம்சாவைக் கூப்பிடப் போனால் அவர் இரண்டு கேள்விகள் முதலில் கேட்பார். ஒன்று எத்தனை பேர் வரவேண்டும்? இரண்டு என்ன நார்சா?

நார்சா என்ன என்பதில்தான் மவுலூதின் ஓதப்படும் காலம் நிர்ணயிக்கப்படும். வாழைப்பழம் என்றால் காதைப் பொத்திக் கொண்டு ராகம் இழுத்துப் பாடுவதேல்லாம் இருக்காது. ராஜதானி அல்லது துறந்தோ எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஒதிவிடுவார்கள். கறி, கோழி, பிரியாணி என்றால் திருவாரூர்- காரைக்குடி பாசஞ்சர் ரயில் போல ஓடும்.( கறி நல்லா வேகட்டும் என்றோ பிரியாணி தம்மில் கிடக்கட்டும் என்றோதான்).

அத்துடன் அப்போது புதிதாக வந்த திரைப்பாடலின் ட்யூனில் ஓதுவார்கள். பெரும்பாலும் அமிர்த யோகம் வெள்ளிக் கிழமை கண்ணாளா ! அதுக்குத்தானே காத்திருந்தேன் இன்னாளா! என்ற ட்யூன் நிச்சயம் இருக்கும்.

ஓதும் டீமில் உள்ளவர்கள் முன்பாக கிளாசில் தண்ணீர் இருக்கும். ஒவ்வொரு முறையும் ஓதிவிட்டு அந்தத் தண்ணீரில் பூ பூ என்று ஊதிவிட்டு வைப்பார்கள் . அதில் உலகத்தில் உள்ள கார்பன் -டை- ஆக்சைடு எல்லாம் குடியேறும். அந்தத் தண்ணீரை சூலிகளுக்கு கொஞ்சம் குடிக்கக் கொடுப்பார்கள். பிறக்கும் குழந்தை சீக்குடன் பிறக்க இதுவே வழி வகுக்கும்.

ஒரு விஷயம் இவை எல்லாம் நடந்த வீடுகள் இன்று குட்டிச்சுவராக காட்சியளிக்கின்றன. இந்த குட்டிச்சுவர்களைப் பார்க்க வேண்டுமானால் தனி மின் அஞ்சலில் வாருங்கள் முகவரி தருகிறேன். மல்லாச் சோறு / ஒமல் சோறு வழங்கிய வீடுகள் - ஒரு கிராமத்தில் விளையும் நெல்லையே இதற்காக ஒதுக்கியவர்களின் வீடுகள் - மவுலூது கூடம் வைத்து வீடு கட்டியவர்களின் வீடுகள்- செய்யும் தொழிலில் அஜ்மீர் மவுலூதுக்காக ஐந்து பர்சென்ட் இலாபத்தில் ஒதுக்கியவர்களின் வீடுகள்- இன்று இருக்கும் நிலையைப் பாருங்கள். பார்த்துவிட்டு இந்திய தொல்பொருள் துறையை தொடர்புகொள்ளுங்கள்.

மவுடீகம் இறைவனின் பரக்கத்தை இல்லாமல் ஆக்கிவிட்ட சாட்சிகள் இவை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது… p.j அவர்களின் காணொளியை இணைத்திடுங்கள் [மவுலூது பற்றியது]
மவுளுதின் தமிழாக்கம் தெரிந்தவர்கள் இதில் பதியவும்//

சபீர் காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்,

திருக்குர் ஆன் தமிழாக்கம் படிக்கவோ, ஹதீஸ் தொகுப்புகளின் படிக்கவோ நேரம் ஒதுக்குவதற்கு நம்மவர்கள் தயங்கு இந்த காலகட்டத்தில். மவ்லிது பாடல்களின் தமிழாக்கம் எல்லாம் எதற்கு?

தமிழாக்கத்துடன் இருக்கும் குர்ஆனை ஓத நேரம் ஒதுக்கினாலே extra fitting மவ்லிது போன்ற பாடல்களில் நம் கவனம் இருக்காது.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

மழுலூது வேண்டாம் என்று சொல்ல காரனம் சிர்க்கான வார்த்தைகள் தானே ஆதலால் தான் தமிழாக்கம் சிரிதேனும் மக்களிடம் தெரியப்படுத்தத்தான் தமிழாக்கம் கெட்டேன்

Unknown said...

//பேய் சாம்பிராணி போட்டு ஆடுதூ........!//

புதிய அரசியல் கோமாளியும் சேர்ந்துள்ளெ வேகமாக ஆடுது!!

sabeer.abushahruk said...

ஈனா ஆனா காக்கா,

எங்க காலத்து ராகம் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...

உச்சகட்ட வேதனை என்ன தெரியுமா?

ஒருத்தர் தம் ஹரே தம்மில் ஆரம்பிச்சாரே பாருங்கள்.

Unknown said...

//மழுலூது வேண்டாம் என்று சொல்ல காரனம் சிர்க்கான வார்த்தைகள் தானே ஆதலால் தான் தமிழாக்கம் சிரிதேனும் மக்களிடம் தெரியப்படுத்தத்தான் தமிழாக்கம் கெட்டேன் //

1

மவ்லித் வரிகள்
اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !

கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !
اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,

அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ
كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!

சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!

குர்ஆன் வரிகள்

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)

2

மவ்லித் வரிகள்
يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ

பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்!

நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்!

புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.

குர்ஆன் வரிகள்

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 22)

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)

3

மவ்லித் வரிகள்
حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ
صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ

தங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது.

இது எங்களின் பாவக் கறைகளிலிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும்.

தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக!

அவர் இழப்பினை அடையவில்லை.

குர்ஆன் வரிகள்

அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 5:74)

4

மவ்லித் வரிகள்
اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ
وَمَا يَخِيْبُ النَّزِيْلُ فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ

நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.

குர்ஆன் வரிகள்

நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! நீர்) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)
அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே!) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:41)

5

மவ்லித் வரிகள்
اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ

அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.

குர்ஆன் வரிகள்

“மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?” என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவை களின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)

Unknown said...

6

மவ்லித் வரிகள்
صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ

வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.

குர்ஆன் வரிகள்

“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201)
“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

7

மவ்லித் வரிகள்
اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ

எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.

குர்ஆன் வரிகள்

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160)
“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7 : 128)

8

மவ்லித் வரிகள்
اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்

குர்ஆன் வரிகள்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)

8

மவ்லித் வரிகள்
ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ فَجِئْتُ هذَا الْبَابْ
اُقَبِّلُ اْلاَعْتَابْ اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ
وَالسَّادَةُ اْلاَخْيَارِ

எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.

குர்ஆன் வரிகள்

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (அல்குர்ஆன் 27:62)

9

மவ்லித் வரிகள்
فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.

குர்ஆன் வரிகள்

“இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன் 13:28)

10

மவ்லித் வரிகள்
قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ

அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.

குர்ஆன் வரிகள்

“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:56)

11

மவ்லித் வரிகள்
بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ

என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.

குர்ஆன் வரிகள்
“எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:86)

நபி மொழி

நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)

Unknown said...

13

மவ்லித் வரிகள்
وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ

என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.

குர்ஆன் வரிகள்
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்”(என்றார்.) (அல்குர்ஆன் 11 : 90)

14

மவ்லித் வரிகள்
إِنَّا نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ

நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.

குர்ஆன் வரிகள்

தீமைகளைச் செய்தோரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள் சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 10 : 27)
மவ்லித் வரிகள் நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.

நபி மொழிகள்

அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவூத் 2829)

சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)

15

மவ்லித் வரிகள்
اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ وَمُقِيْلُ الْعَثَرَاتِ

எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.
اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.
يَا مَنْ يَّرُوْمُ النَّعِيْمَا بِحُبِّهِ كُنْ مُقِيْمًا
وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا لَدَيْهِ بُرْعُ السَّقَامِ

நயீம் எனும் சுவனத்தை நாடுபவனே! நபியவர்களின் நேசத்தைப் பற்றிக் கொண்டு தங்குபவனாக நீ இரு. நீ நோயாளியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.

குர்ஆன் வரிகள்

நான் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)

நபி மொழி

மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)

16

மவ்லித் வரிகள்
مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ

மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.

குர்ஆன் வரிகள்

“அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக! “பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை. (அல்குர்ஆன் 3:126)

17

மவ்லித் வரிகள்
اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ
ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ

நரக நெருப்பின் ஜவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும். நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜவாலையை அணைத்து விடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.

குர்ஆன் வரிகள்

யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல்குர்ஆன் 39:19)

“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சுப்ஹான மவ்லூது வரிகளும் மொழி பெயர்ப்புகளும்..


اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ
பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !
கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ
இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,
அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ
என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!
சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!


اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ
وَمَا يَخِيْبُ النَّزِيْلُ فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ
நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.


اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ
அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.


صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ
வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.


اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ
எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.


اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ
மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்


ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ فَجِئْتُ هذَا الْبَابْ
اُقَبِّلُ اْلاَعْتَابْ اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ
وَالسَّادَةُ اْلاَخْيَارِ
எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.


فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ
எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.


قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ
அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.


بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ
என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.

இன்னும் வேனுமா?

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

போதும் நார்சாவை கொண்டுவாருங்கள்

Unknown said...

//p.j அவர்களின் காணொளியை இணைத்திடுங்கள் [மவுலூது பற்றியது]//
மவ்லூதுக்கு ஆதரவானர்களின் வீடியோவை வேண்டுமானால் போடுவார்களே தவிர பி ஜே யின் வீடியோவை போடுவதில்லை என்பதில் உறுதியாக இருப்பவர்கள் எப்படி போடுவார்கள்.

மீலாதும் மவ்லிதும் - சொற்பொழிவு (ஆடியோ)
http://www.adiraitntj.com/2010/03/blog-post_06.html

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Mohamed Ashraf சொன்னது… மவ்லூதுக்கு ஆதரவானர்களின் வீடியோவை வேண்டுமானால் போடுவார்களே தவிர//

அல்லாஹ் பாதுகாப்பானாக...

نتائج الاعداية بسوريا said...

நண்பா சபீர்,

மௌலூதின் உச்சகட்ட ராகமே
அதுவும் அதிராம்பட்டினத்தில் அந்தக்காலத்தில் பேசப்பட்ட ராகம்,
அதுவும் ஹிந்தியில் வந்ததுதான். அதுதான் " லூப்புததர மஸ்தானா
யாருமேற தீவானா "

இதைப்பாடி நம்மூரில் லெப்பைகலிடம் அடிவாங்கியவர்களும் உண்டு.
மௌலூடின் ராகம் பற்றி enakku therinthathu இதுதான்.

அபு ஆசிப்.
ரியாத், சவுதி அரேபியா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லோரும் இந்த மவ்டீகத்தைப் பற்றி சீரியஸா பேசிகிட்டு இருக்கீங்க !

என்னமோ தெரியலை! அன்றைய மவ்லூதுக் கோமளிகளின் சேட்டைகளை நினைத்துப் பார்க்கும்போது... இதெல்லாம் ஜுஜுபி....

நார்சாவெல்லாம் இங்கே எதிர்பார்த்த மாதிரியெல்லாம் தெரிந்தது....

ஓதலாமா கூடாதா என்பதல்ல பேசுபொருள் ! "அடப்பாவிகளா இன்னுமா திருந்தவில்லை" என்று ஆரம்பிக்கும்போதே புரிந்திருக்கனுமே இந்த குப்பைகளை இன்னுமா ஓதுறீங்கன்னு !!

ஏன் நானும் கூட அப்பாக்களின் மடியில் இருக்கும் காலம் தொட்டு அதனை விட்டு ஒதுங்கும் காலம் வரை ஊதுபத்தி கொலுத்தி வைப்பதிலிருந்து பாயை சுருட்டி வைக்கும் வரை தூக்கக் கண்ணோடு இருந்தவய்ங்க தான்....

என்ன செய்வது அப்பா(வி)த்தனமான செயல்கள் அது, வெளங்கலங்க அப்பொ இதுமாதிரி அரபி மொழிக்கு பட்டுன்னு மொழியாக்கமும், அதுக்காக முயற்சித்ததும் இல்லை.... :)

குட்டு வெளிபட்டுடுச்சு.... இதுக்கு மேலேயும் அட, புடிச்சா எப்புடி !!!

தக்வா பள்ளி மட்டுமல்ல... எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் இது உடணடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்காக ஒத்து ஊதுபவர்களை புறக்கனிக்க வேண்டும்.

sabeer.abushahruk said...

சகோ முஹம்மது அஷ்ரஃப்,

தங்களின் அருமையான மொழிபெயர்ப்பு பின்னூட்டங்களுக்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

نتائج الاعداية بسوريا said...

சகோ, சபீர் அவர்களே ,
என்றுமே பித் அத்தான விஷயங்களை புரிய வைத்தால்தான் அது மார்க்கத்தின்
சஹீஹான விஷயங்களுக்கு புரிய வைப்பதற்கு பலம். ஆதலால் மௌலூடை தமிழ்ப்படுத்தி அதை உலவ விட்டால்தான், இஸ்லாத்தின் ஆணிவேரைய்யே அசைத்துப்பார்க்கும் இந்த மூட மௌட்டீக விஷயங்கள் புறம் தள்ளப்படும்.

ஆதலால் இந்த மௌலூதை தமிழ்ப்படுத்தி, அதன் தரத்தை ஊர் அரியச்செய்ய
முனைப்பு காட்டுவதை நான் வரவேற்க்கின்றேன்.

அந்த விளக்கங்களே அது நம் சமுதாயத்தை விட்டும் ஆணிவேரோடும் பிடுங்கி எரியக்காறன மாக அமையும் என்பது என் நிலைப்பாடு.

ஆதலால் இந்த மௌலூது தமிழாக்கம் வெளி வரட்டும்.
அது இந்த சமுதாயத்தை விட்டும் ஒழிய காரணமாக அமையட்டும்.

அப்துல் காதர், (மு. செ. மு.)
ரியாத், சவுதி அரேபியா.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

குர்ஆனுடன் நேருக்கு நேர் மோதும் மௌலூது வரிகள்.

http://www.adiraitntj.com/2010/02/blog-post_17.html

இதை தனி கட்டுரையாக போடுங்களேன். யாருடைய கட்டுரை என்று போட தேவையில்லை. செய்தி சென்றடையட்டும்...

نتائج الاعداية بسوريا said...

என் இனிய நட்பே !
சபீரே !

இந்த மௌலூதைப்பற்றி ஒன்றை அதாவது ஒரே ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டேன். அது என்ன தெரியுமா ?

மிகப் பிரமாண்டமான தவறு ஒன்றை இதில் செய்கிறார்கள். அதுதான் ரசூல் (ஸல்) அவர்களை பேர் சொல்லி அழைப்பது. யா ஹபீபி ! யா முஹம்மத் !
யா அரூசல் ஆபிகைணி" "ஓ' முஹம்மதே !. என்று பேர் சொல்லி இதில் அழைக்கப்படுகிறது. அல்லாஹ் குரானிலே சொல்கிறான் : "உங்களில் ஒருவரை ஒருவர் அழைப்பதுபோல் நீங்கள் நபியை அழைக்காதீர்கள். " என்ற அல்லாஹவின் கூற்றையே இந்த மௌலூது மூலம் அவமதிக்கிறார்கள். "நவூது பில்லாஹ்" அல்லாஹ்தான் இவர்கள் பாவங்களை மன்னிக்கணும்.

உதாரணத்திற்கு, ரசூல் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் வந்தகாலகட்டங்களில்
அவர்களின் பெற்றோர்கள் உயிருடன் இருந்திருந்தால் கூட அல்லாஹ் இந்த உரிமையை பெற்றோர்கள் என்பதற்காக கொடித்திருக்கமாட்டன்.

அப்பேர்ப்பட்ட கண்ணியக்குறைவான வார்த்தையை அதன் உட் பொருள் புரியாமல் புகழ்கிறோம் என்ற பெயரில் கண்ணியத்தை தம்மை அறியாமலேயே குலைக்கின்றார்கள். எடுத்துச்சொன்னாலும் அவர்களின் பிடிவாதமும் வீராப்பும் தான் மேலோங்கி நிற்கின்றன.

யா அல்லாஹ் இவர்களுக்கு இதில்
தெளிவைக்கொடு!
அறிவைக்கொடு!
வீராப்பைப்போக்கு !
வீம்பைப்போக்கு !

உன் தூய மார்க்கத்தின் பால் இவர்களைக்கொண்டு வந்து விடு.
உன்னை விட்டால் வேறு எவரும் இல்லை இவர்களை நல்வழிப்படுத்த.

நீ கொடுத்தால் அதைத்தடுப்பதர்க்கோ
நீ தடுத்தால் அதைக்கொடுப்பதர்க்கோ
இவ்வுலகில் எவனுக்கும் சக்தி இல்லை.

யா அல்லாஹ் இவர்களை நேர் வழிப்படுத்துவாயாக !
என்று கண்ணீர் மல்கியவனாக உன்னிடம் இறைஞ்சுகிறேன்.

ஆமீன், யா ரப்பல் ஆலமீன்,

அபு ஆசிப் என்ற அப்துல் காதர் (மு. செ மு. )
ரியாத்,
சவுதி அரேபியா.

Unknown said...

மவ்லித் ஒரு ஆய்வு விடியோ - பிஜெ

http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/mavlith_or_ayvu/

Unknown said...

//தாஜுதீன் சொன்னது…

//ZAKIR HUSSAIN சொன்னது… முஸ்லீம்கள் எழுதிய அரபிப்பாடலில் மிகப்பெரிய 'ஹிட்" பாடல் மவ்லூதுதான். அதைத்தவிர மவ்லூதில் எந்த வணக்கமும் இல்லை என்று தெரிந்து பல வருடம் ஆகியும் இன்னும் 'ஹிட்' பாடல்களை 'சங்கை'யுடன் பாடிக்கொண்டிருக்கிறார்கள். //

நேற்று ஒரு சுப்ஹான மவ்லிது காணொளி இணையத்தில் பார்த்தேன் காக்கா, பழைய சினிமா பாடல் கேடுகெட்ட மேட்டிலே அரை மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து பாடுகிறார்கள். அதற்கு கின்னஸ் சாதனை விரு(ந்)து கொடுத்தாலும் கொடுப்பானுக. //

தாஜுதீன்:
அந்த விடியோவிற்கான பதிவை இங்கே வெளியிடுங்களேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அப்துல் ஹமீது சொன்னது…

தாஜுதீன்:
அந்த விடியோவிற்கான பதிவை இங்கே வெளியிடுங்களேன்.//

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அப்துல் ஹமீது,

வேண்டாம்... அது போன்ற சினிமா மெட்டு பாடல் மவுலிதுகளுக்கு negative publicity வேண்டாம் என்று நான் நினைப்பது சரி என்று ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இன்ஷா அல்லாஹ் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மவ்லிது ஓர் இஸ்லாமிய பார்வை என்று தலைப்பிட்டு ஒரு தனி பதிவை நானே தொகுத்து, விரைவில் அதிரைநிருபரில் வெளியிட கோரிக்கை வைக்கிறேன்.

நான் ஏற்கனவே பதிவிட்ட சில பதிவுகள் பின் வரும் சுட்டியில் உள்ளது, படித்துப்பாருங்களேன்.

http://adirainirubar.blogspot.ae/2013/04/blog-post_4.html
http://adirainirubar.blogspot.ae/2013/01/blog-post_649.html
http://adirainirubar.blogspot.ae/2012/07/blog-post.html
http://adirainirubar.blogspot.ae/2011/04/blog-post_4257.html

நன்றாக இருந்தால் நீங்கள் விரும்பும் தளங்களில் மீள் பதிவு செய்துக்கொள்ளுங்கள்.

Unknown said...

இந்த மொவ்லூது பாட்டின் அர்த்தத்தை தக்வா பள்ளி மற்றும் எல்லாப் பள்ளிகளிலும் விநியோகித்தால் மக்களுக்கு ஒரு தெளிவு பிறக்குமே, அதற்கு அ.நி. பதிப்பகம் ஏற்பாடு செய்தால் நலமாக அமையும் என்பது நமது கருத்து... அடுத்து மற்றொரு விளக்கம் தேவை. " தல அல் பத்ரு அலைனா " என்ற பாட்டு உன்மையிலேயே நபியைப் புகழ்ந்து மதீனாவில் பாடப்பட்டதா ,அதனுடைய பொருளையும் தெரிவித்தால் நல்லது....ஜசாகல்லாஹ் கைர்.

Unknown said...

"தலஅல் பத்ரு...." என்று தொடங்கும் நபிபுகழ்ப் பாடல் நபிக்கு முன்னால் மதீனத்துச் சிறுவர் சிறுமியர் பாடியது என்பதில் ஐயமில்ல. ஆனால், இன்று அதையா 'மவ்லிது' எனும் பெயரில் பாடுகின்றனர்? பச்சை 'ஷிர்க்' ஆன பிற்காலத்து பைத்துகள் அல்லவா பக்தி சிரத்தையுடன் பாடப்படுகின்றன?!

Adirai pasanga😎 said...

எல்லாவற்றிற்கும் மேலாக ஏகத்துவம் பேசும் அனைத்து சகோதரர்களும் தங்கள் இடையேயுள்ள பிணக்குகளை விட்டுவிட்டு அல்லாஹ்விற்க்காக ஒன்றுபட்டு மீண்டும் ஏகத்துவ பிரச்சாரத்தினை முழுவீச்சில் அனைத்து மக்களிடம் சென்றடையும் பொருட்டு இணைந்து களத்தில் இறங்க வேண்டும்.

அறியாத மக்களுக்கு எடுத்து விளக்கவேண்டும். இல்லையேல் பழைய மவ்டீகமான பழக்கங்களுக்கும், கப்ரு வழிபாடு போன்ற மன்னிக்கமுடியாத இணைவைப்பு கொள்கைகளுக்கும் அறிந்த மக்களே பொறுப்புதாரிகள். ஏகத்துவம் பேசுபவர்களுக்கும், இயக்கவாதிகளுக்கும் தங்களின் ஈகோவானது இதனை செய்வதை விட்டும் தடுக்காமல் இருக்கட்டும்.

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானகவும்.

ஜாஹிர் ஹுஸைன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

//"தலஅல் பத்ரு...." என்று தொடங்கும் நபிபுகழ்ப் பாடல் நபிக்கு முன்னால் மதீனத்துச் சிறுவர் சிறுமியர் பாடியது என்பதில் ஐயமில்ல. ஆனால், //

இதை தான் ரசூலுல்லாஹ் அப்போதே தடுத்து விட்டார்களே ,பிறகு எப்படி இதை ஆதாரமாக காட்ட முடியும் ?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஜாகிர்உசேன் சொன்னது… இதை தான் ரசூலுல்லாஹ் அப்போதே தடுத்து விட்டார்களே ,பிறகு எப்படி இதை ஆதாரமாக காட்ட முடியும் ?//

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ஜாகிர் ஹுசேன்,

நீங்கள் மேல் குறிப்பிட்டதை இந்த யார் பதிவில் மவ்லுதுகளுக்கு ஆதாரமாக காட்டினார்கள்?

நீங்கள் சொல்ல வந்த செய்தியை முழுமையாக சொன்னால் எல்லோரும் தெளிவடையலாமே..

:)

Unknown said...

//இதை தான் ரசூலுல்லாஹ் அப்போதே தடுத்து விட்டார்களே ,பிறகு எப்படி இதை ஆதாரமாக காட்ட முடியும்?//

தடுத்ததற்கு ஆதாரம் தேவை.

ஜாஹிர் ஹுஸைன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த பதிவில் இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டா விட்டாலும் நாளை நடப்பதை அறியும் ரசூலுல்லாஹ் வந்து விட்டார்கள் என்று அளவுக்கு அதிகமாக ரசூலுல்லாவை புகழும்போது அதை தடுத்து அப்படி சொல்லாதீர்கள் முன்பு சொன்னதையே சொல்லுங்கள் என்று ரசூலுல்லாஹ் சொல்லி விட்டார்கள்
அதற்கான ஹதீஸ் புகாரி 4001,51


என் கணவருடன் முதலிரவு நடந்த பின் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நீ என்னருகில் எவ்வாறு அமர்ந்துள்ளாயோ அது போல் என் விரிப்பில் அமர்ந்தார்கள். அப்போது சிறுமிகள் தஃப் (சலங்கையில்லாத கொட்டு) அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தமது தந்தையைப் பற்றி பாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுமி 'நாளை நடப்பதை அறியும் நபி நம்மிடம் இருக்கிறார்கள்' என்று பாடினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) 'இவ்வாறு கூறாதே! ஏற்கனவே கூறிக்கொண்டிருந்ததைக் கூறு ' என்றார்கள்.

இப்னுமாஜா1897 ல் மேலதிகமாக அல்லாஹ்வை தவிர வேறு யாரும் நாளை நடப்பதை அறிய மாட்டார்கள் என்று இருக்கு

- بَابُ الْغِنَاءِ وَالدَّفِّ
1897- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ أَبِي الْحُسَيْنِ اسْمُهُ : الْمَدَنِيُّ ، قَالَ : كُنَّا بِالْمَدِينَةِ يَوْمَ عَاشُورَاءَ ، وَالْجَوَارِي يَضْرِبْنَ بِالدَّفِّ وَيَتَغَنَّيْنَ ، فَدَخَلْنَا عَلَى الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ ، فَذَكَرْنَا ذَلِكَ لَهَا ، فَقَالَتْ : دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ صَبِيحَةَ عُرْسِي ، وَعِنْدِي جَارِيَتَانِ يَتَغَنَّيَانِ ، وَتَنْدُبَانِ آبَائِي الَّذِينَ قُتِلُوا يَوْمَ بَدْرٍ ، وَتَقُولاَنِ فِيمَا تَقُولاَنِ : وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدِ ، فَقَالَ : أَمَّا هَذَا فَلاَ تَقُولُوهُ ، مَا يَعْلَمُ مَا فِي غَدٍ إِلاَّ اللَّهُ

Unknown said...

தாஜூதீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்

//தாஜுதீன் சொன்னது…

//மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது… p.j அவர்களின் காணொளியை இணைத்திடுங்கள் [மவுலூது பற்றியது]
மவுளுதின் தமிழாக்கம் தெரிந்தவர்கள் இதில் பதியவும்//

சபீர் காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்,

திருக்குர் ஆன் தமிழாக்கம் படிக்கவோ, ஹதீஸ் தொகுப்புகளின் படிக்கவோ நேரம் ஒதுக்குவதற்கு நம்மவர்கள் தயங்கு இந்த காலகட்டத்தில். மவ்லிது பாடல்களின் தமிழாக்கம் எல்லாம் எதற்கு?

தமிழாக்கத்துடன் இருக்கும் குர்ஆனை ஓத நேரம் ஒதுக்கினாலே extra fitting மவ்லிது போன்ற பாடல்களில் நம் கவனம் இருக்காது. //

உங்களின் கீழ்காணும் விளக்கம் சரியா? மௌலூதில் உள்ள அபத்தங்களை அறிய வேண்டும் என்றால் அதன் தமிழாக்கம் தெரிந்தால் தானே விளங்க முடியும்? பிஜேவின் உரையை வெளியிடக்கூடாது என்ற கொள்கைகாக இப்படி மாற்றி பேசுவது சரியா? பிஜே அவர்களின் உரையை வெளியிடக்கூடாது என்ற உங்களின் கொள்கையை நான் தவறு என்று சொல்லவில்லை. அது உங்களின் உரிமை.

|| திருக்குர் ஆன் தமிழாக்கம் படிக்கவோ, ஹதீஸ் தொகுப்புகளின் படிக்கவோ நேரம் ஒதுக்குவதற்கு நம்மவர்கள் தயங்கு இந்த காலகட்டத்தில். மவ்லிது பாடல்களின் தமிழாக்கம் எல்லாம் எதற்கு? ||

மேலே பிஜேவை பற்றி பேச்சு வந்துவிட்டதால் தர்ஜூமா படிக்க சொன்ன நீங்கள், தர்ஜூமா படிக்காமல் மவ்லுது பற்றி கட்டுரை போடுகிறேன் என்கிறீர்கள்.

//இன்ஷா அல்லாஹ் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மவ்லிது ஓர் இஸ்லாமிய பார்வை என்று தலைப்பிட்டு ஒரு தனி பதிவை நானே தொகுத்து, விரைவில் அதிரைநிருபரில் வெளியிட கோரிக்கை வைக்கிறேன்.//

மவ்லுது பற்றி விமர்சனம் செய்யும் நீங்கள் 'இறையருள் கவிமணி' என்று கவிஞருக்கு இறைவனின் அருளை நீங்கள் வாங்கி கொடுத்ததை போல எழுதுகிறீர்கள் என்று கண்ணியமான முறையில் எடுத்துகாட்ட விரும்புகிறேன். ஒருவருக்கு இறையருள் கிடைத்துள்ளதா? இல்லையா? என்பதை எப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்பதை விளக்கவும்.

ஜாஹிர் ஹுஸைன் said...

மேலே உள்ள ஹதீஸ் புகாரி 4001,5147

5147 என்பது விடுபட்டு 51 என்று வந்துள்ளது திருத்திக்கொள்ளவும்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

//இந்த பதிவில் இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டா விட்டாலும்...//
சகோ. ஜாகிர்,
எழுதுவதற்கெல்லாம் எதிர்ப்புக் காட்டவேண்டும் என்ற மனோநிலையில் இருந்தால், இப்படித்தான், ஒன்று கிடக்க ஒன்றைச் சான்றாகக் காட்டவேண்டி வரும். மவ்ளூது கூடாது என்பதில் நம்மிருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லைதானே?!

ஜாஹிர் ஹுஸைன் said...

//மவ்ளூது கூடாது என்பதில் நம்மிருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லைதானே?!//

கண்டிப்பாக நம் இருவருக்கும் இதில் கருத்து வேறுபாடு இல்லை .ஆனால் இந்த ஹதீஸ் பற்றி சொல்லும்போது இப்படி பாட பட்டபோது அதை ரசூலுல்லாஹ் தடுத்து விட்டார்கள் என்ற செய்தியையும் சேர்த்தே சொல்லி விட்டால் மக்களுக்கு குழப்பம் ஏற்படாது

அதை விடுத்து அதையா இங்கு பாடினார்கள் என்று கேட்கும் போது ,எதோ புகழ்ந்து பாடுவதற்கு அனுமதியுள்ளது என்று தவறாக விளங்கி கொள்ள இதில் வழி இருக்கின்றதா இல்லையா ?

அதிலும் உங்களை போன்றவர்களே இதற்கு ஆதாரம் என்று கேட்கும் போது இன்னும் குழப்பம் வருமா வராதா ?

பேங்க் ஹசன் said...

என்னன்ன மெளலிதுகளில் என்ன தவறு என்று சுட்டிக் காட்டினால் ரெண்டுங்கெட்டானாக இருக்கும் எங்களுக்கு புரிய வாய்ப்பாக இருக்கும்.

தமீம் said...

தவறே இல்லாத பைத்து மெளலிது ஏதும் இருக்குதா அல்லது எல்லாமே தவறா. லெப்பை மார்களும் இன்னமும் பிடிவாதமாக இருக்க காறணம் என்ன? இதுபற்றி நம்மூர் பிரபல ஆலிம்கள் மூலம் அறிவிக்க ஏற்பாடுசெய்தால் நல்லது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் அப்துல் ஹமீது,

வ அலைக்குமுஸ்ஸலாம்,

கருத்திடுவதற்கு முன் ஒன்றுக்கு இரு முறை சரி பார்த்து கருத்திடுவீர்கள் என்று நம்புகிறேன்.

ஏன் இந்த மல்லுகட்டு என்று தெரியவில்லை. நான் இந்த பதிவில் எழுதிய கருத்துக்களில் தவறு உள்ளது என்று தெளிவாகசுட்டிக்காட்டினால், நிச்சயம் அவற்றிலிருந்து பின் வாங்கிக்கொள்கிறேன். ஆனால் இங்கு பதிவேடு ஒட்டிய என்னுடைய கருத்துக்கும் தொடர்பில்லாதவைகளை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நீங்களே எதைஎதையோ யூகித்துக்கொண்டு என் பெயரிட்டு கருத்திட்டுள்ளீர்கள். நான் பொருத்துக்கொள்கிறேன். வீண் விவாதம் வேண்டாம் அன்பு சகோதரரே.


என்னுடைய இந்த கருத்தை மட்டும் இறுதியாக பதிவு செய்கிறேன்.

திருக்குர் ஆன் தமிழாக்கம் படிக்கவோ, ஹதீஸ் தொகுப்புகளின் படிக்கவோ நேரம் ஒதுக்குவதற்கு நம்மவர்கள் தயங்கு இந்த காலகட்டத்தில். மவ்லிது பாடல்களின் தமிழாக்கம் எல்லாம் எதற்கு?

தமிழாக்கத்துடன் இருக்கும் குர்ஆனை ஓத நேரம் ஒதுக்கினாலே extra fitting மவ்லிது போன்ற பாடல்களில் நம் கவனம் இருக்காது.


குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் தமிழாக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இணை வைப்பு வார்த்தைகள் கொண்ட மவ்லிதுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்ற பொருளில் சொன்ன என் கருத்தில் என்ன தவறு இருக்கிறது?

Mohamed Asraf என்ற பெயரிட்ட சகோதரர் மவ்லிதுகளில் உள்ள கோளாறுகளை தமிழ் அர்த்தத்துடன் ஒரு சில வற்றை இங்கு பதிந்துள்ளர் என்பதையும் நினைவில் கொள்க.

இஸ்லாமிய உலகில் தலைச்சிறந்த அறிஞர்களில் மவ்லவி P ஜெய்னுல் ஆபீதீன் அவர்களும் ஒருவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை, இன்னும் சொல்லப்போனால் நானாகட்டும் இன்னும் என்னிலடங்கா சகோதரர்கள் தங்களின் இஸ்லாமிய மார்க்க அறிவை அதிகரித்துக்கொள்ள அறிஞர் P ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் ஆய்வுகளை படிக்கிறோம் தெளிவுபெறுகிறோம். அவைகள் அனைத்தையும் படித்து பயன்பெறுபவர்களுக்கு நன்மையாக இருக்கும் பட்சத்தில் அத்தனை நன்மைகளும் அறிஞர் P ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் சேரும் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.

அறிஞர் P ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் கட்டுரை பற்றியும் அவர்களின் காணொளி பற்றியும், அவைகள் ஏன் இந்த தளத்தில் வெளிவருவதில்லை என்பதனை பற்றி விவாதிக்கும் பதிவு இதுவல்ல.

இணை வைப்பு வார்த்தைகள் கொண்ட மவ்லிதுகள் கூடாது என்ற கருத்துடன் நாம் உடன்படுகிறோம். பின் ஏன் பதிவுக்கு தொடர்பில்லாதவைகளை இங்கு பேசவேண்டும்?

சகோதரர் ஜாகிர் ஹுசைன் அவர்களுக்காக இந்த காணொளி, இதை கொஞ்சம் நிதானமாக பார்த்து கேளுங்கள். http://www.youtube.com/watch?v=x2gI5lNKGRc நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து இணைவைப்பு கருத்துக்கள் இல்லாத கவிதைகள் பாடுவதற்கு தடை உள்ளதா இல்லையா என்ற தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் நம் எல்லோருக்கு நல்ல மார்க்க ஞானத்தை தந்தது, இறையச்சமுடைய அடியார்களாக வாழ அருள்புரிய வேண்டும், அதற்காக நானும் நீங்களும் பிராத்திப்போமா !.

adiraimansoor said...

சகோதரர் தாஜுதீன் தந்துள்ள மவ்லூது பற்றிய பிஜேயின் இந்த‌ லிங்கை http://www.youtube.com/watch?v=x2gI5lNKGRc
எல்லோருக்கும் பரப்பவேண்டும்.

இதை எல்லோரும் கேட்டாலே தெளிவு பெறுவார்கள். மவ்லீதில் உள்ள‌ அபத்தங்க‌ளை ஒவ்வொரு வீட்டு சுவற்றிலும் எழுதினாலே ஓர‌ளவு ம‌க்க‌ளிட‌ம் தெளிவை எதிர்பார்க்க‌லாம்

ஜாஹிர் ஹுஸைன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் தாஜுதீன் அவர்களுக்கு,நமது ஊர் தக்வா பள்ளியில் பாட பட்ட இந்த மௌலித் இணைவைப்பு கருத்துள்ள பாடல்கள் பாட பட்டன என்பதால் தான் நாம் அனைவரும் இங்கே எதிர்க்கிறோம் .ஒருவர் கூட இந்த கருத்துக்கு மாற்றமாக இங்கே கருத்திட வில்லை அல்ஹம்துலில்லாஹ் .

இணைவைப்பு இல்லாத கருத்துள்ள பாடல்களை பாட அனுமதியுள்ளதா என்ற கருத்தில் இங்கு நாம் விவாதிக்க வில்லை அப்படி பட்ட கருத்தை எதிர்த்து நான் இங்கு கருத்திடவும் இல்லை

நான் இங்கு கருத்திட வந்தது என்னவென்றால்,
//"தலஅல் பத்ரு...." என்று தொடங்கும் நபிபுகழ்ப் பாடல் நபிக்கு முன்னால் மதீனத்துச் சிறுவர் சிறுமியர் பாடியது என்பதில் ஐயமில்ல. ஆனால், //

இப்படி ஒரு கருத்தை போடும் போது நாளை நடப்பதை அறியும் ஆற்றல் உள்ள ரசூலுல்லாஹ் (ஸல் )வந்துவிட்டார்கள் என்று பாடிய போது இல்லை அப்படி சொல்லாதீர்கள் நாளை நடப்பதை அல்லாஹ் தான் அறிவான் என்று சொல்லிவிட்டார்கள்

சின்ன பாம்பாக இருந்தாலும் பெரிய கம்பால் அடித்து விட வேண்டும் என்று நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்.அதுபோல சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் சொல்லும்போதே தெளிவாக சொல்லி விட வேண்டும் என்ற எனது கருத்தை தான் பதிவிட்டேன்

அதை விடுத்து இதையா அங்கு பாடினார்கள் என்று கேட்கும் போது விளங்காத மக்கள் தவறாக விளங்கி கொள்ள வழியுண்டு என்னும் எனது கருத்தில் தவறு இருப்பதாக நினைகிறீர்களா ?

ஜாஹிர் ஹுஸைன் said...

நான் சொல்லிய கருத்தில்

//,எதோ புகழ்ந்து பாடுவதற்கு அனுமதியுள்ளது என்று தவறாக விளங்கி கொள்ள இதில் வழி இருக்கின்றதா இல்லையா ?//

இதை நான் தெளிவாக சொல்லி இருக்க வேண்டும்

அதற்கு மேலே

//நாளை நடப்பதை அறியும் ரசூலுல்லாஹ் வந்து விட்டார்கள் என்று அளவுக்கு அதிகமாக ரசூலுல்லாவை புகழும்போது அதை தடுத்து அப்படி சொல்லாதீர்கள் முன்பு சொன்னதையே சொல்லுங்கள் என்று ரசூலுல்லாஹ் சொல்லி விட்டார்கள் //
அளவுக்கு அதிகமாக புகழக்கூடாது என்று மேலே சொல்லிவிட்டமையால் எனது கருத்தை புரிந்து இருப்பீர்கள் என்று நினைத்து விட்டேன்

Unknown said...

//மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது… p.j அவர்களின் காணொளியை இணைத்திடுங்கள் [மவுலூது பற்றியது]
மவுளுதின் தமிழாக்கம் தெரிந்தவர்கள் இதில் பதியவும்//

//சபீர் காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்,

திருக்குர் ஆன் தமிழாக்கம் படிக்கவோ, ஹதீஸ் தொகுப்புகளின் படிக்கவோ நேரம் ஒதுக்குவதற்கு நம்மவர்கள் தயங்கு இந்த காலகட்டத்தில். மவ்லிது பாடல்களின் தமிழாக்கம் எல்லாம் எதற்கு?

தமிழாக்கத்துடன் இருக்கும் குர்ஆனை ஓத நேரம் ஒதுக்கினாலே extra fitting மவ்லிது போன்ற பாடல்களில் நம் கவனம் இருக்காது. //

பின பாதிக்கு பதில் சொன்ன நீங்கள் முன் பாதிக்கு பதில் சொல்லவில்லையே நானும் பார்த்த வரை உங்கள் இனையதளத்தில் பி ஜே யின் வீடியோவை போட்டதில்லை மழுப்பாமல் காரணத்தை விளக்கவும்

aa said...

முழு பெயருடன் உண்மை அடையாளத்துடன் பதிவிடும் கருத்துகளை நீக்கிய அதிரை நிருபர், போலிப் பெயர் பின்னூட்டவாதிகளின் கருத்தையும் நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

//அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு//

மேற்கண்ட அதிரை நிருபரின் பின்னூட்ட பாலிசிக்கு உயிர் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

U.ABOOBACKER (MK) said...

அன்புள்ள தம்பி ஜாகிர் உசேன்,
அஸ்ஸலாமு அலைக்கும்

//இதை தான் ரசூலுல்லாஹ் அப்போதே தடுத்து விட்டார்களே ,பிறகு எப்படி இதை ஆதாரமாக காட்ட முடியும்?//

நபி (ஸல்)ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குள் நுழையும் போது மதீனாவாசிகள் பாடிய"தலஅல் பத்ரு...." என்று தொடங்கும் பாடலை தடைசெய்ததாக எனக்கு தெரியவில்லை.ஆதாரம் தெரிவித்தால் நல்லது.நீங்கள் குறிப்பிட்ட ஆதாரங்கள் வேறு சந்தர்ப்பங்களில் சிறுமிகள் பாடியதில் ஷிர்க்கான கருத்துக்கள் இருந்ததால் தடை செய்துள்ளார்கள்.

நமதூரில் நடக்கும் மவ்லிது என்னும் ஷிர்க்கினை ஒழிக்க நாம் சேர்ந்து பாடுபடுவோம்.

Unknown said...

//நபி (ஸல்)ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குள் நுழையும் போது மதீனாவாசிகள் பாடிய"தலஅல் பத்ரு...." என்று தொடங்கும் பாடலை தடைசெய்ததாக எனக்கு தெரியவில்லை.ஆதாரம் தெரிவித்தால் நல்லது.நீங்கள் குறிப்பிட்ட ஆதாரங்கள் வேறு சந்தர்ப்பங்களில் சிறுமிகள் பாடியதில் ஷிர்க்கான கருத்துக்கள் இருந்ததால் தடை செய்துள்ளார்கள்.//

சகோ. அபூபக்கர்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்ல கவிதைக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. ஆனால், 'இறையருள் கவிமணி' என்பதற்கும் மௌலூதுக்கும் இடைவெளி மிக குறைவு.

உங்கள் கருத்தில் ஒரு கேள்வி. மௌலூதில் ஷிர்கான வரிகள் உள்ளது என்பதால் மட்டும் தான் அது கூடாதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா?

புரிதல்களுக்காக தான் கேட்கிறேன்.

Unknown said...

தலஅல் பத்ரு அலைனா என்று துவங்கும் பாடலை நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்த போது சிறுமிகள் பாடியதாக வரும் செய்தி பலகீனமானது என்று ஒரு முறை படித்துள்ளேன்.

சம்பந்தப்பட்ட சகோதரர்கள் அந்த ஹதீஷையும் அதன் விபரத்தையும் வெளியிட்டால் (ஹதீஸ எண் மற்றும் இடம் பெறும் நூல்) அந்த செய்தி சரியானதா? என்று பார்க்க வசதியாக இருக்கும்.

Unknown said...

சகோதரர் தாஜூதீன்

உங்களுடன் மல்லுகட்ட வேண்டிய தேவை எனக்கு இல்லை. நீங்கள் சொல்லும் விளக்கம் உங்களின் மற்ற விளக்கத்திற்கு எதிராக உள்ளது என்பதை தான் எடுத்துக்காட்டினேன். பிஜேவின் ஆக்கத்தை வெளியிடுங்கள், மக்கள் பயன் அடையட்டும் என்றால், அதை போடும் நேரத்தில் தர்ஜூமா படியுங்கள் என்று கூறுகிறீர்கள். வேறு ஒரு கருத்தில் இதை பற்றி ஒரு கட்டுரை போடுகிறேன் என்கிறீர்கள் (அங்கு தர்ஜூமா காரணத்தை காணோம்). கட்டுரைக்கு , கட்டுரை, அதற்கு வரும் கருத்துக்கு பதில், கருத்து .பதிலுக்கு பதில் என்றெல்லாம் தொடர்ந்து எழுதும் நீங்கள், அப்போது தர்ஜூமா பற்றி பேசவில்லை.

மௌலூதில் இணைவைப்பு உள்ளது என்கிறீர்கள். மௌலூதில் இணைவைப்பு உள்ளது என்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது? தமிழில் யாரோ சொன்ன பிறகு தானே தெரிந்தது? அதன் தமிழாக்கத்தை வெளியிட்டால் தானே, இன்று வரை மௌலூதில் தவறு இல்லை என்று நம்புபவர்கள் திருந்துவார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்த செய்தியும் நமது தளத்தில் வந்துவிடக்கூடாது என்ற உங்களின் கொள்கையை நிலைநாட்ட நீங்கள் வைக்கும் காரணம் தான் சரியில்லை.

பிஜே அப்படி இப்படி என்று எழுதியுள்ளீர்கள். அத்தோடு இப்படிபட்ட பிஜேவின் எந்த ஆக்கமும் எங்கள் தளத்தில் வராது என்பதை சேர்த்து சொல்லியிருந்தால் உண்மையான கொள்கை வெளிப்பட்டு இருக்கும்.

//இணை வைப்பு வார்த்தைகள் கொண்ட மவ்லிதுகள் கூடாது என்ற கருத்துடன் நாம் உடன்படுகிறோம்.//

இணைவைப்பில்லாத மௌலூது இருந்தால் பள்ளியில் பாடலாம் என்று சொல்ல வருகிறீர்களா? தெளிவடைய கேட்கிறேன்.

'இறையருள் கவிமணி' என்று எழுதிய உங்களின் கொள்கை பற்றி கேட்டேன். பதில் வரவில்லை. 'நாளை நடப்பதை அறியக்கூடியவரே' என்று வரும் மௌலூது வரிக்கும், 'இறையருள் கவிமணி' என்று சொல்லும் உங்களின் கருத்துக்கும் இடைவெளி மிகவும் குறைவு. நீங்கள் பாதி கிணறு தான் தாண்டியுள்ளீர்கள் என்பது எனது கருத்து.

ஒருவருக்கு இறைவனின் அருள் வருகிறது என்று நீங்கள் எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்? இது மௌலூதுடன் சம்பந்தப்பட்ட கேள்வி. உங்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் கேட்கப்படும் கேள்வியல்ல இது. உங்களை நேரான வழியில் இட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் கேட்கும் கேள்வி .

நல்ல கவிதைக்கு மார்க்கத்தில் இடம் உண்டு. அது வழிபாடாக ஆகாது. பள்ளியில் உட்கார்ந்து படிக்க கூடாது (ஒரு அமலை போன்று).

கவிதை எழுத புறப்படும் பலர் எதுகை மோனைக்காகவே கொள்கை இழந்துள்ளார்கள் என்பதை தேவைப்பட்டால் பேசலாம்.

Unknown said...

//உங்கள் கருத்தில் ஒரு கேள்வி. மௌலூதில் ஷிர்கான வரிகள் உள்ளது என்பதால் மட்டும் தான் அது கூடாதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா?

புரிதல்களுக்காக தான் கேட்கிறேன்.//
http://www.youtube.com/watch?v=x2gI5lNKGRc இதை கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

Unknown said...

//http://www.youtube.com/watch?v=x2gI5lNKGRc இதை கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.//

நான் கேட்டது உங்கள் கருத்தை. பிஜேவின் கருத்தை அல்ல. உங்களின் எல்லா கருத்தும் பிஜேவின் கொள்கைபடி தான் என்று எடுத்து கொளல்லாமா?

பிஜேவின் கருத்தை தேவைப்படும் இழுத்து கொள்ளுவது சரியா? மௌலூதில் ஷிர்க் இல்லாமல் பள்ளிகளில் பாடுவது தவறுயில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? (எனது இந்த கேள்விக்கு உங்கள் பிஜே பதில் சொல்லவில்லை என்பதை கவனிக்கவும்).

ஜாஹிர் ஹுஸைன் said...

அபூபக்கர் காக்கா அவர்களுக்கு
வ அலைக்கும் சலாம்
//நபி (ஸல்)ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குள் நுழையும் போது மதீனாவாசிகள் பாடிய"தலஅல் பத்ரு...." என்று தொடங்கும் பாடலை தடைசெய்ததாக எனக்கு தெரியவில்லை.ஆதாரம் தெரிவித்தால் நல்லது.நீங்கள் குறிப்பிட்ட ஆதாரங்கள் வேறு சந்தர்ப்பங்களில் சிறுமிகள் பாடியதில் ஷிர்க்கான கருத்துக்கள் இருந்ததால் தடை செய்துள்ளார்கள்//

நபி (ஸல் )அவர்கள் மதீனாவிற்குள் நுழையும் போது உள்ள நீங்கள் சொல்லும் ஹதீஸை இங்கு குறிப்பிடவும்

Unknown said...

சகோ.அப்துல் ஹமீது அவர்களுக்கு,

என் கருத்து எப்படி இருந்தாலும் உங்களுக்கு தேவையில்லை. பிஜேவின் கருத்துடன் என் கருத்து ஒத்துப்போவதால் நீங்கள் ஏற்றுக் கொள்ளும் பிஜேவின் கருத்தை பதிந்தேன்.அல்லாஹ்வின் பள்ளியில் அல்லாஹ்வை தவிர யாரையும் அழைக்கக்கூடாது என்ற திருமறை வசனத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.

தம்பி ஜாகிர் உசேன் அவர்களுக்கு,

"தலஅல் பத்ரு...." என்று தொடங்கும் பாடலை
ரசூலுல்லாஹ் அப்போதே தடுத்து விட்டார்களே ,என்று நீங்கள் தான் சொன்னீர்கள். தடைசெய்ததாக எனக்கு தெரியவில்லை.ஆதாரம் தெரிவித்தால் நல்லது என்று நான் கேட்டேன்.அந்த பாடலை தடை செய்ததற்கு நீங்கள்தானே ஆதாரம் தர வேண்டும்.

ஜாஹிர் ஹுஸைன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அபூபக்கர் காக்கா அவர்களுக்கு,

தல அல் பத்ரு எனத் தொடங்கும் பாடலை ரசூலுல்லாஹ் தடுத்து விட்டார்கள் என்று சொன்னேன் .அதற்கு ஆதாரம் கேட்டதற்கு கொடுத்து விட்டேன் அதற்கு

//நீங்கள் குறிப்பிட்ட ஆதாரங்கள் வேறு சந்தர்ப்பங்களில் சிறுமிகள் பாடியதில் ஷிர்க்கான கருத்துக்கள் இருந்ததால் தடை செய்துள்ளார்கள்.//

நான் காட்டிய இந்த பாடல் வேறு சந்தர்பத்தில் பாட பட்டது என்று நீங்கள் சொன்னீர்கள் அப்படியானால் நீங்கள் சொல்லிய சந்தர்பம் இதுவல்ல என்றால் வேறு ஒரு சந்தர்பத்தில் பாடபட்டதற்கு பாடப்பட்ட அந்த பாடலை நீங்கள் தான் காட்டவேண்டும் .என் கேள்வியில் உள்ள நியாயத்தை உணர்ந்து அந்த ஹதீஸை இங்கு பதிவீர்கள் என்று நம்புகிறேன்

ஜாஹிர் ஹுஸைன் said...

தல அல் பத்ரு இது சம்மந்த பட்ட விசயத்தில் சிறுவர்கள் என்ற வார்த்தையை தான் கவனித்து அது சம்மந்தமான வேறு ஹதீஸை கொண்டு வந்து காட்டி இருக்கிறேன் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்
ஆனால் அதையா இங்கு பாடினார்கள் என்று சொல்லும் போது சம்மந்தப்பட்ட அந்த ஹதீஸை இங்கு பதிய வேண்டும் என்று கேட்டேன் பதிவீர்கள் என்று நம்புகிறேன்

Unknown said...

//அல்லாஹ்வின் பள்ளியில் அல்லாஹ்வை தவிர யாரையும் அழைக்கக்கூடாது என்ற திருமறை வசனத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். //

சகோ. அபூபக்கர்

அல்லாஹ்வின் பள்ளியில் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் அழைக்கக்கூடாது என்ற உங்களின் பதிலுக்கு நன்றி. மௌலூதில் ஒரு வேளை நல்ல கருத்து இருந்தாலும், அல்லாஹ்வை அல்லாத மற்றவர்களை அது அழைக்கிறது என்றால் அதுவும் கூடாது என்ற கருத்தை பதிவதற்கு தான் இந்த கேள்வியை கேட்டேன்.

மௌலூதில் நல்ல கருத்து இருந்தால் அது பள்ளியில் படிக்கலாம் என்பது போல இந்த கட்டுரையில் கருத்து பதிந்துள்ள சிலரின் வாக்கியமைப்பு உள்ளது.

மௌலூதையும், பித்அத் மற்றும் இணைவைப்பு காரியங்களை அடியோடு ஒழிக்க களம் காணுவோம். இன்ஷா அல்லாஹ்.

ஜாஹிர் ஹுஸைன் said...

"எங்களின் மீது சந்திரன் உதித்தது " பதில் வருமா அபூபக்கர் காக்கா அவர்களே ?

குலாம் said...

சலாம் சகோதரர்காள்,

வீண் விவாதத்திற்கு உதாரணமாக இந்த வெட்டி பின்னூட்டங்களை எடுத்துக்கொள்ளலாமா?

லாம்.

மக்களா! நேரமிருந்தால் நல்ல பயனுள்ள காரியங்களில் செலவிடமுனையுங்கள்.

ஒத்த கருத்துடையவர்கள் என்று அறிந்தும் வார்த்தை பிறழ்வுகளுக்காக ஏன் இந்த மல்லுகட்டு காலவிரயம்.

நமக்கெல்லாம் பொது எதிரிகளிடம் இந்த வீராப்பை காண்பித்தால் நல்ல பயனுள்ளதாக அமையுமே.

சகோதரர் தாஜுதீன் அருமையான தன்னிலை விளக்கம் கொடுத்த பின்பும் தொடர்வது என்பது 'அவலை நினைத்து உரலை இடித்த' கதையாவுல இருக்கு.

வேண்டாம் சகோதரர்களே!

வேற்றுமையிலும் ஒற்றுமை காண முயலுவோம்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

சகோதரர் குலாம்

அஸ்ஸலாமு அலைக்கும்

'இறையருள் கவிமணி' என்று எழுதுவதற்கும் 'மௌலூது' குப்பைகளுக்கும் இடைவெளி மிக குறைவு என்று நான் குறிப்பிட்டேன். இது பற்றி யாரும் வாய்திறக்கவில்லை. மவுனம் சம்மதம் தான். மௌலூதில் உள்ள தவறுகளை விமர்சனம் செய்தால் மட்டும் போதாது, அந்த தவறு நம்மிடம் உள்ளதா? என்றும் பார்க்க வேண்டும். நல்ல கவிதைக்கு மார்க்கத்தில் இடம் உண்டு என்ற போதிலும், கவிதை எழுதுகிறோம் என்று மார்க்க வரம்புகளை மீறிவிடக்கூடாது. 'இறையருட் கவிமணி' என்ற வார்த்தை மார்க்க வரம்புகளுக்கு அப்பாற்பட்டு, அளவுக்கு அதிகமாக புகழுவது மற்றும் யாருக்கு இறையருள் வருகிறது என்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு செல்வது எங்ஙனம் சரியாகும்?

இவ்வாறு எழுதியது தவறு தான் என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லது தவறு இல்லை என்று வாதாட வேண்டும். தவறாக இருந்தால் தவறு செய்துவிட்டேன் திருத்தி கொள்கிறேன் என்று சொல்லி, திருத்திக்கொள்ளலாம்.

நான் இதை சுட்டிக்காட்ட காரணம், மௌலூது கூடாது என்ற கொள்கையில் இருக்கும் சம்பந்தப்பட்ட சகோதரர்களின் குறையை சரி செய்யத்தான். சம்பந்தப்பட்ட சகோதரர்களை வீழ்த்தி, நான் ஒன்று தேர்தலில் நிற்க போவதில்லை.

வேற்றுமையில் ஒற்றுமை காணுவோம் என்று சொல்லியுள்ளீர்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை இஸ்லாத்தில் இல்லை. கூடும் அல்லது கூடாது என்று தான் சொல்ல முடியுமே தவிர, இரண்டுக்கும் நடுவில் ஒன்று இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்ற வாததிற்கு குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரம் காட்டினால் நலம்.

தலஆல் பத்ரு என்ற ஹதீஸ் பற்றிய இங்கு நடந்த கலந்துரையாடலில் புரிந்து கொள்வதில் சகோதரர்களுக்கு மத்தியில் தவறு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தை நிறுத்திக்கொள்வது நலம்.

y.m.ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்

குலாம் அவரகளே
///வேற்றுமையிலும் ஒற்றுமை காண முயலுவோம்.//
இதுபோன்ற கருதால்தான் சமுதாயம் நாசத்தில் போய்கொண்டிருக்கிறது ஷிர்க்கை நிலைநாட்டும் மொவ்லூதை ஒழிதுகட்டுவதில் ஒற்றுமைக்காக , சமரசம் செய்யக்கூடாது
அல்லாஹ்வின் ஒருகட்டலையை மீறிய ஒரு பிரிவினரை மற்ற பிரிவினர் தடுக்காமல் இருந்ததே
அந்த சமுதயத்தை அல்லாஹ் குரங்குகளாகவும் ,பன்றிகளாகவும் மாற்றிய காரணம் அறிவீர்களா
மார்க்க விஷயத்தில் ஒற்றுமைக்காக சமரசம் ஒருபோதும் கிடையாது

عبد الرحيم بن جميل said...

தாஜிதீன் காக்கா!

//இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா? முஸ்லிம்களா?//
அவர்களோடு ஏன் நம்மையும் சேர்த்து சொல்கிறீர்கள்? கப்ரு வணங்கிகளுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை!நிச்சயமாக இணை வைப்போரும் நாமும் ஒன்றாகிவிடுவோமா? இல்லவே இல்லை!!

Unknown said...

பீ ஜே யின் வீடியோவை மட்டும் உங்கள் இனையதளத்தில் போடுவதில்லையே என்ற கேள்விக்கு உங்களில் யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லையே

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இந்த பதிவையும் பின் தொடர்ந்து வரும் கருத்துக்களை அவதானித்து வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், அஸ்ஸலாமு அலைக்கும்,

மீண்டும் மீண்டும் ஒரிரு சகோதரர்கள் (அப்துல் ஹமீது, Mohamed Ashraf என்ற பெயரிட்டவர்கள்) கருத்திட்டு வருவதால் மவுனமாக இருந்த நான் பதிலளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இந்த பதிவிற்கு மீண்டும் நான் பதில் அளிப்பதை விரும்பாத என் மேல் பாசம் வைத்துள்ள சகோதரர்கள் அனைவரும் கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள்.

இணைவைப்பு கருத்துள்ள மவ்லிதுகள் கூடாது என்று அனைத்து சகோதரர்களும் ஒத்துக்கொண்ட பிறகும் ஒரு சில சகோதரர் வீண் விதாண்டத்திற்காக ஏதேஏதோ கருத்திட்டு இந்த பதிவின் உண்மை நோக்கத்தை வீண்டித்துவிட முயற்சிக்கிறார்கள் என்பதாகவே நடுநிலையோடு பார்க்கும் மக்களுக்கு புரிந்திருக்கும்.

"இறையருட்கவி" என்ற வாசகம் அதிரை அஹமது அவர்கள் இந்த தளத்தில் எழுதிய கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை என்ற பதிவின் இறுதி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த வாசகம் சரியா தவறா என்பதை அந்த பதிவில் கருத்திட்டு விளக்கம் கேட்டால் நிச்சயம் அதற்கான பதில் பதிவின் ஆசிரியர் அவர்கள் மூலம் கிடைக்கும் என்பதே அறிவிப்பூர்வான அனுகுமுறையாக இருக்குமே தவிர அந்த வாசகத்துக்கு தொடர்பில்லாத இங்கு வந்து என்னை வம்புக்கு இழுப்பது எவ்வகையில் நியாயம்?

//அப்துல் ஹமீது சொன்னது… உங்களுடன் மல்லுகட்ட வேண்டிய தேவை எனக்கு இல்லை. நீங்கள் சொல்லும் விளக்கம் உங்களின் மற்ற விளக்கத்திற்கு எதிராக உள்ளது என்பதை தான் எடுத்துக்காட்டினேன். பிஜேவின் ஆக்கத்தை வெளியிடுங்கள், மக்கள் பயன் அடையட்டும் என்றால், அதை போடும் நேரத்தில் தர்ஜூமா படியுங்கள் என்று கூறுகிறீர்கள். வேறு ஒரு கருத்தில் இதை பற்றி ஒரு கட்டுரை போடுகிறேன் என்கிறீர்கள் (அங்கு தர்ஜூமா காரணத்தை காணோம்). கட்டுரைக்கு , கட்டுரை, அதற்கு வரும் கருத்துக்கு பதில், கருத்து .பதிலுக்கு பதில் என்றெல்லாம் தொடர்ந்து எழுதும் நீங்கள், அப்போது தர்ஜூமா பற்றி பேசவில்லை.//

நான் சொன்ன கருத்தில் தவறில்லை என்பதையும், அறிஞர் p ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் பற்றிய எண் நிலைபாடு பற்றியும் நான் மிகத்தெளிவாக இதற்கு பதில் சொல்லிவிட்டேன், இதோ உங்கள் அனைவரின் பார்வைக்காக,

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் தமிழாக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இணை வைப்பு வார்த்தைகள் கொண்ட மவ்லிதுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்ற பொருளில் சொன்ன என் கருத்தில் என்ன தவறு இருக்கிறது?

Mohamed Asraf என்ற பெயரிட்ட சகோதரர் மவ்லிதுகளில் உள்ள கோளாறுகளை தமிழ் அர்த்தத்துடன் ஒரு சில வற்றை இங்கு பதிந்துள்ளர் என்பதையும் நினைவில் கொள்க.

இஸ்லாமிய உலகில் தலைச்சிறந்த அறிஞர்களில் மவ்லவி P ஜெய்னுல் ஆபீதீன் அவர்களும் ஒருவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை, இன்னும் சொல்லப்போனால் நானாகட்டும் இன்னும் என்னிலடங்கா சகோதரர்கள் தங்களின் இஸ்லாமிய மார்க்க அறிவை அதிகரித்துக்கொள்ள அறிஞர் P ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் ஆய்வுகளை படிக்கிறோம் தெளிவுபெறுகிறோம். அவைகள் அனைத்தையும் படித்து பயன்பெறுபவர்களுக்கு நன்மையாக இருக்கும் பட்சத்தில் அத்தனை நன்மைகளும் அறிஞர் P ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் சேரும் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.

அறிஞர் P ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் கட்டுரை பற்றியும் அவர்களின் காணொளி பற்றியும், அவைகள் ஏன் இந்த தளத்தில் வெளிவருவதில்லை என்பதனை பற்றி விவாதிக்கும் பதிவு இதுவல்ல.


இங்கு யார் மல்லுக் கட்டுகிறார்கள் என்பதை இந்த பதிவை வாசிக்கும் எல்லோருக்கும் தெரியும்.

மவுனம் சம்மதம் தான் என்பது குர்ஆன் ஹதீஸ்படி சரியா?


உங்கள் கருத்து இப்படி எடுத்துக்கொள்ளலாமா? அப்படி எடுத்துக்கொள்ளலாமா? என்று கேள்விகள் கேட்பது விதாண்டவாதம் செய்யும் எண்ணமுடையவர்களுக்கு மிக மிக சுலபம் என்பது இந்த பதிவை வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்த உண்மை.


தொடர்ந்து வரும் குர் ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்களை மட்டும் வாசித்து விடுங்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்; (அவனே) மனிதர்களின் அரசன்; (அவனே) மனிதர்களின் நாயன்; பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்); அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்; (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். அல்குர்ஆன் 114:1 முதல் 114:6 வரை.

'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார் ஷஹீஹ் புகாரி, Volume :1 Book :2.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி. 42 Volume :7 Book :93.

'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்;பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி, Volume :1 Book :2.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப் பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான். என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி Volume :2 Book :43


மேல் சொன்ன குர்ஆன் வசனத்தையும் நபி மொழிகளை நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொண்டு அல்லாஹ்வின் அச்சத்திற்கு மட்டும் பயப்படும் நல்ல மனிதர்களாக வாழ்ந்து, சக முஸ்லீம்களை நோவினை செய்யும் கொடிய எண்ணத்திலுர்ந்து நம்மை பாதுக்காத்துக்கொள்ள முயற்சிப்போம். இதற்கு அல்லாஹ் நம் எல்லோருக்கும் நேர்வழி காட்டுவானாக.

தாஜுதீன்
email: tjdn77@gmail.com

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அப்துர்ரஹீம்(Bன்) ஜமீல் சொன்னது…
தாஜிதீன் காக்கா!

//இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா? முஸ்லிம்களா?//
அவர்களோடு ஏன் நம்மையும் சேர்த்து சொல்கிறீர்கள்? கப்ரு வணங்கிகளுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை!நிச்சயமாக இணை வைப்போரும் நாமும் ஒன்றாகிவிடுவோமா? இல்லவே இல்லை!!//

தம்பி அப்துர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் சமூதாயத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் பிற மத கலாச்சாரங்களால் இப்படி கேள்விகேட்க நேரிட்டது. நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைப்பாளர்களும், அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நன்மக்களும் ஒன்றாக முடியாது.

இணைவைப்பிலிருந்து அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு