Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முஸ்லிம்களின் “ நமக்குநாமே எதிரி ” திட்டம்!. 14

அதிரைநிருபர் | February 06, 2011 |

தமிழக தேர்தலும் கழகங்களும் ஜமாத்களும் ஓர் பார்வை!.



இந்தப்படை போதுமா?. இன்னும்கொஞ்சம் வேணுமா?.

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இருப்பதினால் தேர்தல் வேலைகளும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைக்கும் வேலைகளும் மும்முரமாக உள்ளன. கட்சிகள் சீட்டிற்காக அணிமாறும் காட்சிகளும் அரங்கேற ஆரம்பித்து விட்டன. இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தங்களுடைய அரசியல் களத்தின் வேலைகளையும் தொடங்க ஆரம்பித்து விட்டனர். த.மு.மு.க வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அ.தி.மு.க வுடனும் முஸ்லிம் லீக் தி.மு.க வுடனும் கூட்டு சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களின் தாய் கழகமான முஸ்லிம்லீக் வழக்கம்போல் ஒன்றோ அல்லது இரண்டோ சீட்டுகளை மட்டும் பெற்றுக்கொண்டு திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாம்!. அல்லது தங்களின் சின்னத்தில் போட்டியிடலாம்!. இது இக்கட்சிக்கு ஆரோக்கியமான வளர்ச்சியல்ல!. முழுகட்சியையும் அது திமுக விடம் அடகு வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன!.

இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்பது அல்லது பத்து என்று சீட்டுகளை பேரம்பேசி வாங்குவதும், பா.ம.க போன்ற கட்சிகள் எல்லாம் முப்பது சீட்டுக்களை பேரம்பேசி (டிமான்ட்வைத்து) வாங்கும் அளவிற்கு குறுகிய காலங்களில் அசூர வளர்ச்சியடைந்து விட்டார்கள்!. ஆனால் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இருந்து வரும் முஸ்லிம்லீக் கட்சி, தன் பிறை சின்னத்தின் மறுபக்கமான “தேய்பிறையாகவே” இருந்து வருகின்றது!. முன்பு தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சியாக இருந்த ஒரு மாபெரும் கட்சி இன்று, பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு சீட்டை மட்டும் பெற்றுக்கொண்டு அதிலும் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தன்மானத்தை இழந்து நிற்கின்றது. சமீபத்தில் கூட நடைபெற்ற முஸ்லிம்லீக் கட்சி நடத்திய மாநாட்டிற்கு கூடிய கூட்டத்தினை கண்டால், நமக்கே பிரமிப்பாக இருக்கின்றது.! இவ்வளவு செல்வாக்கை வைத்துகொண்டு இக்கட்சி ஏன் மேலும் மேலும் வளர்ச்சிபெற முடியாமல் திணறுகின்றது என்று நம்மால் கணிக்க முடியவில்லை!.

மேலும் மனிதநேய மக்கள் கட்சி சுமார் பதினேழு தொகுதிகளில் தங்களுக்கு வெற்றிபெறும் அளவிற்கு செல்வாக்கு உள்ளதாக கண்டறிந்து பொதுக்குழுவில் அந்த தொகுதியையும் அறிவித்தனர். இருந்தும் இவர்கள் மூன்று முதல் ஐந்து சீட்டுகளை மட்டுமே பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. எத்தனை எத்தனை இஸ்லாமிய இயக்கங்கள் வந்தாலும் இன்னும் ஒன்றிற்கும் இரண்டிற்கும் அல்லது ஏதோவொரு குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றினாலே, “சமுதாய ஓட்டு அத்துனையும் உங்களுக்கே” என்று பேரம் பேசி, சமுதாயத்தினை அடகுவைக்கும் அவலநிலை மாறவேண்டும்!. நம்மின் பலத்தினை நாமே கேவலமாக எடைபோடுவதும் சரியல்ல!.
இந்திய தவ்ஹீது ஜமாத்தும் போட்டியிடப் போவதாக தெரியவில்லை!. ஆனால் ஆதரவை, அல்லது பிரச்சாரத்தினை மட்டும் இவர்கள் செய்வார்கள் என்றே தோன்றுகின்றது. நிச்சயமாக த.த.ஜ அணிக்கு மாற்றமான அணியில் இவர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!. இப்படியே நாம் இக்கரைக்கு அக்கறை என்று முடிவெடுப்பதிலேயே அணைத்து இயக்கங்களும் தங்களை முன்னிலைப் படுத்துகின்றன.

மேலும் மானம் காக்குமா ம.ம.க?. என்று ஒருபுறம் இக்கட்சியை 18 சீட்டுகள் பெறவேண்டும் என்று தூண்டுவதும், பின் சேலத்தில் நடைபெற்ற த.த.ஜ பொதுக்குழுவில் ம.ம.க எங்கு நின்றாலும் தோற்கடிப்போம் என்று சீண்டுவதும், மாறுவேடம் போடுவதும் சமுதாய இயக்கமான த.த.ஜ விற்கு அழகல்ல!. ஒன்று இவர்கள் போட்டியிடவேண்டும்!. இல்லையென்றால் களத்தில் இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் அமைதியாக இருந்துவிட்டு செல்லவேண்டும். த.த.ஜ - தமுமுக விற்க்கு இடையே உள்ள ஈகோ மற்றும் பொறாமை காரணமாக சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கிடைக்கவிடாமல் செய்வதற்க்கு ஆயிரமாயிரம் காரணம் கூறினாலும், இன்று நமக்கு உள்ள அரசியல் அதிகார தேவைக்கு அது உதவாது!. மாறாக அது நம்மை மேலும் வலுவிழக்கவே செய்யும்!.

முஸ்லிம் லீக் நின்றாலும் பிடிக்காது. ம.ம.க நின்றாலும் பிடிக்காது. ஆனால் நாங்களும் நிற்க மாட்டோம் என்று அடம்பிடிப்பது எந்தவகையில் நியாயம் என்று சமுதாய நலனை முன்னிலைப் படுத்தும் த.த.ஜ சிந்திக்கவேண்டும். உங்களுக்கிடையே உள்ள ஈகோவை எல்லாம் தேர்தலில் காண்பித்து நம் சமுதாயத்தின் பிரதி நிதித்துவத்தினை அடைய விடாமல் தடுப்பதை சிந்திக்கவேண்டும். அல்லது தேர்தலில் நாங்கள் நிற்கமாட்டோம் என்ற நிலைபாட்டில் இருந்து மாறி, தேர்தல் களம் கண்டு, முஸ்லிம்களின் பிரதிநிதியாக சட்டமன்றம் சென்று, நம் சமுதாய தேவைகளை நிறைவேற்றவேண்டும். அதுதான் ஒரு சிறந்த இயக்கத்திற்கு முன்னுதாரணமாக இருக்கும். அரசியல் வேண்டாம் என்றால் தேர்தலில் பிரச்சாரமும் செயக்கூடாது!. எந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளையும் சந்திக்கக்கூடாது!.

மேலும் ஜமாத், இயக்கம் போன்ற அடைமொழிகளுடன் சிறிய சிறிய பத்துக்கும் மேற்பட்ட இன்னபிற இஸ்லாமிய இயக்கங்களும் அவர்கள் மனதிற்கு என்ன தோன்றியதோ, அதையே ஆதாரமாக வைத்து பணத்தினை மட்டும் பெற்றுக்கொண்டு தேர்தல் வேலைகள் செய்வதும் ஆரோக்கிய மானதல்ல!.

இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றினைந்தாலே திமுக. அதிமுக காங்கிரஸ் என்று ஏதாவதொரு பெரிய அரசியல் கட்சியுடன் நாமும் முப்பது அல்லது நாற்பது தொகுதிகள் என்று பேரம்பேசி அதை இஸ்லாமிய இயக்கங்களுக்குள் பகிர்ந்துகொள்ளலாம். இது சாத்தியமா என்றால் ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட நம்மால் சாத்தியமே!. இதுபோன்ற ஒரு முடிவை நாம் எட்டாதவரை இன்னும் பத்து தேர்தல்கள் வந்தாலும், இரண்டு மூன்று என்று மட்டுமே முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சட்டமன்றத்தில் காணலாம். மேலும் தேர்தல் முடிந்தபிறகு ஆஹா பார்த்தீர்களா?. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒரு முஸ்லிம்!. ஒரு அமைச்சர் கூட இல்லை!. இஸ்லாமியர்களின் நிலையை முன்னேற்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என்று போராட்டம் செய்து என்ன பயன்?.

தேசிய அளவிலும் நம்மை வழிநடத்த ஒரு வலிமையான இஸ்லாமிய இயக்கமோ அரசியல் கட்சியோ இல்லை!. அதற்கு முதலில் மாநிலம் தழுவிய அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் முதலில் மாநில அளவில் ஒன்றினைய வேண்டும்!. பின் ஒன்றிணைந்த இக்கட்சிகள் தேசிய அளவில் பாராளுமன்ற தேர்தலில் ஒரணியில் நின்றால், எம்பி தொகுதியையும் நம் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பெறமுடியும். ஆனால் செய்வார்களா?. இதுவே நம் அரசியல் உரிமையை பெற சரியான வழிமுறையாக இருக்க முடியும். முஸ்லிம்களின் ஓரணி என்ற கோட்பாடே நம் அரசியல் தீர்வுக்கு வழிவகையாகும். பின் நமக்கு சச்சார் கமிட்டியும் தேவை இல்லை!. சாச்சா கமிட்டியும் தேவை இல்லை!. நம்மை நாமே மாற்றிக்கொள்ளாத வரை நமக்கு எந்த அரசியல் கட்சியும் உரிமையை வழங்க முன்வராது!.

கடந்த தேர்தலில் கூட அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் சென்னையில் ஒன்று கூடி ஒரே கூட்டணியில் நிற்பது என்று முடிவெடுத்து கடைசியில் ஆளுக்கொரு திசையில் வழக்கம்போலவே சென்றுவிட்டனர். ஆக அரசியியலில் நமக்கு எதிரிகள் வேறு யாரும் அல்ல! நமக்கு நாமே எதிரிகள்!!.


முஸ்லிம் சமுதாயத்தின் ஜமாத்/லீக்/கழகம்/பேரவை மற்றும் இத்யாதிகள்:


1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2. இந்திய தேசியலீக்
3. தேசியலீக் கட்சி
4. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்)
5. தமிழ் மாநில முஸ்லிம் லீக்(ஷேக் தாவூத்)
6. தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான்
7. தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன்)
8. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
9. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
10. இஸ்லாமிய இலக்கியக் கழகம்
11. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்
12. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம்
13. மனிதநேய மக்கள் கட்சி
14. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (பாலை ரபீக்)
15. ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்)
16. ஜனநாயக மக்கள் கட்சி
17. இந்திய தேசிய மக்கள் கட்சி
18. இந்திய தேசிய மக்கள் கட்சி (குத்புதீன் ஐபக்)
19. தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்
20. இந்திய தவ்ஹீது ஜமாத்
21. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்
22. மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் (இணையதளம்)
23. ஜமாத் இ இஸ்லாமி
24. ஜமாத்துல் உலமா
25. ஷரியத் பாதுகாப்பு பேரவை
26. இஸ்லாமிய இலக்கிய பேரவை
27. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா
28. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா
29. பாரதிய முஸ்லிம் பார்ட்டி (சித்தீக்)
30. மில்லி கவுன்ஸில்
31. மஜ்லிஸே முஷாவரத்
32. ஜம்மியத்துல் உலமா இ ஹிந்த்
33. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்
34. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்
35. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி)
36. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்
37. சிறுபான்மை புரட்சி இயக்கம் (லியாகத்அலிக்கான்)
38. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு
39. தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை
(ஷேஹூ அப்துல்லாஹ் ஜமாலி)




ஏம்பா, இனி நாம ரெண்டுபெரும்தான் மிச்சம்!. நாமளும் பிச்சை எடுப்பதை விட்டுவிட்டு “பக்கீர்ஷா பேரவை ஜமாத் கழகம்” என்று ஆரம்பிச்சா என்ன?.

இயக்கத்திற்கு மட்டும் குறையில்லை!. மற்றும் இங்கு குறிப்பிட மறந்து விட்டது பத்திற்கு மேல் இருக்கும்!. இந்தியா முழுமைக்கும் உள்ள நம் எதிரி இயக்கங்களின் எண்ணிக்கை இதில் பாதி கூட இல்லை!. ஆனால் தமிழ்நாட்டளவில் மட்டும் நாம் கண்ட அமைப்புகளின் என்னிக்கையை கண்டீர்களா?.


இந்திய மக்கள் தொகையைப்போல் எண்ணிக்கையில் அதிகமாகவே உள்ளது நம் இயக்கங்கள்!. ஆனால் ஊட்டச்சத்து இல்லாமல்தான் சவளைப் பிள்ளையாக நாம் இருக்கின்றோம். முதலில் இந்த சமுதாய இயக்கத்திற்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும் நிலைதான் தற்போது உள்ளது. எனவே சிந்திப்பார்களா!. இவர்கள் ஒன்றினைந்து என்கட்டுரையை பொய்ப்பிப்பார்களா?.

--அதிரை முஜீப்

Thanks:http://adiraimujeeb.blogspot.com/2011/02/blog-post_06.html

14 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

இப்போது தெரிந்து இருக்க்குமே ஏன் நாம் எல்லாவற்றிற்கும் போராட வேண்டி
இருக்கிறது என்று.

2 பேர் ஒரே சமயத்தில் பேசினாலே சரியாக புரிவதில்லை. 39 இயக்கங்கள்
பேசினால் எப்படி புரியும். இந்த 39 இயக்கமும் ஒரெ அணியாகி விட்டால்.....
[ கனவை கலைத்து விட்டு வேலையை பார்க்கவும் என யாராவது
பின்னூட்டமிடலாம்]

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

40. அறிவிக்கப்பட்ட கூட்டத்தை தடுக்கும் தரமான ஜமாத் ! (40 கூட்டத்த்றிகு இது சரிவருமா ?)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் முஜீப், அல்ஹம்துலில்லாஹ், நீங்கள் சொல்லியுள்ளவைகளின் என்னைப்போன்றவர்களின் மனதிலும் நீண்ட நாட்களாக உள்ளது. சரியான தருணத்தில் கட்டுரையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சரி விசயத்துக்கு வருவோம்....

தேர்தல் வந்துவிட்டது, ஒற்றுமையற்று இருக்கும் இயக்க சகோதரர்களின் கொள்கைகளுக்கும், ஏகத்துவத்துவ சிந்தனைகளுக்கும் மிகப்பெரிய சவால்.

அழக இஸ்லாமிய மார்க்கத்தை மட்டும் போதித்துக்கொண்டு தர்பியத்து செய்துவந்திருந்தாலே இன்று நம் சமுதாயம் முன்னேறியிருக்குமே.

பகுத்தறிவு எங்கே போய்விட்டது, சிறு சிறு கருத்துவேறுபாடுகளுக்காக நிரந்தர எதிரியாகவே கருதுகிறார்கள் நம் இயக்க சகோதரர்கள். மன்னிக்கும் பன்பு ஏன் நம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தரவில்லையா?

நம்மை கருவருத்தவர்களுக்கு துனை நின்றவர்களின் மேடைகளில் நின்று பேசும் இயக்க மேதைகளுக்கு, கலிமா சொன்னவர்களுடன்(சொர்க்கவாசியா நரகவாசியா என்பதை அல்லாஹ் தான் முடிவு செய்வான்) ஒரே மேடையில் பேசுவதற்கு என்ன வந்துவிட்டது?

கேள்விகள் இன்னும் தொடரும், பதில் எங்கே என்று பார்ப்போம்...

Yasir said...

சமுதாய அக்கறை,கவலை உள்ளவர்கள் ஒன்று கூட வேண்டிய தருணம் இது....மாற்றுமத தலைவர்களுடன் நோன்புக்கஞ்சி குடிப்பதுடன் தன் சமுகக்கடமை முடிந்துவிட்டதாகவே..பெரும்பாலான முஸ்லிம் பெயர் தாங்கிகள் நினைத்துக்கொண்டுள்ளனர்...என்று இந்த சமுதாயம் “ முஸ்லிமாக “ முஸ்லிம் நலனை மட்டும் குறிக்கோளக கொண்டு தேர்தலில் போட்டி இடப்போகிறது...காலம்தான் பதில் கூற வேண்டும்...பல நூற்றாண்டாக இந்த நாட்டை ஆண்டுவந்த நாம்...ஒரு வார்டை ஆளுவதற்க்கு நாக்கை தள்ள வேண்டி உள்ளது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ப.பே.ஜ.க. தலைவர் யாராக இருப்பார் !?

அதிரை முஜீப் said...

Yasir சொன்னது…
//பல நூற்றாண்டாக இந்த நாட்டை ஆண்டுவந்த நாம்...ஒரு வார்டை ஆளுவதற்க்கு நாக்கை தள்ள வேண்டி உள்ளது. //

இதை படித்தவுடன் என் இதயத்தில் நறுக்கென்று தைத்தது!.
சகோதரர் யாசரின் கேள்விக்கு வறட்டு பிடிவாதம் பிடிப்போர் பதில் சொல்வார்களா?.

அபுஇபுறாஹீம் சொன்னது…

// ப.பே.ஜ.க. தலைவர் யாராக இருப்பார் !? //

பக்கீர்ஷா பேரவை ஜமாத் கழகம் "ப.பே.ஜ.க" அதை முடிவு செய்வதற்குள்
கட்சி இரண்டாகி ஆளுக்கொரு இயக்கம் கண்டுவிடுவார்கள்!. பின் நமக்கு இரண்டு தலைவர்கள் கிடைத்துவிடுவார்கள். எனவே இனி இயக்கம் காண ஆளே இருக்காது!. சகோதரர் அபுஇபுராஹீமின் கவலையை இந்த பக்கீர்ஷாக்கள் போக்கிவிடுவார்கள்.

sabeer.abushahruk said...

ஹலோ, நாங்கள் ஒற்றுமை எனும் கைற்றைத்தான் இறுக்கிப் பிடித்து இருக்கிறோம். என்ன ஒன்று, அந்த கயிற்றை பல பிரி(வு) கொண்டு திரித்திருக்கிறோம்.

எங்கள் இயக்கம் அரசியல் சாரா இயக்கம். ஏனெனில், ஜெயலலிதா கருணாநிதியையெல்லாம் எத்திவைக்கும் பணிநிமித்தம்தான் சந்திக்கிறோம்.

ஆனால், இந்த கட்டுரையை எழுதிய முஜீப் ஏன் அரைக்கை சட்டை போட்டிருக்கிறார். அதற்கான ஆதாரத்தைதான் அவரால் காட்ட முடியுமா? தாம் முதலில் கமுசு சட்டைப் போட்டுக்கொண்டு அப்புறம் வந்து கட்டுரை எழுதட்டும்.

-இப்படிக்கு பெயரில்லா!

பி.கு: கனவை கலைத்து விட்டு வேலையை பார்க்கவும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பி.கு: கனவை கலைத்து விட்டு வேலையை பார்க்கவும்//

அப்படின்னா அந்த !

கனவு(கள்) மெய்ப்பட வேண்டும்...
கழகங்கள் கைகோர்க்க வேண்டும்...

அண்ணன் முன்னே - பெற்ற
அன்னை பின்னே !

sabeer.abushahruk said...

அபுஇபுறாகீம்,

கனவு மெய்ப்படத்தான் வேண்டும்.
இயக்கங்கள் எனும்
மயக்கங்கள் நீங்கி
கனவு மெய்ப்படத்தான் போகிறது!

Its just the matter of time.

(நான் முஜீப் டாட் காமில் வாசித்த ஒரு ஆக்கத்திற்கான பின்னூட்ட பாதிப்பில் எழுதியது மேலேயுள்ளது)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அந்த பாதிக்கப்பட்டவர்களை நானும் கண்டேன்...

பெயரில்லா... (இன்னும் கிடாய் அறுக்கலை அதான் பெயர் வைக்கலையாம்) !

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நாம் மறந்தது என்ன?
எல்லோரும் சொல்வது பல கடவுட் கொள்கை உள்ளவன் ஒன்றினைகிறான்.அவன் சமுதாயத்திற்கு பாடுபடுகிறான். வெற்றிக்காக பல கட்சி தாவுகிறான் இது ஒன்றும் தப்பு இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தை பின்பற்றும் இறையச்சம் உள்ளவர்கள் சிந்திக்க நிறையவே இருக்கிறது.

இறைவன் ஒன்று, குர்ஆன் ஒன்று, நபி ஒன்று நாம் ஏன் ஒன்றுபடவில்லை இதைதத்தான் அனைவரும் சொல்லி ஒன்றுபடாமல் பல இடங்களில் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். பிற சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் வியாதிகளுக்கு எப்படியும் அரசியல் நடத்தலாம். இன்று ஒன்று நாளை ஒன்று பேசி எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் காசுக்காகவும் இந்த உலகத்திற்காகவும் பொய்யையே மூலதனமாக கொண்டு வாழலாம். ஏனென்றால் பிறமத அரசியல்வியாதிகளுக்கு மறுமை பயம் இல்லை. நாம் பொய்யை மூலதனமாக கொண்டு வாழ முடியுமா? எத்தனை விஷயங்களில் மார்க்கத்தையே விட்டுக் கொடுக்க நேரிடும்.

மறுமை பயம் அற்ற முஸ்லிம்களும் எப்படியும் வாழலாம் எப்படியும் அரசியில் புரியலாம். அவனுக்கு இத்தனை சீட்டு இவனுக்கு இத்தனை சீட்டு முன்னேறி விட்டான் என்று நாம் புலம்பலாம். முதலில் ஜமாஅத் அடிப்படையில் பார்த்தால் இறைஅச்சம் உள்ள ஜமாஅத் தலைவர்கள் எத்தனை பேர் ஊர்களில் இருக்கிறார்கள். வார்டு மெம்பர் எத்தனை இறையச்சம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். மறுமைபயம், இறையச்சம் உள்ளவர்கள் எம்எல்ஏ, எம்பியாக வந்தால்தான் எதுவும் சமுதாயத்திற்கு செய்யமுடியும். இப்பொழுது உள்ள அரசியல் சூழலில் மற்ற கட்சிகளை நம்பித்தான் அரசியல் புரியமுடியும். முஸ்லீம்லீக்கின் கதை அறிந்திருப்பீர்கள். எவ்வளவு பெரிய கட்சி எப்படி சுருங்கிவிட்டது என்று. அதனால் நாம் பிறமத அரசியில் வியாதிகளை பார்த்து நம் நிலையை எடைபோட முடியாது. இறையச்சத்தின் அடிப்படையில்தான் நமது நிலையையும் நம் சமுதாயத்தவர்களின் நிலையை எடை போட வேண்டும்.

Unknown said...

ஓரிரு அமைப்புகளை தவிர மற்றையெல்லாம் அமைப்பிற்கான எந்த அடிப்படை கட்டமைப்பும் இல்லாதவை.சில அமைப்புக்கள் ஆத்திர அவசரத்திற்கு துவகப்பட்டவைகள்.அவர்களிடம் எந்த செயல்திட்டமோ வேலையோ கிடையாது!

முஸ்லிம் லீக்கில் இரண்டு பிரிவும் தேசிய லீக்கில் இரண்டு பிரிவும் இந்திய தேசிய மக்கள் கட்சியில் இரண்டு பிரிவும் உள்ளது.

இன்னும் சில 'லெட்டர் பேட்'களில் ஒரு சகன் ஆட்களை தவிர(ஸ்தாபித்த நிர்வாகிகள்) வேறு யாருமில்லை.அவர்களிடம் அடிப்படை அரசியல் அறிவோ, சமூதாயத்தின் நிலையோ அறியா 'மைனர்'கள்.

சகோதரர் முஜிப் சொன்னது போல "இங்கு குறிப்பிட மறந்து விட்டது பத்திற்கு மேல் இருக்கும்!"

இவர்கள் அமைப்பு ஆரம்பித்தற்கு பதிலாக டியுசன் சென்டர் ஆரம்பித்திருந்தாலும் நான்கு பேர்களுக்காவது கல்வி கிடைத்திற்கும்.

சகோதரர் அதிரை முஜிப் அவர்கள் இந்த கட்டுரை முஸ்லிம்களின் 'அரசியல் இருப்பை' கவனத்தில் கொண்டு எழுதியிருக்கிறார். இதனை இயக்க தலைவர்களின் பார்வைக்கு அனுப்புவது நல்ல பயனை தரும். இன்ஷாஅல்லாஹ்.

Adirai Iqbal said...

இந்த கட்டுரை ஒரு blog ல் வெளிவந்த கவிதையை நினைவூட்டுகிறது
ஒற்றுமை

நாம் நன்றாக இல்லை !
காரணம் நாம் ஒன்றாக இல்லை !
ஒரே இறை – எத்தனை இயக்கங்கள் !
ஒரே மறை – எத்தனை குழப்பங்கள் !
ஒரே பிறை – எத்தனை பெருநாட்கள் !
மார்க்கம் வலியுறுத்தும் பிரியம் !
தெரியவில்லை – நமக்கு !
மார்க்கத்தை வைத்தே பிரியத் தெரிகிறது !
முஃமின்கள் கண்ணாடி போன்றவர்கள் !
துவேச கற்களை வீசினோம் !
ஒவ்வொரு திசையிலும் சிதறினோம் ! காலமெல்லாம் நாம் கதறினோம்!
கபர்ஸ்தானாய் மாறும் ஆப்கானிஸ்தான் !
உணவின்றி மடியும் சோமாலியா !
பற்றி எரியும் பாலஸ்தீன் !
உயிர்களின் புதைகுழி காஷ்மீரின் சோகம் !
பாங்கோசை ஒலிக்கின்ற பூமியெங்கும் இரத்தம் !
இருந்தும் திருந்தவில்லை நம் சித்தம் !
இஸ்லாமிய இயக்கங்களே – நீங்கள் !
வேற்றுமையில் ஒற்றுனை காண வேண்டாம் !
ஒற்றுமையில் வேற்றுமை என்ன? கூறுங்கள் !
இஸ்லாம் தான் பேரியக்கம் என்று !
ஓர் குடையின் கீழ் நின்று !
இவ்வுலகுக்கு உரக்கச் சொல்லுங்கள் !
*சிந்திப்போம் ! வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமமக்காகப் பிரார்த்திப்பொம்!*

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு