Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஓட்டிடலாம் வாங்க! ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் 32

அதிரைநிருபர் | February 28, 2011 | , ,

அன்பு சகோதர்களே!

வெகுசன ஊடகங்கள் நம்மை புறக்கணிப்பு செய்யும் நிலையில் இணையத்தை நாம் எப்படி பயன்படுத்தாலாம் என்ற சிறு கருத்து பகிர்வு! தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனையும் கவனத்தில் கொள்வோம்.

தமிழ் திரட்டியும் புக்மார்க் தளங்களும்!

திரட்டி என்பது பதிவு செய்தவர்களின் வலைத்ததளங்களின் இடுகைகளை (post) திரட்டும் ஒரு தளமாகும். வலைத்தளங்களை படிக்க விரும்புவர்கள் இந்த தளங்களுக்கு வந்து எளிதாக தமக்கு பிடித்த தலைப்புகளை படித்துக்கொள்ளலாம்.வாசகர்களும் பல வித கண்ணோட்டத்தில் உள்ள இடுகைகளை படிக்க முடியும்.

தமிழ் திரட்டிகளில் முன்னணியில் இருப்பது http://www.tamilmanam.net/ தளமாகும் இதன் பிறகு http://www.tamilveli.com/  http://www.thiratti.com/  போன்ற திரட்டிகளும் பலரால் விரும்பிப் படிக்கப் படுகின்றன.

அதுபோல், தங்களுக்கு பிடித்த அல்லது தங்களுடைய தளங்களை எவர் வேண்டும் என்றாலும் இதில் இணைத்துக்கொள்ள முடியும் பதிவராக (Blogger) இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.. திரட்டிகளில் இருந்து சற்றே வேறுபடுகிறது. இதில் Blog என்றில்லை எந்த தளத்தின் சுட்டியையும் (Link) இதில் கொடுத்து இணைக்க முடியும். இதில் முன்னணியில் இருப்பது http://www.ta.indli.com/  என்ற பெயரில் இயங்குகிறது. இதோடு http://www.tamil10.com/  போன்று பல Bookmark தளங்களும் பிரபலமாக உள்ளன.

இது போன்றுதான் தமிழ்நிருபர் http://tamilnirubar.org/  இணைய‌ தளமும் வரவுள்ளது. இந்த தமிழ் திரட்டிகளில் இணைக்க சில கட்டணங்கள் பதிவர்கள் கட்டவேண்டும். ஆனால், தமிழ் நிருபர் தளம் பதிவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசும் மதிப்புமிக்க பரிசுகளையும் அறிவித்துள்ளது.இது தமிழ் இணைய‌ தள வரலாற்றில் இதுவே முதன் முறை!

முஸ்லிம் வலைஞர்களும் பொது வாசகர்களும்!

சரி விசயத்திற்கு வருகிறேன்.இன்று அண்ணளவாக 450 முஸ்லிம் பதிவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஒரு மூத்த தமிழ் வலைஞர்.இந்த 450 முஸ்லிம் பதிவர்களில் பெரும்பாலானவர்கள் சமூக அக்கறையுடன் இடுகை போடக்கூடியவர்கள்.ஒரு சிலர் மட்டுமே மக்கள் ஒருவேலை உண‌வுக்கூட இல்லாமல் ஒட்டிய வயிறுடன் மக்கள் இருக்கும் போது,'நிலா நிலா ஓடிவா...'எழுதக்கூடியவர்கள். மற்றும் சிலர் அவர்களின் துறை சார்ந்தும்,சமையல் குறிப்புகள் என்றும் பதிவுலகில் இயங்க கூடியவர்கள்.

இன்று அச்சு,தொலைக்காட்சி,வானோலி ஊடகங்களில் பூஜியத்தில் இருக்கிறோம்.ஆனால், தமிழ் இணையதள ஊடகத்தில் ஓரளவு உயர்ந்து நிற்கின்றோம்.ஆனால் சமூக அக்கறையுடன் எழுதும் வலைப்பூக்கள் அவர்களின் சொந்த வாசகர்களால் மட்டும் வாசிக்கப்படுகிறது. அதையும் தாண்டி வெளியே செல்லவில்லை. வெளி வாசகர்களையும் அடைய வேண்டும் என்பதற்காகதான் திரட்டிகளிலும் சேர்த்தார்கள்...அவர்களின் ஒவ்வொரு இடுக்கையும் அதில் இணைக்கதான் செய்கிறார்கள் என்றபோதும் பொது வாசகர் வட்டத்தை அடையமுடியவில்லை! ஏன்??? அதற்கு காரணமே நாம்தான்.

ஆம்! இந்த திரட்டிகளில் ஒரு இடுக்கை பிரபலமாகி அனைவரின் பார்வைக்கும் வர வேண்டுமென்றால் அதிக ஓட்டுகள் பெற்றிருக்கவேண்டும். ஓட்டு போடுவதற்கு அந்த திரட்டி இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தால் போதும்.நீங்கள் விரும்பும் பதிவை (நன்பர்களாக சேர்ந்து)சொல்லி வைத்துக்கூட வாக்களித்து வெற்றி பெற வைக்கலாம்.திரட்டிகளில் பதிவு செய்துக்கொள்ள‌ மூன்று நிமிடம் போதும். இது ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் அல்ல‌, என்பது நீங்கள் அறிந்த ஒன்றுதான்.

இப்படி நல்ல விசயங்களையும் சமுதாய அக்கறையுள்ள சங்கதிகளையும் நாம் ஓட்டிட்டு திரட்டிகளின் வழியாக மக்களின் பார்வைக்கு வைப்பதன் மூலம் அந்த பதிவர்கள் பொது வாசகர் வட்டதை அடைகிறார்கள். இதானால் வெகு சன‌ ஊடங்கள் மறைக்கும் நமது செய்திகளை உலகம் முழுவதும் பரப்ப முடியும்! மக்கள் மனங்களை நமது பக்கம் வென்றெடுக்க முடியும்! இன்ஷாஅல்லாஹ்.

வித்தும் கண்முன் சாட்சியங்களும்!

'எங்க மக்களின் அவலத்தை வெகுசன ஊடகங்கள் மறைத்த போது இந்த வலைப்பூக்களும் திரட்டிகளும்தான் வெளியுலகிற்கு கொண்டு சென்றது. அதன் பின்புதான் வெகுசன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன'என்று நம்மிடம் ஒரு ஈழ பத்திரிக்கையாளர் சொன்னார்.

இன்று... துனீஷியா, எகிப்து, லிபியா, பஹ்ரைன், ஜோர்டான், அல்ஜீரியா, யெமன், மொராக்கோ என நடந்து வரும் மக்கள் புரட்சியில் ஆண்கள், பெண்கள், முதலாளி, தொழிலாளி, டாக்டர்கள், எஞ்சினீயர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் அடங்குவர்.

கட்சிகளோ, இயக்கங்களோ, மத அமைப்புகளோ, தலைவர்களோ இவர்களை வழி நடத்திச் செல்லவில்லை. அணிதிரட்டவும் இல்லை வழி நடத்தவும் இல்லை

இவர்கள் அனைவரையும் அணிதிரட்ட இணைய ஊடகம் மட்டுமே பயன்பட்டது.ஆம்! டிவிட்டார்,ஃபேஸ்புக், யூ டியுப்,வலைப்பூக்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் அளித்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தியே மக்களை அணிதிரட்டினார்கள்.

'இன்டெர்நெட்' தளத்திற்கூடான தஃவாவை கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி காலத்தின் ஜிஹாத்' என வர்ணிக்கின்றார்.

இனியும் என்ன தயக்கம்?அல்லாஹ்வின் மேல் பாரத்தை போட்டு சொடுக்குங்கள்...

விரைவில் இணைய உலகில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் - பார்க்கலாம். இன்ஷாஅல்லாஹ்...

-- ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்

32 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி ஹிதயாத்துல்லாஹ்... அருமையான பதிவு, என் எண்ணத்தில் நீண்ட நாட்களாக இருந்த ஒன்று இதனைச் சார்ந்தே மற்றொன்றை எழுத நினைத்திருந்தேன், நல்ல தருனத்தில் பதிவுக்குள் வந்திருக்கிறது.

// இது ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் அல்ல‌, என்பது நீங்கள் அறிந்த ஒன்றுதான்// மிகச் சரியே !

//இப்படி நல்ல விசயங்களையும் சமுதாய அக்கறையுள்ள சங்கதிகளையும் நாம் ஓட்டிட்டு திரட்டிகளின் வழியாக மக்களின் பார்வைக்கு வைப்பதன் மூலம் அந்த பதிவர்கள் பொது வாசகர் வட்டதை அடைகிறார்கள். இதானால் வெகு சன‌ ஊடங்கள் மறைக்கும் நமது செய்திகளை உலகம் முழுவதும் பரப்ப முடியும்! மக்கள் மனங்களை நமது பக்கம் வென்றெடுக்க முடியும்! // இன்ஷாஅல்லாஹ் !

sabeer.abushahruk said...

தம்பி ஹிதாயத்துல்லாஹ்!

அருமையான தொலைநோக்குப் பார்வை பொதிந்த வழிகாட்டல். கணினிபற்றி அதிக பரிச்சயம் இல்லாத என்போன்றோர் சொல்லிக்கொடுத்தால் செய்வோம்!

வாழ்த்துகள்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர் ஹிதாயதுல்லாஹ்,

நல்ல யோசனையை சொல்லியுள்ளியுள்ளீர்கள். மற்றும் நம் வலைப்பூக்களின் பதிவுகள் தமிழ் முன்னனி திரட்டிகளில் ஓட்டுப்போட்டாலும் முதன்மைபடுத்தவதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டுகள் நிலவுவது என்பது உண்மை தானே. மாற்று வழிகள் ஏதாவது உண்டா?

//தமிழ்நிருபர் http://tamilnirubar.org/ இணைய‌ தளமும் வரவுள்ளது. இந்த தமிழ் திரட்டிகளில் இணைக்க சில கட்டணங்கள் பதிவர்கள் கட்டவேண்டும்.//

தமிழ்நிருபர் திரட்டியில் இணைப்பதற்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற தகவல் உள்ளதே, இன்னும் தெளிவான தகவல் கிடைக்குமா?

Adirai Iqbal said...

நாமும் எவ்வளவு நாட்கள்தான் நமெக்கென்று ஊடகம் இல்லையே என்று புலம்பிகொண்டிருப்பது.அப்படி ஊடகம்ஒன்று ஆரம்பித்தாலும் அதில் சினிமா கிசுகிசு இல்லையென்றால் ஒரு கழுதையும் அதைபார்க்காது (படிக்காது) .
ஆனால் அதை விட அதிக வாசகர்களை அடையக்கூடியதும் எளிதானதுமான இணைய ஊடகங்களை நாம் பயன்படுத்திட வேண்டும் என்ற உங்களின் ஆக்கம் மிகவும் பயனளிக்ககூடியது . நல்லது சொன்னீர்கள் ஹிதாயத்துல்லாஹ் .

அப்துல்மாலிக் said...

இணைய திரட்டி அழகான ஒரு அறிமுக உரை, இதில் ஒட்டுக்கள் மிக மிக முக்கியம். நிறைய விஷமிகள் பிரபலமடைவதற்காக இஸ்லாத்துக்கு எதிரான நிறைய பதிவுகள் போட்டு ஒரு குரூப் இதுக்கு ஓட்டுப்போட்டு திரட்டியில் முன்னனியில் இருந்தது கண்கூடாக கண்டதுண்டு.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இப்படி நல்ல விசயங்களையும் சமுதாய அக்கறையுள்ள சங்கதிகளையும் நாம் ஓட்டிட்டு திரட்டிகளின் வழியாக மக்களின் பார்வைக்கு வைப்பதன் மூலம் அந்த பதிவர்கள் பொது வாசகர் வட்டதை அடைகிறார்கள். இதானால் வெகு சன‌ ஊடங்கள் மறைக்கும் நமது செய்திகளை உலகம் முழுவதும் பரப்ப முடியும்! மக்கள் மனங்களை நமது பக்கம் வென்றெடுக்க முடியும்! இன்ஷாஅல்லாஹ்.//

வென்றேடுக்கும் காலம் வெகுவிரைவில்.. இன்ஷா அல்லாஹ்...

இணையப் புரட்சியால் மட்டுமே இதயங்களை இணைத்து நம் உரிமை வென்றேடுக்கமுடியும் என்பது இக்கால உண்மை. வரும் காலம் எப்படியோ..

அலாவுதீன்.S. said...

சசோ. ஹிதாயத்துல்லாஹ்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) :நல்ல யோசனைதான். வழியை இலகுவாக்குங்கள். வாழ்த்துகள்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// அப்துல்மாலிக் சொன்னது… இணைய திரட்டி அழகான ஒரு அறிமுக உரை, இதில் ஒட்டுக்கள் மிக மிக முக்கியம். நிறைய விஷமிகள் பிரபலமடைவதற்காக இஸ்லாத்துக்கு எதிரான நிறைய பதிவுகள் போட்டு ஒரு குரூப் இதுக்கு ஓட்டுப்போட்டு திரட்டியில் முன்னனியில் இருந்தது கண்கூடாக கண்டதுண்டு. //

நிறைய கள்ளஓட்டுக்களே அதிகம். இப்போது தேர்தல் கள்ளஓட்டு போடமுடியாதுல, பழகிப்போன விசமிகள் இணையத்திரட்டிகளில் கள்ள ஒட்டுப்போடாம இருப்பார்களா என்ன.

இது போன்ற விசமிகளில் கட்டுரைகளை சென்று படித்து நேரத்தை வீணடிக்காமல் இருப்பதே மேல் என்பதை நம்மவர் அனைவரும் உணர்ந்த்துக்கொள்ள வேண்டும்.

Yasir said...

சைபர் புரட்ட்சியை பற்றி,இணையத்தின் இணையில்லா பயன்களை பற்றி பயனுள்ள அலசல்..சரியான நேரத்தில் ஞாபகபடுத்தியமைக்கு வாழ்த்துக்கள் சகோ.ஹிதாயத்துல்லாஹ்....நாமும் தாமதிக்காமல் இணையத்தை எந்த அளவிற்க்கு இனிமையாக உபோயிக்க முடியுமோ அந்த அளவிற்க்கு முயன்று ச்முதாய விழிப்புணர்வு முயற்ச்சியை தொடங்க வேண்டும்

அதிரை அபூபக்கர் said...

இது போன்றுதான் தமிழ்நிருபர் http://tamilnirubar.org/ இணைய‌ தளமும் வரவுள்ளது. // இன்சா அல்லாஹ் நல்ல முயற்சி....

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

இணையத்தின் பயன் பற்றி அழகா சொன்னிங்க

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

தாஜுதீன் சொன்னது…

//நிறைய கள்ளஓட்டுக்களே அதிகம். இப்போது தேர்தல் கள்ளஓட்டு போடமுடியாதுல, பழகிப்போன விசமிகள் இணையத்திரட்டிகளில் கள்ள ஒட்டுப்போடாம இருப்பார்களா என்ன//

அஸ்ஸலாமு அழைக்கும்

நமதூர் தேர்தலில் கள்ள ஒட்டு ஆணுக்கு ஆணும் பெண்ணுக்கு பெண்ணும் கள்ள ஓட்டு போடுவார்கள்

ஆனால் இணையத்தில் ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் கள்ள ஓட்டு போடுவார்கள் என்பது சகஜமப்பா !!!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஹமீது காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்,

கள்ள ஓட்டுல தான்
எல்லோரும் முதன்மையடைகிறார்களா
அரசியலிலும் இணையத்தளங்களிலும்

இந்த முறை தேர்தலில் தோல்வியடைபவர் கள்ள ஓட்டுதான் தோல்விகளுக்கு காரணம் என்று வழக்கம் போல் சொல்லுவதும் சகஜமே.

கள்ளஓட்டர்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..

அதெல்லாம் சரி யார் இந்த மகேசன்?

Shameed said...

தாஜுதீன் சொன்னது…
//அதெல்லாம் சரி யார் இந்த மகேசன்? //


அஸ்ஸலாமு அலைக்கும்

மக்களை கேனையனாக்கும் சன் T V

sabeer.abushahruk said...

//மக்களை கேனையனாக்கும் சன் T V//

கலைஞர் டி வி பக்கம் போனா, மற்றவரைத்தூக்கி கடல்ல போட்டாலும் மூழ்க மாட்டாராமே. கட்டமரமா மெதப்பாராம்.

வேற என்னதான் பண்றது?

தமிழ்நிருபர் said...

//தமிழ்நிருபர் http://tamilnirubar.org/ இணைய‌ தளமும் வரவுள்ளது. இந்த தமிழ் திரட்டிகளில் இணைக்க சில கட்டணங்கள் பதிவர்கள் கட்டவேண்டும்.//

தமிழ்நிருபர் திரட்டியில் இணைப்பதற்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற தகவல் உள்ளதே, இன்னும் தெளிவான தகவல் கிடைக்குமா? //

தமிழ்நிருபர் திரட்டியில் இணைப்பதற்கு கட்டணம் செலுத்தவேண்டியதில்லை.
மாறாக,தமிழ் நிருபர் தளம் பதிவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசும் மதிப்புமிக்க பரிசுகளையும் அறிவித்துள்ளது.என்பதை சகோதரர் தாஜுதீன் அவர்களுக்கும் அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கும் தெரிவிக்கிறேம்.

மதிப்புமிக்க அதிரைநிருபரின் வாசக நேசங்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிர்கிறோம்.

அன்புடன்
ஆசிரியர்/நிர்வாகி
தமிழ்நிருபர் இணையதளம்

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கருத்து சொன்ன அபுஇபுறாஹீம் காக்கா,கவிக் காக்கா,தாஜுதீன் காக்கா,சகோதரர் அதிரை இக்பால்,அப்துல்மாலிக் காக்கா,அலாவுதீன் காக்கா,யாசிர் காக்கா,சகோதரர் அதிரை அபூபக்கர்,ஷாஹுல் ஹமீது காக்கா,தமிழ்நிருபர் இணையதளத்திற்கும் நன்றி!

Unknown said...

//அபுஇபுறாஹீம் காக்கா சொன்னார்கள்…

தம்பி ஹிதயாத்துல்லாஹ்... அருமையான பதிவு, என் எண்ணத்தில் நீண்ட நாட்களாக இருந்த ஒன்று இதனைச் சார்ந்தே மற்றொன்றை எழுத நினைத்திருந்தேன், நல்ல தருனத்தில் பதிவுக்குள் வந்திருக்கிறது.//

காக்கா, இணையத்தில் வலைவீசிய உங்களிடம் இன்னும் நிறைய வீச்சை எதிர்பார்கிறோம்.

கவிக் காக்கா சொன்னார்கள்…

தம்பி ஹிதாயத்துல்லாஹ்!

அருமையான தொலைநோக்குப் பார்வை பொதிந்த வழிகாட்டல். கணினிபற்றி அதிக பரிச்சயம் இல்லாத என்போன்றோர் சொல்லிக்கொடுத்தால் செய்வோம்!//

காக்கா, தொலைநோக்குப் பார்வையை அதிரை நிருபரில் தினம் தினம் கற்று தருகிறீர்களே...கவிதையாய், கருத்தாய்,செயலாய்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இணையத்தில் வலைவீசிய உங்களிடம் //

அதனாலென்ன தம்பி வெகுவிரைவில் தொடரை பதிவுக்குள் கொண்டு வந்திடுவோமே !

Unknown said...

தாஜுதீன் காக்கா சொன்னார்கள்…

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர் ஹிதாயதுல்லாஹ்,

நல்ல யோசனையை சொல்லியுள்ளியுள்ளீர்கள். மற்றும் நம் வலைப்பூக்களின் பதிவுகள் தமிழ் முன்னனி திரட்டிகளில் ஓட்டுப்போட்டாலும் முதன்மைபடுத்தவதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டுகள் நிலவுவது என்பது உண்மை தானே. மாற்று வழிகள் ஏதாவது உண்டா?//

வலைக்குமுஸ்ஸலாம்(வரஹ்) காக்கா,

தமிழ் முன்னனி திரட்டிகளில் ஓட்டுப்போட்டாலும் முதன்மைபடுத்தவதில்லை என்பது நிரூபனம் செய்யப்பட்ட உண்மைதான். அவர்கள் இணையத்திலும் நம்மை ஓரம் கட்டும் முடிவோடுதான் இருக்கிறார்கள்.

இதில் இன்னோரு ஆபத்தும் உள்ளது! ஊடகத்துறையை பெரும் முதலாளிகள் கைப்பற்றியது போல், திரட்டியின் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள். இன்ஷாஅல்லாஹ் சமயம் வரும் போது போட்டுடைப்போம்!

மாற்று வழிகள் ஏதாவது உண்டா?
அவசியமான கேள்வி!
மதச்சார்பின்மை நாடகமிட்டு, அரசியலில் நம்மை புறக்கணிப்பு செய்யும் போது நமதுரிமையை கேட்கவும் பெறவும் நமக்கென தனி அரசியல் இயக்கம் கட்டமைப்பதற்கு எந்த அளவு உரிமையும் நியாயமும் உள்ளதோ அதே அளவு ஊடகத்துறைக்கும் பொருந்தும். நமது கரத்தில் பொது ஊடகத்தை கட்டமைப்பததும் அவசியம்!(இப்போது திரட்டியிலும் அவர்களின் வேலை திட்டத்தை செயல்படுத்துவதால் நமது கரத்திலும் திரட்டி அவசியம்)

ஒரு சமூகத்தின் கண்,மூக்கு,காது என எல்லாமுமாக இருப்பது ஊடகம்தானே!!

Unknown said...

//அதனாலென்ன தம்பி வெகுவிரைவில் தொடரை பதிவுக்குள் கொண்டு வந்திடுவோமே ! //இன்ஷாஅல்லாஹ்...ஆவலுடன் இருக்கிறோம்.

அலாவுதீன்.S. said...

/////அதிரைpost சொன்னது…
தமிழ் முன்னனி திரட்டிகளில் ஓட்டுப்போட்டாலும் முதன்மைபடுத்தவதில்லை என்பது நிரூபனம் செய்யப்பட்ட உண்மைதான். அவர்கள் இணையத்திலும் நம்மை ஓரம் கட்டும் முடிவோடுதான் இருக்கிறார்கள்.

இதில் இன்னோரு ஆபத்தும் உள்ளது! ஊடகத்துறையை பெரும் முதலாளிகள் கைப்பற்றியது போல், திரட்டியின் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள். இன்ஷாஅல்லாஹ் சமயம் வரும் போது போட்டுடைப்போம்!

மாற்று வழிகள் ஏதாவது உண்டா?
அவசியமான கேள்வி!
மதச்சார்பின்மை நாடகமிட்டு, அரசியலில் நம்மை புறக்கணிப்பு செய்யும் போது நமதுரிமையை கேட்கவும் பெறவும் நமக்கென தனி அரசியல் இயக்கம் கட்டமைப்பதற்கு எந்த அளவு உரிமையும் நியாயமும் உள்ளதோ அதே அளவு ஊடகத்துறைக்கும் பொருந்தும். நமது கரத்தில் பொது ஊடகத்தை கட்டமைப்பததும் அவசியம்!(இப்போது திரட்டியிலும் அவர்களின் வேலை திட்டத்தை செயல்படுத்துவதால் நமது கரத்திலும் திரட்டி அவசியம்)

ஒரு சமூகத்தின் கண்,மூக்கு,காது என எல்லாமுமாக இருப்பது ஊடகம்தானே!! ////
************************************************************************************************
சகோ. ஹிதாயத்துல்லாஹ்விற்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
மேற்கண்ட தங்களின் பின்னூட்டத்தில் உள்ள செய்திகளை படித்ததும் : நாம் அவர்களின் சூழ்ச்சிகளில் இருந்து எவ்வாறு நம்மை தற்காத்துக்கொள்வது என்ற திட்டமிடுதல் அவசியம் என்பதை நாம் கலந்தாய்வு செய்வது நல்லது என்று நினைக்கிறேன்.

Unknown said...

//சகோதரர் அதிரை இக்பால் சொன்னார்கள்…

நாமும் எவ்வளவு நாட்கள்தான் நமெக்கென்று ஊடகம் இல்லையே என்று புலம்பிகொண்டிருப்பது...ஆனால் அதை விட அதிக வாசகர்களை அடையக்கூடியதும் எளிதானதுமான இணைய ஊடகங்களை நாம் பயன்படுத்திட வேண்டும் //

கேரளத்தில் தேஜஸ் http://www.thejasnews.com/ ,சந்திரிகா http://www.mechandrikaonline.com/ உள்ளிட்ட பல நாளிதழ்களை நம்மவர்கள் வெற்றியுடன் நடத்துகிறார்கள்.அதானால்தான் நம்மவர்கள் அமைச்சர்களாகவோ, எதிர் கட்சியிலோ அமரமுடிகிறது.
நீங்கள் விரும்பும் நாளிதழை விரைவில் உரிமையுடன் படிக்கலாம்...!!!
தாஜுதீன் காக்கா சொன்னது போல்,
"வென்றேடுக்கும் காலம் வெகுவிரைவில்.. இன்ஷா அல்லாஹ்..."

//அப்துல்மாலிக் காக்கா சொன்னார்கள்…

இணைய திரட்டி அழகான ஒரு அறிமுக உரை, இதில் ஒட்டுக்கள் மிக மிக முக்கியம். நிறைய விஷமிகள் பிரபலமடைவதற்காக இஸ்லாத்துக்கு எதிரான நிறைய பதிவுகள் போட்டு ஒரு குரூப் இதுக்கு ஓட்டுப்போட்டு திரட்டியில் முன்னனியில் இருந்தது கண்கூடாக கண்டதுண்டு.//

அவர்களை போல் நாமும் கூட்டாக ஓட்டுபோடவேண்டும்.அப்போதுதான் இவர்கள் நடுநிலை(?)யாக இருப்பார்கள்.

//அலாவுதீன் காக்காசொனார்கள்…

சசோ. ஹிதாயத்துல்லாஹ்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) :நல்ல யோசனைதான். வழியை இலகுவாக்குங்கள். வாழ்த்துகள்!//

வழியை இலகுவாக்க வேண்டும் என்று தமிழ்நிருபர் பார்வைக்கு அனுப்பிவிட்டோம்...

//யாசிர் காக்கா சொன்னார்கள்...
நாமும் தாமதிக்காமல் இணையத்தை எந்த அளவிற்க்கு இனிமையாக உபோயிக்க முடியுமோ அந்த அளவிற்க்கு முயன்று ச‌முதாய விழிப்புணர்வு முயற்ச்சியை தொடங்க வேண்டும்//
முயன்றால் முடியாதது எது?அதுவும் நம்மவர்களுக்கு!

Unknown said...

//அப்துல் மாலிக் காக்கா சொன்னார்கள்...
சகோ. ஹிதாயத்துல்லாஹ்விற்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
மேற்கண்ட தங்களின் பின்னூட்டத்தில் உள்ள செய்திகளை படித்ததும் : நாம் அவர்களின் சூழ்ச்சிகளில் இருந்து எவ்வாறு நம்மை தற்காத்துக்கொள்வது என்ற திட்டமிடுதல் அவசியம் என்பதை நாம் கலந்தாய்வு செய்வது நல்லது என்று நினைக்கிறேன். //

வலைக்குமுஸ்ஸலாம்(வரஹ்) காக்கா, அவசியம் நாம் கல‌ந்தாய்வு செய்தாகவேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நல்ல விளக்கம் தந்த சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு மிக்க நன்றி.

முஸ்லீமகளுக்கு என்று ஒரு திரட்டி பொதுவானவர்களை சென்றடையும் படி இருக்க வேண்டும். ஆனால் இங்கு நமக்கு உள்ள சன்டைகள் அதிக முக்கியத்துவம் பெருமோ என்ற அச்சம் இருப்பது என்னவோ உண்மை.

முதலில் ஊடகத்தில் நம்மவர்கள் ஒருவரை ஒருவர் வேண்டாத விமர்சனங்கள் செய்வதை நிறுத்த வேண்டும். சுப்ஹானல்லாஹ் எத்தனை abdonline.com தளங்கள் மார்க்க செய்தியல்லாமல் தனி மனிதர்களின் செயல்களை பக்கம் பக்கமாக விமர்சனை செய்து நேரத்தை வீணடிக்கிறார்கள் வலைப்பூ நம்மவர்கள்.

இவர்கள் எல்லோரும் பொதுவில் நிகழ்த்தும் எழுத்துப் போரை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Adirai Iqbal said...

//மதச்சார்பின்மை நாடகமிட்டு, அரசியலில் நம்மை புறக்கணிப்பு செய்யும் போது நமதுரிமையை கேட்கவும் பெறவும் நமக்கென தனி அரசியல் இயக்கம் கட்டமைப்பதற்கு எந்த அளவு உரிமையும் நியாயமும் உள்ளதோ அதே அளவு ஊடகத்துறைக்கும் பொருந்தும். நமது கரத்தில் பொது ஊடகத்தை கட்டமைப்பததும் அவசியம்!(இப்போது திரட்டியிலும் அவர்களின் வேலை திட்டத்தை செயல்படுத்துவதால் நமது கரத்திலும் திரட்டி அவசியம்)//

முதலில் நம் ஆட்சியை இழந்தோம் , பின்னர் பிரதிநித்துவத்தை இழந்தோம் , பல உயிர்களை இழந்தோம் ஏன் கல்வியைக்கூட இழந்துவிட்டோம் , வெகுஜன ஊடகங்களையும் இழந்துவிட்டோம் இனி என்ன இருக்கிறது நாம் இழப்பதற்கு , தாங்கள் சொல்வது போல இப்பொழுதே விழித்துக்கொடோமேயானால் இணைய ஊடகங்களையாவது நாம் தக்க வைத்துக்கொள்ளலாம்

புதுசுரபி said...

சகோதரர் ஹிதாயத்துல்லாஹ்விற்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்),

உங்களின் உயரிய சிந்தனை வரவேற்புக்குரியது,
நீங்கள் கனவுகாணும் அந்த இலக்கு வெகுதூரத்தில் இல்லை.
இன்ஷா அல்லாஹ் நம் ஊடகம், நமது உணர்வுகளையும், உரிமைகளையும் சுமந்து வந்து இந்த உலகத்திற்கு ஒரு செய்தியாக மட்டுமல்லாது, தத்தளித்துக் கொண்டிருக்கும் ஊடகத்த்துறைக்கு ஓர் கலங்கரை விளக்காய் திகழும் என்பது திண்ணம்!

Unknown said...

புதுசுரபி அண்ணன் சொன்னார்கள்...
//இன்ஷா அல்லாஹ் நம் ஊடகம், நமது உணர்வுகளையும், உரிமைகளையும் சுமந்து வந்து இந்த உலகத்திற்கு ஒரு செய்தியாக மட்டுமல்லாது, தத்தளித்துக் கொண்டிருக்கும் ஊடகத்த்துறைக்கு ஓர் கலங்கரை விளக்காய் திகழும் என்பது திண்ணம்! //
வஅலைக்குமுஸ்ஸலாம்(வரஹ்)(புதுசுரபி) ரபீக் அண்ணன்(செய்தி வாசிப்பாளர் ஜெயா டிவி/முழு நேர எழுத்தாளர்). உங்களின் இடைவிடா ஊடகப் பணிகளுக்கிடையிலும், நம்பிக்கையூட்டும் கருத்துரை தந்தது ஊக்கமூட்டுகிறது. நன்றிகள் பல...வாருங்கள் நமது ஊடகத்தை எல்லோருமாக சுமப்போம்.தாய் தனது குழந்தையை சுமப்பது போல்...

Kalaiyarasan said...

வாழ்த்துக்கள். வலைப்பதிவுகள் இன்னும் அதிக மக்களை சென்றடைய வேண்டும். மாற்று ஊடகமாக திக வேண்டும். தமிழ் நிருபர் அந்தப் பணியை செவ்வனே செய்யும் என்று எதிர்பார்ப்போம்.

Unknown said...

கலையரசன் அண்ணன் சொன்னார்கள்…

வாழ்த்துக்கள். வலைப்பதிவுகள் இன்னும் அதிக மக்களை சென்றடைய வேண்டும். மாற்று ஊடகமாக திக வேண்டும். தமிழ் நிருபர் அந்தப் பணியை செவ்வனே செய்யும் என்று எதிர்பார்ப்போம்.//
நன்றி அண்ணா உங்களின் கருத்துரையும் எதிர்பார்ப்பும் ஏற்புடையது. உங்களுடன் நாங்களும் தமிழ்நிருபர் மாற்று ஊடகமாக திகழ வேண்டும் எதிர்பார்கிறோம்.

லால்பேட்டை . காம் said...

சகோதரன் ஹிதாயத்துல்லாவின் பதிவு காலம் கருதி எழுதியது. இணையத்தை சமுதாயம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அதிரை நிருபரின் பதிவுகள் அனைத்தும் அருமை.
வாழ்த்துக்கள்.லால்பேட்டை.காம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு