Wednesday, April 02, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 19 5

அதிரைநிருபர் பதிப்பகம் | November 23, 2012 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!. 

பெண்களின் நலம் நாடுதல்!

...அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (அல்குர்ஆன்: அன்னிஸா 4: 19)

'பெண்களிடம் நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்! ஒரு பெண், விலா எலும்பிலிருந்தே படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பில் மிகவும் கோணலானது அதன் மேற்புறத்தில் உள்ளதுதான். அதை நிமிர்த்த நாடினால் அதை உடைத்திடுவாய். அதை விட்டு விட்டால் கோணலாகவே இருக்கும். எனவே பெண்களிடம் நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்).

'அவைகளின் மற்றொரு அறிவிப்பில் ''ஒரு பெண் விலா எலும்பைப் போன்றவள். அதை நீ நிமிர்த்தினால் அவளை உடைத்திடுவாய். அவளிடம் நீ மகிழ்வுடன் இருக்க விரும்பினால் அவளின் கோணல் நிலையிலேயே மகிழ்வுறுவாய்'' என்று உள்ளது. (புகாரி,முஸ்லிம்)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் (பின்வருமாறு உள்ளது):
ஒரு பெண் விலா எலும்பினால் படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே வழியில் உன்னுடன் நேராக நிற்க மாட்டாள். அவளிடம் நீ மகிழ்வுற விரும்பினால் அவள் கோணல் நிலையிலேயே அவளிடம் மகிழ்வுறுவாயாக! அவளை நேராக்க நீ முயற்சித்தால், அவளை உடைத்திடுவாய். அவளை உடைத்தல் என்பது, அவளை விவாகரத்து செய்வதாகும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 273)

''ஒரு மூஃமின், தன் மூஃமினான மனைவியை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால், மற்றொரு குணத்தின் மூலம் அவளிடம் அவன் திருப்தியுறுவான்''  என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 275)

'இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவரிடம் அவரது மனைவியின் உரிமைகள் என்ன? என்று கேட்டேன். நீ சாப்பிடும் போது அவளையும் நீ சாப்பிடச் செய்ய வேண்டும். நீ (புதிய ஆடை) உடுத்தும் போது அவளுக்கு நீ உடுத்தக் கொடுக்க வேண்டும் முகத்தில் அடிக்காதே! இழிவாக பேசாதே! வீட்டிலேயே தவிர அவளைக் கண்டிக்காதே! என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா இப்னு ஹய்தா(ரலி) அவர்கள்  (அபூதாவூது).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 277)

''இறை விசுவாசிகளில் நம்பிக்கையால் முழுமை பெற்றவர், அவர்களில் அழகிய குணமிக்கவர்தான். உங்களில் சிறந்தவர், மனைவியரிடம் சிறந்தவராக நடந்தவர் தான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இது ஹஸன் ஸஹுஹ் என்று திர்மிதீ இமாம் கூறுகிறார்கள்). (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 278)

''அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை அடிக்காதீர்கள்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) அவர்கள் வந்து, ''(பெண்கள் அடிக்கப்படாததால்) தங்களின் கணவர்களுக்கு எதிராக தைரியம் பெற்று விட்டார்கள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் பெண்களை அடிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள். உடனே அதிகமான பெண்கள் தங்களின் கணவர்கள் பற்றி முறையிட்டவர்களாக நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தாரிடம் வரத் துவங்கினார்கள். அப்போது, ''தங்கள் கணவர்களை குறை கூறியவர்களாக பெண்கள், இந்த முஹம்மதின் குடும்பத்தினரை சுற்றி வருகின்றனர். (குறை கூறும் அளவுக்கு நடக்கும் கணவர்களாகிய) அவர்கள் உங்களில் சிறந்தவர்களாக இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இயாஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு அபீதுபாப்(ரலி) அவர்கள் (அபூதாவூது).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 279)

''உலகம் (சிறிது காலத்திற்கு) சுகமளிக்கும் ஒன்றாகும். இந்த சுகப்பொருட்களில் சிறந்தது, நல்ல மனைவியாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் (முஸ்லிம்)     (ரியாளுஸ்ஸாலிஹீன்: 280)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன்.S

5 Responses So Far:

Iqbal M. Salih said...

''உலகம் (சிறிது காலத்திற்கு) சுகமளிக்கும் ஒன்றாகும். இந்த சுகப்பொருட்களில் சிறந்தது, நல்ல மனைவியாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 280)//

வல்லாஹி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !

நபிமொழிகள் வாரம் ஒருமுறை கண்களைச் சுற்றியே வலம் வர உங்களின் முயற்சிக்கு வல்லமை நிறைந்த அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக !

sabeer.abushahruk said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

நபிமொழிகள் வாரம் ஒருமுறை கண்களைச் சுற்றியே வலம் வர உன் முயற்சிக்கு வல்லமை நிறைந்த அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக !

இப்னு அப்துல் ரஜாக் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !

நபிமொழிகள் வாரம் ஒருமுறை கண்களைச் சுற்றியே வலம் வர உங்களின் முயற்சிக்கு வல்லமை நிறைந்த அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவள் பற்றிய அழகுமொழிகள்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.