Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வழக்குக் கூண்டில் வறுமைக்கோடு - குறுந்தொடர் நிறைவு! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | April 10, 2012 | , , ,


வழக்குக் கூண்டில் வாய்பொத்தி நிற்கும் வறுமைக்கோடு.

இக்குறுந்தொடரின் இரண்டாவது பகுதியை இப்படி முடித்து இருந்தேன்.

//காரணம் இல்லாமல் காரியம் நடக்காதே! இதெற்கெல்லாம் என்ன காரணங்கள்?

காரணங்கள் இருக்கின்றன.. இந்தக்காரணங்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலன்களை அடகுவைக்கும் காரணங்கள் . 

அவை என்னென்ன? இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம். //

இப்போது தொடர்ந்து பார்க்கலாம். 

திட்ட கமிஷன் என்பது ஒவ்வொரு நாட்டின் பொருளாதார கட்டமைப்புகளுக்கான உயிர்நாடியாகும். ஐந்தாண்டுத்திட்டங்களும், வளர்ச்சித்திட்டங்களும் , மக்கள் நலவாழ்வுத்திட்டங்களும் இந்தக்குழுவில் இருக்கும் மகாபனுவர்கள் தரும் செயல் அறிக்கைகளை வைத்துத்தான் மேற்கொள்ளப்படும். ஆனால் இவர்கள் தரும் பொருளாதார அறிக்கைகளைப்பார்த்தால் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக உண்மைப் பொருளாதார, சமூக சூழ்நிலைகளை வேண்டுமென்றே மறைத்துவிட்டு இப்படி பித்தலாட்டமான அறிக்கை தருவது காட்டில் நிலவு காய்வதற்கும் கடலில் மழை பெய்வதற்கும் ஒப்பானது. பயனாளிகளுக்குப்பயன்படாதது.  

திட்டக்கமிஷனின் தில்லுமுல்லு அறிக்கைக்கு காரணங்களாக கருதப்படுபவை அல்லது கணிக்கப்படுபவை. 
  1. உலக வங்கியை திருப்திப்படுத்த
  2. உலகபெருங்குழுமங்களின் இசைக்கேற்ப நடனமாட
  3. உலக நாட்டினரின்முன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்கிற மாயமான தோற்றத்தை சித்தரிக்க, 
  4. உள்நாட்டில் வறுமை ஒழிப்புத்திட்டங்களை ஒழித்துக்கட்ட
  5. முக்கியமாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசு தரும் மானியங்களைக் குறைக்க, 
  6. நிர்வாக கோளாறுகளை மறைக்க,
  7. கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறையை கண்டுகொள்ளாதிருக்க 

இத்தகைய காரணங்களால்தான் இப்படி ஒரு செப்பிடுவித்தைக்குள் திட்ட கமிஷன் இறங்கி இருக்கிறது என்று காரணங்களைச் சொல்லலாம்- சொல்கிறார்கள். 

அண்மைக்கால இந்திய அரசின் பொருளாதார கொள்கை ரீதியான நடவடிக்கைகள் உலக வங்கியை திருப்திப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கும் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. முக்கியமாக நாட்டின்  முதுகெலும்பான விவசாயத்துக்கான முதலீடுகள் குறைக்கப்பட்டு பெருந்தொழில்களுக்கான முதலீடுகள் அதிகரிக்கப்பட்டது உலக வங்கியின் தலையணை மந்திரத்துக்கு உட்பட்டே. பெருந்தொழிலகள் பெருக்குவதற்காக விவசாய நிலங்கள் உலகவங்கியின் வழிகாட்டுதல்களின்பேரில் அபகரிக்கப்படுகின்றன. இருக்கும் நிலத்தையும் இழந்த ஏழை விவசாயி வறுமைக்கோட்டின் கீழாவது படுத்து ஒய்வு எடுக்க முடியவில்லை. ஒரு பொருளாதார அறிக்கையின்படி “ Structural adjustment policies prescribed by the International Monetary Fund (IMF) and the World Bank as conditions for loans and repayment.” என்ற வரிகள் விளங்க வைக்கும் .

உணவுதானிய வேளாண்மையானது குறைக்கப்பட்டு பணப் பயிரை நோக்கி திருப்பிவிடப்பட்டது. அதற்கு உழவர்களை விரட்டுவதற்கு ஏற்ப உணவுதானியக் கொள்முதல் விலை திட்டமிட்ட வகையில் குறைக்கப்பட்டது. இதனால் உணவுப் பயிரிட்டு வந்த உழவர்கள் பணப்பயிரை நோக்கி விரட்டப்பட்டார்கள். இதே மாதிரிக் கொள்கை இந்தியா போன்ற உலகின் பிற பின்தங்கிய நாடுகளிலும் உலகவங்கியால் கட்ன்தரப்பட்ட நாடுகளிலும் பின்பற்றப்பட்டது. பருத்தி, மூலிகை போன்ற மாற்றுப் பயிர் சாகுபடி எல்லா நாடுகளிலும் ஊக்குவிக்கப்பட்டது. இவை ஏற்றுமதிச் சந்தைக்காக உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் வறுமைதான்  வளர்ந்தது. 

உழைப்பவர் வாழ்வே வீதியிலே! உறங்குவதோ நடை பாதையிலே! இரக்கம் காட்டத்தான் நாதி இல்லே!

அந்நிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு இல்லை. அந்நிய நிறுவனங்கள் செய்யும் முதலீடுகளுக்கு வரியும் இல்லை. நாட்டின் மூலவளங்கள் பெருங்குழுமங்களுக்கு தாரைவார்க்கப்படுகின்றன. கோதாவரி நதி தீர எரிவாயு உரிமைப்போராட்டதில் சகோதரர்களின் பங்காளி சண்டைக்கு நாட்டின் பிரதமர் கட்டைப் பஞ்சாயத்துபண்ணுகிறார். கறுப்புப்பணத்தை பதுக்கியவர்களின் பட்டியலைத் தர மறுக்கிறது அரசு. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாகிவிடுமென்ற அச்சம்தான் காரணம். நாட்டை வணிகப்பாத்தி கட்டி பன்னட்டுக் குழுமங்களுக்கு விற்கத்துடிக்கிறது அரசு. சில்லறை வணிகத்தில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் கொள்கை அவசர அவசரமாக “கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மனையில் வை” என்ற நோக்கில் அரசு துரிதகதியில் செயல்பட நினைத்தது. 

பன்னாட்டுக்குழுமங்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி விமான நிலையங்களை புதிதாக கட்ட ரூ. 10,000 கோடி ஒதுக்கினார்கள். காமன்வெல்த் விளையாட்டுக்காக ரூ. 60,000 கோடி ஒதுக்கினார்கள். காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிக்கு ஒதுக்கிய தொகை போதவில்லை என்று ஏழ்மை ஒழிப்பு, மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகளை திசை திருப்பினார்கள். 

Tens of millions of dollars have been diverted in India from schemes to fight poverty and used to fund Delhi's Commonwealth Games, a report says. The Housing and Land Rights Network pressure group says its report is based on official documents obtained under India's right to information act. The group says there should be an independent inquiry into how this was allowed to happen. (Source: BBC News 14th May 2010.)

இப்படி உலக வங்கி என்ற மாமியாரும், பன்னாட்டுக்குழுமங்கள்  என்கிற மனைவியும் சொல்லும் சொல்கேட்டு ‘ மாமியா வீட்டோட போய்விட்ட மருமகன் ‘ போல் மத்திய அரசு செயல் படுகிறது. மாமியார் வீட்டில் போய் இறங்கி மாமியார் வீட்டு ஜனங்கள் கூடி “ பொட்டி” பிரிக்கிறார்கள். தாய் வீடோ, விவ்சாயம்போல் புறக்கணிக்கப்படுகிறது.  உலக வறுமையின் காரணங்களை ஆய்ந்த அறிக்கை கூறுகிறது. 

To attract investment, poor countries enter a spiraling race to the bottom to see who can provide lower standards, reduced wages and cheaper resources. This has increased POVERTY and inequality for most people. It also forms a backbone to what we today call globalization. As a result, it maintains the historic unequal rules of trade.

அடுத்து, நிர்வாகத்தில் கோளாறுகள், முக்கியமாக உணவு பங்கீட்டில் பாகுபாடுகள், ஊழல்கள், கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தாமை ஆகியவற்றை குறிப்பிடலாம். நாட்டின் உணவு உற்பத்திப் புள்ளி விவரங்களை உணவுத்தேவையின் புள்ளிகளோடு ஒப்பிட்டால் உற்பத்தி தன்னிறைவு அடைந்துள்ளது. அதாவது நமது அனைத்து மக்களுக்கும் தேவையான அளவு உணவு உற்பத்தி ஆகியே  இருக்கிறது. ஆனாலும் பட்டினிச்சாவுகள் என்? பற்றாக்குறை ஏன்? திட்டமிடப்படாத பகிர்விலும் பாதுகாப்பிலும் ஏற்பட்ட ஒட்டைகள்தான் காரணங்கள். 

உணவு உற்பத்தி 

2008- 2009 218.20 மில்லியன் டன்
2009- 2010 237.47 மில்லியன் டன் அதாவது உற்பத்தியின் அளவு உயர்ந்தே இருக்கிறது. ஆனாலும் 

ஒருகோடியே அறுபத்தொன்பது லட்சம் டன் உணவுப்பொருள்கள் சரியான சேமிப்பு கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வீனாகிப்போயின. 

ஒரே ஒரு சோற்றுப்பருக்கை உண்ணும் தட்டில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் எடுத்து சாப்பிடு, தட்டையை வழித்து சாப்பிடு , கைவிரல்களை சூப்பி சாப்பிடு என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் வியர்வை சிந்தி உற்பத்தியான டன் கணக்கான உணவுப்பொருள்கள் வெயிலிலும் மழையிலும் கிடந்தது வீணாக விட்டது யார் குற்றம்? 

திட்டமிட்ட பகிர்வு இல்லை- சேமித்துவைக்க வக்கில்லை. பகிர்ந்தளிக்கும் திட்டங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது . இதோ உலகவங்கியின் அறிக்கையே சுட்டிக்காட்டுகிறது. 

Corruption in developing countries definitely must be high on the priority lists (and is increasingly becoming so in the wake of the global financial crisis), but so too must it be on the priority lists of rich countries. World Bank report said attempts by the Indian government to combat poverty were not working. It said aid programmes were beset by corruption, bad administration and under-payments.

இத்தகைய காரணங்களால் தங்கள் மீது எழுப்பப்படும் கேள்விக்கணைகளை தாங்க வக்கில்லாமல் வறுமைக்கோட்டின் துப்பட்டிக்குள் நுழைந்துகொண்டு பேராசிரியர் சுரேஷ் டி. தெண்டுல்கர் தந்த வக்கற்ற அறிக்கையை வகையில்லாமல் ஏற்றுக்கொண்டு தனது கையால் ஆகாத தனத்தை வறியவர், எளியவர், வகையிலர், தொகையிலரின் வாழ்வின் மேல் தாக்கி இருக்கிறது மத்திய அரசு. 

மக்கள் இளிச்சவாயர்களாக விழிப்புணர்வற்று இருக்கும்வரை இதுபோன்ற செயல்களே நடக்கும். 

இதோ வைரமுத்து 

சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே!
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மக்களின் அறியாமையை பயன்படுத்தி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் அதை ஏற்றுகொள்வார்கள் என்று கருதும் அரசுகள் அழியவேண்டும். அழியுமா? அழிப்போமா? எதை எதிர்க்காவிட்டலும் இந்த அரசின் வறுமைக்கோட்டு அறிக்கையை அனைவரும் எதிர்க்க வேண்டும். 

வழக்கு மன்றம் முடிவுறுகிறது. வறுமைக்கோடு வழக்கு கூண்டிலேயே தளர்ந்து போய் நின்றது ஒரு பாட்டில்  தண்ணீர் வாங்கிக்குடித்து தளர்ச்சியைப் போக்கிகொள்ளக்கூடாதா என்று கேட்டேன். வறுமைக்கோடு  என்னைத்திருப்பிக் கேட்டது இருக்கும் 22/=ரூபாயில், 14/= ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் வாங்கி விட்டால் பாக்கி 8/= ரூபாயை வைத்து நான் நாக்கு வழிக்கவா? என்று

எனக்குத்தெரியவில்லை. யாரைக்கேட்கலாம்.? எக்ஸ் க்யூஸ் மி இந்த அட்ரஸ் எங்கே இருக்குதென்று சொல்ல முடியுமா? மன்மோகன் சிங் ரேஸ் கோர்ஸ் ரோடு புது டில்லி.

-இபுராஹீம் அன்சாரி

14 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

//ஒரே ஒரு சோற்றுப்பருக்கை உண்ணும் தட்டில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் எடுத்து சாப்பிடு, தட்டையை வழித்து சாப்பிடு , கைவிரல்களை சூப்பி சாப்பிடு என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் வியர்வை சிந்தி உற்பத்தியான டன் கணக்கான உணவுப்பொருள்கள் வெயிலிலும் மழையிலும் கிடந்தது வீணாக விட்டது யார் குற்றம்?//

நெற்றிப் பொட்டில் போட்ட போடு .நல்ல கம்பேரிசன்.ஊரான் வூட்டு கோழியை பிடிச்சு - உம்மா பேர்ல பாத்திஹா ஒதுனான் என்கிற கதையாக,ஒட்டு மொத்த குள்ளநரி அரசியல் வாதிகளும் குற்றவாளிகள்தான்.எவன் வூட்டுப் (மக்கள் வரிப் பணம்)பணமோ என - லஞ்ச லாவண்யத்தில் மூழ்கி கிடக்கும் இவர்களுக்கு - எப்போது புத்தி வருமோ?எனக்கு தெரியும் ஒரே வழி,இந்தியாவில் இஸ்லாம் வாழவும் வேண்டும்,எங்களை(இந்தியாவை-உலகை) ஆளவும் வேண்டும்.அப்போதுதான் நிம்மதி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வழக்கு மன்றம் முடிவுறுகிறது. வறுமைக்கோடு வழக்கு கூண்டிலேயே தளர்ந்து போய் நின்றது ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக்குடித்து தளர்ச்சியைப் போக்கிகொள்ளக்கூடாதா என்று கேட்டேன். வறுமைக்கோடு என்னைத்திருப்பிக் கேட்டது இருக்கும் 22/=ரூபாயில், 14/= ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் வாங்கி விட்டால் பாக்கி 8/= ரூபாயை வைத்து நான் நாக்கு வழிக்கவா? என்று///

இந்த கூடல் கழித்தலை மன்மோகனிடம் கேட்டால் "i don't know" என்ற பதில் வரும்...

காக்கா, அருமையான சிந்தையில் உரைக்கும் (நமக்கு) ஆராய்ச்சி கட்டுரை ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

Noor Mohamed said...

காக்கா, சிந்திக்க தூண்டிக் கொண்டே இருக்கின்றீர்கள். செயல் படுத்துவது எப்போது?

//வழக்கு மன்றம் முடிவுறுகிறது. வறுமைக்கோடு வழக்கு கூண்டிலேயே தளர்ந்து போய் நின்றது ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக்குடித்து தளர்ச்சியைப் போக்கிகொள்ளக்கூடாதா என்று கேட்டேன்//

சத்தான தாதுக்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டு, மிச்சமிருப்பதை மினரல் வாட்டர் என பாட்டில் போட்டு விற்கின்றனர். அதை வாங்கிக் குடித்து எப்படி தளர்ச்சியை போக்கிக்கொள்ள முடியும்?

//இப்படி உலக வங்கி என்ற மாமியாரும், பன்னாட்டுக்குழுமங்கள் என்கிற மனைவியும் சொல்லும் சொல்கேட்டு ‘ மாமியா வீட்டோட போய்விட்ட மருமகன் ‘ போல் மத்திய அரசு செயல் படுகிறது. மாமியார் வீட்டில் போய் இறங்கி மாமியார் வீட்டு ஜனங்கள் கூடி “ பொட்டி” பிரிக்கிறார்கள். தாய் வீடோ, விவ்சாயம்போல் புறக்கணிக்கப்படுகிறது. உலக வறுமையின் காரணங்களை ஆய்ந்த அறிக்கை கூறுகிறது. //

இதற்கு பெரும்பாலான அதிரை ஆண்களிடத்தில் பதிலே கிடையாது.

Ebrahim Ansari said...

BROTHER NOOR MOHAMED! ASSSALAMU ALAIKKUM.

//சிந்திக்க தூண்டிக் கொண்டே இருக்கின்றீர்கள். செயல் படுத்துவது எப்போது?//

கவலையளிக்கும் கேள்விதான். முடிந்ததை செய்துகொண்டிருக்கிறோம். செயல் படுத்துவது - சிந்திக்கும் மக்கள் திரண்டால் மட்டுமே முடியும்.

இப்படி தவறிழைக்கும் அரசுகளை எதிர்த்து திரண்ட சிந்தித்த கூட்டம் நடத்திய நிகழ்வுகள்தான் வரலாற்றில் ரஷ்யப் புரட்சியாகவும், பிரெஞ்சுப் புரட்சியாகவும், ஐரோப்பிய மறுமலர்ச்சியாகவும் மலர்ந்தன என்பது உங்களுக்கு தெரிந்ததே.

''ஒடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பராகிவிட்டால் ஓர் நொடிக்குள்
ஒடப்பர் உடையப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ! '' - பாரதிதாசன்.

அலாவுதீன்.S. said...

மக்களின் அறியாமையை பயன்படுத்தி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் அதை ஏற்றுகொள்வார்கள் என்று கருதும் அரசுகள் அழியவேண்டும். அழியுமா? அழிப்போமா?

வழக்கு மன்றம் முடிவுறுகிறது. வறுமைக்கோடு வழக்கு கூண்டிலேயே தளர்ந்து போய் நின்றது.
**************************************************************************************

அன்புச்சகோதரர் : இபுராஹீம் அன்சாரி அவர்களுக்கு: தெளிவான விளக்கங்களுடன் தங்களின் வழக்கு மன்றம் முடிந்திருக்கலாம்.

ஆனால் வல்ல அல்லாஹ்வின் உதவியுடன் மக்கள் மன்றம் கூடும் அங்கே அரசியல் வியாதிகளின் மன்றத்திற்கும், வழக்கு மன்றத்திற்கும் இறைவனே தீர்ப்பளிப்பான்.

அதுவரை அநியாயங்களை நம் சக்திக்கு உட்பட்டு தட்டிக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்!

Yasir said...

காரசாரமான முடிவுரை....விழித்திருப்போம் இது எல்லாவற்றிற்க்கும் விடிவு காலம் வருமென்று

//திட்டமிட்ட பகிர்வு இல்லை- சேமித்துவைக்க வக்கில்லை. பகிர்ந்தளிக்கும் திட்டங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிற/// பொன்னான வார்த்தைகள்

ZAKIR HUSSAIN said...

வைரமுத்துவின் கணக்கு தப்பு...அறிவுக்கோட்டுக்கு கீழ் அறுபது கோடி பேர்....' இது பழைய புள்ளிவிவரமோ....எனக்கு என்னவோ இன்னும் அதிகமாக இருக்களாம் என தோனுகிறது.

sabeer.abushahruk said...

வறுமைக்கோட்டிற்குக் கீழ் இத்துணை கோடிகளா! அப்படியானால் வறுமைக்கோட்டிற்கு மேல் எத்தனை கேடிகளோ!

காக்கா, ஏதோ ஸ்பெஷல் க்ளாஸில் இருந்து பாடத்தைக் கவனித்த உணர்வு. தங்கள் நண்பர் அவர்களின் தொழிலுக்கு (சேவைக்கு) நீங்களும் போயிருந்தால் தாங்களும் சிறந்த மாணாக்கர்களைத் தந்திருப்பீர்கள்.

அறிவூட்டும் தங்களுக்கு மிக்க நன்றி.

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர் சொல்வது உண்மையாக இருக்கலாம்.

வைரமுத்து நூறு கோடி ஜனத்தொகையை TALLY செய்து இருக்கிறார். ஹஹஹா.

அத்துடன் மத்திய மந்திரிசபையையும், திட்டக்குழுவையும் இன்னும் இது போல் இருப்பவர்களின் கூட்டங்களையும் சேர்த்தால் நிச்சயம் அறுபதுகோடிக்கு மேலேதான் இருக்கும்.

Shameed said...

//ஒரே ஒரு சோற்றுப்பருக்கை உண்ணும் தட்டில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் எடுத்து சாப்பிடு, தட்டையை வழித்து சாப்பிடு , கைவிரல்களை சூப்பி சாப்பிடு என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் வியர்வை சிந்தி உற்பத்தியான டன் கணக்கான உணவுப்பொருள்கள் வெயிலிலும் மழையிலும் கிடந்தது வீணாக விட்டது யார் குற்றம்? //

ஆணித்தரமான கருத்துகள்

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி.

அன்புத்தோழர்களே!இந்த குறுந்தொடரைப்படித்து ஆர்வமூட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி. ஜசக்கல்லாஹ் ஹைரண்.

ஒரே கேள்விதான் எனக்குள் எழுந்தது எங்கே தம்பி எல் .எம். எஸ். அபூபக்கர்? கடையில் கூட்டம் அதிகமா? நலம்தானே.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// ஒரே கேள்விதான் எனக்குள் எழுந்தது எங்கே தம்பி எல் .எம். எஸ். அபூபக்கர்? கடையில் கூட்டம் அதிகமா? நலம்தானே.//

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் நலமாக உள்ளேன் காக்கா
எங்கள் ஸ்தாபனத்தின் இரண்டாம் ஆண்டை முன்னிட்டு தள்ளுபடி விலை போட்டு இருப்பதால். அதிரை தளத்திற்கு சென்று ஆசுவாச படுத்தி அமர முடியவில்லை.ஒரு அடி எடுத்து வைத்து உடனே பின் வாங்கி விடுகிறேன்.

தாங்களின் அன்பான நலம் விசாரிப்பை கருத்தில் கொண்டு பதில் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் சில நிமிடங்களை பயன் படுத்தி தாங்களுக்கு பதில் தந்துள்ளேன், உங்களுடைய துஆ வில் மறவாமல் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்.

Ebrahim Ansari said...

WA ALAIKKUMUSSALAM.

தம்பி L.M.S. அபுபக்கர் அவர்களுக்கு, மிக்க மகிழ்ச்சி. கொஞ்ச நாட்களாக காண முடியாத காரணத்தால் கேட்டேன். மற்றவர்களும் உங்களை தேடியிருப்பார்கள்.
மற்றபடி மிக்க சந்தோசம். வியாபாரத்தைப்பாருங்கள். அல்லாஹ் பரக்கத் செய்வானாக. வஸ்ஸலாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

// ஒரே வழி,இந்தியாவில் இஸ்லாம் வாழவும் வேண்டும்,எங்களை(இந்தியாவை-உலகை) ஆளவும் வேண்டும்.அப்போதுதான் நிம்மதி.//

அன்புத் தம்பி அர. அல. அருமையாகச் சொன்னீர்கள்!

FOR ALL PROBLEMS ISLAM IS ONLY SOLUTION
THIS WILL BE OUR CONCLUSION
WHY ARE WE IN CONFUSION?
DECLARE AN INVITATION
TO ATTEND PEACE CONVENTION

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு