Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எந்த மொழி உங்கள் வழி !? - விவாதக்களம் !‏ 172

அதிரைநிருபர் | May 15, 2013 | , , , , , ,


இனத்தாலோ மொழியாலோ பிரித்தாலுபவன் என்னைச் சார்ந்தவனல்ல! - நபிமொழி.

பல சந்தர்ப்பங்களில் இதனை ஞாபகப்படுத்துவது, இனம் பிரித்து, மொழி சேர்த்து, விழி தெறிக்க பேசும் கொள்கையுடைய கட்சிகளையும் அமைப்புகளையும் கண்டு வருகிறோம் ஏன் ஒரு காலத்தில் அதில் அங்கம் வகித்தும் இருந்திருக்கிறோம்.

தாய் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ஒரு மொழி ஆதிக்கம் செலுத்திவிடுமோ என்ற அச்சத்தில் ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களையும் அந்த மொழியைப் படிக்க பேச விடாமல் செய்துவிட்டு தன் மக்களை மட்டும் பேசவைத்த பெருமையும் திராவிட கட்சிகளுக்கு உண்டு.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய முஸ்லீம்கள் (எதனை எதிர்த்தாலும் அவர்களிடம் தீவிரம் இயற்கையாகவே இருக்கும்) ஆங்கில அந்நிய மொழி படிப்பது விலக்கப்பட்டது என்று தங்களின் மார்க்க வரம்பை வகுத்து ஒதுக்க நேர்ந்தது இதனை நாம மட்டும்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

இந்த கால கட்டங்களையெல்லாம் கடந்து மொழி ஒரு பாதை விரும்பினால் அந்தப் பாதையை தேர்ந்தெடுக்கலாம், அந்தப் பாதையில் பயணம் இலகுவாக்கிக் கொள்வதும் இடர்களாக்கிக் கொள்வதும் பயணிப்பவர்களைப் பொறுத்தே அமையும்.

கூரையில்லாத வீட்டில் அமர்ந்து கொண்டு இரகசியமும் பேச முடியாது. தெரிந்த மொழியில் அல்லது தெரிவிக்க வேண்டிய மொழியில் உரையாடவும் கருத்தாடல் செய்வதும் அதில் கலந்து கொள்பவர்களின் விருப்பமாகத்தான் இருக்க முடியும்.

இணையத்தில் தமிழ் மொழி நடத்தியிருக்கும் எழுச்சி எண்ணிடலங்காதவை,நல்லதைச் சொல்லவும் இல்லாததைச் சொல்லவும், என்று விரிந்து இருக்கிறது. சமீபத்தில் வலைப்பூக்களில் இணையதளங்களில் தமிழில் வெளியாகும் கட்டுரைகள், கவிதைகள், அவசியமான விவாதங்கள் இவைகளுக்கு தமிழிலே கருத்தாடல்கள் இருக்க வேண்டும் என்ற வாதமும் வலுவாக எழுப்பப்படுகிறது.

அங்கே ஆங்கிலத்தில் கருத்துகள் பதிந்தால் அதன் கருத்தாடலின் பொருளை புரிந்து கொள்ள எத்தனை பேருக்கும் இயலும் என்பது அதன் வாதமாக இருக்கிறது. ஆனால், ஆங்கிலத்தில் பதிவதால் என்னதான் எழுதியிருக்கிறது என்று தேடல் கொண்டு அதற்கான பொருளை அறிந்து கொள்ளத் தூண்டுவதும், அதேபோல் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தும் இணையதளங்களுக்கு நமது கருத்துக்களை எடுத்து வைக்க இது உதவும் என்பதும் மற்றொரு வாதம்.

அதிரைநிருபரில் பல்வேறு பதிவுகளில் இந்த விவாதம் எழும்போதெல்லாம், வாசகர்கள் இரண்டு பக்க நியாயங்களை எடுத்து வைத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

இங்கே விவாதியுங்கள், ஆங்கிலம் மட்டும் தான் எதிர்க்கப்படுகிறதா ? ஆங்கிலம் அதிசயமா / அவசியமா ?

உங்களனைவரின் கருத்தாடல்கள் தனிமனித சாடல்கள் இன்றி கருத்துகளோடு மோதலிருப்பின் நீங்கள் காதலிக்கும் மொழியின் தாக்கமே என்று புரிந்து கொள்ளப்படும்.

அவசியமேற்படும்போது கருத்தாடல்கள் அனைத்தும் நெறிப்படுத்தலுக்குட் படுத்தப்படும்.

அதிரைநிருபர் பதிப்பகம்

172 Responses So Far:

sabeer.abushahruk said...

தமிழ் என் தாய் மொழி. தமிழை வளர்க்க நான் என்னாலான ஆக்கபூர்வமான செயல்களைச் செய்வேன். எனக்கும் ஏனைய எந்த மொழியை விடவும் தமிழில் சொல்வதும் எழுதுவதுமே இலகுவாகவும் தெளிவாகவும் வருகிறது.  எனவே, முதல் மொழியாக என் தாய்மொழியாகிய, செம்மொழியாகிய தமிழையே விரும்பி ஏற்கிறேன்.
 
இருப்பினும் என் தமிழ் எனக்குச் சோறு போடவில்லை.  தமிழ் நாட்டைவிட்டு வெளியே துரத்தியது.  ஓடினேன் ஓடினேன் பம்பாய்க்கு ஓடினேன். அங்கும் எனக்குத் தமிழ் உதவவில்லை. இன்னும் உக்கிரமாகத் துரத்தியது மும்பாயாவதற்கு முன்பதான பம்பாய்.  ஓடினேன். சவுதி என்னை வா வென்றது. தமிழில் பேசினேன். திருப்பி அனுப்பவா என்று கேலி செய்தது. அங்கு ஆரம்பித்தேன் ஆங்கிலத்தைப் பிரயோகிக்க.
 
ஆங்கிலம் பிரயோகிக்கத் துவங்கவும் எனக்கு எல்லா திசைகளும் துலங்கின.  வேலை கிடைத்தது. செலவம் சேர்ந்தது. குடும்பம் அமைந்தது. தமிழ் அறியாத பலரின் அறிமுகம் கிடைத்தது. உலகம் எத்தனை பெரியது என்று விளங்கியது.
 
ஆங்கிலம் எனது நண்பனானது.
 
என் நண்பனின் (ஆங்கிலத்தின்) உதவியோடு என் தாயை(தமிழை) காப்பாற்றுகிறேன்.  என்ஆரம்பகாலத் துன்பம் யாருக்கும் வேண்டாமென்று அனைவரையும் ஆங்கிலம் கற்க கேட்டுக்கொள்கிறேன்.  கற்பிக்க  முயல்பவனை நிந்திக்காமல் கற்றலில் குறையுள்ள மாநிடா ஆங்கிலம் கல் என்கிறேன்.
 
தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.

Yasir said...

மொழி என்பது உணர்வுகளையும்,எண்ணங்களையும் வெளிப்படுத்தும் கருவியேன்றி....ஒருவருக்கு உணவு,உயிராக முடியாது..எந்த மொழியை பயன்படுத்தி நம் வாழ்க்கையின் தரத்தையும்,நம்மை சார்ந்திருக்கும் சமுதாயத்தின் தரத்தையும்,நம் தாய்மொழிப்பை பற்றிய அறிவையும் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க முடியுமோ..அதுவே ஒருவருக்கு சிறந்த மொழியாகும்....சில நாடுகளில் அது ஆங்கிலமாக இருக்கலாம்,சில நாடுகளின் அரபி,ஃபிரன்ச் ஆக இருக்கலாம்..கருத்து எந்த மொழியில் இருந்தாலென்ன புரியாவிட்டால் அந்த மொழியை கற்க வாய்ப்பாக எண்ணி கூகுள் மாமாவிடம் உதவிக் கேட்டு கற்றுக்கொள்ளலாம்,பிற எண்ணற்ற வழிகளும் உள்ளன..ஆகையால் தாய்மொழிப்பற்று இருக்கலாம்,ஆனால் தாய்மொழிபைத்தியம் நல்லதல்ல

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தமிழ்!
தமிழு!!
தமிழே!!!
மற்றவை லேட்ட்ட்டா வருகிறேன்.
எல்லா சாதனங்களிலும தமிழை டக்கு .ன்னு எழுத முடியா அளவுக்கு நாமும் ஒரு காரணம்?

அப்துல்மாலிக் said...

தமிழ் தாய் மொழி அதில் எந்த கருத்துவேறுபாடுமில்லை. கல்லூரி முடிந்(த்)து வேலை தேடி வெளியுலகிற்கு வந்தபிறகுதான் பலதும் புரிந்தது. தமிழ்நாட்டின் தலைநகரத்துலேகூட தலை(தாய்மொழி)யை தவிர்த்து ஆங்கிலத்தின் அட்டகாசம் எந்தளவுக்கு தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கு என்று சின்ன வயசுக்குழந்தைகள் ஒரு கடையில் கூட எப்படி பேசிக்கிட்டிருக்குனு பார்க்க ஆச்சரியமா இருந்தது. எங்கு சென்றாலும் ஆங்கிலம் பேசத்தெரிந்தால் மட்டுமே வேலை... இப்படி ஆங்கிலத்தினால் அவதிப்பட்ட காலம் நிறைய...

இலக்கணத்துடன் கூடிய ஆங்கில மொழியான வாப்பாவின் துணை மிக மிக அவசியம்

அப்துல்மாலிக் said...

சிலபேர் கேட்கலாம் சைனா/ஜெர்மன்/பிரான்ஸ் இப்படி பட்ட நாடுகளில் ஆங்கில அறிவு இல்லாமல் முன்னேறவில்லையா என்று?

அங்கே ஆங்கிலம் ஏதோ ஒரு புள்ளிதான், ஆனால் நம் நாட்டில் அதுதான் தலையே என்று எத்தனைபேருக்கு தெரியும்

சில இக்கட்டான சூழ்நிலையில் இந்தியன்கூட பேசவேண்டுமானால் அரேபியர்கள் இவரும் இந்தியர்தான் எனவே உன் லாங்குவேஜில் பேசி சரி பண்ணு என்று சொல்லிட்டு ஃபோனை கொடுத்து பக்கத்துலேயே நிப்பானுங்க, அப்போ அவண்டே ஆங்கிலத்தில் வாதாடுவதை பார்த்து இதைதான் நானே செய்வேனே ஏன் உன்னிடம் கொடுத்து பேச சொல்கிறேன் என்று சொல்லுவாங்க. அவனோடு இந்தியிலேயே பேசவேண்டுமாம். இவனுங்களுக்கு தெரியுமா இந்தியாவில் 28 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிருக்கு ஆங்கிலம்தான் எல்லோருக்குமான பொதுவான மொழி என்று?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
மொழி என்பது உணர்வுகளையும்,எண்ணங்களையும் வெளிப்படுத்தும் கருவியேன்றி....ஒருவருக்கு உணவு,உயிராக முடியாது..எந்த மொழியை பயன்படுத்தி நம் வாழ்க்கையின் தரத்தையும்,நம்மை சார்ந்திருக்கும் சமுதாயத்தின் தரத்தையும்,நம் தாய்மொழிப்பை பற்றிய அறிவையும் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க முடியுமோ..அதுவே ஒருவருக்கு சிறந்த மொழியாகும்....சில நாடுகளில் அது ஆங்கிலமாக இருக்கலாம்,சில நாடுகளின் அரபி,ஃபிரன்ச் ஆக இருக்கலாம்..கருத்து எந்த மொழியில் இருந்தாலென்ன புரியாவிட்டால் அந்த மொழியை கற்க வாய்ப்பாக எண்ணி கூகுள் மாமாவிடம் உதவிக் கேட்டு கற்றுக்கொள்ளலாம்,பிற எண்ணற்ற வழிகளும் உள்ளன..ஆகையால் தாய்மொழிப்பற்று இருக்கலாம்,ஆனால் தாய்மொழிபைத்தியம் நல்லதல்ல .
நன்றி:சகோ.யாசர்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பொதுவில் கருத்தாடும் போது எல்லோருக்கும் புரியும்படியான மொழியில் கருத்தாடுவதையே நான் விரும்புகிறேன்.

நாம் செல்லும் கருத்து சரியோ தவறோ, அவைகள் வாசிப்பவர்கள் அனைவருக்கு புரிய வேண்டும்.

ஆங்கிலத்தில் புலமை பெறுவதைவிட, என்னுடைய பிள்ளைகள்அல்லாஹ்வின் திருவேதம் இறங்கியுள்ள அரபி மொழியில் புலமை பெறுவதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறேன்.

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. குர்ஆன் 30:22.

Shameed said...

எனக்கு தெரிந்த ஒருவர் இருந்தார் அவர் கொத்தனார் ஆசாரியிட மெல்லாம் ஆங்கிலத்தில் பேசுவார் இதை கேட்கும் கொத்தானார் ஆசாரி ஒன்றும் புரியாமால் அவர் சென்றதும் அவர் என்ன சொன்னார் என்று "விளங்காமல்" இவர்களின் புத்திக்கு என்ன செய்ய தோன்றுமோ அதை தான் செய்வார்கள்.

எங்கே எப்படி எதை சொன்னால் புரியுமோ அங்கே அப்படி சொல்வதுதான் புத்திசாலித்தனம்

sabeer.abushahruk said...

தம்பி தாஜுதீன்,

//பொதுவில் கருத்தாடும் போது எல்லோருக்கும் புரியும்படியான மொழியில் கருத்தாடுவதையே நான் விரும்புகிறேன்.//

யாருக்கு எந்த மொழியில் எண்ணங்கள் தோன்றுகின்றனவோ, எந்த மொழியால் அந்த எண்ணங்களைச் சிறப்பாகச் சொல்ல முடியுமோ அந்த மொழியில் சொல்வதே சரி. 

இல்லை, எல்லோரையும் போய்ச் சேர வேண்டும், தமிழில்தான் சொல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்துதலும் முறையல்ல. அப்படிக் கட்டாயப்படுத்தப்பட்டு வரும் கருத்தும் நிறைவாயிருக்காது.

தமிழில் எழுதப்படும் எல்லா கருத்துகளும் உங்களுக்குப் புரிந்துவிடுகிறதா? எனக்குப் புரிவதில்லை. "ஏய், நீ என்ன சொல்ல வர்ரே?"ன்னு கேட்கனும்போலத் தோன்றும். அதற்காக அவரை ,இங்கே கருத்துச் சொல்லாதே" என்று தடுப்பது முறையல்ல.

காட்டாக: அஹ்மது டீடாட்டின் அற்புதமான மார்க்க விளக்கங்கள் புரிய வேண்டுமெனில் நீங்கள் ஆங்கிலம் கற்றே தீர வேண்டும். அவரைத் தமிழில் பேசச் சொன்னால் பிராந்து பிடிக்காதா?

கருத்துத்தான் முக்கியமே தவிர கையாளும் மொழி ரெண்டாம்பட்சமே என்பதே என் வாதம்.

(மேற்கொண்டு பேசனும்னா எனக்கொரு இஞ்சி ட்டீ வேணும் மக்களே)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பொதுவில் கருத்தாடும் போது எல்லோருக்கும் புரியும்படியான மொழியில் கருத்தாடுவதையே நான் விரும்புகிறேன்.

நாம் செல்லும் கருத்து சரியோ தவறோ, அவைகள் வாசிப்பவர்கள் அனைவருக்கு புரிய வேண்டும்.

ஆங்கிலத்தில் புலமை பெறுவதைவிட, என்னுடைய பிள்ளைகள்அல்லாஹ்வின் திருவேதம் இறங்கியுள்ள அரபி மொழியில் புலமை பெறுவதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறேன்.

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. குர்ஆன் 30:22.

இதுவே என் விருப்பமும். மச்சான் நிச்சயமாக நம்மளுடைய மொழி தமிழாகத்தான் வேறுபட்டிருக்கிறது..

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பொதுவில் கருத்தாடும் போது எல்லோருக்கும் புரியும்படியான மொழியில் கருத்தாடுவதையே நான் விரும்புகிறேன்.

நாம் செல்லும் கருத்து சரியோ தவறோ, அவைகள் வாசிப்பவர்கள் அனைவருக்கு புரிய வேண்டும்.

ஆங்கிலத்தில் புலமை பெறுவதைவிட, என்னுடைய பிள்ளைகள்அல்லாஹ்வின் திருவேதம் இறங்கியுள்ள அரபி மொழியில் புலமை பெறுவதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறேன்.

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. குர்ஆன் 30:22.

இதுவே என் விருப்பமும். மச்சான் நிச்சயமாக நம்மளுடைய மொழி தமிழாகத்தான் வேறுபட்டிருக்கிறது..

Unknown said...

செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

தமிழுக்கு அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்


தாய் மொழியைப்போற்றுவோம்
பிற மொழியையும் மதிப்போம்


இனத்தாலோ மொழியாலோ பிரித்தாலுபவன் என்னைச் சார்ந்தவனல்ல! - நபிமொழி( இதை எக்காலமும் மனதில் நிறுத்துவோம்)

அபு ஆசிப்.

Ahamed Ameen said...

Assalamu Alaikkum

Dear learned brothers and sisters,

We are living in techological world. I am more technological person - computer programmer rather than a tamil artist.

As a rational comment from brother Mr. Zakir Hussain in a previous article that each one of internet visitors are capable of understanding English. Reading and writing in English is widespread activities in internet.

Unknown said...

And even the blog or website forums are in a particular language only(eg. Tamil), producing contents in English would target international audience.

Actually the blog readers are mostly living in foreign countries. So, when they read articles and comments English they are not feeling uneasy since the concepts are related to our local events.

Unknown said...

If our brothers and sisters whoever living in foreign countries are not able to read/write/speak in English they are really at pathetic conditions.

Loving our mother tongue is everyone's nature. But when we come to outside of our Tamil Nadu state, then definitely we will be looking poor when we don't know English.

Unknown said...

As internet is a common medium for all, putting our thoughts in English in addition to mother tongue Tamil will definitely won't hurt anyone.

Actually computer, internet is started in English language only. Then all other languages have been added into computers and internet. But internally using the same base language English.

Unknown said...

So, I hope the brothers and sisters would take it positive to learn to read/write/speak comfortably in English language for their own advantages(countless benefits) rather than it is a burden.

If a person is learned two languages he is equivalent to two persons. I heard one of our former prime ministers well versed in nine languages.

Unknown said...

Lets both parties (Tamil/English) not be adament about language preferences but lets have common thirst knowledge and development in this excellent knowledge forum rather than daily news updates.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com.

Unknown said...

Assalamu Alaikkum

I know so many of our brothers and sisters have been just reading only. Actually they are really capable of expressing their thoughts as feedbacks and comments in this forum not only in this topic, but all.

So, I request those brothers to participate in this debate and provide your valuable feedbacks(either in Tamil or in English).

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com.

Canada. Maan. A. Shaikh said...
This comment has been removed by the author.
Unknown said...

Assalamu Alaikkum

Dear learned brothers and sisters,

I have known and aware of a hadith that

The Prophet said: When three people are together, two should not talk secretly, leaving the third alone since this may grieve him. (Sahiah of Bukhari & Muslim).

Actually internet is open media world wide, there are so many brothers and sisters visiting Adirai Nirubar know English and may be very few are not well versed in English. I have shared English articles published in Adirai Nirubar(accessible world wide!!) to brothers of Malayalam, Arabic, and Philipino and ofcourse Tamil friends here in Dubai.

I would like to suggest to use online translators in case few words you don't know. It will increase your vocabulary.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Canada. Maan. A. Shaikh said...


அஸ்ஸலாமு அலைக்கும்,

மொழி என்பது ஒருவர்க்கு ஒருவர் தொடர்பை உண்டாக்கும் கருவியே அன்றி ....ஒருவருக்கு உணவு, உயிராக முடியாது.. ஒரு மொழிக்கு மேல் தெரிந்தவர்கள் அறிவில் சிறந்தவர்களோ அல்லது ஒரு மொழி மட்டும் பேசுபவர்கள் அறிவில் சிறியவர்களோ கிடையாது, எந்த மொழியும் பேச முடியாத மாற்று திறநாளிகூட எந்த தயக்கமும் இன்றி வேலை பார்க்கிறார், இங்கு கனடாவில் ஆங்கிலம் & பிரெஞ்சு பேசும் சில வெள்ளையர்களுக்கு அந்த மொழியை எழுத படிக்க கூட தெரியாது எனவே எந்த மொழியை பயன்படுத்தி நம் வாழ்க்கையின் தரத்தையும், நம்மை சார்ந்திருக்கும் சமுதாயத்தின் தரத்தையும், நம் தாய்மொழிப்பை பற்றிய அறிவையும் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க முடியுமோ..அதுவே ஒருவருக்கு சிறந்த மொழியாகும்....

Unknown said...

எனவே எந்த மொழியை பயன்படுத்தி நம் வாழ்க்கையின் தரத்தையும், நம்மை சார்ந்திருக்கும் சமுதாயத்தின் தரத்தையும், நம் தாய்மொழிப்பை பற்றிய அறிவையும் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க முடியுமோ..அதுவே ஒருவருக்கு சிறந்த மொழியாகும்....

சகோதரர் கனடா மான் எ. ஷைக் அவர்கள் சொன்னதை நான் நூற்றுக்கு நூறு
ஆமோதிக்கிறேன்.

அபு ஆசிப்.

Abdul Razik said...

//ஆங்கிலம் பிரயோகிக்கத் துவங்கவும் எனக்கு எல்லா திசைகளும் துலங்கின. வேலை கிடைத்தது. செலவம் சேர்ந்தது. குடும்பம் அமைந்தது. தமிழ் அறியாத பலரின் அறிமுகம் கிடைத்தது. உலகம் எத்தனை பெரியது என்று விளங்கியது.// sabeer kakka சரியாச் சொன்னீங்க

jahir said...

ஆங்கிலம் யாருக்கும் சோறு போடவில்லை நம்மை படைத்த அல்லாஹ் தான் உணவளிக்கின்றான்

கையெழுத்து(ஆங்கிலம் ) போட தெரியாதவர்கள் எல்லாம் கோடி கோடியாக சம்பாரிப்பதை நாம் இந்த உலகில் காண்கின்றோம் !

சம்பாதிப்பதற்கு தற்காலத்தில் மொழி அவசியம் இல்லை சூழ்நிலை தான் அவசியம்

Unknown said...

Assalamu Alaikkum

//எனவே எந்த மொழியை பயன்படுத்தி நம் வாழ்க்கையின் தரத்தையும், நம்மை சார்ந்திருக்கும் சமுதாயத்தின் தரத்தையும், நம் தாய்மொழிப்பை பற்றிய அறிவையும் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க முடியுமோ..அதுவே ஒருவருக்கு சிறந்த மொழியாகும்....//

The above definition is exactly fitting for English as a secondary language.

One who is fluent in English can face the current world with courage and improves his life standard in countries-cities like London, Dubai-UAEs, Japan(Japanese communicates in English language across the continents, the use English langauge creatively to their business advantages), Australia, France, South Africa, Malaysia, Singapore etc.

Definitely our communities' standard will improve once they are able to read/write/speak. Eg. In Kerala India's pioneer in literacy percentage, the recent rule is to train all municipality employees to read/write/speak. Tamil Nadu government has recently have new agenda to introduce sufficient government-English medium schools that can compete the standards of English in private-English medium schools.(The government finds advantages in stressing to integrate English)

Actually the Tamil Activists world wide - London, Canada, Malaysia, Singapore etc are really well versed in English, so that they have advantage of preserving Tamil language in the form of linguistic participation in internet world wide, and spread the language to non tamilians.

We all know people who wish to migrate for work or to study(Australia or Canada or US) have to have certain proficiency in English language.

Unknown said...

All of our brothers/sisters, organizations, businesses honestly prefer to write their names, brands, logos to write in English language to distinguish and project themselves as an international standards. (AN, AX, TNTJ, ADT, SDPI, etc., all are our Tamil brothers' entities, why those are all in English?).

But when a person try to write somewhat better English with completeness, instead of appreciating and learning, we object and justify mother tongue Tamil is a best medium. Why? I could observe from those brothers' real feeling(misunderstanding) which is nothing but jealousy.

Almost my points can be composed as separate article. But brothers and sisters can consider these ideas to understand the real value of using English language.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Canada. Maan. A. Shaikh said...

உலக மக்கள் தொகையில் (1,200,000,000 ) முதல் இடத்தில இருக்கும், உலக பொருளாதார சந்தையில் முதல் இடத்தில இருக்கும் சைனாவில் சுமார் 0.83 சதவிகித மக்களுக்கு மட்டுமே சரளமாக ஆங்கிலம் எழத படிக்க தெரியும் என்று கூறபடுகிறது, உண்மைய?

தமீம் said...

தமிழுக்கு ஆப்பு வைக்கிறாய்ங்க
ஆங்கிலத்தை ஊக்குவிக்கிறாங்க

Unknown said...

Assalamu Alaikkum

First of all we blog authors and readers here are all city based(living and previously lived) people, where the common medium to communicate is English.

The people who are connecting with international people and business are proficient in English.

English literacy in china cities are higher compared to rural areas there. China is one of the cheap man power and making cheaper quality things spreading all over the world.

Actually Apple iPhone, iPads and major computer company assemblies all assembled in china for economic reasons. Actually chinese are good at making duplicates - no originality in their chinese language thinking. If the language is not assisting in orginality in thinking and making then its not advantageous language.

Thanks and best regards,

B. Ahamed Ameen.

ZAEISA said...

எல்லா மொழிகளும் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்தான்.மறுப்பதற்கில்லை.அதற்காக,துபையிலிருந்து வந்தவர் மீன்காரியிடம் போய் "கம் ஹாதாஹ்"என்று கேட்கலாமா......?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//கருத்துத்தான் முக்கியமே தவிர கையாளும் மொழி ரெண்டாம்பட்சமே என்பதே என் வாதம்.//

அஸ்ஸலாமு அலைக்கும், சபீர் காக்கா,

மேல் குறிப்பிட்ட தங்களின் கருத்துடன் நான் கொஞ்சம் மாறுபடுகிறேன் காக்கா,

நாம் சொல்லும் கருத்து சென்றடைய வேண்டியவர்களுக்கு சென்றடைகிறதா இல்லையா என்பதற்கு அந்த 100% பார்வையாளர்களின் மொழி ஒரு சாதனம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது தானே..

இங்கு அதிரை வலைத்தளங்கள் பலவற்றில் கருத்துரையாடுபவர்கள் 100% பேர்களுக்கு தமிழ் நன்றாக வாசிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறோம். பலருக்கு தமிழ் தட்டச்ச தெரியும்(நண்பன் அமீனுக்கும் தான்). அப்படி இருக்க ஏன் ஆங்கிலத்தை தினிக்க வேண்டும் என்பது தான் சிலருடைய கேள்வி. தென்றல்வீசும் நம் தாய் மொழியிலேயே அழகிய கருத்துக்களை நண்பன் அமீன் போன்றவர்கள் பதியலாமே என்பது பலருடைய கோரிக்கையாகவே நான் பார்க்கிறேன். யாரும் அவரை நீங்கள் தமிழில் மட்டும் தான் எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.

அதிரை வலைத்தளங்களை வாசிப்பவர்கள் அனைவரும் ஆங்கில புலமை உள்ளவர்களாக நிச்சயம் இருக்க முடியாது, அநேகமாக சிலர் மட்டுமே ஆங்கில வார்த்தைகளை வாசிக்க கூடியவர்களாகவும், அதிலும் சிலரே சில கடினமான வார்த்தைகளை புரிந்துக்கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கலாம். எத்தனை பேர், நண்பன் அமீன் போன்றவர்களின் புத்தம் புது vocabular கொண்ட ஆங்கில வார்த்தைகளுக்கு dictionary யில் அர்த்தம் தேடியிருக்கிறார்கள் என்பது சந்தேகமே.

சொல்லப்படும் செய்தி கேட்கக்கூடிய, வாசிக்கக்கூடிய மக்களுக்கு எளிதில் சென்றடைய வேண்டும் என்றால், அந்த மொழியிலே உரையாடுவது சரி என்பது என்னுடைய வலுவான கருத்து.

வெளிநாட்டில் வாழும் நாம், அலுவலக உரையாடல், மின்னஞ்சல் என்று ஆங்கிலத்திற்கு தானே முக்கியத்துவம் கொடுக்கிறோம், அங்கே நாம் நம் தாய்மொழியை பயன்படுத்துவதில்லையே...

நம் மக்கள் ஒன்று கூடும் இடத்தில் தாய் மொழியில் பேசுங்கள், எழுதுங்களேன் என்று வேண்டுகோள் வைப்பது தவறா?

அதற்காக ஆங்கில அறிவு அவசியமில்லை என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. ஆங்கில அறிவு இருந்தால் தான் இந்த போட்டி நிறைந்த உலகில் முன்னேற முடியும் என்ற கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

கருத்தாடல் செய்வது நம்முடைய மொழி திறனை காட்டவா? நம்முடைய கருத்து நிறைய மக்களுக்கு சென்றடையவா? என்பதை இந்த பதிவையும் பின்னூட்டத்தையும் வாசிக்கும் சகோதர சகோதரிகள் தீர்மானிக்கட்டும்.

JAFAR said...

//நம் மக்கள் ஒன்று கூடும் இடத்தில் தாய் மொழியில் பேசுங்கள், எழுதுங்களேன் என்று வேண்டுகோள் வைப்பது தவறா?//

super Mr Thajudeeen

Unknown said...

//அதிரை ஜலால் சொன்னது…

தமிழுக்கு ஆப்பு வைக்கிறாய்ங்க
ஆங்கிலத்தை ஊக்குவிக்கிறாங்க //

Wherever Tamilans are living Tamil is living.

We have our mother tongue in our blood and nerves, and in root of our thoughts, learned enough Tamil upto +2 in Tamil medium(even most starting from LKG, UKG). Beyond that lets grow by learning and using international languages.

Actually we all(expatriates) nowadays join our kids in English medium schools(How about you brother Adirai Jalal?). More happy when our kids call us Daddy, Mommy than Wappa, Umma. Why?.

Thanks and regards,

B. Ahamed Ameen

Shameed said...

தாஜுதீன் சொன்னது…

//கருத்தாடல் செய்வது நம்முடைய மொழி திறனை காட்டவா? நம்முடைய கருத்து நிறைய மக்களுக்கு சென்றடையவா? என்பதை இந்த பதிவையும் பின்னூட்டத்தையும் வாசிக்கும் சகோதர சகோதரிகள் தீர்மானிக்கட்டும்.//

நம்முடைய கருத்து நிறைய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே என் தீர்மானம்

ABU ISMAIL said...

//Hameed சொன்னது…
தாஜுதீன் சொன்னது…

//கருத்தாடல் செய்வது நம்முடைய மொழி திறனை காட்டவா? நம்முடைய கருத்து நிறைய மக்களுக்கு சென்றடையவா? என்பதை இந்த பதிவையும் பின்னூட்டத்தையும் வாசிக்கும் சகோதர சகோதரிகள் தீர்மானிக்கட்டும்.//

நம்முடைய கருத்து நிறைய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே என் தீர்மானம் //

சரியான வாசகம். அது நமக்கு தமிழ் தான்

Unknown said...

தமிழை சாகடித்து ஆங்கிலத்துக்கு வக்காலத்து வாங்குவது ஏன்?
நல்ல தமிழ் தளங்களில் ஆங்கிலத்தை திணிக்காதீர்கள்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Tajudeen,

Our brothers and sisters are using computer and internet technologies to read and write!!!!. Still they prefer Tamil only??? I am wondering man!!!!.

Sure they are comfortable in reading and writing in English too. Both Tamil and English can be used interchangeably if it is taken easy. Just to satisfy our urge of arguments we can debate more endlessly.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

Assalamu Alaikkum

///நம்முடைய கருத்து நிறைய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே என் தீர்மானம்///

Sure my thoughts(even though in English) are reaching(the minds of) 99% readers of our forum who are regular visitors.

I came to know even non-muslim brothers/sisters are also observing our forum.

Brothers and sisters, I request you to write your honest feedbacks please - not for argument's sake.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

Assalamu Alaikkum

//தமிழை சாகடித்து ஆங்கிலத்துக்கு வக்காலத்து வாங்குவது ஏன்?
நல்ல தமிழ் தளங்களில் ஆங்கிலத்தை திணிக்காதீர்கள். //

Actually brothers those who realize the value of English are encouraging English here.

Its already declared here by Mr. Sabeer Abushahrukh that this forum is NOT 100% exclusive Tamil.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Ahamed Ameen சொன்னது…Our brothers and sisters are using computer and internet technologies to read and write!!!!. Still they prefer Tamil only??? I am wondering man!!!!.//

இணையத் தொடர்புள்ள 90% மேல் உள்ள அதிரைவாசிகளின் வீடுகளில் இணையத் தமிழ் வாசிக்கப்படுகிறது என்பதாகவே நான் நம்புகிறேன். இது தவறாகக்கூட இருக்கலாம்...

நிறைய எழுதும் நண்பன் அமீனை அன்போடு தமிழிலும் எழுத, கருத்துரையாட நட்போடு அழைக்கிறேன்.

நண்பன் அமீன்,

உன்னுடைய ஆங்கில அறிவுத்திறனை எண்ணி நிச்சயம் நம் அதிரைவாசிகள் பெருமைபடுவார்களே தவிர, நிச்சயம் 100% யாரும் பொறாமை படமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

தமிழ்மொழி பேசும் தந்தை, தன்னுடைய பிள்ளை தன்னை நம்மூர் வழக்கப்படி வாப்பா அல்லது பிற ஊர் பழக்கப்படி அப்பா என்று அழைப்பதையே விரும்புவார். நிச்சயமாக டாடி என்று அழைப்பதை விரும்பமாட்டார்.

Shameed said...

அதிராம் பட்டினத்தில் ஒரு மீட்டிங் போட்டு அங்கு ஆங்கிலத்தில் பேசினால் கூட்டம் கூடுமா அல்லது அதே இடத்தில் தமிழில் பேசினால் கூட்டம் கூடுமா ? பதில் கொடுங்களேன் கொஞ்சம்

Unknown said...

என் அன்பிற்கினிய நண்பா தாஜுதீன்,

உன் அன்புக்கு நன்றி.

என் ஒரு சில கருத்துக்களை தமிழிலும் பதிந்துள்ளேன்.

ஆங்கிலக் கருத்துக்களை பதிவதில் வேகத்தையும் லாவகத்தையும் உணர்வதால் என் கருத்துக்களை ஆங்கிலத்திலேயே பதிகின்றேன். அதற்கு பல நல் உள்ளங்களிடமிருந்து ஊக்கபடுத்துதலையும் இதயப்பூர்வமான தாகத்துடன் கூடிய வரவேற்பையும் அவதானித்திருக்கிறேன்.

பொதுவாக ஆங்கிலம் புரிந்துகொள்ளப் படக்கூடிய இணைய ஊடகங்களில் ஆங்கிலத்தில் எழுதுவது எவரையும் எதிர்மறையாகப் பாதித்துவிடாது என்பது என் அன்பான நிலைப்பாடு.

வஸ்ஸலாம்

துபையிலிருந்து அஹ்மது அமீன்

Unknown said...

///அதிராம் பட்டினத்தில் ஒரு மீட்டிங் போட்டு அங்கு ஆங்கிலத்தில் பேசினால் கூட்டம் கூடுமா அல்லது அதே இடத்தில் தமிழில் பேசினால் கூட்டம் கூடுமா ? பதில் கொடுங்களேன் கொஞ்சம் //

My reply

பொதுவாக ஆங்கிலம் புரிந்துகொள்ளப் படக்கூடிய இணைய ஊடகங்களில் ஆங்கிலத்தில் எழுதுவது எவரையும் எதிர்மறையாகப் பாதித்துவிடாது என்பது என் அன்பான நிலைப்பாடு.

Unknown said...

///அதிராம் பட்டினத்தில் ஒரு மீட்டிங் போட்டு அங்கு ஆங்கிலத்தில் பேசினால் கூட்டம் கூடுமா அல்லது அதே இடத்தில் தமிழில் பேசினால் கூட்டம் கூடுமா ? பதில் கொடுங்களேன் கொஞ்சம் //

An another reply can be.

Our 98% of readers are from foreign countries. Even if they sit and read now in Adirampattinam, they are on vacation once finished pack up back to their residence country.

Actually we conduct meeting of this kind(discussing the topics) through this AN forum world wide among winning(earning and growing) people.

Thanks and best regards,

Unknown said...

///அதிராம் பட்டினத்தில் ஒரு மீட்டிங் போட்டு அங்கு ஆங்கிலத்தில் பேசினால் கூட்டம் கூடுமா அல்லது அதே இடத்தில் தமிழில் பேசினால் கூட்டம் கூடுமா ? பதில் கொடுங்களேன் கொஞ்சம் //

One more reply..

Actually spreading our thoughts (like send a link of English article in Adirai Nirubar) to large number of people world wide is potentially possible through internet medium, but not possible by Adirampattinam Stage Meeting.

Unknown said...

Yes Adirampattinam Stage Meeting can be broadcasted live or recorded and uploaded in youtube. But again if the medium of instruction is in English and concepts are applicable to general public, then it will reach million audience.

Unknown said...

//இருப்பினும் என் தமிழ் எனக்குச் சோறு போடவில்லை. தமிழ் நாட்டைவிட்டு வெளியே துரத்தியது.//

இது சரியாக தெரிய வில்லை. தமிழை தாழ்த்தி ஆங்கிலத்தை முக்கியத்துவப் படுத்துகிறீர்கள். அப்படியானால் மற்ற மொழிகள் என்னாவது?

அமெரிக்காவில் ஆங்கிலத்தை அடுத்து மொழியாக ஹிந்தியை கொண்டு வர தீவிர ஏற்பாடு நடக்கிறதாம். அதற்காக ஹிந்தியையும் இங்கு தினிக்க முடியாது.

சகோதரர் அமீன் கருத்து 4 பேரை சென்றடைந்தால் பத்தாது. யாவருக்கும் புரியாத மொழியில் பின்னூட்டமிடுவதால் அது ஒரு சிலரையே சென்றடையும். அதன் கருத்து அனைவரையும் எட்டி அதன் பலனை எதிர் பார்க்க முடியாது. அதில் சிறந்த கருத்தாடல் காண முடியாது.

இந்த நம்மூர் தளத்தின் நோக்கம் சொல்லும் கருத்து அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே. அப்படி இருக்க வேற்று மொழியில் கருத்திடுவதால் ஒரு பலனும் இல்லை. என்பதை வாதிடுவர்கள் சிந்திக்க வேண்டும்.

Unknown said...


பொதுவான கருத்து

எங்கிருந்தாலும்... அறிவார்ந்த மக்கள் கூடிச் செய்யும் அறிவுப் புரட்சி சமூகப்புரட்சிக்கு வித்து.

Unknown said...

Assalamu alaikkum

Ahamed Ameen சொன்னது…

" And even the blog or website forums are in a particular language only(eg. Tamil), producing contents in English would target international audience. "

what do you mean by international audience? are you trying to say international readers???

OK let's call it as international readers,Bro Ameen you need to understand AN is a blog which belongs to adiraiaties,(if i'm not mistaken) see people from adirai known for Tamil not an English people,hope you are clear with that.

and i can see you keep saying that readers are mostly living from foreign countries, of course i have no doubt on that but you must understand, even though they spread ed every where still we are from Adirai where people speaks Tamil as their language.

Moreover AN brings news and articles around adirai and surroundings and i can't see an international reader to visit adirai nirubar unless the person is from adirai .hope you got my next point

I really enjoying to read your comment but you can't expect as every one will do.

If someone living in Australia or America it doesn't mean that he/she would know English well enough to read and reply your comments,

Finally please don't expect an international reader to visit and reply our adirai news from AN or other blogs,

I'd love to remind you if AN hits 1000 viewer a day that 999 would be our Tamil readers may be 1 out of 1000 may be an English even that would be a mistake :D

I don't like to be a rubber stamp,

so i'll just say wassalam for now

Unknown said...

//இருப்பினும் என் தமிழ் எனக்குச் சோறு போடவில்லை. தமிழ் நாட்டைவிட்டு வெளியே துரத்தியது.//

இது சரியாக தெரிய வில்லை. தமிழை தாழ்த்தி ஆங்கிலத்தை முக்கியத்துவப் படுத்துகிறீர்கள். அப்படியானால் மற்ற மொழிகள் என்னாவது//

பிழைக்கப் போகும் வெளி நாடுகளில் ஆங்கில மொழிக்கு இணையாக வேறொரு மொழி நமக்குக் கை கொடுத்தால் அதனைக் கற்றுக் கொள்வதையும் அன்றாடம் புழக்கத்தில் பயிற்சி செய்பவரையும் நிச்சயம் புத்திசாலி என்று அழைக்கலாம்.

//அப்படி இருக்க வேற்று மொழியில் கருத்திடுவதால் ஒரு பலனும் இல்லை. என்பதை வாதிடுவர்கள் சிந்திக்க வேண்டும். //

We are not seeing English is a far remotely foreign language to Tamil people, English is already intermingled in our daily lives of families and businesses.

Your point of view of 'commenting in English is useless' might be wrong brother. Because majority of feedbacks as comments here and through direct phone calls to me and appreciations prove that its very much useful.

Thanks and best regards

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

According to brother Mr. Canada Kader, AdiraiNirubar blog can not be an English featured ones because of the target readers are based on Adirampattinam only whose mother tongue is Tamil, and more readers are not able to grasp Engilsh featured comments and articles(a fraction of such things disrupts the readers).

I would like to request any one of editorial team of AN to clariy your(AN) point of view please.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

Ahamed Ameen சொன்னது…

Our brothers and sisters are using computer and internet technologies to read and write!!!!. Still they prefer Tamil only??? I am wondering man!!!!.

Nothing to be wonder my bro,

Because people here looking at every one points of view but you just looking at your point of view, so don't be wondered.

Ahamed Ameen சொன்னது...

"Because majority of feedback's as comments here and through direct phone calls to me and appreciations prove that its very much useful."

What they don't have any other web page where they can find it useful to grow their knowledge ?

what kind of people are they ? one who just rely on AN and your comments to think that to be useful?

are they really mean it or making fun of you?


Unknown said...

Ahamed Ameen சொன்னது…

"According to brother Mr. Canada Kader, AdiraiNirubar blog can not be an English featured ones"

Bro Ameen read my previous comment,

I've never said so,read again please

well it can be but when it comes to comments it would be good to have in Tamil where every one can understand, that's what i meant

regards

Unknown said...

Ahamed Ameen சொன்னது…

"Our 98% of readers are from foreign countries"

you mean foreigners or adiraiaties (or may be you can say Tamil speaking peoples)living in foreign countries?

regards.

Unknown said...
This comment has been removed by the author.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

لقد أخبرنا الله سبحانه وتعالى أن ملائكته تسلم على الصابرين في الجنة بصبرهم كما قال الله تعالى في كتابه العزيز: “وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ . سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ ” (الرعد 22 – 24)، وقال تعالى في جزاء من صبروا: ” وَجَزَاهُم بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيراً ” (الإنسان: 12)، وقال تعالى: ” أُوْلَئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَاماً* خَالِدِينَ فِيهَا حَسُنَتْ مُسْتَقَرًّا وَمُقَامً

Unknown said...

இதென்ன புது கூத்து ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

वैसे नोकिया की ओर से कहा गया है कि लूमिया 925 के मुताबिक ये फ़ोन तकनीकी चीजों को पसंद करने वाले लोगों को ध्यान में रखकर उतारा है.

4.5 इंच के डिस्पले स्क्रीन के चलते यह एपल के आईफ़ोन 5 से बेहतर भी बताया जा रहा है.

इसके अलावा जानकारों की राय ये भी है कि नोकिया को इस फ़ोन को कुछ और रंगों में उपलब्ध कराना चाहिए. ये फ़िलहाल ब्लैक, सिल्वर और व्हाइट कलर में भी उपलब्ध होगा.

हालांकि शुरुआती आकलन ये बता रहा है कि लूमिया 925 सबसे स्लिक फ़ोन है. लेकिन क्या इसका जादू चल पाएगा.

(क्लिक करें बीबीसी हिन्दी एंड्रॉएड ऐप के लिए यहां क्लिक करें. आप हमें क्लिक करें फ़ेसबुक और क्लिक करें ट्विटर पर भी फ़ॉलो भी कर सकते हैं.)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் அமீனே தமிழில் கருத்திட்டதால் நானும் வேகத்தை குறைத்துவிட்டேன்.
இந்த தலத்தில் நம்ம மொழியின் முக்கியத்துவத்தை அனேகமாக முதன்முதலாக நான் கருத்திட்டதை வைத்து என் கருத்து பற்றி மீண்டும் வரைய அவசியம் இல்லை. எல்லாரும் அறிவீர்கள்.
இங்கே நாம் பேசுவது இந்த தலத்தில் கருத்திடுவது பற்றி தான்.
ஆங்கிலத்தில் கருத்திடுவதால் மற்றவர்கள் ஆங்கிலத்தை கற்று விட முடியாது.
அவரவர் பணி புரியும் நாடு, சூழ்நிலைக்கேற்ப மொழி வேறுபடும். அந்த மொழியே அங்கு முக்கியம்.
நம்ம மொழியில் இந்த தமிழ் எழுத்துருக்களை உருவாக்க எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள். ஆனால் நாமே இங்லீசில் கமென்டு போட்டு தமிழை மறக்கடிக்கிறோம். நம்மள மாதிரி சந்ததி உருவாகி இங்லீஸ் மோகமாகி தமிழை வெறுக்கும் காலம் வரும் என்று நினைத்திருந்தால் மர்ஹூம் உமர்தம்பி காக்கா தமிழ் யூனிக்கோடை உருவாக்கியே இருக்க மாட்டார்கள்.
மீண்டும் என் கருத்துப்படி தொழிலுக்கேற்றபடி மொழியில் கில்லாடியாக இருக்க வேண்டும். ஆனால் இங்கல்ல. இங்லீசில் கருத்திடுவதால் மொழி வளராது. பிடிக்காதவர்களுக்கு வெறுப்பே வளரும்.

எங்க பாஸு (ஆங்கில சிட்டிசன்) சொன்ன மொழிக் கொள்கை
----------------------------------------------------------
முதலில் தமிழ் (தாய் மொழி|)
அடுத்து அரபி (வணக்கத்திற்கு)
மூன்றாவது ஆங்கிலம்/அல்லது தேவையான பணிக்கான மொழி.(சோறு போட)
-----------------------------------------------------------------
ரஜப் பிறை 5 /1434

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோ. கனடா காதர், மன்னிக்கவும்,
தமிழின் முக்கியத்துவத்தை இங்கு சொல்லி விட்டு சகோ. அமீனுடன் ஆங்கிலத்தில் கலந்தாடுவது சரியல்ல. பேச்சில், எழுத்தில் சுத்தம் தேவை.

Canada. Maan. A. Shaikh said...




எந்த மொழி உங்கள் வழி !? - விவாதக்களம்! சகோதரர் M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னவை போல இங்கு கருத்திட மாற்று மொழி அவசியமில்லை என்பது எனது கருத்து, ஆங்கிலம் என்பது ஒரு மொழியே தவிர அது அறிவை சார்ந்தது அல்ல.


தயவு செய்து இங்கு கருத்திட்ட அணைத்து சகோதரர்களும் மீண்டும் ஒருமுறை படிக்கவும் .....................
அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் அமீனே தமிழில் கருத்திட்டதால் நானும் வேகத்தை குறைத்துவிட்டேன்.
இந்த தலத்தில் நம்ம மொழியின் முக்கியத்துவத்தை அனேகமாக முதன்முதலாக நான் கருத்திட்டதை வைத்து என் கருத்து பற்றி மீண்டும் வரைய அவசியம் இல்லை. எல்லாரும் அறிவீர்கள்.
இங்கே நாம் பேசுவது இந்த தலத்தில் கருத்திடுவது பற்றி தான்.
ஆங்கிலத்தில் கருத்திடுவதால் மற்றவர்கள் ஆங்கிலத்தை கற்று விட முடியாது.
அவரவர் பணி புரியும் நாடு, சூழ்நிலைக்கேற்ப மொழி வேறுபடும். அந்த மொழியே அங்கு முக்கியம்.
நம்ம மொழியில் இந்த தமிழ் எழுத்துருக்களை உருவாக்க எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள். ஆனால் நாமே இங்லீசில் கமென்டு போட்டு தமிழை மறக்கடிக்கிறோம். நம்மள மாதிரி சந்ததி உருவாகி இங்லீஸ் மோகமாகி தமிழை வெறுக்கும் காலம் வரும் என்று நினைத்திருந்தால் மர்ஹூம் உமர்தம்பி காக்கா தமிழ் யூனிக்கோடை உருவாக்கியே இருக்க மாட்டார்கள்.
மீண்டும் என் கருத்துப்படி தொழிலுக்கேற்றபடி மொழியில் கில்லாடியாக இருக்க வேண்டும். ஆனால் இங்கல்ல. இங்லீசில் கருத்திடுவதால் மொழி வளராது. பிடிக்காதவர்களுக்கு வெறுப்பே வளரும்.

எங்க பாஸு (ஆங்கில சிட்டிசன்) சொன்ன மொழிக் கொள்கை
----------------------------------------------------------
முதலில் தமிழ் (தாய் மொழி|)
அடுத்து அரபி (வணக்கத்திற்கு)
மூன்றாவது ஆங்கிலம்/அல்லது தேவையான பணிக்கான மொழி.(சோறு போட)

ZAKIR HUSSAIN said...

பாஸ்...ஏதோ மொழி சோறு போடுது சோறு போடுதுனு சொல்றாங்களே "அது" எந்த மெஸ்லெ வேலை பார்க்குது பாஸ்???

Canada. Maan. A. Shaikh said...


இங்கு பதிவு செய்த கருத்துகளில் நான்
ரசித்தவை!!!


பாஸ்...ஏதோ மொழி சோறு போடுது சோறு போடுதுனு சொல்றாங்களே "அது" எந்த மெஸ்லெ வேலை பார்க்குது பாஸ்???


வாழ்த்துக்கள் சகோ.........


Canada. Maan. A. Shaikh said...

Actually Apple iPhone, iPads and major computer company assemblies all assembled in china for economic reasons. Actually chinese are good at making duplicates - no originality in their chinese language thinking. If the language is not assisting in orginality in thinking and making then its not advantageous language

அமீன் காக்கா,

ஒரிஜினல் டூப்ளிக்கேட் அல்ல விவாதம் இங்கு (AN) ஆங்கிலத்தில் கருத்து பதிவு செய்வது அவசியமா?

உங்கள் விவாத (மேலே குறிப்பிட்ட) படி மொழி அவசியம் அல்ல வாழ்க்கைக்கு சரியா?

Unknown said...

السلام عليكم ورحمة الله وبركاته
ايها الاخوة من اديري. والله يهديكم ويصلحكم

அன்புக்குரிய சகோதரர்களுக்கு.

என்னைப் பொறுத்த வரை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதும், அரபியிலும் மற்ற மொழிகளிலும் தட்டச்சு செய்வதும் தமிழில் தட்டச்சு செய்வதைக் காட்டிலும் 80 சதவீதம் வேகமாக செய்ய முடியும். இருந்தாலும் அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் இங்கே தமிழில் தட்டச்சு செய்வதற்கு காரணம் இதனைப் படிப்பவர்களில் 100% சதவீதம் பேரை அடைய வேண்டும் என்ற எண்ணம் தான்.

நான் சமீபத்தில் ஊர் சென்றிருந்தபோது பார்த்ததையும் கேட்டதையும் வைத்து சொல்கிறேன்: 90% சதவீதம் பேர் பெண்கள், வயதானவர்கள், கொள்ளுப்பேரன்கள் எடுத்த வயதான அப்பாமார்கள் உட்பட தமிழில் இந்த தளத்தை வாசிப்பதையே விரும்புகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதும் ஒரு காரணம்.

எந்த மொழியும் மற்றொரு மொழியைக் காட்டிலும் ஒரு சிறிதும் உயர்ந்ததல்ல. பல ஆங்கிலேயர்களையும் பிரான்சு நாட்டினரையும் அவர்கள் இஸ்லாத்தை தழுவிய பின்னர் அரபி கற்று தேர்ந்த உடன் நாம் பேசியபோது அவர்கள் ஒப்புக் கொண்ட விசயத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

" அரபியைப் போன்று உள்ளங்களில் உணரக்கூடிய, உள்ளங்களில் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய (spiritual language)மொழியாக எங்களுடைய மேல்நாட்டு மொழி இல்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்."

ஒரு சின்ன கருத்து: உம்மா , வாப்பா என்று அழைப்பதை விட டாடி , மம்மி என்று அழைப்பதை விரும்புபவர்கள் கொஞ்சம் வசதி வாய்ப்புகள் வந்துவிட்டால் மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி தோலை வெள்ளைக்காரர்கள் மாதிரி மாற்றவும் தயங்க மாட்டார்களோ?

اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علماآمين

அல்லாஹும்ம எங்களுக்கு எது ஈருலகத்திலும் பலன் தருமோ அதையே எங்களுக்கு கற்றுத் தருவாயாக, எதனைக் கற்றுத் தந்தாயோ அதனைக்கொண்டு பலன் தருவாயாக, இன்னும் எங்களுக்கு நல்லறிவை அதிகமாக்குவாயாக ஆமீன்.


கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

மொழி சம்பத்தப்பட்ட இந்த விவாதக்களம் பரபரப்பா போய்க்கொண்டிருக்கு, கருத்துகளும் படுசூடாக வந்து விழுந்து கொண்டிருக்கு. விவாதத்தை ஏற்படுத்தியவருக்கு நன்றிகள் பல.

அடுத்த விவாதம் எதைப்பற்றியது?

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Unknown said...

ஆங்கிலம் என்பது ஒரு மொழியே தவிர அது அறிவை சார்ந்தது அல்ல.
இதில் நான் வேறுபடுகிறேன்.

ஆங்கிலம் என்பது ஒரு மொழி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது அறிவைச்சார்ந்தது அல்ல என்பது தவறு. ஏனனில், அதை தாய் மொழியாகக்கொண்டவனுக்கு அறிவைச்சார்ந்த்தது அல்ல என்று சொல்லலாம் அது வழி வழியாக வருவது இயற்கையிலே அவனுல் அமைந்த்தது. ஆனால் நமக்கு அது வேற்று மொழி என்பதால். "A " என்ற சொல்லை கற்கும்போதே அது நமக்கு ஆங்கில அறிவின் முதல் பாடம். ஆங்கிலத்தில் கருத்தாடல் செய்யும் ஒருவரை புரியாத மொழியில் செய்யாதீர்கள் என்று கட்டாயப்படுத்துவது தவறு. ஆனால் கருத்தாடல் செய்யும் அவர் , நாம் கருத்தாடல் செய்யும் இந்த விவாதக்களம் நம் கருத்து இதை படிக்கும் அனைவரையும் சென்றடையுமா என்பதை அறிவோடு யோசித்து, இக்களம் நம் ஆங்கிலப்புலமையைக்கட்டும் களமா அல்லது நம் கருத்துக்கள் நாலு பேரை சென்றடைய வேணும் என்ற நம் எண்ணம் நிறைவேறுமா? என்று சிந்த்திக்க வேணும். இதை அவர்தான் முடிவு செய்ய வேணும். இதில் மற்றவர் தலையிடுவது ஆங்கிலத்தில் கருத்தாடல் செய்யும் ஒருவரின் உரிமையில் மூக்கை நுழைப்பதாகும். இதில் எனக்கு உடன்பாடு அறவே இல்லை.

இருப்பினும் ஒருவர் சகோதரர் அமீனின் ஏதோ ஒரு கருத்துக்கு மாறு படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஆங்கில மொழி கருத்தாடல் அறிவு அறவே இல்லை என்றும் வைத்துக்கொள்வோம். இப்பொழுது தன் மாற்றுக்கருத்தை அவர் பதிய வேணுமென்றால் அது அமீனைச்சென்றடைய வேணுமென்றால் இவர் வேறு ஒருவரின் உதவியைத்தான் நாட வேணும். அதற்க்கு வாய்ப்பு இல்லாத போது மாற்றுக்கருத்து சொல்ல வந்த வருக்கு ஆங்கிலத்தில் வராத அந்த கருத்தை அப்படியே எந்த கருத்தும் சொல்லாமல் விட வேண்டி வரும். இது விவாதக்களத்திற்கு அழகல்ல , இதையும் ஆங்கிலத்தில் கருத்தாடல் செய்பவர்தான் யோசிக்கணும். நீ இதை செய்துதான் ஆகவேணும் என்று கட்டாயப்படுத்துவதை எதிர்க்கிறேன்.

அபு ஆசிப்.




Unknown said...

//Abdul Khadir Khadir சொன்னது…
இருப்பினும் ஒருவர் சகோதரர் அமீனின் ஏதோ ஒரு கருத்துக்கு மாறு படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஆங்கில மொழி கருத்தாடல் அறிவு அறவே இல்லை என்றும் வைத்துக்கொள்வோம். இப்பொழுது தன் மாற்றுக்கருத்தை அவர் பதிய வேணுமென்றால் அது அமீனைச்சென்றடைய வேணுமென்றால் இவர் வேறு ஒருவரின் உதவியைத்தான் நாட வேணும். அதற்க்கு வாய்ப்பு இல்லாத போது மாற்றுக்கருத்து சொல்ல வந்த வருக்கு ஆங்கிலத்தில் வராத அந்த கருத்தை அப்படியே எந்த கருத்தும் சொல்லாமல் விட வேண்டி வரும். இது விவாதக்களத்திற்கு அழகல்ல , இதையும் ஆங்கிலத்தில் கருத்தாடல் செய்பவர்தான் யோசிக்கணும். நீ இதை செய்துதான் ஆகவேணும் என்று கட்டாயப்படுத்துவதை எதிர்க்கிறேன்.

அபு ஆசிப்.//

பல நேரங்களில் அப்படி ஒரு மாற்றுக் கருத்து ஆங்கிலத்தில் பதியப் பட்டதையே சிலர் அறியாத நிலையும் உள்ளது. சில நேரங்களில் அவருக்கு பதில் சொல்பவர்கள் தாங்கள் தமிழில் செய்வதுடன் அவருடைய கருத்தையும் மொழி பெயர்ப்பு செய்யும் கட்டாய சூழலுக்கு உள்ளாக்கப் படுகிறார்.

adiraimansoor said...

பாகம் 1
அஸ்ஸலாமு அலைக்கும்
எத்தனையோ முறைகள் தமிழில் பின்னூட்டமிட சொல்லி நிறைய பேர் பேசி இருந்தாலும் தற்போது நான் பிரச்சனையை கிளறிவிட்டதுபோல் எனக்கு தோன்றுகின்றது. சகோதரர்களில் பெரும்பாலோர் ஆங்கிலத்தின் அவசியம் பற்றி எழுதி இருந்தார்கள். அவர்களின் கருத்துக்களில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை என்றாலும் சொந்த மொழியில் எழுதும் பின்னூட்டங்களில் உண்மயிலேயே ஒரு உயிரோட்டமிருப்பதை எல்லோராலும் மறுக்க முடியாது. சொல்லவரும் செய்திகளையும் சம்பவங்களையும். சுவராசியமாக அழுத்தம் திருத்தமாக எல்லோருடைய மனதில் பதியும்விதமாக அனைவராலும் ஆங்கிலத்தில் சொல்லிவிடமுடியாது. அமீன் போன்ற சகோதரர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தாலும் அமீன் உபயோகிக்கும் வார்த்தைகளில் உள்ள நெளிவு சுளிவுகளையும் மறைமுகமாக கையாளப்பட்டிருக்கும் வார்த்தை ஜாலங்களையும் எல்லோராலும் உணர்ந்து கொள்ள முடியாது. சென்னைபட்டினத்திற்கும், இரோப், அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு வாக்கப்பட்டவர்களுக்கு வேண்டுமானால் ஆங்கிலத்தின் வார்த்தை ஜாலங்களில் உள்ள நெளிவு சுளிவுகள் புரியலாம். அரபு நடுகளுக்கு வாக்கபட்டு வந்திருப்பவர்களில் ஒரு சில பேர்கள்கூட புரிந்து அதற்கு தகுந்தார்போல் பின்னூட்டமில்லாம். ஆனால் ஆங்கிலம் ஓரளவு படிக்கத் தெரிந்தாலும் அதனுள் கையாளப்பட்டிருக்கும் வார்த்தை ஜாலம் புரியாத சுப்பனுக்கும் குப்பனுக்கும் சொல்லவரும் கருத்துக்கள் எப்படி போய் சேரும். கருத்துக்கள் சரியான படி போய் சேர்ந்தால்தான். அதற்கு மறு பின்னோட்டமும் வரும். ஒவ்வொருத்தர்களிடமும் மனதிற்குள் எவ்வளவோ விஷயங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள சகோதரர்களால் இனையதளத்தை தமிழிலேயே தந்துள்ளார்கள் கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை சரளமாக பயன்படுத்திகொள்ள மொழி ஒரு தடையாக இருக்ககூடாது என்பதுதான் என்னுடைய கருத்தே தவிற நான் மாற்று மொழி கற்பதற்கு தடையாக இருப்பவனல்ல, அவரவர்கள் தேவக்கு ஏற்றதுபோல் கற்றுக் கொள்ளவேண்டியதுதான். அதற்காக ஆங்கிலம் கற்றுக்கொள்ள எத்தனயோ இனைய தளங்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தை கற்க, புலமைபெற விரும்பியவர்கள் அந்த இனையதளங்களை பயன் படுத்தி பயன் அடையலாமே. தாய் மொழி இணையத்தில் ஏன் மாற்று மொழியை தினிக்க முற்படுகின்றீர்கள்.
ஏன் நமதூரில் புகழ் பெற்ற மார்க்க அறிஞர் ஒருவர் இஸ்லாத்தின் அதன் தூய வடிவத்தை தூய தமிழ் எடுத்துறைத்து அதன் மூலமாக எண்ணிலடங்கா ஆண்களும் சரி பெண்களும் சரி எத்துனையோ சகோதரர்கள் ஈடேற்றம் பெற்றிருப்பதை யாரும் மறுக்க முடியாது.
(தொடர்கின்றது

adiraimansoor said...

பாகம் 2
அதே சமையம் நமதூரில் (நமதூரில் என்பதை நன்றாக கவணிக்க வேண்டும்) இந்த மார்க்க அறிஞர் ஆங்கிலத்தில் நான் புலமை பெற்றவன் என்று ஆங்கிலத்தில் போஅதனை புரிந்தால் அந்த போதனை எத்தனை பேருக்கு போய் சேறும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். தமிழில் சொல்வதால் அதை கேட்கும்போதே உள்ளத்தை ஊடுருவிச் சென்று ஒரு பயத்தை ஏற்படுத்தி அந்த பயத்தின் மூலமாக உயிரோட்டத்தை உண்டாக்குகின்றது. அந்த உயிர்ரோட்டம்தான் தேவை. நான் நமதூரைக் கரணமாக காட்டியது அதிரையச் சேர்ந்த நிருபர் (அதிரை நிருபர்) என்று பெயர் சூட்டப்பட்டு, அதிரைநிருபராலும், அதிரை சகோதரர்களின் பங்களிப்பாலும் மிளிரும் இந்த தளம் பேரும்பாலும் அதிரை மக்கள்கள் வரக்கூடியதாகவும்,முழுக்க முழுக்க அதிரையர்களின் பயன்பாட்டில் இருப்பதினாலும் நான் அதிரைய குறிப்பிட்டது இதன் பயன்களை அள்ளி பருகும், பருக நினைக்கும் எங்களை மாற்று மொழியைத் தினித்து பயன்களை கெடுத்துவிடவேண்டாம். ஆங்கிலம் கற்றுக்கொள்ள அக்கரை காட்டுபவர்கள் இந்த தளத்தில் வரும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் பதிந்து பாருங்களேன். அப்பொழுது தெரியும் பயனாளிகள் எத்தனை பேர் என்று. இந்த தளம் அறிவை பகிரவா? அல்லது மொழியை பகிரவா? ஓட்டெடுப்பு நடத்திப்பாருங்கள் பயனாளிகளின் பயன் தெரிந்துவிடும். அறிவை தமிழிலும் தரலாம் ஆங்கிலத்திளேயும் தரலாம். எந்த மொழியில் தந்தால் பயனாளிகளுக்கு அதிக பயன் கிடைக்கும் என்பதை உணரவேண்டும். சும்மா நான் அப்படி படித்திருக்கின்றேன் இப்படி படித்திருக்கின்றேன். நான் ரொபெட்டிக் பெர்சன் தமிழ் ஆர்ட்டிஸ்ட்டைவிட மிக உயர்ந்தவன் என்று சும்மா ப்லிம் காட்டக்கூடாது ஏன் ஆங்கிலத்தை வளர்க்க நினைப்பவர்கள் முதலில் சொந்த குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கட்டும். ஊருக்கு வெகேஷன் வரும்போது வீட்டில் உள்ளவர்களிடம் தமிழை கொஞ்சம்கூட உபயோகிக் காமல் ஆங்கில புலமையை அங்கே காட்டட்டும். அப்பொழுது தெரியும் பீட் பேக் என்னவென்று. என்னடா துபைக்கு ஒழுங்காத்தானடா போனான் இவனுக்கு என்னடா ஆச்சு நல்ல டாக்டரைப்பார்த்து காட்டுங்கள் என்று அக்கம் பக்கமெல்லாம் பேச ஆர்ம்பிக்கும்போது தெரியும் ஆங்கிலத்தின் புலமை என்னவென்று
ஆங்கில மொழி தெரிந்துவிட்டால் ரொம்ப விவரம் தெரிந்தவர்கள் என்று நினக்கின்றீர்களா? அப்படி நினைத்தால் அது முற்றிலும் முட்டால்தனமான வாதம். ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்களிமும் முட்டால்கள் நிறையபேர் இருக்கின்றார்கள் என்பது புலப்படவில்லையா? மொழியால் யாரும் உயர்ந்தவர்கள் அல்ல என்பதை நினவூட்டுகின்றேன்.
சகோதரர் தாஜுதீன் கூறுவதுபோல "பொதுவில் கருத்தாடும் போது எல்லோருக்கும் புரியும்படியான மொழியில் கருத்தாட வேண்டும்”. கருத்துக்கள் எல்லொருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்க்காத்தான் இவ்வளவு போராடுகின்றேன். நான் அதிரைநிருபர் பற்றி தெரியாமல்தான் இருந்தேன். எனது நண்பர்களின் தூண்டுதல் பேரில் அதிரைநிருபருக்குள் நுழைந்து பார்த்த பிறகுதான் தெரிந்தது இவ்வளவு காலங்கள் அதிரை நிருபற்றி எனக்கு தெரியாமல் இருந்தது குறித்து கைசேதப்பட்டேன்.
மொழியை கற்றுக்கொள்ள நினைக்கும் சகோதரர்கள் மாற்றுவழியை தேர்ந்தெடுக்கவும். ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் இனி ஆங்கிலம் கற்றுக்கொள்ள அவசியமில்லை (ஏற்கனவே புலமை வாய்ந்தவர்க ளா யிற்றே) ஆனபடியால் உங்கள் பின்னூட்டங்களை தமிழிலே தந்து எங்களைப் போன்றவர்களுக்கு உதவிடுவீர் என்று எதிர் பார்க்கின்றேன். நான் ஆங்கிலம் படித்திருக்கின்றேன் ஆங்கிலத்தில்தான் என் புலமையை காட்டுவேன் என்றால், நல்ல செவரா பார்த்து போய் மோதிக்கொள்ள வேண்டியதுதான். மற்றவர்களின் மொழி வளர்ச்சியைப்பற்றி நீங்கள் கவலைபட்டீர்களேயானால் தனியாக ஒரு வெப்சைட் ஆரம்பித்து தங்களது ஆங்கில பசியை தீர்த்துகொள்ளுங்கள். அப்பொழுது தெரிந்து கொள்ளலாம் ஆங்கில பயனாளிகள் எத்துனை பேர் என்று. அல்லது சில பேருடைய கருத்துப்படி கூகுல் மாமாவிடம் கேட்பதைவிட கூகுல் அம்மாவிடம் கேட்டால் மாமாவைவிட அம்மா நன்றாக அக்கரையுடன் கவணித்துக்கொள்ளுவாள் விரும்பியவர்கள் சென்று தங்களது தாகத்தை தீர்த்துக்கொள்ளலாம்.
தலையங்கத்தின் முக்கிய அம்சமே விவாதக்களம்தான் கருத்தை கருத்தாக எடுக்கவேண்டுமே தவிற யாரும் கோபமாக எடுக்ககூடாது என்பதை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அதிரைமன்சூர்
ரியாத்

Canada. Maan. A. Shaikh said...

I hope, everyone know about english to speak or write, but herein nobody like to write comments as english unless ameen kaakkaa, May be i'm right?

Ebrahim Ansari said...

//பாஸ்...ஏதோ மொழி சோறு போடுது சோறு போடுதுனு சொல்றாங்களே "அது" எந்த மெஸ்லெ வேலை பார்க்குது பாஸ்???//

என்னைப் பொருத்தவரை நகைச்சுவையும் ஒரு நல்ல மொழி அது ஜாகிர் இடமிருந்து வரும்போது சுவைக்கு சுவை கூடும்.

இன்னும் விவாதங்களை கவனிப்போம். இளைய சமுதாயம் விவாதிக்கும் விவாதக்களம் சூடு மாறாத சுவை. விவாதக்களம் அமர்க்களம்.

Canada. Maan. A. Shaikh said...

காக்கா
(இப்ராகிம் அன்சாரி) அவர்களே இந்த கருத்து பதிவு செஞ்சுரி அடிக்கும்............ஆனால் வெற்றியை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்வோம்.

Ebrahim Ansari said...

//ஆனால் வெற்றியை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்வோம்.//

தம்பி கனடா மான் ஏ. ஷேக் . அன்பான நல்ல எண்ணம் . அவ்வாறே ஆகட்டும்.

sabeer.abushahruk said...

ஜாயிரு,
அந்த மைக்கை, மன்னிக்கவும் ஒலிவாங்கியைக் கொஞ்சம் பிடுங்கி என்னிடம் கொடேன்.  நாம தூங்கிக்கிட்டு இருக்கும்போது வெள்ளக்கார தேசத்து ஆட்கள் ரொம்பத்தான் பேசிப்போட்டு போய்ட்டாக.
இந்த விவாதக்களத்தின் பேசுபொருளானது: “அதிரை நிருபர் தளத்தில் தமிழில் “மட்டும்”தான் கருத்திட வேண்டுமா? “ஆங்கிலத்தில்” இடக் கூடாதா என்பது மட்டுமே. இது தொடர்பான கருத்துகளுக்கு பதில் தந்து விடுகிறேன்.  நேரம் வாய்த்தால் மற்ற இங்கிலீஷா தமிழா அரபியா போன்ற வெளி விவகாரத்தைப் பற்றியும் பேசுவோம்.
 
என் தரப்பு வாதத்தை என் நண்பன் அபு ஆசிஃப் (காதர்) இலகுவாக்கியிருக்கிறான். சகோ அமீனை, “ஆங்கிலத்தில் கருத்திடாதே” என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. ஏன், பொதுவில் வந்துவிட்ட இந்தத் தளத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்குக்கூட அந்த உரிமை இல்லை.  (அவ்வாறு இடப்படும் ஆங்கிலக் கருத்துகளை நீக்கும் உரிமை வேண்டுமானால் அ.நி.க்கு இருக்கலாம். இடாதே என்று சொல்ல யாருக்கும் உரிமை யில்லை.)  அவரவர் எழுதும் கருத்து யாருக்குப் போய்ச் சேரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கருத்திடுபவருக்கே இருக்கிறது.  ஆங்கிலம் அறியாதோரால் அவர் கருத்துகளை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்கு அவர் பொருப்பாக மாட்டார். ஆனால், ஆங்கிலத்தில் கருத்திடாதே என்பது அதிகப்பிரசங்கித்தனம், வரம்பு மீரல், அடுத்தவர் உரிமையில் தலையிடல்; இதை ஏற்க முடியாது.
 
இங்கு மட்டுமல்ல, சத்தியமார்க்கம் டாட் காம், திண்ணை டாட் காம் போன்ற தமிழைப் பதிவு மொழியாகக் கொண்ட பல பிரபல்யமான தளங்களில்கூட ஆங்கிலத்தில் கருத்திட தடை இல்லை.  காரணம், அங்கெல்லாம் கருத்துக்குத்தான் முக்கியத்துவமே தவிர பிரயோகிக்கும் மொழிக்கல்ல.  கருத்திடுபவரும் தன் கருத்து ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு மட்டும் போய்ச் சேர்ந்தால் போதும் என்னும் மனப்பான்மையில்தான் இருக்கிறார்கள்.  காரணம், அவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதுவதுதான் இலகுவாகவும் லாவகமாகவும் வருகிறது.  அப்படிப்பட்ட கருத்துகளை அறிந்துகொள்ள விழையும் வாசகர் அமீனின் கடின வார்த்தைகளை புரிந்துகொள்ள அகராதியை நாடுகிறார் என்றால் அது பின்னடைவல்ல; மாறாக அது அமீனுக்கு வெற்றி. தன்னால் தன் இனத்தவன் ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை அரிந்துகொள்ள  முனைகிறானே என்று மன திருப்தியைத்தான் தரும்.
 
காதர் (அபு ஆசிஃப்) சொல்வதுபோல் மொழியும் ஓர் அறிவுதான்.  மொழியைக்கொண்டே ஏனைய அறிவு எட்டப்படும். மொழி வழியாகவே அறிவு விருத்தியாகும். இல்லையேல் சிக்கிமுக்கிக் கற்களும், சில்லறை ஓலங்களும் சிற்றாடையாய் இலகளுமே அறிவாக வாய்க்கப்பெறும்.
 
நிறைவாக, பிறர் உரிமையில் தலையிடாதீர்கள். உங்களுக்கு இலகுவான மொழியிலேயே கருத்தாடுங்கள்.
 
(நேரம் வாய்த்தால் பேசுபொருளின் வெளிச்சுற்றில் நிலவும் சகோதரர்களின் வாதங்களுக்கும் பதில் தேடுவோம்)

Ebrahim Ansari said...

இன்றைய சூழ்நிலையில் ஆங்கிலம் கலக்காமல் எதயும் பேசவோ எழுதவோ முடியவில்லை.

ஐயா பேருந்து எத்தனை மணிக்கு வரும் என்று ஒருவரிடம் கேட்டால் என்ன இவன் உளறுகிறான் என்று நினைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நல்ல தமிழில் பஸ் எப்போ வரும் என்று கேட்க வேண்டியதுதானே குறைந்தா போய்விடுவான் என்று கேட்கிறார்கள். அந்த அளவு ஆங்கிலத்தின் ஆதிக்கம் வேரூன்றிவிட்ட நிலைகள்.

தமிழ்த் தொலைக் காட்சிகளில் வெட்கங்கேட்டுப் போய் இப்போது ஒரு போட்டி வைக்கிறார்கள். அதாவது ஆங்கில சமஸ்கிருத கலப்பு இல்லாமல் ஐந்து நிமிடம் தமிழில் தொடர்ந்து பேச வேண்டும். இந்தப் போட்டியில் பெரும்பாலானோர் தோல்வியே அடைகிறார்கள். நம்மால் ஐந்து நிமிடம் தமிழ் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி தூய தமிழில் பேச முடியவில்லை. ஐந்து வரிகள் எழுத முடியவில்லை.

ஆங்கிலத்தில் சிறப்பு என்று கூறப போனால் பிற மொழிகளில் உள்ள வார்த்தைகளையும் ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டு அவற்றையும் தன் மொழியாக ஆக்கிக் கொள்ளும். உதாரணமாக கட்டுமரம் என்கிற தமிழ் வார்த்தையை CATAMARAN என்று ஆங்கிலம் ஏற்றுக் கொண்டது. இதே போல் இலத்தின் , கிரேக்க, போர்த்துகீசிய , பிரெஞ்ச மொழிகளில் இருந்து பெறப்பட்ட வார்த்தைகள் ஆங்கில மொழியில் அடைக்கலமாகி அலங்கரிக்கின்றன.

ஆங்கிலத்துக்கு இணையான பல தமிழ் வார்த்தைகள் உருவாக்கபப்ட்டு தொகுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அவற்றை பொதுமக்கள் பயன்படுத்துவது இல்லை. உதாரணமாக COFFEE என்பதற்கு கொட்டை வடிநீர் என்று தமிழ்ப் படுத்தி இருக்கிறார்கள். ஒரு கடையில் அல்லது நமது வீட்டில் ஒரு கண்ணாடிக் குவளை கொட்டை வடிநீர் கொண்டு வா என்று சொன்னால் நம்மை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். அதே போல் பார்பர் ஷாப் போகிறேன் என்றால் விளங்குகிறது. அதை விட்டு சிகை அலங்கார நிலையம் செல்கிறேன் என்றால் ? ஆகவே மற்ற மொழிச் சொற்களையும் அரவணைத்து ஏற்றால் தவறில்லை.

பேசு பொருள் பற்றிய எனது கருத்துக்கள் இன்னும் இருக்கின்றன.

அதற்கு முன் அதிரை நிருபரின் நெறியாளருக்கு

நமது வாசகர்களுக்குள் ஒரு போட்டி வையுங்கள் . ஒவ்வொருவரும் ஏதாவது தலைப்பில் பத்து வரிகள் ஆங்கிலம் அல்லது சமஸ்கிருதம் கலக்காமல் தூய தமிழில் எழுதவேண்டும்.

வெற்றி பெறுவோருக்கு வழக்கம் போல் குட்டான், தட்டுப் புலா, மல்லா ஆகியவற்றைப் பரிசாக வழங்கலாம். அல்லது இருக்கவே இருக்கிறது கஞ்சிப் பிராக்கு,பச்சை வார், பச்சைத் தைலம்.

வஸ்ஸலாம்.

Unknown said...

Assalamu Alaikkum,

//Canada Kader சொன்னது…
Ahamed Ameen சொன்னது…

"Our 98% of readers are from foreign countries"

you mean foreigners or adiraiaties (or may be you can say Tamil speaking peoples)living in foreign countries?//

Yes brother.


Canada. Maan. A. Shaikh said...

தமிழில் எழுதவேண்டும்.

வெற்றி பெறுவோருக்கு வழக்கம் போல் குட்டான், தட்டுப் புலா, மல்லா ஆகியவற்றைப் பரிசாக வழங்கலாம். அல்லது இருக்கவே இருக்கிறது கஞ்சிப் பிராக்கு,பச்சை வார், பச்சைத் தைலம்.


என் தாய்மொழியை ரசிக்கவும் ருசிக்கவும் செயுத என் அன்பு சகோதரர்கள் அனைவருக்கும் என் அன்பான வெற்றி உடன் வாழ்த்துக்கள்................நாம் தான் இன்ஷா அல்லாஹ் வெல்லுவோம்.................

வஸ்ஸலாம்

Unknown said...

//
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
لقد أخبرنا الله سبحانه وتعالى أن ملائكته تسلم على الصابرين في الجنة بصبرهم كما قال الله تعالى في كتابه العزيز: “وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ . سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ ” (الرعد 22 – 24)، وقال تعالى في جزاء من صبروا: ” وَجَزَاهُم بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيراً ” (الإنسان: 12)، وقال تعالى: ” أُوْلَئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَاماً* خَالِدِينَ فِيهَا حَسُنَتْ مُسْتَقَرًّا وَمُقَامً



M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
वैसे नोकिया की ओर से कहा गया है कि लूमिया 925 के मुताबिक ये फ़ोन तकनीकी चीजों को पसंद करने वाले लोगों को ध्यान में रखकर उतारा है.

4.5 इंच के डिस्पले स्क्रीन के चलते यह एपल के आईफ़ोन 5 से बेहतर भी बताया जा रहा है.

इसके अलावा जानकारों की राय ये भी है कि नोकिया को इस फ़ोन को कुछ और रंगों में उपलब्ध कराना चाहिए. ये फ़िलहाल ब्लैक, सिल्वर और व्हाइट कलर में भी उपलब्ध होगा.

हालांकि शुरुआती आकलन ये बता रहा है कि लूमिया 925 सबसे स्लिक फ़ोन है. लेकिन क्या इसका जादू चल पाएगा.

(क्लिक करें बीबीसी हिन्दी एंड्रॉएड ऐप के लिए यहां क्लिक करें. आप हमें क्लिक करें फ़ेसबुक और क्लिक करें ट्विटर पर भी फ़ॉलो भी कर सकते हैं.)//

Brother Jaffar Sadiq,

Both of your above comments are irrelevant. Its reflecting your rage by diversion to wrong direction which is out of context. Its simply blind arguments.

Unknown said...

//அமீன் காக்கா,

ஒரிஜினல் டூப்ளிக்கேட் அல்ல விவாதம் இங்கு (AN) ஆங்கிலத்தில் கருத்து பதிவு செய்வது அவசியமா?

உங்கள் விவாத (மேலே குறிப்பிட்ட) படி மொழி அவசியம் அல்ல வாழ்க்கைக்கு சரியா? //

Please read your question about chinese and my full comment as reply there. It says Chinese are quantity but not quality I said.

Canada. Maan. A. Shaikh said...

எனது சிறிய வேண்டுகோள் இதுபோல் ஆங்கிலத்திலும் சிறு கருத்து போட்டி வைத்துதான் ஒரு முடிவு எடுக்க முடியும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள், தொடரரட்டும் விவாதம்...................

Canada. Maan. A. Shaikh said...

Please read your question about chinese and my full comment as reply there. It says Chinese are quantity but not quality I said.


But thier equlity to everybody.............. And thier success on the way to their path...ok

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

I would like to submit this debate contents to the Administration and Principle of Imam Shaif Matriculation School, English Medium Nursaries, English Medium Section of KMHSS(BOYS), and Khadir Mohideen College, Adirampattinam where we have already studied and joined our kids to study in English medium.

It may help the schools, college administration by giving valuable insights and reconsider their strategies whether to teach in English medium or not. How much importance we give for English than Tamil, they would sit and reflect themselves.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Maan Shaikh,

//I hope, everyone know about english to speak or write, but herein nobody like to write comments as english unless ameen kaakkaa, May be i'm right?
//
Its absolutely wrong. More brothers recently started also writing in English by winning their hesitation.

Canada. Maan. A. Shaikh said...

everthink ok but is there in dubai Birtish school english board learning english school for 6 month studies speaking writting..............that means english vere very easy to speak or write??

sabeer.abushahruk said...

//பாஸ்...ஏதோ மொழி சோறு போடுது சோறு போடுதுனு சொல்றாங்களே "அது" எந்த மெஸ்லெ வேலை பார்க்குது பாஸ்???//

ஆங்? அக்கா மெஸ்லேடா (ஹமீது உங்க பேர்ல உள்ள வாத்திகள்ட்ட கேட்கவேண்டிய கேள்விலாம் ஏன் இவன் என்ட்ட கேட்கிறான்) இதுக்கு மான்ட்டேர்ந்து ஒரு லைக்ஸ் வேறு. மேச் ஃபிக்ஸிங்கோ?

என்னய பாஸ்ஸுன்னு ஆங்கிலத்தில் கூப்பிடாதேன்னு எத்தனை தபா சொல்றது? வா வா மன்சூர்ட்ட புடிச்சிக் குடுத்திட்றேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...


Bro. Ameen
//Both of your above comments are irrelevant. Its reflecting your rage by diversion to wrong direction which is out of context. Its simply blind arguments.//

குருட்டு வாதமல்ல தமிழ் தளத்தில் வேறு மொழிகள் வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு
அத்தனை பேரும் தமிழில் வரும் போது நீங்க மட்டும் ஆஆஆஆங்கிலத்தில் வரும் போது அறியாதவர்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டு
அரியாதவர்களுக்கு ஆங்கிலமும் குருட்டு மொழியே!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// நாம தூங்கிக்கிட்டு இருக்கும்போது வெள்ளக்கார தேசத்து ஆட்கள் ரொம்பத்தான் பேசிப்போட்டு போய்ட்டாக.//வெள்ளக்காரவங்க பேசுனது

வெள்ளக்காரவங்க பேசுனது அவங்க மொழிக்காக அல்ல!
அவங்களுக்கு சோறு போடும் மொழிக்காக அல்ல!
பெற்ற தாயிடம் கற்ற தாய் மொழி தமிழுக்காக!

Yasir said...

//கட்டுமரம் என்கிற தமிழ் வார்த்தையை CATAMARAN என்று ஆங்கிலம் ஏற்றுக் கொண்டது. // என்னை கடலில் கவிழ்த்தாலும் எறிந்தாலும் கட்டுமரமாக மிதப்பேன் என்று சொன்ன ஒரு தமிழின தலைவரின் பேரப்பிள்ளைகள் எல்லாம் நன்றாக ஆங்கிலக்கல்வி பயின்று அதனைப்பயன்படுத்தி இன்று உலகின் பல நாடுகளுடன் வியாபாரத்தை பெருக்கி கொண்டுள்ளார்கள்...ஆனா பழத்தை பெயராக கொண்ட ஒருவர்,கோவை யை மாற்றிப்போட்டால் வரும் இன்னொருவர் தமிழ் தமிழ் என்று வெறி கொண்டு கத்திக்கொண்டு...வடைக்கும் பாயசத்திற்கு அடுத்தவர்களிடம் தலையை சொறிந்து கொண்டு “அண்ணே இன்னைக்கு எப்படிண்ணே ஓட்டுறது” என்று பரிதாபமாக காத்திருக்கின்றார்கள்

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Mansoor,

Thanks for your lengthy feedbacks.

//இந்த தளத்தில் வரும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் பதிந்து பாருங்களேன். அப்பொழுது தெரியும் பயனாளிகள் எத்தனை பேர் என்று//

For your information.

We have English posts in Adirai Nirubar already posted before 6 months. And its welcomed by editor of Adirai Nirubar and the regular readers of this forum.

We all have faced similar criticisms about Engilsh posts and English comments in my previous posts. You may check them(comments) too.

My All posts(English) will be listed in Adirai Nirubar - copy & paste the following link.

http://www.adirainirubar.blogspot.ae/search/label/B.%20Ahamed%20Ameen

English posts one by one.

1. Beware of killer offers in Dubai - எச்சரிக்கை !
http://www.adirainirubar.blogspot.ae/2012/11/beware-of-killer-offers-in-dubai.html

2. Risky Lives Of Dubai Motor Bike Riders (Messengers)
http://www.adirainirubar.blogspot.ae/2012/11/risky-lives-of-dubai-motor-bike-riders.html

3. The Edges...(An English poem in Adirai Nirubar)
http://www.adirainirubar.blogspot.ae/2012/12/the-edges.html

4. Right Understanding
http://www.adirainirubar.blogspot.ae/2013/02/right-understanding.html

5. Naming and Calling Spiritually and Personally
http://www.adirainirubar.blogspot.ae/2013/02/naming-and-calling-spiritually-and.html

and more to come InshaAllah.

Canada. Maan. A. Shaikh said...
This comment has been removed by the author.
Unknown said...

//Bro. Ameen
//Both of your above comments are irrelevant. Its reflecting your rage by diversion to wrong direction which is out of context. Its simply blind arguments.//

குருட்டு வாதமல்ல தமிழ் தளத்தில் வேறு மொழிகள் வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு
அத்தனை பேரும் தமிழில் வரும் போது நீங்க மட்டும் ஆஆஆஆங்கிலத்தில் வரும் போது அறியாதவர்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டு
அரியாதவர்களுக்கு ஆங்கிலமும் குருட்டு மொழியே!//

Dear brother,

Be honest for your conscience.

If the argument is not blind then you must continue writing meaningful and relavent to the context in Hindi and Arabic here.

And you must quote the relevant Quranic verse relevant to the context. May Allah forgive you, you are misusing the Quranic verse here by misquoting the verse just to prove your point of view in the arguments.

//M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
لقد أخبرنا الله سبحانه وتعالى أن ملائكته تسلم على الصابرين في الجنة بصبرهم كما قال الله تعالى في كتابه العزيز: “وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ . سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ ” (الرعد 22 – 24)، وقال تعالى في جزاء من صبروا: ” وَجَزَاهُم بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيراً ” (الإنسان: 12)، وقال تعالى: ” أُوْلَئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَاماً* خَالِدِينَ فِيهَا حَسُنَتْ مُسْتَقَرًّا وَمُقَامً
//
Please go through the meaning. And your Hindi is not relevant at all.

So, we can definitely your arguments are blind. And its a rage which can mislead our retional thinking.

May Allah save us.

Thanks and best regards,

Yasir said...

சைனாக்காரனைப் பற்றி பேசாதீங்க....அடுத்த மொழி அறிவு இல்லாததால் சிந்திக்கும் மூளையும் அன்ற ஜென்மங்கள்....தினமும் அவனுங்களிடம் நான் படும் பாடு இருக்கே...தனிக்கட்டுரையை போடலாம்....ஒரு கோடுபோடச் சொன்னா அதனைப்போட்டு அடுத்து என்ன செய்யனுண்டு கேட்கமாட்டனுங்க...கோடைப்போட்டுவிட்டு அப்படியே நிப்பானுங்க எத்தனை வருசமானாலும்..அப்புறம் நாம்தான் சொல்லலும் நீ போட்டுட்டு போக வேண்டியதுதானே...”நீங்க சொல்லவே இல்லையண்ணே” என்று நம்மிடமே கேட்பானுனுங்க....ஜாஹிர் காக்கா...சைனீஷ்களின் வண்டவாலங்களை கொஞ்சம் எடுத்து விடுங்களேன்

Abdul Razik said...

மொழி வெறி வேண்டாம். அனைத்து மொழிகளையும் சமமாக நினைத்தால் என்றென்றும் மொழிகள் வளரும்

Please don’t be drunkenness on verbal, deliberate all are equal, then only language will grow up.

Abdul Razik
Dubai

Canada. Maan. A. Shaikh said...

அமீன் காக்கா, உங்கள் மனம் வேதனை பட நான் விரும்ப வில்லை அதனால் ஒரு சில ஆங்கில வார்த்தை உபகவிதேன் சாரி இதும் உங்களுக்காக..............

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்!!!
எந்தப் பாத்திரத்தில் சமைத்தால் என்ன, உணவு சுவையாய் இருந்தால் போதும். சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை தான் அறியுமோ?
வஸ்ஸலாம்.
N.A.Shahul Hameed

Canada. Maan. A. Shaikh said...

Its absolutely wrong. More brothers recently started also writing in English by winning their hesitation.

ஓகே காக்கா///// இந்த விவாதம் தொடங்கிய பின்புதானே?

என் அதிரை சகோதர் அமீன் அவர்களே எனது சின்ன வேண்டுகோள் உங்களக்கு தமிழ்லில் பதிவு செய்ய முடியாத காரணத்தை கூற முடியுமா?

Ahamed Ameen said...

Assalamu Alaikkum,

Dear brother Mr. Maan Shaikh,


//ஓகே காக்கா///// இந்த விவாதம் தொடங்கிய பின்புதானே? //

No, it before long.

//என் அதிரை சகோதர் அமீன் அவர்களே எனது சின்ன வேண்டுகோள் உங்களக்கு தமிழ்லில் பதிவு செய்ய முடியாத காரணத்தை கூற முடியுமா? //

My previous reply to brother Tajudeen,

"" என் அன்பிற்கினிய நண்பா தாஜுதீன்,

உன் அன்புக்கு நன்றி.

என் ஒரு சில கருத்துக்களை தமிழிலும் பதிந்துள்ளேன்.

ஆங்கிலக் கருத்துக்களை பதிவதில் வேகத்தையும் லாவகத்தையும் உணர்வதால் என் கருத்துக்களை ஆங்கிலத்திலேயே பதிகின்றேன். அதற்கு பல நல் உள்ளங்களிடமிருந்து ஊக்கபடுத்துதலையும் இதயப்பூர்வமான தாகத்துடன் கூடிய வரவேற்பையும் அவதானித்திருக்கிறேன்.

பொதுவாக ஆங்கிலம் புரிந்துகொள்ளப் படக்கூடிய இணைய ஊடகங்களில் ஆங்கிலத்தில் எழுதுவது எவரையும் எதிர்மறையாகப் பாதித்துவிடாது என்பது என் அன்பான நிலைப்பாடு.

வஸ்ஸலாம்

துபையிலிருந்து அஹ்மது அமீன் ""

Unknown said...

//Canada. Maan. A. Shaikh சொன்னது…

ஓகே காக்கா///// இந்த விவாதம் தொடங்கிய பின்புதானே?ஓகே காக்கா///// இந்த விவாதம் தொடங்கிய பின்புதானே?

என் அதிரை சகோதர் அமீன் அவர்களே எனது சின்ன வேண்டுகோள் உங்களக்கு தமிழ்லில் பதிவு செய்ய முடியாத காரணத்தை கூற முடியுமா?//

அதுதானே யாருக்குமே புரிய மாட்டேங்குது !!!
தமிழில் அடிப்பது கஷ்டம் என்ற காரணமாக இருக்கலாம். அப்படி என்றால் நாம் எல்லோருமே இலகுவாக ஆங்கிலத்திலும், மற்ற மொழிகளிலும் அடித்து விடலாமே !!!

Ahamed Ameen said...

Assalamu Alaikkum

My hearty welcome to Prof. NAS sir, and thanks for your comment.

Sir, We expect more insights from you.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,

www.dubaibuyer.blogpsot.com

Century is reached now...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அமீன் காக்கா சொன்னபடி அரபு சொல்லில் தவறு இருந்தால் அல்லாஹ் (என்னை) மன்னிப்பானாக

Canada. Maan. A. Shaikh said...

எனது பார்வையில் இது சரியான பதில் அல்ல, எங்களுக்கும் கால அவகாசத்தை கொண்டுதான் பதில் அளிக்கிறோம், உங்களை போல் நானும் அலுவகத்தில் தான் வேலை செய்கிறேன் (அதிரைகரில் நான் மாட்டும் தான் கனடாவில் அலுவகத்தில் பனி செய்கிறேன்) இதை யார் விடம் வேண்டாலும் கேட்கலாம். இதை விவாதத்திற்காக மட்டுமே பதிகிறேன்

Unknown said...

அதிரை நிருபர் நிர்வாகிகள் ஒரு ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், இந்த தள வருகையாளர்களில் எத்தனை சதவீதம் ஆங்கிலம் அறிந்தவர்கள் என்பதை அறியப்படுத்த வேண்டும்.

குறிப்பு : அதிரை மக்கள் மட்டும் எத்தனை சதவீதம் என்பதை அறிய வேண்டும். ஏனெனில் பெரும்பாலான விஷயங்கள் நம் ஊர் சம்பத்தப் பட்டவைகளாக இருப்பதால்.

இதன் மூலம் இப்படி ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் இது எத்தனை பேரை அடைகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

Abdul Razik said...

நான் பல தடவை என்னுடைய பின்னூட்டங்களில் சொல்லி இருக்கிறேன் மற்ற மொழிகளின் அவசியம் பற்றி, தமிழ் தாய் மொழி என்பதால் யாரும் கற்றுத்தர தேவை இல்லை, தானாகவே வரும், பிறந்த ஒரு பிள்ளை எப்படியும் குறைந்தது 15 அல்லது 20 வருடம் தாயுடன் இருக்கும், அந்த தாய் எந்த மொழியை சேர்ந்தவளாக இருந்தாலும் அந்த மொழி தானாக வரும். ஆனால் நவீன உலகில் அனைத்து பல போட்டிகளை சமாளித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமாயின், தாய் மொழி அல்லாது, வேறு அவசிய மொழிகளை கட்டாயம் கற்றே ஆக வேண்டும். உலகில் உள்ள ஆங்கில மீடியாக்கள் செய்யும் இஸ்லாத்திற்கு எதிரான வரம்பற்ற போகை எதிர்த்து போராட ஆங்கில அறிவு கட்டாயம் தேவை. தமிழ் தமிழ், தமிழ் நாடு என்று மட்டும் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் கிணற்றுத் தவளைகள். உலகை உற்றுப்பாருங்கள் என்ன நடக்குது என்று.
Many time I have scripted in my comments concerning significance of other languages. Mother tongue will grow itself. A new born baby will stay with its mother nearly 2 decades. Consequently its mother tongue will observe even the mother belongs to any region. To face the all rivalry in modern world, we must absorb other some main languages. To oppose the scope less propaganda’s of world Media, we must be talented in English. The people who utters only Tamil, Tamil and tamil nadu are (Time Management) frogs of Well.

Abdul Razik
Dubai

Canada. Maan. A. Shaikh said...

Abu Mus'ab சொன்னதை வரவேற்கிறேன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வ அலைக்குமுஸ்ஸலாம் அமீன்,

என் அன்பான கோரிக்கை ஏற்று தமிழிலும் கருத்திட்டமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைர். நீ தமிழில் எழுவாய் என்பதை பிற சகோதரர்களும் அறிய இந்த விவாதகளம் ஒர் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உன்னுடைய கருத்துக்கள் நிறைய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் தவறில்லை தானே?

தொடர்ந்து எழுது நீ விருப்பப்படும் மொழியில்.

Ahamed Ameen said...

Assalamu Alaikkum

Dear brother Abu Musab,

The editorial team of Adirai Nirubar are Not blocking English comments, but welcoming. And they are accepting contribution in English language also. They are already well informed about different readers I hope.

Actually they have to concern and afraid that if English comments and articles disrupt the target readers, it would be disadvantage for them. But in reverse they see English contributions(comments and articles) valuable for their advantages of attracting more and more matured and educated readers.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Abdul Razik said...

Please encourage to learn English for demolishing the nasty broadcasts of global medias against Islam.

Abdul Razik
Dubai

Ahamed Ameen said...

//தாஜுதீன் சொன்னது…
வ அலைக்குமுஸ்ஸலாம் அமீன்,

என் அன்பான கோரிக்கை ஏற்று தமிழிலும் கருத்திட்டமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைர். நீ தமிழில் எழுவாய் என்பதை பிற சகோதரர்களும் அறிய இந்த விவாதகளம் ஒர் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உன்னுடைய கருத்துக்கள் நிறைய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் தவறில்லை தானே?

தொடர்ந்து எழுது நீ விருப்பப்படும் மொழியில்.
//


Assalamu Alaikkum,

Dear brother Tajudeen,

Thanks a lot for your appreciation and the GREEN LIGHT to my contributions.

InshaAllah all of our valuable thoughts would reach more and more people, would make positive impacts in our community.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Canada. Maan. A. Shaikh said...

மாஷா அல்லாஹ் நான் கூறியதுபோல செஞ்சுரி அடித்து விட்டது, சரி விடை தான் என்ன?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இப்படி சொல்ல சொன்னாக!
--------------------------------------------------
சபீர் அவர்கள் இதை 100% தமிழ் தளமல்ல என்று சொன்னதை நினைத்து வருந்துகிறேன்.

யாசிர் அவர்கள் தமிழ் மீது பைத்தியம் வேண்டாம் என்று சொல்லி இதையே க்ரவ்ன் அவர்கள் வழி மொழிவதும் வேதனையாக இருக்கிறது.

அன்று கனிணியில் ஆங்கிலம் மட்டும் இருந்த போது தமிழ் மொழி வராதா என ஏங்கினீர்கள். இன்று( சோறு போட) ஆங்கிலம் போதும். உலகம் அறிய ஆங்கிலம் என்கிறீர்கள்.

இன்னும் நிறைய பேர் ஆங்கில அர்த்தம் தெரியாமல் தமிழ் தட்ட தெரியாமல் ஆங்கிலத்திலேயே தமிழை எழுதுகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் நாளை தமிழ் எழுத்தே இல்லாமல் போய் கொற(குறவ) பாசை போல போய் விடுமோ என அஞ்சுகிறேன்.

நவீன சாதன வளர்ச்சி இல்லா காலத்தில் கடிதம் மூலம் நான் தக்க வைக்கப்பட்டு இருந்தேன். இப்ப அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய் முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள் பலர் தமிழ் எழுத முடியாமல் தவிக்கின்றனர்.

இது மாதிரி பின்னூட்ட வாய்ப்பு அமைக்க தனிக்குடில் அமைக்க இணையம் இலவச வாய்ப்பு கொடுத்தும் ஆங்கிலத்தில் எழுதும் போது கெளரவமாக நினைக்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது.


இனியும் இது தொடர்ந்தால்
"மெல்லச் சாகும் தமிழ்"
என்ற பழ மொழியை மாற்றி
விரைந்து இல்லாமல் ஆக்குவோம்
என்று கூட முடிவு செய்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

இன்னும் 50 வருசத்தில் என் நிலையை பின்னோக்கி பார்த்து வடிக்கிறேன் கண்ணீர்...............................................

------------------------------------------------------------------------------

இப்படிக்கு
நீங்கள் பேசும்,
தமிழ்.

Unknown said...
This comment has been removed by the author.
அப்துல்மாலிக் said...

சில வருடங்களுக்கு முன் அதிரையர்களின் மெயில் குழுமமான AWC (Adirai Web Community) என்ற தளம் மட்டுமே இருந்தது, இன்றும் அது ஆக்டிவில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இதில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே கருத்துக்களை பறிமாரிக்கொள்ளமுடியும். கொஞ்சம் தெரிந்தவர்களும் பதில் அளிக்க தயக்கம் ஏனென்றால் ஆங்கிலப்புலமை எங்கே தவறு வந்திடுமோ என்ற பயம். அதன் தாக்கம் குறைந்ததற்கு காரணம் மொழிப்பிரச்சினை மட்டுமே. இன்று எந்த லாங்குவேஜுலேயும் இணையத்துலே உறவாடலாம் என்ற நிலை. யாருக்கு எது கருத்திட எளிதாக உள்ளதோ அதே சமயம் பிளாக்பெர்ரி பயன்பாட்டாளர்களுக்கு தமிழ் டைப்பமுடியாமல் போனால் ஆங்கிலத்தில் சொல்வதில் தப்பில்லைதானே... தன் கருத்தை பதிவிட மொழி ஒரு தடையல்ல...

Unknown said...

//Ahamed Ameen சொன்னது…
Assalamu Alaikkum

Dear brother Abu Musab,
//

Dear Brother Ahamed Ameen,
وعليكم السلام ورحمة الله وبركاته

Adirai nirubar will never block any language. they have already published Hindi and Arabic some hadheeth and Quran Ayaath that was submitted by Brother Jafar.

We also will enjoy to type in English at ease and fast. Personally I prefer to type in English and Arabic more than Tamil as I used for long time. (recently I started to contribute in Tamil only in Adirai Nirubar)

MANY TIMES WE ARE COMPELLED TO REPLY YOUR COMMENTS +(PLUS) WE HAD TO TRANSLATE YOUR COMMENTS INTO TAMIL. WE HAVE TO CARRY DOUBLE BURDEN BECAUSE OF THIS. THIS IS MY SINCERE ADVICE, WHEN IT COMES TO VERY IMPORTANT MATTERS THAT WILL SHAPE OUR COMMUNITY, ITS BETTER TO WRITE IN SAME LANGUAGE OF THE ARTICLE. IF THE ARTICLE IS WRITTEN IN ENGLISH, WE CAN WRITE COMMENTS IN ENGLISH. IF THE ARTICLE IS IN ARABIC, GIBRISH, OR ANY LANGUAGE THAN COMMENTS TO THAT PARTICULAR ARTICLE MUST BE WRITTEN IN THE SAME LANGUAGE OF THAT ARTICLE.

SO IT MAY BENEFIT THE READERS AND CAN UNDERSTAND EASILY.

Canada. Maan. A. Shaikh said...

everthink ok but is there in dubai Birtish school english board learning english school for 6 month studies speaking writting..............that means english vere very easy to speak or write?

ஏன் என்றால் நானும் அதில் படித்த மானவேர்கல்லை பட்டியல் இடுவேன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இப்படி எழுத சொன்னாக! (அவங்களுக்கு தமிழ் தெரியாதாம்.)
---------------------------------------------------------

எங்கள் ஆதிக்கத்தில் அன்று ஆங்கிலத்தை எதிர்த்தீர்கள்
இன்று அதையே திணிக்க முயல்கிறீர்கள்
தொடர்ந்தால் மீண்டும் யோசிப்போம்.
கைப்பற்ற.......

இப்படிக்கு

பிரிட்டிஷ் முற்போக்கு கட்சி.

Canada. Maan. A. Shaikh said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
இப்படி எழுத சொன்னாக! (அவங்களுக்கு தமிழ் தெரியாதாம்.)
---------------------------------------------------------

எங்கள் ஆதிக்கத்தில் அன்று ஆங்கிலத்தை எதிர்த்தீர்கள்
இன்று அதையே திணிக்க முயல்கிறீர்கள்
தொடர்ந்தால் மீண்டும் யோசிப்போம்.
கைப்பற்ற.......

இப்படிக்கு

பிரிட்டிஷ் முற்போக்கு கட்சி.

நான் முதல் உறுப்பினர் என்றேடும்.............தமிழ்ளுக்க.

Unknown said...

//M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
இப்படி எழுத சொன்னாக! (அவங்களுக்கு தமிழ் தெரியாதாம்.)
---------------------------------------------------------

எங்கள் ஆதிக்கத்தில் அன்று ஆங்கிலத்தை எதிர்த்தீர்கள்
இன்று அதையே திணிக்க முயல்கிறீர்கள்
தொடர்ந்தால் மீண்டும் யோசிப்போம்.
கைப்பற்ற.......

இப்படிக்கு

பிரிட்டிஷ் முற்போக்கு கட்சி. //

Assalamu Alaikkum

They mastered our languages(even Tamil) when they made our country colonized.

But let them know that we have mastered his(British) language so that we can make their country colonized.

Hope we (Indians-Tamilans) are ready enough to dominate all over the world to face any challenge inshaAllah.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

Canada. Maan. A. Shaikh said...

Ahamed Ameen சொன்னது

Hope we (Indians-Tamilans) are ready enough to dominate all over the world to face any challenge inshaAllah.

அமீன் காக்கா நீங்கள் தானாகவே முன் வந்து விட்டிர்கள் தமிழ் தான் கருத்து பதிவு என்று

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//ஆங்? அக்கா மெஸ்லேடா (ஹமீது உங்க பேர்ல உள்ள வாத்திகள்ட்ட கேட்கவேண்டிய கேள்விலாம் ஏன் இவன் என்ட்ட கேட்கிறான்) இதுக்கு மான்ட்டேர்ந்து ஒரு லைக்ஸ் வேறு. மேச் ஃபிக்ஸிங்கோ?//

ஆமா என் பெயரில் உள்ள ஒரு வாத்த்தியார் வாய்க்குள்ள நோளையாத படிப்பெல்லாம் படித்து விட்டு அக்கா "உணவகத்தில்" தான் (மெஸ் என்று சொல்லமாட்டேன் )கை நனைத்துக்கொண்டிருந்தார் அப்போப்போ நாங்கள் வீட்டில் கோபித்துகொண்டு இருக்கும் போது எங்களுக்கும் அந்த அக்கா உணவகத்தில் தான் சோறு

Canada. Maan. A. Shaikh said...


இதற்க்கு தான் நான் ஆரம்பத்தில் கூறினேன்

எந்த மொழியும் பேச முடியாத மாற்று திறநாளிகூட எந்த தயக்கமும் இன்றி வேலை பார்க்கிறார், இங்கு கனடாவில் ஆங்கிலம் & பிரெஞ்சு பேசும் சில வெள்ளையர்களுக்கு அந்த மொழியை எழுத படிக்க தெரியாதென்று............

sabeer.abushahruk said...

வாதத்தில் கோர்வை இல்லாததால் நானும் சில பதிலகளைச் சொல்லி விடுகிறேன்:
 
மன்சூர்:
நீங்கள் கிளறினால் அது பிரச்னையாயிருந்தாலும் சரி; ஜுபைலில் ஹார்டீஸ் பில்டிங்கில் கிளறிய பிரியாணியாயிருந்தாலும் சரி சுவையாய்த்தான் இருக்கும்.  டோன்ட் வொர்ரி பி ஹேப்பீ (கவலை வேண்டாம் சந்தோஷம் அடைக).
மன்சூர்: நல்ல்ல்ல்லா யோசிச்சி சொல்லுங்கள்: இங்லீஷில் எழுதுபவர் மண்டையை சுவற்றில் முட்டிக்கொள்ள வேண்டுமா அல்லது இங்லீஷ் படிக்கத் தெரியாதவர் சுவற்றில் முட்ட வேண்டுமா?
 
ஜாகிர் பாய்: அல்லாஹ் சோறு தர்ரான்னு ஓச்சிப்பிட்டியலே. மார்க்கத்தை இழுப்பதாக இருந்தால் நான் இந்த ஆட்டத்திற்கு வரல.  இங்கு, மஹ்ஸரில் எழுப்பப்படும்போது அஹ்மது அமீன் ஆங்கிலத்தில் பதில் சொல்லலாமா வேண்டாமா என்கிற விவாதமா நடக்கிறது? அன்றியும், நிரந்தர தங்குமிடத்தில் தேர்ந்தெடுக்கப் போகும் சொர்க்க நரகத்தைத் தீர்மானிக்கும் ஆடுகளம்தான் பூமி வாழ்க்கை. இங்குதான் இந்த விவாதம் நடக்கிறது. இங்கு ஆங்கில அறிவு இருந்தால் உள்நாட்டில் இல்லாவிட்டாலும் வெளிநாட்டிலாவது போஜனம் கிடைக்கும். அல்லாஹ்தான் தர்ரான். அதுக்காக ஜன்னல்கள் கதவுகளையெல்லாம் சாத்திக்கொண்டு நடு வீட்டில் இருந்தால் பூவாவுக்கு என்ன பண்றது.
 
ஹமீது: அதிரையில் கூட்டம்போட்டு ஆங்கிலத்தில் பேசினால் கூட்டம் கூடாதுதான். அடையாறு ஆடிட்டோரியத்தில் தமிழர்கள் பேசுறாங்க அருமையான ஆங்கிலத்தில். கூட்டம் அப்புது. அதிரைநிருபர் அதிரையிலா இயங்குகிறது? அதிரை வாசிகளை அடையாறு வரைகூட கொண்டுபோக முயலக்கூடாதா?  மேலும், தமிழில் பயிற்றுவிற்கும் அரசுப் பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் கூட்டம் கலைந்து ஆங்கிலத்தை பயிற்று மொழியாகச் சொல்லித்தரும் தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கூட்டம் காசு கொடுத்து சீட்டு வாங்குகிறதே ஏன்?
 
சகோ கனடா காதர்: ஆங்கிலத்தில் கருத்துச் சொல்ல ஆங்கிலத் தளங்களைத்தான் தேடிப் போக வேண்டும் என்பதில்லை.  தமிழ்த் தளங்கள் பலவற்றிலும் சொல்கிறார்கள்.  ஒரு மொழியைக் கற்க 17 நாட்கள் போதுமென்கிறார்கள் உளவியலாளர்கள்.  கற்பது இழப்பல்ல, ஏற்றமே. கற்க மாட்டோம்; நீயும் சொல்லாதே என்பதே வீம்பு.
 
எம் ஹெச் ஜே: யாருக்கு எந்த மொழி இலகுவாகவும் லாவகமாகவும் வருகிறதோ அதில் கருத்திடுவதே சரி என்கிறேன். தங்களுக்கு அரபியிலும் ஹிந்தியிலும் இலகுவாக வருகிறது எனில் அதில் தாராளமாக கருத்திடலாம். உங்களையும் யாரும் தடுக்க முடியாது.  ஆனால், தமிழ் ஆங்கிலம் என்னும் இரண்டு மொழிகளுக்குள்ளேயே விவாதம் சுழல்வதால் தாங்கள் மூன்றாவது நான்காவது மொழிக்குச் செல்வது சற்றே விதன்டாவாதம்தான்.  தவிர, இறைவன் நம்மைப் படைத்தது அவனை வணங்கத்தான் அல்லவா? மொழி வளர்க்கவல்ல. ஆமெனில், வணக்கத்திற்குரிய மொழியைத்தானே தங்கள் பாஸ் முதல் என்று சொல்லியிருக்க வேண்டும்? ஏன் தாய்மொழி முதலில்?  மேலும், தங்கள் பாஸ் சொல்வதைவிட இறைவசனமோ நபிமொழியோ சொன்னால் மட்டுமே இங்கு நீங்கள் ஆதாரமாகத் தர முடியும்.  (அது சரி… இன்னும் ட்டீ வரல. நினைவிருக்கா?)
புரியவில்லை என்று சொல்லும் சகோதரர்களே, உஙகளில் எத்துனை பேர்களுக்கு கவிதை வாசிக்கத் தெரியும், அதாவது தமிழில் எழுதப்படும் கவிதைகளை வாசிக்கத் தெரியும்?  கவிதை புரியவில்லை என்பதற்காக அதையும் தடுத்து விடுவோமா?  புரியாதவர் புரிய முயல்வதே அறிவுடைமை; அது ஆங்கிலமாக இருந்தாலும் சரி கவிதையாக இருந்தாலும் சரி.  அப்படியும் புரியவில்லை என்றால் நமக்கு புரிந்ததை மட்டுமே கிரஹித்து அடுத்தக்கட்டத்திற்குச் செல்தலே சரி.

Canada. Maan. A. Shaikh said...

sabeer.abushahruk சொன்னது…

//ஆங்? அக்கா மெஸ்லேடா (ஹமீது உங்க பேர்ல உள்ள வாத்திகள்ட்ட கேட்கவேண்டிய கேள்விலாம் ஏன் இவன் என்ட்ட கேட்கிறான்) இதுக்கு மான்ட்டேர்ந்து ஒரு லைக்ஸ் வேறு. மேச் ஃபிக்ஸிங்கோ?//

ஆமா என் பெயரில் உள்ள ஒரு வாத்த்தியார் வாய்க்குள்ள நோளையாத படிப்பெல்லாம் படித்து விட்டு அக்கா "உணவகத்தில்" தான் (மெஸ் என்று சொல்லமாட்டேன் )கை நனைத்துக்கொண்டிருந்தார் அப்போப்போ நாங்கள் வீட்டில் கோபித்துகொண்டு இருக்கும் போது எங்களுக்கும் அந்த அக்கா உணவகத்தில் தான் சோறு

இது என்ன காக்கா புது கதைய இருக்கு........... கருத்து பதிவு இரண்டு செஞ்சுரி தாண்டும்மோ

Unknown said...

sabeer.abushahruk சொன்னது…

" வாதத்தில் கோர்வை இல்லாததால் நானும் சில பதிலகளைச் சொல்லி விடுகிறேன்:"
வாதத்தில் கோர்வை இல்லை என்று எதை வைத்து நீங்கள் கணித்தீர்கள் ?

4 பேரு இட்ட கருத்தாடல் ( ஆங்கிலத்திலோ அல்லது தம்ழிலோ ) உங்களுக்கு புரியபோய் நீங்கள் கணித்தீர்கள் என்று நான் நம்புகிறேன் ..

இங்கு ஆரம்பத்தில் இருந்து நான் வைக்கும் வாதமும் அதுவே ,கருத்தாடலில் தமிழ் இருகுமையானால் அனைவருக்கும் புரிய வாய்ப்புள்ளது ,அனைவரும் கருதிட வாய்ப்புள்ளது ...

ஆங்கிலத்தில் கருத்திடுவது அவரவர் சுதந்திரம் நான் இல்லை என்று சொல்லவில்லை ,அனால் இட்ட கருத்து அனைவரையும் சென்றடைகின்றதா என்பதே எனது கேள்வி ?

என் தமிழில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//We can make their countrycolonised//

அது மட்டும் முடியாது. அவங்க போட்டு கொடுத்து ஓடவிட்டு சென்ற ரயிலையே தொடர்ந்து ஓடச்செய்ய தொடர்ந்து குரல் கொடுக்க ஒற்றுமையில்லை. நீங்க சொல்றதெல்லாம் நம்ம மக்களாலெ நடக்காத காரியம்.

Unknown said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

"சகோ. கனடா காதர், மன்னிக்கவும்,
தமிழின் முக்கியத்துவத்தை இங்கு சொல்லி விட்டு சகோ. அமீனுடன் ஆங்கிலத்தில் கலந்தாடுவது சரியல்ல. பேச்சில், எழுத்தில் சுத்தம் தேவை."

மன்னிக்கவும் சகோதரர் M.H. ஜஹபர் சாதிக்,

அமீனின் மொழியில் கருத்திட்டலவது அவருக்கு புரியும் என்று நான் ஆங்கிலத்தில் கருத்திட்டேன் ,மற்றபடி ஒன்றுமில்லை ,

என் தமிழில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்


Unknown said...

மற்ற மொழிகளில் இணைய தளங்களில் ஒரு கட்டுரைக்குப் பின் கருத்திடுபவர்கள் அந்த கட்டுரையின் மொழியிலேயே கருத்திடுகிறார்கள்.

ஆங்கில ப்ளாக்கரில் சென்று பாருங்கள், அங்கு என்ன மொழியில் கருத்திடப்படுகிறது?

என்னைப் பொருத்தவரை எந்த மொழியில் கட்டுரை இருக்கிறதோ அதே மொழியில் அதற்கான கருத்தும் இடப்பட்டால் படிப்பவர்களுக்கும், கருத்துகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கும் இலகுவாக இருக்கும்.

சில சமயங்களில் ஆங்கிலத்தில் சிலர் பின்னூட்டம் இடுவதால் அதை மொழிபெயர்த்து தமிழில் வெளியிடுவதுடன் அதற்கான பதிலையும் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப் படுகிறோம். இது நியாயமா?

ஆங்கில ப்ளாக்கரில் சென்று தமிழில் தொடர்ந்து கருத்திட்டுப் பாருங்கள். எத்தனை இழிசொற்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து வருகிறது என்பது தெரியும். ஆம் இங்கிலாந்திலிருந்து தமிழில் பி பி சி இயங்குகிறது இருந்தும் இந்த நிலை... !!!

Unknown said...

அஸ்ஸலாமு அழைக்கும்,

அதிரை நிருபர் எடிட்டர் அவர்களுக்கு,

இங்கே விவாதம் படு சூடாக பொய் கொண்டிருகிறது ,பல பேர் தமிழுக்கு ஆதரவாகவும் சில பேர் ஆங்கிலத்துக்கு மறைமுக ஆதரவாகவும் கருத்திட்டுள்ளர்கள் , மிக்க சந்தோஷம் ..

முதலில் ஆங்கில ஆதரவாளர்களின் கருத்தை எடுத்து கொள்வோம் :-

சகோதரர் சொல்கிறார் AN என்றைக்கும் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை ஆகையால் ஆங்கிலத்தில் கருத்திடுவது தவறில்லை

இந்த கருத்தை நான் ஒரு போதும் மறுக்கவே இல்லை மாறாக ஆதரிக்கிறேன் அந்த கருத்து அனைவரையும் சென்றடைந்தால் ..

அடுத்தது தமிழ் ஆதரவாளர்கள் விரும்புவது :-

சில சமயங்களில் ஆங்கிலத்தில் சிலர் பின்னூட்டம் இடுவதால் அதை மொழிபெயர்த்து தமிழில் வெளியிடுவதுடன் அதற்கான பதிலையும் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப் படுகிறோம். இது நியாயமா?

தாஜுதீன் சொன்னது…
உன்னுடைய கருத்துக்கள் நிறைய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் தவறில்லை தானே?

எனவே

அதிரை நிருபர் எடிட்டோரியல் குழு தயவு செய்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என நான் விரும்புகிறேன்.. அதாவது ஒருவர் அல்லது AN தமிழில் கட்டுரை இடும்போது அதற்கான பின்னோட்டங்கள் தமிழில் இட கோரிக்கை வைக்குமாறு கேட்டு கொள்கிறேன் அந்த வகையில் அனைவரும் தமிழ் கட்டுரையை படிப்பது மட்டுமின்றி அனைவருக்கும் புரியும்படி பின்னுட்டமும் இடுவார்கள் ,

ஒருவளை ஆங்கிலத்தில் கட்டுரை வந்தால் அங்கே தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடுவதில் எந்த பிரச்சனையும் இருக்கபோவதில்லை , காரணம் ஆங்கிலம் அறிந்தவர்கள் தான் அந்த ஆங்கில கட்டுரை பக்கம் போக போகிறார்கள் என்பது என்னோட கருத்து ..

என் தமிழில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்

Unknown said...

Ahamed Ameen சொன்னது…
Assalamu Alaikkum,

//Canada Kader சொன்னது…
Ahamed Ameen சொன்னது…

"Our 98% of readers are from foreign countries"

you mean foreigners or adiraiaties (or may be you can say Tamil speaking peoples)living in foreign countries?//

Yes brother."

அமீன் அவர்களே ,

என்னுடைய கேள்விக்கு தாங்கள் சரியான பதிலை இன்னும் தரவில்லை ..

நான் கேட்டது வெளி நாட்டவர்களா அல்லது வெளி நாட்டில் வாழும் அதிரையர்களா (அல்லது தமிழ் பேச கூடியவர்கள )

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Canada Kader,

///அதிராம் பட்டினத்தில் ஒரு மீட்டிங் போட்டு அங்கு ஆங்கிலத்தில் பேசினால் கூட்டம் கூடுமா அல்லது அதே இடத்தில் தமிழில் பேசினால் கூட்டம் கூடுமா ? பதில் கொடுங்களேன் கொஞ்சம் //

An another reply can be.

Our 98% of readers are from foreign countries. Even if they sit and read now in Adirampattinam, they are on vacation once finished pack up back to their residence country.
//

If you please re-read with full context then you can honestly realize that the majority(98%) of AN readers, the Adiraities are living in foreign countries or Indian cities like Chennai, Bangalore, Delhi, Hyderabad etc.

then it continues...

//Actually we conduct meeting of this kind(discussing the topics) through this AN forum world wide among winning(earning and growing) people.//

Hope you got clarified.

Thanks and best regards,

Yasir said...

//யாசிர் அவர்கள் தமிழ் மீது பைத்தியம் வேண்டாம் என்று// நான் தமிழ் என்று சொல்லவில்லை...தாய்மொழி என்று சொன்னேன் சகோதரா....

கிரவுன் தட்டிக்கொடுத்தால் “தமிழ்” அவர் முன் மண்டியிடும்
அவர் கொஞ்சினால் கூத்தாடும்
அவர் உணவுக்கொடுத்தால் அவருக்கு வாலை ஆட்டும்.
அவர் நா அங்கு சுகமா ? நீ இங்கு சுகமே என்று கூறி புதிய கோணத்தில் தமிழ்க் காதலைச் சொல்லி தமிழை வளர்த்தவர், ஒரு உண்மை தமிழன்

அடுத்து எங்கள் கவிக்காக்கா..அவர்கள் கவிதை எழுதினால் தமிழ் பெருமிதம் கொண்டு நிற்க்கும்..ஆனந்தத்தால் குதுகலிக்கும்
அவர்கள் அதட்டினால் கை கட்டி சொல் கேட்கும்..முத்தமிழை இன்னும் யாரும் புரிந்து கொண்டு வளர்க்காததால்..இன்று நான்காம் தமிழை ஷார்ஜாவிலும்...எதிர்காலத்தில் ஐந்தாம் தமிழை ராஜாமடம் பாலத்திலும் இருந்து எளிதாக வளர்த்து ..எளிமையாக எல்லாருக்கும் புரியும்படி செய்வார்கள்..அந்த அளவிற்க்கு தமிழ்மேல் காதல் கொண்டவர்கள்

அடுத்து எங்கள் அன்சாரி மாமா...30 வருடங்களாக மனித வளத்துறையின் புனிதம் காத்து..இன்றுவரை எத்தனையோ நாட்டுக்காரவர்களை பார்த்து பேசி அவர்கள் நாடியை பிடித்து பார்த்து தீர்வு சொன்னவர்கள்...இவர்களெல்லாம் ”ஆங்கிலம்” அவசியம் என்று சொல்வதனால் “ தமிழ்” பிடிக்காது என்று அர்த்தம் இல்லை.....இன்றையக் காலக்கட்டத்தில் எது தங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவுகின்றதோ ...அந்த மொழியை பிடித்துக்கொள்ளுங்கள்...அது என்னைப் பொருத்தவரை நிச்சய்மாக இப்போதைக்கு “ஆங்கிலம்தான்” ஆங்கிலம்தான்” என்பது என் தீர்ப்பு....சாவன்னா காக்கா தீர்ப்பை மாத்தி எல்லாம் சொல்லமுடியாது..ஆகையால் அமீன் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதுங்கள்...அதனை விரும்பி படிப்பவர்கள் படித்து இன்னொரு மனிதாகி கொள்ளுங்கள்...விரும்பாதவர்கள் விட்டுவிடுமாறு வேண்டுகோள் வைக்கின்றேன்...ச்ச்ச்ச்ச்ச்ச்சூ இப்பவே கண்ணைக்கட்டுதே..கவிக்காக்கா குடித்த சோடா பாக்கி இருந்தா கொடுங்கப்பா !!!!

Unknown said...

Ahamed Ameen சொன்னது…

"If you please re-read with full context then you can honestly realize that the majority(98%) of AN readers, the Adiraities are living in foreign countries"

தங்களின் பதிலுக்கு நன்றி ,

98% அதிரையர்கள் வெளி நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் அதிரையர்கள் ,தமிழ் பேச கூடியவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

Unknown said...

அன்புச் சகோதரர்களுக்கு,
இங்கே ஆங்கிலமா, தமிழா எனும் விவாதத்தை விட நாம் இங்கு கவனம் செலுத்த வேண்டியது ஒரு மொழியில் கட்டுரை வந்தால் அதற்கு வேறொரு மொழியில் பின்னூட்டம் இடலாமா கூடாதா என்ற கோணத்தில் விவாதம் நடத்தினால் சரியாக இருக்கும்.

நாம் எந்த மொழிக்கும் எதிரியல்ல. அல்ஹம்துலில்லாஹ் நான்கு மொழிகளை அல்லாஹ் நமக்கு அருளிய பின்பு இப்பொழுதும் ஐந்தாவது மற்றும் ஆறாவது மொழியை கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொன்னார்கள் " யார் மற்ற கூட்டத்தாரின் மொழியை கற்றாரோ அவர் , அந்த கூட்டத்தினரின் சூழ்ச்சிகளிலிருந்தும் தன்னை காத்துக் கொண்டார்." (امن من مكر قومه او كما قال صل الله عليه وسلم)

நாம் மீண்டும் மீண்டும் இங்கே கவனத்திற்கு கொண்டு வருவது இதுதான், " எந்த மொழியில் கட்டுரை வருகிறதோ அதே மொழியில் பின்னூட்டம் இட்டால் பதில் எழுதுபவருக்கும் இலகுவாக இருக்கும். இந்த கருத்தை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை

ஏனெனில் ஒருமுறை சகோ அமீன் "...this also seems baseless...)
என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு நாம் பதில் அளிக்காத பட்சத்தில் ஆங்கிலம் மட்டும் படிப்பவர்கள் நாம் ஏதோ கற்பனையில் பொய்யை புனைந்துரைக்கிறோம் என்று கருதக்கூடும். எனவே அதனை தமிழிலும் மொழிபெயர்த்து (ஆங்கிலம் அறியாதவர்களுக்காக) வெளியிட வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டது.

Shameed said...

Abu Mus'ab சொன்னது…
//அன்புச் சகோதரர்களுக்கு,
இங்கே ஆங்கிலமா, தமிழா எனும் விவாதத்தை விட நாம் இங்கு கவனம் செலுத்த வேண்டியது ஒரு மொழியில் கட்டுரை வந்தால் அதற்கு வேறொரு மொழியில் பின்னூட்டம் இடலாமா கூடாதா என்ற கோணத்தில் விவாதம் நடத்தினால் சரியாக இருக்கும்.//



இப்படி ஒரு விவாத களம் அமைத்தால் அதுவும் பட்டையை கெளப்பும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//YASIR சொன்னது…
//யாசிர் அவர்கள் தமிழ் மீது பைத்தியம் வேண்டாம் என்று// நான் தமிழ் என்று சொல்லவில்லை...தாய்மொழி என்று சொன்னேன் சகோதரா....//

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா.
நானே அப்படி போட்டேன்.
உங்க தாய் மொழி என்ன?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//மன்னிக்கவும் சகோதரர் M.H. ஜஹபர் சாதிக்,

அமீனின் மொழியில் கருத்திட்டலவது அவருக்கு புரியும் என்று நான் ஆங்கிலத்தில் கருத்திட்டேன் ,மற்றபடி ஒன்றுமில்லை ,

என் தமிழில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும் //

அல்லாஹ் மன்னிப்பானாக
தாய் மொழியில் தவறே இருக்கக் கூடாது
நம் தமிழ் தளங்களில் நம்மவர்களின் தவறு இருக்கக் கூடாது, நம்மவர்கள் அனைவரும் 100% தமிழ் தவறின்றி எழுதனும் என்பதே என் பேரெண்ணம்.
ஆங்கில வெப் சைட்டுகளில் அதனை வளர்த்துக் கொள்ளலாம்.


M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

FLASH NEWS
4 பேரைத் தவிர யாரும் வராததால் மின்சார செலவும், போலீஸ் செலவும் வேஸ்ட் என்பதால் கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டன!

//அதிராம் பட்டினத்தில் ஒரு மீட்டிங் போட்டு அங்கு ஆங்கிலத்தில் பேசினால் கூட்டம் கூடுமா//

Shameed said...

தமிழ் தெரிந்து கொண்டு தமிழில் பின்னுட்டம் போட மாட்டேன் என்பது பிடிவாதம்

தமிழில் வரும் கட்டுரைகளை படித்து விட்டு ஆங்கிலத்தில் பின்னுட்டம் போடுவதும் பிடிவாதம்

தமிழில் நன்கு டைப் (டைப் இதுக்கு தமிழில் எப்படி சொல்வது ?)அடிக்க தெரிந்து கொண்டு தமிழில் பின்னுடம் போட மாட்டேன் என்று சொல்வதும் பிடிவாதம் இப்படி பல (பிடி)வாதங்களை வைத்துக்கொண்டு வாதாடுவதும் ஒரு வகை பிடிவாதமே !

ZAKIR HUSSAIN said...

பேச்சு பேச்சா இருக்கும்போது யாருப்பா தெரியாமெ ரிமோட் கன்ட்ரோல்லெ உட்கார்ந்தது....திடீர்னு ஹிந்தி ஸ்டேசன் / அரபி ஸ்டேசனுக்கு எல்லாம் மாறிடுச்சுல்ல..

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…
//பேச்சு பேச்சா இருக்கும்போது யாருப்பா தெரியாமெ ரிமோட் கன்ட்ரோல்லெ உட்கார்ந்தது....திடீர்னு ஹிந்தி ஸ்டேசன் / அரபி ஸ்டேசனுக்கு எல்லாம் மாறிடுச்சுல்ல..//



பாவம் ரிமோட் நாரிப்போய் இருக்கும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சபீர் காக்கா அஸ்ஸலாமு அலைக்கும்.
// மூன்றாவது நான்காவது மொழிக்குச் செல்வது சற்றே விதன்டாவாதம்தான். தவிர, இறைவன் நம்மைப் படைத்தது அவனை வணங்கத்தான் அல்லவா? மொழி வளர்க்கவல்ல. ஆமெனில், வணக்கத்திற்குரிய மொழியைத்தானே தங்கள் பாஸ் முதல் என்று சொல்லியிருக்க வேண்டும்? ஏன் தாய்மொழி முதலில்? மேலும், தங்கள் பாஸ் சொல்வதைவிட இறைவசனமோ நபிமொழியோ சொன்னால் மட்டுமே இங்கு நீங்கள் ஆதாரமாகத் தர முடியும்//

நாம் அரபு மொழியோடு பிறக்கவில்லை. எனவே வணங்குவதற்கு நேரடியாக அரபு மொழிக்கு செல்ல முடியாது. நாம் தாய் மொழியிலிருந்து தான் செல்ல முடியும். வீட்டில் உம்மா, வாப்பா, மனைவி, மக்களிடம் அன்றாட நிகழ்வுகளில் தாய் மொழியே பிரதானமாக இருக்க முடியும். அதனால் தான் நாம் பெயர் வைப்பது கூட அரபியில் இருக்கனும் என்று கட்டாயம் இல்லை. அதனால் தான் முன்னோர்கள் பெயர்களோடு தம்பி, அம்மாள், கனி, பிச்சை என்றெல்லாம் சேர்த்து இருக்கார்கள். காலஞ்சென்ற கண்ணியமிகு அலிய் ஆலிம் அவர்கள் பெயர் வைக்கும் போது தமிழில் உச்சரிக்க தகுதியான பெயரை வைக்குமாறு சொல்லக் கேட்டிருக்கிறேன். எனவே தாய் மொழி முதலிடத்துக்கு சான்று இருக்கு தானே. அப்ப எங்க பாஸு சொல்வதும் சரியாகத் தானே தெரிகிறது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//ZAKIR HUSSAIN சொன்னது…
பேச்சு பேச்சா இருக்கும்போது யாருப்பா தெரியாமெ ரிமோட் கன்ட்ரோல்லெ உட்கார்ந்தது....திடீர்னு ஹிந்தி ஸ்டேசன் / அரபி ஸ்டேசனுக்கு எல்லாம் மாறிடுச்சுல்ல..//

அஸ்ஸலாமு அலைக்கும்
ஆமாம் காக்கா
இங்கே தமிழ் (த)நிலத்தில் இங்லீசு,ஹிந்தி, அரபி என எதோ கருத்திடுறாங்க ஒன்னும் புரியலே ,ன்னு பேசிக்கிடுறாங்க பாஸு

Unknown said...

//Shameed சொன்னது…
தமிழ் தெரிந்து கொண்டு தமிழில் பின்னுட்டம் போட மாட்டேன் என்பது பிடிவாதம்

தமிழில் வரும் கட்டுரைகளை படித்து விட்டு ஆங்கிலத்தில் பின்னுட்டம் போடுவதும் பிடிவாதம்

தமிழில் நன்கு டைப் (டைப் இதுக்கு தமிழில் எப்படி சொல்வது ?)அடிக்க தெரிந்து கொண்டு தமிழில் பின்னுடம் போட மாட்டேன் என்று சொல்வதும் பிடிவாதம் இப்படி பல (பிடி)வாதங்களை வைத்துக்கொண்டு வாதாடுவதும் ஒரு வகை பிடிவாதமே !//

ம்ஹூம் எத்தனை பிடிவாதங்கள்?

பேசாம அதிரை நிறுபர அதிரை ரிப்போர்டர்னு(adirai reporter) மாத்திட்டா ஆங்கிலத்தில் நமக்கும் தட்டுவதற்கு இலகுவாகி விடும். நிருபர் காக்கா மார்கள் தான் பதில் சொல்லணும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//Wherever Tamilans are living Tamil is living. //

அமீன் காக்கா அஸ்ஸலாமு அலைக்கும்

பெயரளவில் தமிழன், இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறையில் அவன் தமிழன் என சொல்லக் கூட தயங்குவான்.

Shameed said...

Abu Mus'ab சொன்னது…

//பேசாம அதிரை நிறுபர அதிரை ரிப்போர்டர்னு(adirai reporter) மாத்திட்டா ஆங்கிலத்தில் நமக்கும் தட்டுவதற்கு இலகுவாகி விடும். நிருபர் காக்கா மார்கள் தான் பதில் சொல்லணும்.//

காக்கா மாறு வர்றது ஒருபக்கம் இருக்கட்டும் (நெய்ன)தம்பி மாற காணமே யாராச்சும் கேட்டியலா!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//பேசாம அதிரை நிறுபர அதிரை ரிப்போர்டர்னு(adirai reporter) மாத்திட்டா ஆங்கிலத்தில் நமக்கும் தட்டுவதற்கு இலகுவாகி விடும். //

அப்பரம் எதுக்கு அதிரைக்கு ரிப்போர்ட்டர்

WORLD REPORTER ஆக மாத்திடலாமே!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//காக்கா மாறு வர்றது ஒருபக்கம் இருக்கட்டும் (நெய்ன)தம்பி மாற காணமே யாராச்சும் கேட்டியலா!//

தமிழின் மகத்துவம் பற்றி தாய் மண்ணில் விசாரணையில்......

Unknown said...

//Shameed சொன்னது…
காக்கா மாறு வர்றது ஒருபக்கம் இருக்கட்டும் (நெய்ன)தம்பி மாற காணமே யாராச்சும் கேட்டியலா!//

அவுக ஊரு பக்கமா போயிருக்கிறதா கேள்வி.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஒஹையோ குதைமாசு
இதுவும் சோறு போட்ட மொழி私たちはアラビア語を持って生まれていません。とアラビア語に直接移動することができるように祈っています。我々はタイ語から行くことができます。主にタイ語で家の中でウンマ、子供、妻、毎日人々は、することができます。私たちは名前​​もアラビア語である必要はありません置く理由です。だからこそ名前を持つ私の祖先、マダム、道に沿って施しのためにフルーツ、外観。 Aliy kanniyamiku後半アリム名は、彼らが適切な呪文の名前を入れるように頼まれたとき。タイ語では、ナンバーワンのレコードになることです。だから、唯一の右pasuようだ。

Unknown said...

" Abu Mus'ab சொன்னது…
//Shameed சொன்னது…
தமிழ் தெரிந்து கொண்டு தமிழில் பின்னுட்டம் போட மாட்டேன் என்பது பிடிவாதம்

தமிழில் வரும் கட்டுரைகளை படித்து விட்டு ஆங்கிலத்தில் பின்னுட்டம் போடுவதும் பிடிவாதம்

தமிழில் நன்கு டைப் (டைப் இதுக்கு தமிழில் எப்படி சொல்வது ?)அடிக்க தெரிந்து கொண்டு தமிழில் பின்னுடம் போட மாட்டேன் என்று சொல்வதும் பிடிவாதம் இப்படி பல (பிடி)வாதங்களை வைத்துக்கொண்டு வாதாடுவதும் ஒரு வகை பிடிவாதமே !//

ம்ஹூம் எத்தனை பிடிவாதங்கள்? "

படித்ததில் பிடித்தவை

தாஜுதீன் (THAJUDEEN ) said...

எனக்கு தெரிந்தவரை, சகோதரர்கள் ஜஃபர் சாதிக், அபூ முஸ்ஹப், மான் அ சேக், சாவன்னா காக்கா உங்கள் அனைவருக்கு நண்பன் அமீன் உங்கள் அனைவரைவிடவும் வயதில் இளையவர்.

அமீன் தம்பி என்று அழையுங்கள்..

//M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
//பேசாம அதிரை நிறுபர அதிரை ரிப்போர்டர்னு(adirai reporter) மாத்திட்டா ஆங்கிலத்தில் நமக்கும் தட்டுவதற்கு இலகுவாகி விடும். //

அப்பரம் எதுக்கு அதிரைக்கு ரிப்போர்ட்டர்

WORLD REPORTER ஆக மாத்திடலாமே!//

தனித்தன்மையோடு அதிரைநிருபராக இருக்கட்டும்.

ஒருவரின் கருத்து எந்த மொழியில் இருந்தாலும் அது நமக்கு புரிந்தால் ஏற்றுக்கொள்ளலாம் இல்லை என்றால் அந்த கருத்தை கண்டுக்கொள்ளாமல் இருக்கலாம். இந்த நீண்ட உரையாடல்களில் நான் உணர்ந்தது. இதுவே சரியானது என்று எல்லோரும் எண்ணுவீர்கள் என்று நம்புகிறேன்.

அழகான தமிழ் மொழியால் இந்த தளத்தில் உரையாடுவதற்கு யாருக்கும் கஷடமில்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//தனித்தன்மையோடு அதிரைநிருபராக இருக்கட்டும்.//

தனித் தன்மை + தமிழ்த்தன்மையும் வேண்டும்
அதை தானே சொல்கிறோம்

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

யாருப்பா அது 150துக்கு பேட்டை தூக்கி காட்டிக்கிட்டு மைதானத்துலே தல தெறிக்க ஓடுறது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//யாருப்பா அது 150துக்கு பேட்டை தூக்கி காட்டிக்கிட்டு மைதனத்துலே ஓடுறது!!!!!!//

இப்ராஹிமாகத் தான் இருக்கும்

sabeer.abushahruk said...

தீர்ப்பு:
 
எங்கள் அதிரை நிருபர் தளத்தின் பல பங்களிப்பாளர்கள், வாசகர்கள், நேசங்களுக்கெல்லாம் நாட்டாமையாக…மன்னிக்கவும்…வாத்தியாராகத் திகழ்ந்த மதிப்பிற்குரிய NAS சார் அவர்களின் மேற்காணும் பின்னூட்டமே அதிரை நிருபரின் தீர்ப்பாகச் சொல்வதில் சாருக்கு  மரியாதையும் பேசுபொருளுக்கு நீதியையும் வழங்கிக் கொள்கிறோம். 
 
ஸாரின் தமிழ் தீர்ப்பு ஆங்கிலத்திற்கு சாதகமாக இருப்பதை தமிழ் மூச்சு விட்டு தமிழ் தாகம் தகிப்போர் உணர்வார்கள் என்று நம்புகிறேன். தமிழில்தான் எழுதியிருக்கிறது ஆனால், ஷன்முகம் சார் நடத்தினால்தான் விளங்கும் என்று ஏங்குவோருக்காக அந்தத் தீர்ப்பை யாராவது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இலகுவாக்குங்கள்.
 
மேலும், தான் இறங்கி விளயாடும் வாலிபால் விளையாட்டைத் தவிர மற்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் எங்கள் சாரின் தீர்ப்பு சரியாகவே இருக்கும் என்பதற்கு நான், ஹமீது, ஜாகிர் போன்றோர் சாட்சியாக இருக்கிறோம்.
 
Sabeer Ahmed

Unknown said...

" Abu Mus'ab சொன்னது…
அன்புச் சகோதரர்களுக்கு,
இங்கே ஆங்கிலமா, தமிழா எனும் விவாதத்தை விட நாம் இங்கு கவனம் செலுத்த வேண்டியது ஒரு மொழியில் கட்டுரை வந்தால் அதற்கு வேறொரு மொழியில் பின்னூட்டம் இடலாமா கூடாதா என்ற கோணத்தில் விவாதம் நடத்தினால் சரியாக இருக்கும்.

நாம் மீண்டும் மீண்டும் இங்கே கவனத்திற்கு கொண்டு வருவது இதுதான், " எந்த மொழியில் கட்டுரை வருகிறதோ அதே மொழியில் பின்னூட்டம் இட்டால் பதில் எழுதுபவருக்கும் இலகுவாக இருக்கும். இந்த கருத்தை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை ."

மிக சரியாக சொன்னீர்கள் சகோதரரே ,

இதை தான் நானும் என்னுடைய பின்னூட்டத்தில் கூறியுள்ளேன் , அதுதான் மிகவும் சரியான தீர்வாக அமையும்,
இதை கண்டுகொள்ளாமல் இருப்பது கவலையாக உள்ளது ..

இந்த கருத்தை AN எடிட்டர் கும் ஈமெயில் மூலம் தெரிய படுத்தி உள்ளேன் என்பதை இங்கே பதிய விரும்புகிறேன்

Unknown said...

//தாஜுதீன் சொன்னது…

ஒருவரின் கருத்து எந்த மொழியில் இருந்தாலும் அது நமக்கு புரிந்தால் ஏற்றுக்கொள்ளலாம் இல்லை என்றால் அந்த கருத்தை கண்டுக்கொள்ளாமல் இருக்கலாம். இந்த நீண்ட உரையாடல்களில் நான் உணர்ந்தது. இதுவே சரியானது என்று எல்லோரும் எண்ணுவீர்கள் என்று நம்புகிறேன்//

முக்கிய விஷயங்களில் மாற்று கருத்து இடுவோர் ஆங்கிலத்தில் இடுவதாக இருந்தால் அதனை தமிழிலும் மொழி பெயர்த்து கருத்திட்டால் நல்லதாக இருக்கும். இல்லாத பட்சத்தில் அவதூருகளும் அதற்குரிய பதில்களும் எல்லோருக்கும் சென்று அடைவது கடினமே.

இவ்வாறு தமிழில் வரும் கட்டுரைக்கு மாற்று மொழியில் கருத்திடுவதால் பல சமயங்களில் உண்மை கருத்து எல்லோருக்கும் சென்று அடைய வாய்ப்பில்லை

இது ஆரோக்கியமான சமூகத்திற்கு நல்லதாக இருக்க முடியாது.

அதிரைக்காரன் said...

இட்டீஸ் வெரி இன்டரெஸ்டிங்க் டு கோ த்ரூ அவர் நேடிவ் ஃபோ(ல்)க்'ஸ் மல்டிப்ள் வ்யூஸ் ஆன் அதர் லாங்குஎஜஸ்.

Mozhi enpathu unarvukaLai pirarukkuth therivikkum Karuvi. Athu ethiraaLikkuth therintha moziyil irunthaalthaan ethirpaarkkum viLaivu eeRpadu.

நல்லாத்தானே எழுதிக்கொண்டிருந்தான் என்னாச்சு என்று யாரும் சொல்வதற்குள் நானே தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.

1) பதிவின் தலைப்பு " எந்த மொழி உங்கள் வழி?".இதன்படி அவரவருக்குத் தொடர்பு கொள்ள எந்த மொழி வசதி? என்ற கருத்துப்பரிமாற்றமே இவ்விழையின் நோக்கம் எனில் சகோ.அமீனின் ஆங்கிலக் கருத்துகள் அவருக்கு வசதி என்பதால் தவறல்ல. மாறாக,தமிழில் உரையாடும் இடத்தில் ஆங்கிலத்தில் கருத்திடக்கூடாது என்பதுபோல் சில சகோதரர்கள் கு(கொ?)திப்பது ஏனென்று தெரியவில்லை.

2) சகோ.அமீன்,நீங்கள் நினைக்கும் கருத்தை சொல்வது மட்டுமே உங்கள் நோக்கம் என்றால் உங்களுக்கு வசதியான எந்த மொழியிலும் (நேரில் பார்க்கும்போது சைகையாக இருந்தாலும் தவறல்ல:) தெரிவிக்கலாம். பிறருடைய கருத்தையும் எதிர்பார்ப்பதாக இருந்தால் இருவருக்கும் பொதுவான மொழியில் உரையாடுவதே சிறந்தது.இங்கு ஆங்கிலத்தில் கருத்திடுவதை எதிர்க்கும் சகோதரர்கள், தமிழ் மொழி மட்டும்தான் தெரிந்தவர்கள் என்று நான் நம்பவில்லை.

3) தமிழ் ஒன்லி சகோதரர்களுக்கு, சகோ.அமீனின் ஆங்கில பின்னூட்டங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது உண்மையல்ல. மாறாக, அதை நீங்கள் வாசிக்க விரும்பவில்லை என்றே கருதுகிறேன். அவ்வாறு புரிதலில் சிரமம் இருந்தால் அதற்காக உங்கள் மொழியாற்றலை வளர்த்துக்கொள்ள முயல்வதே சரியானது, குரல்வளையை நெறிப்பது சரியல்ல என்பது அடியேனின் கருத்து.
கூகில் அண்ணன் உதவியால் இலவசமாக 50 க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாம் என்பது தெரியும்தானே? http://translate.google.com/

4) சபீர் காக்கா! தமிழ் சோறு போடவில்லை என்பதும் சரியல்ல. தமிழ் நாட்டின் ஆட்சிமொழி ஆங்கிலமாக இருந்திருந்தால் ஆங்கிலமும் சோறு போட்டிருக்காது. தமிழார்வம் மிகைத்து தமிழ் வெறியர்களாக மாறிய சுயலாப அரசியல்வாதிகளே அதற்குக் காரணம் தமிழல்ல்.

5) நண்பன் ஜஹபர் சாதிக், அது எப்படி ராசா ஆங்கிலம் பேசினால் தமிழ் அழியும்? தமிழ் மட்டும் போதும் என்பதுதானே தமிழனை தனிமைப்படுத்தும். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிமையான மொழி எதுவுமில்லை என்று பாடிய பாரதியும் ஒன்ற்றுக்கு மேற்பட்ட மொழி அறிந்திருப்பதால்தானே அவ்வாறு சொல்ல முடிந்தது!

ஆக, அவரவருக்கு வசதிப்பட்ட வ(மொ)ழிகளில் கருத்திடுவதை வரவேற்போமே.

குறிப்பு: தாய்மொழிவழி கல்வியை ஆதரிப்பவன் நான் என்பதையும் நினைவூட்டி வைக்கிறேன்.

அன்புடன்,
N.ஜமாலுதீன்

Unknown said...

I respect Bro Abu Mus'ab and his comments, he only seems to be understanding this debate very clearly and input his valuable and respectful comments.

Unknown said...

அதிரைக்காரன் சொன்னது…

" 2) சகோ.அமீன்,நீங்கள் நினைக்கும் கருத்தை சொல்வது மட்டுமே உங்கள் நோக்கம் என்றால் உங்களுக்கு வசதியான எந்த மொழியிலும் (நேரில் பார்க்கும்போது சைகையாக இருந்தாலும் தவறல்ல:) தெரிவிக்கலாம். பிறருடைய கருத்தையும் எதிர்பார்ப்பதாக இருந்தால் இருவருக்கும் பொதுவான மொழியில் உரையாடுவதே சிறந்தது."

I Agree

" 3) தமிழ் ஒன்லி சகோதரர்களுக்கு, சகோ.அமீனின் ஆங்கில பின்னூட்டங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது உண்மையல்ல. மாறாக, அதை நீங்கள் வாசிக்க விரும்பவில்லை என்றே கருதுகிறேன். அவ்வாறு புரிதலில் சிரமம் இருந்தால் அதற்காக உங்கள் மொழியாற்றலை வளர்த்துக்கொள்ள முயல்வதே சரியானது, குரல்வளையை நெறிப்பது சரியல்ல என்பது அடியேனின் கருத்து.
கூகில் அண்ணன் உதவியால் இலவசமாக 50 க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாம் என்பது தெரியும்தானே? http://translate.google.com/ "

I disagree, people doesn't have a time to do all these,moreover they get irritated

sabeer.abushahruk said...

ஜமாலுதீன்,

இதத்தான் நான் ரொம்ப நேரமா கத்திக்கிட்டு இருக்கேன். வாங்க வந்து இப்படி பக்கத்திலே உட்காருங்கள்.

அப்புறம், நல்லா கவனமாப் படிங்க "நான் எனக்குத்தான் தமிழ் சோறுபோடுவதற்கான வேலை தரவில்லை" என்றேன். இது எனக்கு நேர்ந்தது. எப்படித் தவறாகும்? எல்லாத் தமிழருக்கும் என்று சொல்லவில்லை.

Unknown said...

பல நேரங்களில் அப்படி ஒரு மாற்றுக் கருத்து ஆங்கிலத்தில் பதியப் பட்டதையே சிலர் அறியாத நிலையும் உள்ளது. சில நேரங்களில் அவருக்கு பதில் சொல்பவர்கள் தாங்கள் தமிழில் செய்வதுடன் அவருடைய கருத்தையும் மொழி பெயர்ப்பு செய்யும் கட்டாய சூழலுக்கு உள்ளாக்கப் படுகிறார்.

இதுவும் (கட்டாய சூழலுக்கு உள்ளாக்கப்படுவதும்) ஒரு அறிவு தேடல் தானே. இதற்க்கு நீங்கள் சகோதரர் அமீனுக்கு நன்றி சொல்லணும்.

அபு ஆசிப்.

Unknown said...

please let us go to some other topic.
now more than 165 comments were registered than other topics.

I herewith request all of A.N. commentators to stop their fingers to touch their key board for
this vivaathakkalam.

abu asif.

அதிரைக்காரன் said...

Br. Canada Kadar. Actually you agreed my both comments that you quoted as you too commented in English. Isn't? :)

தமிழரிடம் தமிழில் மட்டுமே உரையாட வேண்டும் என்று கருத்திட்ட சகோதரர்கள்அமீனின் கருத்தை எதிர்க்கவில்லை. அவர் உரையாடும் மொழியையே எதிர்க்கிறார்கள்.

crown said...

தாஜுதீன் சொன்னது…

எனக்கு தெரிந்தவரை, சகோதரர்கள் ஜஃபர் சாதிக், அபூ முஸ்ஹப், மான் அ சேக், சாவன்னா காக்கா உங்கள் அனைவருக்கு நண்பன் அமீன் உங்கள் அனைவரைவிடவும் வயதில் இளையவர்.

அமீன் தம்பி என்று அழையுங்கள்.
-------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இதைத்தான் நான் முன்பு சொல்ல நினைத்தேன் . அமீன் தம்பிதான் நமக்கெல்லாம்(ஹைய்யா! நானும் இதில் சேர்ந்து கொண்டேனே)

அதிரைக்காரன் said...

சபீர் காக்கா. கடவுச்சீட்டு வைத்திராத நமது முன்னோருக்கு சோறு போட்டது வேறுமொழியல்ல. தமிழ்தான். தமிழ் இல்லாத பகுதிக்கு இடம்பெயர்ந்துவிட்டு தமிழ் சோறு போடவில்லை ஆணம் ஊத்தவில்லை என்பது சரியா?:)

Unknown said...

"அதிரைக்காரன் சொன்னது…

தமிழரிடம் தமிழில் மட்டுமே உரையாட வேண்டும் என்று கருத்திட்ட சகோதரர்கள்அமீனின் கருத்தை எதிர்க்கவில்லை. அவர் உரையாடும் மொழியையே எதிர்க்கிறார்கள்."

சிறு திருத்த அவர் உரையாடும் மொழியையே எதிர்க்கிறார்கள்.மொழியை அல்ல உரையாடும் இடத்தை .

adiraimansoor said...

அல்ப விஷயத்திற்க்காக பொன்னான நேரத்தை வீனடிக்க வேண்டியதாயிற்று
அல்லாஹ் மன்னிக்கனும்

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும், இந்த பதிவில் இது வரை ஆரோக்கியமான கருத்துக்கள் மிக கண்ணியமாக பரிமாறப்பட்டது.

இறுதியாக வந்த ஒரு சில கருத்துக்களில் தனிமனித தாக்குதல் மற்றும் விளங்குகளை வைத்து உவமான குறிப்பிட்ட பின்னூட்டங்கள் நம்மிடையே நட்பை அதிகரிப்பதற்கு பதில் நிச்சயம் வெறுப்பையே ஏற்படுத்தும் என்பதால் அந்த கருத்துக்களை நீக்கிவிட்டோம்.

இணையத்தால் இதயங்களை இணைப்போம்.

இது வரை விவாதித்தது போதும்.

விவாதிக்கப்பட்டவைகளில் எது சரி என்பதை இந்த தளத்தை வாசிக்கும் வாசகர்கள் தீர்மானிக்கட்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு