அதிரைத் திருமணங்களில் கொல்லைப்புற தட்சணைகள் !? 66

அதிரைநிருபர் பதிப்பகம் | May 27, 2013 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

கடந்த ஒரு மாதமாக அதிரையிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் திருமண சீசன் என்பது எல்லோரும் அறிந்ததே. அதிரையில் திருமணம் களைகட்டுகிறது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதெப்படி அதிரை திருமணங்கள் களைக்கட்டுகிறது என்பதை இந்தப் பதிவில் கொஞ்சம் மற்றொரு கோணத்தில் பார்ப்போம்!

ஒரு காலத்தில் வசதியானவர்கள் வீட்டுத் திருமணத்தில் பூவந்தி போன்ற நார்ஸாவும், மார்க்கம் வலியுறுத்திய வலிமாவாக தேங்காய்ச் சோறுடன் / நெய்ச்சோறுடன் 5 கறி சாப்பாடு அல்லது ஆட்டு இறைச்சி பிரியாணியும் சொந்தங்களுக்கும், வறியவர்களுக்கும் விருந்தாக இருந்தது. பிறகு உண்மையில்லாத கவுரவத்தை தலையில் சுமந்து, வரதட்சணை மூலம் போலி வசதி வாய்புகளை பெற்று, அவற்றை மூலதனமாக வைத்து ஊராருக்கு பகட்டு காட்ட தங்களுடைய சக்திக்கு மீறிய திருமண வைபவங்களில் வரம்பு மீறி செலவழிக்க தொடங்கினார்கள் மேலும் பலர். 

பின்னர் ஏகத்துவ பிரச்சார எழுச்சியால், பகிரங்கமாக வற்புறுத்தி வாங்கப்பட்ட வரதட்சணைகள் என்ற கேவலமான செயலை முஸ்லீம்களிடம் அழித்தெறிய அரும்பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்கள். ஆனால் நேரடியாக வரதட்சணை மூலம் கொள்ளையடித்த மணமகன் வீட்டார் வேறொரு வேடம் தரிக்க ஆரம்பித்து என் மகன் நஜாத்து, தவ்ஹீத் கொள்கைவாதி வரதட்சணைப் பணமா வாங்கினா ஏசுவான் என்று ஊராரிடம் பெருமையடிப்பது ஒரு புறமிருந்தாலும்,  கொல்லைப்புறம் வழியாக சீருசிராட்டு என்று வாங்க வேண்டியதை வாங்குவது வரதட்சணை என்ற கணக்கில் அது வராது என்று சொல்லி பண்ணுகிற அடாவடியும். இதுநாள் வரை குறைந்தபாடில்லை. அவைகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் நீண்டதொரு லிஸ்டே போடலாம். முன்கூட்டியே முடிவு செய்யப்படும் அந்த கைக்கூலியான வரதட்சணையே இந்த கொடுமைகளுக்கு தேவலாம் என்ற எண்ணத்திற்கு பெண் வீட்டார் தள்ளப்படுகிறார்கள். 

அப்படி என்னதான் நடைபெறுகிறது இதோ பின்வரும் தகவல்கள் ஓர் உண்மை(யான) காட்டு, மாறாக எந்தவொரு குடும்பத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற துளியளவு எண்ணத்தில் இது பதிக்கப்படவில்லை. மார்க்க வரம்பு, நபிவழி, வீண் விரையம் செய்ய வேண்டாம், என்று ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லுபவர்களே இதுபோன்ற காரியங்களுக்கு துணை போகிறார்கள் அல்லது கண்டும் காணாதவாறு உள்ளார்களே என்ற ஆதங்கத்தினாலே பதிக்கப்படுகிறது. இவ்வாறு சுட்டிக் காட்டப்படுபவைகள் ஏன் நமது வீடுகளில் கூட நடைபெற்றிருக்கலாம், இனி அவ்வாறு நடைபெறாமல் இருக்க நாம் துணிந்து போராட வேண்டும், அதற்காக வீட்டாரை தயார்படுத்த வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

களைகட்டும் அதிரை திருமணங்களில் உண்மையில் களைகட்டுகிறதா என்று பார்ப்போம்.
  • மணமகன் முதுநிலை பட்டதாரி, சென்னையில் வேலை செய்கிறான், திருமணத்திற்கு பின்பு வெளிநாட்டிற்கு போகப்போகிறான். தனக்கு மனைவியாக வரவேண்டியவள் படித்தவளாகவும் மார்க்க பற்றுள்ளவளாகவும், ஒழுக்கமுள்ளவளாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பது அவனின் கண்டிசன்.
  • மணமகன் குடும்பம் நல்ல வசதியான குடும்பம், வரதட்சணை எல்லாம் நாங்க வாங்க மாட்டோம், வரதட்சணை வாங்குவது கேவலம் என்று ஒரு மெகா சீரியல் பிரச்சாரம் செய்யும் குடும்பம். எங்கள் வீட்டில் யாருக்கும் நாங்க வரதட்சணை வாங்கியதில்லை, இனியும் யாருக்கும் வாங்க மாட்டோம். சொந்த வீடு ஊரிலும், பிற ஊர்களில் நிலங்களும் உள்ளது.
  • மணமகள், இளநிலை பட்டதாரி, ஆலிமாவும் கூட.
  • மணமகள் குடும்பம், தாய் பள்ளிக்'கொடம்' தாண்டி பள்ளிகூடம் தாண்டாவர்கள் ஆனால் மூத்த மகளை நல்லவளாக வளர்த்து சாதனை படைக்க வைத்தார்கள். கூடப்பிறந்தது ஒரு தங்கை, ஒரு தம்பி அனைவரும் நன்றாக படிக்கிறார்கள். தந்தை 23 வருடமாக வெளிநாட்டில் வேலை பார்த்து, தன்னுடன் பிறந்த ஒரே காரணத்திற்காக (அதிரையின் விதிப்படி) தன் இரு சகோதரிமார்களுக்கும் தனி வீடுகட்டி கொடுத்து, மீதியை தனது மூத்த பிள்ளைக்கு மட்டும் தனி வீடு கட்டி வைத்திருக்கும் ஒரு நடுத்தர சராசரி வரு’மானமுள்ளவர்’. மகள் திருமணத்திற்கு பிறகு அடுத்த மகளுக்கு வீடுகட்ட வெளிநாடு சென்றால் தான் முடியும் என்ற எழுத்தப்படாத விதி வேறு உட்பிரிவாக இருக்கிறது. 46 வயதான தகப்பனுக்கு High-BP, அடிக்கடி வரும் ஒற்றை தலைவலி (migraine) என்பது வேதனையான அந்த வயதுக்கேற்ற medical qualifications. பயிற்சிமுறை உணவு உட்கொள்ளும் மருத்துவ ஆலோசனைகளைக் கடைபிடித்து தன்னுடைய நோயை குணப்படுத்தி வந்தவருக்கு, மகளின் திருமணத்திற்காக பணம் ஏற்பாடு செய்யும் டென்ஷனில் மீண்டும் ஆங்கில மருந்துகளுக்கு அடிமையாகி போனவர்களில் இவரும் ஒருவர். ஆனால் தன்னுடைய மகள் கண்கலங்காமல் வாழனும் என்பதற்காக திருமண வேலையில் சுறு சுறுப்பாக ஈடுபடுகிறார்.
என்று மணமக்கள் குடும்பங்கள் பற்றிய குறிப்புகள்.

இதோ வரதட்சணை வாங்காத மணமகன் வீட்டாரின் கொல்லைப்புற அடாவடித்தனங்களைப் பார்ப்போம்.

1. பெண் பார்க்க வருகிறார்கள், எப்படியும் குறைந்தது 50 பேர்களுடன்
வருபவர்களுக்கு டி, பிஸ்கட்டு, மிக்சரு, 10 சஹன் அல்வா, டீ பிடிக்காதவர்களுக்கு ரோஸ் மில்க். இவ்வாறாக 13,000 ரூபாய் மணமகள் வீட்டு செலவு.

2. பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லி விட்டார்கள். அவங்க வரதட்சணைதான் வாங்கல, ஏதாச்சும் பண்ணிக்குடுக்க வேண்டாமா என்று 50 முர்தபாவும், கோழி பெரட்டலும், அனுப்பி வைக்கிறோம் என்று தூதுவர்கள் (இவர்களை பற்றி ஒரு தொடரே எழுதும் அளவுக்கு தூதுச் செய்திகள் இருக்கிறது) மூலம் மணமகன் வீட்டிற்கு சொல்லியனுப்பியாச்சு. 

வரதட்சணை வாங்காத அந்த புண்ணியக் குடும்பத்தில் உள்ள பெரிய மனுசியொருவர், சீர் செய்தியோடு வந்த தூதுவரிடம் “நாங்க பெரிய பிச்சளம் 50 முர்தபாவுலாம் பத்தாது, 200 முர்தபா அனுப்ப சொல்லுவுள” என்று சொல்லிவிட. அதுவும் ரெடியாகி அடுத்த நாளே மணமகன் இல்லத்திற்கு அவர்கள் கேட்ட 200 முர்தபா, கோழி பெரட்டல் அனுப்படுகிறது. 

இப்படி கொஞ்சம் கொஞ்சமா சீருசீராட்டுகள் நடைபெறுவதைக் அங்கொன்றும் இன்கொன்றும் கண்ட மணமகன், “ஏம்மா இதெல்லாம் வாங்குறீங்க, மார்க்கத்துல கூடாதும்மா” என்று கேட்க. “இல்ல வாப்பா நாமலா கேட்கல, எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க, வானா வானாங்க அனுப்புறாங்கம்மா. நாமலா கேட்டு வாங்கினாத்தானே பாவம், அவர்களா தந்தா அது தப்பில்லை வாப்பா” என்று சொல்லி மணமகனின் வாயை பஞ்சு வைத்து அடைக்கப்பட்டாகி விட்டது.

தன் குடும்பம் இது வரை மணமகள் வீட்டாரிடம் வாங்கிச் சாப்பிட்ட பிறகு, அந்த நிலையிலாவது மணமகன் வீட்டார் வாங்கியவைகளை திருப்பி கொடுத்தால்தான் நான் கல்யணம் செய்து கொள்வேன் என்று சொல்ல அந்த மணமகனை திடமற்றவனாக மாற்றி விடுகிறது குடும்ப கவுரவமும், தாய் பாசமும். ஆக 40,000/- மணமகள் வீட்டு செலவு.

3. திருமண கூப்பாட்டில் மணமகள் வீட்டார், மணமகனின் மாமாவையோ அல்லது சாச்சாவையோ அல்லது பேசிமுடித்துக் கொடுத்த மாமியையோ ஞாபக மறதியால் கூப்பிட தவறிய அந்த செய்தி மாப்பிள்ளையின் உம்மாவுக்கு தெரிய வந்தால், அவ்வளவுதான் மிகப்பெரிய வார்த்தைப் போர் ஆரம்பமாகிவிடும். இது ஒன்னு போதும் தலைமுறை தலைமுறையாக குறை சொல்ல. சரி மறந்துவிட்டோம் என்று, திருமணத்திற்கு ஒரு நாளைக்கு முன்பு திரும்பப் போய் அந்த மனுசனை / மனுசியை கூப்பிட போனால், உலக கவுரவக்காரர்களின் சங்கத் தலைவர் போல் இருந்து கொண்டு வறட்டு பிடிவாதத்தோடு செய்யும் சாட்டித்தனத்தால், மணமகளில் தந்தைக்கு இருக்கும் BP வியாதியை, இருதய நோயாகும் நிலைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு கூப்பிட மறந்த உறவுக்காரர்கள், மணமகள் குடும்பத்தை அலைக்கழிப்பார்கள்.

4. “இன்று இரவு 8 மணிக்கு செப்பு சாமான்களோடு, மணமகளுக்கு முகம் துடைக்க வருகிறோம், என்று சொல்லி நாங்க 50 பேர் வருகிறோம், 100 முர்தபா, கோழி, கடப்பாசி செய்து வைங்க, கடைல வாங்க வேண்டாம், வூட்ல பண்ணுங்க” என்று பகல் 3 மணிக்கு தூதுவர் மூலம் செய்தி அனுப்பப்படுகிறது. “உம்மாடியோவ் திடீர் என்று சொல்லியனுப்பிட்டாகலே, இது பெரிய குடும்பம்லே, வரதட்சணை வாங்காதவோ, புதுசா கேட்டுப்புட்டாஹலே” என்று மணமகள் வீட்டார், அடுத்த நாள் காலை ‘பசியார’வுக்காக தயாரித்து வைத்திருந்த பெருட்களை அரக்கப்பரக்க தயாரித்து, ஒரு வழியாக கேட்ட உணவு வகைகள் ரெடி. முகம் துடைத்து, சாப்பாடு சாப்பிட்டார்கள், அந்த நேரத்தில் மாப்பிள்ளையோட மாமிக்காரி ஒருத்தி சாப்பாட்டில் கோழி வெந்து கரைஞ்சு போச்சு என்று பெண் வீட்டாரிடம் பிரச்சினை பண்ணி, சந்தோசமாக இருக்க வேண்டிய அந்த இரவில் பெண்ணை பெற்றவர்களுக்கு பக் பக் என்று விடியும் வரை ஈரக்கொலையில் ஒரே படபடப்புதான். அன்றைய இரவு திடீர் விருந்தின் செலவு 20,000 ருபாய்.

5. பொதுவாக திருமண தினத்தில் நார்ஸா மணமகள் வீடு தான் கொடுப்பது வழக்கமாக உள்ளது. பெண் வீட்டின் வசதிக்கு தகுந்தாற் போல் பிஸ்கட், தம்ரூட், பூவந்தி என்று கொடுப்பார்கள். இதன் பின்னனி நிறைய பேர்களுக்கு தெரியாது. நிறைய வீடுகளில் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று சொல்லும் மணமகன் வீட்டார் தான் முடிவு செய்கிறார்கள். என்ன நார்சா மணமகள் வீட்டார் கொடுக்க வேண்டும் என்று. அந்த நார்ஸா எவ்வளவு விலையானாலும் பெண் வீட்டார் தான் வாங்க வேண்டும். இந்த கொடுமை வரதட்சணை வாங்கவில்லை என்று மார்தட்டிக் கொள்ளும் மாப்பிள்ளை வீட்டாரால் நடத்தப்படுகிறது. நார்சாவுக்கு என்று 5,000 ரூபாய் பட்ஜெட் என்று எண்ணிய பெண்ணின் தந்தைக்கு மேலும் 45,000 ரூபாய் கூடுதல் செலவு.

6. வரதட்சணை தான் நாங்க வாங்கவில்லை, காலை பசியார 100 சஹன் தாருங்கள் என்று கேட்டு வாங்கிய பின்பும், சாப்பாடு பற்றாக்குறை என்று சொல்லி மீண்டும் மணமகள் வீட்டாரிடம் இன்னும் 25 சஹன் அனுப்புங்கள் என்று கல்யாண காலைல கொடுக்குற இனிமா இருக்கிறதே. அல்லாஹு அக்பர். மாப்பிளை வீட்டுக்கு காலை பசியார செலவு: 1,25,000/- ரூபாய்.

7. திருமணம் முடிந்த நாள் முதல் குறைந்த பட்சம் 3 நாட்களுக்காவது, மாப்பிள்ளையுடன், மணமகள் வீட்டிற்கு காலை பகல் இரவு என்றும் அதனைத் தொடர்ந்து திருமணநாள் வர இயலாதவர்கள் லிஸ்ட் என்று ஒன்று போட்டு அவர்களுக்கு சாப்பாடு என்று எகிறும் செலவினங்களை நினைத்தால் கண்ணை கட்டும். உம்மாடி இந்த குடும்பத்திலையா நாம சம்பந்தம் கலந்தோம் என்று பெருமூச்சுவிட வைக்கும் பெண்ணை பெத்தவர்களுக்கு. மணமகள் இல்லத்தில் அந்த 3 நாட்களுக்கு ஏற்படும் செலவு ரூ 50,000/-.


இப்படி கொல்லைப்புறத்து வரதட்சணை லிஸ்ட்டை சொல்லிக் கொண்டே போகலாம். மேலே சொல்லப்பட்டவைகளில் சில நாம் சந்தித்திருக்கலாம், ஆனால் அத்தனையும் ஊரில் நடைபெறுகிறது, மேலும் நிறைய கொல்லப்புர வரதட்சணை கொடுமைகள் நடைபெறுகிறது.

மேலே சொல்லப்பட்டவைகளில் இருந்து கணக்கிட்டு மொத்தம் பார்த்தால், 2,98,000/- ரூபாய் தெருவாசல் வழியாக வரதட்சணை வாங்காத திருமணத்திற்கு கொல்லைப்புறத்தில் கொடுக்கப்பட்ட வரதட்சணைக்கு ஏற்பட்ட செலவும் (இவைகள் தோராய பட்ஜெட்).

வரதட்சணை வாங்காத தவ்ஹீத் மாப்பிள்ளை, தப்லீக் மாப்பிள்ளை என்று வெளிப்புறத்தில் ஒரு தோற்றம், சீர் சீராட்டு, பசியாற, முகம் துடைப்பு சாப்பாடு, பெண் பார்த்தல் உணவு என்று மறைமுகமாக வரதட்சணை வாங்கப்படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது மற்றொரு புறம். இது தான் நபி வழியா? இதற்கெல்லாம் எங்கே ஆதாரம் உள்ளது?

இவைகள் திருமணம் விருந்து உபசரிப்பு என்று நமக்கு மேலோட்டமாக தெரிந்தாலும், வெளித்தோற்றத்தில் நடைபெறும் ஒவ்வொரு திருமண தினத்திலும் பெண்ணை பெற்றவர்கள் சந்தோசமாக இருப்பது போல் தெரிந்தாலும், அந்த திருமண நிகழ்வுக்கு பின்னால் நாம் மேற்சொன்ன மணமகன் வீட்டாரின் அடாவடிகளால் பொருளாதார ரீதியாகவும் உளரீதியகவும் பாதிக்கப்பட்ட பெண்ணை பெற்றவர்களின் சோகக்கதைகள் எண்ணிலடங்காதவை. பெண் பிள்ளை திருமணத்திற்கு பின்பு சந்தோசமாக இருந்தாலும், பேரக்குழந்தைகள் கிடைத்தாலும், தட்டுத் தடுமாரிய தருணங்களில் திருமண நேரத்தில் மணமகன் வீட்டார் செய்தவைகள் மறக்க முடியாத நிகழ்வாகவே நிலைத்து விடுகிறது.

இங்கு குறிப்பிட்டது அல்லாமல், இன்னும் 'சீர்'கேடுகளும் இருக்கத்தான் செய்கிறது, பின்னூட்த்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். இவைகள் அனைத்தும் படிப்பினை பெறுவதற்கே அன்றி வேறில்லை !

இது போன்ற வரதட்சணைகள், சீர்களை அறவே புறந்தள்ளிவிட்டு மிகவும் எளிமையாக, செலவுகள் குறைவாகவும், வீண் விரையம் இன்றியும் திருமணங்களும் நமதூரில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

சீர் என்று மாற்று பெயரில் இருக்கும் இந்த வரதட்சணை நம் சமூகத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும். பெண் வீட்டார் இவ்விசயத்தில் இனி கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளுங்கள் அது உங்களுக்கிடையே அன்பை வளர்க்கும் - நபிமொழி, ஆனால் கேட்டுப் பெறுவதற்கு அன்பளிப்பு என்ற ஒரு போர்வை நபிவழியல்ல, அது யாசகம் !

நபிவழிக்கு புறம்பான இத்தீய காரியமான சீர்களுக்கு நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவுகள் அளித்து வந்திருந்தால், அல்லாஹ்விடம் தவ்பா செய்வோமாக. இது போன்ற பாவங்களிலிருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆமீன்.

அதிரைநிருபர் பதிப்பகம்

66 Responses So Far:

Ebrahim Ansari said...

எனக்குத் தெரிந்து ஒரு திருமணம்.

மாப்பிள்ளை தவ்ஹீது இயக்கத்தில் இருப்பவர். பெண் வீட்டில் பெண்ணுக்காக சேர்த்துவைத்திருந்த நகைகளைப் போட்டுவிட்டார்கள். பெண்ணை அனுப்பும்போது எவ்வளவு நகை போட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். முப்பத்தி ஐந்து பவுன் என்று பெண்வீட்டார் சொன்னார்கள்.

அடுத்த இரண்டு நாள் கழித்து பெண் வீட்டின் பொறுப்பாளியை தவ்ஹீது மாப்பிள்ளையின் பொறுப்பாளி வீட்டுக்கு அழைத்து கையில் ஒரு பேப்பரைக் கொடுத்தார்கள்.

அதன்படி பெண்ணுக்குப் பெண் வீட்டார் போட்ட நகைகளின் லிஸ்டும் அதை ஒவ்வொன்றாக எடை போட்டுப் பார்த்த விபரமும் இருந்தது. அதில் நகைளை கோர்க்கப் பட்ட நூலின் எடை, பவளத்தின் எடை, கற்களின் எடை யாவும் ஒரு பொற்கொல்லரால் அளவிடப்பட்டு கழிக்கப்பட்டு முப்பத்தி ஐந்து பவுன முழுதாக இல்லை. ஆகவே மேலும் ஐந்து பவுன் குறைகிறது என்று சொல்லி அதையும் போட்டுவிடுங்கள் என்று சொன்னார்கள்.கூலி சேதாரம் ஜாய் அலுக்காசில் மட்டும் சார்ஜ் செய்வதில்லை என்பதற்கு இது உதாரணம்.

வரதட்சணை வாங்காமல் மகர் கொடுத்து மணமுடித்தோம் என்பதெல்லாம் பலர் வெளிப்பகட்டுக்காகவே செய்கிறார்கள். உண்மையில் பெண்களைப் பெற்றோரின் துயரம் குறையவே இல்லை. திருமண விருந்தைக் கூட முழுச்செலவையும் பெண்வீட்டார் தலையில் கட்டிவிட்டு, வலீமா விருந்து கூட கொடுக்காமல் தப்பித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான கொடுமை என்னவென்றால் மகர் கொடுக்கப் பட்டு மணம் முடிக்கபப்ட்ட பெண்களை மாமனார் மாமியார் மாப்பிள்ளை ஆகியோர் ஒன்றும் சொல்லாவிட்டாலும் மாப்பிள்ளையின் மற்ற உறவினர்கள் - உடன் பிறந்தோர் - ஒரு இளக்காரமாக பேசுவது- நீ என்ன கொண்டுவந்தாய் என்று குத்திக் காட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்குவது இவையெல்லாம் படித்தவர்கள் மத்தியில் கூட இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இவைகளும் ஒழிந்தால்தான் உண்மையான நபிவழித்திருமணம் நடைபெற்றதாக அர்த்தம்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்...]

என்னதான் கழுதைபோல் கத்தினாலும் "மனிதனாய் பார்த்து திருந்தா விட்டால்..... "ஒழிக்க" முடியாது.

அது கெடக்கட்டும். காலை ஆறு மணிக்கு அ.நி. திறந்த என்னைக் கவர்ந்தது பெண் வீட்டார் கொடுத்த முர்த்தபா+ரொட்டியும்தான். அதைஅவர்கள் வரதட்சனைக்கு Barter செய்து கொண்டது பெரிய பாவம் அல்ல; என்னதான் ஒளிவு மறவா வாங்குனாலும் அடுத்த வாசல்லே உள்ள என்னை "பசியாற வாங்க மாமா"ன்னு ஒரு வார்த்தை கூப்பிட்டா கொறஞ்சா போயிடும்?. அடி பாவிங்களா.? நீங்க வேற ரொட்டி முர்த்தபா ரெண்டயும் படம் புடிச்சு காலங்காத்தாலே போட்டு காட்டுனியலா அதை பாத்த என் நபுசு பறக்குதுங்க!.

S.முகம்மது பாருக்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம்மூரில் சில பேர் குறிப்பாக பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சில வீட்டு குமர்களுக்கு அவர்கள் வீட்டில் கேட்டுக்கொண்டோ அல்லது கேட்டுக்கொள்ளாமல் அவர்களாலேயே சில வீடுகளில் மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்து அந்தக்குமரை கரை சேர்க்க உதவியதற்காக இரு வீட்டினரிடமோ அல்லது பெண் வீட்டினரிடமோ கமிஷன் வாங்கித்திரிகிறார்கள் புரோக்கர்களாக. இவர்களெல்லாம் ஏழை,பாளையமாக இருந்தால் கூட இந்த செயல் பெரும் பாவமே. ஆனால் வீட்டில் நல்ல வசதிவாய்ப்புகளும், பிள்ளைகளின் வெளிநாட்டு சம்பாத்தியங்கள் இருந்தும் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குமரை கரை சேர்க்கிறேன் என்று சொல்லி பல குமர்களை பாழும் கிணற்றில் தள்ளிய கதைகளும் உண்டு. நம்மூரில் விவரம் தெரிந்ததாக சொல்லப்படும் பெண்களும், ஆண்களும் எதற்காகத்தான் இந்த அட்டூழியங்களை இன்னும் அரங்கேற்றி வ‌ருகிறார்க‌ள் என‌ தெரிய‌வில்லை.

ப‌ள்ளிக்கூட‌த்தில் முன் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டால் ந‌ல்ல‌ மாண‌வ‌ர்க‌ள் என‌ எல்லோராலும் அழைக்க‌ப்ப‌டுவ‌து போல் ப‌ள்ளிவாச‌லில் முன் ச‌ஃபில் நின்று தொழுது விட்டால் அல்லாஹ்விட‌மும், ம‌க்க‌ளிட‌மும் ந‌ல்ல‌ பெய‌ர் எடுத்து ஈருல‌க‌ பாக்கிய‌ங்க‌ளை எல்லாம் எளிதில் அடைந்து கொள்ள‌லாம் என‌ நினைத்துக்கொண்டார்க‌ள் போலும். அவ‌ர்க‌ள் நினைப்பில் ம‌ண் விழும் கால‌ம் அவ‌ர்க‌ளுக்கு ச‌மீப‌த்திலேயே அல்லாஹ்வால் நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தை அவ‌ர்க‌ள் நினைக்க‌ ம‌றுக்கின்ற‌ன‌ர்/ம‌ற‌க்கின்ற‌ன‌ர்.

ந‌ம்மூரில் தொண்டுதொற்று வ‌ரும் மார்க்கத்திற்குப்புரம்பான ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளையும், முஸ்லிம் ம‌க்க‌ளின் செய‌ல்பாடுக‌ளையும் எவரேனும் உரிய முறையில் கிண்டிக்கிழ‌ங்கெடுக்க‌ ஆர‌ம்பித்து விட்டால் அதிரையில் பிற‌ந்த எவ‌ரும் ஆன‌ந்த‌ப்ப‌ட‌மாட்டார் வேத‌னைப‌டுவ‌தை தவிர‌..........

தூய‌ மார்க்க‌ப்ப‌டி வாழ‌க்கூடிய‌வ‌ர்க‌ளே அக்கால‌ ச‌ஹாபாக்க‌ளின் தியாக‌ங்க‌ளைத்தாண்டி எவ‌ரும் சுவ‌ர்க்க‌த்தில் எளிதில் நுழைந்து விட‌ முடியாது என‌ அல்லாஹ் அருதியிட்டு கூறும் பொழுது அதிரையில் பிற‌ந்த‌ நாம் எம்மாத்திர‌ம்? என்ன‌ நிலை ஏற்ப‌டும்? அதை நினைக்க‌யில் ப‌ய‌ங்க‌ர‌ம் எம் உள்ள‌த்தை சூழ்ந்து கொள்கிற‌து. அச்ச‌ம் உச்சி முத‌ல் உள்ள‌ங்கால் வ‌ரை ஆட்கொண்டு விடுகிற‌து நாம் அன்றாட‌ம் அல்லாஹ்விற்காக‌ செய்யும் சிறு,சிறு அம‌ல்க‌ளைத்தாண்டி..........

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சில‌ர் ஊரில் இருக்கிறார்க‌ள் வ‌ர‌த‌ட்சிணைக்கும் எங்க‌ளுக்கும் ரொம்ப‌ தூர‌ம் என்று ப‌ந்தா காட்டிக்கொண்டு த‌ன் வீட்டு ஆண் பிள்ளைக‌ளுக்கு ஒரே ஒரு பெண் பிள்ளையை பெற்ற‌ வீடுக‌ளாய்ப்பார்த்து திரும‌ண‌ம் பேசி முடித்து அந்த‌ பெண்ணுக்குத்தான் அந்த‌ வீட்டில் உள்ள‌ அனைத்து ந‌கை, வீடு, சொத்து, ப‌த்து எல்லாம் வ‌ந்து சேரும் என்ற‌ தொலைநோக்கு பார்வையில் ரொம்ப‌ க‌ச்சித‌மாக‌ பேசி முடிக்கிறார்க‌ள். இதுவும் ஒரு வ‌கையான‌ வ‌ர‌த‌ட்சிணையே. ஆனால் இப்ப‌டி ரொம்ப‌ த‌ந்திர‌மாக‌ முடிக்க‌ப்ப‌ட்ட‌ திரும‌ண‌ங்க‌ளின் ஆண் ம‌க‌ன் வீட்டில் ஐந்து, ஆறு ஆண் பிள்ளைக‌ள் இருந்தும் அல்லாஹ்வின் ச‌க்கினா என்னும் அமைதி இல்லை. ப‌ண‌த்திற்கு பிர‌ச்சினை. இன்னும் வீட்டிற்கு வ‌ந்த‌ ம‌ரும‌க‌ன் பிர‌ச்சினை என‌ இப்ப‌டி அடுக்கிக்கொண்டே போக‌லாம். அல்லாஹ்வை என்ன‌ இழிச்ச‌வாய‌ன் என்று எண்ணிக்கொண்டாயா? உன் வீட்டிற்குள்ளேயே எப்ப‌டியெல்லாம் உன்னை ஆட்டிப்ப‌டைத்து உன் வீட்டிற்குள்ளேயே உன்னை எப்ப‌டி சிறை வைக்க‌ முடியும் என‌ அவ‌னுக்கு ந‌ன்கு விள‌ங்கும் என்ப‌தை ம‌ற‌வாதே.......ஊர் சொத்திற்காக‌ க‌ள‌ம் இற‌ங்கும் இவ‌ர்க‌ள் த‌ன் வீடு சொத்தில் ஒரு அடி கூட‌ உட‌ன் பிற‌ந்த‌வ‌னுக்கு கூட‌ விட்டுக்கொடுக்காத‌ க‌போதிக‌ள் இவ‌ர்க‌ள்.....

அர‌ச‌ன் அன்றே கொல்வான்; அவ‌னைப்ப‌டைத்த‌ அல்லாஹ்வோ நின்றும் கொல்வான், நிற்காம‌லும் கொல்வான். அது அவ‌ன் விருப்ப‌ம்........

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பெண் வீட்டில் 3 ல‌ட்சங்களை வாட்டி வதக்கி வ‌ர‌த‌ட்சிணையாக‌ வாங்கி அதை அப்ப‌டியே கொண்டு போய் சென்னை அப்ப‌ல்லோவில் கொடுத்து இருத‌ய‌ அறுவை சிகிச்சை செய்து வ‌ந்த‌வ‌ர்க‌ளும் உண்டு. கேவ‌ல‌ம்....கேவ‌ல‌ம்...கேவ‌ல‌ம்....ந‌ம்மூர்கேவ‌ல‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிட‌ வெளியூர்க்கார‌ர்க‌ள் தான் முற்றிலும் அருக‌தையான‌வ‌ர்களும், தகுதியானவர்களும் ஆவர். ஆலிம்சாமாருவொலே பொண்டாட்டி ஊட்ல‌ த‌ங்கி இருக்கும் பொழுது எப்ப‌டீங்க‌ இந்த‌ விச‌ய‌த்தை ப‌ற்றி எவரும் ஆணித்த‌ர‌மாக ஊரில் பேச‌ முடியும்? எழுத‌ முடியும்?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அதுனால தான் நம்மூர்ல எப்பேர்ப்பட்ட பணக்காரவொளா இருந்தாலும் பொம்புளப்புள்ள அடுத்தடுத்து பொறந்துருச்சின்னா மூஞ்சி காத்து புடுங்க அட்ட(பலூன்) மாதிரி சுருங்கிப்போயிடுது....பெண் பிள்ளைகள் பிறந்தால் அவ்வீட்டில் பரக்கத் வந்து சேரும் என்று நம் மார்க்கம் சொல்கிறது...ஆனால் நம் ஊரில் எல்லாம் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. இதெற்கல்லாம் யார் காரணம்???

இன்னொரு அட்டூழியம் : கடைசி வரை வயதான வாப்பா,உம்மாவை வச்சி பார்ப்பாள் என அந்த வீட்டு பெண்ணுக்கு வீட்டினர் பல லட்சங்கள் மதிப்பிலான நகை, வீடு, சொத்து சுகங்களை கண்ணை மூடிக்கொண்டு எதையும் யோசிக்காமல் எழுதி கொடுக்கின்றனர். பின்னர் மாப்பிள்ளை திருமணத்திற்குப்பின் (இவ்வொ மார்க்கப்படி மனைவி மக்களோட ஒன்னா இருந்து வாழப்போறாகளாம்....) எல்லாம் எழுதி வாங்கி வைத்துக்கொண்ட பின் அந்த வீட்டின் ஒரே பெண்ணை கூட‌ அவ‌ர்க‌ள் ப‌ணி/வியாபார‌ம் செய்யும் இட‌ங்க‌ளுக்கும், வெளிநாடுக‌ளுக்கும் வீட்டில் அந்த‌ பெண்ணின் வ‌ய‌தான‌ வாப்பா, உம்மா எக்கேடு கெட்டு செத்தொழிந்தால் ந‌ம‌க்கென்ன‌? எப்ப‌டியாவ‌து அவ‌ர்க‌ள் சீக்கிர‌ம் போய்ச்சேர்ந்தால் ச‌ரி தான் என்றெண்ணி த‌ன்னுட‌ன் அழைத்துச்சென்று விடுகின்ற‌ன‌ர்.

இப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ய‌வ‌ர்க‌ள் தானும் ஒரு ஆண்ம‌க‌ன் என்ற‌ திரானியும், துப்புவும் இருந்தால் அந்த‌ பெண் வீட்டினரிடமிருந்து அபகரித்த அனைத்து சொத்து,ப‌த்துக்க‌ளையும் அந்த‌ வ‌ய‌தான வாப்பா, உம்மாவிற்காக ஊரிலேயே விட்டு அப்பெண்ணை அழைத்துச்செல்ல‌ட்டும்.....திரும‌ண‌ம் முடித்து நீண்ட‌ கால‌ம் த‌னிமையில் வெளியில் இருந்தால் விப‌ச்சார‌ம் போன்ற‌ தீய‌ காரிய‌ங்க‌ளில் ஈடுப‌ட்டு விடுவோமோ என‌ அஞ்சும் ஆண்ம‌க்க‌ள் அதை விட‌ கொடுமையான‌ இந்த வகையான‌ வ‌ர‌த‌ட்சிணையிலிருந்து விடுப‌ட‌ அஞ்ச‌ வேண்டாமா? இது தான் ஊரில் ந‌ட‌ந்து வ‌ரும் ரீச‌ண்ட் வ‌ர‌த‌ட்சிணை கொடுமை......அநீதி இழைப்ப‌வ‌ர்க‌ள் எவ‌ராக‌ இருந்தாலும் அவ‌ர்க‌ளை அட‌க்கி ஒடுக்க, அழித்தொழிக்க‌ அந்த‌ அல்லாஹ்வே போதுமான‌வ‌ன்....யா ர‌ப்......

Unknown said...

////ஆலிம்சாமாருவொலே பொண்டாட்டி ஊட்ல‌ த‌ங்கி இருக்கும் பொழுது எப்ப‌டீங்க‌ இந்த‌ விச‌ய‌த்தை ப‌ற்றி எவரும் ஆணித்த‌ர‌மாக ஊரில் பேச‌ முடியும்? எழுத‌ முடியும்? //////
----------------------------------------------------------------
about 200 years questions?...no answer so far...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

போடா!!! ஊடு, நகை, வரதட்சிணை கேக்குற மொஹரைய பாரு....ஒன்னும் தர மாட்டோம்....மார்க்கப்படி மஹர் கொடுத்து நபிவழியில் என்னை திருமணம் முடிக்க உனக்கு துப்பிருக்கா??? ஊடு,வாசலுக்காக ஆசைப்படும் நீ! திருமணத்திற்குப்பின் எனக்கு ஏதேனும் சம்பவித்து விட்டால் நீ எப்படி என்னை கடைசி வரை கூட இருந்து காப்பாற்றுவாய்??? என்னையே நான் உனக்கு அற்பணித்துத்தர தயாராக இருக்கும் பொழுது உனக்கு எதற்கு சொத்து,பத்து??? இவ்வளவு அல்லோலப்பட்டு என்னை உனக்கு திருமணம் முடிக்க எனக்கு அறவே இஸ்ட்டம் இல்லை.....நான் முதிர்கன்னியாக இருந்து இப்படியே மடிந்தாலும் மடிவேனே தவிர இது போன்ற போலி திருமணங்கள் எனக்கு ஒரு போதும் நடந்தேற வேண்டாம்...போங்கடா...போங்க...என்று ஒரு பெண் என்று துணிவுடன் தைரியமாக இது போல் கேட்டு வரும் ஆண் வர்க்கத்தை பார்த்தை செப்பையில் அரைந்தாற்போல் கேட்கிறாளோ அன்றிலிருந்து அவள் வாழ்க்கைக்கு அந்த அல்லாஹ்வே துணை நின்று கத்தருள்வான்......

Unknown said...

முனு நாள் தோழன் சாப்பாட விட்டுடீங்க!!

Unknown said...

ஆலிம்சாமாருவொலே பொண்டாட்டி ஊட்ல‌ த‌ங்கி இருக்கும் பொழுது எப்ப‌டீங்க‌ இந்த‌ விச‌ய‌த்தை ப‌ற்றி எவரும் ஆணித்த‌ர‌மாக ஊரில் பேச‌ முடியும்? எழுத‌ முடியும்? //////



நீங்கள் சொல்வது சரித்தான் குர்ஆன் சுன்னா வழியில் யார் இல்லையோ அந்த ஆலிம்சா மாரு அந்த நமக்கு எடுத்துக் காட்டு கிடையாது. குர்ஆன் சுன்னா வழியில் யார் செல்வார்களோ அந்த ஆலிம்கள் தான் நமக்கு எடுத்துக் காட்டு

Ebrahim Ansari said...

கொல்லைப்புற வரதட்சணை என்று கொடுமைகளை எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.

பணமாகக் கொடுப்பது மட்டுமோ நகையாகக் கொடுப்பது மட்டுமோதான் வரதட்சணை என்று பெரும்பாலோனோர் எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.
நம் ஊரைப் பொருத்தவரை வீடு கொடுப்பது என்று ஒரு முதலை இருக்கிறதே அந்த முதலையைப் பற்றி ஏன் நாம் எண்ணிப் பார்ப்பது இல்லை?

ஒரு குமரை கரைஏற்ற வேண்டுமானால் பதினைந்து முதல் இருபது இலட்சம் வரை விலை கொடுத்து மனைக்கட்டு வாங்கவேண்டும். அந்த மனையில் முப்பது இலட்சம்வரை செலவு செய்து வீடுகட்டிக் கொடுக்க வேண்டும். பழைய வீடாக இருந்தாலும் சரி அதை இடித்துவிட்டு புதியவீடாக கட்டித்தருகி றோம் என்ற வாய்மொழி உறுதியில்ல பத்திரத்தில் எழுதிக் கொடுக்கவேண்டும்.

வரதட்சணை வேண்டாமென்று மகர் கொடுத்து மணம் முடிப்பவர்கள் கூட வீடு மட்டும் வேண்டாமென்றே சொல்வதில்லை. எங்கள் வீட்டில் அல்லது மாப்பிள்ளை கட்டிய வீட்டில் பெண் வந்து வாழட்டும் என்று சொல்லும் தைரியம் உடையவர்கள் எத்தனை பேர்?

இதை எண்ணிப் பார்க்கும்போது இந்த முர்தபா, பசியாற, கோழிப்பெரட்டல் எல்லாம் ஜுஜுபி.



மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இ.அ. காக்கா இத விட கொடும என்னாண்டாக்கா ஒரே ஒரு இல்லாட்டி ரெண்டு ஆம்புளப்புள்ள மட்டும் வச்சிக்கிறவங்க கூட தன் புள்ளக்கி பொண்ணு ஊட்ல ஊடு வாணாம்ண்டு தைரியமா/துணிச்சலா நம்மூர்ல யாராலயும் சொல்ல முடியல காக்கா......அந்த காலத்துல ஏப்பசாப்பையா யாரோ பழக்கி உட்டது இப்ப உள்ள எல்லார்க்கும் ரத்தத்துல கலந்து ஒன்னுமே செய்ய முடியாம கைவுட்ட கேஸா ஆகிப்போச்சு போங்க........

Ebrahim Ansari said...

நமது ஊரில் உயர்ந்து நிற்கும் வீடுகளின் பின்னணியில் ஐந்து முதல் ஏழு வருடம் வரை லண்டனில் அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொலைத்த வடுக்கள் இருக்கின்றன. நினைத்தாலும் ஊருக்கு வரமுடியாத நிலைமைகள் இருக்கின்றன. பல இரவுகளின் ஏக்கப் பெருமூச்சுகள் இருக்கின்றன. உடன்பிறந்தவர்களுக்கும் பெற்ற பெண்மக்களுக்கும் ஆடம்பர வீடுகள் கட்ட அயல் நாட்டில் வாழ்க்கையைத்தொலைத்தவர்களின் வரலாறுகள் இருக்கின்றன.

இவ்வளவு பெரிய ஆடம்பர வீடுகளை இளமை சுகங்களைத் தொலைத்துவிட்டு கட்டுகிறார்களே இவை யாருக்காக? பொருளீட்டுவதில் முக்கால்வாசி கான்கிரீட் கட்டிடங்களாக நிற்கின்றன.

முதலில் பெண்களுக்கு வீடு கொடுப்பதை நிறுத்த வழி காணுங்கள்.

Ebrahim Ansari said...

தம்பி நெய்னா ! தொடர்ந்த கருத்துக்கு நன்றி.

பெண்களை இந்த வீடு கொடுக்கும் விஷயத்தில் நாம் பெரிதும் சம்பந்தப் படுத்துவதாக இருக்கிறோம். சிறந்த பயான்களை பெண்களுக்காகவும் செய்யும் ஒரு ஆலிம் அவர்கள்மீது அன்பு கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இந்தப் பெண்களும் அப்படிப்பட்ட பயான்களை கேட்கிறார்கள். இவை எல்லாம் கேட்டு பின்பற்றி நடப்பதற்கா? தவறுகளை திருத்திக் கொள்ளவா அல்லது வெறுமனே கேட்டுவிட்டு அழகான பயான் என்று பாராட்ட மட்டும்தானா? திருந்தாவிட்டால் இந்த பயான்களின் பலன்தான் என்ன?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

வரதடசனைக்கு எதிராக ஏனோதானோ என்று கருத்து கூறும் மார்க்க அறிஞர்கள் ஒருபுறம் என்றால்... மேடை போட்டு காட்டுக் கத்து கத்தும்.. தவ்ஹீது..!? வாதிகளில் சிலர்..ஒருபுறம்.. இப்ராஹீம் அன்சாரி காக்கா சொன்ன கருத்தில் நானும் உடன்படுகிறேன்.

ஒரு சில தவ்ஹீது வாதிகளும் பெண் வீட்டில் அத்துனையும் வாங்கிக் கொண்டு நானும் தவ்ஹீது வாதி என்று எப்படி வெடகமில்லாமல் பகிரங்கமாக அறிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை..?.

இவர்களுக்கு ஆலிம்களைப் பற்றி மேடைகளிலும் இன்னும் பிற பதிவுகளிலும் அவதூறு பேச என்ன அருகதை இருக்கிறது..?.

Unknown said...

Assalamu Alaikkum

An absolutely necessary awareness article.

Actually getting dowry for marrying a girl would reduce the prosperity.

Dowry is selfishness without compassion, not considering the girl's family's financial burden.

Generally people want free things without putting their honest work. Dowry is such a greedy mentality which puts girl's family under financial pressure.

May God Almighty help us to tackle this pathetic condition in our community.

Regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

abraarhussain said...

அருமையான பதிவு? நம்ம ஊரு வீட்டொட மாப்பிள்ளை பழக்கம் எப்ப ஓழியும்

Unknown said...

சகோ Jafar hassan ஆவேசப்பட வேண்டாம் பின்னூட்டம் எழுதும்போது நிதானமாக யோசித்து எழுதவும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இன்னொரு கொடுமை என்னவென்றால் எல்லாத்தையும் வரிந்து கட்டி வாங்கி கட்டிக்கொண்டு நல்லா மூணு வேளையும் மூக்குபுடிக்க பெண் வீட்டில் மூசுமூசுண்டு திண்டுபுட்டு பல ஆயிரெத்தெட்டு கஷ்டஙகளுக்குள் அப்பெண்ணையும் கற்பமாக்கி பத்து மாதங்கள் அப்பெண் வீட்டை கண்ணுக்குப்புழப்பட்டு அல்லது படாமல் படாதபாடுபடுத்தி பிறகு பெத்தெடுக்கும் தலைப்பிள்ளைக்கு பெண் வீடு தான் பிரசவ கால செலவனைத்தையும் ஏற்க வேண்டும் என்றுள்ள‌ எழுதப்படாத நம்மூர் சட்டத்தை இஸ்ரேல்காரவன் கேள்விப்பட்டால் கூட காரித்துப்பிவிடுவான்.......

Unknown said...

பின்னூடங்கள் எழுதும்பொழுது நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவும்.

ZAEISA said...

பெண் பிள்ளைக்கு வீடு கொடுப்பதில் ஒன்றும் தப்பில்லை என்று நினைக்கிறேன்.காரணம் அப்பொழுதுதான் பெண்ணை மணமுடித்தவன் தன் பிள்ளைக்கு வீடு கட்டவேனுமென்று உழைக்க முற்படுவான்.அப்படி வீடு பெற்ற யாரும் வீட்டை அதே நிலையில் வைத்திருக்காமல் மேலும் விஸ்தரிக்க முனைவான்,அல்லது அவன் சம்பாத்தியத்தில் புதிய வீடு கட்டிக்கொண்டு பெருந்தன்மையாக மனைவியின் தரப்பில் விட்டுவிடுவான்.அதனால்தான் நம் பெண்கள் மார்க்க நெறி பேணி கௌரவமாக வாழ்ந்து நமக்கும் கண்ணியத்தை சேர்க்கிறார்கள்.துணையை இழந்த முதியவர்களுக்கு கடைசிவரை பணி செய்ய மகளால் மட்டுமே முடியும்.
பெற்றோர்கள் தன் பிள்ளை நல்ல முறையில் வாழ வேண்டுமென்றுதான் நினைத்து மணமுடித்து வைப்பார்கள்.கதிரோடு பதரும் நெல்லாகத்தான் தெரியும். மணமுடித்த அனைவருமே வாழ்பவராக இருந்தால் சங்கத்தில் ஏன் மலைபோல் விவாகரத்து vazhakkukaL..?
நானும் நான்கு மகள்களை பெற்றவன்தான் அறியவும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஏற்கனவே நம் இஸ்லாம் சமுதாயம் எட்டு திசைகளிலிருந்து பல இன்னல்களையும், அல்லல்களையும், சொல்லிமாளா துயரங்களையும், துக்கங்களையும், வேதனைகளையும், சோதனைகளையும், அத்துமீறல்களையும், அநியாய அக்கிரமங்களையும் அனுபவித்து வருகிறது. இது பத்தாது என்று ஊரில் நம்மவர்கள் நம்மக்குள் திருமண காலங்களில் ஒருவருக்கொருவர் செய்யும் அட்டூழியங்களும், அநாச்சரங்களையும் அழித்தொழிக்கும் நாள் என்று தான் வருமோ இல்லை அதற்கு முன் நாம் சேர வேண்டிய இடம் சென்று தீருவோமா? அல்லாஹ் அஹ்ழம்....

இதை தத்தமது வாழ்வில் திருத்திக்கொள்வதில் யார் முந்திக்கொள்கிறார்களோ அவர்கள் நிச்சயம் இறை வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்வர்.

ஹிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டு போல் என்றைக்கோ ஒரு நாள் யாரோ ஒருவர் செய்து விட்டு போன தவறுக்கு இன்றைக்கும் எம் மண் அநாவசியமாய் சொல்லாத்துயரை அடைந்து கொண்டிருக்கிறது பாகுபாடின்றி......

Unknown said...

சகோதரர்களே..நான் எந்த நேரத்திலும் ஆத்திரப் பட மாட்டேன்.. ஆதஙகப் படுவேன்..அதுதான் இந்தப் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்..பதிவின் சாரம்சமே கொஞ்சம் காரம்தானே அதனால் என் பின்னூட்டத்திலும் கொஞ்சம் காரம் சேர்ந்துவிட்டது.

பதிவின் ஆரம்பத்திலேயே இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் உள்ள பதிவல்ல என்று கூறியிருப்பதால் என் பின்னூட்டமும் யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல.

sabeer.abushahruk said...

கொடுக்கல் வாங்கல் மலிந்து போய்விட்டதால் கல்யாணச் சந்தை அதிரையில் கலைகட்டுகிறது.  இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்களை எண்ணிப்பார்த்தால் என் சமுதாயத்தை எண்ணி நெஞ்சு வலிக்கிறது.  உணர்வுகளைப் பகிர வேண்டிய குடும்ப வாழ்க்கை வியாபார யுக்திகளோடு நடத்தப்பட வேண்டும் என்னும் கட்டாயத்திற்குள் தள்ளப்படும்போது சுயநலம் கூடி குடும்ப வாழ்வு எந்திரத்தனமாகப் போய்விடும்.
 
இதன் பிரதிபலிப்புத்தான் “மாசப்பணம்”, “ராச்சாப்பாடு மட்டும் மாமியா வீடு”, “படுக்க மட்டும் வருவாக”, “அங்க கை நனைக்கக்கூடாது” போன்ற இல்வாழ்க்கைத் தொந்தரவாகிப்போன வார்த்தைப் பிரயோகங்களும் சம்பிரதாயமான வாழ்க்கையும்.
 
பெருசுகள் மனசு வைத்தால் உடனடி மாற்றம்; இல்லையேல் தொலை தூரத்தில்தான் வெளிச்சம்.

Shameed said...

இம்புட்டு நாளா ஒன்னு வெளங்காம இருந்துச்சு அது என்னென்னா கல்யாண ஊட்டுலே கொல்லைலே வஞ்சு ஏன் சோறு ஆக்குராங்கன்னு அது இப்போதான் வெளங்குது கொல்லைப்பக்கமா வர்ற பணத்த தல வாச பக்கம் எடுத்துகொண்டு வரமா கொல்லைலையோ வச்சு சோத்த ஆக்கிரக அட கொல்லைல போவியள என்பதன் உள் அர்த்தம் இதுதானோ

Meerashah Rafia said...

ZAEISA சொன்னது…
//பெண் பிள்ளைக்கு வீடு கொடுப்பதில் ஒன்றும் தப்பில்லை என்று நினைக்கிறேன்.காரணம் அப்பொழுதுதான் பெண்ணை மணமுடித்தவன் தன் பிள்ளைக்கு வீடு கட்டவேனுமென்று உழைக்க முற்படுவான்.//


பெண் பிள்ளை பெற்றால் மட்டும்தான் பொறுப்போடு சம்பாதிக்க அல்லாஹ் இரு கையை கொடுத்திருக்கின்றானா? ஆண் பிள்ளை பெற்ற தகப்பர்களுக்கும் அதே உழைக்கும் கையும், எண்ணமும்தானே கொடுக்கப்பட்டிருக்கின்றது? தெரியாமத்தான் கேட்கிறேன், நீங்கள் சொல்வதுபோல் பார்த்தால் ஆண் பிள்ளை பெற்ற அதிரை,காயல்பட்டினம்,கீழக்கரை வாசிகள் மட்டும் உடலளவில் ஊனமாகவா இருக்கின்றார்கள்? (மனதளவில் வேண்டுமானால் இருக்கலாம்)..

40 லட்சருபாய்க்கு வீடும், இன்னும் சில லட்சத்திற்கு நகையும் பெண்களுக்கு கொடுத்து ஆண் பிள்ளையை அம்போவென விடும் ஆண்,பெண் சொத்து பிரிப்பு வரையறை எந்த இசுலாமிய மார்கத்தில், மத்கபில் உண்டு?

இவ்விசயத்தில் அநேக மக்கள் நம்மை அறியாமல் தவறு செய்துவிட்டோம்..அல்லாஹ் பொருந்திக்கொள்ளட்டும். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலம் எங்களைப்போன்ற இளைஞர்கள் வீடு வாங்குவதையும்,கொடுப்பதையும் தவிர்ப்போம்..இதற்கு இயக்கவாதியாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை..முஃமினாக இருந்தாலே போதும்.. பெரியவர்களின் துஆவும்,ஆதரவும் மிக முக்கியம்..

Anonymous said...

வரதட்சணை வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள் நாம் எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை. பெண் வீட்டாரிடம் கவுரமாக கைமாத்து தாங்க பிறகு தருகிறேன் மாப்பிள்ளை வீட்டார்கள் கூறுவார்கள். ஆனால் அது பெண் வீட்டாருக்கு அந்த பணம் திரும்ப செல்வதில்லை.

Unknown said...

எந்த திருமணத்தில் செலவு குறைவாக இருக்குமோ அந்த திருமணத்தில் தான் பரக்கத் இருப்பதாக ரஸீலுல்லாஹி (ஸல்) சொன்னார்கள்.



வீண் விரயத்தை பற்றி குர்ஆன் கூறும் வசனங்கள்:

17:27. நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அப்துல்மாலிக் said...

ZAEISA சொன்னது…//துணையை இழந்த முதியவர்களுக்கு கடைசிவரை பணி செய்ய மகளால் மட்டுமே முடியும்.//அப்போ பிள்ளைகள் அனைத்தும் ஆண்களாக இருந்தால்...?

பெண்களுக்கு வீடு கொடுப்பதால்தான் நம்மூர்லே வரலாறு காணாத வகையில் மனைகள் விலையேறிப்போய் இருக்கிறது என்பது மறக்கம்முடியாத உண்மை. பெண்பிள்ளைகளுக்கு வீடு கொடுக்கவேண்டுமே என்று எவ்வளவு காசு ஆனாலும் வாங்க முற்பட்டு போட்டிக்களுக்கிடையே சாதாரண குடிமக்கள் வாங்கமுடியாத உச்சத்தில் உள்ளது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வரதட்சனை என்று சொல்லால் இல்லாமெ செயலில் ரகசிய உள்குத்து நல்லாதான் போய்க்கொண்டிருக்கு!

மாப்புளெ ஊடு புலால் உடுவதாக சொல்லி வெறும்2000 கொடுத்துவிட்டு 10- 15 ஆயிரம் வரை மீன் வாங்கி கலரி வைக்க உத்தரவு போடுவது எந்த வகை?

மாதம் மூவாயிரம் நாலாயிரம் கொடுத்துவிட்டு காலையிலெ ஈர ஆக்குனாஹலா, பகல்லெ காடெ பொறிச்சாஹலா, நைட்டுலே முற்தபா வச்சாஹலா என்று மாதம் 15 - 20 ஆயிரத்துக்கு வேட்டு வைக்கிற மாதிரி வினா தொடுப்பது எந்த வகை?

Saleem said...

சம்மந்தி வீட்டுக்கு வட்லப்பம் இல்லாமல் காலை பசியாற கொடுப்பதா என்று தூதுவர் சொல்ல, உடனே அதுவும்(மேல் செலவு) ரெடி!!

Unknown said...

//போடா!!! ஊடு, நகை, வரதட்சிணை கேக்குற மொஹரைய பாரு....ஒன்னும் தர மாட்டோம்....மார்க்கப்படி மஹர் கொடுத்து நபிவழியில் என்னை திருமணம் முடிக்க உனக்கு துப்பிருக்கா??? ஊடு,வாசலுக்காக ஆசைப்படும் நீ! திருமணத்திற்குப்பின் எனக்கு ஏதேனும் சம்பவித்து விட்டால் நீ எப்படி என்னை கடைசி வரை கூட இருந்து காப்பாற்றுவாய்??? என்னையே நான் உனக்கு அற்பணித்துத்தர தயாராக இருக்கும் பொழுது உனக்கு எதற்கு சொத்து,பத்து??? இவ்வளவு அல்லோலப்பட்டு என்னை உனக்கு திருமணம் முடிக்க எனக்கு அறவே இஸ்ட்டம் இல்லை.....நான் முதிர்கன்னியாக இருந்து இப்படியே மடிந்தாலும் மடிவேனே தவிர இது போன்ற போலி திருமணங்கள் எனக்கு ஒரு போதும் நடந்தேற வேண்டாம்...போங்கடா...போங்க...என்று ஒரு பெண் என்று துணிவுடன் தைரியமாக இது போல் கேட்டு வரும் ஆண் வர்க்கத்தை பார்த்தை செப்பையில் அரைந்தாற்போல் கேட்கிறாளோ அன்றி//லிருந்து அவள் வாழ்க்கைக்கு அந்த அல்லாஹ்வே துணை நின்று கத்தருள்வா//

இந்த வசனம் கிட்டத்தட்ட 100 வருஷங்களுக்கு முன்னாள் நம் உம்மாட உம்மா
அவ்வலுற உம்மா சொல்லியிருந்து வீரப்பென்மனியாய் வளம் வந்திருந்தால்
இப்படி இந்த பாழாப்போன பொண்ணுக்கு வூடு கொடுக்கும் கயமைத்தனம் வேரூன்றி வளர்ந்திருக்குமா ?

இப்பொழுது கூச்சல் போட்டு பலன் இல்லையென்று சொல்ல முடியாது, பலன் கிடைக்கும், எப்பொழுது தெரியுமா ? இன்னும் ஐம்பது அல்லது நூறு வருடங்கள்கூட செல்லலாம். ஏனனில், அவ்வளவு வேரூன்றி கால் பதித்து இருக்கின்றது இந்த பாழாப்போன பழக்கம்.

என்று கலைந்தெடுக்கப்படும் இந்தப்பழக்கம்
அல்லா ஒருவனுக்கே வெளிச்சம்.

அபு ஆசிப்.

ZAEISA said...

ஆண் தூக்கணாங்குருவி படாதபாடு பட்டு வீட்டைக்கட்டிவிட்டு பின் பெண் குருவியை பார்வைக்கு விடுமாம் அந்த பெண்ணிற்கு பிடித்தால் மட்டுமே அதனுடன் சேர்ந்து வாழ முற்படுமாம்...நம்மில் எத்தனை ஆண் தூக்கனாங்குருவி உண்டு...?
அதிரை,கீழக்கரை,காயல்பட்டினம் என்று குறிப்பிட்டு பேசக் காரணம் பெண்ணிற்கு வீடு கொடுப்பதாலேயே.......மேலும் ஒரு ஆண் உழைத்து முன்னேற வேண்டுமென்று உந்துதலுக்கு தள்ளப்படுகிறான் தன் கணவன் சம்பாத்தியத்தில்தான் தான் வாழ வேண்டுமென எந்த பெண்ணும் நினைப்பாள்
பெண்பிள்ளை பெறாத முதிய பெற்றோர் எத்தனை துன்பத்தில் உழன்று மரித்துப்போனதை ,அப்துல் மாலிக் போன்றவர்கள் நேர்லயே பார்த்திருக்க கூடும்.
அதுசரி பெண்னை மணந்தவன் எல்லோருமே வாழவைத்து விடுகிறார்களா,,? பெண்ணிற்கு வீடு வேண்டாமென்று இங்கு வாதிடுவோரில் ஒரு தூகணாங்க்குருவி உண்டா............?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ZAEISA சொன்னது… அதுசரி பெண்னை மணந்தவன் எல்லோருமே வாழவைத்து விடுகிறார்களா,,? பெண்ணிற்கு வீடு வேண்டாமென்று இங்கு வாதிடுவோரில் ஒரு தூகணாங்க்குருவி உண்டா............?//

அஸ்ஸலாமு அலைக்கும்,

நீங்கள் கேட்கும் கேள்வி முழுக்க முழுக்க உண்மை. எத்தனை ஆண் எனக்கு வரும் பெண் என் வீட்டில் தான் வாழவேண்டும் என்று தன் பொற்றோரிடம் போராடுகிறார்கள் என்பது கேள்விகுறியாக இருந்தாலும், அந்த ஆண் பிள்ளையை பெற்ற தாயோ தகப்பனோ தன்னுடைய மருமகளை தன் வீட்டில் வைத்து வாழவைக்க வேண்டும் என்று எண்ணுவதும் ஒரு கேள்வி குறியாக இருந்தாலும், எத்தனை பெண்ணைப் பெற்றவர்கள் தன்னுடைய மகள் மாமியார்விட்டில் வாழ விருப்படுகிறார்கள்? எத்தனை அதிரை மணமகள்கள் தன் கணவனின் இல்லத்தில் வாழ விரும்புகிறார்கள்? எத்தனை பெண்கள் தன்னுடைய கணவனின் கஷ்டத்திலும் துன்பத்திலும் பங்குபோட விரும்புகிறார்கள்? இருப்பினும் விதிவிலக்காக ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிடும் தூக்கணாங்குருவியாக இருக்கும் ஒரு சிலர் தங்களின் வசதிக்கெற்ப வாழ நினைத்தால், அவனின் கரம் பிடித்தவள் அவனுடைய வசதிற்கேற்ப அவன் தாய் வீட்டில் வாழ விரும்புவதில்லை என்பதும் நடக்கத்தான் செய்கிறது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இதிலும் விதிவிலக்காக ஒரு சிலர் இருக்கிறார்கள்.

கல்யாணத்தில் நீ மாலை (இஸலாத்தில் இல்லாத பழக்கம்) போட வேண்டும், நீ போடவில்லை என்றால் அது நமக்கு அவமானம்,அப்படி போடவில்லை என்றா நீ என் மகனல்ல என்று சொல்லும் பல பெற்றோர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போலத்தான் தட்சனை, சீராட்டு, வீடு இதெல்லாம் வாங்காவிட்டால் அவமானம் கேவலம் என்று எண்ணும் போற்றோர்கள் இருக்கும் போது மணமகனை மட்டும் குற்றம் காணுவது எப்படி சரியாகும். எல்லாம் கூட்டனியின் குற்றம்.

இங்கு நாம் கருத்துரையாடுவது ஓர் சமூக பிரச்சினை பற்றி. பெண்கள் தான் பெண்களுக்கு வில்லிகளாக உள்ளார்கள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. கோள் மூட்டி விடும் சைத்தான்கள் நம்மூரில் அதிகம் என்பதை நினைவில் கொள்வோம்.

அல்லாஹ்வின் அச்சம் முழுமையாக ஒவ்வொருவரிடம் வந்தால் மட்டுமே நம்மூர் சமூகத்தில் பெண்ணுக்கு வீடு, வரதட்சனை, சீர் சிராட்டு, மாமியார் வீட்டு வட்லப்பம் கடப்பாசி எல்லாம் ஒழிந்துப்போகும்.

எனக்கு வரதட்சனை சீர் சிராட்டு வேண்டாம் என்று சொல்லும் மணமகன் எனக்கு வரும் மனைவிக்கு வீடு வேண்டாம் என்று சொல்லுவதை நாம் வழியுறுத்துவது போல். தனக்கு வரப்போகுகிறவன் வரதட்சனையோ, சீர் சிராட்டோ, வீடோ கேட்டால் அவன் எனக்கு தேவையில்லை என்ற நிலைய மணமகள் எடுக்க வேண்டும் என்பதையும் வழியுறுத்த வேண்டும்.

நமதூரில் நெசவுத்தெருவில் பெண்கள் திருமணத்திற்கு பிறகு தன் மாமியார் வீட்டில் தான் வாழுகிறார்கள் என்பது சாத்தியமாக இருக்கும் போது ஏன் அதிரையில் உள்ள பிற தெருக்களில் சாத்தியமில்லை?

இது தான் நம்ம குடும்ப சம்பிரதாயம் ஊர் வழக்கம் என்று ஒவ்வொரு தவறுக்கு excuse வாங்கிக்கொண்டே தூய இஸ்லாத்தை வாயலவில் பேசி செயலவில் விட்டது தான் மிச்சம். நம் சமூதாயத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக..

சபீர் காக்க சொல்லியது போல்.. பெருசுகள் மனசு வைத்தால் உடனடி மாற்றம்; இல்லையேல் தொலை தூரத்தில்தான் வெளிச்சம்.

Meerashah Rafia said...

Bro.ZAEISA சொன்னது…
//ஒரு ஆண் உழைத்து முன்னேற வேண்டுமென்று உந்துதலுக்கு தள்ளப்படுகிறான் தன் கணவன் சம்பாத்தியத்தில்தான் தான் வாழ வேண்டுமென எந்த பெண்ணும் நினைப்பாள்//


ரொம்ப நன்றி.. விளக்கமளிப்பதை எளிதாக்கியதற்கு..
உங்கள்கூற்றுப்படி பார்த்தால் ஒரு மனைவிக்கு தன் கணவன் சம்பாதித்து வீடு கட்டிக்கொடுத்தால்தானே சந்தோசம்நமதூரில் அப்படியா நடக்கின்றது? மாறாக கணவன் தன் மனைவிக்கா வீடு கட்டிக்கொடுப்பதிற்குபதில் தன் பெண் பிள்ளைக்கல்லவா கொடுக்கின்றார்? அதில் வசிப்பதோ மருமகன் என்ற பெயரில் வருபவர்தானே?

எது எப்படியோ உண்மையில் விருப்பப்பட்டு கொடுத்தால் ஒரு பெண்ணிற்கு 5 வீடு கூட பெண்ணின் தகப்பனார் கொடுக்கலாம்..மாப்பிளையையும் வீட்டோடு வைத்துக்கொள்ளலாம்.. வீடு கேட்டு கட்டாயபடுத்துவதே வரதட்சணையோடு சேரும்..

தூக்கணாங்குருவி தன் மனைவியை விட்டு பார்க்காமல், தன் மகளை விட்டு வீட்டை பார்த்து வர சொல்லட்டும் பின்பு நமதூரில் தூக்கணாங்குருவி இருக்காவென்று பார்போம்..

Canada. Maan. A. Shaikh said...

வரதச்சனை விஷயத்தில் பெண்கள் (தாய்மார்கள்) தான் பெரிதும் சம்பந்தப் படுத்துவதாக அறிகிறோம். நம் ஊரில் சிறந்த பயான்களை பெண்களுக்காக செய்யும் ஒரு ஆலிம் அவர்கள்மீது அன்பு கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இந்தப் பெண்களும் அப்படிப்பட்ட பயான்களை கேட்கிறார்கள். இவை எல்லாம் கேட்டு பின்பற்றி நடப்பதற்கா? தவறுகளை திருத்திக் கொள்ளவா அல்லது வெறுமனே கேட்டுவிட்டு அழகான பயான் என்று பாராட்ட மட்டும்தானா? எனவே இந்த பயான்களின் பலன்கள் இன்ஷா அல்லாஹ் நம் பெண்களிடம் இருந்து விரைவில் எதிர் ஒழிக்க நாம் துவா செய்வோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): இந்த தட்சனைகளிருக்குமிடங்களில் இருக்க மாட்டேன்னு தெரியும்தானே ? ஆனாலும் இருப்பேன் காரணத்துடன் ! :)

நியாயமான ஆதங்கங்கள், கோபங்கள், அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையிலும் அதனைக் கண்கூடாக கண்டச் சூழலிலும் கருத்துக்கள் வெடிக்கின்றன !

எல்லோருக்கும் சிந்தனையோட்டம் ஒன்றாகத்தான் இருக்கிறது ! அடிக்கும் அலைகள் ஒதுங்கும் கரையும், அருகே இருப்பவர்களின் சூழ்நிலைகளைப் பொருத்தே அமைகிறது !

கொல்லைப்புற தட்சணைகள் பலவகைகள் இருப்பினும் பரவலாக இருப்பதையே இங்கே சுட்டலுடனும் காட்டாக வைக்கப்பட்டிருக்கிறது !

வீடு ! நாமும் கட்டுவோம்... ! அடுத்த பதிவாக !

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

அருமையா ஆக்கம்.
ஊரு ஒன்று பட்டால் கூட பெண் வீட்டாரின் கண்ணீரை துடைக்க முடியாது. இது காலத்தோடு கலந்துவிட்ட ரணம்.

பெண்கள் முன்னேற்றம், பெண்கள் அமைப்பு, பெண்கள் பாதுகாப்பு கழகம் இன்னும் அனேக நிறுவனங்கள் பெண்களுக்காக ஒத்துழைத்துக் கொண்டு இருந்தாலும் திருமணம் என்ற வட்டத்துக்குள் பெண் மாப்பிள்ளை வீட்டாரால் எப்படி நடத்தப்படுகிறாள் என்று சிந்தித்து பாருங்கள்.

டிவியில் கிரேப்வாட்டர் குறித்து ஒரு விளம்பரம் வரும் " நீ குழந்தையாக இருக்கும்போது இதைத்தான் கொடுத்தேன்" என்று. அது போலே இந்த சீர் சீராட்டுக்களும் வாழையடி வாழையாக தொடர்ந்து கொண்டு இருக்குது, பகிரங்கமாக நடந்தது இப்போ திருட்டுத் தனமாக நடக்குது.

சுருக்கமாக சொன்னால் பிச்சை காரர்கள் கூட கொல்லைப் புறமாக வரமாட்டார்கள்.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

ZAEISA said...

வீடு உங்களுக்கு என்று சொல்லியும் எதுவும் வேண்டாம் என்மஹருக்கு பெண் தந்தால் போதுமென்று பெண் வீட்டிற்கு செலவு வைக்காமல் மணமுடித்து இஸ்லாத்திலிருந்து மாறுபடாது வாழும் சரியான ஆண்மகனும் உண்டு. அதேபோல்,நான் மாலையெல்லாம் போடாமல்தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி செய்து இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாகியும் வீடுதான் வேண்டுமென கெடுபிடி செய்தவரை வேண்டாமென பிரிந்த மனைவிகளும் உண்டு. // தூக்கணாங்குருவி தன் மனைவியை விட்டு பார்க்காமல், தன் மகளை விட்டு வீட்டை பார்த்து வர சொல்லட்டும் பின்பு நமதூரில் தூக்கணாங்குருவி இருக்காவென்று பார்போம்.. //சகோ மீராசாஹிப் ராபியா .....நீங்கள் நான் குறிப்பிட்டதை திரும்ப படியுங்கள் தனக்கு வருகின்ற மனைவிக்குதான் கூட்டை காண்பிக்குமே தவிர மாமியாளை கூட்டி வராது ....
மேலும்,நாலு ,ஐந்து மகன்களுக்கு மனைவிமார்கள் இருந்தும் பதயத்துபட்டு இறந்த அப்பாவி முதியோர்கள் நிறையவும் உண்டு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆக மொத்தம் நம்ம வாழ்க்கை முழுவதும் இந்த சனியனால் அமைதியின்றி கலவரப்பட்டு கச்சாமுச்சாண்டு ஆகி விட்டது நம்மூரில். ச்சே போலியான மதங்களிலுள்ள இறைநிராகரிப்போர் கூட இந்த விசயத்தில் முற்றிலும் உண்மையான மார்க்கமான இஸ்லாமிய கோட்பாடுகளை எவ்வித கலங்கமின்றி,கலக்கமின்றி தெளிவாக கடை பிடித்து ஏழையாக இருந்தாலும் இவ்வுலகில் எவ்வளவு சந்தோசமாக இருந்து வருகிறார்கள் என சத்தியமார்க்கத்திற்குள் இருந்து கொண்டு அவர்களை ஏக்கப்பெருமூச்சுடனேயே பார்க்க வேண்டியுள்ளது........

அந்தக்காலத்து நம்மூர் மக்களுக்கு ஒஸ்த்தாருமாருவொ ஒழுங்கா ஓதிக்கொடுக்காமல் போனது எவ்வளவு சல்லையா ஈக்கிது இன்னெக்கி...(நெசவுத்தெரு ஒஸ்த்தாரு மட்டும் நல்லஒளா ஈந்தீப்பாஹளோ?????)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

ச்சே போலியான மதங்களிலுள்ள இறைநிராகரிப்போர் கூட இந்த விசயத்தில் முற்றிலும் உண்மையான மார்க்கமான இஸ்லாமிய கோட்பாடுகளை எவ்வித கலங்கமின்றி,கலக்கமின்றி தெளிவாக கடை பிடித்து ஏழையாக இருந்தாலும் இவ்வுலகில் எவ்வளவு சந்தோசமாக இருந்து வருகிறார்கள் என சத்தியமார்க்கத்திற்குள் இருந்து கொண்டு அவர்களை ஏக்கப்பெருமூச்சுடனேயே பார்க்க வேண்டியுள்ளது........//

அஸ்ஸலாமு அலைக்கும்,

மிகச் சரியாக சொன்னீர்கள்.

அப்துல்மாலிக் said...

//மேலும்,நாலு ,ஐந்து மகன்களுக்கு மனைவிமார்கள் இருந்தும் பதயத்துபட்டு இறந்த அப்பாவி முதியோர்கள் நிறையவும் உண்டு.// இப்படி ஏன் நடக்குது என்பதை யோசித்தீர்களா சகோ...! அந்த மகனுடைய மனைவி மாமியார் வீட்டில் வாழ்ந்தால் அந்த வயோதிக அம்மா ஏன் பதயத்துப்பட்டு இறக்கிறாங்க. ஒட்டுமொத்த மகன்களும் மனைவி வீட்டுக்கே போய்விட்டால் இப்படிதான் நடக்கும்.

// தன் கணவன் சம்பாத்தியத்தில்தான் தான் வாழ வேண்டுமென எந்த பெண்ணும் நினைப்பாள்// இதுதான் உண்மையான மனைவிக்கு அடையாளம். தந்தையோ/அண்ணனோ கட்டித்தந்த வீட்டில் வாழவிரும்பமாட்டால். இந்த நிலை இருந்தால் ஒவ்வொரு ஆணும் தனக்கென்று ஒரு வீடு கட்டிக்கொள்ளும் அளவுக்கு சம்பாதித்து பிறகு தன் குடும்பத்துக்கும் பிள்ளைகளுக்கும் உழைப்பான். ஆனால் நம்மூரில் அப்படியா இருக்கு. மூத்தவனாக இருந்து 2-3 தங்கைகள் இருந்துவிட்டால் அப்புறம் எங்கே தனக்கு வீடு அப்புறம் தன் குடும்பத்தை காப்பாத்துறது? வீட்டுக்கு மருமகனா போகுறவன் கொஞ்சமேனும் இந்த வீடு எப்படி கட்டப்பட்டது என்று கொஞ்சமேனு யோசித்து இருந்தால் மனைவியை தன்வீட்டோடு கூட்டிவந்துடுவார்...

அப்துல்மாலிக் said...

//அந்தக்காலத்து நம்மூர் மக்களுக்கு ஒஸ்த்தாருமாருவொ ஒழுங்கா ஓதிக்கொடுக்காமல் போனது எவ்வளவு சல்லையா ஈக்கிது இன்னெக்கி...(நெசவுத்தெரு ஒஸ்த்தாரு மட்டும் நல்லஒளா ஈந்தீப்பாஹளோ?????)/./

நெய்னா இதுலே ஒஸ்தாதை குறைசொல்ல முடியாது. ஒஸ்தாத் குரான் மட்டுமே ஓதித்தருவாங்க... முன்னோர்கள் வாழையடி வாழையா செஞ்சதை ஏன் எதுக்கு என்று கொஞ்சமேனும் யோசிக்காமல் செய்தது.. அல்லாஹ்வின் உதவியால் இந்த தலைமுறை கொஞ்சமேனும் வருந்துறாங்க, அது தப்புனு பேசுறாங்க இதுவே ஒரு முன்னேற்றம்தான். இன்ஷா அல்லாஹ் வரும் தலைமுறை இந்த முறையிலிருந்து முற்றிலும் விடுபடும் என்று நம்புவோம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வரதட்சணை வாங்காமல் கல்யாணம் முடிச்சாலும் நளபின்னே பொண்டாட்டி புருஷன்சான் சண்டை வந்தா பொண்டாட்டி என்ன சொல்றா தெர்யுமா "பொண்ணு கொடுத்தா போதும் "முண்டு எங்க வாப்பா காலுலே உளுந்து பொண்ணு கேட்ட பயதானேடா நீ.ஒனக்கு யவடா பொண்ணு கொடுக்க வாசக் கதவை தொறந்து கிட்டு நிண்டா''ன்னு வசை பாடுறா.

இதுக்கு பதிலை எடுத்து போடுங்க பாக்கலாம்.

S.முஹமது பாரூக்.அதிரைக்காரன்

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமுஅலைக்கும் எம்.எஸ்.எம்.!!!
அழ்ந்த அறிவார்ந்த சிந்தனைகள். உங்களின் வொவ்வொரு பின்னூட்டமும்
நெஞ்சில் ஈட்டி கொண்டு பாய்ச்சிவிட்டது. நாம் எங்கே இருக்கிறோம், நம் நிலை என்ன என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
அடிப்படையில் நம் பெண்களுக்கு மார்க்கக் கல்வியைப் போதிக்கவேண்டும். அவர்கள் தான் நமது சந்ததியினரை நெறிப்படுத்த முடியும். ஒரு ஆண் நேர்வழி பெற்றால் அவன் மட்டுமே பயன் அடைவான். ஆனால் ஒரு பெண் நேர்வழி பெற்றால் ஒரு தலைமுறையே பயன் அடையும்.
ஜஸாக்கல்லாஹு ஹைரன்.
வஸ்ஸலாம்
N.A.Shahul Hameed

Canada. Maan. A. Shaikh said...

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், பெண் மக்களுக்கு வீடு கொடுக்கும் பழக்கம் இல்லையேல் ஊரும் முன்னேரிக்காது ஆறு குளம் குட்டை என கொஞ்சமாது மிஞ்சி இருக்கும் என்ன சரி தானே.........

Unknown said...

இதுகுறித்து பலமுறை பலவாறு விவாதிக்கப் பட்டுவிட்டாலும் முடிவை எட்ட இயலவில்லை என்பது வேதனை

நான் நினைக்கும் ஆதங்கங்களை பின்னூட்டமாக இட நினைத்தாலும் அது இங்கே மட்டுறுத்தப் படலாம் என்பதால் என் சொந்த ப்ளாக்கரில் என் ஆதங்கங்களை வெளிப் படுத்தியுள்ளேன்.

http://ungalsakotharan.blogspot.com/2013/05/blog-post_27.html

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

வ'அலைக்குமுஸ்ஸலாம் சார். என்ன சார் செய்யிறது? நாம் இது பற்றி காரசாரமாக இங்கு பேசுவதும், அடிக்கடி விவாதிப்பதும், எழுதுவதும் ஏதோ இமயமலை அடிவாரத்தில் இருந்து கொண்டு பனிமூடிய அந்த எவரஸ்ட் சிகரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒரு பனிக்கழுகிற்கு கல்லெறிவது போல் தான் இருக்கிறது நம்மூர் நிலைமை. சமீபத்திய மத்திய கிழக்கு நாடுகளின் பெரும் புரச்சியால் பல வருடங்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த சர்வாதிகார அதிபர்கள் கூட தெருநாய் போல் இறுதியில் அடித்துக்கொல்லப்பட்டனர். ஆனால் நம்மூருக்கு இந்த தனிப்பட்ட விசயத்தில் என்று தான் ஒரு பெரும் புரட்சி வெடித்து பாழாய்ப்போன தொண்டுதொற்று வந்த ஊர்ப்பழக்கவழக்கங்கள் மண்ணுக்குள் குழி தோண்டி புதைக்கப்படுமோ???

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இப்படி காரசாரமாக எழுதுவதால் "இந்த சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்குமோ"? என எண்ணத்தோன்றும். அதிரையில் உருவான (பிறந்த) ஒவ்வொரு சொம்பும் ஏதாவது ஒரு வகையில் இவ்விசயத்தில் நிச்சயம் அடி வாங்கியே இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்..........

அப்துல்மாலிக் said...

// ஒரு ஆண் நேர்வழி பெற்றால் அவன் மட்டுமே பயன் அடைவான். ஆனால் ஒரு பெண் நேர்வழி பெற்றால் ஒரு தலைமுறையே பயன் அடையும்.//

சார் இந்த ஒரு வரி நச்..
இப்போ ஊருலே பெண்கள் படிக்கிறாங்க ஆனாலும் அதனால் மட்டுமே நெறிமுறைகளை பெற்றோர்களோ அல்லது கல்யாணம் செய்துக்கொள்ளப்போகும் மணமகனோதான் ஏற்படுத்த முடியும. கல்வி கற்ற ஒரு பெண் எனக்கு வீடு வேண்டாம் மாமியார் வீட்டில்தான் வாழ்வேன் என்று சொன்னாலும் நடைமுறை கலாச்சாரத்துலே உள்ள சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே. எனவே மாற்றம் முதன் முதலில் மணமகனிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்...

Unknown said...

சத்தியத்தை எடுத்து சொல்லும் ஆலிம்சாக்கு ஊரில் உள்ள சங்கம் வாய்க்கு முத்திரை போட்டு விடுகின்றார்களே.இதற்கு கண்டிப்பாக முடிவு கட்ட வேண்டும் இனசா அல்லாஹ்

Ebrahim Ansari said...

அப்துல் மாலிக் அவர்கள் சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்.

பெண்கள் தாய்வீட்டை விட்டு மாமியார் வீட்டில் போய் வாழ சம்மதிப்பதை கொண்டுவருவது குதிரைக் கொம்புதான்.

நமதூரில் மருமகள்கள் மாமியார் வீட்டுக்கு மாதம் ஒருமுறை போய்வரும் விருந்தாளிகளே. மாமியார் வீட்டுக்கு மாலை வேளைகளில் புதுத்துப்பட்டி போட்டுப் போகும் மருமகளுக்கு மாமியார் அல்லது நாத்தனார் தான் பாய் விரித்து மேரி பிஸ்கட் வைத்து டீ போட்டுக் கொடுக்க வேண்டும். அதே போல் பெருநாள் மாலைகளில் மாமியாரைப் போய் பார்த்துவரவேண்டும்.

மற்ற ஊர்களில் அப்படியல்ல. மருமகள், மாமியார் வீட்டுக்கு அடுப்பங்கரைவரைக்கும் அதிபதியாகிறாள். வீட்டில் பிறந்து வளர்ந்த மகள்தான் விருந்தாளியாகிறாள்.

மதுக்கூர், முத்துப்பேட்டை, மல்லிபட்டினம் , துளசியா பட்டினம், கட்டிமேடு முதலிய நமதூரை சுற்றியுள்ள முஸ்லிம் செக்மென்ட் களில் இதுதான் பழக்கம்.

Shameed said...

பொதுவா ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் அடும்பங்க்கரையில் காஸ் சிலிண்டர் வெடிப்பதேல்லாம் மருமகல்களுக்கே தவிர மகளுக்கு அல்ல

Shameed said...

Canada. Maan. A. Shaikh சொன்னது…
//ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், பெண் மக்களுக்கு வீடு கொடுக்கும் பழக்கம் இல்லையேல் ஊரும் முன்னேரிக்காது ஆறு குளம் குட்டை என கொஞ்சமாது மிஞ்சி இருக்கும் என்ன சரி தானே.........//



ஆமா நம்ம ஆளுக கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தை எல்லாம் ஆறு குளம் குட்டைலே தான் போட்டு வச்சிகிறாங்க!! இன்னும் ஒன்னு தான் பாக்கி இருக்கு அதான் கடலு அங்கே மட்டும் தான் இன்னும் போடலே

ZAEISA said...

பெண்ணுக்கு வீடு தேவையில்லை என்று சொல்லும் அன்பு சகோதர்கள் ஒரு நல்ல திருப்பம் நம்மை கொண்டு தொடங்கட்டும் என்று எண்ணி தன் மகன் பெயரில் வீட்டை எழுதிக் காட்டுங்கள் பின்பு மற்றவர்களுக்கு சொல்லுங்கள்

Ebrahim Ansari said...

சகோதரர் ZEISA அவர்களின் சவாலை ஏற்போர் யார்?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், இ அ காக்கா,

//நமதூரில் மருமகள்கள் மாமியார் வீட்டுக்கு மாதம் ஒருமுறை போய்வரும் விருந்தாளிகளே. மாமியார் வீட்டுக்கு மாலை வேளைகளில் புதுத்துப்பட்டி போட்டுப் போகும் மருமகளுக்கு மாமியார் அல்லது நாத்தனார் தான் பாய் விரித்து மேரி பிஸ்கட் வைத்து டீ போட்டுக் கொடுக்க வேண்டும். அதே போல் பெருநாள் மாலைகளில் மாமியாரைப் போய் பார்த்துவரவேண்டும். //

நீங்கள் சொல்லுவது 100க்கு 100 கவலையான உண்மை உண்மை.

Yasir said...

பிச்சளங்கள் அதிகமாக இருந்தால் “பிச்சை” எடுத்து சாப்பிட வேண்டியதுதானே...ஏன் பெண்வீட்டில் கையேந்த வேண்டும்..நல்ல உரப்பான ஆக்கம்...உங்கள் தைரியம் தெனாவட்டை வாழ்த்துக்கின்றேன் அ.நி

அப்துல்மாலிக் said...

//ZAEISA சொன்னது…
பெண்ணுக்கு வீடு தேவையில்லை என்று சொல்லும் அன்பு சகோதர்கள் ஒரு நல்ல திருப்பம் நம்மை கொண்டு தொடங்கட்டும் என்று எண்ணி தன் மகன் பெயரில் வீட்டை எழுதிக் காட்டுங்கள் பின்பு மற்றவர்களுக்கு சொல்லுங்க//

என் வாப்பா/உம்மா வீட்டில்தான் நானும் என் மனைவியும் இருக்கிறோம் இருப்போம் என்பதை பகிரங்கமாக இங்கே அறிவிக்கிறேன். எனக்கு என்று வீடு கட்டிக்கொண்டு இருக்கேன் அதை என் மகனுக்குதான் கொடுப்பேனே தவிர மகளுக்கு அல்ல..... அல்லாஹ் போதுமானவன்.. வேறு யாரெல்லாம் இந்த எண்ணத்தில் இருக்காங்களோ அவர்களின் கனவை அல்லாஹ் நிறைவேற்றித்தருவானாகவும்-ஆமீன்

Meerashah Rafia said...

Bro.abdul Malik said,
\\என் வாப்பா/உம்மா வீட்டில்தான் நானும் என் மனைவியும் இருக்கிறோம் இருப்போம் என்பதை பகிரங்கமாக இங்கே அறிவிக்கிறேன். எனக்கு என்று வீடு கட்டிக்கொண்டு இருக்கேன் அதை என் மகனுக்குதான் கொடுப்பேனே தவிர மகளுக்கு அல்ல..... அல்லாஹ் போதுமானவன்.. வேறு யாரெல்லாம் இந்த எண்ணத்தில் இருக்காங்களோ அவர்களின் கனவை அல்லாஹ் நிறைவேற்றித்தருவானாகவும்-ஆமீன்\\

ஆமீன். நானும் இதை கடைப்பிடிக்க முயற்சித்து வருகின்றேன்,பல போராட்டங்களுக்கு இடையில்.

Ebrahim Ansari said...

தம்பி அப்துல் மாலிக்! உங்களைப் பாராட்டுவோம். நெசவுத்தெரு சகோதரர்கள் ஏற்கனவே பாராட்டப்பட்டுவிட்டார்கள்.

தம்பி மீராசா ! நல்ல குறிக்கோள். அல்லாஹ் உங்களின் நோக்கத்துக்கு துணை இருப்பானாக்! ஆமீன்.

ZAEISA said...

நான் விடுத்த வேண்டுகோளுடன் நெசவுதெரு சகோதரர்கள் ஒப்பல்ல........என்று
எழுத மறந்துட்டேங்க........

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...


நிஜத்தில் வந்து நம் வாழ்வில் நல்லாட்சி புரிய வேண்டிய எத்தனையோ நம் நல்லெண்ணங்கள் கனவில் வந்தாவது எம்மை காசின்றி ஆசுவாசப்படுத்தி விட்டு போகட்டுமே???

என்ன‌ தான் அழ‌கிலும், மார்க்க,துனியா அறிவிலும், ஆற்ற‌லிலும், குடும்ப‌ பாங்கிலும், கெட்டித்த‌ன‌த்திலும், அர‌வ‌ணைப்பிலும், அன்பிலும், அட‌க்க‌த்திலும், ந‌ல்லிண‌மாக‌ பேசுவ‌திலும், ந‌ன்ன‌ட‌த்தையிலும் சிற‌ந்து விளங்கி த‌னித்த‌ன்மையுட‌னும் இருந்து வரும் அதிரையில் பிற‌ந்த‌ பெண் வ‌ர்க்க‌த்திற்கு திரும‌ண‌ம் முடிக்க அவ்வீட்டார் எதையாவ‌து நிச்ச‌ய‌ம் ஒன்றை இழ‌ந்தே ஆக‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் அன்று முத‌ல் இன்று வ‌ரை இருந்து வ‌ரும் அறுவ‌றுக்க‌த்த‌க்க‌ ப‌ழ‌க்க‌ம் அன்றாட‌ம் எப்ப‌டியும் ப‌ர‌வ‌லாய் அர‌ங்கேறிக்கொண்டு தான் இருக்கிற‌து என்ப‌தை யாரும் ம‌றுக்க‌விய‌லாது......

Canada. Maan. A. Shaikh said...

வரதட்சணை விசியத்தில் என் பெற்றோர்கள் செய்த தவறை நான் அல்லாஹ் மீது சத்தியமாக செய்யமாட்டேன் என் மகானுக்கு நம் சண் மார்க்க வழியில் அவன் வாழ்க்கை தொடங்க இங்கு கருதிடும் அணைத்து சகோரர்கல்லும் துவா செய்யவும்.

Meerashah Rafia said...

இன்ஷா அல்லாஹ். Bro. Muhammadh Yousuf & Canada. Maan. A. Shaikh அவர்களின் சீரிய எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் ஹலாலான சம்பாத்தியத்தில் செல்வத்தை கொடுத்து வீடு என்ற வரதட்சணையை விட்டு பாதுகாப்பானாக.ஆமீன்..

இது போல் உறுதியான எண்ணத்தையும்,சூழ்நிலையையும் அல்லாஹ் அனைவருக்கும் கொடுப்பானாக.. ஆமீன்..

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)