Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இழப்புக்குள்ளான இலங்கை முஸ்லீம்கள் - உருக்கம்! (காணொளி) 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 11, 2011 | , , ,

இனத்தாலோ மொழியாலோ பிரித்தாய்பவன் என்னைச் சார்ந்தவனல்ல - இது நபிமொழி !

முஸ்லீம்கள் இன்றோ நேற்றோ பாதிப்புக்குள்ளாக வில்லை, ஓரிறைக் கொள்கையை எடுத்து வைத்த அன்றைய காலத்திலிருந்தே அநியாயக் காரர்களால் பாதிப்புக்குள்ளானார்கள். அப்படியிருக்க நம் அருகில் இருக்கும் குட்டி நாடான இலங்கையில் மொழியையும் இனத்தையும் முன்னிருத்தி ஒரு இயக்கம் 25 வருடகாலமாக போராடியது ! முடிவில் அந்த இயக்கம் அழித்தொழிக்கப்பட்டு இன்று அவர்களுக்காக ஈனக் குரல் எழுப்பும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்களின் போராட்டம் என்னவென்றோ, அதன் நியாய அநியாயங்கள் எவ்வகை என்றோ நாம் விவாதிக்கவில்லை, அவர்களின் போராட்டம் இலங்கை அரசாங்கத்திற்கு அவர்களுக்கும் நடந்தது. இது இப்படியிருக்க தமிழ் மொழி மட்டுமே பேசும் சகோதரர்களை அதே மொழியின் பெயரால் இயக்கமும் வைத்துக் கொண்டு காட்டுமிராண்டித் தனமாக அந்த பகுதியில் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்தவர்கள் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக அழித்தெடுக்கவும் அடித்து விரட்டவும் ஆயுதம் ஏந்தியவர்களைப் பற்றியும், இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லீம்களின் நிலைமபற்றியும் தகுந்த ஆதாரங்களுடன் சகோதரர் மவ்லவி முஹம்மது நாசர் அவர்கள் உருக்கமாக எடுத்து வைக்கும் வாதங்களையும் ஆதாராங்களையும் காணொளியாக உங்களின் பார்வைக்கும் தமிழ்கூறும் நல்லுலக நியாயவான்களின் கவனத்திற்கும் இதோ:-


- அதிரைநிருபர் குழு

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உள்ளத்தை உருக்கியெடுத்த உண்மைச் சம்பவங்களை ஆதாரங்களுடனும், பாதிக்கப்பட்டவர்களின் ஒருவராக இருந்த மவ்லவி முஹம்மது நாசர் அவர்களின் இந்த உரை பாறாங்கல்லையும் கரைத்திடும் !

தமிழ்கூறும் நல்லுலகம் அவசியம் அறிய வேண்டிய உண்மை விடயங்கள் !

Muhammadh said...

அருமையாக அருமையான உருக்கமான தெரிந்துக்கொள்ள வேண்டிய சம்பவங்களை கூறினார்கள்... புரிந்து கொண்டேன் இலங்கையின் விஷயத்தை..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த சொற்பொழிவை நேரடியாக அமர்ந்து கேட்வர்களில் நானும் ஒருவன்.

அறியாத தகவல், கலிமா சொன்ன எம்மக்கள் எவ்வளவு இன்னல்கள் பட்டுள்ளார்கள்.

இது போன்ற நிகழ்வுகள் நமக்கு ஏற்படாமல் இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

கொடுமைக்காரர்களால பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லீம்களுக்கு அல்லாஹ் நல்ல பரகத்தை கொடுத்து மனநிம்மதியான வாழ்க்கையை தந்தருள எல்லோரும் துஆ செய்வோமாக.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இந்த காணொளியை ஒவ்வொரு முஸ்லீமும் முழுமையாக காணவேண்டும். சொல்லப்பட்ட செய்திகளிலிருந்து நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது.

aa said...

ஓட்டுக்காகவும் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காகவும் தமிழக முஸ்லிம்களின் அறியாமையையும் மறதியையும் மூலதனமாக வைத்து சாக்கடை அரசியல் செய்யும் தமிழக ‘முஸ்லிம் இயக்கத்தினர்’(??) அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ.

VANJOOR said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

****** 1
புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2.
மன்னிப்போம் மறக்கமாட்டோம்.

புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..
**********
…….



2. *******
ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
********

.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு