Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஏன் இந்தத் தொழிலாளர் பஞ்சம்? 4

அதிரைநிருபர் | June 27, 2011 | , ,

இன்று உழைப்புக்கும் உழைப்பாளிகளுக்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அன்றாட வேலைகளை முடிக்க ஆட்கள் கிடைப்பதில்லை. அது எந்த வேலையாக இருந்தாலும் சரி. அதற்கான காரணங்களை ஆராய்வோம்.

இன்று இந்தியாவில் கல்வி கட்டாயக் கடமை ஆகிவிட்டது. கல்வியின் அவசியம் பல ஆண்டுகளுக்கு முன்பே உணரப்பட்டுவிட்டது. அரசு, குறிப்பாகத் தமிழ்நாடு அரசு கல்வியில்தான் அக்கறை செலுத்தியது. கர்ம வீரர் காமராஜ் காலத்தில் இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டது. இலவசப் பகல் உணவும் வழங்கப்பட்டது.

எல்லா இனத்தவரும் கல்வி கற்கத் துவங்கினார்கள். கட்டிடத் தொழிலாளர் முதலாக எல்லாத் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளும் கல்வி கற்க முன் வந்தனர். இந்த வேகத்தால் சாணக்கியர் ராஜாஜியின் குலக் கல்வித் திட்டமும் தோல்வியைத் தழுவியது.

கல்வி கற்பதற்கே நேரம் போதாததால், தொழிலாளி வீட்டுப் பிள்ளைகளில் சிலர் தங்கள் தொழிலைக் கற்றுக் கொள்ள வில்லை. அவர்கள் தங்கள் மேற் படிப்பை முடித்துக் கொண்டு, வேறு வேலைகளைத் தேர்ந் தெடுத்தனர். எல்லா சமூகத்தினருக்கும் அயல்நாட்டு மோகம் எழுந்தது. தொழில் வர்க்கம் சும்மா இருக்குமா? அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் இருந்தது. அங்கு தன் பெற்றோரைவிட பல மடங்கு ஈட்டுவதற்குரிய வாய்ப்பை உணர்ந்தனர். எனவே வெளிநாடு சென்றனர்.

பிள்ளைகள் அல்லது சகோதரர்கள் வெளிநாட்டில் இருந்ததால் தொழிலாளர்களுக்கு வருவாய் தேடவேண்டும் என்ற முனைப்பு குறைந்தது. அவர்களின் வாழ்வாதாரங்களை அரசே தர முன் வந்தது. உணவுத் தேவையின் அடிப்படையாகவுள்ள அரிசி இலவசமாகக் கிடைத்து விடுகிறது. குழந்தைகளுக்குக் கல்வியோடு உணவு, புத்தகங்கள், சீருடை இலவசம்.

தொலைக் காட்சிப் பெட்டி இலவசம்; அது இயங்கும் மின்சாரம் இலவசம். வீட்டுக்கு வருகிற தொழிலாளி தொலைகாட்சி முன்னால் அமர்ந்து கொண்டு வருவாயைத் தொலைத்து விட்டு, பின்னால் தங்கிவிடுகிறான். தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டதர்க்கு இவைதான் கரணம்.

இந்நிலை மாற வேண்டுமானால் அரசு இலவசங்களை ரத்து செய்யவேண்டும். தொழில் செய்ய மறுப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தொழில் என்பது எல்லாருக்கும் பொதுதான். தொழில்களை எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஈடுபட்டு பொருள் ஈட்ட முன் வரவேண்டும். தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட காலம் இது. எந்தத் தொழிலையும் வெற்றிகரமாகச் செயய முடியும். அயல் நாடுகளில் எந்தத் தொழிலையும் செய்ய ஆயத்தமாக இருக்கும்போது, உள்நாட்டில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?

மாணவர்கள் தொழில் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். தொழில் படிப்பு என்றும் கை கொடுக்கும். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும். தொழில் வளர்வதற்கும் மக்களின் தேவைகள் நிறைவேறுவதற்கும் பொருளாதாரம் மேம்படுவதற்கும் தனி மனிதன் முதல் சமூகம் வரை அயராது பாடுபடவேண்டும்.

உழைப்பு உடல் நலத்தைத் தரும். வருவாயைத் தரும். மன மகிழ்வைத் தரும். நிம்மதியான வாழ்க்கை அமையும். நம் உயிர் காக்கும் உழைப்புக்கு உயிர் கொடுபோம்.

வாவன்னா

நன்றி: உமர்தென்றல்

4 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்நிலை மாற வேண்டுமானால் அரசு இலவசங்களை ரத்து செய்யவேண்டும். தொழில் செய்ய மறுப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தொழில் என்பது எல்லாருக்கும் பொதுதான். தொழில்களை எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஈடுபட்டு பொருள் ஈட்ட முன் வரவேண்டும். தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட காலம் இது. எந்தத் தொழிலையும் வெற்றிகரமாகச் செயய முடியும். அயல் நாடுகளில் எந்தத் தொழிலையும் செய்ய ஆயத்தமாக இருக்கும்போது, உள்நாட்டில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?

மாணவர்கள் தொழில் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். தொழில் படிப்பு என்றும் கை கொடுக்கும். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும். தொழில் வளர்வதற்கும் மக்களின் தேவைகள் நிறைவேறுவதற்கும் பொருளாதாரம் மேம்படுவதற்கும் தனி மனிதன் முதல் சமூகம் வரை அயராது பாடுபடவேண்டும்.//

மிகச் சரியான தருனத்தில் சூளுரைக்ப்பட வேண்டிய முழக்கமிது !

சமீபத்தில் நடந்த AEM அமர்விலும் இதே கவலையைத்தான் பெரும்பாலான சகோதரர்கள் வெளிப்படுத்தினார்கள்... தொழிற்கல்வியின் அவசின் அலசப்பட்டது !

அனைத்து இலவசங்களையும் ரத்து செய்யபப்ட வேண்டும்... உழைக்கு வர்க்கத்தை ஊக்கி விக்க வேண்டும் இதனை கட்டாயமாக்க வேண்டும் !

அற்புதமான அலசல் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சாரவர்கள் மிகச் சரியாக விளக்கி உள்ளார்கள்.

அதன்படி இலவசங்கள் தான் அனைத்து முன்னேற்றப்பாதைகளுக்கும் தடையாக இருக்கும்.எனவே அரசு கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு சிலவற்றை மட்டும் செய்துவிட்டு இனி மாநிலத்தின் முன்னேற்றப் பாதையில் செலவிடுவதே எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்கும்.

Yasir said...

இலவசங்கள் அனைத்தும் ..மக்களை சோம்பெறியாக்கும் முயற்ச்சிதான்...அதனை அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்

அப்துல்மாலிக் said...

இலவசம் கொடுப்பதை தடுத்தால் அடுத்தவன் கொடுக்க ரெடியாயிருக்கான், அதுக்கு தானே கொடுத்து ஆட்சியை தக்கவைக்க மேலும் இலவசங்களை அள்ளித்தெளித்து உழைப்பாளிகளை பள்ள்த்தில் தள்ளி விட்டு வேடிக்கைப்பார்கிறார்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு