Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வினாடி வினா போட்டி முடிவுகள் - மாணவர்கள் பிரிவு :: காணொளி Updated ! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | November 27, 2012 | , , , , ,


இன்று 27-11-2012 அதிரை பள்ளிகளுக்கிடையே மாணவர்கள் பிரிவுக்கான வினாடி வினா போட்டி மிகச் சிறப்பாக இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளியில் நடந்தது.

மாணவர்கள் ஆர்வமுடனும் துடிப்புடனும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.

நிகழ்வின் தலைமை மற்றும் அறிமுக உரையை அதிரை தாரூத் தவ்ஹீத் அமீர், தமிழ் அறிஞர் அதிரை அஹ்மது B.A., அவர்கள் அற்புதமான உரையை ஆற்றினார்கள்.

மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியை, ஆரம்ப காலங்களில் வினாடி வினா போட்டி என்றால் அங்கே அதிரை மாணாக்களின் மனம் வென்ற ஆசான் ஒருவரின் நினைவு வரும் அவர்கள்தான் S.K.M.ஹாஜா முகைதீன் M.A. BSc., B.T., அவர்கள் மிகச் சிறப்புடன் நடத்தினார்கள்.

போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகள் விபரம்

முதல் பரிசு : இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி
பரிசு தொகை: ரூ.5,000/-
வழங்கியவர்கள்: அல்நூர் ஹஜ் சர்வீஸ்

இரண்டாம் பரிசு: காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்)
பரிசு தொகை: ரூ 3,000/-
வழங்கியவர்கள்: சுப்ரீம் கார்கோ, தமாம்

மூன்றாம் பரிசு: காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்)
பரிசு தொகை: ரூ 2,000/-
வழங்கியவர்கள்: அதிரை எஜுகேஷனல் மிஷன்

மேலும் வினாடி வினா நிழ்வை சிறப்பித்தவர்கள் : மூத்த சகோதரர்கள் முஹம்மது ஃபாரூக், M.A.அப்துல் காதர், இபுறாஹீம் அன்சாரி, நூர் முஹம்மது, பேராசிரியை தஸ்லீமா, மற்றும் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் ஆஃப்தா பேகம், கலந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள்.

நிறைவாக நன்றியுரை: மூத்த சகோதரர் இப்றாஹீம் அன்சாரி,  அதிரைநிருபர் குழு சார்பாக.

நிகழ்சிக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து, நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற பேருதவியாக இருந்த சகோதரர் ஹசன் (அபு இஸ்மாயில்) மற்றும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளுக்கு உதவி செய்த இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளி ஆசிரியர்கள், மற்றும் இமாம் ஷாஃபி (ரஹ்) நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அற்புதமான இந்த நிகழ்வின் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு இன்ஷா அல்லாஹ்....









முதல் பரிசு : இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் பள்ளி



இரண்டாம் பரிசு: காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்)


மூன்றாம் பரிசு: காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்)



அதிரைநிருபர் குழு

20 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

I would like to suggest the following.

The improvements in the next events can be well suggested
as
$ Since the media(pictures and video) published world wide media (like blogs, FaceBook etc.) of conducting the even can be English only. (If the habit of our schools medium of instruction have been English only, then it could have been possible).

$ As I am born and brought up in Adirampattinam I believe its possible to develop English communication a central theme of education in English medium schools. Really it gives edge and confident in our community world wide spreading.

$ It can be suggested that dress code for educational institute should be pant shirts without any hesitation. It can show our commitment and respect to the educational environment.(Why should we stress the students to wear uniform?)

$ In general our schools of muslim community should extend and share islamic ideals and knowledge with non-muslim students. There should be islamic missionary should think and plan about how we can make inter-religious understanding from Islamic point of view in our schools.(I mean there are possibilities of non-muslim students of our schools even after studying at Islamic schools, they would go to join in non-muslim extremist groups and would act against muslims because of lack of understanding).

$ There can be quiz competition in basics of Islam exclusively for non-muslim students. InshaAllah it will be more effective in our Adirampattinam community.

May Almighty Allah accept our well wishes and give us courage to achieve our wishes and to become ideal community.

Thanks and regards

B. Ahamed Ameen
Dubai.

KALAM SHAICK ABDUL KADER said...

// believe its possible to develop English communication a central theme of education in English medium schools. Really it gives edge and confident in our community world wide spreading.//

I agree with you.

Shameed said...

மிக சிறப்பாக நடத்தி முடித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்தும் துவாவும்

அதிரை சித்திக் said...

மிக சிறப்பாக நடத்தி முடித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்தும் துவாவும்

இப்னு அப்துல் ரஜாக் said...


மிக சிறப்பாக நடத்தி முடித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்தும் துவாவும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நிருபரின் நல் நிய்யத் நிறைவேறிட அவாவும் துஆவும்.

sabeer.abushahruk said...

நிருபரின் நல் நிய்யத் நிறைவேறிட அவாவும் துஆவும்.

அப்துல்மாலிக் said...

My Hearty congratulation to Schools & their Students and Organizers

Yasir said...

My Hearty congratulation to Schools & their Students and Adirainirubar's Team

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், அவர்களை ஊக்கப்படுத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும், மிகச் சிறப்பாக நடத்திய கா.மு.மே.(ஆ)பள்ளி முன்னால் தலைமை ஆசிரியர் SKM ஹாஜா முகைதீன் (மாமா) மற்றும் கலந்து கொண்ட அனைத்து பெரியோர்களுக்கும் உளம் கனிந்த நன்றிகள் !

மிகச் சிறப்பான முறையில் இரண்டாவது போட்டியை நடத்தவும் அதற்கு பெரும் உதவியாக இருந்த ஸ்பான்சர்ஸ் மற்றும் களப்பணிகளில் ஈடுபட்ட சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

இது தொடரும் இன்ஷா அல்லாஹ் ! இன்னும் சிறப்பாக !

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பானவர்களே!

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதை நிருபிக்கும் வகையில் தம்பி தாஜுதீன் அவர்கள் இந்த நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு உழைத்த உழைப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

சகோதரர் அஹமது அமீன் அவர்கள் குறிப்பிட்டுள்ள ஆலோசனைகள் இன்ஷா அல்லாஹ் தொடர் நிகழ்ச்சிகளுக்கு கவனத்தில் கொள்ளப் படலாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

விரைந்தோடும் வெற்றிக் குதிரைகளாக மாணவர்களை ஊக்கப்படுத்தும் இம்முயற்சியால், மனப்பாடம் என்னும் செக்குமாட்டுத் தன்மையிலிருந்து விடுபடும் அரியதொரு வாய்ப்புக் கிட்டும்;அவர்களின் சிந்தனைக் கரங்கள் அறிவு வாசலைத் தட்டும்!

KALAM SHAICK ABDUL KADER said...

தன்னுடன் போட்டிப் போட்டுக் கொண்டு வேகமாக ஓடி வெற்றிப் பெறக் குதிரைகள் இருப்பதால் தான் ஒரு குதிரை வேகமாக ஓடுகிறது- அராபியப் பழமொழி

KALAM SHAICK ABDUL KADER said...

COURAGE IS THE MOST IMPORTANT OF ALL VIRTUES, BECAUSE WITHOUT IT WE CAN'T PRACTICE ANY OTHER VIRTUE WITH CONSISTENCY

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி..

இந்த வினாடி வினா போட்டி முழுக்க முழுக்க ஒரு team effort என்று தான் சொல்ல வேண்டும்.

அல்லாஹ் போதுமானவன்.

வினாடிவினா 2012, போட்டி ஆரம்பம் முதல் முடிவு வரை தொடர்பாக விரிவான செய்தியை தனி பதிவாக வெளியிடலாம் என்று எண்ணுகிறேன். பள்ளிகளை வைத்து போட்டிகள் நடத்துவது நல்ல அனுபவம், வினாடிவினா போன்று இன்னும் பிற அறிவுத்திறன் சார்ந்த போட்டிகளை பள்ளிகளை வைத்து நடத்த எண்ணமிருக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மூன்று தலைநகரங்களைக்கொண்ட நாடு எது? யாராச்சும் சொல்லுங்களேன்....

வினாடிவினாக்கே வினாடிவினாவா?........

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கூகுள், கூகுள் பண்ணிப்பார்க்கக்கூடாது....இது தான் கண்டிசன்....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மூன்று தலைநகரங்களைக்கொண்ட நாடு எது? யாராச்சும் சொல்லுங்களேன்....

வினாடிவினாக்கே வினாடிவினாவா?........//

தென் ஆப்பிரிக்கா !

Meerashah Rafia said...

I agree with B. Ahamed Ameen's excellent comment.

Hearty Congratulation for successful event conducted by Mam's Thajudeen with elders guidance.. I wish to write an article which is related to these kind of initiatives. Insha Allah will reach the media soon.

Unknown said...

இமாம் ஷாபி பள்ளியில் நடந்த quiz போட்டி ஆண்டுக்கு ஆண்டு நடத்த பட வேண்டியதே. மாணவர்களிடம் கேட்ட கேள்விகள் நல்ல கேள்விகளே.கிரிக்கெட் பற்றிய கேள்விகளுக்கு பதிலாக பாட புத்தகம் தவிர வேறு என்ன புத்தகம் படித்தாய் என்றும் ஒரு கேள்வி கேட்டு இருக்கலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு