Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உள்ள ஆட்சியிலா? உள்ளாட்சியிலா ? 19

அதிரைநிருபர் பதிப்பகம் | October 11, 2011 | , , ,

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களையும் இளைஞர்களையும் பார்த்து கனவு காணுங்கள் என்று சொன்னார்கள், அதனால் நாங்களும் முன்னாள் மாணவர்கள்தானே என்றும் இளைஞர்கள்தானே என்ற மெதப்பில் இருக்கும் இந்த தருணத்தில் கனவு ஒன்றைக் கண்டு விட்டோம் அது என்னடான்னா அதிரைப்பட்டினத்தைச் சுற்றியே இருக்கு (மண்வாசனை யோடு) சரி நம்ம கணவு பலிக்குமா? எல்லாவற்றையும் வெளியில சொன்னா ! என்று யோசனையில் இருக்கும்போது உள்ளாட்சித் தேர்தலும் வந்துவிட்டது அட ! நம்மவங்க எல்லாத்தையும் பலிக்க வச்சுடுவாங்கன்னுதான் ஒரு கற்பனையாக இப்படி எழுதத் தோனுச்சு !

இன்றைய (உள்ள) ஆட்சியில் சொன்னது அன்று இலவசம் இலவசம் இலவசம் அவைகள் இன்று எவர் வசம் என்று தேடவும் ஆரம்பித்து விட்டனர் வாக்குப் பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்திய இலவசத்தில் மனவசப்பட்ட மக்கள்.

அதிரை தேர்வுநிலை பேரூராட்சி மன்றத் தேர்தல் களத்தில் நிற்கும் எந்த ஒரு வேட்பாளரும் தேர்தல் அறிக்கைகள் என்று வெளியிட்டதாக எமக்குத் தெரியவில்லை ஒருவேளை இப்படியிருக்கலாமோ தேர்தல் அறிக்கை என்றொரு மரபு உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு இல்லாமலிருக்குமோ யாம் அறியோம்!?.

எது எப்படியிருந்தாலும் ! தேர்தல் என்று வந்தால் அறிக்கைப் போர் நடந்தால்தான் அந்தச் சமரில் காரமும் இருக்கும் தும்மலும் இருக்கும் !

சரி அவர்கள்தான் அப்படிச் செய்யவில்லை என்றால் நாம் சும்மாவா இருக்கமுடியும், ஆதலால் அவர்களின் சார்பாக பேருராட்சி மன்றத் தேர்தல் அறிக்கையை நாமே இங்கே சமர்பிப்போம் மக்களாகிய நீங்கள் தீர்ப்பை  சொல்லுங்க பார்க்கலாம் !

- அதிகாலை அதிரை நகரினை அழகுற அனைவருக்கும் எழுந்திருக்க வைக்க வேண்டும் !

- காலைக் கதிரவன் கன்னிக் கதிரை வெளிக் கொணரும்போது எழும் சில்லென்ற புகையோடு கூடிய தெருக்கள் பெருக்கி எழும் புழுதியை ரசிக்க ரசிகர் மன்றங்கள் ஒவ்வொரு தெரு முணைகளில் வைத்திட வேண்டும்.

- இரவில் உறங்காத கொசுக்களை காலை முதல் மாலை வரை தாலாட்டி சீராட்டி உறங்க வைக்க தனி தொண்டர் படை அமைக்க வேண்டும்.

- குடிநீர் குழாயில் தண்ணீர் வரும்வரை வரும் காற்றை குழாய் வழியாக எடுத்துச் சென்று வீடுகளில் இருக்கும் மின் விசிறிகளை இயங்க வைக்கும் நவின வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

- கோடு போட்டு ரோடு போடாவிடினும் பாடுபட்டு கட்டிய வீட்டிற்குள் மழைநீரும், சாக்கடையும் நுழையாமல் நீண்டகால திட்டம் தீட்டி வடிகால் அமைத்திட வேண்டும் !

- வீட்டு வரி வசூல் செய்ய வீடுகளுக்கு வருபவர்கள் அது பேரூராட்சி கஜானாவுக்குள் சேர்கிறதா என்று உத்திரவாதம் தந்திட வேண்டும் !

- அதிவேக மின்சாரம் வேண்டாம், அளவான மின்சாரமும் அடிக்கடி அனைக்காத மின்சாரமும் வேண்டும் !

- சுற்றித் திரியும் பன்றிகளுக்கு ஊருக்கு ஒதுங்குப் புறத்தில் சங்கம் அமைத்து தெருவுக்குள் நுழையாமல் இருந்திட நடவடிக்கைகள் அவசியம் வேண்டும்.

- சாக்கடைதான் என்று நூறு சதவிகிதம் ஊர்ஜிதப் படுத்தப்பட வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு குடிநீருக்கும் சாக்கடைக்கும் வித்தியாசம் தெரியும்  எது எங்கே இருக்கிறது என்ற நிலை தெரியாமல் தவிக்கும் இன்றைய நிலையில் !

- பிளாஸ்டிக் பைகளின் அராஜகத்தை அறவே அகற்ற முடியாவிட்டாலும் கண்டதும் அதனைச் சுட உத்தரவு போடவேண்டும் அதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற (???) பணியாளர்களை அமர்த்தி கு.பொ.வாரியம் ஒன்று உருவாக்கி அதறகு தகுந்த தலைவரை இன்றைய இளம் தலையை அங்கே அமர்த்தப்பட வேண்டும்.

- இரவில் சுற்றித் திரியும் திருடர்களையும் திருந்தாத தருதலைகளையும் கண்கானிக்க வீட்டுக்கு வீடு வாசலில் ஐ.பி.கேமராவெல்லாம் வைக்காமல் (அரசாங்க பணத்தை வீணடிக்காதீங்க ப்ளீஸ்) உறங்கும் காவல்துறைய தட்டி எழுப்பி நடைபயில அனுப்பி வைக்க வேண்டும். ஒருவேளை அவர்களே அந்த பணியை கையில் எடுத்துக் கொண்டால் இரவை பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றி அறிவிக்கவும்.

- கடைத்தெருவில் அதிநவின வசதியுடன் (குறிப்பாக வாங்கிப்போகும் மீன், இறைச்சி ஆகியவை கெடாமல் இருக்க ச்சில்லர் வசதியுடன்) கூடிய மெட்ரோ இரயில் நிறுத்தமும் மேம்பாலமும் அமைத்திட வேண்டிக் கொள்கிறோம் யோசனைக்கு இங்கிருக்கும் படத்தைக் மாதிரியாக பயண்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.


- பிலால் நகரிலிருந்து ஷிஃபா மருத்துவ மனை வரை பறக்கும் இரயில் வேண்டும் என்று கேட்டால் கிடைக்கவா போகிறது, ஆதலால் ஒரு யோசனை ஆங்காங்க தொங்கும் மின்சாரக் கம்பிகளை நன்றாக இழுத்துக் கட்டி அருகிலிருக்கும் வீட்டாருக்கு துணி காயப்போடும் வசதியை செய்து கொடுக்க வேண்டும் கண்டிஷன் மின்சாரம் தாக்குதல் நடக்கக் கூடாது !


- ஏற்கனவே அகல இரயில்பாதைக்கு போராடிக் கொண்டிருக்கும் அதிரைப் பெருநகர மக்களுக்கு ஆறுதலாக இரண்டு இரண்டாக தனியாக இருக்கும் தடங்களில் போலி விமானம் ஸாரி போயிங்க் விமானம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து அங்கே நிறுத்தினால் பெருமை பட்டுக் கொள்ளலாம்.


- செக்கடிக் குளத்தின் மேல் தொங்கு பாலம் கட்டித் தாருங்கள் என்று கேட்டால், நீங்களே வசூல் செய்து ஆகாயத்தில் இடத்தை வங்கித்தாருங்கள் அங்கே கட்டுவோம் என்று சொல்லும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் இந்த உள்ளாட்சி மன்ற வேட்பாளர்களே, அதற்கான மாதிரியை இங்கே படத்தில் மாதிரி காட்டியிருக்கிறோம் எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கிட்டு முறையாக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்துக் கொள்ளுங்கள்.


 - கடற்கரைத் தெரு பள்ளி அருகே நவீன வசதியுடன் கூடிய பஸ்வசதி நிறுத்தம் அமைக்கப்பட வேண்டும் அங்கே அதிரை மாநகரில் அனைத்து தெருக்களின் வழியாக செல்ல பேருந்துகள் இயக்க வேண்டும், எதிர் காலத்தில் 4 நிமிடத்திற்கு ஒரு இரயில் / மெட்ரோ நமதூர் இரயில் நிலையத்திற்கு வந்து செல்ல இருப்பதால (!!!???) அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து தர வேண்டுகிறோம் !


- மேலத் தெருவிலிருந்து வண்டிப்பேட்டை வரை சுரங்க வழி இரயில் அமைத்திட இங்கே ஒரு மாதிரிப்படம் இணைத்திருக்கிறோம் இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து தெருக்களையும் ஒன்றினைக்கும் படியாக இந்த திட்டத்தை நிறைவேற்றிட வேட்பாளர்களை கெஞ்சி கதறி விரும்பிக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இன்னும் இருக்கிறது கனவுகளாக ! இதேபோல் உங்களிடமும் இருக்கும்தானே ! பகிர்ந்திடுங்களேன் பின்னூட்டத்தில் !

- அபுஇபுறாஹிம்

19 Responses So Far:

U.ABOOBACKER (MK) said...

தம்பி அபு இபுறாஹிம் நமதூர் பேரூராட்சி தலைவரானால் அதிரை இப்படி மாறுமோ? இதெல்லாம் ரொம்ப ஓவர்!

மு.கி.

ZAKIR HUSSAIN said...

அபு இப்ராஹிம், நீங்கள் ஏதோ விளையாட்டாக கற்பனை செய்து [ படங்களுடன் ] வெளியிட்டாலும், அது வருங்காலத்தில் நிஜமாகும் வாய்ப்பு இருக்கிறது.

முன்பு அண்ணா சிலை இல்லாமல் இருந்தால் [மெயின் ரோட்டில் ] அந்த இடம் கொஞ்சம் தெளிவா போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கும் என நினைத்திருக்கிரேன்..இப்போது அது நனவாகி இருக்கிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இதெல்லாம் ரொம்ப ஓவர்!//

கனவு கானச் சொன்னாங்க அதனாலத்தான் இப்புடி கண்டுபுட்டேன் :) ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நிஜமாகும் வாய்ப்பு இருக்கிறது.//

அப்பாடா ! நம்ம கனவும் பலிச்சுடும்போல ! :)

Anonymous said...

அபூ இபுராஹீம் சொன்னது போல் இன்ஷா இறைவன் நாட்டப்படி கனவு நினைவாகத்தான் போகுது . கனவுக்கு உரிய பலன் மிக விரைவில் எதிர் பார்க்கலாம். ரொம்ப நேரம் தூங்கினால் மட்டும் கனவு இப்படி எல்லாம் காண முடியாது என்று என்ன வேண்டாம்.கொஞ்ச நேரம் தூங்கினால் கூட கனவு எப்படியும் காணலாம்.யாரு வந்தாலும் ஊருக்கு நல்லது செய்தால் போதும் கனவை நினைவாகட்டும்.

Shameed said...

சிறிது நேர தூக்கத்திற்கே இத்தனை பிரமாண்ட கனவு என்றால் அசந்த தூக்கம் தூங்கினால் கடலில் ரன்வே போட்டு விமானத்தை ஊருக்குள் கொண்டுவந்து விட்டு விடுவீர் !

Anonymous said...

shameed சொன்னது போல் சிறிய தூக்கத்திற்கு இவ்வளவு பெரிய கனவு என்றால் அசந்த தூக்கத்திற்கு பெரிய விமானத்தையை கொண்டு வந்து கனவில் நிறுத்தி விடுவார்கள். தண்ணீரில் கூட விமானத்தை கொண்டு வந்து நிறுத்துவார்கள்.

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

அறிக்கைகள் நல்ல நகைச்சுவையாக வரையறுக்கப்படுள்ளது. படங்களோ பிரமாண்டமாகத் தோற்றமளிக்கிறது.

(இப்படிப் புதுமையாக எதையேனும் தொடர்ந்து முயலும் அதிரை நிருபரை மனமாறப் பாராட்டத் தோன்றுகிறது. ஆனால், வெறும் காத்துதாங்க வருது.)

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//(இப்படிப் புதுமையாக எதையேனும் தொடர்ந்து முயலும் அதிரை நிருபரை மனமாறப் பாராட்டத் தோன்றுகிறது. ஆனால், வெறும் காத்துதாங்க வருது.) //

காற்றும் கவிதையாய் வருமேன்னு சொல்ல வாய் வருது ஆனா வெறும் காத்துதாங்க வருது.

Unknown said...

தேர்தல் அறிக்கைன்னு அரசியல்வாதிங்க எல்லாரும் 'ரீல்' விடுவாங்க, ஆனால் நீங்க நல்லா 'ரயில்' விட்டு இருக்கிறீங்க. இதுவும் ஒரு சுவாராஸ்யம்தான்...:)

Saleem said...

இப்போதே ஆட்டோ போன்ற வாகனங்களில் காதை பிளக்கும் பல வாக்குருதிகள் நல்ல வேளை நம்ம அரசியல் கட்சிகள் பார்த்தால் தங்கள் விளம்பரத்தில் இதையும் சேர்த்து விடுவார்கள் போல...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கண்கொள்ளா அதிரைக் காட்சி.
அருமை வேட்பாளர்களே குறைந்த பட்சம் கனவு காணுங்கள் இன்று!
அடுத்து வாரிசு அப்படியே நிஜமாக்கட்டும் நாளை.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். ஆமாம் எனக்கு இந்த அறிக்கைகள் கவிதை போலத்தான் தோன்றின அதீத கற்பனை.வெறும் காத்து வருவது போல் கானா கண்டு விழித்ததும் கானா போவதுபோல் . காற்று அடிப்பது உணர்ந்தாலும் கான முடியல. கற்பனை நல்லா இருக்கு. அது கட்சிகள் இதில் கால் வாசி செய்தாலே பெரிய விசயம்.

அப்துல்மாலிக் said...

காக்கா ரூம் போட்டு யோசிப்பீங்களோ, இதெல்லாம் தூங்கும்போது வந்த கனவல்ல, ஒவ்வொரு அதிரையனுக்கு உள்ளது...

இதெல்லாம் கற்பனைக்கே என்றாலும் நிறைவேரினால் நினைக்கவெ பரவசமா இருக்கு...

பாலைவனமே சோலைவனமாகும்போது சோலைவனம்(அதிரை) சொர்க்கவனம் ஒரு நாள் ஆகும் என்பதில் சந்தேகமில்லை

அனைத்தும் அருமை..

நிஸார் அஹமது said...

இது கனவு என்றாலும் கற்பனை என்றாலும், இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் நிறைவேறக்கூடிய சாத்தியம் உண்டுதான்..கால ஓட்டத்தில் இவைகள் நிகழ வேண்டியது காலத்தின் கட்டாயம்..நாம் பார்க்கமுடியாது என்றாலும் நமது சந்தத்திகளுக்கு அந்த வாய்ப்பை தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பள்ளி பருவத்தில் கற்பனை செய்து பார்த்த விடையங்கள் இன்று நிஜமாக உள்ளது.

விளையாட்டுப்போட்டிகளை காண கையடக்க தொலைக்காட்சி சாதனம் கிடைக்காதா என்று ஏங்கினோம் ஒரு காலத்தில் இன்று 3ஜி வடிவில் ஒவ்வொரு மொபலிலும் வந்துவிட்டது என்னற்ற சேனல்கள்.

மேலே பதியப்பாட்டுள்ளவைகளும் வருங்காலத்தில் சாத்தியமே..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாத்தி யோசித்திட்டால் வேலையில்லாவதன் !
மவுனமாக காட்டினால் எதற்கும் பிரையோஜமில்லாதவன் !
நல்லதைச் சொன்னால் இவவென்ன யோக்கியனா !
சிந்திக்கச் சொன்னால் நிந்திப்பதில் ஒரு நிலைபாடு !
கொளுத்திப் போட்டல் குளிர்காய ஒரு விரிந்த வட்டம் !
அனைத்திட எத்தனித்தால் அபகரிக்கம் திட்டமென்பது !

இப்படியெல்லாம் எழுதம் இவனுக்கு வேலையில்லையா / ஏது நேரம் !? என்ற எண்ண வோட்டங்களுள்ளவங்களை மேலேச் சொன்னதையும் வாசிக்க வைத்ததே !

கனவு பலித்த மாதிரி ! :)

கருத்திட்ட கருத்தாய்வர்கள் அனைவருக்கும் ! மற்றொமொரு கனவுப் பதிப்பில் சந்திக்கலாமா !?

Yasir said...

பொ(F)ன்னான கற்பனைதான்..நெய்னா தம்பி காக்கா .கொஞ்சம் முழிங்க...பகல் தூக்கம் உடம்புக்கு நல்லது அல்ல.....நல்ல கற்பனை வளம் உங்களுக்கு..நினைவேற எல்லாருக்கும் ஆசைதான்

புதுசுரபி said...

“Imagination is more important than knowledge. Knowledge is limited.” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது போல, உங்களுடைய கற்பனை அபரிதமானது. இது இன்று அதிரையில் உள்ள ஆரம்ப பாடசாலையில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இதை அனுப்புங்கள்; ஆச்சர்யப்படுவீர்கள் ஏதேனும் ஒருமாணவன் இதற்கு திட்டம் தீட்டுவதைக் கண்டு (இன்ஷாஅல்லாஹ்)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு